- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 31 
எண்டர் பொத்தானை இரண்டு முறை அழுத்தி சோதனை முடிவை பதிந்து சேமித்த ஆதிரை இடதுகையின் பெருவிரலால் கழுத்தை நீவிவிட்டாள். இன்றைக்குப் பால் வரத்து சற்றே அதிகம். அதனாலே வேலை நெட்டி முறித்தது.
சூடான தேநீர் கோப்பையை ஊழியர் வைத்துவிட்டு செல்லவும் அதை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவாறே கணினியில் விழிகளைப் பதித்திருந்தாள். அவளது அலைபேசி இரண்டு முறை செய்தி வந்ததாக ஒலியெழுப்ப, இவள் அதை கண்டு கொள்ளவில்லை.
“அக்கா... வேல்யூ பார்த்துக்கோங்க!” என ஆதிரைக்குப் பக்கவாட்டில் சோதனைக் குழாயை நகர்த்திய தர்ஷினியின் பார்வை எதேச்சையாக இவளது அலைபேசியில் படிந்தது.
“க்கா... இந்த பிக் எப்போ எடுத்தது? இது மகாபலிபுரம்தானே? நீங்க போனீங்களா?” என அவள் அலைபேசியை எடுத்து அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள்.
“ஹம்ம்... ஆமா தர்ஷினி!” நிமிர்ந்தமர்ந்த ஆதிரை பதிலளித்தாள்.
“சூப்பர் கா... விஷ்ணு சிலையோட சேர்த்து கவர் பண்ணி இருக்கீங்க. தனியா போனீங்களா கா? ஃபோட்டோ நல்லா இருக்கே, யார் எடுத்தது?” எனக் கேட்டவள், அவளது கைரேகையை வைக்குமாறு அலைபேசியை முன்னே நீட்டினாள்.
“ஹம்ம்... தனியாதான் போனேன் தர்ஷினி!” என்றவள், “நாளைக்கு ஃபோட்டோஸ் பார்க்கலாம். இப்போ மீத சாம்பிளை போட்டு முடி!” முயன்று குரலில் கடுமையைப் புகுத்தினாள். அவளோடு அத்தனை புகைப்படத்திலும் தேவாவும் நிறைந்து கிடந்தான். அபினவ் பற்றி இங்கிருப்பவர்கள் யாருக்கும் தெரியாது.
ஆதிரை தெரியப்படுத்தவில்லை என்பதுதான் தகும். உண்மையில் அவளுக்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பகிர விருப்பமில்லை. அதனாலே சின்னவனைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள். சக ஊழியர்களுக்கு அவள் தனியாக வசிக்கிறாள் என்பது வரையில் மட்டுமே தெரிந்தது.
ஒருசில முறை கோமதியும் தர்ஷினியும் அவளிடம் குடும்பத்தைப் பற்றி கேட்க, அப்பேச்சை முற்றிலும் தவிர்த்துவிட்டாள். இப்போதைக்கு தேவாவிற்கு மட்டும்தான் அவளது கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் தெரியும். மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. இவர்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு முக்கியமாகப்படவில்லை, அவ்வளவுதான்.
“ப்ம்ச்... ஒரு போட்டோ பார்க்குற நேரத்துல நான் நாலு சாம்பிள் போட்ருவேன் கா!” கேலியாக கூறிய தர்ஷினி முகத்தை திருப்பிக் கொள்ள, இவள் நெற்றியைத் தேய்த்துவிட்டு அலைபேசியை உயிர்ப்பித்தாள். அவள் மட்டும் தனியாய் இருக்கும் புகைப்படத்தை மட்டும் ஒரு கோப்பில் இட்டவள், அலைபேசியை மற்றவள் புறம் நகர்த்தினாள்.
அவளைப் பொய்யாய் முறைத்த தர்ஷினி புகைப்படங்களைத் தள்ளிவிட்டுப் பார்த்தாள். “இந்தா இருக்கு மகாபலிபுரம். ரெண்டு தடவைதான் கா போய்ருக்கேன். ஒருநாள் ஆற அமர போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்!” என்றவள் கடைசி மாதிரியையும் சோதனை செய்து முடித்தாள். கோமதியிடமும் முடிவுகளை வாங்கிப் பதிந்த ஆதிரை மடிக்கணினியை அணைத்து வைத்தாள்.
நேரம் ஐந்தை தொட்டிருந்தது. மற்ற மூவரும் கூட தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு தேவா அறைக்குச் சென்று கையெழுத்திட்டு அகல, இவளும் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பினாள்.
காலையிலிருந்து இமை சிமிட்டாது கணினியைப் பார்த்ததில் விழிகள் பூத்துப் போயிருந்தன. இலவச இணைப்பாக ஒரு பக்க தலைவலி வேறு. வீட்டிற்கு சென்றதும் ஒரு பாராசிட்டமால் மாத்திரையை விழுங்கிவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்க வேண்டும் என்று நினைக்கையிலே அபியின் எண்ணம் வந்தது. அவனுக்காக வேணும் இரவு உணவு சமைக்க வேண்டும். வெளியே வாங்கி கொடுக்கும் எண்ணமில்லை.
