• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நினைவிழை - 14

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
14

“ஏலச்சி”யை ரயில் நெருங்கிக்கொண்டிருப்பதாய் கூகிள் மாப் தெரிவிக்கவும் லேசாய் பதட்டம் நிருவுக்குள் தொற்றிக்கொண்டது. பக்கப்புறமாய் மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்க ரயில் ஒரே வேகத்தில் முன்னேறிப் போய்க்கொண்டிருந்தது நிருவின் மனதை போலவே..

கடந்த நாட்களில் அவளுக்கு நிறைய வாய்ப்புக்கள் வந்தன. வரும் என்று எதிர்பார்த்தாள் தான் ஆனால் இத்தனையை அவளே எதிர்பார்க்கவில்லை. அடீராவின் நிறுவனத்தலைவரின் காரியதரிசி என்ற ஒரு வரி அவளுக்கு நிறைய சிறிய பெரிய லேபிள்களின் கதவுகளுக்கான திறப்பாய் இருந்தது.

மார்க்கட்டிங் மற்றும் விளம்பரப்படுத்தல் பிரிவில் வரும் பதவிகளுக்குத் தான் அவள் விண்ணப்பித்திருந்தாள். அவள் விண்ணப்பிக்காமலே கூட மிகப்பிரபலமான ஒரு மாடலின் தனிப்பட்ட காரியதரிசி வேலை அதுவும் அவருக்கான விளம்பரப்படுத்தல் சமூக வலைத்தளங்களை கையாளுதல் ஆகிய பொறுப்புகள் உள்ளடங்கியதாய் இருக்கும் என்று விவரித்து நிருவை லிங்க்ட் இன் மூலமாய் அவர்களே தொடர்பு கொண்டிருந்தார்கள்.

அவளுக்கு திருப்தியே ஏற்படவில்லை..மனக்கிடங்கை தனியே தேடியபோது தான் புரிந்தது. இந்த காமரா வெளிச்சங்கள், ஆடைகள் , ஷோ ரூம்கள் தாண்டிய புது உலகம்.. அதாவது அடீராவில் அவள் பெற்ற தொடர்புகள்,. நட்புகள் , அங்கே செய்த வேலை எதனோடும் தொடர்பில்லாத, அங்கே பெற்ற எதையும் பயன்படுத்த முடியாத ஒரு வேலை அவளுக்கு வேண்டும். அந்த வேலையின் வெற்றிகளின் ஒவ்வொரு செங்கல்லும் அவளே கட்டியதாய் இருக்க வேண்டும். ஏலச்சியின் விளம்பரம் கண்ணில் பட்டதுமே மனம் சொன்னது இது தான் அது என்று.

அவள் நினைத்தது போலவே விண்ணப்பித்து இரண்டாவது நாள் ஏலச்சியின் தற்போதைய நிருவனத்தலைவரே அவளை மொபைலில் அழைத்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பவனதுக்கு பக்கத்தில் இருந்த ஒரு காபி ஷாப்பில் அவரை நேரில் சந்தித்த போது அவளது முடிவு இன்னும் உறுதியாகிவிட்டது.

நிருவனத்தலைவர் அவளை விட மூன்றே வயது பெரியவன் தான். நிதர்ஷனன். கவிழும் நிலையில் இருக்கும் ஒரு கப்பலை காக்க நினைக்கிறான். கிட்டத்தட்ட நூறு வருஷ பாரம்பரியம் கொண்ட தேயிலை தொழிற்சாலையும் எஸ்டேட்டும் அவனது குடும்பத்துக்கு சொந்தமானது. மாற்றங்களோடு மாற மறுத்ததால் வியாபாரம் நொடித்து விற்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.. பிறந்ததில் இருந்து தங்களுக்குள் இழையோடிப்போயிருந்த எஸ்டேட்டின் நினைவுகளை அறுத்தெறிய மனதில்லாமல் தனியே பிசினஸ் செய்து கொண்டிருந்தவன் இப்போது புதிதாய் உள்ளே வந்து புத்துயிர் கொடுக்க பார்க்கிறான்.

நிருவுக்கு ஒரே கேள்வி தான். என்னை என் தேர்ந்தெடுத்தீங்க? என்று ஆர்வமாய் கேட்டாள்..உரிய பின்னணி கூட என்னிடம் இல்லையே..

வந்ததில் இருந்து இயல்பான ஒருமையிலே பேசிக்கொண்டிருந்தவன் “உன் பின்னணியை பார்த்தேன், உயர்மட்டத்தில் சதா காமரா வெளிச்சத்திலேயே இருக்கும் மனிதர்களோடான உன் அனுபவம் உனக்கு வானமே எல்லை என்ற பட்டறிவை கொடுத்திருக்கும். உன்னுடைய முயற்சிகள், எங்களுடைய வழக்கமான எல்லைகளை கடந்து செல்லும் என்ற நம்பிக்கை தான்..” என்று சிரித்தான்..

“எனக்கு இது மீள கிடைக்காத ஒரே வாய்ப்பு, வாய்த்தால் எஸ்டேட் தப்பும் இல்லாவிட்டால் விற்க வேண்டியதுதான். நீ எதற்காய் எங்களை தேர்ந்தெடுத்தாய்?” என்று அவனும் கேட்டான்

கொஞ்சம் யோசித்த நிருவும் “ என்னை நிரூபிக்க.. இதுவரை நான் செய்ததெல்லாம் எனக்கு அமைஞ்சது தான். ஆமாம் என்னை நிரூபிக்கணும்..எனக்கே” என்றாள்

ஒரு நீண்ட கணம் அவளை பார்த்திருந்தவன் “அப்படின்னா சைன் பண்ணிக்கலாம் நிருதி” என்று இலகுவாகவே தன்னுடைய புதிய குழுவுக்குள் அவளையும் இணைத்துக்கொண்டான் நிதர்ஷனன். “ஏலச்சிக்கு” என்று சிரித்தபடி அவன் ஜூஸ் கிளாசை உயர்த்த சிரிப்போடு கிளாசை தானும் உயர்த்தினாள் அவள்..

அந்த நிருதி அவளுக்கு பிடித்திருந்தது. நிரு இல்லை..நித்தி இல்லை.. கடமை இல்லை.. நன்றிக்கடன் இல்லை..காதலும் இல்லை.. வெறுமனே நிருதி..வெறுமனே அவள்..

வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன்

தீர உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன்




சிரிய பெரிய மூச்சுக்களை எடுத்து விட்டுக்கொண்டு இறங்கிக்கொண்டவள் ஸ்டேஷனின் வாசல் பகுதியை நோக்கி நடந்தாள். வெகு சின்ன ஸ்டேஷன், விறைபான உத்தியோகத்தர்கள் இல்லாமல் உறவு முறைகளோடு விடைபெற்றுக்கொண்டிருந்த வெகு சில மக்களும் தங்களுக்கு நடுவில் தோளில் ஒரு பையோடும் சூட்கேசோடும் அலைபாயும் விழிகளோடும் நடந்து கொண்டிருந்தவளை ஒரு கணம் பார்த்து மீண்டு கொண்டிருக்க பொதுப்படையான புன்னகையோடேயே வெளியே வந்தவள் வாசலிலேயே வெள்ளை கார் அவளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருந்த இலக்கத்தோடு நிறுத்தப்பட்டிருப்பதை அடையாளம் கண்டு கொண்டு அந்த காரை நோக்கி நடந்தாள்.

