• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
நெஞ்சம் – 40 💖

மொத்த ஊழியர்களும் ஓரிடத்தில் நிற்கவும், கூட்டமே சலசலத்தது. தர்ஷினி சுபாஷிடம் ஏதோ கதையளந்து கொண்டிருந்தாள்.

ஆதிரையின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்ற தேவா இயந்திரப் பகுதிக்குள் நுழையும் முன்னே அவளிடமிருந்து தள்ளி நகர்ந்து சென்றான். அவளை வம்பிழுப்பதற்காகத்தான் அப்படி நடந்து கொண்டான்.

மற்றபடி அவனைப் பொறுத்தவரை இங்கு வேலை பார்க்கும் அனைவரும் சமம்தான். அதில் ஆதிரையும் அடக்கம். என்னதான் கணவன் மனைவி என்றாலும் கூட தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை இங்கே காண்பித்துக் கொள்ள விரும்பவில்லை. அதுவும் இல்லாமல் அவனுக்கு அவனுடைய பிம்பத்தை, மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

தேவா இத்தனை கெடுபிடியாய் இருக்கவும்தான் வேலைகள் எல்லாம் சரியாய் நடக்கிறது. இவனும் ஹரி போல எளிதாய் அணுகக் கூடிய வகையில் இருந்தால், அவன் பாடுபடுவதைப் போல இவனும் கஷ்டப்பட நேரிடும். இவனுக்கு இரண்டு வார்த்தைக்கு அதிகமாய் பேச பிடிக்காது. எங்கேயும் மரியாதை எதிர்பார்ப்பவன்.

ஆதிரை மெதுவாய் நடந்து வந்தவள், கூட்டத்தோடு சென்று நின்று கொண்டாள். தேவா அவளை ஒருமுறை முறைத்துவிட்டு, “சாரி, உங்களோட ப்ரேக் டைமை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!” என்றான் மெல்லிய முறுவலுடன். அனைவரும் இல்லை என்பது போல தலையை அசைத்தனர்.

“உங்க எல்லாரையும் இங்க அசெம்பிள் பண்ணதுக்கு காரணம், என்னோட மேரேஜ்க்கு இன்வைட் பண்ணதான். நெக்ஸ்ட் சண்டே என்னோட மேரேஜ். கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க. பங்க்சன் எங்க, எப்போன்னு எல்லா டீடெயில்ஸூம் சுபாஷ் சொல்லுவாரு!” என சுபாஷின் முகத்தைப் பார்த்தான் தேவா. இதைக் கூறும் போது சம்பிரதாயமாக புன்னகைத்தான். ஆதிரை அவனைத்தான் பார்த்திருந்தாள்.

'மேரேஜ் இன்விடேஷனைக் கூட இப்படி ரோபோ மாதிரிதான் வைக்கணுமா?' என அவளுக்குத் தோன்றிற்று.

“ஓகே சார், நான் பார்த்துக்குறேன்!” என தேவா தலையை அசைக்க, இரண்டொரு பத்திரிகைகளை எடுத்து தேவா முன்னிருந்த கூட்டத்திடம் நீட்ட, “கசங்கிராட்ஸ் சார்!” எனப் புன்னகைத்து பெற்றுக் கொண்டனர்.

“அப்புறம் பொண்ணு யாருன்னு கேட்கவே இல்லையே நீங்க எல்லாரும்?” என அவன் கேட்கவும், ஆதிரை அவனை முறைத்தாள். எப்படியும் அவள்தான் மணப்பெண் எனத் தெரியப் போகிறதுதான். இருந்தும் இப்போது அவன் வேண்டுமென்ற அவளை வெறுப்பேற்ற சொல்கிறான் எனப் புரிந்தே இருந்தது.

“மேரேஜ்க்கு வரும்போது பார்ப்போமே சார்! அப்போதானே அவங்களை நாங்க மீட் பண்ண முடியும்?” தர்ஷினி இரண்டெட்டு முன்னே வந்து யோசனையுடன் கேட்டாள்.

“ஹம்ம்... சொல்லுங்க தர்ஷினி, ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல. சரி, பொண்ணை இப்பவே மீட் பண்றீங்களா?” எனக் கேட்டான் கேலியாய்‌. அவள் திருதிருவென விழித்து என்ன சொல்கிறான் இவன் எனப் புரியாது பார்த்தாள்.

“பொண்ணு வேற யாரும் இல்ல, உங்களோட லேப் ஹெட் மிஸ் ஆதிரையாழ்தான்!” என்று அவளைப் பார்த்து அருகில் வருமாறு தலையை அசைத்தான். அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காது குனிந்த தலையோடு அவனுக்கு அருகே சென்று நின்றாள்.

“மீட் மிஸஸ் ஆதிரையாழ் தேவநந்தன்!” அவள் தோளில் பட்டும்படாமலும் கையைப் போட்டு அணைத்து விடுவித்தான் தேவா. என்னவோ அவன் பெயருடன் தன் பெயர் சேர்ந்து வந்ததில் இவளுக்கு ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு பிறந்தது.

“அண்ணே... சுபாஷ்ண்ணே! எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. என் கையைப் புடிச்சுக்கோங்கண்ணே!” தர்ஷினி அதிர்ச்சி தாங்காது சுபாஷ் மீது சாய, “ஐயோ... தர்ஷூ! எனக்கே ரொம்ப ஷாக்கா இருக்கு இது!” என்றான் வியப்பை விழுங்கியபடி. இத்தனை நேரம் அமைதியாய் இருந்தக் கூட்டம் அத்தனையும் இப்போது ஆதிரையை அதிர்ச்சியுடன் பார்க்க, அவள் சங்கடப்பட்டுப் போனாள்.