ஏற்கனவே ஞாயிற்று கிழமை முழுவதும் வெளியேதானே உண்கிறார்கள். உடல் கெட்டுவிடும் என்ற எண்ணம் வர, சமைத்து முடித்துவிட்டு விரைவிலே உறங்க வேண்டும் என்ற யோசனையோடு தேவாவின் அறைக்குள் நுழைந்து கையெழுத்திட்டாள்.
தேவா ஆதிரை முகத்தைதான் பார்த்திருந்தான் போல. அவள் இவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ யோசனையில் இருந்தாள்.
“ஆதி, ஆர் யூ ஓகே?” அவன் கேள்வியில் சுயம் பெற்றவள், “என்ன சார்?” என்றாள் புரியாது விழித்து.
“நீ ஓகே வா? ஏன் ரொம்ப டல்லா தெரியுற?” அவன் கேட்டதும் இவளது முகத்தில் நொடி நேர ஆச்சர்யம்.
இந்தளவிற்கு இவன் தன்னைக் கவனக்கிறானா என எண்ணியவள், “சிஸ்டம் பார்த்துட்டே இருந்ததுல லைட்டா தலைவலி சார்!” என்றாள் முறுவலுடன்.
“ஹம்ம்... டேக் கேர்!” இயல்பாய் அவன் கூறியதும் இவள் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டு வெளியே வந்தாள்.
வீட்டிற்குச் சென்றதும் ஒரு கோப்பை தேநீரோடு மாத்திரையை விழுங்கிவிட்டு சிறிது நேரம் படுத்து எழுந்தாள். அபினவ் இவள் கொடுத்த ரொட்டியை உண்டு கொண்டே வீட்டுப் பாடம் செய்தான். எளிமையாய் உப்மா செய்து அவனை உண்ண வைத்தவள், அருகிலே படுத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்து தானும் உறங்கிப் போனாள்.
மறுநாள் எப்போதும் போல இவள் வேலைக்கு வர தேவா வந்ததும் ஒரு நொடி இவளைத்தான் பார்த்தான். நான் நன்றாய் இருக்கிறேன் என ஆதிரை புன்னகைக்க, அவன் அதை தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.
மற்றவர்கள் இருக்கும்போது இவர்களுக்கு இடையே மௌமன உரையாடல் அரங்கேறியது. அந்த வார ஞாயிறு பிறகு ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும்போது பரஸ்பர புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். தேவா வேலையில் கடுமையைக் காண்பித்தாலும் ஆதிரையிடம் கொஞ்சம் புன்னகை முகத்தை மட்டுமே வெளிப்படுத்தினான்.
அவளும் அதை அறிந்தாலும் வேலையில் எவ்வித சலுகையும் எடுத்துக் கொள்ளாது அனைத்திலும் சரியாய் இருந்தாள். அதுவே தேவாவிற்குப் போதுமானதாக இருந்தது.
அந்த வாரம் ஞாயிறு வெளியே செல்கிறோம் என தேவாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டாள் ஆதிரை. எப்போதும் போல விரைவாய் எழுந்து குளித்து முடித்தாள்.
என்ன சமைப்பது என யோசனையில் புருவம் சுளித்தவள் மகன் பூரி கேட்டது நினைவை நிறைக்க, கோதுமை மாவை எடுத்துப் பிசைந்தாள்.
“ம்மா...” என அபினவ் எழுந்து வந்தான். அவன் பல் துலக்கி முடித்ததும் அவனுக்கு பாலைக் கொடுத்தாள்.
“ம்மா... என்ன பண்றீங்க?” கோப்பையை சமையல் மேடையில் வைத்துவிட்டு ஆதிரை கையிலிருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான்.
“அபிக்குப் பிடிச்ச பூரி சுடப் போறேன்!” என்றவள், மாவை பிணைந்து மூடி வைத்துவிட்டு குருமாவிற்கு காய்கறிகளை நறுக்கினாள்.
“சூப்பர்மா... நான் போய் குளிச்சிட்டு வரேன். பூரி சுட்டு வைம்மா..” என்றவன் குடுகுடுவென ஓட, இவள் புன்னகையுடன் குருமாவை காமைக் கலத்தில் வைப்பதற்காக விசிலை தேடி மாட்டிவிட்டு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினாள்.
ஓரமாய் வைத்திருந்த அலைபேசியை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். தேவாவிடமிருந்து ஒரு செய்தி கூட இன்னும் வரவில்லை. கடந்து சென்ற ஞாயிறுகளில் காலையில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு, தன்னுடைய வருகையை உறுதி செய்வான். ஆனால், இன்றைக்கு புலனம் காற்று வாங்கிக் கொண்டிருந்தது.
கோதுமை மாவை வட்டமாய் தேய்த்து முடித்தாள். தேவாவிற்கும் சேர்த்துதான் இன்றைக்கு சமைத்தாள். அபி குளித்து முடித்து வந்ததும் அங்கேயே ஒரு நாற்காலியை இட்டு அமர்ந்தவன் சுடசுட தாய் கொடுத்த பூரியை உண்டான்.
ஆதிரையும் உண்டு முடிக்க, இருவரும் கிளம்பி அமர்ந்தனர்.
நேரம் பத்தை தொட்டிருக்க, இன்னுமே தேவா வந்திருக்கவில்லை. இவள் யோசனையுடன் அவனது இலக்கத்திற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரியென புலனத்தில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள். அபி வேறு தேவாவவை எதிர்பார்த்து வாயிலையே பார்த்திருந்தான்.