அவளை கண்டதுமே கார் கதவு திறக்க நிதர்ஷனன் புன்னைகையோடு தன் முழு உயரத்துக்கும் நிமிர ஆச்சர்யப்புன்னகையோடேயே அவனை நெருங்கினாள் நிரு.

வெல்கம் மேடம்.

“தாங்க் யூ சார்..டிரைவரை அனுப்புவீங்கன்னு நினைச்சேன்..” என்றபடி சூட்கேஸ்களை பின்னால் அடுக்கி விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.

சின்னதாய் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை..

இவளும் வெளியே தெரிந்த காட்சிகளில் மூழ்கிப்போனாள். அது மலைப்பிரதேசமில்லை.. அதற்காக சம தரையும் இல்லை. இரண்டுக்கும் இடையில் மழை வீழ்ச்சி அதிகமாய் சிவப்பு மண் பரந்து காணப்பட்ட இடம் சின்ன சின்னதாய் வீடுகளோடு இருந்ததே தவிர மாடி வீடுகளோ பெரிய அமைப்புக்களோ தென்படவில்லை.

“இங்கே கோவில்களை தவிர பெரிதாய் வேறேதும் இருக்காது. ஒரே ஒரு ஆறு மட்டும் இருக்கும். வார இறுதிகளில் வேணும்னா நீ ஒரு பஸ் எடுத்தேன்னா ஹில் ஸ்டேஷனுக்கு இரண்டே மணி நேரத்தில் போய்டலாம். நல்லா பொழுது போகும்.. நம்மூர் வழக்கமான கிராமம் தான்” என்றவன் அதன் பின்னர் தொழிற்சாலையை எழுபது வருஷங்களின் முன்னர் எப்படி ஆரம்பித்தார்கள். எப்படி தொடர்ந்தது..என்று சொல்லிக்கொண்டே வந்தான்.

“இந்த மண்ணுக்கு ஒரு டேஸ்ட் இருக்குன்னு தாத்தா சொல்வார். அது தான் ஏலச்சி தேயிலைன்னா இன்னும் ஒரு பேர் இருக்கத்தான் செய்யுது. காலமாற்றத்துல பொருள் தரம் மட்டும் போதாது. வடிவங்கள் மாறிட்டே இருக்கணும்.. இல்லைன்னா மதிப்பிழந்து போய்டும்னு தாத்தாக்கு புரியல. அப்படியெல்லாம் பண்ணுறது தரம் குறைந்தால் மட்டும் தான்னு சொல்லி திமிரா அப்படியே விற்பனை பண்ணினார். வியாபாரம் விழுந்து போச்சு.”

“பிறகு வந்த அப்பாவுக்கு அதெல்லாம் புரிஞ்சது. ஆனால் எப்படி சரி பண்றதுன்னு தெரியல.. திடீர்னு வித்துருவோம்னு சொல்றாங்க.. ஷாக் ஆகிட்டேன். எங்க குடும்பத்தோட அடையாளம் இன்னொருத்தன்கிட்ட போறதா இருங்க..நானே வர்றேன்.. என்னாலையும் முடியலைன்னா கொடுத்துரலாம்னு சொல்லி தான் உள்ளே வந்தேன்.. எனக்கும் இருக்கறது இந்த ஒரு வாய்ப்பு மட்டும் தான் நிருதி” என்றவன் “எஸ்டேட் கட்டமைப்புலையே ஏகப்பட்ட மாற்றங்கள் பண்ணிருக்கேன்.. புதுசாவும் சிலது சேர்த்துருக்கேன்.நீயும் அதுல ஒண்ணு தான்.. நம்ம எல்லாரும் சேர்ந்து இந்த தேரை இழுத்துத்தான் பார்ப்போமே..” அவன் சொல்ல சொல்ல நிருதியின் கண்கள் அவனையும் தாண்டி எங்கோ பயணப்பட்டிருந்தன.

முதல் தடவையாய் அவளுக்கு சொல்லப்படுகிறது. அவளுக்கே அவளுக்காய்..இத்தனை நாளும் யாரும் யாருக்கோ சொல்வதை குறிப்பு மட்டும் எடுப்பவளுக்கு இன்றைக்கு இந்த தகவல் உனக்குத்தான் என்பதை சட்டென்று கிரகித்து கொள்ள முடியவில்லை..

யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்

ஏதும் இல்லாமலே இயல்பாய்.....சுடர் போல் தெளிவாய்




கார் பிரதான வீதியில் இருந்து கிளை பிரிந்து, மெலிதான, இருபுறமும் மரங்கள் அடர்ந்த பாதை நெடுகிலும் ஒரு பத்து நிமிடங்கள் மேலும் கீழும் ஏறி இறங்கிய தரையில் பயணித்து இன்னொரு தடவை கிளை பிரிந்து வீ ஆர் எஸ்டேட் என்றிருந்த போர்டை தாண்டி மேலேறிக்கொண்டே போன சரிவில் ஏற ஆரம்பித்தது. வீதியின் இருபுறமும் சின்னதான மலைப்பகுதி போன்றிருந்த சரிவு முழுதுமே தேயிலை பசுமையாய் படர்ந்திருக்க எல்லாவற்றையும் விழிகளில் உள்வாங்கியபடியே வந்து கொண்டிருந்தவளை

“இதோ உன்னோட வீடு வந்திருச்சு” என்ற நிதர்ஷனனின் குரல் கலைத்தது. வீட்டு வாசலில் காரை நிறுத்தி, பக்கத்திலேயே ஏலச்சி வீ ஆர் டீ எஸ்டேட் என்ற பிரமாண்டமான போர்டோடு இருந்த பாக்டரியின் ஒரு எல்லை மதிலோடு இருந்த வீட்டை காட்டினான் அவன்.

“சார்.. இது தானே பாக்டரி?” அவள் கண்களை அங்கிருந்து எடுக்காமலே வினவ

“ஆமாம்.. நீ தனியா வர்றதால தான் நான் உனக்கு இந்த வீட்டை தேர்ந்தெடுத்தேன் ஏன்னா பாக்டரி வாசல்ல செக்கியூரிட்டி கார்ட்ஸ் இருபத்து நாலு மணி நேரமும் இருப்பாங்க.. சின்ன வீடு, சுத்தி பெரிய நிலம் இருக்குன்னு எல்லாம் யோசிக்காதே.. இதை விட பாதுகாப்பான இடம் இங்கே வேற இல்லை..”

என்றபடி அவன் இறங்கிக்கொள்ள செக்கியூரிட்டி கார்ட்ஸ் அவனைக்கண்டு மெல்ல நெருங்கினார்கள்.

“இது தான் நிருதி மேடம் நம்ம பாக்டரியில் புதுசா வேலைக்கு வந்துருக்காங்க.. இந்த வீட்டில் தான் தங்கப்போறாங்க” என்று அறிமுகப்படுத்தியவன் பிறகு அவள் தன் சூட்கேஸ்களை இறக்க அதில் ஒன்றை தானே வாங்கிக்கொண்ட படி கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

யாரோ பழைய குடியிருப்பாளர்கள் போகன் வில்லா மரங்களில் ஆர்வம் கொண்டவர்கள் போலும். வீட்டை சுற்றி போகன் வில்லா மரங்கள் மஞ்சள், பிங்க் வெள்ளை, வயலெட் என்று இவள் இதுவரை காணாத வர்ணங்களில் அடர்ந்திருந்தன. சின்ன வீடு தான்.. பின்புறமும் பாக்டரி மதிலே இருந்ததை கண்ட அவளுக்குள் பெருத்த நிம்மதி..