“ஓகே... டென் மினிட்ஸ் கழிச்சு எல்லாரும் கோ பேக் டு யுவர் வொர்க்!” என்ற தேவா அகல, ஆதிரைக்கு அனைவரையும் எதிர்கொள்ள அவஸ்தையாய் இருக்க, விறுவிறுவென ஆய்வு கூடத்திற்குள் ஓடிவிட்டாள். அவள் சென்ற நிமிடத்திற்கு மூச்சு வாங்க வந்து நின்றாள் தர்ஷினி.

“அக்கா... அக்கா... ப்ளீஸ், இது எல்லாம் கனவுன்னு சொல்லிடுங்க கா. எனக்கு படபடன்னு வருதே! கோமுக்கா அந்த ஃபேனை போடுங்க. நெஞ்சு வலி வர்ற மாதிரி இருக்கே!” என அவள் மேஜை மீது சரிய, ஆதிரையால் கோபம் கூட கொள்ள முடியவில்லை. அவஸ்தையாய் உணர்ந்தவள், “தர்ஷினி, என்ன இது?” என்றாள் அதட்டலாய்.

“என்ன... என்ன ஆதி? அவளை நீ மிரட்டுற... எங்களுக்கு இவ்வளோ பெரிய ஷாக். என் வயசுக்கு என் ஹார்ட் தாங்குமா மா?” கோமதி கேலியாய் பேசவும், “அக்கா... நீங்களுமா?” என்றாள் இவள் மெல்லிய அவஸ்தையுடன்.

“அக்கா... வெட்கப்படுறீங்களா? ஐயோ! என்னைக் கனவுல இருந்து யாராவது எழுப்பி விடுங்களேன். கனவா கூட இப்படியோரு இன்சிடென்ட்ல என் ஆதிக்காவை நான் சிக்க வைக்க மாட்டேன். தண்ணியை தெளிங்க, அண்ணா... சுபாஷ் அண்ணா! இங்க என்ன எக்சிபிஷனா நடக்குது. என் முகத்துல தண்ணியை ஊத்தி கனவை கலைச்சு விடுங்க!” என்றாள் தர்ஷினி பதற்றத்துடன்.

“தர்ஷினி... இதெல்லாம் உண்மைதான். நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன். பட், நீதான் நம்பலை!” ஆதிரை அதட்டலிட்டாள்.

“அதான் கா... அதான். அப்ப நான் நம்பலை. இப்ப என்னால நம்பாம இருக்கவும் முடியலை. ஏன் கா காலைல வீட்ல இருந்து கிளம்பி இங்க வர்ற வரைக்கும் எத்தனையோ பசங்களை க்ராஸ் பண்ணி இருப்பீங்களே. அதுல யாரையாவது பார்த்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணி இருக்கலாமே...”

“ஏன்? ஏன் இவரை. ஏற்கனவே இங்க வச்சே வண்ண வண்ணமா திட்டுவாரு. ஐஞ்சு வருஷமா அவர் கூட குப்பைக் கொட்டியும் இப்படியொரு டிசிஷனை எடுத்திருக்கீங்க நீங்க. எனக்கெல்லாம் கனவுல கூட அந்த மனுஷன் திட்டுற மாதிரித்தானே கனவு வரும். அவர் கூட நீங்க எப்படி ரொமான்ஸ் பண்ணி கலர் கலர் கனவு கண்டீங்க. எப்போ நடந்தது இது? கூடவேதானே இருந்தோம் நாங்க?” அவளுக்கு மனதே கேட்கவில்லை. என்னவோ ஆதிரையை எதிலிருந்தோ காப்பாற்றுபவள் போல பேசினாள்.

“ஆதி... என்கிட்ட கூட நீ சொல்லலை. நான் மட்டும்தான் என் லவ்வுக்கு ஹெல்ப்னு உன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்லிட்டு இருந்திருக்கேன்ல?” சுபாஷ் ஆதங்கத்துடன் கேட்க, தர்ஷினி இப்போது அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.

“அண்ணே... யோவ் சுபாஷூ! ஒருநாள்ல ஒரு அதிர்ச்சி மட்டும் கொடுங்கயா. எனக்கு நிஜமாவே நெஞ்சு வலிக்குது!” என்றாள் கடுப்புடன்.

“ப்ம்ச்... என் விஷயத்தை அப்புறம் பார்த்துக்கலாம் தர்ஷூ. முதல்ல நீ ஆதியைப் பாரு!” தர்ஷினியின் கவனத்தை மற்றவளின் புறம் திருப்பினான். சுபாஷை ஆதிரை முறைத்தாள்.

“அக்கா... நீங்க இருக்க கலருக்கு அழகுக்கு எத்தனையோ பேர் ப்ரபோஸ் பண்ணி இருப்பாங்களே. ஏன் கா இப்படி போய் விழுந்தீங்க? சரி, அவர் உங்களை மிரட்டி எதுவும் சம்மதம் வாங்குனாரா? நீங்க வாங்க, வேலையே போனாலும் பரவாயில்லை. சண்டை போட்டு நோ சொல்லிட்டு வரலாம். உங்க வாழ்க்கையைக் காப்பாத்துறதை தவிர எனக்கு வேறென்ன வேலை!” என ஆதிரை கையை தர்ஷினி இழுக்கவும், “என்ன தர்ஷூ நீ!” என அவளது கையை வலுக்கட்டாயமாக பிரித்த ஆதிரை அவளைப் பார்த்து முடியாது என தலையை அசைத்தாள்.

