- Messages
- 997
- Reaction score
- 2,809
- Points
- 93
chap - 29
"ண்ணே பயமா இருக்கு..." பட படத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை அந்த விலையுயர்ந்த வாகனத்தையும், உள்ளே உல்லாசமாய் உலாவிக்கொண்டிருந்த ஹரி, விஷ்ணு இருவரின் முகத்தை பீதியோடு பார்த்தான் அவன். இயற்பெயர் வணங்காமுடி பாண்டியன்.
ஆனால் அவன் வசனங்களை சிறிதும் சட்டை செய்யாமல் ஹரி, விஷ்ணுவின் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஹூட் மீது ஷூ காலுடன் அமர்ந்து மும்முரமாக கைபேசியில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான்.
"ண்ணே உன்ன தான்... கேக்குதா?" ஆதியின் தொடையை சுரண்டி கேட்டான் அந்த இளைஞன்.
"பயமா இருந்த சொவத்துல முட்டு டா நாயே... ஐயோ அய்யய்யய்யோ..." ஆத்திரமாக எழுந்தவன் அந்த இளைஞனை மண்டையிலே வலி தாங்க முடியாத அளவிற்கு நான்கு அடியை வைத்தான்.
"சும்மா இருக்க மாட்ட? ஆஹ்? முக்கியமான மேட்ச் போட போறேன்னு சொல்லிட்டு தானடா போனேன்" என்ன தான் இந்த ஆண்களுக்கு இந்த விளையாட்டின் மீது அப்படியொரு மோகம் என்று தெரியவில்லை.
சஹானா கூற இரண்டொரு முறை கேட்டாலும், "அது ஒரு போதை டா" என்று ரசனையாய் கூறுபவனை சிரிப்போடு கடந்துவிடுவாள் சகோதரி.
முகத்தை சுருக்கி வலியை கட்டுப்படுத்தியவன், "போ நான் போறேன். நீ என்ன ரொம்ப தான் திட்டுற" வாசலை நோக்கி வேகமாய் நகர்த்தவனை எட்டி கையை பிடித்து, "டேய் மயிறு பாண்டியா... நில்லுடா"
விருட்டென திரும்பியவன், "ண்ணா... என் பேர் கமல்காந்த்" ஆம் அவன் தனக்கு தானெ வைத்த புனைப் பெயர் கமல்காந்த்.
திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் மிகுந்தவன் சிறு சிறு திரைப்படங்களில் ஒரு நொடி இரண்டு நொடி வந்த தடயமே தெரியாமல் மறைந்துவிடுவான். எப்படியேனும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் கமல், ரஜினிகாந்த் பெயரை இணைத்து கமல்காந்த் என்று வைத்துக்கொண்டான்.
"சரிடா காந்தம்... கோவிச்சுக்காத ஏதோ ஒரு கோவத்துல கொட்டிட்டேன். இதுக்குலாமா கோவிச்சுப்பாங்க... வாடா வாடா" கமல்காந்த்தின் தோளில் கை போட்டு சமாதானப்படுத்தினான் ஆதி.
ஆனால் அவனோ இன்னும் விறைப்பாக, "நீ இப்ப இப்டி பேசுவ, அப்றம் மறுபடியும் அடிப்ப... வந்ததுல இருந்து கண்ணு முன்னாடி இருக்குற சரக்கு வாங்கி தரலானாலும் பரவால்ல ஒரு சோடா வாங்கி குடுத்துருக்கியா? மனசாட்சியே இல்ல ண்ணா உனக்கு. நீ மட்டும் வாட்ச் மேன ஐஸ் வச்சு டீ வாங்கி குடிச்சிட்ட. என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?"
இவன் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இல்லை பள்ளி சிறுவனா என்ற சந்தேகம் தான் வந்தது ஆதிக்கு... நடிக்க பயம், பேச பயம் என எதற்கு எடுத்தாலும் பயம் கொடண்டவன் கண்களே
"அண்ணே என்ன பண்ணாலும் உன் நல்லதுக்கு தான்டா பண்ணுவேன்" காலை தான் சந்தித்தது போல் அல்லாமல் ஏதோ பல காலம் முன்னரே சகோதரனாக தத்தெடுத்தது போலே பேசினான், "இன்னைக்கு மட்டும் காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டு வந்துடு அப்றம் இந்த பார்ல கோலாகலாமா ஒரு கொண்டாட்டத்தை வச்சிடலாம்"
ஆதியின் கையை தட்டிவிட காந்தம், "உன்ன நம்ப மாட்டேன் நீ பைசா செட்டில் பண்ணு நான் கிளம்புறேன்"
"முதல நான் குடுத்த அட்வான்ஸ் காசுக்கு ஒழுங்கா நடிடா என் டோமரு..." - ஆதி
"அந்த காசு பஸ் புடிச்சு இங்க வரவே சரியா போய்டுச்சு" அவனும் வீம்பாக தான் பேசினான் ஆனால் பயம் முகத்தில் கொட்டி கிடந்தது, "ண்ணா அவனுகள பாரேன்... நான் ஓசில கூட இவ்ளோ குடிக்க மாட்டேன் ண்ணா... நான் ஸ்டாப்பா அடிச்சிட்டே இருக்கானுங்க. என் கை காலுக்கு என்ன ஆனாலும் பரவால்ல இந்த முகத்தை மட்டும் எப்படியாவது காப்பாத்திடு" கதறினான் கமல்காந்த் பயத்தில்.
"நசுங்குன பழைய நால்ணா காசு மாதிரி இருக்குற மூஞ்சிக்கு இதெல்லாம் தேவையா கோபி" - ஆதி
"என் முகத்துக்கு என்ன குறைய கண்டுட்ட நீயி?" - கமல்காந்த்
"எல்லாமே குறையா தாண்டா இருக்கு. அதுக்கு மூஞ்சில அண்ணே கையாள ரெண்டு அபிஷேகம் பண்ணி விடுறேன். அங்க அங்க கிழிஞ்சு தொங்கிடும். அப்றம் உனக்கு புடிச்ச அஜித் விஜய் மாதிரி முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிடலாம். அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரு போலி டாக்டர் சீனால தான் இருக்கான்"
எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் ஆதி சீரியஸாய் பேச அதையே செய்துவிடலாமா என்ற ஆசையும் அந்த சிரியவனின் மனதில் ஒரு நொடி உதிக்க பிறகு தான் போலி டாக்டர் என்னும் வார்த்தையில் உஷாரானான்.
"நீ என்ன சப்ப ஆளுன்னு தானே என்ன நெனச்ச. எனக்கு வெளிய ஒரு ரசிகர் மன்றமே இருக்கு. இப்ப கூட ஒரு மெசேஜ் தட்டுனா போதும், இங்க ஒரு கலவரமே நடக்கும் பாத்துக்க" - கமல்காந்த்
"இப்டியே கிணத்துக்குள்ள விழுந்த மாடு மாதிரி கத்திட்டே இரு, நான் வேற ஆள பாத்துக்குறேன்" இப்பொழுது கையை பிடித்து நிறுத்துவது கமல்காந்த்தின் வேலையாகியது.
"ண்ணா ண்ணா என்ன அவசரம், அடுத்த வாரம் ஒரு படத்துல நான் பேச போற ஸ்கிரிப்ட் அது. சொல்லி பாத்தேன் அவ்ளோ தான்" அருமையாக சமாளித்தவனை ஆதி கேவலமாக பார்க்க கேவலமான பாவ முகத்துடன் காந்தம் ஆதியை கெஞ்சினான்.
"சரி, ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வர்றியா?" - ஆதி மனதில் ஒரு பக்கம் தான் செய்வது தவறு என்று புரிய ஏதோ புகையாவது சற்று ஆசுவாசப்படுத்துமா என்ற எண்ணத்தோடு தான் கேள்வி எழுப்பினான்.
"உனக்கு வேணும்னா நீ போய் வாங்கு, அதெல்லாம் நான் தொட்டு கூட பாக்க மாட்டேன்" - கமல்காந்த்
"என்னடா காந்தம்... இந்த காலத்துல இப்டி ஒரு புள்ளையா?" ஆச்சிரியமாக பேசிய ஆதி அவன் தோளில் மீண்டும் கை போட்டு தன் அருகே இழுத்தவன் மீண்டும் ஹரி, விஷ்ணுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.
"ண்ணா கோடு விழுந்துட போகுது ண்ணா... நீ வேற ஷூ காலோட அப்டியே நிக்கிற" என்றான் கோவத்தை காட்டி.
"உங்கப்பன் வீட்டு சொத்தா இந்த துள்ளு துள்ளுற" ஓங்கி ஒரு மிதி காரில் வேண்டும் என்றே மிதித்தவன், "அப்டி தான்டா நான் மிதிப்பேன் சனியன்புடிச்சவன்" என்றான் ஆதி கமல்காந்த்தின் கழுத்தில் இறுக்கம் கூட்டி.