மேலும் ஒரு மணி நேரம் கடந்தும் அவனது வருகைக்கான எவ்வித அறிகுறியும் தென்படாது போக, சின்னவனின் முகம் வாடியது.
“என்னம்மா... அங்கிளை இன்னும் காணோம்?” அவன் கேட்க, ஆதிரைக்கும் ஒன்றும் தெரியவில்லை. வருகிறேன் என்று கூறிவிட்டு இப்படியெல்லாம் தேவா அசட்டுத்தனமாய் இருக்க மாட்டான். ஒருவேளை முக்கியமான எதாவது அலுவலாகக் கூட இருக்கலாம் என சிந்தித்தவள், அபியின் வாட்டம் பொறுக்காது இருவரும் வெளியே கிளம்பினர்.
“நம்ப இப்போ கிளம்பலாம் அபி. அங்கிள் வந்து நம்பளோட ஜாய்ன் பண்ணிப்பாரு. ஓகே வா?” என மகனிடம் கேட்க, அவன் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.
எங்கே செல்வது என எந்த திட்டமும் இல்லாததால் அருகே இருந்த விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்றாள். மதிய உணவை முடித்துவிட்டு அப்படியே நீச்சல் வகுப்பிற்கு சென்றனர்.
மாலை வரை தேவா வராததால், “அம்மா, அங்கிள்?” என வினவியவன் நீச்சல் உடையை அவிழ்த்துவிட்டு ஏற்கனவே அணிந்து வந்த உடையை மீண்டும் உடுத்தினான்.
“இப்போதான் அங்கிள் கால் பண்ணாரு அபி. அவருக்கு ஏதோ முக்கியமான வேலையாம். அதான் வர முடியலைன்னு சாரி கேட்டாரு. உன்கிட்டேயும் சொல்ல சொன்னாரு. நெக்ஸ்ட் வீக் வர்றேன்னு ப்ராமிஸ் கூட பண்ணாரு!” மகன் வருத்தப்படக் கூடாது என்று பொய்யுரைத்தாள். அவன் முகம் தெளியவில்லை எனினும் தலையை அசைத்தான்.
“ஹம்ம்... இப்போ நம்ப ஷாப்பிங் போகப் போறோம். ப்ரௌனி செய்யலாம்னு யோசிச்சு வச்சிருக்கேன் அபிமா. உனக்கு வேணுமா?” மகனை திசைதிருப்பும் முயற்சியில் ஆதிரைக் கேட்கவும், இவன் முகம் மலர்ந்தது.
“யெஸ்மா... டபுள் சாக்லேட் ப்ரௌனி செய்யலாம் மா. லாஸ்ட் டைம் பண்ண மாதிரி நிறைய சாக்லேட் போட்டு பண்ணுங்க மா!” அவன் ஆசையுடன் கூற, “செய்யலாமே... ஓகே, நம்ப திங்க்ஸ் வாங்கிட்டு வீட்டுக்குப் போய் கேக் பண்ணலாம்...” என சிரிப்புடன் உரைத்தவள் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
அபி நொடியில் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வர, இவளும் தன்னை சுத்தம் செய்தாள். இருவரும் சேர்ந்து அணிச்சலை செய்து முடித்திருந்தனர்.
“ம்மா... த்ரீ ஃபீஸ் வேணும் எனக்கு!” அவன் மூன்று விரல்களை காண்பிக்க, “த்ரீதான் டா. அதுக்கும் மேல ஒன்னு கூட கிடையாது. காலைல சாப்பிட்டுக்கோ!” என கண்டிப்புடன் அவனுக்கு மூன்று துண்டுகளை கொடுத்தவள், தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டாள். ஏற்கனவே உடல் பூசினாற் போன்றாகிவிட்டதோ என சேலை கட்டும் போது லேசாய் எட்டிப் பார்க்கும் குட்டித் தொப்பை அவளுக்கு நினைவு வர, ஒன்றோடு நிறுத்தினாள்.
ருக்மணி பாட்டிக்கும் மகேசன் தாத்தாவிற்கும் அணிச்சலை எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அவரிடம் சிறிது நேரம் பேசினாள். அவர் சுற்றி வளைத்து தேவாவைப் பற்றியே கேட்க, இவள் அவன் தனக்கு நண்பன் என முகம் மாறாது பதிலளிக்க வேண்டி இருந்தது. உண்மையில் ஆதிரைக்கு இப்படி விளக்கம் கொடுப்பது அறவே பிடிக்காது.
ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. தினமும் அபியைத் தன்னுடைய பேரன் போல அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இவள் வரத் தாமதமானால் ருக்கு பாட்டி அபியின் வயிற்றை வாட விடாது பார்த்துக் கொள்வார். அந்த நன்றிக்கடன் எப்போதுமே ஆதிரையிடம் உண்டு. அதனாலே அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பொறுமையாய் பதிலளித்தாள்.