“ஏன்?” இவள் கேட்க, ஆதிரை பதில் சொல்ல தயங்கினாள்.

இத்தனை நேரப் பேச்சுக்களை வேடிக்கை மட்டுமே பாத்த ஆதிலா, “தர்ஷினி, நீங்க ஷாக்காகுறதுல நியாயம். பட், ஒருத்தவங்களோட லைஃப் டிசிஷனை மாத்த நமக்கு உரிமை இல்லை. தே லைக்ட் ஈச் அதர். ஒரு கோ வொர்க்கரா, ப்ரெண்டா மேரேஜ்க்கு போய் விஷ் பண்ணிட்டு வர்றதுதான் முறை. சோ, அவங்களை எம்பாரசிங்கா ஃபீல் பண்ண வைக்காதீங்க. தட்ஸ் நாட் குட் பிஹேவியர்...”

“மேபீ உங்களுக்குத் தெரிஞ்ச தேவா சார் வேறயா இருக்கலாம். அவங்களுக்குத் தெரிஞ்சவர் வேறயா இருக்கலாம். உங்களுக்கு அவர் பாஸ் மட்டும்தான். பட் அவங்களுக்கு ப்யூச்சர் ஹஸ்பண்ட். ஆதிக்கா எதையும் யோசிக்காம இவ்வளோ பெரிய முடிவை எடுத்திருக்க மாட்டாங்க. சோ, ரெஸ்பெக்ட் ஹெர் டிசிஷன்!” என்றாள் அவளுக்குப் புரியும் நோக்கில்.

“என்னவோ... போங்கய்யா!” சிறு பிள்ளை போல தர்ஷினி முறுக்கிக் கொண்டு தனியே சென்று அமர, ஆதிரை உதட்டில் புன்னகை மலர்ந்தது. ஆதிலாவை நன்றியுடன் பார்த்தாள். ஆதிலா பேசவும், சுபாஷ் அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.

உண்மையில் அவள் சொல்வது போல இவர்களுக்கான தேவா முற்றிலும் வேறானவன். ஆனால், அவளுக்கான தேவாவின் பரிணாமம் வேறு. தன்முனைப்பு கோபம், கடுப்பு என அனைத்தையும் தூக்கியெறிந்து அவளிடம் மண்டியிட துடிப்பவனின் மற்றொரு முகம் இவர்களுக்கு எல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. அவளுக்கும் தங்களது தனிப்பட்ட விஷயத்தை பொதுவில் பகிர விருப்பமில்லை. தேவாவின் மீதான மதிப்பு எங்கேயும் குறைவதில் உடன்பாடற்று, வாயை இறுகப் பூட்டிக் கொண்டாள். அன்றைக்கு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது கூட தர்ஷினி புலம்பிவிட்டே சென்றாள்.

அடுத்தடுத்து நாட்கள் கடகடவென ஓடின. தினமும் இரண்டு முறையாவது தர்ஷினி இவளிடம் வந்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி அறிவுறுத்த, ஆதிரை அவளை அதட்டுவாள். ஆனாலும் அவளது வாயை மூட முடியவில்லை.

ஆதிரை கடந்து சென்ற ஞாயிறுதான் அவளிடமிருந்த பத்து பத்திரிகைகளை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று யோசித்து முறையாய் சென்று அழைத்தாள். ருக்குவிற்கும் மகேசன் தாத்தாவிற்கும்தான் முதல் பத்திரிக்கையைக் கொடுத்தாள்.
ருக்குவிற்கு அதிர்ச்சிதான். அவர் என்ன ஏதென விசாரிக்க, தன்னுடைய கணவனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பே விவாகரத்து பெற்று விட்டதாகவும், அவன் வேறு திருமணம் செய்து குழந்தையோடு வாழ்வதாகவும் கூறினாள்.

“சே... என்ன மனுஷனோ அவன். அவனெல்லாம் நல்லா இருப்பானா?” என அவர் புலம்ப, “ஐயோ... ருக்குமா. அப்படிலாம் சொல்லாதீங்க!” என இவள் பதறித் தடுத்தாள். என்ன இருந்தாலும் அப்புவிற்கு அவர் இப்படி சாபம் கொடுப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவளாகத்தானே அந்த வாழ்க்கையை சரியாய் அமைத்துக் கொள்ளவில்லை.

“விட்டுட்டுப் போனவன் நல்லா இருக்கணும்னு நினைக்கிற உன் நல்ல மனசு அவனுக்குப் புரியாம போச்சே ஆதி. சரி, நீ எதுக்கும் கவலைப்படாதே. உன்னோட முடிவு ரொம்ப சரி. காலம் முழுக்க குழந்தையோட எப்படி டீ தனியா இருப்ப. இரண்டாவது கல்யாணம் எல்லாம் இப்போ ரொம்ப சாதாரணமாகிடுச்சு!” என அவர் இவளுக்கு ஆதரவாகப் பேச, புன்னகைத்தாள். தாய் தந்தை ஸ்தானத்தில் அவர்கள்தான் நிற்க வேண்டும் என்று இவள் சங்கடத்தோடு கேட்டாள். வேறு யாரும் இங்கே அவளுக்கு உறவினர்கள் இல்லை.

“இதென்ன ஆதிரை கேள்வி. நானும் அவளும்தான் உனக்குப் பெத்தவங்க இடத்துல நிற்போம்!” என மகேசன் தாத்தா கூறவும், இவள் மனதரா நன்றியுரைத்தாள்.