"ஒன்னும் பண்ண மாட்டேன். சொன்னா கேக்குற ஆளா நீ?" - கமல்காந்த்
"சரிடா என் இவ்ளோ ஒல்லியா இருக்க? வீட்டுல மம்மி உனக்கு சோறு போடலையா?" - ஆதி
"மதியம் சாப்பிடல அது தான் அப்டி தெரியும் உனக்கு" - கமல்காந்த்
"ஏன் சண்டை போட்டுட்டு வந்துட்டியா? அம்மாகிட்ட எல்லாம் சண்டை போட கூடாதுடா" - ஆதி
"அவசர குடுக்கு ண்ணா நீ... என்ன பேச விடுறியா?" - கமல்காந்த்
"சரி நீயி கூவு" - ஆதி
"சொன்னா செண்டிமெண்ட் ஆகிடும் அப்றம் அதுக்கும் நீ என்ன கலாய்ப்ப" - கமல்காந்த்
"பரவால்ல சொல்லு கேட்டு தான் பாப்போமே" - ஆதி விடவில்லை.
"என் தங்கச்சி பொறந்து கொஞ்சம் வருசத்துலயே அப்பா கால் ரெண்டும் ஆக்சிடென்ட்ல போய்டுச்சு... அம்மா தான் எல்லாத்தையும் பாத்துக்குச்சு, வீடு வீடா போய் மாடா வேலை பாக்கும். அது படுற கஷ்டத்தை பாத்து நானும் தத்தி புத்தி காலேஜ் செகண்ட் இயர் வர ஸ்காலர்ஷிப்ல படிச்சேன்... ஆனா ஆறு மாசம் முன்னாடி அம்மா தூக்கத்துலையே போய்டுச்சு. விட்டேன் படிப்ப, தங்கச்சி நல்லா படிப்பா. அவளையாவது படிக்க வைக்கணும்.
அதுக்கு தான் அப்பாவை தங்கச்சிக்கு துணையா ஈரோடுல இருக்க எங்க கிராமத்துல விட்டுட்டு இங்க வேலை தேடி வந்துட்டேன். இங்க என்ன வேலை தேடுறதுன்னு கூட தெரியாம இருந்தப்ப தான் படத்துல நடிக்க ஒருத்தர் கூப்டாரு. போனேன். இத்தனை மாசத்துல ரெண்டு தடவ போனேன், கூட்டத்தோட நின்னேன். காசு பத்தல. மூணு வேளை சாப்பாடு ரெண்டு நேரமா மாறிடுச்சு"
அவன் பேசியதை எல்லாம் கேட்கும் பொழுது ஆதிக்கு தன்னையே பார்ப்பது போல் இருந்தது, அவனும் கல்லூரி சென்ற புதிதில் மதிய உணவை புறக்கணித்துவிடுவான் சகோதரிக்காக. இரவு தான் வேலை செய்த ஹோட்டலில் தந்த நான்கு இட்லியில் ஒரு இட்லி உண்டு மீதியை சகோதரிக்கு வந்து கொடுப்பான். பசியால் அந்த நாட்கள் இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து பிறகே உறங்கிய நியாபகம் இன்னும் மனதில் பச்சையாய் இருந்தது.
"டேய் காந்தம் நீ ஏன் டைரக்டர் ஆக கூடாது?" சூழலை அப்படியே மாற்ற முனைந்தான் ஆதி.
"நீ ப்ரடியூசர் ஆகு, நான் அந்த படத்துக்கு டைரக்டர் ஆகுறேன்" ஆதிக்கு சற்றும் சளைக்காமல் அவனும் பேசினான்.
"ஒரு வீடு காட்டவே வழியில்லாம இருக்க என்ன படம் எடுக்க சொல்ற" - ஆதி
"ஒரு டயலாக் பேச தெரியாத என்ன ஒரு படத்தை எடுக்க சொல்ற" - கமல்காந்த்
தலையை ஆட்டி யோசித்த ஆதி, "அதுவும் சரி தான்" என்றான்.
பிறகு கொஞ்சம் இடைவேளையில் தெரிந்த கதவின் வழி பார்த்த ஆதி, "சரிடா நீ நான் சொல்றப்ப போய் பொசிஷன்ல நின்னுடு. நான் போய் வேலைய ஆரமிக்கிறேன்"
"ண்ணா உன்ன நம்பி தான் ண்ணா நான் பண்றேன். எனக்கு ஏதாவது ஆச்சு நீ தான் காரணம்-னு எழுதி வச்சிட்டு தான் வந்துருக்கேன்... பெரிய இடம் மாதிரி வேற இருக்கு, என்ன நம்பி தான் என் குடும்பமே இருக்கு"
அவன் முதுகில் அடித்த ஆதி, "உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் அப்பாவ ஒரு பட்டாசு கம்பெனி-கு அனுப்பிட்டு உன் தங்கச்சிய நான் காட்டுகிறேன் நீ ஏன்லே கவலை படுற. வேலைய பாரு"
"என்ன தம்பி-னு சொன்ன" - கமல்காந்த்
"முறையை மாத்திட்டா போச்சு மாப்பிள்ளை" ஆதிக்கு பதில் பேச கூட முடியாமல் பயத்தில் ஒரு தூணுக்கு பின்னால் சென்று நின்றுகொண்டான் கமல்காந்த்.
சாதாரண மக்கள் அவ்வளவு எளிதாக அந்த பப் உள்ளே நுழைந்துவிட முடியாது. காரணம், அதன் விலை. நடுத்தர மனிதர்கள் தங்களுடைய மாத சம்பளத்தின் பாதியை அதில் போட்டால் தான் உள்ளேயே நுழைய முடியும். அதுவும் அப்படி இப்படி என்று முப்பதாயிரம் தாண்டும். ஏற்கனவே அலுவலகத்திற்கு என கையில் இருந்த தொகை மொத்தமும் போட்டு பத்தாமல் போக, தன்னுடைய ஆசை வாகனத்தையும் மனமே இல்லாமல் தடவி தடவி பார்த்து விற்று வந்தான்.
இப்பொழுது இதில் உள்ளே நுழைய எங்கு போவான்? பின் வாசல் வழியே விஷ்ணு ஹரியை பிடித்து வெளியில் இழுக்க முயல்வதையும் ஹரி விடாமல் குதூகலித்தபடியே மேலும் மேலும் மது பானத்தை உள்ளே தள்ளிய படியே இருந்தான். அதனால் தான் எப்படியும் வெளியே வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் விஷ்ணு, ஹரிக்கு உதய் நியமித்திருந்த இரண்டு கார்ட்ஸ் கவனத்தை தன் பக்கம் மொத்தம் ஈர்க்க எண்ணி வாசல் பக்கம் கிடந்த ஒரு காலி முது பாட்டில் ஒன்றை கையில் எடுத்து சென்றான்.
அவ்வளவு நேரம் சகோதரர்களுடன் இருந்த காவலர்களும் வெளியில் வந்திருக்க, எந்த விதமான உள் நுழைவு சீட்டு இல்லாமல் தள்ளாடியபடியே வேகமாக சென்றவனை வாசலில் நின்ற இரண்டு பௌன்சர்ஸ் தடுத்து நிறுத்தினர். போதையில் இருந்தாலும் தெளிவாக இருப்பவன், போதையே இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே தெளிவில்லாதது போல் திண்டாடினான்.
"உள்ள போகணும் விடுங்க டா"
"டிக்கெட் இல்லாம உள்ள விட மாட்டோம்" இரும்பை காய்ச்சி முகத்தில் விட்டது போல் அவ்வளவு இறுக்கம் அவர்கள் இருவரின் முகத்திலும்.
"டேய்... இத" *போலி விக்கல்*, "இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானடா கண்ட்ரி ப்ரூட்ஸ்"
தான் பயணம் செய்த பேருந்தில் வாங்கிய டிக்கெட் ஒன்றை பத்திரமாக பாக்கெட்டின் ஆழத்தில் வைத்திருந்தவன், தள்ளாடிக்கொண்டே அவர்கள் கையில் திணித்து மேலும் முன்னேற, ஆதியின் சட்டையை பிடித்து ஒருவன் பின்னே தள்ளினான். அவன் பிடித்த வேகத்தில் போதையை நிரூபிக்க ஆதி அப்டியே படியில் சரிய அவன் கையிலிருந்த அந்த காலி பாட்டில் உடைந்து சிதறியது.
அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உதய்யின் காவலர்கள் இருவரும் வேகமாக வந்து ஆதிக்கு உதவ முற்பட அவர்களிடமிருந்து திமிறி எழுந்தவன், பௌன்சர் ஒருவனின் சட்டையை பிடித்தவன் கையில் இருந்த உடைந்த பாட்டில் கொண்டு குத்த போக, உதய்யின் ஆள் ஆதியின் கையை பீதியுடன் பிடித்தது நிறுத்தினான்.
"சார் என்ன பண்றீங்க?" ஆதியை தடுத்து நிறுத்த அவன் சற்று திணறி தான் போனான்.
"டேய் வந்து பாட்டில வாங்கு" மற்றொருவனுக்கு உத்தரவிட, நொடி தாமதிக்காமல் கையிலிருந்ததை உருவிப்போட, அதற்குள் பௌன்சர் ஒருவன் உள்ளிருந்து இன்னும் இருவரை அழைத்து வந்துவிட, அவர்களும் ஆதி மேல் பாய துவங்கினர்.
