- Messages
- 997
- Reaction score
- 2,809
- Points
- 93
chap - 2
"சார்... அந்த புது ப்ரொஜெக்ட்ல கொஞ்சம் ப்ராப்லம்"
சக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "கேபின் உள்ள போய் பேசிக்கலாமா சக்தி?" என்றான் உதய்
அவன் கேள்வி கேட்பது போல் தோன்றவில்லை சக்திக்கு, கட்டளையிடும் அழுத்தம் தான் இருக்க, "சரி சார்" உடனே பதில் வந்தது சக்தியிடம் இருந்து .
சக்தி இயற்கையிலே பயந்த சுபாவம் உடையவன் ஆனால் வேலை என்று வரும்போது தீயாய் இருப்பான். அதனால் தான் என்னவோ உதய் மாதவன் அவனை எப்பொழுதும் தன் அருகில் வைத்து இருப்பான்.
"ஃபாரின் போற ஐடியா ஏதும் உங்களுக்கு இருக்குதா சக்தி?" துணியின் தரத்தை ஆய்வு செய்தவாறே கேள்வியை கேட்டான் உதய்.
"இப்ப வரைக்கு அப்டி எதுவும் இல்ல சார் பட் போனா நல்ல தான் சார் இருக்கும்" ஒரு வித கனவோடு வந்தது அவன் குரல். யாருக்கு தான் இருக்காது வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை.
"ஒருதடவையாச்சும் அம்மாவை பிலைட்ல கூட்டிட்டு போகணும் சார்" - சக்தி
"அம்மாவை அப்பறம் கூட்டிட்டு போகலாம் சக்தி அதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணுறீங்க நாளைக்கு மார்னிங் ஒரு 7 மணி போல ஏர்போர்ட் போங்க, ஜெர்மன்ல இருக்க நம்ம பிரான்ச்க்கு போய் மானிட்டர் பண்ணுங்க. ஒரு 3 மந்த்ஸ் அங்க இருக்குற மாறி இருக்கும் அதுக்கு அப்பறம் என்ன பண்ணனும் னு அப்பறம் சொல்றேன் நிலவரத்தை பொறுத்து. இப்ப கிளம்புங்க வீட்டுக்கு, போறப்ப என்ன இஷ்யூனு ஜெயன் கிட்ட சொல்லிருங்க நா பாத்துக்குறேன் அவன் கிட்ட தான் டிக்கெட் இருக்கு அதயும் வாங்கிக்கோங்க".
"ஆனா சார் ஆல்ரெடி அங்க உங்க மாமா இருக்காங்க நா எப்டி..." என்று இழுத்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் உதய் மாதவன்.
"எதுவும் சொன்னீங்க இப்ப?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம்,
"இல்ல சார் நைட் ப்ளைட் இல்லையானு கேட்டேன்" - சக்தி
"போங்க சக்தி" இறுதி உத்தரவாக வந்தது அவன் குரல். மண்டையை ஆட்டிக்கொண்டே இடத்தை விட்டு சென்றான் சக்தி.
"சூப்பர்வைசர் எங்க?" இடத்தையே அதிர வைத்தது அவன் குரல்.
"சார் இங்க தான் சார் இருக்கேன் ஏதும் மிஸ்டேக் ஆகிடுச்சா?" பதறியபடியே ஓடி வந்து கேட்டார் சூப்பர்வைசர்.
"ஆமாங்க மிஸ்டேக் தான். இங்க பாருங்க எத்தனை சின்ன சின்ன ஓட்டை இருக்குனு, இத பாக்க தான் உங்களுக்கு வேலை. இதுல இது குவாலிட்டி செக் தாண்டியே போயிருச்சு" சாதாரண தோணியில் பேசினாலும் அது பேச்சு அல்ல கோவம் என்று அனைவரும் நன்கு அறிந்தனர்.
"சாரி சார் இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குறேன்" நடுக்கத்தோடு பதில் அளித்தார்.
"2 வது கம்பிளைன் இது இந்த வீக்ல இப்டியே நான் உங்கள எப்பயும் விட்டுட்டு இருக்கணுமா?" - உதய்
"சார் சாத்தியமா இனி இப்படி நடக்காது சார், ஒரு தடவ எக்ஸ்குயூஸ் குடுங்க சார்"
"பேச்சுக்கு நூறு சார் போடாம வேலைய பாருங்க இது தா லாஸ்ட் வார்னிங் இனி இப்டி வந்து பேசிட்டு இருக்க மாட்டேன்" எச்சரித்து விட்டு உதய் விறு விறுவென வெளியேறினான்.
"ஜெயன் ஆபீஸ்க்கு வண்டிய விடுங்க" வாகனத்தில் ஏறி அமர்ந்து ஜெயனுக்கு உத்தரவிட்டான் உதய்.
உதயின் செக்யூரிட்டி தான் ஜெயன். சக்தியும் ஜெயனும் தான் உதயின் பெரும் பலம், இவன் நினைத்ததை அவன் கண் அசைவில் செய்துவிடும் அளவு உதய்யை புரிந்து வைத்து இருப்பர் இருவரும், "சார் உங்க ப்ரண்ட் ஆதவன் கால் பண்ணாரு".
"என்னவாம் அவனுக்கு?"
அவன் கேட்ட தோரணை ஜெயனின் இறுகிய முகத்தில் ஒரு சிறு புன்னகையை தந்தது. ஏனெனில் இவர்களின் நட்பு அவ்வாறு. உதய் எப்பொழுதும் முகத்தில் இரும்பை காய்ச்சி ஊற்றியது போல் இறுக்கமாக இருப்பவன் ஆனால் ஆதவனோ சிரிப்பை மட்டுமே இதழ்களில் வைத்து இருப்பவன். உதய் எவரிடமும் சிரித்து பேச லஞ்சம் கேட்பான். ஆனால், நண்பனிடம் மட்டும் முழுவதுமாக வேறு ஆளாய் இருப்பான்.
"ஏதோ முக்கியமான விஷயம் நேர்ல வந்து பேசுறேன்னு சொன்னாங்க. ஆபீஸ்க்கு நீங்க போறத சொல்லிரவா?" - ஜெயன்
"வேணாம் ஜெயன். வந்தா வேலையவே கெடுத்து விட்ருவான். ஈவினிங் வர சொல்லுங்க" தலையை ஆட்டி ஆதவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் ஜெயன்.
"தம்பிங்க என்ன பண்ணுறாங்க" - உதய்
"கன்ஸ்டிரக்சன் சைட்-கு அனுப்பி விட்ருக்கேன் சார், நான் வாட்ச் பண்ண வரைக்கும் அவங்களுக்கு அதுல தான் ஆர்வம் இருந்துச்சு கூடவே உங்க சித்தப்பா இருக்காங்க சார்". தந்தையை விட சித்தப்பா சற்று கடுமையானவர் தொழில் எனும்போது அதனால் சற்று அமைதி ஆனான் உதய்.
"இருந்தாலும் ரெண்டு பேரையும் நல்லா வாட்ச் பண்ணுங்க ஜெயன். எந்த சாக்கு கிடைத்தாலும் அதுல சுலபமா எஸ்கேப் ஆகிடுவாங்க. ரெண்டுபேரும் ஒரே ஆபீஸ்ல இருக்க கூடாது. எல்லாத்தையும் கத்துக்கணும். வாரம் வாரம் வேற வேற டிபார்ட்மென்ட் போக சொல்லுங்க"
சிரித்துக்கொண்டே ஜெயன் , "ஓகே சார்" ஆமோதித்தான்.
"என்ன பிரச்னை புது ப்ரொஜெக்ட்ல" கேட்டான் பார்வையை வெளியில் விட்டபடியே.