அந்த தெருவில் நன்கு பழகிய நான்கைந்து பேரை அழைத்தாள். அதில் ஒரு பெண் அலங்கார நிபுணராக இருக்க, “உங்க கல்யாணத்துக்கு நான்தான் கா மேக்கப் போடுவேன். வேற யாரையும் புக் பண்ணிடாதீங்க!” என்றாள் ஆர்வமாய்.

“இல்ல மது, ப்யூட்டிஷியன் எல்லாம் நான் யோசிக்கவே இல்ல!” இவள் சங்கடத்துடன் மறுத்தாள்.

“ப்ம்ச்...‌என்னக்கா நீங்க? ரொம்ப யோசிக்காதீங்க. இது உங்க மேரேஜ். சோ, நான் தான் மேக்கப் போடுவேன். காசைப் பத்தி கவலைப்படாதீங்க. கம்மியான பேக்கேஜ்ல பண்ணிக்கலாம். நீங்க குடுக்கறதைக் குடுங்க!” என அப்பெண் கூறவும், இவளும் சரியென்றுவிட்டாள்.

தனியாய் கிளம்பிவிடுவாள்
தான். இருந்தும் உடன் இந்தப் பெண் இருந்தால் நன்றாய் இருக்குமென மனம் கூற, ஒப்புக் கொண்டாள். அவளது பள்ளித் தோழி சுவாதிக்கு மட்டும் அலைபேசியில் அழைத்து விவரத்தைப் பகிர்ந்தாள். இவளுக்கென்று இருக்கும் நெருங்கிய தோழி அவள் மட்டும்தான்.

ஆதிரை சுவாதியிடம் கூட எல்லையோடுதான் பழகினாள். ஆனால் அவளுக்கு இவளை நிரம்ப பிடிக்கும். அதனாலே ஆதி ஆதி என பள்ளியில் இவளுடனே சுற்றுவாள். கல்லூரியில் கூட இருவரும் வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்தனர். சுவாதிக்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையோடு ரிஷிவந்தியத்தில் வசிக்கிறாள். ஆதிரையின் சொந்த ஊர் கூட கள்ளக்குறிச்சி மாவட்டம்தான்.
 
Administrator
Staff member
Messages
1,194
Reaction score
3,478
Points
113
ஆதியின் திருமண விஷயத்தைக் கேட்ட சுவாதி மகிழ்ந்து போனாள். இவளுடைய கடந்த கால வாழ்க்கை ஓரளவிற்கு அவளுக்குத் தெரியும். தோழி தனியாய் இருக்கிறாளே என பல முறை கவலைப்பட்டிருக்கிறாள். இப்போதாவது நல்ல முடிவெடுத்திருக்கிறாளே என நிம்மதியுற்றாள்.

அவள் இரண்டாவது குழந்தையை சுமப்பதால் திருமணத்திற்கு வர முடியாது என வருத்தத்துடன் கூற, “பரவாயில்லை சுவா, நீ இந்த டைம்ல அலைய வேணாம். குழந்தை பிறந்ததும் நானும் அவரும் வீட்டுக்கு வந்து பார்க்குறோம்!” என்று பேசி அழைப்பைத் துண்டித்திருந்தாள். கடந்த சில பல வருடங்களாக இருவருக்கும் இடையில் அதிக பேச்சு வார்த்தை இல்லை. அவரவர் வாழ்க்கையின் ஓட்டத்தில் அழைத்து பேசவோ, நலம் விசாரிக்கவோ நேரம் கிடைக்காது போயிற்று. சுவாதிதான் என்றாவது ஒருநாள் அழைப்பாள். இன்றைக்கு தேவந்ததனைப் பற்றி அடி முதல் நுனி வரை கேட்டறிந்து பின்னரே ஆதிரையை விட்டாள்.

ஹரியும் கோபாலும் நெருங்கிய சொந்தங்கள் அனைவரையும் அழைத்துவிட்டனர். ஒரு சிலர் மறைமுகமாக இந்த திருமணத்தைப் பற்றி வாய்க்கு வந்ததை பேச, அதையெல்லாம் இவர்கள் பொருட்படுத்தவில்லை. விருப்பம் இருந்தால் வந்து மனதார வாழ்த்திவிட்டு செல்லட்டும். இல்லையென்றால் வரவே வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தனர்.

ஜனனியின் அம்மா வேறு அடிக்கடி அவளுக்கு அழைத்து இந்த திருமணத்தின் பிடித்தமின்மையைப் பகிர, அவள் திருமணம் முடியும்வரை அவரது அழைப்பை ஏற்க கூடாது என்று முடிவெடுத்திருந்தாள்.

முகூர்த்த சேலைக்கு மேல் சட்டை தைத்து வந்ததும் ஹரியும் ஜனனியும் ஆதிரை வீட்டிற்கு சென்று நேரில் பார்த்து கொடுத்துவிட்டு வந்தனர். ஆதிரை அவர்களை நன்றாக உபசரித்தாள். இது போல நேரத்தில் ஏன் ஜனனி அலைகிறாள் என அக்கறையுடன் கேட்டாள். அவளது பேச்சு, அணுகுமுறை எல்லாம் இருவருக்கும் திருப்தி.

