• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நினைவிழை -1 1

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
11

என்ன தான் மனதுக்குள் குழம்பினாலும் தன்னுடைய அலுவலக மேசையில் பார்த்தனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணனின் சிற்பத்தை அபய் வைத்திருந்தது ஒவ்வொரு முறை பார்க்க நேரிடும் போதும் அவளுக்குள் பட்டாம் பூச்சியை பறக்க வைக்கும். அப்படியாக தங்களுக்கிடையில் என்ன இருக்கிறது என்பதை அறிய விரும்பாமல் வலுக்கட்டாயமாய் விழிகளை மூடிக்கொண்டிருந்தவளை காலம் மெல்ல மெல்ல கண் திறக்க வைத்துக்கொண்டிருந்தது.

காலேஜில் சேர்ந்து மூன்று மாதம் இருக்கும். ஏகப்பட்ட அசைன்மென்ட் கொடுத்து கொல்கிறார்கள் என்று கம்ப்ளைன்ட் பண்ணிக்கொண்டிருந்தவளிடம் “உனக்கு இப்போ நீ பார்க்கற வேலை பிடிச்சிருக்கா?” என்று திடும்மென கேட்டான் அபய்

“ஏன் கேக்கறீங்க?” இப்போதெல்லாம் அவளின் வாயில் அபய்ண்ணா வருவது வெகு அரிதாயிருந்ததை அவள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

“சந்திரா உனக்கு பயிற்சி கொடுத்து முடிச்சதும் உன்னை முழு நேர வேலைக்கு போட்டுருவாங்க. அதனால் தான் கேக்கிறேன், டூ யூ லைக் வாட் யூ டூ?” அவன் கூர்மையாய் கேட்டான்

கொஞ்சம் யோசித்தவளுக்கு மனசில் இருப்பது வெளி வந்து விட்டது. “ ப்ச் சுத்தமா பிடிக்கல. இப்போவே ஒரே வேலையை திரும்ப திரும்ப பண்ற போல தோணிடுச்சு. ஆனா ஆதவன் சாரே தான் என்னை அங்கே வேலை பார்க்க கேட்டார். இல்லை நான் உங்க கிட்ட வேலை பார்க்க மாட்டேன் வேறே டிப்பர்ட்மென்ட்ல போடுங்கன்னு கேக்கறது நல்லாருக்காதே”

“நிதி நீ படிப்பது மார்க்கட்டிங். நீ அதுக்குரிய பிரிவுல இருந்தா தான் உனக்கு உபயோகமா இருக்கும். நியாயமா அவர் அதை யோசிச்சிருக்கணும்..ஆனால் நீயே உனக்காக யோசிக்கலைன்னும் போது மத்தவங்க எதுக்கு உன்னை பத்தி யோசிக்கபோறாங்க?” அவன் விழிகளை உருட்ட வழக்கம் போல தலைகுனிந்து தப்பிக்க முனைந்தாள் அவள்

அவளுக்கு தயக்கமாய் இருந்தது. ஆதவன் சாரும் அவர் குடும்பமும் அவளுக்கு செய்தவைகளுக்கு அவளால் என்றைக்கும் திருப்பி செய்து விட முடியாது. இப்போது அவரது நெடுங்கால காரியதரிசி வேலையை விட்டு செல்லும் தருணம்.. நிரு நல்லா பர்பார்ம் பண்றா, காலங்காலமா கம்பனில என்கூடவே இருந்தது போலவே ஸ்மூத்தா வேலை பார்க்கிறா..இல்லைன்னா சந்திரா போகப்போற இந்த நேரத்துல கஷ்டமா இருந்துருக்கும். என்று போன வாரமும் HR அலுவலர் ஒருவரிடம் சொன்னார். அவருக்கு தேவையான முக்கியமான நேரத்தில் நான் காலை வாருவதா? தன்னுடைய நன்றியை திருப்பி செலுத்தும் வாய்ப்பாய் தான் அவள் பார்த்தாள்.

குனிந்த அவளின் தலையை முறைத்துப்பார்த்தவனும் அடம் பிடிவாதம், சொன்ன சொல் கேட்பதில்லை போன்ற அடைமொழிகளை வாய்க்குள் முணு முணுத்து விட்டு அப்படியே விட்டு விட்டான்.

அவளை சொல்கிறானே.. அவன் மட்டும் இங்கே என்ன செய்கிறான்.. பழைய கசப்பான கடந்த காலத்துக்காக எதிர்காலத்தை இங்கே அடமானம் வைத்து கொண்டிருக்கிறானே..அதை நான் கேட்டால் படிக்கும் வேலையை பார் என்று சொல்ல வேண்டியது...என்று மனதுக்குள் கடுப்பானவள் ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையில் அவனுக்கும் கம்பனிக்கும் ஆன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே தான் வந்தது. செந்தில் ராமை அவன் வேலையே செய்யவிடாமல் மீட்டிங்குகளில் ஜூனியர் மெம்பர்களின் முன்னே அவருடைய முடிவுகளை கேள்வி கேட்பதும், அவரின் துறை சார் அறிவுப்போதாமையை எல்லார் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி அவரை வாயடைக்க வைப்பது என்று அபய் அங்கே டிசைன் டீமில் பிரச்சனை செய்வதாய் அடிக்கடி முறைப்பாடு வர ஆதவனே இரண்டு தடவை அவனைக் கூப்பிட்டு கோபமாய் பேசியிருந்தார்.

அவன் தான் ஆதவனின் கதவை தட்டுவதுமில்லை பூட்டுவதுமில்லையே.. அப்படியே எல்லாம் இவளுக்கு கேட்கும்.

“கொஞ்சம் கூட விஷய ஞானமோ அடிப்படை அறிவோ இல்லாவனிடம் என்னால் தலையாட்ட முடியாது. முடிந்ததை பாருங்க” என்று விட்டு போய்விடுவான்.

அதன் எதிரொலியாய் சில ப்ராஜெக்ட்களில் அவன் பங்கு கொள்ள கூடாது என்று ஆதவன் அபயை விலக்கி வைப்பதும், அதை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் அவன் பாட்டுக்கு சுற்றி வருவதும் நடக்கும்.

நிருவுக்கு ஆதவன் மேல் சரியான கோபம். பிடிக்கவில்லை என்றால் நீ நின்று கொள் என்று அவனை அனுப்பி விட வேண்டியது தானே.. கெட்ட பெயராகிவிடும் என்ற பயத்தில் கூடவே வைத்துக்கொண்டு அவனை டம்மியாய் மாற்ற முயல்கிறார்.. ஆனால் அவனும் கொஞ்சமாவது வளைந்து கொடுக்க வேண்டுமே...ப்ச்..

செந்தில் ராமை அலுவலகத்தில் பலருக்கு பிடிக்காது. இதுவரை வந்த திறமையான டிசைனர்களை எல்லாம் தனக்கு போட்டியாகிவிடுவார்கள் என்ற காரணத்துக்காய் வெட்டி வெட்டி வேலையை விட்டே அனுப்புபவன் என்றார்கள்..இருந்தாலும் அவனோடு இப்படி முகத்துக்கு நேராய் மோதுவது சரியா?

அபய் பெரியவன், தான் செய்வதை தெளிவாக புரிந்தே செய்பவன், நாம் ஏன் இந்தளவு அதற்காய் மனதை வருத்திக்கொள்கிறோம் என்று அவள் அப்போதெல்லாம் யோசித்தும் பார்க்கவில்லை. மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தாள்.

அந்த காலகட்டத்தில் தான்... அவன் பெயர் கூட இப்போ மறந்து விட்டது. பிரதீப் என்று ஒருவன் அலுவலகத்தில் வந்து சேர்ந்தான். அவனுடைய டேபிள் நிரு இருக்கும் ஹாரிடோர் தாண்டி வெளியே போனால் முதலாவதாக இருக்கும்.

எப்போதும் அவளது பாதையில் எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தான். நிருவுக்கோ அவனை ஏனோ முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட அவனுடைய நட்புக்கரத்தை எல்லாம் தட்டி விட்டு விட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் மதியம் அவள் காபி எடுத்து வர கிச்சனுக்கு போன போது பின்னாலேயே வந்து விட்டவன்

“என்ன நீ, பேசவே மாட்டேங்கிற? என்னை பார்த்தால் கெட்டவன் மாதிரி தெரியுதா?” என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் இல்லைங்க. பாஸ் அவசரமா ஒரு வேலை கேட்டிருந்தார். கொஞ்சம் வழி விட்டீங்கன்னா காபி எடுத்துட்டு போய்டுவேன்” என்று சமாளித்து அங்கிருந்து அகல முயன்றாள் இவள்.

“முடியாதே..” என்ற அவனது கண்கள் சிரித்ததில் நிச்சயம் வெகுளித்தனம் இருக்கவில்லை.

இவள் பயிற்சியில் இருப்பவள் தானே, சின்னப்பெண் வேறு ஆக விளையாடிப்பார்க்கலாம் என்று நினைக்கிறானோ?