“ஏன்டி ஆதிரை... உன் புருஷன் என்ன பண்றாரு?” ருக்கு பாட்டி கேட்க, இவள் என்ன சொல்வது எனத் தெரியாது தவித்து அப்போதைக்கு ஏதோ ஒரு பொய்யைக் கூறி மழுப்பிவிட்டு வீட்டை அடைந்தாள். உறங்க செல்லும் முன்னே அலைபேசியை ஒருமுறை எடுத்துப் பார்த்தாள். தேவாவிடமிருந்து செய்தி எதுவும் வந்திருக்கவில்லை.
‘ஹோப் யூ ஆர் ஃபைன் சார்? மெசேஜ் பார்த்துட்டு கால் பண்ணுங்க!’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் காலையில் உழவர் துணைக்குச் சென்றதும் இவளது விழிகள் தேவாவைத்தான் தேடின. அவன் தாமதமாய் வருவான் என்று வேலையில் கவனம் செலுத்தினாள். மதிய உணவு நேரம் வந்தும் கூட அவன் வரவில்லை.
அவனுக்கு என்னவானது என ஆதிரையிடம் மெலிதாய் ஒரு பதற்றம் அப்பியது. இருந்தாலும் எதையும் வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. அவளுக்கான விடையை சுபாஷே உரைத்துவிட்டான்.
“என்ன இன்னிக்கு தேவா சாரைக் காணோம். ஒரே அமைதி மயமா இருக்கே!” என தர்ஷினி கேட்க,
“ப்ம்ச்... அவர் வரலைன்னா சந்தோஷம் தான் தர்ஷினி. இல்லைன்னா எதையாவது கேப்பாரு, திட்டுவாரு. என்னைக்காவது தான் இதுமாதிரி ஃப்ரியா இருக்க முடியுது!” கோமதி இடை புகுந்தார்.
“இன்னைக்கு மட்டும் இல்ல, நாளைக்கும் கூட நீங்க ஜாலியா இருக்கலாம். தேவா சார் வெனஸ்டே தான் வருவாரு!” சுபாஷ் கூற, ஆதிரை அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“அவரோட க்ளோஸ் ரிலேட்டீவ்ல டெத்தாம். ஹரி சார் கால் பண்ணி சொன்னாரு. அவர் இல்லைனாலும் வேலையை கரெக்டா பார்க்க சொன்னாரு. அதனாலே ரொம்ப ஓபி அடிக்கலாம்னு நினைக்காதீங்க. சார் வந்தா, எனக்கும் ஆதிக்கும்தான் திட்டு விழும்!” என அவன் மெல்லிய கண்டிப்புடன் கூறியதை தர்ஷினியும் கோமதியும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. நாளைக்கும் தேவா வரமாட்டான் என்றதிலே அவர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆதிலா மட்டும் சம்பிரதாயத்திற்காக அவனிடம் தலையை அசைக்க, இவனது முகத்தில் புன்னகை நீண்டது.
தேவா வரவில்லை என்றதும் அனைவரும் மந்தமாய் செயல்பட்டனர். வேலை நிலுவையில் நின்றுவிட, ஆதிரை அனைவரையும் அதட்டி வேலை வாங்கினாள். சுபாஷ் எல்லோரிடமும் இலகுவாக பழகுபவன் என்பதால் அவனுடைய கண்டிப்பான பேச்சை ஒருவரும் கேட்கவில்லை.
“அக்கா... கதை பேசலாம், தப்பில்லை. பட், வேலையை முடிச்சிட்டு உக்கார்ந்து பேசுங்க. இல்லைன்னா எவ்வளோ நேரம் ஆனாலும் நீங்க இங்கதான் இருக்கணும்!” இவள் கோபத்துடன் கூறியதில் கடகடவென வேலை நடந்தது.
பால் வடிகட்டும் இடத்திற்குச் சென்று வேலை சரியாய் நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். குளிரூட்டும் அறையையும் மறக்காமல் கவனித்தாள்.
“ப்ம்ச்... இவ்வளோ நேரம் நான் காட்டு கத்து கத்துறேன். ஒருத்தரும் கண்டுக்கலை ஆதி. நீ சொன்னதும் எல்லாரும் கப்சிப்னு ஆயிட்டாங்க!” சுபாஷ் கடுப்போடு கூறினான்.
“நீங்க எல்லா நேரத்துலயும் ரொம்ப ஜோவியலா, ஈஸியா அப்ரோச் பண்ற மாதிரி இருக்கீங்க சுபாஷ். அதனாலே நீங்க சொன்னாலும் அதை வொர்க்கர்ஸ் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. கொஞ்சம் எல்லார்கிட்டயும் டிஸ்டென்ஸ் மெய்ண்டெய்ன் பண்ணுங்க. வொர்கல எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ண மாட்டேன்னு சொல்லுலயும், செயல்லயும் காட்டுங்க!” அவனைப் பார்த்து ஆதிரைக் கூற, சுபாஷூக்கும் அதேதான் தோன்றிற்று. இனிமேல் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து பெருமூச்சுவிட்டான்.
ஆதிரை இன்றைக்கு இழுத்துப் பிடித்ததி
ல் வேலை சரியாய் நடந்தது. மறுநாளும் அவள்தான் அனைத்தையும் மேற்பார்வை பார்த்து வேலையை சரியாய் செய்தாள்.
எண்டர் பொத்தானை இரண்டு முறை அழுத்தி சோதனை முடிவை பதிந்து சேமித்த ஆதிரை இடதுகையின் பெருவிரலால் கழுத்தை நீவிவிட்டாள். இன்றைக்குப் பால் வரத்து சற்றே அதிகம். அதனாலே வேலை நெட்டி முறித்தது.