"இன்வெஸ்டர்ஸ் டீல்ல சைன் பண்ண டிலே பண்றங்க, சக்தி சொன்னதை வச்சு பாத்தா ஏதோ தப்பு நடக்குது சார். நம்ம ஆளுங்களே ஏதோ பிரச்னை பண்ணுறாங்க உள்ளுக்குள்ளயே" தலையை மெலிதாக ஆட்டியவன் ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் வெளியில் செல்லும் வாகனங்களையே வெறித்து பார்த்து வந்தான். அப்போது அந்த அமைதி பெரிதும் தேவை பட்டது போல்.
கார் அலுவலகத்தை அடைந்த பின்னர் சுயத்திற்கு வந்தவன், "மீட்டிங் போட்டு ரொம்ப நாள் அச்சுல ஜெயன்?"
"இன்வெஸ்டர்ஸ் மீட்டிங் இங்கே அரேன்ஜ் பண்ணனுமா சார்?" கேட்டான் ஜெயன்.
"வர சொல்லுங்க அடுத்த வாரம். இந்த காய்கறி வாங்கனும், கார் டயர் பஞ்சர்னு எவன் எவன்லா சாக்கு சொல்றனோ அவனைலாம் தூக்கிட்டு வர்றது உங்க வேலை. ஒருத்தன் விடாம எல்லாரும் இருக்கனும் சனிக்கிழமை 10 மணிக்கு" கோவத்தில் ஆணையாய் வந்தது அவன் குரல்.
சில நொடிகள் அமைதிக்கு பிறகு, "அதுக்கு முன்னாடி நம்ம மெக்கானிக்கல் என்ஜினீர்ஸ் டீமோட ஒரு மீட்டிங் ஃப்ரைடே இன்போர்ம் பண்ணிருங்க" எதற்காக தொழிலாளர்களிடம் பேச வேண்டும் என்கிறான் என்று புரியாமல் இருந்தாலும் அவன் செய்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்று அறிந்து அதையும் தயார் செய்தான் ஜெயன்.
காரில் இருந்து கீழ் இறங்கி கார்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் இண்டஸ்ட்ரிக்கு நுழைந்தனர். பல கிளைகள் இருந்தாலும் இதுவே தலைமை அலுவலகமாக இருந்தது. கூலர்ஸ் அணிந்து கருப்பு பாண்ட், வைட் முழு கை சட்டையுடன் வந்தவனை பார்த்து அனைவருக்கும் 'இன்னும் கொஞ்ச நேரம் இவனை பாக்கலாமே' என்று தோன்றியதில் ஆச்சரியம் இல்லை தான்.
அவ்வளவு ஸ்டைல் ஆக இருந்தான், அதிலும் அலை அலையாய் இருந்த அவன் முடியை நொடிக்கொரு முறை கோதிய விதம் அவன் அழகை ஒருபடி சற்று உயர்த்தியே வைத்தது.
அனைவரின் வணக்கத்தை சிறு தலை அசைவில் திரும்பி கொடுத்து 7 வது மாடிக்கு லிப்ட்-இல் சென்றான். அவனை பின் தொடர்ந்து வந்த இரண்டு காட்ஸ் வெளியே நிற்க ஜெயன் மட்டும் உள்ளே சென்றான்.
"மச்சி... உன் கோட் தொலதொலனு இருக்கு டா" எரிச்சலுடன் ஒரு பெருமூச்சு விட்டு உதய் திரும்பி பார்க்க அங்க நின்றது ஆதவன் தான்.
"ஏன்டா இந்த வைட், ரெட், மெரூன் கலர்ல கோட் வாங்க மாட்டியா?"
எதுவும் பேசாமல் நேராக உதய் முறைத்தது ஜெயனை தான், "சார் நா சொல்லல" என்றான் ஜெயன் பதறியவாறே.
"அவனை ஏன் மச்சி மொறைக்கிற உன் ஆளுங்கல்ல நான் மடக்க முடியாதது இவன் ஒருத்தன மட்டும் தான். ஆனாலும், நீ சம்பளமே போடாத மாதிரி 100 ரூபா குடுத்தாக் கூட நீ எங்க இருக்க-னு சொல்லிறாங்க டா உன் ஆளுங்க. பாத்து வச்சுகோடா" உதய்யின் எதிரில் அமர்ந்து காலை டெஸ்க் மேல் வைத்தான் ஆதவன்.
"சார் நா வெளிய வெயிட் பண்றேன்" சொல்லிவிட்டு வெளியே சென்றான் ஜெயன் சிரித்துக்கொண்டே...
"கோட் எடுக்க தான வந்த கெளம்பு இப்ப" - உதய்
"என்னடா பொசுக்குன்னு வெளிய போக சொல்ற, பொறு கொஞ்ச நேரம் பேசிட்டு அப்டியே இருக்கலாம் உன்ன பாத்து எவ்ளோ நாள் ஆச்சு" - ஆதவன்
"என்ன வேணும் உனக்கு டைரக்ட்டா சொல்லு வேலை இருக்கு எனக்கு" -
"அது ஒன்னும் இல்லடா இந்த டாக்குமெண்ட் இருக்கு பாரே" முன்னிருந்த ஒரு பைலை காண்பித்து, "இது கொஞ்சம் பெருசா இருக்கு முடிச்சு தரியா?" மூஞ்சியை அப்பாவியாக வைத்து கேட்டான்.
"ஏன்டா உனக்கு வெக்கமாவே இல்லையா உனக்கு எதுக்கு உங்க அப்பா கம்பெனி குடுத்தாரு?" திட்டிக்கொண்டே பைலை எடுத்து பார்த்தான் உதய்.
"மச்சி என்ன சொன்னாலு நான் கேக்க மாட்டேன்-னு தெரியும்ல அப்புறம் ஏன் கேக்குற. ஆமா எங்க உன்னோட பலகார பெட்டி?"
ஒரு முறை விட்டு, "அவனை ஜெர்மன் அனுப்பிருக்கேன்" - உதய்
"எதுக்கு?" - ஆதவன்
"நீ தான சொன்ன என்னோட மாமா என்னமோ பன்றாரு கம்பெனில எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வை-னு" அதிர்ச்சியாய் பார்த்தான் ஆதவனை.
"ஓ... நான் தான் சொன்னேன்னா...? ம் சொல்லிருப்பேன்" - ஆதவன்
ஆதவனுக்கு டிடெக்ட்டிவ் ஆக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவு ஆனால் தந்தையின் உடல்நல குறைவால் மொத்த எதிர்பார்ப்பு, சுமை, பொறுப்பு எல்லாம் அவன் தலையில் வந்து இறங்கியது.
வேறு வழியின்றி வேலையை செய்து வருபவன் மனம் சோர்த்து போகும் பொழுது உதயனை தேடி வருவது அவனுக்கும் தெரிந்த விஷயமே. அதனால் அவன் கூறும் சிறு சிறு பொய்களை வாங்கி கொண்டு அவன் பேசுவதை பொறுமையாக கேட்பான் உதய்.
"சொல்லு என்ன பிரச்னை?" பைலை பார்த்து கொண்டே கேட்டான் உதய்.
"அது ஒன்னும் இல்லடா எங்க அம்மா இருக்காங்கல்ல அவங்க என்ன ரொம்ப டார்சர் பண்ணுறாங்க" சிறு பிள்ளை போல் முகத்தை வைத்து கொண்டான் ஆதவன்.