“இங்க பாருங்க சார். நீங்க பேசறது பண்றதெல்லாம் கொஞ்சமும் நல்லால்ல.. நான் HR கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்” என்று முறைப்பாய் சொல்ல

உடனே முகபாவத்தை மாற்றிக்கொண்டவன் “ஐயோ விளையாட்டுக்கு சொன்னேன் எதுக்கு நீ சீரியஸா எடுத்துக்கிற?” என்று சிரிக்க நிரு சிரிக்கவே இல்லை. திரும்பி காபியை நிரப்ப ஆரம்பித்துவிட்டாள், அவனோ போகும் வழியை காணோம்.

அப்போது தான் “நிருதி. உன்னை ராம் தேடுறார். எவ்ளோ நேரமா வெயிட் பண்றது?” என்று கடுமையான அபயின் குரல் வாசலில் கேட்டது.

அனைத்தும் மறக்க “ ராமா? என்னயா? அந்தாள் எதுக்கு என்னை தேடுறார்?” என்று யோசித்தவள் இந்த பிரதீப்பை கிடப்பில் விட்டு விட்டு அபயின் பின்னால் போய் விட்டாள் நிரு.

எங்கே அவர்?” அவள் கண்ணை சுழற்றி தேட

“அந்த ஆளு ஒண்ணும் உன்னை தேடல.. அவன் கிட்ட எப்போவும் ஒரு கண் இருக்கட்டும். அவன் பார்வை சரியில்லை.. நீ போற இடமெல்லாம் பாலோ பண்ணிட்டு சுத்துறான்” பிரவுன் ட்ராகன் எரிக்க தயாராய் நின்றிருந்தது

“யார் பிரதீப்பா?” என்று கேட்டுவிட்டவள்

அது கூட தெரியாதா என்று அவன் முறைக்க

சரி சரி பழக்க தோஷத்துல கேட்டுட்டேன்..விடுங்களேன் என்றவள் “ஆமாம் நானும் இன்னிக்கு தான் கவனிச்சேன்” என்றாள், மனதில் அவளுக்கு இவன் எத்தனை நாளாய் கவனிக்கிறான் என்ற கேள்வி தான் ஓடியது

அதே முறைப்புடன் “கண்ணை உன்னை சுத்தி வச்சு பழகு” என்று விட்டு அவன் போய்விட

அவனுக்கு பழிப்பு காண்பித்து விட்டு திரும்பி வந்தவள் அத்தோடு அந்த விஷயத்தை மறந்து விட்டாள், அந்த பிரதீப்புமே இவளிடம் முயற்சி செய்து பலனில்லை என்று கை விட்டிருக்க வேண்டும்.. நிருவுக்கு அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த தொல்லையும் வரவில்லை.

இன்னும் ஒரு இரண்டு வாரங்கள் கடந்திருக்கும், ஒருநாள் ஆதவன் அவளை அழைத்து அவசரமாய் ஒரு மீட்டிங்கை ஒழுங்கு செய்ய சொல்லிவிட்டு யார் யாரை அழைக்க வேண்டும் என்று சொன்னவர் குறிப்பெடுக்க வேண்டும் மீட்டிங்குக்கு நீயும் வாம்மா என்று இவளையும் அழைத்து சென்றார்.

டிசைன் டீமில் எல்லாருக்கும் அழைப்பு விடுத்ததால் அபயும் வந்திருந்தான். கூடவே மற்ற பிரிவுகளின் தலைவர்களும் வந்தனர். யாரையும் தெரிந்ததாய் காண்பிக்காமல் நிருவும் கொஞ்சம் ஓரமாய் உட்கார்ந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தாள்.

ஆதவன் அன்றைக்கு தனக்கு வந்திருந்த ஒரு அழைப்பை பற்றித்தான் எல்லாருக்கும் விபரித்தார்.

சமீபத்தில் கடல் நீர் உள்ளே வந்து வெகுவாய் பாதிக்கப்பட்ட காராதீவு எனப்படும் தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிதிரட்டி உதவி வழங்க மாநில அரசு உட்பட நிறைய பெரிய ஸ்பான்சர்கள் ஒன்று திரண்டிருந்தார்கள். அந்த ஊரில் கலைநிகழ்வு போல ஒரு இரவு முழுதும் விழாவை ஒழுங்கு படுத்தி அந்த டிக்கட் வருமானத்தை அப்படியே அந்த மக்களிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார்கள். அந்த ஊரில் நெசவுத்தொழிலும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்களால் செய்யப்படுவதால் அந்த கலைநிகழ்வில் அவர்களின் தயாரிப்புக்களையே வைத்து கண்காட்சி ஒன்று செய்ய அடீரா உதவுமா என்று கேட்டிருந்தார்களாம்.

நல்ல வாய்ப்பு, உதவி செய்ததும் ஆகும் அதே நேரம் சரியான விளம்பரமும் ஆகும் என்று இவள் நினைத்துக்கொண்டிருக்க

ஆதவன் சாருக்கும் இதை ஏற்க ஆசை ஆனால் தங்களிடம் சரியான வளங்கள் இல்லை என்று அபிப்பிராயப்படுவதாக சொன்னார். அத்தோடு அடீராவின் ஸ்டைல் இது அல்லவே.. அவர்கள் பெரிய பிரான்ட்களுடன் தானே இது வரை பணி புரிந்திருக்கிறார்கள், உங்கள் அபிப்பிராயம் என்ன என்று அவர் யோசனையாய் கேட்க

செந்தில்ராமும் அவசரமாய் அதை ஆமோதித்து “அங்கே அவ்வளவு நாள் தங்கி கண்காட்சி எல்லாம் செய்ய எங்களிடம் உரிய டிசைனர்களும் இல்லை,ஆட்களும் போதாது” என்று விட

மற்ற தலைவர்களும் பெரும்பாலும் அதையே ஒத்து கருத்து தெரிவித்தனர்.

ஆதவனும் “நாங்கள் நிதியுதவி வேண்டுமானால் செய்கிறோம் நேரடியாக இணைந்து கொள்ள முடியாது” என்பது தான் என் முடிவும் என்று சொல்ல

அப்போது தான் “தலையை சுற்றி மூக்கை தொடுவானேன்.. ஐயோ சார் நாங்கள் வெள்ளைக்காரன் செய்யும் டிசைன்களை காப்பி மட்டுமே பண்ணுவோம்.. ஒரிஜினலாக எல்லாம் எங்களுக்கு பண்ண தெரியாது என்று உண்மையையே சொல்லிவிடுங்களேன்..” அபய் நக்கல் குரலில் இடையிட்டான்.

என்ன நம்மாள் இப்படி முகத்துக்கு நேரா அதுவும் இங்கே வச்சு சொல்றார் என்று அவள் படபடப்பாக

“அபய்..” என்று அதட்டினார் ஆதவன் மிகவும் கோபமாய்

“பின்னே ..மிஸ்டர் ராம் நம்மகிட்ட அதற்கு தகுந்த டிசைனர்கள் இல்லைன்னு சொல்றார். கேட்டுட்டு சும்மா இருக்கீங்க? அவர் வேணும்னா சொந்தமா டிசைன் பண்ண தெரியாதவரா இருக்கலாம். டீமில் இருக்கும் மீதி எல்லாருமே தகுதியான ஆட்கள் தான்” என்று அவன் ராமை பார்த்து நக்கலாய் சிரிக்கவும் செய்தான்.

அதில் வெறியாகி போன ராம் “சரிப்பா நீ சொல்றபடியே வர்றேன். எங்களோடது சின்ன டீம். அங்கே போய் வேலை செய்தால் இப்போ போயிட்டிருக்கும் மீதி ப்ராஜெக்ட்களை யார் பார்க்கறது” என்று பதிலுக்கு சீற

வாய்விட்டு சிரித்தான் அபய். “இதுக்குத்தான் தகுதியான தலைவர் இருக்கணும்றது. காராதீவின் ஸ்பெஷாலிட்டியே அவங்களோட கைத்தறி சேலைகளும் வேஷ்டிகளும் தான். நம்மளோட ஒரு டிசைனர் மட்டும் அங்கே இருந்தால் போதும்..உதவிக்கு ஏதாவது ஒரு டிசைன் ஸ்கூலின் ரெண்டு ஸ்டூடன்ட்சை வைத்தே அழகாய் செய்து முடிக்கலாம்”

“அப்படியெல்லாம் பொறுப்பை ஒரு ஜூனியர் கைல கொடுக்க முடியுமா? எவ்ளோ பெரிய ஸ்பான்சர்கள் இருக்கற இடம். ஒண்ணு நம்ம இருந்து பண்ணணும்..இல்ல ஒதுங்கணும்”

காரசாரமாய் பல தரப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் எதிராயே வர ஒரு கட்டத்தில் கோபமாகி விட்ட அபய் கதிரையை உதைத்து விட்டு எழுந்தவன் “இது எங்களுடைய இடம் என்று அழுத்தமாய் நிரூபிக்க லட்டான வாய்ப்பு.. நீங்க மிஸ் பண்ணினா அது உங்களுக்கு தான் லாஸ்.. நான் இதை மிஸ் பண்ண தயாரா இல்லை..” என்று ஆதவனை குறிப்பாய் பார்த்து விட்டு யாரையும் கண்டு கொள்ளாமல் வெளியே போய்விட்டான்.