சூடான தேநீர் கோப்பையை ஊழியர் வைத்துவிட்டு செல்லவும் அதை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவாறே கணினியில் விழிகளைப் பதித்திருந்தாள். அவளது அலைபேசி இரண்டு முறை செய்தி வந்ததாக ஒலியெழுப்ப, இவள் அதை கண்டு கொள்ளவில்லை.
“அக்கா... வேல்யூ பார்த்துக்கோங்க!” என ஆதிரைக்குப் பக்கவாட்டில் சோதனைக் குழாயை நகர்த்திய தர்ஷினியின் பார்வை எதேச்சையாக இவளது அலைபேசியில் படிந்தது.
“க்கா... இந்த பிக் எப்போ எடுத்தது? இது மகாபலிபுரம்தானே? நீங்க போனீங்களா?” என அவள் அலைபேசியை எடுத்து அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள்.
“ஹம்ம்... ஆமா தர்ஷினி!” நிமிர்ந்தமர்ந்த ஆதிரை பதிலளித்தாள்.
“சூப்பர் கா... விஷ்ணு சிலையோட சேர்த்து கவர் பண்ணி இருக்கீங்க. தனியா போனீங்களா கா? ஃபோட்டோ நல்லா இருக்கே, யார் எடுத்தது?” எனக் கேட்டவள், அவளது கைரேகையை வைக்குமாறு அலைபேசியை முன்னே நீட்டினாள்.
“ஹம்ம்... தனியாதான் போனேன் தர்ஷினி!” என்றவள், “நாளைக்கு ஃபோட்டோஸ் பார்க்கலாம். இப்போ மீத சாம்பிளை போட்டு முடி!” முயன்று குரலில் கடுமையைப் புகுத்தினாள். அவளோடு அத்தனை புகைப்படத்திலும் தேவாவும் நிறைந்து கிடந்தான். அபினவ் பற்றி இங்கிருப்பவர்கள் யாருக்கும் தெரியாது.
ஆதிரை தெரியப்படுத்தவில்லை என்பதுதான் தகும். உண்மையில் அவளுக்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பகிர விருப்பமில்லை. அதனாலே சின்னவனைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டாள். சக ஊழியர்களுக்கு அவள் தனியாக வசிக்கிறாள் என்பது வரையில் மட்டுமே தெரிந்தது.
ஒருசில முறை கோமதியும் தர்ஷினியும் அவளிடம் குடும்பத்தைப் பற்றி கேட்க, அப்பேச்சை முற்றிலும் தவிர்த்துவிட்டாள். இப்போதைக்கு தேவாவிற்கு மட்டும்தான் அவளது கடந்தகால வாழ்க்கையின் சுவடுகள் தெரியும். மறைக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. இவர்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு முக்கியமாகப்படவில்லை, அவ்வளவுதான்.
“ப்ம்ச்... ஒரு போட்டோ பார்க்குற நேரத்துல நான் நாலு சாம்பிள் போட்ருவேன் கா!” கேலியாக கூறிய தர்ஷினி முகத்தை திருப்பிக் கொள்ள, இவள் நெற்றியைத் தேய்த்துவிட்டு அலைபேசியை உயிர்ப்பித்தாள். அவள் மட்டும் தனியாய் இருக்கும் புகைப்படத்தை மட்டும் ஒரு கோப்பில் இட்டவள், அலைபேசியை மற்றவள் புறம் நகர்த்தினாள்.
அவளைப் பொய்யாய் முறைத்த தர்ஷினி புகைப்படங்களைத் தள்ளிவிட்டுப் பார்த்தாள். “இந்தா இருக்கு மகாபலிபுரம். ரெண்டு தடவைதான் கா போய்ருக்கேன். ஒருநாள் ஆற அமர போய் சுத்திப் பார்த்துட்டு வரணும்!” என்றவள் கடைசி மாதிரியையும் சோதனை செய்து முடித்தாள். கோமதியிடமும் முடிவுகளை வாங்கிப் பதிந்த ஆதிரை மடிக்கணினியை அணைத்து வைத்தாள்.
நேரம் ஐந்தை தொட்டிருந்தது. மற்ற மூவரும் கூட தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு தேவா அறைக்குச் சென்று கையெழுத்திட்டு அகல, இவளும் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பினாள்.
காலையிலிருந்து இமை சிமிட்டாது கணினியைப் பார்த்ததில் விழிகள் பூத்துப் போயிருந்தன. இலவச இணைப்பாக ஒரு பக்க தலைவலி வேறு. வீட்டிற்கு சென்றதும் ஒரு பாராசிட்டமால் மாத்திரையை விழுங்கிவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்க வேண்டும் என்று நினைக்கையிலே அபியின் எண்ணம் வந்தது. அவனுக்காக வேணும் இரவு உணவு சமைக்க வேண்டும். வெளியே வாங்கி கொடுக்கும் எண்ணமில்லை.
ஏற்கனவே ஞாயிற்று கிழமை முழுவதும் வெளியேதானே உண்கிறார்கள். உடல் கெட்டுவிடும் என்ற எண்ணம் வர, சமைத்து முடித்துவிட்டு விரைவிலே உறங்க வேண்டும் என்ற யோசனையோடு தேவாவின் அறைக்குள் நுழைந்து கையெழுத்திட்டாள்.