"எதுக்கு?" - உதய்
"கல்யாணம் பண்ணிக்க சொல்லி" - ஆதவன்
"பண்ணிக்க வேண்டியது தான?" - உதய்
"எப்படிடா... பண்ணிக்க சொல்ற நீயும்? உனக்கு தான் தெரியும்ல நான் எவ்வளோ கனவோட லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன்னு"
"மாசம் மாசம் லவ் பண்றேனு போற அப்பறம் ரெண்டே நாள்ல வந்து செட் ஆகாதுன்னு பேசுற. உண்மைய சொல்லு உனக்கு வேற யாரையோ புடிச்சிருக்கு ஆனா வெளிய சொல்ல மாட்டிக்கிற" உதய் கோவத்தோடு ஆதவனை பார்த்தான்.
அவன் கூறிய வார்த்தையை கேட்ட உடனே அவன் கண் முன்னால் வந்த முகத்தை ரசிக்க முடியாமல் இதயம் சுருங்கியது ஆதவனுக்கு.
"அட போடா அப்டிலா ஒன்னுமே இல்ல, சரி உனக்கு எப்ப கல்யாணம்?"
"ஐடியா இல்ல"
ஆர்வமே இல்லாமல் வேலையை பார்த்தவனை, "ஏண்டா...! உன்ன மாதிரியும் மனுசங்க உலகத்துல இருக்க தான்.. செய்வாங்களா, எப்படி உனக்குனு ஏதாச்சும் ஆசை, கனவுனு இருக்கனும்டா, எத்தனை நாள் தான் பொம்மை மாறியே இருப்ப கொஞ்சம் ஆச்சும் என்ஜாய் பண்ணுடா லைஃப்-அ. பார்ட்டி கூப்டா வர மாட்டிக்கிற, பிரண்ட்ஸ் கூட வெளிய வர மாட்டிக்கிற 24 மணி நேரமும் வேலையவே பாத்துட்டு இருந்தா மனசுக்கு ஏதாச்சும் ஆறுதல் வேணாமா?"
" வெளிய போனா சந்தோசமா இருக்கும் தான், ஆனா தனியா போய் போய் என்னோட ஸ்ட்ரெஸ் தான் கூடுதே தவற குறையல ஆதவா. என்ன சுத்தி என் குடும்பம் வேணும் எனக்கு. நானும் வீட்டுல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் வெளிய கூட்டிட்டு போனேன், ஆனா என்ன ஆச்சு தெரியுமா??
உனக்கு புடிச்ச ட்ரெஸ்ஸ வாங்கி குடுன்னு பயந்து பின்னாடி நிக்கிறாங்க. புடிக்காத ஒன்ன காமிச்சு ஒகேவா-னு கேட்டா கூட சரினு மண்டைய மண்டைய ஆட்டுறாங்க. அதுக்காகவா கூட்டிட்டு போனேன்? ஒரு நாள் சந்தோசமா அவங்களுக்கு புடிச்சத அவங்களா அவங்க என் முன்னாடி நிக்க வச்சு பாக்கணும்னு ஆசை. என் தம்பிக என்னமோ எதிரியை பாத்த மாறி நிக்கிறாங்க, தங்கச்சிக ஒரு டீச்சரை பாக்குற மாறி பயப்புடுறாங்க. ஆனா அவங்க நாலு பேர் அவளோ ஒத்துமையா இருக்காங்க. நேத்து கூட அவனுங்க தண்ணி அடிச்சிட்டு 12 மணிக்கு வந்ததுக்கு அண்ணனுகளுக்கு அப்படி சப்போர்ட் பண்றா திவ்யா" என்றவன் மௌனமாக சிறிது நேரம் கழித்தான்.
"ஓகே... என் மேல இருக்க பயத்துனால தான் எப்படி ஒதுங்கி போறாங்கனு அதுக்கு ஒரு சொல்யூசன் பிளான் பண்ணுனேன், ஒரு வாரம் ஆபீஸ் லீவு போட்டேன் நீ அப்ராட் போன டைம்ல. நாலு பேரும் ஒரே ரூம்ல தான் மணி கணக்கா இருப்பாங்க, உள்ள போய் நானும் கூட இருந்தேன். அவளோ நேரம் கலகலப்பா இருந்த ரூம் நான் போனதும் சய்லண்ட் ஆகிடுச்சு. சரி, அவங்க சீக்ரெட்ஸ் ஷேர் பண்ண வேணாம் ஆனா ஒரு அண்ணன் கிட்ட பேசுற மாறி ஆச்சும் பேசலாம்ல?"
"ஒரு வார்த்தை கூட பேச மடிக்கிறாங்க டா. மொத நாள் தான நாளைக்கு பேசலாம்-னு போனேன். மறுநாளும் அதே நிலைமை தான். மூணாவது நாள் இருந்து எல்லாரும் அவுங்க அவுங்க ரூம்ல இருக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் சித்தி கிட்ட பேசப் போனேன், 'வா பா'-னு பாசமா தான் இருக்காங்க.
ஆனா, விஷ்ணு மேல இருக்க அந்த உரிமை என்மேல காட்ட மாட்டிங்கிறாங்க. அவங்கள நான் அம்மாவா பாக்குறேன் ஆனா அவங்க என்ன புள்ளைய பாக்கலைடா. இன்னும் அக்கா பையனா தான் பாக்குறாங்க. உரிமையா என்கிட்ட இது வரைக்கும் எதுவும் கேட்டது இல்ல, ஒரு தயக்கம் இருக்கு அவங்க கண்ணுல அந்த ஒரு பார்வையே தள்ளி போடானு சொல்லுது. அப்பா சித்தப்பா சொல்லவே தேவ இல்ல அவங்க பக்கத்துல போய் ஒக்கந்தாலே 'என்ன பா பிசினஸ்ல எதுவு ப்ராப்லமா'-னு கேக்குறாங்க"
எப்போதும், ஏதுவாகிலும் கம்பீரமாக, சிதறாமல் இருக்கும் தன் நண்பனா இவன் என்று வியக்கும் அளவுக்கு இருந்தது அவன் பேச்சு ஆதவனுக்கு "டேய் திடு துப்புன்னு நீ போய் பேசுனனால அப்டி இருந்திருப்பாங்க டா"
பெருமூச்சு விட்ட உதய், "அதெல்லாம் இல்லடா அந்த ஒரு வாரம் செய்யாததை ஒரு மாசம் ட்ரை பண்ணேன் காலைல சாயந்தரம்னு. ஆனா ஒன்னும் மாறல, வீட்டுல இருந்து தான் டா நிம்மதி, சந்தோசம், துக்கம் எல்லாமே ஒரு மனுசனுக்கு. அங்க சந்தோசம் இருந்ததா வேலை அலுப்புலாம் ஒன்னுமே இல்ல. ஆனா எனக்கு வீட்டுல இருந்து எந்த உணர்வும் கிடைக்கல வெறுமை மட்டும் தான் இருக்கு. எல்லாத்தையும் மீறி ஊர் சுத்தி வீட்டுக்கு போனலும் அது நிலைக்க போறது இல்ல. அப்ப ஏன் மனசுக்கு அந்த கொஞ்ச நேரம் அல்ப சந்தோசம்? அது பாட்டுக்கு இப்டியே எம்டியா இருக்கட்டும்"
'எப்படி டா இவ்வளோ வருத்தத்தை இப்படி மறச்சு வச்சிருக்க?' தோழனின் நிலை ஆதவனுக்கு வலித்தது.
"சொந்த வீட்டுலயே மூணாவது மனுஷன் மாறி இருக்க வேண்டி இருக்கு" வலி நிறைந்த புன்னகையோடு உதய் வார்த்தைகளை உதிர்த்த பொழுது மனம் கனத்தது ஆதவனுக்கு.