எல்லார் முன்னிலையிலும் அவமானம் ஆகியதாலோ என்னமோ ஆதவனும் நான் எங்கள் நிலைப்பாடு நிதியுதவி மட்டும் தான்னு உத்தியோகபூர்வமா அறிவிச்சுடறேன் நிரு வாம்மா என்று அவளையும் அழைத்துக்கொண்டு எழுந்தவர் முகமெல்லாம் கோபத்தில் சிவந்து கிடந்தது.

உள்ளே அவரது அறைக்குள் போனதும் கூண்டுப்புலியாய் அங்கும் இங்கும் சிலமுறை நடை பழகியவர்

“அங்கே விழாவுக்கு அபராஜிதன் போவானாக இருந்தால் அங்கே அடீராவின் லோகோவோ பெயரோ, வளங்களோ எதையும் உபயோகிக்க கூடாதுன்னு அவனுக்கு ஒரு ஈமெயில் அனுப்பும்மா. If he wants to do this, fine, but he’s on his own in this”

என்று கோபமாய் சொல்ல நிருவும் அவசரமாய் அவர் சொன்னதை டைப் செய்து அவரது இமெயிலில் இருந்து அபய்க்கு அனுப்பி வைத்தாள்.

“அப்படியே விழா கமிட்டிக்கு இவன் அடீராவின் பிரதிநிதி இல்லை என்று ஈமெயில் பண்ணணும். சரியான பின்னணி இல்லாமல் இவனை உள்ளேயே சேர்த்துக்க மாட்டாங்க. அப்படியே உள்ளே போயிட்டாலும் அங்கே போய் இவன் பண்ணும் கூத்துக்கு அடீரா பொறுப்பாக முடியாது”

நிருவின் விரல்கள் ஒரு முறை வேலை நிறுத்தம் செய்ய அவளை அறியாமல் ஆதவனை நிமிர்ந்து பார்த்தாள். இது அநியாயம் பெரிய பாஸ்

ஆதவனே அதை நினைத்தாரோ என்னமோ அடுத்த செக்கன்ட் “இல்லை வேணாம்.. அனுப்ப வேணாம்” எனவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது

மனதில் பெருங்கலக்கத்தோடு வீட்டிலும் நகத்தை கடித்துக்கொண்டிருந்தாள் நிரு.

யார் உதவியும் இல்லாமல் அங்கே போய் என்ன செய்வான்? இனிமேல் திரும்ப கம்பனிக்கு வருவானா?

ஆதவன் சாரை தனியாய் சந்தித்து கன்வின்ஸ் செய்திருந்தால் அவர் கன்வின்ஸ் ஆகியிருப்பார் ..அவனுக்கும் பொறுமை இல்ல..

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்து கொள்ள இவருக்கும் மனதில்லை..

ப்ச்.. உண்மையிலேயே போய்விடுவானோ.. அவனுக்கு இங்கே மரியாதை இல்லை என்று அவளே நினைத்திருக்கிறாள், அப்படியிருக்க அவன் இங்கிருந்து போவது ஏன் இப்படி மனதை அறுக்கிறது என்று அப்போதெல்லாம் அவளுக்கு ஆராய நேரமில்லை

நினைவு தெரிந்ததில் இருந்து பரிட்சயமான இடம் திடீரென அபயின் இன்மையால் அன்னியமாவது போலிருந்தது. மனம் படபடத்து போனது. போன் பேசுவது அவர்களுக்குள் வழக்கமே இல்லை. ஒற்றை வார்த்தை அதுவும் அவனே தேவைப்பட்டால் வெகு அரிதாய் குறுஞ்செய்தி அனுப்புவான். ஆக எதுவும் தெரியாமல் நிரு மண்டையை உடைத்துக்கொண்டிருக்க

அபய் அடுத்த நாள் வரவில்லை.

அட் காராதீவு என்று ஒரு மெசேஜ் மட்டும் அவளுக்கு வந்தது.

எல்லாம் நன்றாக போக வாழ்த்துக்கள் என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பி வைத்தவளுக்கு அழுகையாய் வந்தது.

கான்டீனுக்கு போகவே பிடிக்கவில்லை.

போனாலும் சாப்பாடு இறங்க மாட்டேன் என்றது. அபய் என்ன செய்கிறான்? திரும்பி வருவானா? அப்படியே போய்விடுவானா? என்று குழப்பத்தில் கண்ணில் நினைக்கும் போதெல்லாம் நீர் கட்டிக்கொள்ள அவள் தவித்துப்போனாள்

இரண்டு நாள் வீட்டில் இருந்து சான்ட்விச், வ்ராப் என்று எதையோ எடுத்து வந்து தன்னுடைய இடத்திலேயே சாப்பிட்டு விட்டு காலம் கடத்தியவள் அடுத்த வாரம் வேறு வழியின்றி கான்டீனுக்கு போனாள்

எப்போதும் அமரும் டேபிளில் தனியாக அமர்வதே கடினமாய் இருக்க தன் மனம் போகும் போக்கை நினைக்க அவளுக்கே பயம் வந்தது.

“என் மனதில் அபய்க்கு நட்பைக்கடந்த உணர்வுகள் வந்து விட்டனவா?”

“ச்சே ச்சே அவர் என் ப்ரிய சீனியர்..”

“ப்ரிய சீனியர் என்றால் எங்கிருந்தாலும் வாழ்க என்று நீ மகிழ வேண்டும்..இப்படி என் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க கூடாதே..”

“அவன் என்னதான் இருந்தாலும் ஆதவன் சாரின் மகன். அந்தப்பக்கமும் பெரும் பிசினஸ் குடும்பத்தின் மூத்த பேரன்.. நான் எங்கோ ஒரு மூலையில் காம்பவுண்டில் ஒற்றை அறை வீட்டில் வசிக்கும் சின்ன பெண்.. நான் போய் அப்படியெல்லாம் அவனை நினைப்பேனா?”

“பின்னே உன் கண் ஏன் கலங்குகிறது?”

“அது ஒன்றும் அபய்ண்ணாவுக்காய் இல்லை..” இப்போதெல்லாம் மிக அரிதாயே வெளிப்படும் அந்த அண்ணா இப்போது தன் மேல் அவளுக்கே சந்தேகம் வந்ததும் வரிக்கு வரி கூடவே முளைத்து அவளுக்கே அவளை நிரூபிக்க முயன்றது அவள் மனம்..

“என்ன மேடம் தனியா சாப்பிடுறீங்க.. வழக்கமா பாடிகார்ட் கூட தானே வருவீங்க..”

பிரதீப்!

சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவி வந்தவன் கண்ணில் நிரு பட்டிருக்கிறாள். அவன் பேச்சு கொடுத்த அருவருப்பில் என்ன பேசுகிறாய் என்பது போல அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு அதற்கு மேல் அங்கிருக்க பிடிக்காமல் பெட்டியை மூடி எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

“மேடம் கூட பேசக்கூட பெரிய குடும்ப வாரிசா இருக்கணுமோ? டம்மி வாரிசா இருந்தாலும் பரவாயில்லை போலயே.. சின்னப்பொண்ணா இருந்தாலும் காரியமா தான் இருக்கீங்க மேடம். ஏன் இந்த மிடில் கிளாஸ் பசங்கல்லாம் உங்க கண்ணுக்கு தெரியமாட்டோமோ?”

இப்படிப்பட்ட வார்த்தைகள் அவளை நோக்கி வீசப்படுவது இதுவே முதன்முறை! அதிர்ந்து உறைந்து ஒருகணம் அப்படியே நின்று விட்டவள் பிறகு சுதாகரித்துக்கொண்டு அவனை ஏறிட்டாள்.

“சின்னப்பொண்ணுதானே.. கேட்க யாரும் இல்லை.. சோ என்ன வேணா பேசிட்டு தப்பிச்சிடலாம்னு நினைக்கிறீங்கல்ல..? HR கிட்ட மீதியை பேசிக்கோங்க” என்றவள் அவன் சொல்ல வந்ததை கூட கேட்காமல் விடுவிடுவென HR பிரிவின் அறைக்குள் நுழைந்து தலைவரிடம் தன் பிரச்சனையை சொன்னாள். அதுவும் அவன் பயன்படுத்திய அநாகரிக வார்த்தைகளை தவிர்த்து தேவையில்லாமல் தன்னை தொல்லை செய்வதாய் மட்டும் சொன்னவள் வேலைக்கு திரும்பி விட்டாள்.