தேவா ஆதிரை முகத்தைதான் பார்த்திருந்தான் போல. அவள் இவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஏதோ யோசனையில் இருந்தாள்.
“ஆதி, ஆர் யூ ஓகே?” அவன் கேள்வியில் சுயம் பெற்றவள், “என்ன சார்?” என்றாள் புரியாது விழித்து.
“நீ ஓகே வா? ஏன் ரொம்ப டல்லா தெரியுற?” அவன் கேட்டதும் இவளது முகத்தில் நொடி நேர ஆச்சர்யம்.
இந்தளவிற்கு இவன் தன்னைக் கவனக்கிறானா என எண்ணியவள், “சிஸ்டம் பார்த்துட்டே இருந்ததுல லைட்டா தலைவலி சார்!” என்றாள் முறுவலுடன்.
“ஹம்ம்... டேக் கேர்!” இயல்பாய் அவன் கூறியதும் இவள் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டு வெளியே வந்தாள்.
வீட்டிற்குச் சென்றதும் ஒரு கோப்பை தேநீரோடு மாத்திரையை விழுங்கிவிட்டு சிறிது நேரம் படுத்து எழுந்தாள். அபினவ் இவள் கொடுத்த ரொட்டியை உண்டு கொண்டே வீட்டுப் பாடம் செய்தான். எளிமையாய் உப்மா செய்து அவனை உண்ண வைத்தவள், அருகிலே படுத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்து தானும் உறங்கிப் போனாள்.
மறுநாள் எப்போதும் போல இவள் வேலைக்கு வர தேவா வந்ததும் ஒரு நொடி இவளைத்தான் பார்த்தான். நான் நன்றாய் இருக்கிறேன் என ஆதிரை புன்னகைக்க, அவன் அதை தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.
மற்றவர்கள் இருக்கும்போது இவர்களுக்கு இடையே மௌமன உரையாடல் அரங்கேறியது. அந்த வார ஞாயிறு பிறகு ஒருவரை ஒருவர் நேரில் பார்க்கும்போது பரஸ்பர புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். தேவா வேலையில் கடுமையைக் காண்பித்தாலும் ஆதிரையிடம் கொஞ்சம் புன்னகை முகத்தை மட்டுமே வெளிப்படுத்தினான்.
அவளும் அதை அறிந்தாலும் வேலையில் எவ்வித சலுகையும் எடுத்துக் கொள்ளாது அனைத்திலும் சரியாய் இருந்தாள். அதுவே தேவாவிற்குப் போதுமானதாக இருந்தது.
அந்த வாரம் ஞாயிறு வெளியே செல்கிறோம் என தேவாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டாள் ஆதிரை. எப்போதும் போல விரைவாய் எழுந்து குளித்து முடித்தாள்.
என்ன சமைப்பது என யோசனையில் புருவம் சுளித்தவள் மகன் பூரி கேட்டது நினைவை நிறைக்க, கோதுமை மாவை எடுத்துப் பிசைந்தாள்.
“ம்மா...” என அபினவ் எழுந்து வந்தான். அவன் பல் துலக்கி முடித்ததும் அவனுக்கு பாலைக் கொடுத்தாள்.
“ம்மா... என்ன பண்றீங்க?” கோப்பையை சமையல் மேடையில் வைத்துவிட்டு ஆதிரை கையிலிருந்த பாத்திரத்தை எட்டிப் பார்த்தான்.
“அபிக்குப் பிடிச்ச பூரி சுடப் போறேன்!” என்றவள், மாவை பிணைந்து மூடி வைத்துவிட்டு குருமாவிற்கு காய்கறிகளை நறுக்கினாள்.
“சூப்பர்மா... நான் போய் குளிச்சிட்டு வரேன். பூரி சுட்டு வைம்மா..” என்றவன் குடுகுடுவென ஓட, இவள் புன்னகையுடன் குருமாவை காமைக் கலத்தில் வைப்பதற்காக விசிலை தேடி மாட்டிவிட்டு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினாள்.
ஓரமாய் வைத்திருந்த அலைபேசியை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். தேவாவிடமிருந்து ஒரு செய்தி கூட இன்னும் வரவில்லை. கடந்து சென்ற ஞாயிறுகளில் காலையில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு, தன்னுடைய வருகையை உறுதி செய்வான். ஆனால், இன்றைக்கு புலனம் காற்று வாங்கிக் கொண்டிருந்தது.
கோதுமை மாவை வட்டமாய் தேய்த்து முடித்தாள். தேவாவிற்கும் சேர்த்துதான் இன்றைக்கு சமைத்தாள். அபி குளித்து முடித்து வந்ததும் அங்கேயே ஒரு நாற்காலியை இட்டு அமர்ந்தவன் சுடசுட தாய் கொடுத்த பூரியை உண்டான்.
ஆதிரையும் உண்டு முடிக்க, இருவரும் கிளம்பி அமர்ந்தனர்.
நேரம் பத்தை தொட்டிருக்க, இன்னுமே தேவா வந்திருக்கவில்லை. இவள் யோசனையுடன் அவனது இலக்கத்திற்கு அழைக்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரியென புலனத்தில் ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள். அபி வேறு தேவாவவை எதிர்பார்த்து வாயிலையே பார்த்திருந்தான்.
மேலும் ஒரு மணி நேரம் கடந்தும் அவனது வருகைக்கான எவ்வித அறிகுறியும் தென்படாது போக, சின்னவனின் முகம் வாடியது.
“என்னம்மா... அங்கிளை இன்னும் காணோம்?” அவன் கேட்க, ஆதிரைக்கும் ஒன்றும் தெரியவில்லை. வருகிறேன் என்று கூறிவிட்டு இப்படியெல்லாம் தேவா அசட்டுத்தனமாய் இருக்க மாட்டான். ஒருவேளை முக்கியமான எதாவது அலுவலாகக் கூட இருக்கலாம் என சிந்தித்தவள், அபியின் வாட்டம் பொறுக்காது இருவரும் வெளியே கிளம்பினர்.
“நம்ப இப்போ கிளம்பலாம் அபி. அங்கிள் வந்து நம்பளோட ஜாய்ன் பண்ணிப்பாரு. ஓகே வா?” என மகனிடம் கேட்க, அவன் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டான்.
எங்கே செல்வது என எந்த திட்டமும் இல்லாததால் அருகே இருந்த விளையாட்டு திடலுக்கு அழைத்துச் சென்றாள். மதிய உணவை முடித்துவிட்டு அப்படியே நீச்சல் வகுப்பிற்கு சென்றனர்.
மாலை வரை தேவா வராததால், “அம்மா, அங்கிள்?” என வினவியவன் நீச்சல் உடையை அவிழ்த்துவிட்டு ஏற்கனவே அணிந்து வந்த உடையை மீண்டும் உடுத்தினான்.
“இப்போதான் அங்கிள் கால் பண்ணாரு அபி. அவருக்கு ஏதோ முக்கியமான வேலையாம். அதான் வர முடியலைன்னு சாரி கேட்டாரு. உன்கிட்டேயும் சொல்ல சொன்னாரு. நெக்ஸ்ட் வீக் வர்றேன்னு ப்ராமிஸ் கூட பண்ணாரு!” மகன் வருத்தப்படக் கூடாது என்று பொய்யுரைத்தாள். அவன் முகம் தெளியவில்லை எனினும் தலையை அசைத்தான்.
“ஹம்ம்... இப்போ நம்ப ஷாப்பிங் போகப் போறோம். ப்ரௌனி செய்யலாம்னு யோசிச்சு வச்சிருக்கேன் அபிமா. உனக்கு வேணுமா?” மகனை திசைதிருப்பும் முயற்சியில் ஆதிரைக் கேட்கவும், இவன் முகம் மலர்ந்தது.
“யெஸ்மா... டபுள் சாக்லேட் ப்ரௌனி செய்யலாம் மா. லாஸ்ட் டைம் பண்ண மாதிரி நிறைய சாக்லேட் போட்டு பண்ணுங்க மா!” அவன் ஆசையுடன் கூற, “செய்யலாமே... ஓகே, நம்ப திங்க்ஸ் வாங்கிட்டு வீட்டுக்குப் போய் கேக் பண்ணலாம்...” என சிரிப்புடன் உரைத்தவள் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
அபி நொடியில் உடை மாற்றி முகம் கழுவிவிட்டு வர, இவளும் தன்னை சுத்தம் செய்தாள். இருவரும் சேர்ந்து அணிச்சலை செய்து முடித்திருந்தனர்.
“ம்மா... த்ரீ ஃபீஸ் வேணும் எனக்கு!” அவன் மூன்று விரல்களை காண்பிக்க, “த்ரீதான் டா. அதுக்கும் மேல ஒன்னு கூட கிடையாது. காலைல சாப்பிட்டுக்கோ!” என கண்டிப்புடன் அவனுக்கு மூன்று துண்டுகளை கொடுத்தவள், தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்டாள். ஏற்கனவே உடல் பூசினாற் போன்றாகிவிட்டதோ என சேலை கட்டும் போது லேசாய் எட்டிப் பார்க்கும் குட்டித் தொப்பை அவளுக்கு நினைவு வர, ஒன்றோடு நிறுத்தினாள்.
ருக்மணி பாட்டிக்கும் மகேசன் தாத்தாவிற்கும் அணிச்சலை எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு அவரிடம் சிறிது நேரம் பேசினாள். அவர் சுற்றி வளைத்து தேவாவைப் பற்றியே கேட்க, இவள் அவன் தனக்கு நண்பன் என முகம் மாறாது பதிலளிக்க வேண்டி இருந்தது. உண்மையில் ஆதிரைக்கு இப்படி விளக்கம் கொடுப்பது அறவே பிடிக்காது.
ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. தினமும் அபியைத் தன்னுடைய பேரன் போல அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இவள் வரத் தாமதமானால் ருக்கு பாட்டி அபியின் வயிற்றை வாட விடாது பார்த்துக் கொள்வார். அந்த நன்றிக்கடன் எப்போதுமே ஆதிரையிடம் உண்டு. அதனாலே அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பொறுமையாய் பதிலளித்தாள்.
“ஏன்டி ஆதிரை... உன் புருஷன் என்ன பண்றாரு?” ருக்கு பாட்டி கேட்க, இவள் என்ன சொல்வது எனத் தெரியாது தவித்து அப்போதைக்கு ஏதோ ஒரு பொய்யைக் கூறி மழுப்பிவிட்டு வீட்டை அடைந்தாள். உறங்க செல்லும் முன்னே அலைபேசியை ஒருமுறை எடுத்துப் பார்த்தாள். தேவாவிடமிருந்து செய்தி எதுவும் வந்திருக்கவில்லை.
‘ஹோப் யூ ஆர் ஃபைன் சார்? மெசேஜ் பார்த்துட்டு கால் பண்ணுங்க!’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு உறங்கிப் போனாள்.
மறுநாள் காலையில் உழவர் துணைக்குச் சென்றதும் இவளது விழிகள் தேவாவைத்தான் தேடின. அவன் தாமதமாய் வருவான் என்று வேலையில் கவனம் செலுத்தினாள். மதிய உணவு நேரம் வந்தும் கூட அவன் வரவில்லை.
அவனுக்கு என்னவானது என ஆதிரையிடம் மெலிதாய் ஒரு பதற்றம் அப்பியது. இருந்தாலும் எதையும் வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. அவளுக்கான விடையை சுபாஷே உரைத்துவிட்டான்.
“என்ன இன்னிக்கு தேவா சாரைக் காணோம். ஒரே அமைதி மயமா இருக்கே!” என தர்ஷினி கேட்க,
“ப்ம்ச்... அவர் வரலைன்னா சந்தோஷம் தான் தர்ஷினி. இல்லைன்னா எதையாவது கேப்பாரு, திட்டுவாரு. என்னைக்காவது தான் இதுமாதிரி ஃப்ரியா இருக்க முடியுது!” கோமதி இடை புகுந்தார்.
“இன்னைக்கு மட்டும் இல்ல, நாளைக்கும் கூட நீங்க ஜாலியா இருக்கலாம். தேவா சார் வெனஸ்டே தான் வருவாரு!” சுபாஷ் கூற, ஆதிரை அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“அவரோட க்ளோஸ் ரிலேட்டீவ்ல டெத்தாம். ஹரி சார் கால் பண்ணி சொன்னாரு. அவர் இல்லைனாலும் வேலையை கரெக்டா பார்க்க சொன்னாரு. அதனாலே ரொம்ப ஓபி அடிக்கலாம்னு நினைக்காதீங்க. சார் வந்தா, எனக்கும் ஆதிக்கும்தான் திட்டு விழும்!” என அவன் மெல்லிய கண்டிப்புடன் கூறியதை தர்ஷினியும் கோமதியும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. நாளைக்கும் தேவா வரமாட்டான் என்றதிலே அவர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. ஆதிலா மட்டும் சம்பிரதாயத்திற்காக அவனிடம் தலையை அசைக்க, இவனது முகத்தில் புன்னகை நீண்டது.
தேவா வரவில்லை என்றதும் அனைவரும் மந்தமாய் செயல்பட்டனர். வேலை நிலுவையில் நின்றுவிட, ஆதிரை அனைவரையும் அதட்டி வேலை வாங்கினாள். சுபாஷ் எல்லோரிடமும் இலகுவாக பழகுபவன் என்பதால் அவனுடைய கண்டிப்பான பேச்சை ஒருவரும் கேட்கவில்லை.
“அக்கா... கதை பேசலாம், தப்பில்லை. பட், வேலையை முடிச்சிட்டு உக்கார்ந்து பேசுங்க. இல்லைன்னா எவ்வளோ நேரம் ஆனாலும் நீங்க இங்கதான் இருக்கணும்!” இவள் கோபத்துடன் கூறியதில் கடகடவென வேலை நடந்தது.
பால் வடிகட்டும் இடத்திற்குச் சென்று வேலை சரியாய் நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். குளிரூட்டும் அறையையும் மறக்காமல் கவனித்தாள்.
“ப்ம்ச்... இவ்வளோ நேரம் நான் காட்டு கத்து கத்துறேன். ஒருத்தரும் கண்டுக்கலை ஆதி. நீ சொன்னதும் எல்லாரும் கப்சிப்னு ஆயிட்டாங்க!” சுபாஷ் கடுப்போடு கூறினான்.
“நீங்க எல்லா நேரத்துலயும் ரொம்ப ஜோவியலா, ஈஸியா அப்ரோச் பண்ற மாதிரி இருக்கீங்க சுபாஷ். அதனாலே நீங்க சொன்னாலும் அதை வொர்க்கர்ஸ் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. கொஞ்சம் எல்லார்கிட்டயும் டிஸ்டென்ஸ் மெய்ண்டெய்ன் பண்ணுங்க. வொர்கல எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ண மாட்டேன்னு சொல்லுலயும், செயல்லயும் காட்டுங்க!” அவனைப் பார்த்து ஆதிரைக் கூற, சுபாஷூக்கும் அதேதான் தோன்றிற்று. இனிமேல் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து பெருமூச்சுவிட்டான்.
ஆதிரை இன்றைக்கு இழுத்துப் பிடித்ததி
ல் வேலை சரியாய் நடந்தது. மறுநாளும் அவள்தான் அனைத்தையும் மேற்பார்வை பார்த்து வேலையை சரியாய் செய்தாள்.