ஆதி மேல் கை வைத்தது தெரிந்தும் அமைதியாக இருந்துவிட்டால் தங்கள் நிலை உதய்க்கு போகாமலே ஜெயன் பதமாக ஏதாவது செய்துவிடுவான் என்று அறிந்து அந்த பௌன்சர்ஸ் மக்களை சமாளிக்க சென்றுவிட, பிரபலமான அந்த பாரில் ஆட்களுக்கா பஞ்சம்? இன்னும் திரளாக நான்கு பேர் வர, உதய்யின் இரண்டு ஆட்கள் அவர்களை சமாளித்தாலும், அந்த எட்டு பௌன்சர்ஸ் உதய்யின் ஆட்களை சமாளிக்க முடியாமல் திணறியிருந்த நேரம் அவ்விடத்தை விட்டு நைசாக நழுவி கமல்காந்த் எண்ணிற்கு அழைத்துக்கொண்டு ஓடினான் பப்பின் பின் பக்கம் ஓடினான்.
மூச்சிரைக்க வந்தவன் காரியத்தை முடித்தானா என்று கூட தெரியவில்லை, அழைப்பும் ஏற்கப்படவில்லை. ஆதி சென்ற நேரம், ஊரே அடங்கியிருந்த வேளையில், சாலை ஈயாடிக்கொண்டிருந்தது.
"காந்தம்... டேய் காந்தம்" கமல்காந்த்தின் பெயரை அழைத்துக்கொண்டே அந்த வீதியை தாண்டி மற்றொரு பாதைக்கு நடந்தவன் காதுகளில் டயர்களின் கீரிச்சிடும் சத்தம் கேட்க, ஒலி வந்த பாதையில் ஓடியவன் கண்ணில் சரியாக பட்டது அந்த காட்சி...
ஹரி விஷ்ணுவின் வாகனத்திற்கு சில அடிகள் தொலைவில் குத்துக்காலிட்டு தலையை கையால் இறுக்கப்பற்றி ஏதோ பிதற்றிக்கொண்டிருந்தான். கண்கள் வேறு வெளிச்சத்தாலோ அல்லது பயத்தாலோ தெரியவில்லை சிறு ஒளி கூட கருவிழிகளை அடையாத வகையில் மிகவும் இறுக்கமாக மூடியிருந்தான்.
ஆதி தலையில் அடித்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுத்தெருவில் ஒற்றை கையை இடுப்பிலும், மற்றொரு கையை தலையிலும் வைத்து நின்றுவிட்டான். வாகனத்தின் உள்ளே இருக்கும் இரண்டு குடிமகன்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனரோ என்ற பயத்தில் ஆதி அப்டியே நிற்க, நேரம் கடந்ததே தவிர இருவரில் ஒருவர் கூட வெளியே வரவில்லை. மெல்ல வரவழைத்த தைரியத்தோடு ஆதி வாகனத்தை நோக்கி நடந்தான்.
"ஏசப்பா, முருகா, அல்லா, பெருமாளே... அவனுக கண்ணுல மட்டும் பட்டுட கூடாது" சுற்றிலும் தேடியவன் கண்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பை கிடைக்க அள்ளினான் கைகளில்.
தலையில் கவிழ்த்துப்போட்டு மங்கலாக தெரிந்த தூரத்து தெருவிளக்கின் உதவியுடன் வாகனம் நெருங்கி வந்த பொழுது தான் கமல்காந்த்தின் முணுமுணுப்பு கேட்டது, "சிவ சிவா சிவ சிவா..." பயத்தில் உளறிக்கொண்டிருந்தவன் நா வரண்டாலும் பிதற்றுவதை நிறுத்தவில்லை.
"போச்சு என்னமோ இந்த பரதேசி பண்ணிடுச்சு..." புலம்பியவாறே வாகனத்தினுள் மெதுவாக ஆதி காதை அருகில் கொண்டு செல்ல எந்த சத்தமும் திறந்த ஜன்னல் வழியாக கேட்கவில்லை.
ஒருவித தைரியத்தோடு உள்ளே எட்டி பார்த்தவனுக்கு பின் இருக்கையில் படுத்திருந்த விஷ்ணுவும் முன் இருக்கையில் ஸ்டேரிங் வீலில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஹரியும் தென்பட, நிம்மதியாக மூச்சை விட்டு, மடங்கி அமர்ந்திருந்த கமல்காந்த் கையை பிடித்து கிள்ளிவிட்டவன் ஆத்திரத்தில் இரண்டு அடி அவன் முதுகிலே போட்டான்.
அடி பலமாக வாங்கியிருந்தாலும் சிவனை துணைக்கு அழைத்திருந்தவன் வதனம் மகிழ்ச்சியை தத்தெடுத்தது.
"ண்ணா... எனக்கு ஒன்னும் ஆகல... நான் உயிரோட தான் இருக்கேன்" ஆர்பரிப்பில் இரண்டு முறை குதிக்கவும் செய்தான் அவன்.
"அடேய் கிறுக்கா... என்ன சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க நீ?" - ஆதி
"நீ சொன்னதை தான் ண்ணா நான் செஞ்சேன்... பாரு கார் முன்னாடி விழுந்துட்டேன்" விழுந்த இடத்தை சுட்டிக்காட்டினான்.
"நான் கார் முன்னாடி விழுக சொல்லல டா... கார்ல விழுக சொன்னேன்... தரித்திரியம் புடிச்சவனே... மொத்தமா சொதப்பி வச்சிருக்கியே டா"
"ண்ணா நீ சொன்ன மாதிரி தான் பண்ணேன்... என்ன பயத்துல கொஞ்சம் முன்னாடி விழுந்துட்டேன்" விட்டுவிட தயாராக இல்லை காந்தம்.
"புடுங்குன... அடி படுற மாதிரி விழு-னு சொன்னா நாடு ரோடுல சிவபுராணம் படிச்சிட்டு இருக்குற... பைத்தியகாரப் பயலே"
ஏதாவது செய்ய வேண்டும்... இதை விட்டால் பிறகு இது போன்ற சந்தர்ப்பமே அமையாது. இன்னும் சில நொடிகளில் உதய்யின் ஆட்களும் வந்துவிடுவார்கள். பைத்தியம் பிடித்தவன் போல் நாளா பக்கமும் பார்த்த ஆதியின் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை, சில கற்கள் மட்டுமே கிடைக்க அதை எடுத்து அந்த இளையவனின் தலையை உடைக்கும் எண்ணம் தான் மேலோங்க அதையே ஏன் செய்ய கூடாது என்ற எண்ணத்தில் அதை வேகமாக எடுத்து வந்தவன் கமல்காந்த் பக்கம் திரும்பினான்.
அவனோ, தான் திடீரென இடையில் வந்ததும் சடன் பிரேக் அடித்த வேகத்தில் ஸ்டேரிங்கில் முட்டி அடித்த போதையில் உறங்கியிருந்த ஹரியையும் விஷ்ணுவையும் பார்த்து, அந்த வாகனத்தை சுற்றி சுற்றி பார்த்தான்.
"டேய் தம்பி..." ஆதியின் குரல் கேட்டு திரும்ப, "மன்னிச்சுடு டா..." முழுதாய் அந்த வார்த்தையை காந்தம் கிரகிக்கும் முன்பே கமல்காந்த்தின் நெற்றியில் ஆதி ஓங்கி கல்லை கொண்டு அடித்திருந்தான்.
"ஆஆ.... ஐயோ அம்மா..."
நெற்றியை பிடித்து கதறியவனின் முகத்தை பிடித்து, "டேய் காந்தம்... ராசா மன்னிச்சுடு டா. போலீஸ்-கு வேற போன் பண்ணிட்டேன். அப்டியே டயர்கு ஒட்டி குப்புற படுத்துகோடா" கெஞ்சினான் ஆதி.
"யோவ் போயா நீயும் வேணாம் உன் காசும் வேணாம்"
"சரி டா போ... ஆனா நயா பைசா தர மாட்டேன்" - ஆதி
"ண்ணே இப்டி எல்லாம் பேசாமலாமா? எந்த இடத்துல படுக்கணும்னு சொல்லு சரியா படுத்தறேன்" பேசிக்கொண்டே இருக்கும் பொழுதே போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்க வாகனத்தின் டயர் அருகே குப்புற வேகமாக படுத்துகொண்டான் காந்தம்.
"நான் உன் பின்னாடியே தான் வருவேன் சரியா? தைரியமா இருடா சொதப்பிடாத... எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்றாங்கனு பாத்து எனக்கு மெசேஜ் போடு"
பல அறிவுரைகளை கூறி ஆதி அவ்விடத்தை விட்டு அகல பார்க்க படுத்த வாக்கிலே, "நீ அடிச்ச அடிக்கு என் மூளை எதுவும் ஆகிருகத்துல?"