எது அவளை செலுத்தியது? அவளை பற்றி பேசியதா? இல்லை அபயை டம்மி என்றதா? அவள் எதையும் ஆராயவில்லை

மறுநாள் அவளது முறையீட்டை விசாரித்ததாகவும் பிரதீப்பின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் முதல் தடவை என்பதால் ஒரு மாத சம்பளம் அபராதம் மற்றும் முதலாவது எச்சரிக்கை கடிதத்துடன் அவனிடம் இருந்து மன்னிப்பு கடிதமும் பெற்றதாக HR இடமிருந்து தகவல் வந்தது. அவளுக்கு இந்த நடவடிக்கைள் மீது ஏதேனும் கருத்து இருந்தால் நேரில் சந்திக்குமாறும் சொல்லியிருந்தார்கள். இந்த கொட்டு போதும்.. தோளைக்குலுக்கி விட்டு அதை அத்தோடு மறந்து விட்டாள் நிரு.. அவள் மனம் தான் வேறு பிரச்சனைகளில் பாரமாகிவிட்டதே..
 
Last edited by a moderator:

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
போனவன் போனவன் தான்.. என்ன செய்கிறான் ஏது செய்கிறான் எந்த தகவலுமே இல்லை..பிடிக்காத அலுவலகத்தில் தனக்குப்பின்னால் வால் பிடிக்கும் நிருவிடம் சொல்ல அவனுக்கு என்ன இருக்கப்போகிறது என்று அவளுக்கு தன்னிரக்கம் வேறு..

இப்படியே அழுத மனமும் பிரிவுத்துயருமாய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடி மறைய அபயிடம் இருந்து வாட்சப் செய்தி வந்தது.

நாளை இரவு விழா நடக்க இருப்பதாகவும் அவள் அதைப்பார்க்க வர விரும்புகிறாளா? என்றும் கேட்டிருந்தான்.

முதலில் ஒண்ணும் தேவையில்லை.. காலேஜ் இருக்கு என்று கடுப்பாய் பதில் எழுதத்தான் நினைத்தாள் ஆனால் விரல்கள் அவைகளின் போக்கில்

“ஆபீசில் யாருக்கும் தெரிந்தால் எனக்கு சங்கு தான்” என்று எழுதி அவளது மறைமுக சம்மதத்தை சொல்லி விட்டன.

அவள் இதுவரை இப்படி தனியாக போனதில்லை, அதுவும் அபயுடன்? என்ன தைரியத்தில் சம்மதம் சொன்னோம்? யாருக்காவது தெரிய வந்தால் என்ன ஆகும்? எதுவும் அவளது கவனத்துக்கே வரவில்லை.. வழக்கமாய் கடைக்கு கூட தனியாய் அழைத்து போகாதவன், பொது இடங்களில் பேசக்கூட செய்யாதவனும் தானே அழைத்திருக்கிறான்

“அதெல்லாம் யாருக்கும் தெரியாது. நாளை மாலை நாலு மணிக்கு என்னோட பிரன்ட்ஸ் கதிர், வினயா வந்து உன்னை காராதீவுக்கு கூட்டிட்டு வருவாங்க ஒகே தானே, பொண்ணுங்களுக்கு தனியா தங்க இடம் இல்லாம் இருக்கு. அதைப்பற்றி பயமே இல்லை” என்று கேட்டான்.

அதெல்லாம் சரிபார்க்காமல் அழைத்தே இருக்க மாட்டான் என்று அவளுக்கும் தெரியுமே.. சம்மதம் சொல்லிவிட்டு வினயாவின் தொலை பேசி விபரத்தை தெரிந்து கொண்டவளுக்கும் மனம் முழுக்க பட்டாம் பூச்சி பறந்தது.

அபயை பார்க்க போகிறோம்..

அவனே அவளை விழாவுக்கு அழைத்திருக்கிறான்..

பொறு மனமே பொறு..

பாரு பாட்டிக்கும் ஜானு அக்காவுக்கும் என்ன சொல்ல?

ஆபீஸ் விஷயம் என்று சொல்லவே முடியாதே.. யோசித்து காவ்யா குடும்பத்துடன் டூர் போவதாக பொய் சொல்லிவிட்டவள் காவ்யாவுக்கும் அலுவலக விஷயமாய் காராதீவு போவதாக பொய்யும் கொஞ்சம் உண்மையுமாய் விஷயம் சொல்லி விட்டாள். அவளை தேடி காவ்யா பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் அவளது குட்டு உடைந்து விடுமே..

இப்படி பொய் மேல் பொய்யாய் சொல்லி சமாளித்து விட்டு, விழாவுக்கு அணிந்து கொள்ள தனக்கு பிரியமான கருநீல சோளியை எடுத்து தயாராக வைத்தவளுக்கு அன்றைக்கு படபடப்பில் தூக்கம் வரவே இல்லை.

வினயா காலையே போன் செய்து பேசி வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிலேயே அவளை பிக்கப் செய்து கொள்வதாக சொல்லிவிட்டாள். சொன்ன இடத்தில் சொன்ன நேரத்துக்கு கதிர் மற்றும் வினயாவை சந்தித்த போது அவர்கள் இனிதாகவே அவளை எதிர்கொண்டு அறிமுகம் செய்து கொண்டவர்கள் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

பயமும், மறுபக்கம் என்ன இருக்கும் என்று தெரியாத படபடப்புமாய் இருந்தவளை முன்னால் இருந்த கணவன் மனைவி தங்கள் குறும்பு பேச்சிலும் செல்ல சண்டைகளிலும் இணைத்துக்கொண்டு சாதாரணமாய் மாற்றி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். பின்னால் போகும் அலைகளை பார்த்தபடியே இருந்தவளுக்கு கதிரின் சிரிப்புச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க இவனானால் அபயை நண்பன் என்கிறான். அவன் சிரிக்கவே கூலி கேட்பானே.. எப்படி ஓட்டும்? என்று தான் யோசனை ஓடிற்று.. அது அப்படியே “ உங்களுக்கு அபய்ண்ணாவை எவ்ளோ காலமா தெரியும்?” என்றும் வந்து விழுந்து விட

“எதே.. அபய்... அண்ணாவா?” என்று நெஞ்சில் கைவைத்தான் கதிர்.

கதிரின் வாயை பொத்தி விட்டு கூடவே அவனுக்கு ஒரு அடியையும் போட்ட வினயா “நீ கண்டுக்காத அவன் இப்படித்தான் அப்பப்ப லூசா ரியாக்ட் பண்ணுவான்” என்று சமாதானமாய் சொல்லிவிட்டு அவர்கள் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து அபயக்கு நண்பர்கள் என்று விபரம் சொன்னாள்.

லேசாய் முகம் சிவந்தாலும் புரிந்தது போல காண்பிக்காமலே இருந்து விட்டாள் நிரு.

“நான் தனியா தான் இன்னிக்கு வர்றதா இருந்தது.. உன்னை நான் தனியா வந்து கூப்பிட்டா பயந்துடுவியாம்..இவளையும் கூட்டிட்டு வந்து தான் உன்னை கூப்பிடணுமாம். சார் உத்தரவு” என்ற கதிர் “ஏன் என்னை பார்த்தா பயம் வருதா உனக்கு?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்

அவன் கேட்ட விதத்தில் சிரிப்புத்தான் வந்தது. இப்படி ஒன்றரை மணிநேர கப்பல் பயணத்தை நிமிடங்களாய் அந்த தம்பதியினர் மாற்ற எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருந்தவளுக்கு காரா தீவின் கரையில் கப்பல் தரை தட்டியபோது மீண்டும் படபடவென்று வந்தது.

கடந்த ஒரு வருடமாய் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பேசி பழகியவன் தான் அவன். ஆனால் இன்றைக்கு என்னமோ தயக்கமும் படபடப்பும் அவளை தின்றது

காராதேவு இங்கே இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று ஆச்சர்யப்பட வைக்கும் இடம் தான். பலர் புலம் பெயர்ந்து விட்ட பிறகு முக்கால் வாசி இடம் காடாய் இருந்தது. இன்றைய விழாவுக்காய் கரை முழுவதும் வருபவர்களை அலங்காரத்தையும் தாண்டி ஆளில்லா காடுகள் தான் நேரடியாய் மனதில் பதிந்தது உண்மை. எல்லாவற்றையும் தாண்டி விழிகளை சுழற்றி தேடியபடி கரையில் இறங்கி நின்றாள் அவள். தேடும் நிருவின் கண்களை ஏமாற்றாமல் அபராஜிதன் புன்னகைத்தபடியே வந்து கொண்டிருந்தான்.

தீவில் நன்றாக அலைந்து திரிந்திருப்பான் போலும். அவனது பிரவுன் நிறம் பளபளத்துக்கொண்டிருந்தது. முகத்திலும் கண்களிலும் கூட அவனிடம் இது வரை காணாத புத்துணர்வு தெரிய அவளையுமறியாமல் அவனையே பார்த்திருந்தாள் நிரு.