“அத்தை அன்னைக்குப் பேசுனதை மறந்துடுங்க கா. அவங்க எப்பவும் அப்படித்தான். இவருக்கு முறைப் பொண்ணு நான். அப்படி இருக்கப்போ என்கிட்டே சம்டைம்ஸ் சுள்ளுன்னு பேசிடுவாங்க. ஆனால் ரொம்ப நல்லவங்க. என் அம்மா மாதிரி பார்த்துப்பாங்க. கோபம் இருக்க இடத்துலதான் குணம் இருக்கும். ஷீ நீட்ஸ் டைம். உங்களையும் பையனையும் அக்செப்ட் பண்ணிட்டாங்கன்னா, என் அத்தையை போல யாரும் இல்லைன்னு நீங்களே துதி பாட ஆரம்பிச்சுடுவீங்க!” என்றாள் ஆதிரைக்கும் ஆதரவாக, அதே சமயம் பொன்வாணியையும் எங்கும் விட்டுக் கொடுக்காது.
இவள் முறுவலித்தாள்.

குழப்பம் குழப்பமாக ஒருபுறம் இருக்க, மனதளவில் திருமணத்திற்குத் தயாரானாள். அபினவிடம் திருமணத்தைப் பற்றி ஒருவாறு அவனுக்குப் புரியும் வகையில் உரைத்தாள். அபிக்குத் தேவாவோடு அவன் குடும்பத்தில் இணைந்து வாழப் போகிறோம் என்ற வரையில் புரிந்தது. தனக்குத் தேவையானவற்றை மட்டும் மனதில் ஏற்றிக் கொண்டான்.

“அன்னைக்கு ஒருநாள் நீ என்ன கேட்ட அபி?” என்றுதான் ஆதிரைப் பேச்சைத் தொடங்கி இருந்தாள்.

“என்னைக்கும்மா?” சின்னவன் புரியாது விழித்தான்.

“அதான் நீ தேர்ட் படிக்கும் போது அப்பா இல்லையேன்னு கேட்டல்ல?” என இவள் நினைவு படுத்தினாள்.

“ஆமா! ஆமா!” சின்னவன் வேகமாய் தலையை அசைத்தான்.

“அம்மா அதுக்கு என்ன சொன்னேன்? ஹம்ம், அப்பாவை இன்னும் காட் அனுப்பலைன்னு சொன்னேனா?” என அவள் கேட்க, பாவனையாய் மகன் தலையை அசைத்தான். அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“அதான்... இப்போ உனக்கு அப்பாவை அனுப்பி வச்சுட்டாரு. தேவா அங்கிள்தான் உனக்கு இனிமேல் அப்பா!” என்றாள் அவனுக்குப் புரியும் நோக்கில்.

“ம்மா... உண்மையாவா? தேவா அங்கிள்தான் எனக்கு அப்பாவா? சூப்பர்மா. அங்கிளை எனக்கு ரொம்ப பிடிக்கும் மா. அவர் நிறைய சாக்லேட் வாங்கித் தராரு. அவுட்டிங் கூட்டீட்டு போறாரு. அவங்க வீட்டுக்குப் போய் நம்ப ஸ்டே பண்ணோம்னா, இன்னும் நிறைய சாக்லேட் வாங்கித் தருவார் தானே?” என அவன் ஆர்வமாய் கேட்க, மகனை முறைத்தவள், இழுத்தணைத்தாள்.

அதோ இதோவென ஒருவாரம் முடிந்து திருமணத்திற்கு முதல்நாள் வந்திருந்தது. சனிக்கிழமை உழவர் துணைக்கு வந்தவளை மொத்தக் கூட்டமும் அருங்காட்சியகப் பொருளைப் போல பார்த்தனர்.

ஆதிரை வர வேண்டாம் என்றுதான் நினைத்தாள். ஆனால் தேவா வேறு எதைப்பற்றியும் பெரிதாய் பேசவில்லை என்பதால் அவளுக்கும் விடுப்பு எடுக்கப் பிடிக்கவில்லை. இங்கே வந்தால் வேலையில் கவனம் செல்லும். தனியாய் வீட்டில் இருந்தால் மனம் கண்டவற்றையும் யோசிக்கும் என கிளம்பி வந்துவிட்டாள்‌.

“அக்கா... நாளைக்கு உங்களுக்கு மேரேஜ்? ஞாபகம் இருக்கா? இருந்தாலும் புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்தான். முன்னாடியாவது இங்கே தேவா சாரைப் பத்தி எதாவது மனசு விட்டுத் திட்டலாம். இனிமே அந்த சுதந்திரமும் பறிபோச்சு...” என்றவள் ஏதோ யோசித்து, “ஓஹோ... அன்னைக்கு உங்க ஆளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட சண்டை போட்டீங்க இல்ல?” என அன்றைய நினைவில் முகம் திருப்பினாள் தர்ஷினி. வேறு ஏதோ பேசி அவளது கவனைத்தைக் கலைத்தாள்.

“ஏன்கா... இனிமே நீங்கதான் நம்ப தேவா சார்க்கு பாஸ். அவருக்கு கொஞ்சம் சிரிக்க கத்துக் கொடுக்கலாம் இல்ல?” என தர்ஷினி பேசிக் கொண்டிருக்கும் போதே தேவா வந்துவிட்டான்.

அவன் பால் வரத்து என்ன ஏதென கேட்டு ஆதிரை கவனக்குறைவாக பதில் உரைக்க, “லுக் ஆதிரையாழ், கவனைத்தை எங்க வச்சிருக்கீங்க?” எனக் கடுகடுத்துவிட்டுப் போனான்.