"எங்க வீட்டுக்கு கொஞ்ச நாள் வந்து இருடா" ஒரு நாளும் மனதில் இருப்பதை வெளியில் கூறாதவன் இன்று இவ்வளவு பேசியதை கேட்க கேட்க பொறுக்க முடியவில்லை ஆதவனால்.
சிரித்தான் உதய், "டேய் இப்ப தான சொன்னேன், தற்காலிகமா இருக்க எந்த சந்தோஷமும் எனக்கு வேணாம் டா. எனக்கு நிம்மதி-னு ஒன்னு இருந்தா கண்டிப்பா கிடைக்கும், இல்லனு இருந்தா எப்பவும் இருக்காது. இப்படியே பேசிட்டு இருக்காத இந்தா பைலை வாங்கிட்டு கிளம்பு" என்றபடி மடிக்கணினியை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான் சாதாரணமாக.
பைலை எடுக்காமல் டேபிளை சுற்றி உதய்யின் முன்னால் வந்து நின்றவன் சட்டென்று குனிந்து நண்பனை இறுக்க அணைத்தான், "எவன் உன்கூட இருந்தாலும் இல்லன்னாலும் நான் இருப்பேன். எப்பயும் எங்கயும் உயிரை குடுக்க கூட தயங்க மாட்டேன்"
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் கண்டு கொள்ள வில்லை ஆதவன். எப்பொழுதும் விளையாட்டாய் இருப்பவனின் இந்த அழுத்தம் திருத்தமான கணீர் பேச்சில் அவ்வளவு உறுதி இருந்தது. அது உதயனை மௌனம் ஆக்கியது உண்மை தான் ஆனால் ஒரு ஆழ்ந்த அமைதி கிடைத்தது அவனுக்கு.
நிதானத்திற்கு வந்தவன், "சரி அப்டியே போன மாசம் ட்ரீட் பாக்கி இருக்கு மறந்துட்டியா?" புருவத்தை உயர்த்தி கேட்டான் ஆதவன்.
ஒரு நூறு ருபாய் தாளைக் குடுத்து "நீ குடிக்கப் போறது ஒரு கோக் அதுக்கு இது போதும்" என்றான்.
"என்னடா பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட" புலம்பினான் ஆதவன். கையில் கோடி கோடியாக பணம் இருந்தாலும் நண்பனை நச்சரித்து அவன் பணத்தில் ஒரு ரொட்டி வாங்கி உண்டால் கூட அதன் சுவை தனி தானே?
வாய்விட்டு சிரித்தான் உதய், "நீ எனக்கு எப்பயும் பிச்சைக்காரன் தான் டா, எப்ப பைலை எடுத்துட்டு வராம இருக்கியோ அப்ப தான் உன்ன மதிப்பேன்"
"இனி உன் கேபின்ல கால வச்சா என்ன-னு நீ என்ன கேளுடா" என்றான் வேடிக்கையாக.
"ஆமா மறந்துட்டேன் வீட்டுல ஒரு பூஜை ஏற்பாடு பண்ணிருக்காங்க சித்தி. உன்னையும் வர சொன்னாங்க. நாளைக்கு வந்து சேர்ந்துரு" தகவல் கொடுத்து வேலையில் இறங்கினான் உதய்.
"ஞாயிற்று கிழமைடா நாளைக்கு. காலைல வேகமாலாம் எந்திரிச்சு வர முடியாது" சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்.
"எனக்கு தெரியாது சித்திட்ட பேசிக்கோ" - உதய்
'ஆத்தி சிக்குனா அட்வைஸ் பண்ணியே வச்சு செஞ்சிருவாங்களே' யோசித்து, "சரி வரேன் ஆனா நல்ல நாட்டுக் கோழியப் புடிச்சு கொழம்பு வையுங்க"
"சாம்பார் தான் இஷ்டம்னா வா, இல்லனா போ"
'எங்க போனாலு லாக் வைக்கிறானே' தன்னையே பார்ப்பவனை பார்த்து, "உனக்காண்டி வர்றேன் சரியா?" நண்பனின் குறும்புத்தனத்தை உள்ளூர ரசித்தபடி, "கிளம்பு இல்லனா உங்க அப்பாக்கு போன் போட போறேன்"
"அஅ...அப்பாக்கு எதுக்கு தேவ இல்லாம இந்தா போய்ட்டேன் பாரு" கூறி ஓடி விட்டான் ஆதவன். அவனின் வருகை உதயனுக்கு சற்று அவசியமாக தான் இருந்தது.
*******************
ஷீலா கடும் கோபத்துடன் பிள்ளைகளை முறைத்து முறைத்து பார்த்து கொண்டு இருந்தார். தமிழும் பவித்ராவும் தான். இனிப்பான கரும்பை அண்ணன் எடுத்ததற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தனர் அவர்களுக்கு இணையாக முறைத்து கொண்டே இருந்த ஷீலாவை பார்த்து, "அம்மா உன் முட்டை கண்ண எவளோ உருட்டி பாத்தலும் நான் நிக்க போறது இல்ல, என்ன தைரியம் இருந்தா அவன் நான் எடுத்து வச்சிருந்த கரும்ப திருடி திம்பான்?"
தாய்க்கு பின்னால் நின்று போக்கு காட்டியபடியே, "மா நீங்களே சொல்லுங்க நான் என்ன அவளை மாதிரி திருடி , ஒளிச்சு வச்சா சாப்பிடுவேன். ஒழுங்கா கொஞ்சம் மொதயே தந்துருந்தா வாங்கியிருக்க கூட மாட்டேன். ஆனா இவ முழுசா ஒளிச்சு வச்சிருக்கா" இன்னும் சண்டையை முடிக்கும் எண்ணம் தமிழுக்கு இல்லை.
கோவம் ஏறிக்கொண்டே சென்றது ஷீலாவிற்கு இவர்களின் சிறு பிள்ளை வேலையை பார்க்கும் பொழுது.
"நடிக்காதடா ...நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும் சும்மா அளந்து விடறது நல்லவன் மாதிரி" - பவித்ரா
"உன்ன விட நான் நல்லவன் தான்டி, போன வாரம் என்ன பண்ண நீ? நியாபகம் இருக்கா? உன் கிளாஸ் பசங்க கூட சேந்து சினிமாக்கு போயிட்டு வந்துட்டு, வீட்டுல பொண்ணுங்க கூட போறேன்னு பொய் சொன்ன" - தமிழ்
"நீ என்ன பண்ண? என் பிரின்ட் கிட்ட லவ் லெட்டர் என்ன வச்சே குடுக்க வச்சல?" - பவித்ரா
இருவரின் ரகசியங்களும் சிறுகச்சிறுக வெளியே வர ஆரம்பிக்க கடுப்பானது என்னவோ ஷீலா தான், "இப்ப ரெண்டு பேரும் வாய மூடுறீங்களா இல்லையா? இப்டியே பேசிட்டே இருந்தா சோறு கிடையாது மதியம்"
அவ்வளவு தான் சாப்பாடு பேச்சு வந்தால் அனைத்தும் அடங்கி விடும் இருவருக்குள்.
தாயின் முகத்தில் இரு
க்கும் மாறுதலை உணர்ந்தவன் அருகில் சென்று அமர்ந்தான் அவர் தோளில் அன்பாக கை போட்டு, "என்ன ஆச்சு என் மம்மிக்கு? முகம் ஏன் டல்லா இருக்கு?"