என்ன செய்வான் அவனும்? ஆதி அடித்த அடியில் தலை வின் வின்னென்று தெறித்தது அதுவும் ரத்தம் வடிய வேறு துவங்கியது. இடத்தை விட்டு ஓடிக்கொண்டே,
"ஏற்கனவே அப்டி தான்டா இருக்க பேமானி... ஒழுங்கா நடி" - ஆதி
ஓரமாக சென்று ஆதி நின்று கொள்ள சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் ஒன்று வந்துவிட அதிலிருந்த காவல்துறையினர் வந்து முதலில் கமல்காந்த்தை ஆராய்ந்தவர்கள் அவன் மூச்சு காற்றை உணர்த்த பின்னர் ஹரி விஷ்ணுவின் வாகனத்தை உள்ளே உற்று பார்த்தனர்.
"சார் பெரிய இடம் மாதிரி தெரியுதே பசங்கள பாக்க" கான்ஸ்டாபில் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி எழுப்பினார்.
"ஆமாயா..."
"பேசாம அப்டியே விட்டுட்டு போய்டலாமா?" - கான்ஸ்டாபில்
"யோவ் நம்பர் ப்ளேட் பாத்தியா ஆர்.ஜே குரூப்ஸ் வண்டி. புடிச்சா நல்லா தேறும்" - இன்ஸ்பெக்டர்
"சார் கில்லாடி சார் நீங்க" பூரித்தான் அந்த கான்ஸ்டாபில்.
"பசங்கள எதுவும் பண்ணிட வேணாம். வண்டிய டோ போட்டு இழுத்துட்டு வர சொல்லு. இவன நாம ஹாஸ்பிடல் எடுத்துட்டு போகலாம்"
"அட்றா சக்க" மறைந்திருந்து பார்த்த ஆதியின் மனதில் உற்சாகம்.
ஹரி, விஷ்ணுவின் பாதுகாப்பிற்கும் எந்த தீங்கும் வர கூடாது, தன்னை நம்பி வந்த கமல்காந்தின் நிலைமையும் தான் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த காவல் அதிகாரிகளின் பேச்சை உன்னிப்பாக கவனித்தான்.
இப்பொழுது அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என்ற பிறகு தான் நிம்மதி. ஆதி மனதில் வேறு சில எண்ணங்களும் பய பந்தை உருட்டிக்கொண்டிருந்தது. உதய்யின் ஆட்கள். அவர்கள் மட்டும் வந்தால் மொத்த திட்டமும் வீணாகிடும் என்ற பயம் மனதின் வியாபித்தது.
"யாரு யா இன்பர்மேஷன் குடுத்தது?" - இன்ஸ்பெக்டர்
"தெரியல சார்... கால் பண்ணா போன் போகல... வண்டி வருது சார்..."
படபடப்புடன் ஆதி நிற்க, அவனுடைய பி.பியை ஏற்றாமல் சில நிமிடங்களில் அந்த வாகனம் வர விஷ்ணு, ஹரி இருந்த கார் அவ்விடத்தை விட்டு அகன்றது. அதன் பிறகு கமல்காந்தை பிடித்து வண்டியின் பின்னிருக்கையில் போட்ட காவல்துறையினர் வாகனத்தை எடுக்க மெதுவாக ஜன்னல் வழி எட்டி பார்த்த கமல்காந்த் ஆதிக்கு சிரிப்போடு டாட்டா கூற தலையில் அடித்து அவனை பின் தொடர சென்றான்.
அந்த பக்கம் உதய்யின் ஆட்கள் விஷ்ணு ஹரி இருவரையும் அந்த மொத்த இடத்தையும் புரட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தார்.
********************
இரவு மணி ஒன்பதை தாண்டி இருந்தது... அலுவலகத்திலிருந்து வந்த உதய், வீட்டிற்குள் போக மனமே இல்லாமல் அலுவலக பையை ஜெயன் கையில் கொடுத்து தளர்வாய் வீட்டின் வாசல்படியிலேயே அமர்ந்துவிட்டான். உள்ளே செல்ல மனமே இல்லை. அதனால் தான் நேரத்தை அதிகம் அலுவலகத்திலே செலவிட்டான்.
வீட்டினுள் நுழைந்தால் அன்னையின் நியாபகம், அந்த வீட்டில் அவர்கள் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும் நினைவுகளும் வந்து ஆட்டி படைக்கும் உதய் மாதவனை. சகோதரர்களை விரைவாகவே வீட்டிற்கு அழைத்து செல்லும் அவன் அன்னை, உதய்யின் வரவிற்காக நிமிடத்திற்கொரு முறை வாசலை பார்க்கும் அன்னையை இத்தனை வருடங்களில் எத்தனை முறை நினைத்தாலும் மனம் துடியாய் துடிக்கும்.
அன்னையின் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை அழைத்து சென்றவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது, செல்லும் வெளியில் எங்கும் ஒரு சிரிப்போடு பாதி மூடிய கண்களோடும் உதய்யின் முகத்தை கயாத்திரியின் ரத்த கரை படிந்த கைகள் வருடியதையும் அவர் வார்த்தைகளையும்,
"ஆதியையும், நம்ம குடும்பத்தையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கோ தம்பி..." எவ்வளவு கதறியிருப்பான் அன்று அன்னையிடம் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று... கேட்டாளா அந்த அன்னை?
அன்று அவர் கேட்டிருந்தால் இன்று இப்படி மனம் முழுதும் வெறுமையோடும், கண்களில் கண்ணீரோடும் யாருமே இல்லாத வீட்டில் எவரும் இல்லாதது போல் அமர்ந்திருக்க தேவை இல்லையே... மனதிற்கு ஒரு ஆறுதல் யாழினியின் இடைவிடா பேச்சும், அர்த்தமிலா அவள் கேள்விகளும். இப்பொழுது அதுவும் இல்லை.
ஒரு கட்டத்தில் எதற்காக உயிர் வாழ்கிறோம் என்ற எண்ணங்கள் கூட சில தினங்களாக வர துவங்கியது. ஆதி, யாழினி, குடும்பம் இவர்களின் பிரிவு ஒரு புறமென்றால், இன்னும் சில வாரங்களில் அன்னையின் இறந்த தினம் வரவிருக்கிறது. எப்படி அந்த நாளை கடத்த போகிறோம் என்ற பயம் கூட அதிகம் வந்தது. தளர்வாய் அப்டியே வாசலில் படுத்துவிட்டான். தரையில்...
அன்னிச்சை செயலாக கைகள் பிடிவாதம் செய்து யாழினியின் எண்ணிற்கு அழைத்தது. சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட்டது. திருமண பேச்சை துவங்கிய அன்னையிடம் சண்டையிட்டு அழுது வீங்கிய கண்களோடு மொட்டை மாடியில் படுத்திருந்தவளுக்கு ஆறுதலாய் இருந்தது தொடுதிரையில் தெரிந்த அவனுடைய விறைப்பான முகம்.
உதய்யின் புகைப்படத்தை பார்க்க பார்க்க கண்ணீர் துளிகள் வழிந்துகொண்டே இருக்க அழுகையை மீறி விசும்பலும் விடாது வர துவங்கியது. அன்று அவன் இல்லத்தில் அவன் மடியில் அமர்ந்த நொடியே அவனை மட்டுமே தன்னுடைய உலகமாய், மானசீகமாக கணவனாய் எண்ண துவங்கியவள் வேறு ஒருவனை அந்த இடத்தில் வைத்து கூட பார்க்க உடல் கூசியது.
திருமணம் வேண்டாம் என்று ஒரேடியாக மறுத்த மகளை ஆத்திரம் தீர அன்னை திட்டுவிட்டார். அதனாலே அவன் புகைப்படத்தை பார்த்து ரணமான இதயத்தை ஆற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த நிமிடமே உதய்யின் அழைப்பு வர, மீண்டும் ஏதோ வலி புதிதாக ஆழமாக உருவாகியது. அவளுக்கு எப்படி தெரியும், தன்னை ஆட்டி வைத்த ஈஸ்வரன் சிறையில் உள்ளான் என்று?
அழைப்பை எடுக்காமல் விட்டால் அவனுக்கு என்ன மரியாதை என்று உடனே அழைப்பை ஏற்றாள் கண்களை துடைத்து. அழைப்பை ஏற்றும் இரண்டு பக்கமும் அமைதி மட்டுமே இருக்க, "இருக்கியா?" ஆடவனின் குரலும் தடுமாறியதோ?
"ம்ம் இருக்கேன் சார்" அழுகையை கட்டுப்படுத்துவது அவளுக்கு சவாலாக தான் இருந்தது... ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு இன்னும் தன் மேல் இருந்த பிரியமும் அவள் மனதி
ற்கு சுகத்தோடு வலியை தந்தது.
"என்ன பண்ற யாழினி?"
"சும்மா... மாடில இருக்கேன் சார்"
"சந்தோசமா இருக்கியா யாழினி?"
இல்லை என்று தலை ஆடியது ஆனாலும் நாவோ, "எனக்கு என்ன சார்? சந்தோசமா இருக்கேன்" என்றது.
"ஆபீஸ் வரலாமே..."