அதில் கடுப்பான தர்ஷினி, “க்கா... இதெல்லாம் நல்லா இல்ல. இவரோடத்தான் லைஃப் ஃபுல்லா ஷேர் பண்ணிக்கப் போறீங்க. யோசிக்கோங்க சொல்லிட்டேன்!” என முகத்தைத் திருப்பினாள். ஆதிரையின் முகத்தில் மென்னகை படர்ந்தது. வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றாள்.

மறுநாள் யார் யார் இங்கே வருவார்கள் என அவளுக்குத் தெரியவில்லை. காலை ஏழு முப்பதிலிருந்து ஒன்பது வரை முகூர்த்தம் என்பதால் ஏழு மணிக்கு இங்கே மகிழுந்தை அனுப்புவதாக ஹரி கூறியிருக்க, சரியென்றுவிட்டாள்.

“அண்ணி, ப்யூட்டிஷியன் நம்பரை உங்களுக்கு ஷேர் பண்ணி இருக்கேன். அவங்க இயர்லி மார்னிங் வந்துடுவாங்க!” என்றான்.

“இல்ல, ஹரி சார், இங்க தெருவுல ஒரு பொண்ணு ப்யூட்டீஷியனா இருக்கா. அவ பார்த்துப்பா!” என்று இவள் மறுக்க, அவன் சரியென்று விட்டான்.

ஆதிரை ஒரு குடுவை நிறைய மாவை அரைத்து குளிர்சாதன பெட்டியில் அடுக்கினாள். இரண்டு லிட்டர் பாலை வாங்கி வைத்தாள். யாரேனும் வந்தால் தேநீர், குளம்பி தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று யோசித்துதான் செய்தாள். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வீட்டையும் பூஜையறையும் சுத்தம் செய்தாள். நாளை அணிய வேண்டிய புடவையை இஸ்திரி செய்து மேஜை மீது எடுத்து வைத்தாள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து வந்தாள். பழையவை எனினும் அனைத்தும் வேலைப்பாடுகளுடன் நன்றாய் இருந்தன. மது எடுத்து வரும் நகைகளுடன் இதையும் அணிந்து கொள்ளலாம் என்றுதான் யோசித்து எடுத்து வந்தாள்.‌ வேறு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

திருமணத்திற்கு என்னென்ன ஆயத்தம் செய்ய வேண்டும் என்று யாருடைய கல்யாணத்தையும் அருகே இருந்து பார்த்ததும் இல்லை. எடுத்து செய்ய ஆட்களும் இல்லையே என்று‌ மனதோரம் வருத்தமாகத்தான் இருந்தது. இதே நேரம் பெற்றவர்கள் இருந்திருந்தால் வீடு எப்படி இருக்கும் என கற்பனை சற்றே மனதில் அரித்தது. ஆனாலும் தன்னளவில் யோசித்து தனக்காகவென தானே செய்து வைத்தாள்.

ஹரி அவ்வப்போது எதுவும் வேண்டுமா என அழைத்துக் கேட்டான். தேவா வீட்டினர்தான் அனைத்து செலவுகளையும் செய்தனர். இவளுக்கு அது வேறு மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதனாலே அனைத்தையும் முடிந்தளவு எளிமையாய் செய்யுமாறு ஹரியிடம் இலை மறை காயாக கூறினாள். ஆனால் அவன் அதைப் புரிந்து கொண்டானா இல்லையா என்று தெரியவில்லை.‌ அவன் தமையன் திருமணத்தை எவ்வித குறையும் அற்று செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான்.

அபிக்கு இரவு உணவைக் கொடுத்து தானும் உண்டு முடித்தாள். அவன் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தான். இவள் அறையில்தான் இருந்தாள்.

கட்டிலில் காலைக் கட்டி சாய்ந்து அமர்ந்திருந்தவளின் முன்னே அலைபேசி இருந்தது. தேவாவிற்கு அழைத்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஒருவாரமாக எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் என்னவோ பேசவில்லை. இன்றைக்கு பேசாவிட்டால் எப்போதும் பேச முடியாது எனத் தோன்றிற்று. கண்டிப்பாக தான் கூறப் போகும் விஷயத்தில் அவனுக்கு உடன்பாடு இருக்காது, கோபம் வரும் எனத் தெரிந்தாலும் தயங்கியபடியே அழைத்துவிட்டாள்.

இரண்டு முறை அழைப்புச் சென்று துண்டானது. மூன்றாவது முறை ஏற்றுக் காதில் வைத்தான். “அண்ணா... அந்த கலர் லைட் வேணாம். ரொம்ப அடிக்குது. மைல்டான கலர்ல போடுங்க!” என மறுபுறம் அவன் பேச, இவள் அமைதியாய் இருந்தாள்.

“தம்பி, வேற கலர்ல போட்டா பளிச்சின்னு தெரியாதே. உங்களுக்கு இந்தக் கலர் ஓகேவா?” என யாரோ ஒருவர் பேசும் சப்தம் கேட்டது. அவருக்குப் பதிலளித்தவன், “ஹலோ!” என்றான் இவளிடம்.

“வேலையா இருக்கீங்களா?” இவள் மெதுவாய்க் கேட்டாள்.

“ஆமா! இங்க மண்டபத்துல இருக்கேன்!” என்றான் தேவா.

“ஓ... எல்லாம் ஓகே வா? நைட்டு எங்க ஸ்டே பண்ண போறீங்க? மண்டபத்துலயா?” ஆதிரை ஏதோ கேட்க வேண்டுமென்ற எண்ணத்தில் கேட்டாள்.

“இவ்வளோ சீக்கிரம் கேட்டுட்ட ஆதிரை?” அவன் கேலியாய் சிரிப்பதை இவளால் உணர முடிந்தது. பல்லைக் கடித்தாள்.