"ஏண்டா தமிழு உனக்கு ஆதியை பாக்குறப்ப ஒன்னுமே தோணாதா?" - ஷீலா
(கீழே தொடர்ந்து படிக்க)
"சார்... அந்த புது ப்ரொஜெக்ட்ல கொஞ்சம் ப்ராப்லம்"
சக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "கேபின் உள்ள போய் பேசிக்கலாமா சக்தி?" என்றான் உதய்
அவன் கேள்வி கேட்பது போல் தோன்றவில்லை சக்திக்கு, கட்டளையிடும் அழுத்தம் தான் இருக்க, "சரி சார்" உடனே பதில் வந்தது சக்தியிடம் இருந்து .
சக்தி இயற்கையிலே பயந்த சுபாவம் உடையவன் ஆனால் வேலை என்று வரும்போது தீயாய் இருப்பான். அதனால் தான் என்னவோ உதய் மாதவன் அவனை எப்பொழுதும் தன் அருகில் வைத்து இருப்பான்.
"ஃபாரின் போற ஐடியா ஏதும் உங்களுக்கு இருக்குதா சக்தி?" துணியின் தரத்தை ஆய்வு செய்தவாறே கேள்வியை கேட்டான் உதய்.
"இப்ப வரைக்கு அப்டி எதுவும் இல்ல சார் பட் போனா நல்ல தான் சார் இருக்கும்" ஒரு வித கனவோடு வந்தது அவன் குரல். யாருக்கு தான் இருக்காது வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசை.
"ஒருதடவையாச்சும் அம்மாவை பிலைட்ல கூட்டிட்டு போகணும் சார்" - சக்தி
"அம்மாவை அப்பறம் கூட்டிட்டு போகலாம் சக்தி அதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணுறீங்க நாளைக்கு மார்னிங் ஒரு 7 மணி போல ஏர்போர்ட் போங்க, ஜெர்மன்ல இருக்க நம்ம பிரான்ச்க்கு போய் மானிட்டர் பண்ணுங்க. ஒரு 3 மந்த்ஸ் அங்க இருக்குற மாறி இருக்கும் அதுக்கு அப்பறம் என்ன பண்ணனும் னு அப்பறம் சொல்றேன் நிலவரத்தை பொறுத்து. இப்ப கிளம்புங்க வீட்டுக்கு, போறப்ப என்ன இஷ்யூனு ஜெயன் கிட்ட சொல்லிருங்க நா பாத்துக்குறேன் அவன் கிட்ட தான் டிக்கெட் இருக்கு அதயும் வாங்கிக்கோங்க".
"ஆனா சார் ஆல்ரெடி அங்க உங்க மாமா இருக்காங்க நா எப்டி..." என்று இழுத்தவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் உதய் மாதவன்.
"எதுவும் சொன்னீங்க இப்ப?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம்,
"இல்ல சார் நைட் ப்ளைட் இல்லையானு கேட்டேன்" - சக்தி
"போங்க சக்தி" இறுதி உத்தரவாக வந்தது அவன் குரல். மண்டையை ஆட்டிக்கொண்டே இடத்தை விட்டு சென்றான் சக்தி.
"சூப்பர்வைசர் எங்க?" இடத்தையே அதிர வைத்தது அவன் குரல்.
"சார் இங்க தான் சார் இருக்கேன் ஏதும் மிஸ்டேக் ஆகிடுச்சா?" பதறியபடியே ஓடி வந்து கேட்டார் சூப்பர்வைசர்.
"ஆமாங்க மிஸ்டேக் தான். இங்க பாருங்க எத்தனை சின்ன சின்ன ஓட்டை இருக்குனு, இத பாக்க தான் உங்களுக்கு வேலை. இதுல இது குவாலிட்டி செக் தாண்டியே போயிருச்சு" சாதாரண தோணியில் பேசினாலும் அது பேச்சு அல்ல கோவம் என்று அனைவரும் நன்கு அறிந்தனர்.
"சாரி சார் இனிமேல் இப்படி நடக்காம பாத்துக்குறேன்" நடுக்கத்தோடு பதில் அளித்தார்.
"2 வது கம்பிளைன் இது இந்த வீக்ல இப்டியே நான் உங்கள எப்பயும் விட்டுட்டு இருக்கணுமா?" - உதய்
"சார் சாத்தியமா இனி இப்படி நடக்காது சார், ஒரு தடவ எக்ஸ்குயூஸ் குடுங்க சார்"
"பேச்சுக்கு நூறு சார் போடாம வேலைய பாருங்க இது தா லாஸ்ட் வார்னிங் இனி இப்டி வந்து பேசிட்டு இருக்க மாட்டேன்" எச்சரித்து விட்டு உதய் விறு விறுவென வெளியேறினான்.
"ஜெயன் ஆபீஸ்க்கு வண்டிய விடுங்க" வாகனத்தில் ஏறி அமர்ந்து ஜெயனுக்கு உத்தரவிட்டான் உதய்.
உதயின் செக்யூரிட்டி தான் ஜெயன். சக்தியும் ஜெயனும் தான் உதயின் பெரும் பலம், இவன் நினைத்ததை அவன் கண் அசைவில் செய்துவிடும் அளவு உதய்யை புரிந்து வைத்து இருப்பர் இருவரும், "சார் உங்க ப்ரண்ட் ஆதவன் கால் பண்ணாரு".
"என்னவாம் அவனுக்கு?"
அவன் கேட்ட தோரணை ஜெயனின் இறுகிய முகத்தில் ஒரு சிறு புன்னகையை தந்தது. ஏனெனில் இவர்களின் நட்பு அவ்வாறு. உதய் எப்பொழுதும் முகத்தில் இரும்பை காய்ச்சி ஊற்றியது போல் இறுக்கமாக இருப்பவன் ஆனால் ஆதவனோ சிரிப்பை மட்டுமே இதழ்களில் வைத்து இருப்பவன். உதய் எவரிடமும் சிரித்து பேச லஞ்சம் கேட்பான். ஆனால், நண்பனிடம் மட்டும் முழுவதுமாக வேறு ஆளாய் இருப்பான்.
"ஏதோ முக்கியமான விஷயம் நேர்ல வந்து பேசுறேன்னு சொன்னாங்க. ஆபீஸ்க்கு நீங்க போறத சொல்லிரவா?" - ஜெயன்
"வேணாம் ஜெயன். வந்தா வேலையவே கெடுத்து விட்ருவான். ஈவினிங் வர சொல்லுங்க" தலையை ஆட்டி ஆதவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் ஜெயன்.
"தம்பிங்க என்ன பண்ணுறாங்க" - உதய்
"கன்ஸ்டிரக்சன் சைட்-கு அனுப்பி விட்ருக்கேன் சார், நான் வாட்ச் பண்ண வரைக்கும் அவங்களுக்கு அதுல தான் ஆர்வம் இருந்துச்சு கூடவே உங்க சித்தப்பா இருக்காங்க சார்". தந்தையை விட சித்தப்பா சற்று கடுமையானவர் தொழில் எனும்போது அதனால் சற்று அமைதி ஆனான் உதய்.
"இருந்தாலும் ரெண்டு பேரையும் நல்லா வாட்ச் பண்ணுங்க ஜெயன். எந்த சாக்கு கிடைத்தாலும் அதுல சுலபமா எஸ்கேப் ஆகிடுவாங்க. ரெண்டுபேரும் ஒரே ஆபீஸ்ல இருக்க கூடாது. எல்லாத்தையும் கத்துக்கணும். வாரம் வாரம் வேற வேற டிபார்ட்மென்ட் போக சொல்லுங்க"
சிரித்துக்கொண்டே ஜெயன் , "ஓகே சார்" ஆமோதித்தான்.
"என்ன பிரச்னை புது ப்ரொஜெக்ட்ல" கேட்டான் பார்வையை வெளியில் விட்டபடியே.