"ண்ணே பயமா இருக்கு..." பட படத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை அந்த விலையுயர்ந்த வாகனத்தையும், உள்ளே உல்லாசமாய் உலாவிக்கொண்டிருந்த ஹரி, விஷ்ணு இருவரின் முகத்தை பீதியோடு பார்த்தான் அவன். இயற்பெயர் வணங்காமுடி பாண்டியன்.
ஆனால் அவன் வசனங்களை சிறிதும் சட்டை செய்யாமல் ஹரி, விஷ்ணுவின் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஹூட் மீது ஷூ காலுடன் அமர்ந்து மும்முரமாக கைபேசியில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான்.
"ண்ணே உன்ன தான்... கேக்குதா?" ஆதியின் தொடையை சுரண்டி கேட்டான் அந்த இளைஞன்.
"பயமா இருந்த சொவத்துல முட்டு டா நாயே... ஐயோ அய்யய்யய்யோ..." ஆத்திரமாக எழுந்தவன் அந்த இளைஞனை மண்டையிலே வலி தாங்க முடியாத அளவிற்கு நான்கு அடியை வைத்தான்.
"சும்மா இருக்க மாட்ட? ஆஹ்? முக்கியமான மேட்ச் போட போறேன்னு சொல்லிட்டு தானடா போனேன்" என்ன தான் இந்த ஆண்களுக்கு இந்த விளையாட்டின் மீது அப்படியொரு மோகம் என்று தெரியவில்லை.
சஹானா கூற இரண்டொரு முறை கேட்டாலும், "அது ஒரு போதை டா" என்று ரசனையாய் கூறுபவனை சிரிப்போடு கடந்துவிடுவாள் சகோதரி.
முகத்தை சுருக்கி வலியை கட்டுப்படுத்தியவன், "போ நான் போறேன். நீ என்ன ரொம்ப தான் திட்டுற" வாசலை நோக்கி வேகமாய் நகர்த்தவனை எட்டி கையை பிடித்து, "டேய் மயிறு பாண்டியா... நில்லுடா"
விருட்டென திரும்பியவன், "ண்ணா... என் பேர் கமல்காந்த்" ஆம் அவன் தனக்கு தானெ வைத்த புனைப் பெயர் கமல்காந்த்.
திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் மிகுந்தவன் சிறு சிறு திரைப்படங்களில் ஒரு நொடி இரண்டு நொடி வந்த தடயமே தெரியாமல் மறைந்துவிடுவான். எப்படியேனும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் கமல், ரஜினிகாந்த் பெயரை இணைத்து கமல்காந்த் என்று வைத்துக்கொண்டான்.
"சரிடா காந்தம்... கோவிச்சுக்காத ஏதோ ஒரு கோவத்துல கொட்டிட்டேன். இதுக்குலாமா கோவிச்சுப்பாங்க... வாடா வாடா" கமல்காந்த்தின் தோளில் கை போட்டு சமாதானப்படுத்தினான் ஆதி.
ஆனால் அவனோ இன்னும் விறைப்பாக, "நீ இப்ப இப்டி பேசுவ, அப்றம் மறுபடியும் அடிப்ப... வந்ததுல இருந்து கண்ணு முன்னாடி இருக்குற சரக்கு வாங்கி தரலானாலும் பரவால்ல ஒரு சோடா வாங்கி குடுத்துருக்கியா? மனசாட்சியே இல்ல ண்ணா உனக்கு. நீ மட்டும் வாட்ச் மேன ஐஸ் வச்சு டீ வாங்கி குடிச்சிட்ட. என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?"
இவன் ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இல்லை பள்ளி சிறுவனா என்ற சந்தேகம் தான் வந்தது ஆதிக்கு... நடிக்க பயம், பேச பயம் என எதற்கு எடுத்தாலும் பயம் கொடண்டவன் கண்களே
"அண்ணே என்ன பண்ணாலும் உன் நல்லதுக்கு தான்டா பண்ணுவேன்" காலை தான் சந்தித்தது போல் அல்லாமல் ஏதோ பல காலம் முன்னரே சகோதரனாக தத்தெடுத்தது போலே பேசினான், "இன்னைக்கு மட்டும் காரியத்தை கச்சிதமா முடிச்சிட்டு வந்துடு அப்றம் இந்த பார்ல கோலாகலாமா ஒரு கொண்டாட்டத்தை வச்சிடலாம்"
ஆதியின் கையை தட்டிவிட காந்தம், "உன்ன நம்ப மாட்டேன் நீ பைசா செட்டில் பண்ணு நான் கிளம்புறேன்"
"முதல நான் குடுத்த அட்வான்ஸ் காசுக்கு ஒழுங்கா நடிடா என் டோமரு..." - ஆதி
"அந்த காசு பஸ் புடிச்சு இங்க வரவே சரியா போய்டுச்சு" அவனும் வீம்பாக தான் பேசினான் ஆனால் பயம் முகத்தில் கொட்டி கிடந்தது, "ண்ணா அவனுகள பாரேன்... நான் ஓசில கூட இவ்ளோ குடிக்க மாட்டேன் ண்ணா... நான் ஸ்டாப்பா அடிச்சிட்டே இருக்கானுங்க. என் கை காலுக்கு என்ன ஆனாலும் பரவால்ல இந்த முகத்தை மட்டும் எப்படியாவது காப்பாத்திடு" கதறினான் கமல்காந்த் பயத்தில்.
"நசுங்குன பழைய நால்ணா காசு மாதிரி இருக்குற மூஞ்சிக்கு இதெல்லாம் தேவையா கோபி" - ஆதி
"என் முகத்துக்கு என்ன குறைய கண்டுட்ட நீயி?" - கமல்காந்த்
"எல்லாமே குறையா தாண்டா இருக்கு. அதுக்கு மூஞ்சில அண்ணே கையாள ரெண்டு அபிஷேகம் பண்ணி விடுறேன். அங்க அங்க கிழிஞ்சு தொங்கிடும். அப்றம் உனக்கு புடிச்ச அஜித் விஜய் மாதிரி முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிடலாம். அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரு போலி டாக்டர் சீனால தான் இருக்கான்"
எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் ஆதி சீரியஸாய் பேச அதையே செய்துவிடலாமா என்ற ஆசையும் அந்த சிரியவனின் மனதில் ஒரு நொடி உதிக்க பிறகு தான் போலி டாக்டர் என்னும் வார்த்தையில் உஷாரானான்.
"நீ என்ன சப்ப ஆளுன்னு தானே என்ன நெனச்ச. எனக்கு வெளிய ஒரு ரசிகர் மன்றமே இருக்கு. இப்ப கூட ஒரு மெசேஜ் தட்டுனா போதும், இங்க ஒரு கலவரமே நடக்கும் பாத்துக்க" - கமல்காந்த்
"இப்டியே கிணத்துக்குள்ள விழுந்த மாடு மாதிரி கத்திட்டே இரு, நான் வேற ஆள பாத்துக்குறேன்" இப்பொழுது கையை பிடித்து நிறுத்துவது கமல்காந்த்தின் வேலையாகியது.
"ண்ணா ண்ணா என்ன அவசரம், அடுத்த வாரம் ஒரு படத்துல நான் பேச போற ஸ்கிரிப்ட் அது. சொல்லி பாத்தேன் அவ்ளோ தான்" அருமையாக சமாளித்தவனை ஆதி கேவலமாக பார்க்க கேவலமான பாவ முகத்துடன் காந்தம் ஆதியை கெஞ்சினான்.
"சரி, ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வர்றியா?" - ஆதி மனதில் ஒரு பக்கம் தான் செய்வது தவறு என்று புரிய ஏதோ புகையாவது சற்று ஆசுவாசப்படுத்துமா என்ற எண்ணத்தோடு தான் கேள்வி எழுப்பினான்.
"உனக்கு வேணும்னா நீ போய் வாங்கு, அதெல்லாம் நான் தொட்டு கூட பாக்க மாட்டேன்" - கமல்காந்த்
"என்னடா காந்தம்... இந்த காலத்துல இப்டி ஒரு புள்ளையா?" ஆச்சிரியமாக பேசிய ஆதி அவன் தோளில் மீண்டும் கை போட்டு தன் அருகே இழுத்தவன் மீண்டும் ஹரி, விஷ்ணுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.
"ண்ணா கோடு விழுந்துட போகுது ண்ணா... நீ வேற ஷூ காலோட அப்டியே நிக்கிற" என்றான் கோவத்தை காட்டி.
"உங்கப்பன் வீட்டு சொத்தா இந்த துள்ளு துள்ளுற" ஓங்கி ஒரு மிதி காரில் வேண்டும் என்றே மிதித்தவன், "அப்டி தான்டா நான் மிதிப்பேன் சனியன்புடிச்சவன்" என்றான் ஆதி கமல்காந்த்தின் கழுத்தில் இறுக்கம் கூட்டி.
"ஒன்னும் பண்ண மாட்டேன். சொன்னா கேக்குற ஆளா நீ?" - கமல்காந்த்
"சரிடா என் இவ்ளோ ஒல்லியா இருக்க? வீட்டுல மம்மி உனக்கு சோறு போடலையா?" - ஆதி
"மதியம் சாப்பிடல அது தான் அப்டி தெரியும் உனக்கு" - கமல்காந்த்
"ஏன் சண்டை போட்டுட்டு வந்துட்டியா? அம்மாகிட்ட எல்லாம் சண்டை போட கூடாதுடா" - ஆதி
"அவசர குடுக்கு ண்ணா நீ... என்ன பேச விடுறியா?" - கமல்காந்த்
"சரி நீயி கூவு" - ஆதி
"சொன்னா செண்டிமெண்ட் ஆகிடும் அப்றம் அதுக்கும் நீ என்ன கலாய்ப்ப" - கமல்காந்த்
"பரவால்ல சொல்லு கேட்டு தான் பாப்போமே" - ஆதி விடவில்லை.
"என் தங்கச்சி பொறந்து கொஞ்சம் வருசத்துலயே அப்பா கால் ரெண்டும் ஆக்சிடென்ட்ல போய்டுச்சு... அம்மா தான் எல்லாத்தையும் பாத்துக்குச்சு, வீடு வீடா போய் மாடா வேலை பாக்கும். அது படுற கஷ்டத்தை பாத்து நானும் தத்தி புத்தி காலேஜ் செகண்ட் இயர் வர ஸ்காலர்ஷிப்ல படிச்சேன்... ஆனா ஆறு மாசம் முன்னாடி அம்மா தூக்கத்துலையே போய்டுச்சு. விட்டேன் படிப்ப, தங்கச்சி நல்லா படிப்பா. அவளையாவது படிக்க வைக்கணும்.
அதுக்கு தான் அப்பாவை தங்கச்சிக்கு துணையா ஈரோடுல இருக்க எங்க கிராமத்துல விட்டுட்டு இங்க வேலை தேடி வந்துட்டேன். இங்க என்ன வேலை தேடுறதுன்னு கூட தெரியாம இருந்தப்ப தான் படத்துல நடிக்க ஒருத்தர் கூப்டாரு. போனேன். இத்தனை மாசத்துல ரெண்டு தடவ போனேன், கூட்டத்தோட நின்னேன். காசு பத்தல. மூணு வேளை சாப்பாடு ரெண்டு நேரமா மாறிடுச்சு"
அவன் பேசியதை எல்லாம் கேட்கும் பொழுது ஆதிக்கு தன்னையே பார்ப்பது போல் இருந்தது, அவனும் கல்லூரி சென்ற புதிதில் மதிய உணவை புறக்கணித்துவிடுவான் சகோதரிக்காக. இரவு தான் வேலை செய்த ஹோட்டலில் தந்த நான்கு இட்லியில் ஒரு இட்லி உண்டு மீதியை சகோதரிக்கு வந்து கொடுப்பான். பசியால் அந்த நாட்கள் இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து பிறகே உறங்கிய நியாபகம் இன்னும் மனதில் பச்சையாய் இருந்தது.
"டேய் காந்தம் நீ ஏன் டைரக்டர் ஆக கூடாது?" சூழலை அப்படியே மாற்ற முனைந்தான் ஆதி.
"நீ ப்ரடியூசர் ஆகு, நான் அந்த படத்துக்கு டைரக்டர் ஆகுறேன்" ஆதிக்கு சற்றும் சளைக்காமல் அவனும் பேசினான்.
"ஒரு வீடு காட்டவே வழியில்லாம இருக்க என்ன படம் எடுக்க சொல்ற" - ஆதி
"ஒரு டயலாக் பேச தெரியாத என்ன ஒரு படத்தை எடுக்க சொல்ற" - கமல்காந்த்
தலையை ஆட்டி யோசித்த ஆதி, "அதுவும் சரி தான்" என்றான்.
பிறகு கொஞ்சம் இடைவேளையில் தெரிந்த கதவின் வழி பார்த்த ஆதி, "சரிடா நீ நான் சொல்றப்ப போய் பொசிஷன்ல நின்னுடு. நான் போய் வேலைய ஆரமிக்கிறேன்"
"ண்ணா உன்ன நம்பி தான் ண்ணா நான் பண்றேன். எனக்கு ஏதாவது ஆச்சு நீ தான் காரணம்-னு எழுதி வச்சிட்டு தான் வந்துருக்கேன்... பெரிய இடம் மாதிரி வேற இருக்கு, என்ன நம்பி தான் என் குடும்பமே இருக்கு"
அவன் முதுகில் அடித்த ஆதி, "உனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன் அப்பாவ ஒரு பட்டாசு கம்பெனி-கு அனுப்பிட்டு உன் தங்கச்சிய நான் காட்டுகிறேன் நீ ஏன்லே கவலை படுற. வேலைய பாரு"
"என்ன தம்பி-னு சொன்ன" - கமல்காந்த்
"முறையை மாத்திட்டா போச்சு மாப்பிள்ளை" ஆதிக்கு பதில் பேச கூட முடியாமல் பயத்தில் ஒரு தூணுக்கு பின்னால் சென்று நின்றுகொண்டான் கமல்காந்த்.
சாதாரண மக்கள் அவ்வளவு எளிதாக அந்த பப் உள்ளே நுழைந்துவிட முடியாது. காரணம், அதன் விலை. நடுத்தர மனிதர்கள் தங்களுடைய மாத சம்பளத்தின் பாதியை அதில் போட்டால் தான் உள்ளேயே நுழைய முடியும். அதுவும் அப்படி இப்படி என்று முப்பதாயிரம் தாண்டும். ஏற்கனவே அலுவலகத்திற்கு என கையில் இருந்த தொகை மொத்தமும் போட்டு பத்தாமல் போக, தன்னுடைய ஆசை வாகனத்தையும் மனமே இல்லாமல் தடவி தடவி பார்த்து விற்று வந்தான்.
இப்பொழுது இதில் உள்ளே நுழைய எங்கு போவான்? பின் வாசல் வழியே விஷ்ணு ஹரியை பிடித்து வெளியில் இழுக்க முயல்வதையும் ஹரி விடாமல் குதூகலித்தபடியே மேலும் மேலும் மது பானத்தை உள்ளே தள்ளிய படியே இருந்தான். அதனால் தான் எப்படியும் வெளியே வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் விஷ்ணு, ஹரிக்கு உதய் நியமித்திருந்த இரண்டு கார்ட்ஸ் கவனத்தை தன் பக்கம் மொத்தம் ஈர்க்க எண்ணி வாசல் பக்கம் கிடந்த ஒரு காலி முது பாட்டில் ஒன்றை கையில் எடுத்து சென்றான்.
அவ்வளவு நேரம் சகோதரர்களுடன் இருந்த காவலர்களும் வெளியில் வந்திருக்க, எந்த விதமான உள் நுழைவு சீட்டு இல்லாமல் தள்ளாடியபடியே வேகமாக சென்றவனை வாசலில் நின்ற இரண்டு பௌன்சர்ஸ் தடுத்து நிறுத்தினர். போதையில் இருந்தாலும் தெளிவாக இருப்பவன், போதையே இல்லாமல் தேவைக்கு அதிகமாகவே தெளிவில்லாதது போல் திண்டாடினான்.
"உள்ள போகணும் விடுங்க டா"
"டிக்கெட் இல்லாம உள்ள விட மாட்டோம்" இரும்பை காய்ச்சி முகத்தில் விட்டது போல் அவ்வளவு இறுக்கம் அவர்கள் இருவரின் முகத்திலும்.
"டேய்... இத" *போலி விக்கல்*, "இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானடா கண்ட்ரி ப்ரூட்ஸ்"
தான் பயணம் செய்த பேருந்தில் வாங்கிய டிக்கெட் ஒன்றை பத்திரமாக பாக்கெட்டின் ஆழத்தில் வைத்திருந்தவன், தள்ளாடிக்கொண்டே அவர்கள் கையில் திணித்து மேலும் முன்னேற, ஆதியின் சட்டையை பிடித்து ஒருவன் பின்னே தள்ளினான். அவன் பிடித்த வேகத்தில் போதையை நிரூபிக்க ஆதி அப்டியே படியில் சரிய அவன் கையிலிருந்த அந்த காலி பாட்டில் உடைந்து சிதறியது.
அவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உதய்யின் காவலர்கள் இருவரும் வேகமாக வந்து ஆதிக்கு உதவ முற்பட அவர்களிடமிருந்து திமிறி எழுந்தவன், பௌன்சர் ஒருவனின் சட்டையை பிடித்தவன் கையில் இருந்த உடைந்த பாட்டில் கொண்டு குத்த போக, உதய்யின் ஆள் ஆதியின் கையை பீதியுடன் பிடித்தது நிறுத்தினான்.
"சார் என்ன பண்றீங்க?" ஆதியை தடுத்து நிறுத்த அவன் சற்று திணறி தான் போனான்.
"டேய் வந்து பாட்டில வாங்கு" மற்றொருவனுக்கு உத்தரவிட, நொடி தாமதிக்காமல் கையிலிருந்ததை உருவிப்போட, அதற்குள் பௌன்சர் ஒருவன் உள்ளிருந்து இன்னும் இருவரை அழைத்து வந்துவிட, அவர்களும் ஆதி மேல் பாய துவங்கினர்.
ஆதி மேல் கை வைத்தது தெரிந்தும் அமைதியாக இருந்துவிட்டால் தங்கள் நிலை உதய்க்கு போகாமலே ஜெயன் பதமாக ஏதாவது செய்துவிடுவான் என்று அறிந்து அந்த பௌன்சர்ஸ் மக்களை சமாளிக்க சென்றுவிட, பிரபலமான அந்த பாரில் ஆட்களுக்கா பஞ்சம்? இன்னும் திரளாக நான்கு பேர் வர, உதய்யின் இரண்டு ஆட்கள் அவர்களை சமாளித்தாலும், அந்த எட்டு பௌன்சர்ஸ் உதய்யின் ஆட்களை சமாளிக்க முடியாமல் திணறியிருந்த நேரம் அவ்விடத்தை விட்டு நைசாக நழுவி கமல்காந்த் எண்ணிற்கு அழைத்துக்கொண்டு ஓடினான் பப்பின் பின் பக்கம் ஓடினான்.
மூச்சிரைக்க வந்தவன் காரியத்தை முடித்தானா என்று கூட தெரியவில்லை, அழைப்பும் ஏற்கப்படவில்லை. ஆதி சென்ற நேரம், ஊரே அடங்கியிருந்த வேளையில், சாலை ஈயாடிக்கொண்டிருந்தது.
"காந்தம்... டேய் காந்தம்" கமல்காந்த்தின் பெயரை அழைத்துக்கொண்டே அந்த வீதியை தாண்டி மற்றொரு பாதைக்கு நடந்தவன் காதுகளில் டயர்களின் கீரிச்சிடும் சத்தம் கேட்க, ஒலி வந்த பாதையில் ஓடியவன் கண்ணில் சரியாக பட்டது அந்த காட்சி...
ஹரி விஷ்ணுவின் வாகனத்திற்கு சில அடிகள் தொலைவில் குத்துக்காலிட்டு தலையை கையால் இறுக்கப்பற்றி ஏதோ பிதற்றிக்கொண்டிருந்தான். கண்கள் வேறு வெளிச்சத்தாலோ அல்லது பயத்தாலோ தெரியவில்லை சிறு ஒளி கூட கருவிழிகளை அடையாத வகையில் மிகவும் இறுக்கமாக மூடியிருந்தான்.
ஆதி தலையில் அடித்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நடுத்தெருவில் ஒற்றை கையை இடுப்பிலும், மற்றொரு கையை தலையிலும் வைத்து நின்றுவிட்டான். வாகனத்தின் உள்ளே இருக்கும் இரண்டு குடிமகன்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனரோ என்ற பயத்தில் ஆதி அப்டியே நிற்க, நேரம் கடந்ததே தவிர இருவரில் ஒருவர் கூட வெளியே வரவில்லை. மெல்ல வரவழைத்த தைரியத்தோடு ஆதி வாகனத்தை நோக்கி நடந்தான்.
"ஏசப்பா, முருகா, அல்லா, பெருமாளே... அவனுக கண்ணுல மட்டும் பட்டுட கூடாது" சுற்றிலும் தேடியவன் கண்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பை கிடைக்க அள்ளினான் கைகளில்.
தலையில் கவிழ்த்துப்போட்டு மங்கலாக தெரிந்த தூரத்து தெருவிளக்கின் உதவியுடன் வாகனம் நெருங்கி வந்த பொழுது தான் கமல்காந்த்தின் முணுமுணுப்பு கேட்டது, "சிவ சிவா சிவ சிவா..." பயத்தில் உளறிக்கொண்டிருந்தவன் நா வரண்டாலும் பிதற்றுவதை நிறுத்தவில்லை.
"போச்சு என்னமோ இந்த பரதேசி பண்ணிடுச்சு..." புலம்பியவாறே வாகனத்தினுள் மெதுவாக ஆதி காதை அருகில் கொண்டு செல்ல எந்த சத்தமும் திறந்த ஜன்னல் வழியாக கேட்கவில்லை.
ஒருவித தைரியத்தோடு உள்ளே எட்டி பார்த்தவனுக்கு பின் இருக்கையில் படுத்திருந்த விஷ்ணுவும் முன் இருக்கையில் ஸ்டேரிங் வீலில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஹரியும் தென்பட, நிம்மதியாக மூச்சை விட்டு, மடங்கி அமர்ந்திருந்த கமல்காந்த் கையை பிடித்து கிள்ளிவிட்டவன் ஆத்திரத்தில் இரண்டு அடி அவன் முதுகிலே போட்டான்.
அடி பலமாக வாங்கியிருந்தாலும் சிவனை துணைக்கு அழைத்திருந்தவன் வதனம் மகிழ்ச்சியை தத்தெடுத்தது.
"ண்ணா... எனக்கு ஒன்னும் ஆகல... நான் உயிரோட தான் இருக்கேன்" ஆர்பரிப்பில் இரண்டு முறை குதிக்கவும் செய்தான் அவன்.
"அடேய் கிறுக்கா... என்ன சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க நீ?" - ஆதி
"நீ சொன்னதை தான் ண்ணா நான் செஞ்சேன்... பாரு கார் முன்னாடி விழுந்துட்டேன்" விழுந்த இடத்தை சுட்டிக்காட்டினான்.
"நான் கார் முன்னாடி விழுக சொல்லல டா... கார்ல விழுக சொன்னேன்... தரித்திரியம் புடிச்சவனே... மொத்தமா சொதப்பி வச்சிருக்கியே டா"
"ண்ணா நீ சொன்ன மாதிரி தான் பண்ணேன்... என்ன பயத்துல கொஞ்சம் முன்னாடி விழுந்துட்டேன்" விட்டுவிட தயாராக இல்லை காந்தம்.
"புடுங்குன... அடி படுற மாதிரி விழு-னு சொன்னா நாடு ரோடுல சிவபுராணம் படிச்சிட்டு இருக்குற... பைத்தியகாரப் பயலே"
ஏதாவது செய்ய வேண்டும்... இதை விட்டால் பிறகு இது போன்ற சந்தர்ப்பமே அமையாது. இன்னும் சில நொடிகளில் உதய்யின் ஆட்களும் வந்துவிடுவார்கள். பைத்தியம் பிடித்தவன் போல் நாளா பக்கமும் பார்த்த ஆதியின் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை, சில கற்கள் மட்டுமே கிடைக்க அதை எடுத்து அந்த இளையவனின் தலையை உடைக்கும் எண்ணம் தான் மேலோங்க அதையே ஏன் செய்ய கூடாது என்ற எண்ணத்தில் அதை வேகமாக எடுத்து வந்தவன் கமல்காந்த் பக்கம் திரும்பினான்.
அவனோ, தான் திடீரென இடையில் வந்ததும் சடன் பிரேக் அடித்த வேகத்தில் ஸ்டேரிங்கில் முட்டி அடித்த போதையில் உறங்கியிருந்த ஹரியையும் விஷ்ணுவையும் பார்த்து, அந்த வாகனத்தை சுற்றி சுற்றி பார்த்தான்.
"டேய் தம்பி..." ஆதியின் குரல் கேட்டு திரும்ப, "மன்னிச்சுடு டா..." முழுதாய் அந்த வார்த்தையை காந்தம் கிரகிக்கும் முன்பே கமல்காந்த்தின் நெற்றியில் ஆதி ஓங்கி கல்லை கொண்டு அடித்திருந்தான்.
"ஆஆ.... ஐயோ அம்மா..."
நெற்றியை பிடித்து கதறியவனின் முகத்தை பிடித்து, "டேய் காந்தம்... ராசா மன்னிச்சுடு டா. போலீஸ்-கு வேற போன் பண்ணிட்டேன். அப்டியே டயர்கு ஒட்டி குப்புற படுத்துகோடா" கெஞ்சினான் ஆதி.
"யோவ் போயா நீயும் வேணாம் உன் காசும் வேணாம்"
"சரி டா போ... ஆனா நயா பைசா தர மாட்டேன்" - ஆதி
"ண்ணே இப்டி எல்லாம் பேசாமலாமா? எந்த இடத்துல படுக்கணும்னு சொல்லு சரியா படுத்தறேன்" பேசிக்கொண்டே இருக்கும் பொழுதே போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்க வாகனத்தின் டயர் அருகே குப்புற வேகமாக படுத்துகொண்டான் காந்தம்.
"நான் உன் பின்னாடியே தான் வருவேன் சரியா? தைரியமா இருடா சொதப்பிடாத... எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்றாங்கனு பாத்து எனக்கு மெசேஜ் போடு"
பல அறிவுரைகளை கூறி ஆதி அவ்விடத்தை விட்டு அகல பார்க்க படுத்த வாக்கிலே, "நீ அடிச்ச அடிக்கு என் மூளை எதுவும் ஆகிருகத்துல?"
என்ன செய்வான் அவனும்? ஆதி அடித்த அடியில் தலை வின் வின்னென்று தெறித்தது அதுவும் ரத்தம் வடிய வேறு துவங்கியது. இடத்தை விட்டு ஓடிக்கொண்டே,
"ஏற்கனவே அப்டி தான்டா இருக்க பேமானி... ஒழுங்கா நடி" - ஆதி
ஓரமாக சென்று ஆதி நின்று கொள்ள சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் ஒன்று வந்துவிட அதிலிருந்த காவல்துறையினர் வந்து முதலில் கமல்காந்த்தை ஆராய்ந்தவர்கள் அவன் மூச்சு காற்றை உணர்த்த பின்னர் ஹரி விஷ்ணுவின் வாகனத்தை உள்ளே உற்று பார்த்தனர்.
"சார் பெரிய இடம் மாதிரி தெரியுதே பசங்கள பாக்க" கான்ஸ்டாபில் இன்ஸ்பெக்டரிடம் கேள்வி எழுப்பினார்.
"ஆமாயா..."
"பேசாம அப்டியே விட்டுட்டு போய்டலாமா?" - கான்ஸ்டாபில்
"யோவ் நம்பர் ப்ளேட் பாத்தியா ஆர்.ஜே குரூப்ஸ் வண்டி. புடிச்சா நல்லா தேறும்" - இன்ஸ்பெக்டர்
"சார் கில்லாடி சார் நீங்க" பூரித்தான் அந்த கான்ஸ்டாபில்.
"பசங்கள எதுவும் பண்ணிட வேணாம். வண்டிய டோ போட்டு இழுத்துட்டு வர சொல்லு. இவன நாம ஹாஸ்பிடல் எடுத்துட்டு போகலாம்"
"அட்றா சக்க" மறைந்திருந்து பார்த்த ஆதியின் மனதில் உற்சாகம்.
ஹரி, விஷ்ணுவின் பாதுகாப்பிற்கும் எந்த தீங்கும் வர கூடாது, தன்னை நம்பி வந்த கமல்காந்தின் நிலைமையும் தான் உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த காவல் அதிகாரிகளின் பேச்சை உன்னிப்பாக கவனித்தான்.
இப்பொழுது அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை என்ற பிறகு தான் நிம்மதி. ஆதி மனதில் வேறு சில எண்ணங்களும் பய பந்தை உருட்டிக்கொண்டிருந்தது. உதய்யின் ஆட்கள். அவர்கள் மட்டும் வந்தால் மொத்த திட்டமும் வீணாகிடும் என்ற பயம் மனதின் வியாபித்தது.
"யாரு யா இன்பர்மேஷன் குடுத்தது?" - இன்ஸ்பெக்டர்
"தெரியல சார்... கால் பண்ணா போன் போகல... வண்டி வருது சார்..."
படபடப்புடன் ஆதி நிற்க, அவனுடைய பி.பியை ஏற்றாமல் சில நிமிடங்களில் அந்த வாகனம் வர விஷ்ணு, ஹரி இருந்த கார் அவ்விடத்தை விட்டு அகன்றது. அதன் பிறகு கமல்காந்தை பிடித்து வண்டியின் பின்னிருக்கையில் போட்ட காவல்துறையினர் வாகனத்தை எடுக்க மெதுவாக ஜன்னல் வழி எட்டி பார்த்த கமல்காந்த் ஆதிக்கு சிரிப்போடு டாட்டா கூற தலையில் அடித்து அவனை பின் தொடர சென்றான்.
அந்த பக்கம் உதய்யின் ஆட்கள் விஷ்ணு ஹரி இருவரையும் அந்த மொத்த இடத்தையும் புரட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தார்.
********************
இரவு மணி ஒன்பதை தாண்டி இருந்தது... அலுவலகத்திலிருந்து வந்த உதய், வீட்டிற்குள் போக மனமே இல்லாமல் அலுவலக பையை ஜெயன் கையில் கொடுத்து தளர்வாய் வீட்டின் வாசல்படியிலேயே அமர்ந்துவிட்டான். உள்ளே செல்ல மனமே இல்லை. அதனால் தான் நேரத்தை அதிகம் அலுவலகத்திலே செலவிட்டான்.
வீட்டினுள் நுழைந்தால் அன்னையின் நியாபகம், அந்த வீட்டில் அவர்கள் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களும் நினைவுகளும் வந்து ஆட்டி படைக்கும் உதய் மாதவனை. சகோதரர்களை விரைவாகவே வீட்டிற்கு அழைத்து செல்லும் அவன் அன்னை, உதய்யின் வரவிற்காக நிமிடத்திற்கொரு முறை வாசலை பார்க்கும் அன்னையை இத்தனை வருடங்களில் எத்தனை முறை நினைத்தாலும் மனம் துடியாய் துடிக்கும்.
அன்னையின் உடலில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை அழைத்து சென்றவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது, செல்லும் வெளியில் எங்கும் ஒரு சிரிப்போடு பாதி மூடிய கண்களோடும் உதய்யின் முகத்தை கயாத்திரியின் ரத்த கரை படிந்த கைகள் வருடியதையும் அவர் வார்த்தைகளையும்,
"ஆதியையும், நம்ம குடும்பத்தையும் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கோ தம்பி..." எவ்வளவு கதறியிருப்பான் அன்று அன்னையிடம் தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்று... கேட்டாளா அந்த அன்னை?
அன்று அவர் கேட்டிருந்தால் இன்று இப்படி மனம் முழுதும் வெறுமையோடும், கண்களில் கண்ணீரோடும் யாருமே இல்லாத வீட்டில் எவரும் இல்லாதது போல் அமர்ந்திருக்க தேவை இல்லையே... மனதிற்கு ஒரு ஆறுதல் யாழினியின் இடைவிடா பேச்சும், அர்த்தமிலா அவள் கேள்விகளும். இப்பொழுது அதுவும் இல்லை.
ஒரு கட்டத்தில் எதற்காக உயிர் வாழ்கிறோம் என்ற எண்ணங்கள் கூட சில தினங்களாக வர துவங்கியது. ஆதி, யாழினி, குடும்பம் இவர்களின் பிரிவு ஒரு புறமென்றால், இன்னும் சில வாரங்களில் அன்னையின் இறந்த தினம் வரவிருக்கிறது. எப்படி அந்த நாளை கடத்த போகிறோம் என்ற பயம் கூட அதிகம் வந்தது. தளர்வாய் அப்டியே வாசலில் படுத்துவிட்டான். தரையில்...
அன்னிச்சை செயலாக கைகள் பிடிவாதம் செய்து யாழினியின் எண்ணிற்கு அழைத்தது. சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்பட்டது. திருமண பேச்சை துவங்கிய அன்னையிடம் சண்டையிட்டு அழுது வீங்கிய கண்களோடு மொட்டை மாடியில் படுத்திருந்தவளுக்கு ஆறுதலாய் இருந்தது தொடுதிரையில் தெரிந்த அவனுடைய விறைப்பான முகம்.
உதய்யின் புகைப்படத்தை பார்க்க பார்க்க கண்ணீர் துளிகள் வழிந்துகொண்டே இருக்க அழுகையை மீறி விசும்பலும் விடாது வர துவங்கியது. அன்று அவன் இல்லத்தில் அவன் மடியில் அமர்ந்த நொடியே அவனை மட்டுமே தன்னுடைய உலகமாய், மானசீகமாக கணவனாய் எண்ண துவங்கியவள் வேறு ஒருவனை அந்த இடத்தில் வைத்து கூட பார்க்க உடல் கூசியது.
திருமணம் வேண்டாம் என்று ஒரேடியாக மறுத்த மகளை ஆத்திரம் தீர அன்னை திட்டுவிட்டார். அதனாலே அவன் புகைப்படத்தை பார்த்து ரணமான இதயத்தை ஆற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் அடுத்த நிமிடமே உதய்யின் அழைப்பு வர, மீண்டும் ஏதோ வலி புதிதாக ஆழமாக உருவாகியது. அவளுக்கு எப்படி தெரியும், தன்னை ஆட்டி வைத்த ஈஸ்வரன் சிறையில் உள்ளான் என்று?
அழைப்பை எடுக்காமல் விட்டால் அவனுக்கு என்ன மரியாதை என்று உடனே அழைப்பை ஏற்றாள் கண்களை துடைத்து. அழைப்பை ஏற்றும் இரண்டு பக்கமும் அமைதி மட்டுமே இருக்க, "இருக்கியா?" ஆடவனின் குரலும் தடுமாறியதோ?
"ம்ம் இருக்கேன் சார்" அழுகையை கட்டுப்படுத்துவது அவளுக்கு சவாலாக தான் இருந்தது... ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு இன்னும் தன் மேல் இருந்த பிரியமும் அவள் மனதி
ற்கு சுகத்தோடு வலியை தந்தது.
"என்ன பண்ற யாழினி?"
"சும்மா... மாடில இருக்கேன் சார்"
"சந்தோசமா இருக்கியா யாழினி?"
இல்லை என்று தலை ஆடியது ஆனாலும் நாவோ, "எனக்கு என்ன சார்? சந்தோசமா இருக்கேன்" என்றது.
"ஆபீஸ் வரலாமே..."