“சரி, எதுக்கு கால் பண்ண?” தேவா விஷயத்திற்கு வந்தான்.‌

“இல்ல... சும்மாதான் பண்ணேன்!” ஆதிரை குரல் தயங்கியது.

“இல்லை... ஐ க்நோ யூ. விஷயம் இல்லாம கால் பண்ண மாட்ட. என்னென்னு சொல்லு ஆதி!” அவன் அழுத்திக் கேட்டான்.

பெருமூச்சை வெளிவிட்டவள், “ஹம்ம்... ஆமா, அது மேரேஜ்க்கு முன்னாடி உங்ககிட்டே சில விஷயம் பேசி க்ளியர் பண்ணலாம்னு கால் பண்ணேன்!” என்றாள்.

“ரைட்... நீ என்ன பேசுறதுனாலும் நாளைக்குப் பேசிக்கலாம். இப்போ கேட்க எனக்கு விருப்பம் இல்லை!” என்றான் முகத்தில் அடித்தாற் போல‌.

“ஏன்... ஏன் இப்போ பேசுனா என்ன? விருப்பம் இல்லையோ சார்க்கு? நாளைலருந்து நீங்களா நினைச்சா கூட என்கிட்ட இப்படி பேச முடியாது. மைண்ட் இட்!” அவள் பொரிந்தாள்.

‘விருப்பம் இல்லையாமே! விருப்பம்!’ அவளுக்கு கடுப்பானது.

“அதான் நீயே சொல்லிட்டீயே. வாட் எவர், நாளைக்குப் பேசலாம். எதாவது பேசணும்னுனு என்னை இர்ரிடேட் பண்ணுவ நீ!” அவன் கூறவும், இவளுக்கு ரோஷம் வந்தது.

“ஓ.‌.. நான் பேசுனாலே உங்களுக்கு இர்ரிடேட் ஆகுதா? அப்புறம் ஏன் இந்த மூஞ்சியைப் பிடிச்சிருக்குன்னு தொரத்தி தொரத்தி ஓகே சொல்ல வச்சு கல்யாணம் பண்றீங்க?” காட்டத்துடன் கேட்டாள்.
சில நிமிடங்கள் மறுபுறம் அமைதியாகக் கழிந்தது.

“இப்பவும் இந்த மூஞ்சியைப் பிடிச்சுப் போய்தான் கல்யாணம் பண்ணப் போறேன். பட் உன் வாய் சரியில்லை டீ. எப்போ பார்த்தாலும் பிடிக்கலை, ஒத்து வராது, ரீ கன்சிடர் பண்ணுன்னு டார்ச்சர் பண்றல்ல, அதுதான் இர்ரிடேட் ஆகுது. இப்போ கூட ஆசையா ரெண்டு வார்த்தைப் பேசலாம்னு நீ கால் பண்ணியிருக்க மாட்ட. எதாவது பேசி என் கோபத்தை தூண்டத்தான் கால் பண்ணியிருப்ப!” என்றான் சிடுசிடுப்புடன்.

“ஐ க்நோ, நான் பேசுறது உங்களுக்கு ஹேர்ட் ஆகலாம். பட், இதை இப்பவே பேசுறது நல்லது. முதல் விஷயம் உங்கம்மா கல்யாணத்துக்குப் பிறகு தேவையில்லாம திட்டுனா என்னால பொறுத்துக்க முடியாது. நான் சீரியல் ஹீரோயின் மாதிரி சாஃப்ட் எல்லாம் இல்லை. பதிலுக்குப் பதில் பேசிடுவேன்!” என்றாள் அழுத்தமாய்.

“நான் எப்போ உன்னை சாஃப்ட்னு சொன்னேன். வேலை இல்லைன்னதும் என்னைவே நூறு தேவா போட்டு கடுப்பேத்துனவதானே நீ!” தேவா எள்ளலாய் உரைத்தான்.

“தட்ஸ் மை நேச்சர் தேவா சார். சோ, உங்கம்மா பேசுனா நானும் பதிலுக்கு பேசுவேன்!” என்றாள் கறாராய்.

“பேசு... உன்னை அமைதியா இருக்க சொல்லலை. பட், அவங்க கோபம் போற வரை இப்படித்தான் இருப்பாங்க. நான் அவங்ககிட்ட சொல்லி வைக்கிறேன். பட், ஒன் திங், என் அம்மாவை மரியாதை இல்லாம பேசுனா எனக்கு கோபம் வரும்!” என்றான்.

“ஹம்ம்...அது அவங்க நடந்துக்குறதைப் பொறுத்து தேவா சார். யார்கிட்டேயும் சண்டைக்குப் போறது என்னோட இன்டென்ஷன் இல்லை. இன்பேக்ட் எப்படியும் வாழ்ற காலத்தை ஒரே வீட்ல வாழப் போறோம், சோ அவங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு நினைச்சிருக்கேன் தான். பட், எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கும். என் பொறுமைக்கும் கூட!” ஆதிரை கூறவும், “ஓகே, நெக்ஸ்ட் எதுவும் சொல்லணுமா?” என்றான் அந்தப் பேச்சை விடுத்து.