"இன்வெஸ்டர்ஸ் டீல்ல சைன் பண்ண டிலே பண்றங்க, சக்தி சொன்னதை வச்சு பாத்தா ஏதோ தப்பு நடக்குது சார். நம்ம ஆளுங்களே ஏதோ பிரச்னை பண்ணுறாங்க உள்ளுக்குள்ளயே" தலையை மெலிதாக ஆட்டியவன் ஒரு வார்த்தை கூட பதில் சொல்லாமல் வெளியில் செல்லும் வாகனங்களையே வெறித்து பார்த்து வந்தான். அப்போது அந்த அமைதி பெரிதும் தேவை பட்டது போல்.
கார் அலுவலகத்தை அடைந்த பின்னர் சுயத்திற்கு வந்தவன், "மீட்டிங் போட்டு ரொம்ப நாள் அச்சுல ஜெயன்?"
"இன்வெஸ்டர்ஸ் மீட்டிங் இங்கே அரேன்ஜ் பண்ணனுமா சார்?" கேட்டான் ஜெயன்.
"வர சொல்லுங்க அடுத்த வாரம். இந்த காய்கறி வாங்கனும், கார் டயர் பஞ்சர்னு எவன் எவன்லா சாக்கு சொல்றனோ அவனைலாம் தூக்கிட்டு வர்றது உங்க வேலை. ஒருத்தன் விடாம எல்லாரும் இருக்கனும் சனிக்கிழமை 10 மணிக்கு" கோவத்தில் ஆணையாய் வந்தது அவன் குரல்.
சில நொடிகள் அமைதிக்கு பிறகு, "அதுக்கு முன்னாடி நம்ம மெக்கானிக்கல் என்ஜினீர்ஸ் டீமோட ஒரு மீட்டிங் ஃப்ரைடே இன்போர்ம் பண்ணிருங்க" எதற்காக தொழிலாளர்களிடம் பேச வேண்டும் என்கிறான் என்று புரியாமல் இருந்தாலும் அவன் செய்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்று அறிந்து அதையும் தயார் செய்தான் ஜெயன்.
காரில் இருந்து கீழ் இறங்கி கார்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் இண்டஸ்ட்ரிக்கு நுழைந்தனர். பல கிளைகள் இருந்தாலும் இதுவே தலைமை அலுவலகமாக இருந்தது. கூலர்ஸ் அணிந்து கருப்பு பாண்ட், வைட் முழு கை சட்டையுடன் வந்தவனை பார்த்து அனைவருக்கும் 'இன்னும் கொஞ்ச நேரம் இவனை பாக்கலாமே' என்று தோன்றியதில் ஆச்சரியம் இல்லை தான்.
அவ்வளவு ஸ்டைல் ஆக இருந்தான், அதிலும் அலை அலையாய் இருந்த அவன் முடியை நொடிக்கொரு முறை கோதிய விதம் அவன் அழகை ஒருபடி சற்று உயர்த்தியே வைத்தது.
அனைவரின் வணக்கத்தை சிறு தலை அசைவில் திரும்பி கொடுத்து 7 வது மாடிக்கு லிப்ட்-இல் சென்றான். அவனை பின் தொடர்ந்து வந்த இரண்டு காட்ஸ் வெளியே நிற்க ஜெயன் மட்டும் உள்ளே சென்றான்.
"மச்சி... உன் கோட் தொலதொலனு இருக்கு டா" எரிச்சலுடன் ஒரு பெருமூச்சு விட்டு உதய் திரும்பி பார்க்க அங்க நின்றது ஆதவன் தான்.
"ஏன்டா இந்த வைட், ரெட், மெரூன் கலர்ல கோட் வாங்க மாட்டியா?"
எதுவும் பேசாமல் நேராக உதய் முறைத்தது ஜெயனை தான், "சார் நா சொல்லல" என்றான் ஜெயன் பதறியவாறே.
"அவனை ஏன் மச்சி மொறைக்கிற உன் ஆளுங்கல்ல நான் மடக்க முடியாதது இவன் ஒருத்தன மட்டும் தான். ஆனாலும், நீ சம்பளமே போடாத மாதிரி 100 ரூபா குடுத்தாக் கூட நீ எங்க இருக்க-னு சொல்லிறாங்க டா உன் ஆளுங்க. பாத்து வச்சுகோடா" உதய்யின் எதிரில் அமர்ந்து காலை டெஸ்க் மேல் வைத்தான் ஆதவன்.
"சார் நா வெளிய வெயிட் பண்றேன்" சொல்லிவிட்டு வெளியே சென்றான் ஜெயன் சிரித்துக்கொண்டே...
"கோட் எடுக்க தான வந்த கெளம்பு இப்ப" - உதய்
"என்னடா பொசுக்குன்னு வெளிய போக சொல்ற, பொறு கொஞ்ச நேரம் பேசிட்டு அப்டியே இருக்கலாம் உன்ன பாத்து எவ்ளோ நாள் ஆச்சு" - ஆதவன்
"என்ன வேணும் உனக்கு டைரக்ட்டா சொல்லு வேலை இருக்கு எனக்கு" -
"அது ஒன்னும் இல்லடா இந்த டாக்குமெண்ட் இருக்கு பாரே" முன்னிருந்த ஒரு பைலை காண்பித்து, "இது கொஞ்சம் பெருசா இருக்கு முடிச்சு தரியா?" மூஞ்சியை அப்பாவியாக வைத்து கேட்டான்.
"ஏன்டா உனக்கு வெக்கமாவே இல்லையா உனக்கு எதுக்கு உங்க அப்பா கம்பெனி குடுத்தாரு?" திட்டிக்கொண்டே பைலை எடுத்து பார்த்தான் உதய்.
"மச்சி என்ன சொன்னாலு நான் கேக்க மாட்டேன்-னு தெரியும்ல அப்புறம் ஏன் கேக்குற. ஆமா எங்க உன்னோட பலகார பெட்டி?"
ஒரு முறை விட்டு, "அவனை ஜெர்மன் அனுப்பிருக்கேன்" - உதய்
"எதுக்கு?" - ஆதவன்
"நீ தான சொன்ன என்னோட மாமா என்னமோ பன்றாரு கம்பெனில எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வை-னு" அதிர்ச்சியாய் பார்த்தான் ஆதவனை.
"ஓ... நான் தான் சொன்னேன்னா...? ம் சொல்லிருப்பேன்" - ஆதவன்
ஆதவனுக்கு டிடெக்ட்டிவ் ஆக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவு ஆனால் தந்தையின் உடல்நல குறைவால் மொத்த எதிர்பார்ப்பு, சுமை, பொறுப்பு எல்லாம் அவன் தலையில் வந்து இறங்கியது.
வேறு வழியின்றி வேலையை செய்து வருபவன் மனம் சோர்த்து போகும் பொழுது உதயனை தேடி வருவது அவனுக்கும் தெரிந்த விஷயமே. அதனால் அவன் கூறும் சிறு சிறு பொய்களை வாங்கி கொண்டு அவன் பேசுவதை பொறுமையாக கேட்பான் உதய்.
"சொல்லு என்ன பிரச்னை?" பைலை பார்த்து கொண்டே கேட்டான் உதய்.
"அது ஒன்னும் இல்லடா எங்க அம்மா இருக்காங்கல்ல அவங்க என்ன ரொம்ப டார்சர் பண்ணுறாங்க" சிறு பிள்ளை போல் முகத்தை வைத்து கொண்டான் ஆதவன்.