“நிருதி.. உன் “அண்ணன்” வந்துட்டான்” என்று விரல்களால் அடைப்புக்குறி போட்டு சொன்ன கதிர் பிறகு “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு தான்டி படிச்சேன். அது அண்ணலா அண்ணனா? பாவம் கம்பரே கன்பியூஸ் ஆகிட்டார்” என்று வினயாவின் காதை கடித்துக்கொண்டே நகர்வதும் அவளும் வெடித்து சிரிப்பதும் அபய் காதில் விழுந்ததோ தெரியவில்லை.. நிருவுக்கு நம்மை கிண்டல் செய்கிறார்கள் என்ற நினைவில் முகம் சிவந்தே விட்டது

“சும்மா வம்பளக்காம போய் பிரஷ் ஆகிட்டு வாங்க” என்று அவர்கள் இருவரையும் விரட்டி விட்டு அவளிடம் வந்தவன் “வாங்க மேடம்.. நேரா விழா நடக்கற இடத்துக்கே போய்டலாம், அங்கே மடம் போல பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும். வேணும்னா பிரெஷ் அப் ஆகிக்க” என்று சின்ன சிரிப்போடு அவன் நடக்க அவனது பைக் அப்போது தான் நிருவின் கண்ணில் பட்டது

ஆஹா பைக்கில் போகப்போகிறோமா? அவளுக்கு மனமெங்கும் பதட்டமும் இனம்புரியா பயமும்..

அவனுக்கு அந்த தயக்கங்கள் ஏதும் இருப்பது போலில்லை.. அப்புறம் எப்படி இருக்கு அ...டீ...ரா? ஒவ்வொரு இழுத்தாய் கிண்டலாய் அழுத்தியவன் கேட்க

“உங்கப்பா கொலைக்காண்டுல இருக்கார்” என்று மெதுவாய் சொன்னாள்

“அது தெரிஞ்சது தானே.. புது விஷயமா சொல்லு” என்று அவன் பதிலுக்கு விழிகளை உருட்ட

சிரித்தவளுக்கு ஏனோ பேச்சு வரவே மாட்டேன் என்று அடம் செய்தது.

“என்ன நிதி உன் வாய் நிக்கவே நிக்காதே.. இன்னிக்கு என்ன ஆச்சு?” அவனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்.

“அப்படியெல்லாம் இல்லை.. புது இடத்துக்கு வந்திருக்கேனா..கொஞ்சம் நர்வசா இருக்கு அதான்..” என்று சமாளித்தாள்

எல்லாம் ஒகே தானே?”

ஹ்ம்ம்”

பைக்கில் அவனுக்கு பின்னே அமர்ந்து கொண்டு அந்த மரங்கள் அடர்ந்த பாதை வழியே சென்றது ஐந்து நிமிடம் கூட இருக்காது. ஆனால் மனதில் இன்னும் அக்கணம் இறக்காமலே உயிர்த்திருக்கிறது.

கோவிலோடு கூடிய பிரமாண்டமான திடலில் தான் விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இடப்பக்கமாய் பிரமாண்டமான ஸ்டேஜ் போடப்பட்டிருந்தது. பெண்கள் மடத்திலேயே லேசாய் முகம் கழுவி தன்னை திருத்திக்கொண்டு வந்தவள் அபய் காட்டி விட்டு போன முன் பக்கமிருந்து ஐந்தாவது வரிசையில் மரக்கூடல் பக்கமாய் இருந்த இடப்பக்க எல்லையில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருக்க அபய் ஒரு கரும் பச்சையில் குர்தாவுக்கு மாறி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்

சுற்றிலும் இருள். வானத்தில் நிலா.. ஆங்காங்கே பிரமாண்டமான மரங்கள் திடல் நிறைய வரிசை வரிசையாய் நாற்காலிகளில் மக்கள், சுற்றிலும் ஸ்பான்சர்களின் பொருட்களின் பரபரப்பான விற்பனை என ஜேஜே என்று இருந்தாலும் மனதில் என்னமோ அவர்கள் இருவரும் மட்டுமே அங்கே அமர்ந்திருப்பது போன்ற பிரமையில் கைகளை விரித்து கோர்த்துக்கொண்டிருந்தாள் நிரு.

அபராஜிதன் தளர்வாய் இலகுவாய் இருந்தான். டீனேஜ் இளைஞர்கள் அந்த வழியாய் கடக்கும் போதெல்லாம் அவனிடம் அண்ணா என்று அழைத்து பேசி போனதையும் இவன் புன் சிரிப்போடு பதில் சொன்னதையும் கவனித்திருந்தது அவள் விழிகள்...

அங்கே அலுவலகத்தில் மட்டும் இந்த முகம் நாலு கொலை செய்து விட்டு வந்தது போல ஏன் இறுகிப்போகிறது? அடக்க முடியாமல் சிரிப்பு வர மறுபக்கம் திரும்பி சமாளித்து விட்டாள்

சற்று நேரத்திலேயே அவன் ஏன் இவ்வளவு நாள் தங்கியிருந்தான் என்ற காரணம் மேடையில் வர அவனுக்கு கூட அவ்வளவு பெருமை இருந்திருக்குமோ என்னமோ இவள் மேகங்களின் மேலே தான் அமர்ந்திருந்தாள்.

கண்காட்சியாக இல்லாமல் அந்த ஊரில் நெசவு செய்யப்பட்ட ஆடைகளை அவர்கள் நகரில் பார்க்கும் பாஷன் பரேட்கள் போலில்லாமல் வெகு சின்னதான மாற்றங்களுடன் சுடிதார், மாக்ஸி உடைகள், குர்தா வகைகள் என எளிதாய் மாற்றி ஊர் இளைஞர்களை வைத்தே ராம்ப் வாக் நடத்தியிருந்தான். அதெல்லாம் மேடையிலேயே வைத்து ஆரவாரமான ஏலத்தில் விற்றுத்தீர்ந்தது மிகப்பெரிய ஹைலைட். எல்லாவற்றுக்கும் மேலாக மாநிலத்தின் மிகப்பெரும் சேலை கடையின் உரிமையாளர் தங்கள் கடையில் இனி காராதீவு என்ற பெயரில் நிரந்தரமாகவே இந்த ஊரின் தயாரிப்புக்களை விற்கப்போவதாக சொன்னது மிகப்பெரும் வரவேற்பை கொடுத்தது. அப்படியானால் இனி அந்த ஊருக்கு நிரந்தர வருமான வாய்ப்பல்லவா?

எப்படி? என்பது போல அவன் புறம் திரும்பி விழிகளை உயர்த்தியவளிடம்

தன்னுடைய பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி அந்த ப்ராடக்ட்மா நானு.. இந்த நாட்டில் பாஷன் துறையில் என்னுடைய ஜூனியர் சீனியர்கள் இல்லாத இடமே இருக்காது. எனக்கு எவன் கம்பனியும் முகவரி கொடுக்க தேவையில்லை.. என்று கண்சிமிட்டினான் அபய்..

அந்த கண்சிமிட்டலில் தன்னை தொலைத்தவள் ஒருகணம் அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள். நீ ஏன் அங்கே வந்தாய்.. எட்டாத உயரத்தில் இருந்து கொண்டு என்னை ஏன் திருடப்பார்க்கிறாய். உனக்கும் எனக்கும் எப்படிப்பொருந்தும்.. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..

சற்று நேரம் தொடர்ந்த கலைநிகழ்வுகளை பார்த்திருந்தவள் திரும்பி

அபய்ண்ணா என்று அழைத்தாள்..அழைத்த நாவில் உருவான கசப்பினை அவளாலேயே தாங்க முடியவில்லை.

ம்ம்ம் சொல்லும்மா.. “

நெஞ்சில் யாரோ வெடி வைத்து விட்டது போல அதிர்ந்து விழிகளை வெட்டியவளை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.. மேடையே கவனமாய் இருந்தான்.

அவனா பேசினான்? நம் காதில் தான் வேறேதோ கேட்டதோ?

அபய்ண்ணா.. மீண்டும் அழைத்து பரீட்சித்து பார்த்தாள்

“கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லும்மா” பாசம் வழிந்தது குரலில்..இங்கே இவள் காதிலோ ஈயம் உருகி வழிந்தது.

அவளின் குழப்பம் எல்லாம் மறந்தது..இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி மறந்தது..நோ நோ நோ அவன் எப்படி அவளை இப்படி அழைக்கலாம் என்ற கேள்வி மட்டும் பெரிதாக

என்ன புதுசா அம்மா சொல்றீங்க என்று அலறினாள் நிரு.

“தங்கச்சின்னா பாசமா இருக்கணும், பிரன்டுன்னா மரியாதை கொடுக்கணும். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். எப்படி?”

அவனையே வெறித்தாள் நிரு. “தங்கச்சியே இல்லை..எனக்கு அந்த பீலிங்கெல்லாம் தெரியாதுன்னு அப்போ சொன்னீங்க?”