“யெஸ்...அது... நான் உங்களை இதுவரைக்கும் பாஸாதான் பார்த்தேன். கொஞ்ச நாளா ப்ரெண்டா பார்க்குறேன்‌. ஐ நீட் சம் டைம். எல்லாமே பாஸ்டா நடக்குது. வந்தீங்க, பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க, இப்போ மேரேஜ். கடகடன்னு நடக்குது தேவா சார். வீ நீட் டைம். உங்களை அக்செப்ட் பண்ண, ஃபேமிலில மெர்ஜாக. சோ, நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குப்‌ புரியுது இல்ல?” கடைசி வார்த்தையில் தயக்கம் நடை போட்டது. அவனுக்குத் தெள்ளத் தெளிவாக புரிந்து போயிற்று.

“அதை நாளைக்குப் பார்த்துக்கலாம். நீ வேற எதுவும் சொல்லணுமா?” என்றான் அவள் கேள்விக்குப் பதிலுரைக்காது.

“ஹம்ம்...லாஸ்டா ஒன்னு சொல்லணும். நான் இதை சொல்றதால உங்களுக்கு கோபம் வரலாம். பட், சான்ஸ் இருக்குன்னுதான் இதை சொல்லி வைக்கிறேன். நீங்க இடையில பேசாம நான் சொல்றதை கேளுங்க!” என்று பீடிகையோடு ஆரம்பித்தாள்.

“சரி சொல்லு!” என்றவாறே தேவா அங்கிருந்த இருக்கை ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“அது... நாளைக்கு நம்ப மேரேஜ் முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு என்னால இந்த வாழ்க்கைல இருக்கவே முடியாதுன்னு தோணுச்சுன்னா, கண்டிப்பா பிரிஞ்சு போய்டுவேன். நீங்க தாலி கட்டீட்டிங்கன்றதுக்காக டிபிகல் இண்டியன் வொய்ஃபா காலம் முழுக்க உங்களோட வாழ முடியாது. நான் இந்தக் கல்யாணத்துக்கு யெஸ் சொன்ன ஒரே ரீசன் உங்க மேல இருக்க நம்பிக்கைலதான். பட், மனுஷங்க எப்போ எப்படி மாறுவாங்கன்னு தெரியாது இல்ல. அதனாலதான் இதை சொல்றேன்.”

“அதுக்காக பிரியணும்ன்றது என்னோட இன்டென்ஷன் கிடையாது. காலம் முழுக்க தனியாவே வாழ்றதை விட ஒரு கம்பானியன் கிடைச்சா நல்லா இருக்கும்னு தான் நான் ஓகே சொன்னேன். முடிஞ்ச அளவுக்கு எபஃர்ட் போட்டு இந்த ரிலேஷன்ஷிப்பை மெயிண்டெய்ன் பண்ண ட்ரை பண்ணுவேன். உங்க அம்மாவால அபிக்கு பிசிக்கலா அல்லது மெண்டலா ப்ராப்ளம் வந்தா, நான் அதை அக்செப்ட் பண்ண மாட்டேன். என் பையன் எனக்கு முக்கியம். உங்களுக்கு உங்கம்மா முக்கியம்ன்ற மாதிரி. இதை முன்னவே சொல்றதுக்கு...!” என அவள் பேசும் போதே மறுபுறம் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

“காலை கட் பண்ணிட்டாரு!” அலைபேசியை கடுப்போடு தூக்கியெறிந்தாள்.

நான் என்ன சொல்கிறேன் என்பதை கூட ஐந்து நிமிடம் காது கொடுக்க முடியவில்லையா இவனுக்கு. எப்படி இருவரும் சேர்ந்து காலம் முழுக்க வாழப் போகிறோம் என்ற எண்ணம் வந்து தொலைத்தது. கண்ணாடி முன்னே எடுத்து வைத்த முகூர்த்த சேலை, நகைகளையே கடுப்புடன் பார்த்தாள்.

அழைப்பு மணி ஒலித்து அவளது சிந்தையை தடை செய்திருக்க, ‘இந்
த நேரத்துல யாரு?’ என்ற யோசனையுடன் சென்றாள்.

தொடரும்...

காலைல கல்யாணம், எல்லாரும் வந்துடுங்க மக்களே 😌😉
 
Well-known member
Messages
993
Reaction score
735
Points
93
Kaalaila aagiduchu maa😆😆😆😆😆
Marriage appo kooda rendu perum sanda pottutte thaan iruppanga polaye


Deva thaan vanthiruppano

Next ud ku verithanama waiting maa

.
 
Active member
Messages
202
Reaction score
162
Points
43
Kalyana epi Kalyana epi
Aana
Kalyana
Preperation ku
Announcement
Pre night epidhan
Prewedding shoot pola
Deva ku pudhasah pre night epi
Adhuvum yeppadi avan kadupaaki veetuku vara vecha epi

Deva unmaiyavae pavam
Characterization eh aadhirai kitta totally out 🤣🤣🤣🤣🤣
Andha miduku attitude 🤣🤣🤣🤣
 
Well-known member
Messages
510
Reaction score
383
Points
63
என்னிக்கு காலைல? 🤔🤔🤔🤔
இப்போ கூட இரண்டும் முட்டிக்குதே, யார் வந்தது தேவாவா?
 
Well-known member
Messages
445
Reaction score
323
Points
63
Yemma adi innum kalyanam yae aagala aana athukula divorce nu sollura ah athu seri indha janu kalyanam kalyanam nu solli solli kalyanam nu onnu aagama la yae avanuku divorce confirm panniduvaga pola .

Aana yazh pesurathu ah ketkum pothu namaku yae kaduppu aaguthu avanuku aagama irundha seri

Deva ne rombavae pavam da ennaku oru doubt oru vela indha deva na ra per la unna yara chum romba kaduppu yethitagalo ipadi vachi seiyura ah
 
Top