"எதுக்கு?" - உதய்
"கல்யாணம் பண்ணிக்க சொல்லி" - ஆதவன்
"பண்ணிக்க வேண்டியது தான?" - உதய்
"எப்படிடா... பண்ணிக்க சொல்ற நீயும்? உனக்கு தான் தெரியும்ல நான் எவ்வளோ கனவோட லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணனும்னு இருக்கேன்னு"
"மாசம் மாசம் லவ் பண்றேனு போற அப்பறம் ரெண்டே நாள்ல வந்து செட் ஆகாதுன்னு பேசுற. உண்மைய சொல்லு உனக்கு வேற யாரையோ புடிச்சிருக்கு ஆனா வெளிய சொல்ல மாட்டிக்கிற" உதய் கோவத்தோடு ஆதவனை பார்த்தான்.
அவன் கூறிய வார்த்தையை கேட்ட உடனே அவன் கண் முன்னால் வந்த முகத்தை ரசிக்க முடியாமல் இதயம் சுருங்கியது ஆதவனுக்கு.
"அட போடா அப்டிலா ஒன்னுமே இல்ல, சரி உனக்கு எப்ப கல்யாணம்?"
"ஐடியா இல்ல"
ஆர்வமே இல்லாமல் வேலையை பார்த்தவனை, "ஏண்டா...! உன்ன மாதிரியும் மனுசங்க உலகத்துல இருக்க தான்.. செய்வாங்களா, எப்படி உனக்குனு ஏதாச்சும் ஆசை, கனவுனு இருக்கனும்டா, எத்தனை நாள் தான் பொம்மை மாறியே இருப்ப கொஞ்சம் ஆச்சும் என்ஜாய் பண்ணுடா லைஃப்-அ. பார்ட்டி கூப்டா வர மாட்டிக்கிற, பிரண்ட்ஸ் கூட வெளிய வர மாட்டிக்கிற 24 மணி நேரமும் வேலையவே பாத்துட்டு இருந்தா மனசுக்கு ஏதாச்சும் ஆறுதல் வேணாமா?"
" வெளிய போனா சந்தோசமா இருக்கும் தான், ஆனா தனியா போய் போய் என்னோட ஸ்ட்ரெஸ் தான் கூடுதே தவற குறையல ஆதவா. என்ன சுத்தி என் குடும்பம் வேணும் எனக்கு. நானும் வீட்டுல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் வெளிய கூட்டிட்டு போனேன், ஆனா என்ன ஆச்சு தெரியுமா??
உனக்கு புடிச்ச ட்ரெஸ்ஸ வாங்கி குடுன்னு பயந்து பின்னாடி நிக்கிறாங்க. புடிக்காத ஒன்ன காமிச்சு ஒகேவா-னு கேட்டா கூட சரினு மண்டைய மண்டைய ஆட்டுறாங்க. அதுக்காகவா கூட்டிட்டு போனேன்? ஒரு நாள் சந்தோசமா அவங்களுக்கு புடிச்சத அவங்களா அவங்க என் முன்னாடி நிக்க வச்சு பாக்கணும்னு ஆசை. என் தம்பிக என்னமோ எதிரியை பாத்த மாறி நிக்கிறாங்க, தங்கச்சிக ஒரு டீச்சரை பாக்குற மாறி பயப்புடுறாங்க. ஆனா அவங்க நாலு பேர் அவளோ ஒத்துமையா இருக்காங்க. நேத்து கூட அவனுங்க தண்ணி அடிச்சிட்டு 12 மணிக்கு வந்ததுக்கு அண்ணனுகளுக்கு அப்படி சப்போர்ட் பண்றா திவ்யா" என்றவன் மௌனமாக சிறிது நேரம் கழித்தான்.
"ஓகே... என் மேல இருக்க பயத்துனால தான் எப்படி ஒதுங்கி போறாங்கனு அதுக்கு ஒரு சொல்யூசன் பிளான் பண்ணுனேன், ஒரு வாரம் ஆபீஸ் லீவு போட்டேன் நீ அப்ராட் போன டைம்ல. நாலு பேரும் ஒரே ரூம்ல தான் மணி கணக்கா இருப்பாங்க, உள்ள போய் நானும் கூட இருந்தேன். அவளோ நேரம் கலகலப்பா இருந்த ரூம் நான் போனதும் சய்லண்ட் ஆகிடுச்சு. சரி, அவங்க சீக்ரெட்ஸ் ஷேர் பண்ண வேணாம் ஆனா ஒரு அண்ணன் கிட்ட பேசுற மாறி ஆச்சும் பேசலாம்ல?"
"ஒரு வார்த்தை கூட பேச மடிக்கிறாங்க டா. மொத நாள் தான நாளைக்கு பேசலாம்-னு போனேன். மறுநாளும் அதே நிலைமை தான். மூணாவது நாள் இருந்து எல்லாரும் அவுங்க அவுங்க ரூம்ல இருக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் சித்தி கிட்ட பேசப் போனேன், 'வா பா'-னு பாசமா தான் இருக்காங்க.
ஆனா, விஷ்ணு மேல இருக்க அந்த உரிமை என்மேல காட்ட மாட்டிங்கிறாங்க. அவங்கள நான் அம்மாவா பாக்குறேன் ஆனா அவங்க என்ன புள்ளைய பாக்கலைடா. இன்னும் அக்கா பையனா தான் பாக்குறாங்க. உரிமையா என்கிட்ட இது வரைக்கும் எதுவும் கேட்டது இல்ல, ஒரு தயக்கம் இருக்கு அவங்க கண்ணுல அந்த ஒரு பார்வையே தள்ளி போடானு சொல்லுது. அப்பா சித்தப்பா சொல்லவே தேவ இல்ல அவங்க பக்கத்துல போய் ஒக்கந்தாலே 'என்ன பா பிசினஸ்ல எதுவு ப்ராப்லமா'-னு கேக்குறாங்க"
எப்போதும், ஏதுவாகிலும் கம்பீரமாக, சிதறாமல் இருக்கும் தன் நண்பனா இவன் என்று வியக்கும் அளவுக்கு இருந்தது அவன் பேச்சு ஆதவனுக்கு "டேய் திடு துப்புன்னு நீ போய் பேசுனனால அப்டி இருந்திருப்பாங்க டா"
பெருமூச்சு விட்ட உதய், "அதெல்லாம் இல்லடா அந்த ஒரு வாரம் செய்யாததை ஒரு மாசம் ட்ரை பண்ணேன் காலைல சாயந்தரம்னு. ஆனா ஒன்னும் மாறல, வீட்டுல இருந்து தான் டா நிம்மதி, சந்தோசம், துக்கம் எல்லாமே ஒரு மனுசனுக்கு. அங்க சந்தோசம் இருந்ததா வேலை அலுப்புலாம் ஒன்னுமே இல்ல. ஆனா எனக்கு வீட்டுல இருந்து எந்த உணர்வும் கிடைக்கல வெறுமை மட்டும் தான் இருக்கு. எல்லாத்தையும் மீறி ஊர் சுத்தி வீட்டுக்கு போனலும் அது நிலைக்க போறது இல்ல. அப்ப ஏன் மனசுக்கு அந்த கொஞ்ச நேரம் அல்ப சந்தோசம்? அது பாட்டுக்கு இப்டியே எம்டியா இருக்கட்டும்"
'எப்படி டா இவ்வளோ வருத்தத்தை இப்படி மறச்சு வச்சிருக்க?' தோழனின் நிலை ஆதவனுக்கு வலித்தது.
"சொந்த வீட்டுலயே மூணாவது மனுஷன் மாறி இருக்க வேண்டி இருக்கு" வலி நிறைந்த புன்னகையோடு உதய் வார்த்தைகளை உதிர்த்த பொழுது மனம் கனத்தது ஆதவனுக்கு.