வீட்டு போர்டிக்கோவில் நின்று பார்க்க பக்கத்து வீட்டில் ஆர்வமாய் எட்டிப்பார்த்த குழந்தைகள் வெட்கமாய் கையசைப்பதை கண்டு சிரித்தவள் தானும் பதிலுக்கு கையசைத்தாள்.

“வீட்டில் எல்லாம் தயார் பண்ணித்தான் இருக்கு. மளிகை சாமான்கள் வாங்கும் கடை பாக்டரிக்கு அந்தப்பக்கமாய் நீ கொஞ்சம் இறங்கி கீழே போனா இருக்கும். வெளியே போகணும்னா செக்கியூரிடிகளிடம் கேள். எதுவானாலும் வழி சொல்வார்கள். அப்புறம் வேறென்ன? நாளைக்கு காலைல எட்டு மணிக்கு பாக்டரில பார்ப்போம்” என்றபடி தேவையற்ற பேச்சுக்களற்று நிதர்ஷனன் விடைபெற்றுப்போய் விட கதவை பூட்ட வந்தவள் செக்கியூரிட்டிகளிடமும் மளிகைக்கடையை விசாரித்து சிநேகமாகி விட்டாள்.

“இங்கே பயமே இல்லை மேடம். சுத்தி எல்லாருமே ஊர்க்காரங்க சொந்தக்காரங்க தான். எந்த நேரமும் எங்களில் ரெண்டு பேர் இங்கே இருப்போம்” என்று இலகுவாய் சொன்னவர்களிடம் நன்றியாய் புன்னகைத்து விட்டு உள்ளே வந்தவளுக்கு மனதுக்குள் இன்னும் பயம் இருக்கத்தான் செய்தது.

மேடம் மேடம் என்று அவர்கள் அழைப்பதை கேட்டு லேசாய் சிரிப்பும் வந்தது. நம்மை பார்க்க அப்படியா தோணுது? அங்கேன்னா பாப்பா..குழந்தைன்னு ஏலம் விடுவானுங்களே....

நன்றாய் பழைய வீடு தான். போர்டிக்கோ தாண்டி உள்ளே போனால் சின்ன ஹால், அடுத்து கிட்சன். கொஞ்சம் பெரிய படுக்கையறை அதோடு கூடிய பாத்ரூம் அவ்வளவே தான். அளவான தளபாடங்கள்.. ஹாலில் ஒரு சோபா கிச்சனில் ப்ரிட்ஜ் மைக்ரோவேவ் இருந்தது

என்னென்னவோ சமாதானங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இங்கே வந்திருந்தாலும்.. அவளுக்கு உரித்தாய் இருந்த உறவுகளை எல்லாம் விட்டு தூரம் வந்ததோ என்னமோ தனிமை பூதாகரமாய் தெரிந்தது.

நினைத்துப்பார்க்கும் போது அப்பாவுக்கு பின் தன்னுடைய பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வந்து நிருதி உலகத்தை தனியாக சமாளிக்கும் முதல் நாள் இது தான். இந்த நாள் என்றைக்கோ வந்திருக்க வேண்டும். இது ரொம்ப லேட். ஆனால் இப்போதாவது உணர்வு வந்ததே..

அபய் இப்போது என்ன செய்வான்..என்றொரு நினைவு குறுக்கால் ஓட

ப்ச்..நிறுத்து..அந்த அமுசடக்கி ஆள் மயக்கி பிரவுன் ட்ராகன் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். அவன் அங்கே என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இந்த உறவு வேண்டுமானால் இனிமேல் அபய் வியர்வை சிந்தாமல் முடியாது..என்று அதை இழுத்துப்பிடித்து கட்டி வைத்து விட்டாள்

தன் நினைவுகள் தூரம் போவதை நிறுத்த தனக்கு பிடித்த இசைக்கோர்வையை சத்தமாய் ஒலிக்க விட்டவள் சூட்கேஸ்களை திறந்து உடைகளை அறைக்குள் இருந்த கப்போர்டில் அடுக்கி, அந்த வீட்டை தனக்கேற்றது போல மாற்ற ஆரம்பித்தாள்

எல்லாம் திருப்தியாய் அடுக்கி முடித்து விட்டு சூட்கேசில் இருந்த கடைசி இரண்டு பிரேம்களை வெளியே எடுத்தவள் இரண்டில் அப்பாவும் அவளும் இருக்கும் போட்டோவை ஹாலில் இருந்த டேபிளில் சாய்த்து வைத்தாள்

மற்றப்படத்தை கையில் வைத்து கண்கள் வெகு நேரம் பார்த்திருந்தன. அன்றைக்கு காராதீவில் அவனோடு செல்பி எடுக்க முயன்றபோது அவன் எதற்கோ திரும்ப கலங்களாகி விட்டிருந்தது அந்த புகைப்படம்.. அவளின் உருவம் மட்டும் பெரிய சிரிப்போடு கண்களில் அத்தனை மகிழ்வோடு தெரிய பக்கத்தில் இருந்தவனோ தெளிவே இல்லாமல் வர்ணங்களின் கலங்கல் புதிராய் அந்த புகைப்படத்தில் விழுத்திருந்தான். முகம் தெரிந்தது ஆனால் தெரியவில்லை என்பது போல யாரேனும் பார்த்தால் அது போட்டோ அல்ல ஓவியம் என்றே சொல்லும் அளவுக்கு அந்த புகைப்படப்பிழை கலையுருப்பெற்றிருந்தது. ஏன் அதை இன்னும் பத்திரமாய் அதுவும் பெரிதாய் பிரிண்ட் செய்து பிரேம் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று கேட்டால் அவளிடம் பதிலில்லை..

பல இடங்களில் மாற்றி மாற்றி வைத்து பார்த்து திருப்தியில்லாமல் அறையில் யன்னலின் மேற்பகுதியில் இருந்த ஆணியிலே அதை மாட்டி வைத்தவள் கொஞ்சம் பின்னே வந்து அதை ஆராய்ந்து கொண்டிருக்க அக்கா அக்கா யாராவது இருக்கீங்களா? என்று ஒரு பெண் குரல் கேட்டது.

வர்றேன் என்றபடி வெளியே வந்தால், ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணியும் பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமிகளும் நின்று கொண்டிருந்தனர்.

தன்னை சாதனா என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர் தாங்கள் தான் பக்கத்து வீட்டில் குடியிருப்பதாகவும் தனது கணவரும் தானும் பாக்டரியிலே பணி புரிவதாக சொல்லி மகள்களையும் நிருவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சாரண்யா, ஷாமிலா என்று பெயர் கொண்ட இருவரும் துருதுரு விழிகளோடு அவளையே ஆர்வமாய் பார்த்திருக்க பெரிய புன்னகையோடு அவர்களை உள்ளே அழைத்தாள் நிரு.

சாதனா அவளுக்கு இரவு உணவு எடுத்து வந்திருந்தார்.

“புதுசா வந்து வீடு அடுக்கற வேலையில பிசியா இருப்பீங்கன்னு இரவு சாப்பாடு எடுத்து வந்துட்டேன்” என்று அவர் எடுத்து மேசையில் வைத்த பாத்திரத்தின் அளவை பார்த்து மலைத்தவள்

“நீன்னே சொல்லுங்க,,,ஆமாம்..எனக்கு ஒரு வாரத்துக்கே சாப்பாடு கொண்டு வந்துட்டீங்க போலிருக்கே” என்று சிரிக்க

கூடச்சேர்ந்து சிரித்தவர் “பரவாயில்லை..பிரிட்ஜ் தான் இருக்கே..வச்சு சாப்பிடு” என்று விட்டார்.

கொஞ்ச நேரம் சாதனாவிடம் பேசியபோது அவர்களின் அப்பா அம்மாவும் பாக்டரியில் தான் பணிபுரிந்ததாக சொல்ல அந்த தகவல் அவளை ஆச்சர்யப்படுத்தியது. அப்போ எஸ்டேட்டின் உரிமை மட்டும் பாரம்பரியமாய் கைமாறவில்லை. அங்கே பணி புரிபவர்களும் பரம்பரைகளாய் தொடர்கிறார்கள். அப்படியானால் நிர்வாகத்தோடு எவ்வளவு இறுக்கமான உறவு இருக்க வேண்டும்.. இதை விற்க வேண்டி நேர்வது கொடுமையே. நிதர்ஷனன் சார் போராடுவதன் நியாயம் அவளுக்கு இன்னும் தெளிவானது.

அம்மாவும் பிள்ளைகளும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவளோடு கூட இருந்தனர். அதற்குள் அவளுக்கு கிட்டத்தட்ட அங்கே வாழ்வதற்கு தேவையான முழு அறிமுகமும் கொடுத்து என்ன தேவை என்றாலும் மதில் வழியாய் ஒரு குரல் கொடுக்கும் படி அவர்கள் சொல்லி விடை பெற்ற போது இருள் கவிந்து விட்டிருந்தது.

பழைய பயங்கள், இருள் எல்லாம் இப்போதும் மேற்புறத்துக்கு வந்து விடுவேன் என்று மன விளிம்பு வழி எக்கிக்கொண்டிருக்க எல்லா விளக்குகளையும் ஒளிர விட்டு விட்டு சோபாவிலேயே சம்மணமிட்டபடி கண்ணை மூடி தியான நிலையில் அமர்ந்து விட்டவள் தனக்கே தைரியம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தாள்.

கடந்தது..கடந்து போனதே.. வாழ்க்கை இன்னும் ஏகப்பட்டது மிச்சமிருக்க அங்கேயே நின்று விட முடியுமா?

எந்திரக்கப்பலில் ஒரு காலை வைத்தாயிற்று..இனி திரும்பிப்பார்க்க முடியாது

இரண்டு எல்லைகளில் பாக்டரி..ஒருபக்கம் சாதனாக்கா வீடு, முன்னால் வாசலிலேயே செக்கியூரிட்டிகள், இதை விட என்ன பாதுகாப்பு வேண்டும்?

இரண்டு பெரிய மூச்சுக்களோடு எழுந்து கொண்டவள் காவ்யாவுக்கும் சம்யு மிஸ்சுக்கும் அழைத்து பத்திரமாய் வந்து சேர்ந்ததை சொல்லி வீட்டையும் வீடியோ காலில் காண்பித்து பெருமை அடித்து விட்டு, மிஸ்ட் கால் வைத்திருந்த சௌமிக்கும் போன் பேசி எல்லாம் நன்றாய் இருப்பதை உறுதி செய்து விட்டு சாதனா கொண்டு வந்திருந்த டின்னரை எடுத்து பார்த்தாள்

தோசை கொண்டு வந்திருந்தார். சாம்பார் சட்னி இரண்டும் தனித்தனியே இருந்தது. குறைந்தது பத்து தோசைகளாவது இருக்கும். இரண்டை மட்டும் எடுத்து சாம்பார் சட்னி பரிமாறிக்கொண்டு வந்தவள் திறந்திருந்த யன்னலோரம் கதிரையை இழுத்து போட்டு விட்டு அதற்குள் கால்களை மடித்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.. நிலவும் அவள் நலன் விசாரிப்பது போல யன்னலுக்கு வெளியே வந்து நின்றது. அங்கெல்லாம் அவள் கதவை திறந்து நிலவை ரசித்தது கடைசியாய் எப்போ என்றே அவளுக்கு நினைவில்லை.. இப்போ தான் உனக்கு என் ஞாபகம் வந்ததா என்று அது அவளை கேட்பதாகப்பட்டது..

எங்கோ மழை பெய்து கொண்டிருக்க வேண்டும்..கருமேகம் நிலவை அடிக்கடி மூடித்திறந்து கொண்டிருந்தது.

அவன் என்னை நினைத்துக்கொண்டிருப்பானா? கோபமாய் இருப்பானா? என் விலகலுக்கு காரணமாவது புரிந்திருக்குமா?

எங்கோ தொலைவில் மின்னல் ஒன்று மின்னிப்போனது..
 
Last edited by a moderator:

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
அவள் அங்கே நிலவோடு பேசிக்கொண்டிருக்க இங்கே மின்விளக்குகள் மினுங்கும் தலைநகரில் ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் சந்திப்பு கூடத்தில் இறுக்கமான முகத்தோடு கதிரோடு நடந்து வந்து கொண்டிருந்தான் அபய்.

“நான் இந்த விஷயங்களில் நுழையக்கூடாதுன்னு தானேடா உன்னை பார்ட்னர் ஆக்கினேன்? இன்வெஸ்டர்களின் மீட்டிங்கில் என்ன டாஷுக்கு நான்? என்று பல்லைக்கடித்துக்கொண்டே வந்தவனின் வழக்கத்தை விட குரலில் சூடு தெறித்துக்கொண்டிருந்தது.

“டேய் டேய்.. இவ்வளவு காலமும் தான் நீ யார்னே வெளிப்படுத்தாம ஓட்டிட்டோம். எத்தனை தடவை சொல்லிட்டேன். பிசினஸ் பெருசாகும் போது நம்மளோட முதுகெலும்பு யார்னு அவங்களுக்கு தெரியாம நம்ம மேல நம்பிக்கை வராதுடா.. இப்போ தான் நீ அடீராவை விட்டு வெளியே வந்துட்டேல்ல?.. கொஞ்ச நாளைக்கு இங்கெல்லாம் முகத்தை காட்டு. போதும்..மீதியை நான் பார்த்துக்கிறேன்..” அபயின் கடும் குரலால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் முன்னால் போய்க்கொண்டிருந்த கதிரின் முதுகையே முறைத்தவன் வேறு வழியின்று அவன் போன அறைக்குள் நுழைந்தான்.

இன்வெஸ்டர்கள், டிசைன் லேபிள்களின் பெரிய தலைகள் என்று எல்லாரும் அந்த டின்னரில் கலந்து கொண்டிருந்தனர். கதிர் எல்லாருக்கும் வர்ணாவின் நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைமை டிசைனராய் அபயை அறிமுகப்படுத்த மாபெரும் சகிப்புத்தன்மையோடு பேசிக்கொண்டிருந்தவனின் கண்கள் அந்த அறையின் மறுபக்க எல்லையில் நின்று ஒரு பிரமுகரோடு பேசிக்கொண்டிருந்த அனியை கண்டு ஒரு கணம் சுருங்கின. அவனும் அதே கணம் திரும்பிப்பார்த்துவிட்டு சீண்டல் சிரிப்பை இவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் இழையோட விட்டு திரும்பிக்கொள்ள பல்லைக்கடித்துக்கொண்டே இந்தப்பக்கம் திரும்பியவன் பிளேட்டை எடுத்துக்கொண்டு உணவு வரிசைக்கு போய்விட்டான்.

ஆதவன் ஒரு காலத்தில் மிகப்புகழ்பெற்ற டிசைனர். அடீரா என்ற பெயர் கூட அவருடைய பெயரும் அவருடைய காதலியின் பெயரும் இணைந்து உருவானதே..ஆனால் கம்பனி வளர வளர அவர் வடிவமைப்பது நின்று போய் முழுக்க முழுக்க நிர்வாகத்துக்குள் புதைந்தே போய்விட்டார். செந்தில்ராம் போன்ற ஒட்டுண்ணிகள் அங்கே செழித்து வாழ ஆரம்பித்தது அதன் பின்னர் தான். இது நமக்கு நடக்க கூடாது. வர்ணாவை ஆரம்பிக்கும் போதே அபயின் மனதில் இருந்தது அது தான்.

என்றைக்கும் பணம், தொழில் விரிவாக்கம் என்ற போதைக்கு அடிமையாகி நிர்வாகத்துக்குள் தொலைந்து போய்விடக்கூடாது, ஆக நிர்வாகத்தில் மேற்படிப்பு முடித்திருந்த அவனது உயிர் நண்பனை நிர்வாகம், பங்குதாரர்கள் எல்லாவற்றையும் பொறுப்பேற்க வர்ணாவில் பார்ட்னர் ஆக்கி விட்டான். கலை அபய்க்கு,, கவலைகள் கதிருக்கு.. அதுவே தான் அவர்களின் டீல். அதனால் தான் இத்தனை வருடங்கள் அவ்வப்போது போய் பார்த்துக்கொண்டு அடீராவிலேயே அபயினால் தொடரவும் முடிந்தது. திடும்மென அவனுக்கும் சேர்த்து அவனுடைய ஏழரை ஒரு முடிவு எடுத்து விட்டிருக்க வாழ்க்கை அவனையும் எங்கேயோ எல்லாம் இழுத்துக்கொண்டு போக ஆரம்பிக்கிறதே...

காற்றோடு வல்லூறு தான் போகுதே

பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய்




சௌம்யா போன் பண்ணி நித்தி பத்திரமாய் போய் சேர்ந்து விட்டாள் என்ற தகவலை பகிர்ந்தவள் “ஜாலியா இருக்கா பாஸ். வீடெல்லாம் சுத்தி காமிச்சா.. அவளை மேடம்னு கூப்டறாங்களாம் என்று கிளுக்கி சிரித்து “நம்ப முடியுதா பாஸ்..” என்று கேட்க உர்ரென்று உம் கொட்டி விட்டு போனை வைத்து விட்டான்.

மனதுக்குள் ஆசுவாசமா ஏமாற்றமா? அவனுக்கே புரியவில்லை.. அவள் சந்தோஷமாய் தைரியமாய் இருப்பது ஆசுவாசமா? இல்லை நாம் இல்லாமல் அவள் தனியே ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டாள் இனி என் தேவை அவளுக்கு ஏற்படாது என்ற ஏமாற்றமா? கேள்விக்கு பதில் தேடாமல் தூக்கி போட்டவன் அது கோபமாய் மாற கதிரை கடித்துக்கொண்டே வந்து சேர்ந்திருந்தான்.

நடுவில் இவன் வேற....

எதை எடுத்தோம் என்று உணர்வே இல்லாமல் எதை எதையோ பிளேட்டில் சேர்த்துக்கொண்டு வந்து ஒரு டேபிளில் அமர்ந்தான். அவனை அறியாமலே அனி பேசிக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் போய் அமர்ந்ததை எண்ணி மானசீகமாய் அபய் தலையில் அடித்துக்கொள்ள அவரோ அப்பாவியாய் வர்ணாவை வானளாவ புகழ்ந்து விட்டு “அடீரா தான் உங்க பேரன்ட் கம்பனியாமே, இப்போ அனிருத்தன் சார் சொல்லித்தான் எனக்கு விஷயம் தெரிஞ்சது. யாருமே எங்கயுமே வெளிப்படுத்திக்கலையே” என்று கேட்க அபய்க்கு கொதிப்பேறியது.

யார் யாருக்கு பேரன்ட் கம்பனி? என்று கேட்ட முனைந்த நாவை கடித்து தன்னை கடைக்கண்ணில் சிரிப்போடு ஒரு பார்வை பார்த்துவிட்டு மும்முரமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை கொலை வெறியாய் முறைத்தவன் “நீங்க எதையோ தப்பா புரிஞ்சிருக்கீங்க..வர்ணாவுக்கு சட்ட ரீதியாய் எந்த கம்பனியோடேயும் இணைப்புக்கள் இல்லை..எதிர்காலத்திலும் வர வாய்ப்புக்கள் இல்லை” என்று முகம் மாறாமலே சொல்லி விட்டான்

ஓ..என்று அவர் சங்கடமாய் இழுக்க

“சார்.. மிஸ்டர் அபய்க்கு மிஸ்டர் ஆதவன் ஒரு பேரன்ட்... அதனால அடீரா பிகம்ஸ் ஹிஸ் பேரன்ட் கம்பனி என்ற சென்ஸில் தான் சொன்னேன்” என்று தன்னுடைய குறும்பு சிரிப்பை அனிருத்தன் எடுத்து விட அந்த மனிதர் வாய் விட்டு சிரித்தார்..

இதெல்லாம் ஒரு ஜோக்கா? அவன் வேணும்னே சொல்லிட்டு இப்போ தங்கதுரை ஜோக்கா மாத்திட்டு இருக்கான். யார் யாருக்கு அப்பா என்ற உரிமை கோரல் எல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா என்று அபய் பல்லை கடித்தான்.

“அப்போ நீங்க ரெண்டு பேரும் பிரதர்சா?” என்று அவர் புன்னகையோடு கேட்க

அபய் “half” என்றான் கடித்த பற்களுக்கிடையில்.

மறுபக்கம் அனி “ஐ ஆம் புல்” என்று சொன்னது நிச்சயம் அவனது வயிற்றை குறித்து அல்ல..

இவர்கள் நம்மை வைத்து சண்டை போடுவதை வெகு தாமதமாய் புரிந்து கொண்ட அந்த அப்பாவி மனிதர் மெல்ல நான் ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வர்றேன்” என்ற படி தப்பித்து ஓடி விட்ட இடைவெளியில் “என் லேபிள் பெயரை வச்சு இப்படி விளையாடற வேலை வச்சுக்காத.. அப்புறம்,,,நல்லாருக்காது.” என்று அனியிடம் எச்சரித்தான் அபய்

“ஏன் ப்ரதர் உன் பேச்சுல ஒரு பயரை காணோமே..எங்கே போச்சு? அந்த ஊர் பேர் என்ன? ஏலக்காயா?? கறுவாவா?” என்று அவன் ராகமாய் கேட்க

“அவ்ளோ தான் உனக்கு மரியாதை” என்றவன் அவனை குத்த முடியாமல் போர்க்கை சிக்கனின் குத்தினான்.

“ஆனாலும் நீ லக்கி தான் ப்ரதர். என்ன தான் நீ கடிச்சு குதறினாலும் நீ தான் வேணும்னு ஒருத்தி சொல்றாளே..”

முறைத்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் கரண்டி அந்தரத்தில் நின்றது..

கடுமையாய் அவளை விரட்டிக்கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் அவள் விலகி தூரம் போன சமயம், அதை இன்னொருவன் வாயில் இருந்து கேட்டது அவனுக்கே ஒரு மாதிரியாய் ஆகிவிட்டது. அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ...அவளும் அப்படித்தான் உணர்ந்தாளா? மனம் ஏங்க

ஏன் உனக்கு தெரியாதா? என்று நொடித்தது மனசாட்சி

குற்ற உணர்வின் கறுப்பு தீற்றலொன்று அவனது மனதில் தெறித்து போனது..

“எனக்கு உன்னை மாதிரி லக்கெல்லாம் கிடையாது ப்ரதர். நானே தான் ஹோம்வொர்க் பண்ணி கரக்ட் பண்ணணும். அந்த ப்ளூ சுடிதார் ஓகேவா பார்” என்று அனி கேட்க அனிச்சையாய் அந்த பக்கம் திரும்பி பார்த்து விட்டவன்

“அதுக்கு முதல்ல அவ புருஷன் ஒகே சொல்லணும்..” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்

“ஆஹா போச்சா?” என்றபடி அனி ஒருவழியாய் போய்விட்டான்.

“உனக்காக ஒருத்தி வருஷக்கணக்கில் காத்திருக்கிறதையே கண்டுபிடிக்க தெரில..வந்துட்டான் என் விஷயத்தை நோண்டுறதுக்கு.. லூசு” என்று அபய் கோபமாய் முணுமுணுத்தாலும் அதில் காரம் இல்லை..

காலமும் நீடித்த அருகாமையும் கோபங்களை எப்படியோ நீர்க்க செய்து விடுகிறது..

திரும்பி அபய் வீட்டுக்கு போகும் போது மழை அடித்து பொழிந்து கொண்டிருந்தது. சிக்னலில் முதலாவதாய் நின்று கொண்டிருந்தவனின் கார் கண்ணாடிக்கு முன்னே வழிந்த மழைக்கோடுகளுக்கு இடையில் நிலா தெரிந்து தெரிந்து மறைந்து கொண்டிருந்தது..

“நான் இல்லாம இருந்துடுவியா?” என்று நிலவை பார்த்தபடி கேட்டது அவன் மனம்.

என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா? ஐ ஆம் சாரி...பொறந்ததில் இருந்தே யாரும் முக்கியத்துவம் தராமல் வளர்ந்ததில் எனக்கு கிடைத்த நீ எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கணும் என்று முரடாய் இருந்துட்டேன்...உன் மனசை பத்தி நினைக்கவே இல்லை..

அதுக்காக தூரமா போகணுமா? என்று மறுபடியும் மனம் முதலில் இருந்து ஆரம்பிக்க வானத்தில் மின்னல் ஒன்று தெறித்து மறைய விளக்கும் பச்சைக்கு மாறியது..
 
Last edited by a moderator:
New member
Messages
15
Reaction score
9
Points
3
நிரு எங்க போனாலும் பக்கத்துவீட்டு ல pet ஆகிட்ற போ. செங்கல் செங்களா கட்டிடுவ கண்டிப்பா.

Btw I don't want to support abhy analum முதல் முறையா எனக்காக ஒருத்தர் ஒரு தகவல் சொல்றாங்கனு சொல்றியே அவன் சொன்ன மாதிரி அடீராலையே மார்கெட்டிங் போய் இருக்கலாம்ல.

அதென்ன அமுசடக்கி. RW கே இன்னும் விளக்கம் தெரியல இது வேற என்ன பேருன்னு தெரியலையே.

நான் என் ப்ரெண்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் இந்த அனி புராஜக்ட் அதிகம் குடுக்கறது நிரு வ trigger பண்றது எல்லாம் அபய்காக நல்லது தான் பன்றானோனு இவன் பேசறதெல்லாம் பார்த்தா அப்படி தான் ஃபீல் ஆகுது.

அனிக்கு யாரு வெயிட் பண்றா மகிஷாவா. 3 நாளாக refresh பண்ணி thallitten அடுத்த எபிசோட் பார்த்து சீக்கிரம் போடுங்க
 
Last edited:
  • Like
Reactions: Ush
New member
Messages
15
Reaction score
7
Points
3
அவள் அங்கே நிலவோடு பேசிக்கொண்டிருக்க இங்கே மின்விளக்குகள் மினுங்கும் தலைநகரில் ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் சந்திப்பு கூடத்தில் இறுக்கமான முகத்தோடு கதிரோடு நடந்து வந்து கொண்டிருந்தான் அபய்.

“நான் இந்த விஷயங்களில் நுழையக்கூடாதுன்னு தானேடா உன்னை பார்ட்னர் ஆக்கினேன்? இன்வெஸ்டர்களின் மீட்டிங்கில் என்ன டாஷுக்கு நான்? என்று பல்லைக்கடித்துக்கொண்டே வந்தவனின் வழக்கத்தை விட குரலில் சூடு தெறித்துக்கொண்டிருந்தது.

“டேய் டேய்.. இவ்வளவு காலமும் தான் நீ யார்னே வெளிப்படுத்தாம ஓட்டிட்டோம். எத்தனை தடவை சொல்லிட்டேன். பிசினஸ் பெருசாகும் போது நம்மளோட முதுகெலும்பு யார்னு அவங்களுக்கு தெரியாம நம்ம மேல நம்பிக்கை வராதுடா.. இப்போ தான் நீ அடீராவை விட்டு வெளியே வந்துட்டேல்ல?.. கொஞ்ச நாளைக்கு இங்கெல்லாம் முகத்தை காட்டு. போதும்..மீதியை நான் பார்த்துக்கிறேன்..” அபயின் கடும் குரலால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் முன்னால் போய்க்கொண்டிருந்த கதிரின் முதுகையே முறைத்தவன் வேறு வழியின்று அவன் போன அறைக்குள் நுழைந்தான்.

இன்வெஸ்டர்கள், டிசைன் லேபிள்களின் பெரிய தலைகள் என்று எல்லாரும் அந்த டின்னரில் கலந்து கொண்டிருந்தனர். கதிர் எல்லாருக்கும் வர்ணாவின் நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைமை டிசைனராய் அபயை அறிமுகப்படுத்த மாபெரும் சகிப்புத்தன்மையோடு பேசிக்கொண்டிருந்தவனின் கண்கள் அந்த அறையின் மறுபக்க எல்லையில் நின்று ஒரு பிரமுகரோடு பேசிக்கொண்டிருந்த அனியை கண்டு ஒரு கணம் சுருங்கின. அவனும் அதே கணம் திரும்பிப்பார்த்துவிட்டு சீண்டல் சிரிப்பை இவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் இழையோட விட்டு திரும்பிக்கொள்ள பல்லைக்கடித்துக்கொண்டே இந்தப்பக்கம் திரும்பியவன் பிளேட்டை எடுத்துக்கொண்டு உணவு வரிசைக்கு போய்விட்டான்.

ஆதவன் ஒரு காலத்தில் மிகப்புகழ்பெற்ற டிசைனர். அடீரா என்ற பெயர் கூட அவருடைய பெயரும் அவருடைய காதலியின் பெயரும் இணைந்து உருவானதே..ஆனால் கம்பனி வளர வளர அவர் வடிவமைப்பது நின்று போய் முழுக்க முழுக்க நிர்வாகத்துக்குள் புதைந்தே போய்விட்டார். செந்தில்ராம் போன்ற ஒட்டுண்ணிகள் அங்கே செழித்து வாழ ஆரம்பித்தது அதன் பின்னர் தான். இது நமக்கு நடக்க கூடாது. வர்ணாவை ஆரம்பிக்கும் போதே அபயின் மனதில் இருந்தது அது தான்.

என்றைக்கும் பணம், தொழில் விரிவாக்கம் என்ற போதைக்கு அடிமையாகி நிர்வாகத்துக்குள் தொலைந்து போய்விடக்கூடாது, ஆக நிர்வாகத்தில் மேற்படிப்பு முடித்திருந்த அவனது உயிர் நண்பனை நிர்வாகம், பங்குதாரர்கள் எல்லாவற்றையும் பொறுப்பேற்க வர்ணாவில் பார்ட்னர் ஆக்கி விட்டான். கலை அபய்க்கு,, கவலைகள் கதிருக்கு.. அதுவே தான் அவர்களின் டீல். அதனால் தான் இத்தனை வருடங்கள் அவ்வப்போது போய் பார்த்துக்கொண்டு அடீராவிலேயே அபயினால் தொடரவும் முடிந்தது. திடும்மென அவனுக்கும் சேர்த்து அவனுடைய ஏழரை ஒரு முடிவு எடுத்து விட்டிருக்க வாழ்க்கை அவனையும் எங்கேயோ எல்லாம் இழுத்துக்கொண்டு போக ஆரம்பிக்கிறதே...

காற்றோடு வல்லூறு தான் போகுதே

பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய்




சௌம்யா போன் பண்ணி நித்தி பத்திரமாய் போய் சேர்ந்து விட்டாள் என்ற தகவலை பகிர்ந்தவள் “ஜாலியா இருக்கா பாஸ். வீடெல்லாம் சுத்தி காமிச்சா.. அவளை மேடம்னு கூப்டறாங்களாம் என்று கிளுக்கி சிரித்து “நம்ப முடியுதா பாஸ்..” என்று கேட்க உர்ரென்று உம் கொட்டி விட்டு போனை வைத்து விட்டான்.

மனதுக்குள் ஆசுவாசமா ஏமாற்றமா? அவனுக்கே புரியவில்லை.. அவள் சந்தோஷமாய் தைரியமாய் இருப்பது ஆசுவாசமா? இல்லை நாம் இல்லாமல் அவள் தனியே ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டாள் இனி என் தேவை அவளுக்கு ஏற்படாது என்ற ஏமாற்றமா? கேள்விக்கு பதில் தேடாமல் தூக்கி போட்டவன் அது கோபமாய் மாற கதிரை கடித்துக்கொண்டே வந்து சேர்ந்திருந்தான்.

நடுவில் இவன் வேற....

எதை எடுத்தோம் என்று உணர்வே இல்லாமல் எதை எதையோ பிளேட்டில் சேர்த்துக்கொண்டு வந்து ஒரு டேபிளில் அமர்ந்தான். அவனை அறியாமலே அனி பேசிக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் போய் அமர்ந்ததை எண்ணி மானசீகமாய் அபய் தலையில் அடித்துக்கொள்ள அவரோ அப்பாவியாய் வர்ணாவை வானளாவ புகழ்ந்து விட்டு “அடீரா தான் உங்க பேரன்ட் கம்பனியாமே, இப்போ அனிருத்தன் சார் சொல்லித்தான் எனக்கு விஷயம் தெரிஞ்சது. யாருமே எங்கயுமே வெளிப்படுத்திக்கலையே” என்று கேட்க அபய்க்கு கொதிப்பேறியது.

யார் யாருக்கு பேரன்ட் கம்பனி? என்று கேட்ட முனைந்த நாவை கடித்து தன்னை கடைக்கண்ணில் சிரிப்போடு ஒரு பார்வை பார்த்துவிட்டு மும்முரமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை கொலை வெறியாய் முறைத்தவன் “நீங்க எதையோ தப்பா புரிஞ்சிருக்கீங்க..வர்ணாவுக்கு சட்ட ரீதியாய் எந்த கம்பனியோடேயும் இணைப்புக்கள் இல்லை..எதிர்காலத்திலும் வர வாய்ப்புக்கள் இல்லை” என்று முகம் மாறாமலே சொல்லி விட்டான்

ஓ..என்று அவர் சங்கடமாய் இழுக்க

“சார்.. மிஸ்டர் அபய்க்கு மிஸ்டர் ஆதவன் ஒரு பேரன்ட்... அதனால அடீரா பிகம்ஸ் ஹிஸ் பேரன்ட் கம்பனி என்ற சென்ஸில் தான் சொன்னேன்” என்று தன்னுடைய குறும்பு சிரிப்பை அனிருத்தன் எடுத்து விட அந்த மனிதர் வாய் விட்டு சிரித்தார்..

இதெல்லாம் ஒரு ஜோக்கா? அவன் வேணும்னே சொல்லிட்டு இப்போ தங்கதுரை ஜோக்கா மாத்திட்டு இருக்கான். யார் யாருக்கு அப்பா என்ற உரிமை கோரல் எல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா என்று அபய் பல்லை கடித்தான்.

“அப்போ நீங்க ரெண்டு பேரும் பிரதர்சா?” என்று அவர் புன்னகையோடு கேட்க

அபய் “half” என்றான் கடித்த பற்களுக்கிடையில்.

மறுபக்கம் அனி “ஐ ஆம் புல்” என்று சொன்னது நிச்சயம் அவனது வயிற்றை குறித்து அல்ல..

இவர்கள் நம்மை வைத்து சண்டை போடுவதை வெகு தாமதமாய் புரிந்து கொண்ட அந்த அப்பாவி மனிதர் மெல்ல நான் ஐஸ்க்ரீம் எடுத்துட்டு வர்றேன்” என்ற படி தப்பித்து ஓடி விட்ட இடைவெளியில் “என் லேபிள் பெயரை வச்சு இப்படி விளையாடற வேலை வச்சுக்காத.. அப்புறம்,,,நல்லாருக்காது.” என்று அனியிடம் எச்சரித்தான் அபய்

“ஏன் ப்ரதர் உன் பேச்சுல ஒரு பயரை காணோமே..எங்கே போச்சு? அந்த ஊர் பேர் என்ன? ஏலக்காயா?? கறுவாவா?” என்று அவன் ராகமாய் கேட்க

“அவ்ளோ தான் உனக்கு மரியாதை” என்றவன் அவனை குத்த முடியாமல் போர்க்கை சிக்கனின் குத்தினான்.

“ஆனாலும் நீ லக்கி தான் ப்ரதர். என்ன தான் நீ கடிச்சு குதறினாலும் நீ தான் வேணும்னு ஒருத்தி சொல்றாளே..”

முறைத்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் கரண்டி அந்தரத்தில் நின்றது..

கடுமையாய் அவளை விரட்டிக்கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் அவள் விலகி தூரம் போன சமயம், அதை இன்னொருவன் வாயில் இருந்து கேட்டது அவனுக்கே ஒரு மாதிரியாய் ஆகிவிட்டது. அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ...அவளும் அப்படித்தான் உணர்ந்தாளா? மனம் ஏங்க

ஏன் உனக்கு தெரியாதா? என்று நொடித்தது மனசாட்சி

குற்ற உணர்வின் கறுப்பு தீற்றலொன்று அவனது மனதில் தெறித்து போனது..

“எனக்கு உன்னை மாதிரி லக்கெல்லாம் கிடையாது ப்ரதர். நானே தான் ஹோம்வொர்க் பண்ணி கரக்ட் பண்ணணும். அந்த ப்ளூ சுடிதார் ஓகேவா பார்” என்று அனி கேட்க அனிச்சையாய் அந்த பக்கம் திரும்பி பார்த்து விட்டவன்

“அதுக்கு முதல்ல அவ புருஷன் ஒகே சொல்லணும்..” என்று வாய்க்குள் முணுமுணுத்தான்

“ஆஹா போச்சா?” என்றபடி அனி ஒருவழியாய் போய்விட்டான்.

“உனக்காக ஒருத்தி வருஷக்கணக்கில் காத்திருக்கிறதையே கண்டுபிடிக்க தெரில..வந்துட்டான் என் விஷயத்தை நோண்டுறதுக்கு.. லூசு” என்று அபய் கோபமாய் முணுமுணுத்தாலும் அதில் காரம் இல்லை..

காலமும் நீடித்த அருகாமையும் கோபங்களை எப்படியோ நீர்க்க செய்து விடுகிறது..

திரும்பி அபய் வீட்டுக்கு போகும் போது மழை அடித்து பொழிந்து கொண்டிருந்தது. சிக்னலில் முதலாவதாய் நின்று கொண்டிருந்தவனின் கார் கண்ணாடிக்கு முன்னே வழிந்த மழைக்கோடுகளுக்கு இடையில் நிலா தெரிந்து தெரிந்து மறைந்து கொண்டிருந்தது..

“நான் இல்லாம இருந்துடுவியா?” என்று நிலவை பார்த்தபடி கேட்டது அவன் மனம்.

என்னால ரொம்ப கஷ்டப்பட்டுட்டியா? ஐ ஆம் சாரி...பொறந்ததில் இருந்தே யாரும் முக்கியத்துவம் தராமல் வளர்ந்ததில் எனக்கு கிடைத்த நீ எனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கணும் என்று முரடாய் இருந்துட்டேன்...உன் மனசை பத்தி நினைக்கவே இல்லை..

அதுக்காக தூரமா போகணுமா? என்று மறுபடியும் மனம் முதலில் இருந்து ஆரம்பிக்க வானத்தில் மின்னல் ஒன்று தெறித்து மறைய விளக்கும் பச்சைக்கு மாறியது..
Very nice
 
  • Like
Reactions: Ush
New member
Messages
15
Reaction score
13
Points
3
அமுசடக்கி என்றால் சத்தம் இல்லாமல் வேலை பார்ப்பவங்க தானே ush. 3 நாளா பார்த்து கொண்டே இருந்தேன் அப்டேட் கு. மிகவும் அருமை ush. காதலே இவர்கள் 2 பேரையும் என்ன செய்ய போகிறாய் 🤔இடையில் நித ர் ஷ னன் வந்து இருக்கார். என்ன நடக்குமோ 🤔
 

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
நிரு எங்க போனாலும் பக்கத்துவீட்டு ல pet ஆகிட்ற போ. செங்கல் செங்களா கட்டிடுவ கண்டிப்பா.

Btw I don't want to support abhy analum முதல் முறையா எனக்காக ஒருத்தர் ஒரு தகவல் சொல்றாங்கனு சொல்றியே அவன் சொன்ன மாதிரி அடீராலையே மார்கெட்டிங் போய் இருக்கலாம்ல.

அதென்ன அமுசடக்கி. RW கே இன்னும் விளக்கம் தெரியல இது வேற என்ன பேருன்னு தெரியலையே.

நான் என் ப்ரெண்ட் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் இந்த அனி புராஜக்ட் அதிகம் குடுக்கறது நிரு வ trigger பண்றது எல்லாம் அபய்காக தான் பன்றானோனு இவன் பேசறதெல்லாம் பார்த்தா அப்படி தான் ஃபீல் ஆகுது.

அனிக்கு யாரு வெயிட் பண்றா மகிஷாவா. 3 நாளாக refresh பண்ணி thallitten அடுத்த எபிசோட் பார்த்து சீக்கிரம் போடுங்க
lol
ethuku vandhomne theriyama ava character aave maaritta.. veronnumilla..veliye vandhappuram than singham feels
amusadakki na local la amukkuni solvangale.. silent a irunthu periya vela parkurathu.. rw haha kandupidinga parpom

start la real a than sandai pottanga.. appuram they got used to exist in the same space.. this matterla lately their stand ennanu niru ku kandupidkka therla

aama hehe good friday easter lam vandhuchula.. busy aaitten. sorry for kept you waitimg
 

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
அமுசடக்கி என்றால் சத்தம் இல்லாமல் வேலை பார்ப்பவங்க தானே ush. 3 நாளா பார்த்து கொண்டே இருந்தேன் அப்டேட் கு. மிகவும் அருமை ush. காதலே இவர்கள் 2 பேரையும் என்ன செய்ய போகிறாய் 🤔இடையில் நித ர் ஷ னன் வந்து இருக்கார். என்ன நடக்குமோ 🤔
aama haha...easter lam varavum veetla busy aayitten. thanks anu. he is not a threat avaruku aal iruku :)
 

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
Excellent epi sis. Oru 50 times na check panni irupean, update vandhuthanu parkka. Thanks for the update.
acho sorry. naan inform panni irunthurukkanum. Easter week end illaiya konjam busy aayitten. thank you so much!!!
 
New member
Messages
15
Reaction score
9
Points
3
lol
ethuku vandhomne theriyama ava character aave maaritta.. veronnumilla..veliye vandhappuram than singham feels
amusadakki na local la amukkuni solvangale.. silent a irunthu periya vela parkurathu.. rw haha kandupidinga parpom

start la real a than sandai pottanga.. appuram they got used to exist in the same space.. this matterla lately their stand ennanu niru ku kandupidkka therla

aama hehe good friday easter lam vandhuchula.. busy aaitten. sorry for kept you waitimg
It's my bad Easter ana அன்புள்ள எதிரி ஈஸ்டர் எபிசோட் படிப்பேன் ஆனால் ஈஸ்டர் ல தான் episode delay nu connect pannala
 
  • Like
Reactions: Ush
Top