“அது அப்போம்மா.. இப்போ எனக்கு ஏகப்பட்ட தங்கச்சிகள்.. நீ என்னை அபய்ண்ணான்னு கூப்பிடும் போது அவங்க ஞாபகம் தான் வருது..அதனால இயல்பாவே நான் அண்ணா மோடுக்கு போய்டறேன்..” சர்வ சாதாரணமாய் கையில் நிரு வைத்திருந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டபடியே அவன் சொல்ல

“சகிக்கலை” காதை பெட்ரோல் கொண்டு கழுவ வேண்டும் பொல பொலவென்று வந்தது நிருவுக்கு .

“ஏன் ஒரு ஆணும் பெண்ணும் அண்ணா தங்கச்சியா தான் இருக்கணுமா? சும்மால்லாம் பழக முடியாதா?” அவளையும் மீறிக்கொண்டு குரல் ஏக்கமாய் வர

“அண்ணாவை கொண்டு வந்ததே நீங்க தானேம்மா? உங்களுக்கு உங்க மேல பயமா? சொசைட்டி மேல பயமா இல்ல என் மேல பயமா? உங்களுக்கு தான் தெரியும்” அவன் பதிலோ வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று அழைக்க வெடித்தே விட்டாள் நிரு

“ஐயோ அம்மா சொல்லாதிங்க.. சத்தியமா கான்ட் ஆவுது”

“கான்ட் ஆவுதுல்ல?..இனிமே அண்ணான்னு கூப்பிட்டன்னா நானும் உன்னை தங்கச்சி வாங்க போங்கன்னு தான் கூப்பிடுவேன்..நீ எனக்கு கொடுக்கற பீலிங்கை தானே நானும் திரும்ப கொடுக்க முடியும்?” லேசான சிரிப்பு இப்போது குரலில் வெளிப்பட்டது

“நா அப்படியே கூப்பிட்டு பழகிட்டேனே..” என்று முணுமுணுத்தாள் நிரு

“சரி விடு. நானும் தங்கச்சின்னே கூப்பிட்டு பழகிக்கிறேன்..” என்றான் அவனும் விடாக்கண்டனாய்

“வயசுக்கு மரியாதை தரணும்ல..”

“அதே வயசுக்கு நானும் மரியாதை கொடுத்தா தங்கச்சி தான் எனக்கும்..”

கொஞ்ச நேரம் அவனை திரும்பியும் பாராமல் மேடையில் ஆடிய குழந்தைகளையே மிக முக்கியமாய் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நிரு.

“நித்தி..மாகி நூடில்ஸ் கப் வாங்கி தரவாம்மா”

அவளது பொறுமை பறந்தே விட்டது.. “மாகி வேணும் ஆனா இந்த அம்மா வேண்டாம்” அவள் பல்லை கடிக்க

“ஏன்மா”

“ஐயோ அப்படி சொல்லாதிங்களேன்.”. காதை பொத்திக்கொண்டே அவனை முறைத்தாள் நிரு.

“நீ அபய்ண்ணாவை நிறுத்தற வரை நானும் இதை நிறுத்த மாட்டேன்” இப்போது அவன் முகம் முழுக்க குறும்புச்சிரிப்பு விரவிக்கிடந்தது.

கோபமும் கூச்சமுமாய் கடைக்கண்ணால் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள் நிரு.

அவளுக்கு நேரெதிராய் உல்லாசமாய் அமர்ந்திருந்தான் அவன்.

ஒரு முடிவோட தான் இன்னிக்கு வந்திருக்கான் இவன்

“அண்ணாவை விட்டாலும் பெயர் சொல்ல எல்லாம் எனக்கு வரமாட்டேங்குது..” என்று ஒரு வழியாய் நிரு சரணடைய

அத்தனை நேரமும் அடக்கி வைத்த சிரிப்பை மொத்தமாய் கொட்டி வாய் விட்டு சிரித்தவன் “ வரும் வரை ஒண்ணும் சொல்லாத” என்று இலகுவாகவே முடித்து விட்டான்.

என்னமோ ஒரு பாவனையை உடைத்தத்தில் ஏற்பட்ட விடுதலையுணர்வு தான் இத்தனை நாளும் மூச்சு முட்டி கிடந்ததை சொல்லிப்போக இருளில் லேசாய் புன்னகைத்தபடி நேராய் பார்த்திருந்தாள் நிரு.
 
Last edited by a moderator:
New member
Messages
15
Reaction score
13
Points
3
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ush. நன்றி அப்டேட் தந்ததுக்கு ❤️
 
New member
Messages
15
Reaction score
9
Points
3
பயங்கரமா போகுது ஃப்ளாஷ்பேக். அவன் முன்னாடி எபிசோட்களில் சொன்ன நீ தான் அவனை லவ் பண்றேன்னு சொன்னியே அனி தான்னு இருந்தேன் இந்த பிரதீப் சொல்லி மனசை உடைச்சிடாதீங்க, ஒரு வழியாக அண்ணாவை வழி அனுப்பிட்டான். இங்க இருந்து தான் இந்த அர்பன் காட்டன் டிரஸ் கிஃப்ட் ஆரம்பிச்சதா, அப்பறம் அண்ணா ல இருந்து RW ஆனது எப்பவோ, அந்த RW வை எப்போ ரிவீல் பண்ணுவீங்க. Btw உன்னை பத்தி நீயே யோசிக்காத போது மத்தவங்க எப்படி யோசிப்பாங்க என்பது எல்லாம் அநியாயத்துக்கு நியாமான கேள்வியா தான் இருக்கு. என்ன பண்ண sometimes logic will not play a role against Graditude la. நிரு பாவம் தான்.
 
Last edited:
New member
Messages
15
Reaction score
7
Points
3
போனவன் போனவன் தான்.. என்ன செய்கிறான் ஏது செய்கிறான் எந்த தகவலுமே இல்லை..பிடிக்காத அலுவலகத்தில் தனக்குப்பின்னால் வால் பிடிக்கும் நிருவிடம் சொல்ல அவனுக்கு என்ன இருக்கப்போகிறது என்று அவளுக்கு தன்னிரக்கம் வேறு..

இப்படியே அழுத மனமும் பிரிவுத்துயருமாய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடி மறைய அபயிடம் இருந்து வாட்சப் செய்தி வந்தது.

நாளை இரவு விழா நடக்க இருப்பதாகவும் அவள் அதைப்பார்க்க வர விரும்புகிறாளா? என்றும் கேட்டிருந்தான்.

முதலில் ஒண்ணும் தேவையில்லை.. காலேஜ் இருக்கு என்று கடுப்பாய் பதில் எழுதத்தான் நினைத்தாள் ஆனால் விரல்கள் அவைகளின் போக்கில்

“ஆபீசில் யாருக்கும் தெரிந்தால் எனக்கு சங்கு தான்” என்று எழுதி அவளது மறைமுக சம்மதத்தை சொல்லி விட்டன.

அவள் இதுவரை இப்படி தனியாக போனதில்லை, அதுவும் அபயுடன்? என்ன தைரியத்தில் சம்மதம் சொன்னோம்? யாருக்காவது தெரிய வந்தால் என்ன ஆகும்? எதுவும் அவளது கவனத்துக்கே வரவில்லை.. வழக்கமாய் கடைக்கு கூட தனியாய் அழைத்து போகாதவன், பொது இடங்களில் பேசக்கூட செய்யாதவனும் தானே அழைத்திருக்கிறான்

“அதெல்லாம் யாருக்கும் தெரியாது. நாளை மாலை நாலு மணிக்கு என்னோட பிரன்ட்ஸ் கதிர், வினயா வந்து உன்னை காராதீவுக்கு கூட்டிட்டு வருவாங்க ஒகே தானே, பொண்ணுங்களுக்கு தனியா தங்க இடம் இல்லாம் இருக்கு. அதைப்பற்றி பயமே இல்லை” என்று கேட்டான்.

அதெல்லாம் சரிபார்க்காமல் அழைத்தே இருக்க மாட்டான் என்று அவளுக்கும் தெரியுமே.. சம்மதம் சொல்லிவிட்டு வினயாவின் தொலை பேசி விபரத்தை தெரிந்து கொண்டவளுக்கும் மனம் முழுக்க பட்டாம் பூச்சி பறந்தது.

அபயை பார்க்க போகிறோம்..

அவனே அவளை விழாவுக்கு அழைத்திருக்கிறான்..

பொறு மனமே பொறு..

பாரு பாட்டிக்கும் ஜானு அக்காவுக்கும் என்ன சொல்ல?

ஆபீஸ் விஷயம் என்று சொல்லவே முடியாதே.. யோசித்து காவ்யா குடும்பத்துடன் டூர் போவதாக பொய் சொல்லிவிட்டவள் காவ்யாவுக்கும் அலுவலக விஷயமாய் காராதீவு போவதாக பொய்யும் கொஞ்சம் உண்மையுமாய் விஷயம் சொல்லி விட்டாள். அவளை தேடி காவ்யா பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் அவளது குட்டு உடைந்து விடுமே..

இப்படி பொய் மேல் பொய்யாய் சொல்லி சமாளித்து விட்டு, விழாவுக்கு அணிந்து கொள்ள தனக்கு பிரியமான கருநீல சோளியை எடுத்து தயாராக வைத்தவளுக்கு அன்றைக்கு படபடப்பில் தூக்கம் வரவே இல்லை.

வினயா காலையே போன் செய்து பேசி வீட்டுக்கு அருகில் இருக்கும் பஸ் ஸ்டாப்பிலேயே அவளை பிக்கப் செய்து கொள்வதாக சொல்லிவிட்டாள். சொன்ன இடத்தில் சொன்ன நேரத்துக்கு கதிர் மற்றும் வினயாவை சந்தித்த போது அவர்கள் இனிதாகவே அவளை எதிர்கொண்டு அறிமுகம் செய்து கொண்டவர்கள் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

பயமும், மறுபக்கம் என்ன இருக்கும் என்று தெரியாத படபடப்புமாய் இருந்தவளை முன்னால் இருந்த கணவன் மனைவி தங்கள் குறும்பு பேச்சிலும் செல்ல சண்டைகளிலும் இணைத்துக்கொண்டு சாதாரணமாய் மாற்றி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். பின்னால் போகும் அலைகளை பார்த்தபடியே இருந்தவளுக்கு கதிரின் சிரிப்புச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க இவனானால் அபயை நண்பன் என்கிறான். அவன் சிரிக்கவே கூலி கேட்பானே.. எப்படி ஓட்டும்? என்று தான் யோசனை ஓடிற்று.. அது அப்படியே “ உங்களுக்கு அபய்ண்ணாவை எவ்ளோ காலமா தெரியும்?” என்றும் வந்து விழுந்து விட

“எதே.. அபய்... அண்ணாவா?” என்று நெஞ்சில் கைவைத்தான் கதிர்.

கதிரின் வாயை பொத்தி விட்டு கூடவே அவனுக்கு ஒரு அடியையும் போட்ட வினயா “நீ கண்டுக்காத அவன் இப்படித்தான் அப்பப்ப லூசா ரியாக்ட் பண்ணுவான்” என்று சமாதானமாய் சொல்லிவிட்டு அவர்கள் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து அபயக்கு நண்பர்கள் என்று விபரம் சொன்னாள்.

லேசாய் முகம் சிவந்தாலும் புரிந்தது போல காண்பிக்காமலே இருந்து விட்டாள் நிரு.

“நான் தனியா தான் இன்னிக்கு வர்றதா இருந்தது.. உன்னை நான் தனியா வந்து கூப்பிட்டா பயந்துடுவியாம்..இவளையும் கூட்டிட்டு வந்து தான் உன்னை கூப்பிடணுமாம். சார் உத்தரவு” என்ற கதிர் “ஏன் என்னை பார்த்தா பயம் வருதா உனக்கு?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்

அவன் கேட்ட விதத்தில் சிரிப்புத்தான் வந்தது. இப்படி ஒன்றரை மணிநேர கப்பல் பயணத்தை நிமிடங்களாய் அந்த தம்பதியினர் மாற்ற எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டிருந்தவளுக்கு காரா தீவின் கரையில் கப்பல் தரை தட்டியபோது மீண்டும் படபடவென்று வந்தது.

கடந்த ஒரு வருடமாய் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பேசி பழகியவன் தான் அவன். ஆனால் இன்றைக்கு என்னமோ தயக்கமும் படபடப்பும் அவளை தின்றது

காராதேவு இங்கே இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று ஆச்சர்யப்பட வைக்கும் இடம் தான். பலர் புலம் பெயர்ந்து விட்ட பிறகு முக்கால் வாசி இடம் காடாய் இருந்தது. இன்றைய விழாவுக்காய் கரை முழுவதும் வருபவர்களை அலங்காரத்தையும் தாண்டி ஆளில்லா காடுகள் தான் நேரடியாய் மனதில் பதிந்தது உண்மை. எல்லாவற்றையும் தாண்டி விழிகளை சுழற்றி தேடியபடி கரையில் இறங்கி நின்றாள் அவள். தேடும் நிருவின் கண்களை ஏமாற்றாமல் அபராஜிதன் புன்னகைத்தபடியே வந்து கொண்டிருந்தான்.

தீவில் நன்றாக அலைந்து திரிந்திருப்பான் போலும். அவனது பிரவுன் நிறம் பளபளத்துக்கொண்டிருந்தது. முகத்திலும் கண்களிலும் கூட அவனிடம் இது வரை காணாத புத்துணர்வு தெரிய அவளையுமறியாமல் அவனையே பார்த்திருந்தாள் நிரு.

“நிருதி.. உன் “அண்ணன்” வந்துட்டான்” என்று விரல்களால் அடைப்புக்குறி போட்டு சொன்ன கதிர் பிறகு “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்னு தான்டி படிச்சேன். அது அண்ணலா அண்ணனா? பாவம் கம்பரே கன்பியூஸ் ஆகிட்டார்” என்று வினயாவின் காதை கடித்துக்கொண்டே நகர்வதும் அவளும் வெடித்து சிரிப்பதும் அபய் காதில் விழுந்ததோ தெரியவில்லை.. நிருவுக்கு நம்மை கிண்டல் செய்கிறார்கள் என்ற நினைவில் முகம் சிவந்தே விட்டது

“சும்மா வம்பளக்காம போய் பிரஷ் ஆகிட்டு வாங்க” என்று அவர்கள் இருவரையும் விரட்டி விட்டு அவளிடம் வந்தவன் “வாங்க மேடம்.. நேரா விழா நடக்கற இடத்துக்கே போய்டலாம், அங்கே மடம் போல பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும். வேணும்னா பிரெஷ் அப் ஆகிக்க” என்று சின்ன சிரிப்போடு அவன் நடக்க அவனது பைக் அப்போது தான் நிருவின் கண்ணில் பட்டது

ஆஹா பைக்கில் போகப்போகிறோமா? அவளுக்கு மனமெங்கும் பதட்டமும் இனம்புரியா பயமும்..

அவனுக்கு அந்த தயக்கங்கள் ஏதும் இருப்பது போலில்லை.. அப்புறம் எப்படி இருக்கு அ...டீ...ரா? ஒவ்வொரு இழுத்தாய் கிண்டலாய் அழுத்தியவன் கேட்க

“உங்கப்பா கொலைக்காண்டுல இருக்கார்” என்று மெதுவாய் சொன்னாள்

“அது தெரிஞ்சது தானே.. புது விஷயமா சொல்லு” என்று அவன் பதிலுக்கு விழிகளை உருட்ட

சிரித்தவளுக்கு ஏனோ பேச்சு வரவே மாட்டேன் என்று அடம் செய்தது.

“என்ன நிதி உன் வாய் நிக்கவே நிக்காதே.. இன்னிக்கு என்ன ஆச்சு?” அவனுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்.

“அப்படியெல்லாம் இல்லை.. புது இடத்துக்கு வந்திருக்கேனா..கொஞ்சம் நர்வசா இருக்கு அதான்..” என்று சமாளித்தாள்

எல்லாம் ஒகே தானே?”

ஹ்ம்ம்”

பைக்கில் அவனுக்கு பின்னே அமர்ந்து கொண்டு அந்த மரங்கள் அடர்ந்த பாதை வழியே சென்றது ஐந்து நிமிடம் கூட இருக்காது. ஆனால் மனதில் இன்னும் அக்கணம் இறக்காமலே உயிர்த்திருக்கிறது.

கோவிலோடு கூடிய பிரமாண்டமான திடலில் தான் விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இடப்பக்கமாய் பிரமாண்டமான ஸ்டேஜ் போடப்பட்டிருந்தது. பெண்கள் மடத்திலேயே லேசாய் முகம் கழுவி தன்னை திருத்திக்கொண்டு வந்தவள் அபய் காட்டி விட்டு போன முன் பக்கமிருந்து ஐந்தாவது வரிசையில் மரக்கூடல் பக்கமாய் இருந்த இடப்பக்க எல்லையில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருக்க அபய் ஒரு கரும் பச்சையில் குர்தாவுக்கு மாறி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான்

சுற்றிலும் இருள். வானத்தில் நிலா.. ஆங்காங்கே பிரமாண்டமான மரங்கள் திடல் நிறைய வரிசை வரிசையாய் நாற்காலிகளில் மக்கள், சுற்றிலும் ஸ்பான்சர்களின் பொருட்களின் பரபரப்பான விற்பனை என ஜேஜே என்று இருந்தாலும் மனதில் என்னமோ அவர்கள் இருவரும் மட்டுமே அங்கே அமர்ந்திருப்பது போன்ற பிரமையில் கைகளை விரித்து கோர்த்துக்கொண்டிருந்தாள் நிரு.

அபராஜிதன் தளர்வாய் இலகுவாய் இருந்தான். டீனேஜ் இளைஞர்கள் அந்த வழியாய் கடக்கும் போதெல்லாம் அவனிடம் அண்ணா என்று அழைத்து பேசி போனதையும் இவன் புன் சிரிப்போடு பதில் சொன்னதையும் கவனித்திருந்தது அவள் விழிகள்...

அங்கே அலுவலகத்தில் மட்டும் இந்த முகம் நாலு கொலை செய்து விட்டு வந்தது போல ஏன் இறுகிப்போகிறது? அடக்க முடியாமல் சிரிப்பு வர மறுபக்கம் திரும்பி சமாளித்து விட்டாள்

சற்று நேரத்திலேயே அவன் ஏன் இவ்வளவு நாள் தங்கியிருந்தான் என்ற காரணம் மேடையில் வர அவனுக்கு கூட அவ்வளவு பெருமை இருந்திருக்குமோ என்னமோ இவள் மேகங்களின் மேலே தான் அமர்ந்திருந்தாள்.

கண்காட்சியாக இல்லாமல் அந்த ஊரில் நெசவு செய்யப்பட்ட ஆடைகளை அவர்கள் நகரில் பார்க்கும் பாஷன் பரேட்கள் போலில்லாமல் வெகு சின்னதான மாற்றங்களுடன் சுடிதார், மாக்ஸி உடைகள், குர்தா வகைகள் என எளிதாய் மாற்றி ஊர் இளைஞர்களை வைத்தே ராம்ப் வாக் நடத்தியிருந்தான். அதெல்லாம் மேடையிலேயே வைத்து ஆரவாரமான ஏலத்தில் விற்றுத்தீர்ந்தது மிகப்பெரிய ஹைலைட். எல்லாவற்றுக்கும் மேலாக மாநிலத்தின் மிகப்பெரும் சேலை கடையின் உரிமையாளர் தங்கள் கடையில் இனி காராதீவு என்ற பெயரில் நிரந்தரமாகவே இந்த ஊரின் தயாரிப்புக்களை விற்கப்போவதாக சொன்னது மிகப்பெரும் வரவேற்பை கொடுத்தது. அப்படியானால் இனி அந்த ஊருக்கு நிரந்தர வருமான வாய்ப்பல்லவா?

எப்படி? என்பது போல அவன் புறம் திரும்பி விழிகளை உயர்த்தியவளிடம்

தன்னுடைய பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி அந்த ப்ராடக்ட்மா நானு.. இந்த நாட்டில் பாஷன் துறையில் என்னுடைய ஜூனியர் சீனியர்கள் இல்லாத இடமே இருக்காது. எனக்கு எவன் கம்பனியும் முகவரி கொடுக்க தேவையில்லை.. என்று கண்சிமிட்டினான் அபய்..

அந்த கண்சிமிட்டலில் தன்னை தொலைத்தவள் ஒருகணம் அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள். நீ ஏன் அங்கே வந்தாய்.. எட்டாத உயரத்தில் இருந்து கொண்டு என்னை ஏன் திருடப்பார்க்கிறாய். உனக்கும் எனக்கும் எப்படிப்பொருந்தும்.. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..

சற்று நேரம் தொடர்ந்த கலைநிகழ்வுகளை பார்த்திருந்தவள் திரும்பி

அபய்ண்ணா என்று அழைத்தாள்..அழைத்த நாவில் உருவான கசப்பினை அவளாலேயே தாங்க முடியவில்லை.

ம்ம்ம் சொல்லும்மா.. “

நெஞ்சில் யாரோ வெடி வைத்து விட்டது போல அதிர்ந்து விழிகளை வெட்டியவளை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.. மேடையே கவனமாய் இருந்தான்.

அவனா பேசினான்? நம் காதில் தான் வேறேதோ கேட்டதோ?

அபய்ண்ணா.. மீண்டும் அழைத்து பரீட்சித்து பார்த்தாள்

“கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லும்மா” பாசம் வழிந்தது குரலில்..இங்கே இவள் காதிலோ ஈயம் உருகி வழிந்தது.

அவளின் குழப்பம் எல்லாம் மறந்தது..இருவருக்குமிடையில் இருந்த இடைவெளி மறந்தது..நோ நோ நோ அவன் எப்படி அவளை இப்படி அழைக்கலாம் என்ற கேள்வி மட்டும் பெரிதாக

என்ன புதுசா அம்மா சொல்றீங்க என்று அலறினாள் நிரு.

“தங்கச்சின்னா பாசமா இருக்கணும், பிரன்டுன்னா மரியாதை கொடுக்கணும். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய். எப்படி?”

அவனையே வெறித்தாள் நிரு. “தங்கச்சியே இல்லை..எனக்கு அந்த பீலிங்கெல்லாம் தெரியாதுன்னு அப்போ சொன்னீங்க?”

“அது அப்போம்மா.. இப்போ எனக்கு ஏகப்பட்ட தங்கச்சிகள்.. நீ என்னை அபய்ண்ணான்னு கூப்பிடும் போது அவங்க ஞாபகம் தான் வருது..அதனால இயல்பாவே நான் அண்ணா மோடுக்கு போய்டறேன்..” சர்வ சாதாரணமாய் கையில் நிரு வைத்திருந்த சிப்ஸை எடுத்து சாப்பிட்டபடியே அவன் சொல்ல

“சகிக்கலை” காதை பெட்ரோல் கொண்டு கழுவ வேண்டும் பொல பொலவென்று வந்தது நிருவுக்கு .

“ஏன் ஒரு ஆணும் பெண்ணும் அண்ணா தங்கச்சியா தான் இருக்கணுமா? சும்மால்லாம் பழக முடியாதா?” அவளையும் மீறிக்கொண்டு குரல் ஏக்கமாய் வர

“அண்ணாவை கொண்டு வந்ததே நீங்க தானேம்மா? உங்களுக்கு உங்க மேல பயமா? சொசைட்டி மேல பயமா இல்ல என் மேல பயமா? உங்களுக்கு தான் தெரியும்” அவன் பதிலோ வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என்று அழைக்க வெடித்தே விட்டாள் நிரு

“ஐயோ அம்மா சொல்லாதிங்க.. சத்தியமா கான்ட் ஆவுது”

“கான்ட் ஆவுதுல்ல?..இனிமே அண்ணான்னு கூப்பிட்டன்னா நானும் உன்னை தங்கச்சி வாங்க போங்கன்னு தான் கூப்பிடுவேன்..நீ எனக்கு கொடுக்கற பீலிங்கை தானே நானும் திரும்ப கொடுக்க முடியும்?” லேசான சிரிப்பு இப்போது குரலில் வெளிப்பட்டது

“நா அப்படியே கூப்பிட்டு பழகிட்டேனே..” என்று முணுமுணுத்தாள் நிரு

“சரி விடு. நானும் தங்கச்சின்னே கூப்பிட்டு பழகிக்கிறேன்..” என்றான் அவனும் விடாக்கண்டனாய்

“வயசுக்கு மரியாதை தரணும்ல..”

“அதே வயசுக்கு நானும் மரியாதை கொடுத்தா தங்கச்சி தான் எனக்கும்..”

கொஞ்ச நேரம் அவனை திரும்பியும் பாராமல் மேடையில் ஆடிய குழந்தைகளையே மிக முக்கியமாய் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நிரு.

“நித்தி..மாகி நூடில்ஸ் கப் வாங்கி தரவாம்மா”

அவளது பொறுமை பறந்தே விட்டது.. “மாகி வேணும் ஆனா இந்த அம்மா வேண்டாம்” அவள் பல்லை கடிக்க

“ஏன்மா”

“ஐயோ அப்படி சொல்லாதிங்களேன்.”. காதை பொத்திக்கொண்டே அவனை முறைத்தாள் நிரு.

“நீ அபய்ண்ணாவை நிறுத்தற வரை நானும் இதை நிறுத்த மாட்டேன்” இப்போது அவன் முகம் முழுக்க குறும்புச்சிரிப்பு விரவிக்கிடந்தது.

கோபமும் கூச்சமுமாய் கடைக்கண்ணால் அவனை ஏறெடுத்துப்பார்த்தாள் நிரு.

அவளுக்கு நேரெதிராய் உல்லாசமாய் அமர்ந்திருந்தான் அவன்.

ஒரு முடிவோட தான் இன்னிக்கு வந்திருக்கான் இவன்

“அண்ணாவை விட்டாலும் பெயர் சொல்ல எல்லாம் எனக்கு வரமாட்டேங்குது..” என்று ஒரு வழியாய் நிரு சரணடைய

அத்தனை நேரமும் அடக்கி வைத்த சிரிப்பை மொத்தமாய் கொட்டி வாய் விட்டு சிரித்தவன் “ வரும் வரை ஒண்ணும் சொல்லாத” என்று இலகுவாகவே முடித்து விட்டான்.

என்னமோ ஒரு பாவனையை உடைத்தத்தில் ஏற்பட்ட விடுதலையுணர்வு தான் இத்தனை நாளும் மூச்சு முட்டி கிடந்ததை சொல்லிப்போக இருளில் லேசாய் புன்னகைத்தபடி நேராய் பார்த்திருந்தாள் நிரு.
Super 👌
 
New member
Messages
26
Reaction score
19
Points
3
Eagerly expecting the next epi sis.
 
Top