"எங்க வீட்டுக்கு கொஞ்ச நாள் வந்து இருடா" ஒரு நாளும் மனதில் இருப்பதை வெளியில் கூறாதவன் இன்று இவ்வளவு பேசியதை கேட்க கேட்க பொறுக்க முடியவில்லை ஆதவனால்.
சிரித்தான் உதய், "டேய் இப்ப தான சொன்னேன், தற்காலிகமா இருக்க எந்த சந்தோஷமும் எனக்கு வேணாம் டா. எனக்கு நிம்மதி-னு ஒன்னு இருந்தா கண்டிப்பா கிடைக்கும், இல்லனு இருந்தா எப்பவும் இருக்காது. இப்படியே பேசிட்டு இருக்காத இந்தா பைலை வாங்கிட்டு கிளம்பு" என்றபடி மடிக்கணினியை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான் சாதாரணமாக.
பைலை எடுக்காமல் டேபிளை சுற்றி உதய்யின் முன்னால் வந்து நின்றவன் சட்டென்று குனிந்து நண்பனை இறுக்க அணைத்தான், "எவன் உன்கூட இருந்தாலும் இல்லன்னாலும் நான் இருப்பேன். எப்பயும் எங்கயும் உயிரை குடுக்க கூட தயங்க மாட்டேன்"
கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் கண்டு கொள்ள வில்லை ஆதவன். எப்பொழுதும் விளையாட்டாய் இருப்பவனின் இந்த அழுத்தம் திருத்தமான கணீர் பேச்சில் அவ்வளவு உறுதி இருந்தது. அது உதயனை மௌனம் ஆக்கியது உண்மை தான் ஆனால் ஒரு ஆழ்ந்த அமைதி கிடைத்தது அவனுக்கு.
நிதானத்திற்கு வந்தவன், "சரி அப்டியே போன மாசம் ட்ரீட் பாக்கி இருக்கு மறந்துட்டியா?" புருவத்தை உயர்த்தி கேட்டான் ஆதவன்.
ஒரு நூறு ருபாய் தாளைக் குடுத்து "நீ குடிக்கப் போறது ஒரு கோக் அதுக்கு இது போதும்" என்றான்.
"என்னடா பிச்சைக்காரன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட" புலம்பினான் ஆதவன். கையில் கோடி கோடியாக பணம் இருந்தாலும் நண்பனை நச்சரித்து அவன் பணத்தில் ஒரு ரொட்டி வாங்கி உண்டால் கூட அதன் சுவை தனி தானே?
வாய்விட்டு சிரித்தான் உதய், "நீ எனக்கு எப்பயும் பிச்சைக்காரன் தான் டா, எப்ப பைலை எடுத்துட்டு வராம இருக்கியோ அப்ப தான் உன்ன மதிப்பேன்"
"இனி உன் கேபின்ல கால வச்சா என்ன-னு நீ என்ன கேளுடா" என்றான் வேடிக்கையாக.
"ஆமா மறந்துட்டேன் வீட்டுல ஒரு பூஜை ஏற்பாடு பண்ணிருக்காங்க சித்தி. உன்னையும் வர சொன்னாங்க. நாளைக்கு வந்து சேர்ந்துரு" தகவல் கொடுத்து வேலையில் இறங்கினான் உதய்.
"ஞாயிற்று கிழமைடா நாளைக்கு. காலைல வேகமாலாம் எந்திரிச்சு வர முடியாது" சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்.
"எனக்கு தெரியாது சித்திட்ட பேசிக்கோ" - உதய்
'ஆத்தி சிக்குனா அட்வைஸ் பண்ணியே வச்சு செஞ்சிருவாங்களே' யோசித்து, "சரி வரேன் ஆனா நல்ல நாட்டுக் கோழியப் புடிச்சு கொழம்பு வையுங்க"
"சாம்பார் தான் இஷ்டம்னா வா, இல்லனா போ"
'எங்க போனாலு லாக் வைக்கிறானே' தன்னையே பார்ப்பவனை பார்த்து, "உனக்காண்டி வர்றேன் சரியா?" நண்பனின் குறும்புத்தனத்தை உள்ளூர ரசித்தபடி, "கிளம்பு இல்லனா உங்க அப்பாக்கு போன் போட போறேன்"
"அஅ...அப்பாக்கு எதுக்கு தேவ இல்லாம இந்தா போய்ட்டேன் பாரு" கூறி ஓடி விட்டான் ஆதவன். அவனின் வருகை உதயனுக்கு சற்று அவசியமாக தான் இருந்தது.
*******************
ஷீலா கடும் கோபத்துடன் பிள்ளைகளை முறைத்து முறைத்து பார்த்து கொண்டு இருந்தார். தமிழும் பவித்ராவும் தான். இனிப்பான கரும்பை அண்ணன் எடுத்ததற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தனர் அவர்களுக்கு இணையாக முறைத்து கொண்டே இருந்த ஷீலாவை பார்த்து, "அம்மா உன் முட்டை கண்ண எவளோ உருட்டி பாத்தலும் நான் நிக்க போறது இல்ல, என்ன தைரியம் இருந்தா அவன் நான் எடுத்து வச்சிருந்த கரும்ப திருடி திம்பான்?"
தாய்க்கு பின்னால் நின்று போக்கு காட்டியபடியே, "மா நீங்களே சொல்லுங்க நான் என்ன அவளை மாதிரி திருடி , ஒளிச்சு வச்சா சாப்பிடுவேன். ஒழுங்கா கொஞ்சம் மொதயே தந்துருந்தா வாங்கியிருக்க கூட மாட்டேன். ஆனா இவ முழுசா ஒளிச்சு வச்சிருக்கா" இன்னும் சண்டையை முடிக்கும் எண்ணம் தமிழுக்கு இல்லை.
கோவம் ஏறிக்கொண்டே சென்றது ஷீலாவிற்கு இவர்களின் சிறு பிள்ளை வேலையை பார்க்கும் பொழுது.
"நடிக்காதடா ...நீ என்ன பண்ணுவன்னு எனக்கு தெரியும் சும்மா அளந்து விடறது நல்லவன் மாதிரி" - பவித்ரா
"உன்ன விட நான் நல்லவன் தான்டி, போன வாரம் என்ன பண்ண நீ? நியாபகம் இருக்கா? உன் கிளாஸ் பசங்க கூட சேந்து சினிமாக்கு போயிட்டு வந்துட்டு, வீட்டுல பொண்ணுங்க கூட போறேன்னு பொய் சொன்ன" - தமிழ்
"நீ என்ன பண்ண? என் பிரின்ட் கிட்ட லவ் லெட்டர் என்ன வச்சே குடுக்க வச்சல?" - பவித்ரா
இருவரின் ரகசியங்களும் சிறுகச்சிறுக வெளியே வர ஆரம்பிக்க கடுப்பானது என்னவோ ஷீலா தான், "இப்ப ரெண்டு பேரும் வாய மூடுறீங்களா இல்லையா? இப்டியே பேசிட்டே இருந்தா சோறு கிடையாது மதியம்"
அவ்வளவு தான் சாப்பாடு பேச்சு வந்தால் அனைத்தும் அடங்கி விடும் இருவருக்குள்.
தாயின் முகத்தில் இரு
க்கும் மாறுதலை உணர்ந்தவன் அருகில் சென்று அமர்ந்தான் அவர் தோளில் அன்பாக கை போட்டு, "என்ன ஆச்சு என் மம்மிக்கு? முகம் ஏன் டல்லா இருக்கு?"
"ஏண்டா தமிழு உனக்கு ஆதியை பாக்குறப்ப ஒன்னுமே தோணாதா?" - ஷீலா
(கீழே தொடர்ந்து படிக்க)
Last edited: