- Messages
- 997
- Reaction score
- 2,809
- Points
- 93
chap - 18
அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி. எவரிடமும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி வாய் மொழியவில்லை அவன். இன்று நடு இரவில் ஆள் அரவமற்ற ஒரு பாலத்தில் நின்று ஆனந்த கூத்தாடுகின்றான்.
"டேய் தண்ணி போடாமயே இந்த ஆட்டம் ஆடுறியேடா. கீழ இறங்கு" கௌதமின் காரில் அமர்ந்திருந்த தமிழ் முகத்தில் சிறு எரிச்சல். கௌதமிற்கோ தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
"ஆதி வாடா தூக்கம் வருது" நண்பனின் கெஞ்சல் மொழிகளோ அதிலிருந்த களைப்போ ஆதியின் செவிகளில் எட்டாமல் அவனுடைய தனி உலகில் லைத்திருந்தான் நிகழ் காலமும் கவலை அளிக்கவில்லை எதிர் காலமும் கவலை அளிக்கவில்லை அவனுக்கு இப்பொழுது, இந்த நொடி மட்டுமே ஆனந்தம் தந்தது காரணமே இல்லாமல்... ஒருவேளை மனதில் உள்ள கவலையை இவ்வாறு துரத்தி அடிக்கிறானோ என்ற எண்ணமும் அவன் முகத்தில் இருந்த சந்தோசத்தின் முன்னாள் சிலு சில்லாய் சிதறியது.
"வேலைய விட்டுட்டு வந்து ஆட்டத்தை பாரு... மனசுல ராஜான்னு நெனப்பு" இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு மனிதனால் இவ்வளவு துள்ளலாக இருக்க முடியுமோ என்ற கேள்வியும் திருமண வயதில் தங்கையை வைத்து எந்த நம்பிக்கையில் கை நிரம்ப வருமானம் கிடைக்கும் வேலையை விடுபவன் மூடன் என்ற ஆதங்கத்தில் தமிழ் மொழிந்தான்.
"இல்ல... அது அவன் வேலைய விட்டுட்டு வந்த சந்தோசம் இல்ல என் வேலையையும் சேத்து பறிச்சதுக்கான ஆர்ப்பரிப்பு" தனக்கே தெரியாமல் ஆதி, கௌதமிற்கும் சேர்த்து விடுதலை பத்திரம் அனுப்பி வைத்துவிட்டான் அவர்கள் மேனேஜரிடம் அதை பற்றி கேட்டால், "நான் இல்லாம நீ இருக்க மாட்ட தான மச்சான் அது தான் உன் மனசு அறிஞ்சு ஒரு சிறிய உதவி தங்களுக்கு" என்று தூய தமிழில் முடித்தான்.
"அது எப்படி மச்சான் ஒருத்தன் வாழ்க்கைல கிறுக்கு தனத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்து வாழ முடியுது?" ஆதியை பற்றி பல நாட்களாகவே இருந்த அந்த கேள்வியை இன்று கெளதம் தமிழிடம் கேட்டு விட்டான்.
நீண்ட பெருமூச்சுடன், "ஹ்ம்ம் நீ வாய தொறந்து கேட்டுட்டடா நான் கேக்கல அவ்வளவு தான் நமக்குள்ள வித்யாசம்"
காரின் ஹாரனை விடாமல் அடித்ததன் பலனாக தான் நின்றிருந்த பாலத்தின் சுவற்றிலிருந்து கீழே இறங்கினான் ஆதி, "மச்சி இன்னைக்கு ஸ்டார்ஸ் எல்லாம் அழகா இருக்குதுல?"
"ம்ம்ம் அது எல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனா உன் கூட சேந்தா நாளைக்கு என் பொண்டாட்டி என்ன செருப்பாலேயே அடிப்பாளோங்கிற பயம் தான் இப்ப அதிகமா வருது" இதோடு பவித்ரா முப்பது முறை கௌதமிற்கு அழைத்துவிட்டாள். அவர்கள் வழக்கமாக பேசும் நேரம் கடந்து இரண்டு மணி நேரம் ஆகியது. மகிழி, தமிழின் மண உறுதி செய்யப்பட்ட பெண் தமிழுக்கு தற்பொழுது கூட ஒரு முறை அழைத்திருந்தாள் ஆனால் அவளிடம் பேசும் நிலையிலா ஆதி அவனை வைத்திருக்கிறான்?
"இதுக்கு தான் அப்பயே சொன்னேன் அந்த கோண முக்கி வேணாம்டா வேணாம்டான்னு கேட்டியா அனுபவி ராஜா அனுபவி" என்று களிப்பில் சிரித்தவன் காரின் போணட்டில் ஏறி அமர்ந்தான் இரவின் அரசனாகிய நிலாவை ரசித்த வண்ணம்.
"ம்ம்ம் உன் பேச்ச கேட்டா எனக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்... வண்டில ஏறுடா தூக்கம் கண்ண கட்டுது" அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நண்பர்களை சிறு உதட்டு சலிப்புடன் தவிர்த்தவன், "என் கண் முன்னாடி நம்ம எதிர்காலம் பிரகாசமா தெரியாது மாப்பிள்ளை" என்றான் எதையோ மனதில் வைத்து.
கௌதமை காட்டி, "எங்க அத இந்த முகத்த பாத்துட்டு சொல்லு பாப்போம்" பரிதாபமாக முகத்தை வைத்து நின்றான் கெளதம் தமிழுக்கு ஒரு நன்றியை தெரிவித்து, தன் நிலையை விலக்கியதற்கு.
"அட இவன் கெடக்குறாண்டா பர்ஸ் வாயன்... நீ தைரியமா இரு மாப்பிள்ளை நமக்கு ஐ.நா சபைலயே போஸ்டிங் தருவாய்ங்க" என்று கௌதமின் கழுத்தில் கை போட்டு நண்பனை ஆசுவாச படுத்த விரும்பினான்.
அதையும் அந்த சிறு குழந்தை நம்பியது, "மாப்பிள்ளை நல்லி எலும்புக்காக தான நீ இந்த வேலைய பாத்துருக்க? நான் இனிமே என் வாழ்க்கைல நல்லியே சாப்புட மாட்டேண்டா வீட்டுல கல்யாண பேச்சு ஆரமிக்கிற இந்த நேரத்துல வேலை இல்லாம இருந்தா இந்த கருவாயனே எனக்கு பொண்ணு தர விட மாட்டாண்டா" கெஞ்சலும் கொஞ்சலுமாய் நண்பனிடம் தனது நிலையை எடுத்துரைத்தான் கெளதம்.
"உனக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்றவனை ஒரே வெட்டு மாப்பிள்ளை"
"டேய் அடங்குடா... வண்டில ஏறு" தமிழ் ஆதியின் கை புடித்து வண்டியில் தள்ள முயற்சிக்க அதை தவிடுபுடியாக்கி அசராமல் முகத்தில் இன்னும் சிரிப்பை கட்டி நின்றான்.
"ஏண்டா நீ பெரிய ஆள் ஆனதும் என்ன பண்ணுவ?" கண்களில் கனவோடும் இதழ்களில் மகிழ்ச்சியிலும் மூழ்கியிருந்த ஆதிக்கு தங்களை தாண்டி செல்லும் வாகனங்களின் புழுதி காற்றும் தென்றலாய் தெரிந்தது.
"ம்ம்ம்... வாக்கிங் போவேன்" சலிப்புடன் தமிழும், "மச்சி பெரிய ஹோட்டல் காட்டுறோம்" பரவசத்தில் கௌதமும் பதிலளித்தனர்.
தமிழை பார்த்து, "பாத்தியா இதுனால தான் நீ இன்னும் வாத்தியாவே இருக்க..."
"டேய் நிறுத்து..." கெளதம் ஆதியை குறுக்கிட்டு, "நீ என்ன பிளான்ல இருக்க?" ஏதோ புடிபட்டாலும் சரியாக புள்ளிகளை சேர்க்க இயலாமல் எண்ணங்கள் அலைபாய்ந்தது கௌதமிற்கு ஆதியின் செயலில்...
"பிஸ்னஸ் பண்ண போறோம்" ஆலோசனைகள் செய்யவில்லை, அதில் சந்திக்கப்போகும் இழப்புகளை பற்றிக் கவலையில்லை, பலமுறை யோசித்து நிதானத்தில் முடிவெடுத்தவன் போல் வெறும் கூற்றாய் மட்டுமே வந்தது ஆதியின் வார்த்தைகள்.
"கன்பார்ம். இவ்வளவு நேரம் இவன் கிறுக்கு புடிச்ச மாதிரி இருக்கான்னு நெனச்சேன் இப்ப தான தெரியுது இவன் நமக்கே தெரியாம போதைல இருக்கான்"
"ஏண்டா ஒரு மனுஷனோட ஆசைய வெளிய சொன்னா அவனை பைத்தியம்ன்னு சொல்லுவிங்களோ?" முகத்தில் சிரிப்பு இருந்தாலும் ஒரு கடுமை அவன் கண்களில்...
"ம்ம்ம் இருக்கலாம் ஆனா நம்ம கனவுக்கும் ஒரு தகுதின்னு ஒன்னு இருக்குதுல கைல பத்து பைசா காசு இல்ல, எந்த தைரியத்துல இந்த முடிவு எடுத்த நீ? இதுனால தான் நீ, இவன் வேலையையும் சேத்து கெடுத்து விட்டியா?" வலிக்க வலிக்க கேள்வி கேட்டாலும் அதிலிருந்த உண்மையை ஆதியால் மறுக்க இயலவில்லை ஆனாலும் அவனுடைய முடிவில் தெளிவாய் நின்றிருந்தான்.
"காச மட்டுமே வச்சிட்டு இங்க யாரும் தொழில் பாக்க வர்றது இல்ல... திறமை தன் அவசியம் அது என்கிட்டே கொஞ்சம் இருக்குது... கூட இருக்க புடிச்சா இருங்க இல்லனா அவசியமே இல்ல கிளம்புங்க" ஒருவருடைய கனவு நிறைவேற பணம் மட்டும் தான் இந்த உலகிற்கு தேவையா? எனில் படிப்பறிவு இல்லாதவனும் செல்வமற்றவனும் தகுதியற்றவனாகி விடுவார்களா என்ற கோவத்தில் ஆதியின் வார்த்தை வெளி வந்தன.
"உன்ன வீட்டுல விட்டுட்டு நாங்க கிளம்ப தான் போறோம்... இவனால் நான் திருப்பியும் அந்த யானை தலையன் (மேனேஜர்) கால்ல விழுகணும்" தன் பங்கிற்கு கௌதமும் தான் நண்பனுடைய இந்த அர்த்தமில்லாத திட்டத்தில் இணைய போவதில்லை என்று மறைமுகமாக கூறி ஆதியின் நம்பிக்கையை அசைத்து பார்த்துவிட்டான். இனி இவர்களிடம் இதை பற்றி விளக்கி பயனில்லை என்று உணர்ந்தவன் அவர்களாக இனி வந்தால் மட்டுமே தனது திட்டத்தை பற்றி அவர்களிடம் கூற போவதாக மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.
அமைதியாக சென்று வண்டியில் அமர்ந்தவன் அவன் வீடு வந்து சேரும் வரையிலும் அமைதியாய் இருந்தது அவன் எண்ணத்தை பற்றி மறுபரிசீலனை செய்கிறான் என்று நண்பர்கள் தவறாக நினைக்க ஆனால் ஆதியோ தனியாக என்ன செய்யலாம், எவ்வாறு பணம் சேர்ப்பதென்று புரியாமல் ஆழந்த சிந்தனையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.
"ஆதி வீடு வந்துருச்சு" தமிழின் குரல் அவன் எண்ண அலைகளை அடக்கி நிகழ்காலத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது, "சரிடா வர்றேன்" என்று ஒன்றும் நடவாதது போல் வீட்டினுள் சென்றவனுக்கு எப்பொழுதும் போல் சகோதரனுக்காக காத்திருப்பது போல் கையில் புத்தகத்துடன் வரவேற்பறையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் சஹானா.
ஒரு நிமிடம் அவளது முகத்தை பார்த்ததும் அவள் எதிர்காலம் கண்கள் முன்னாள் வந்து படம் ஆட தான் தவறாக முடிவெடுத்துவிட்டோமோ என்ற சந்தேகம் நொடி பொழுதில் வந்து மறைந்தது, "தூங்க போ மா" என்றவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் சகோதரியை பார்க்க துணிச்சலின்றி. தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவனுக்கு வரவேற்பறை விளக்கு சுடர்விட்டு கொண்டிருக்க சகோதரி தனக்காக காத்திருப்பது தெரிந்து சிரித்த முகத்துடன் நடையை தொடர்ந்தான்...
"என்ன சஹானா தூக்கம் வரலையா?"
"வந்துச்சுண்ணே ஆனா உனக்காக தான் வெயிட் பண்றேன் வா ஒக்காரு சாப்பிடலாம்" சாப்பிட மனமே இல்லை ஆனாலும் உணவை வீணாக்குவது அவனுக்கு புடிக்காததால் மறுபேச்சின்றி அமர்ந்தான் ஆதி கேசவன்.
அமைதியாக உண்ண ஆரமித்தவன் மனமே இல்லாமல் சாப்பிடுவதை பார்த்து, "எதுவும் பிரச்சனையா ண்ணா?"
"எனக்கென்ன டா பிரச்னை வர போகுது... சந்தோசமா இருக்கேன்"
"இல்லன்னா நீ சரி இல்ல என்கிட்ட சொல்லு" சகோதரனின் கைப்பற்றி அழுத்தம் தந்தாள் அவனை தேற்றும் பொருட்டு.
"உன் அண்ணன் இப்ப வேலை வெட்டி இல்லாத வி.ஐ.பி டா" என்றவன் சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்து கழுவி வைத்து சகோதரியின் மறுமொழி என்னவாக என்ற பதத்தோடு அவள் முகம் பார்க்க அவளோ சாதாரண செய்தியை கேட்டது போன்று ஆசுவாசமாக சகோதரனை பார்த்திருந்தாள்.
"நீ எதாவது யோசிக்காம இந்த முடிவை எடுத்திருக்க மாட்ட ண்ணா" என்றவளது இதழ்கள் சிரிப்பில், நம்பிகையில் விரிந்திருந்தது. அவன் அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து, "ம்ம்ம் சொல்லு அடுத்து என்ன பண்ற பிளான்?" அந்த கண்ணில் இருந்த ஆர்வம் சிறு சிரிப்பை அவன் இதழ்களுக்கு கொடுத்தது...
"வேற என்ன பிஸ்னஸ் தான் ஆனா கெளதம், தமிழ் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியல அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது கூடவே இருக்கவனுகளே புரிஞ்சிக்க மாட்டிக்கிறானுக அடுத்து என்ன பன்னுறதுன்னு தெரியல" முகத்தை கைகளால் மூடி தேய்த்தான் என்ன செய்வதென்று தெரியாமல். கைகளில் முழுதாக ஒரு லட்சம் ருபாய் கூட கையில் இல்லை, "என் கனவெல்லாம் போச்சா சஹானா?" என்றவன் குரலில் இருந்த வழியும் வேதனையும் உடன் பிறந்த ரத்தத்திற்கு உறுத்தியது.
தன்னை எந்த நிலையிலும் கலங்க விடாத சகோதரன் இன்று கலங்கி நிற்பது சகோதரிக்கு நெஞ்சில் பாரத்தை தந்தது... அவன் கை பற்றி, "நீ ஏன் ண்ணா கவலை படுற உன்னோட திறமைக்கும் குணத்துக்கும் நீ கண்டிப்பா நல்லா வருவ. தமிழ் அண்ணாக்கு கல்யாணம்... அடுத்து ஒடனே பவிக்கு கல்யாணம் பண்ணனும் அவங்க. கெளதம் அண்ணாக்கும் அடுத்து கல்யாணம் நீயே யோசி கல்யாணம் ஆக போறவங்க இந்த நேரத்துல ரிஸ்க் எடுப்பாங்களா? நீயே இந்த இடத்துல இருந்தாலும் இத தான் செஞ்சிருப்ப" அவள் கூறுவதும் சரியாகவே பட்டது ஆதிக்கு.
"உன் கனவு கண்டிப்பா நடக்கும் நம்ம வீட்டுல இருக்குற நகை எல்லாம் எடுத்துக்கோ ண்ணா... ஆபத்துல இருக்குற நேரத்துல யூஸ் பண்ணிக்க தான இந்த ஜெவெல்ஸ் எல்லாம்" சிறிது பணம் சேர்ந்தாலும் அதில் சிறிது சிறிது நகை வாங்கி சேர்த்துக்கொண்டிருக்கிறான் கடந்த மூன்று வருடங்களாக சஹானாவின் திருமணத்திற்காக... தந்தையின் பெயரை கூறி கடன் கேட்பவர்கள் ஒரு புறம் இருக்க வேலைக்கு சேர்ந்த நாட்களிலிருந்து செலுத்த ஆரமித்து கடன் அடுத்த நான்கு வருடங்கள் ஆதியின் கடுமையான உழைப்பால் இப்பொழுது தான் தீர்ந்தது.
"இல்லடா அந்த நகை மேல கை வைக்க மாட்டேன் உனக்கு மாப்பிள்ளை பாக்க ஷீலா கிட்ட சொல்லிட்டேன் இந்த விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்" திடீரெனெ வரம் அமைந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தவன் ஒரு காத தூரம் அந்த நினைவை தள்ளியே வைத்தான்.
அப்பொழுது தான் ஆதவனின் கேள்வி அவளுக்கு புரிந்தது அவன் செய்கையை ஒதுக்கி வைத்து சகோதரனை சம்மதிக்க வைக்கும் செயலில் முதலில் முன்னேறினாள், "புரிஞ்சிக்கோ ண்ணா உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப நீ பண்ணி வைக்கணும்ன்னு நனைந்த கல்யாணத்த இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம் நான் ஒண்ணுமே சொல்லல ஆனா இப்ப நீ அத யூஸ் பண்ணிக்கோ இத விட ரெண்டு மடங்கு நீ எனக்கு நகை போடுவ..."
"உன் அண்ணன் மேல நீ அளவுகடந்து நம்பிக்கை வச்சிருக்க டா என்னால அத காப்பாத்த முடியுமான்னு தெரியல" அவள் நம்பிக்கை அவனுக்கு முதல் முறை பயத்தைப் பரிசளித்தது...
சகோதரனின் வாக்கியத்திற்கு சிறு சிரிப்புடன், "பத்து வயசுலயே உன் மேல நம்பிக்கை வச்சு உன் கைய புடிச்சேன் இப்ப அந்த நம்பிக்கை போருக்கும்னு நனைக்கிறியா ண்ணா? நீ சாப்புடலனாலும் நான் இது வரைக்கும் ஒரு வேலை சாப்பாடு இல்லாம இருந்ததில்லை ண்ணா நீ என்ன அப்டி விட்டதும் இல்ல... அப்டி பட்ட நீ என்னோட வாழ்க்கைய எப்படி பாத்துக்குவன்னு எனக்கு தெரியும்" என்றவள் தனது கையை காண்பிக்க அது ஆதியின் கைகளில் அடைபட்டிருந்தது. இந்த ஒரு நம்பிக்கை போதாதா அவனுக்கு தனது இலட்சியத்தை சாதிக்க? நூறு யானைகளின் பலம் கிடைத்த மகிழ்ச்சி மனதில்...
"என்ன பிஸ்னஸ் பண்ண போறண்ணா?"
"அப்பா கம்பெனிய ரி-பில்ட் பண்ண போறேன்" அவன் உதட்டில் இருந்த சிரிப்பில் இருந்த வன்மத்தையும், கோபத்தையும் பாவம் வெளுத்ததெல்லாம் பாலாய் நினைப்பவளுக்கு பிரித்து பார்க்க தெரியவில்லை....
காலை எழுந்து தனது ராயல் என்பீல்ட் வண்டியை எடுத்து வெளியில் சென்றவனுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி... மணிமேகலை அங்குள்ள ஒரு தெருக்கடையில் தனது காலை உணவை உண்டுகொண்டிருந்தாள் வேக வேகமாக, 'அட நம்ம மான்குட்டி' மனதினுள் சிலாகித்தவன் வண்டியின் ஹாரனை அவள் கவனம் ஈர்க்கும் வரை அழுத்தினான்...
ஆதியை பார்த்தவள் திருட்டு முழியோடு வேறு புறம் திரும்பிக்கொண்டாள், "பார்றா சேட்டையை" வாயினுள் முணுமுணுத்தவன் வண்டியிலிருந்து இறங்கி அவள் இருக்கும் திசை நோக்கி நடந்தான்... அவன் அவளை நெருங்கும் முன் இருந்த இரண்டு வாய் தோசையை ஒரே வாயில் திணித்தவள் கையை கழுவ செல்லும்போது புரை எற அவள் அருகில் சென்றிருந்த ஆதிக்கு சிரிப்பு வந்து விட்டது, "நான் என்ன புடிங்கியா சாப்புட போறேன் ஏன் இந்த அவசரம்?" என்று சிரித்தவன் அவள் தலையில் தட்டி தண்ணீர் தம்ளரை அவள் கையில் திணித்தான், "குடிங்க"
மறுக்காமல் அதை வாங்கி அருந்தியவள், "தேங்க்ஸ்" ஒரு சங்கடத்துடன் அவன் விழிகளை தவிர்த்தாள்.
"என்ன வீட்டுல காசு குடுக்கலயா இந்த சின்ன கடைல சாப்புடுற?" என்றான் அவளுடன் பேச்சை வளர்க்கும் எண்ணத்துடன். "இல்லையே என்கிட்டே பைவ் ஹன்ட்ரேட் ருபீஸ் இருக்கே" தனது பர்சினுள் இருந்து தான் வைத்திருந்த புத்தம் புதிய ஐநூறுபாய் தாளை எடுத்து காண்பித்தாள், "எனக்கு ஸ்ட்ரீட் புட்ஸ் புடிக்கும் ஆனா அப்பா ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிட்டாங்க அது தான் வீட்டுல டயட்-னு பொய் சொல்லிட்டு இப்டி இங்க வந்து அப்பாக்கு தெரியாம சாப்புடுறேன்" என்றவளது இதழ்கள் புன்னகையில் மலர்த்திருந்தன.
"அப்ப எனக்கு ரெண்டு தோசை சொல்லேன் சாப்டுக்குட்டே பேசலாம்" என்றவன் அருகில் இருந்த ஒரு நாற்காலியில் தான் அமர்ந்து அவளுக்கும் ஒன்றை எடுத்து போட்டான்...
வேகமாக முடியாதென்று தலை ஆட்டினாள், "அது தான் ஐநூறுபா காசு வச்சிருக்கல்ல வாங்கி தர மாட்டியா?"
"நான் மனி தர்றேன் பட் நீங்க வாங்கிக்கோங்க அப்பா வெளிய கெளம்புற டைம் இது இங்கிட்டு தான் கிராஸ் பண்ணுவாங்க... இல்லனா வேற கடைக்கு போகலாமா?" போகலாமா என்று அவனிடம் தலை ஆட்டி கேட்டவளது காதில் இருந்த அழகிய கல் வேலைபாடில் இருந்த அந்த காதணியிடம் தான் அவன் காதல் நிறைந்த கண்கள் சென்றது... அவள் அசையும் அசைவிற்கெல்லாம் செல்லும் அந்த சிறிய ஆபர்ணத்திடம் போட்டி போட மனம் துடித்தது ஆதிக்கு...
நீண்ட பெருமூச்சுடன், "ரைட்டு விடு நான் கிளம்புறேன்" என்று எழுந்தவனை தடுத்தாள் மணிமேகலை சொற்கள்... "என்ன யூனிவர்சிட்டில ட்ராப் பண்றிங்களா?" உடலை சிறிது சாய்த்து அவன் முகத்தை நோக்கும் எண்ணத்துடன் ஆவலாய் பார்த்தாள் ஆதியை...
அவளை திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் மின்ன மின்ன கண்டது அவனது ராயல் ஏபிஎல்டை மட்டுமே... நொடிக்கொருமுறை ஆதியையும் அவன் வண்டியையும் ஆசையாய் பார்த்தது அவள் விழிகள் அந்த சிறு குழந்தை ஆசையில் சிரிப்பு வர, "உங்க அப்பா பாத்துட்டா என்ன பண்ணுவ?" என்றான் அவளை சீண்டும் பொருட்டு...
"தெரிஞ்ச அண்ணனு சொல்லிடுவேன்" அலுங்காமல் தோளை குலுக்கி சிரமமே இல்லாமல் ஆதியின் நெஞ்சில் தீயை இறக்கினாள் ஒரே வார்த்தைக் கொண்டு...
எங்கேனும் சென்று முட்டிக்கொள்ளலாம் போன்று தெரிந்தது, "ஓ ஹோ என்ன பாத்தா உனக்கு அண்ணன் மாதிரி தெரியுறேனா?" என்று சற்று குரலை உயர்த்தி எகிறியவனை பார்த்து மிரண்டவள் அக்கம் பக்கம் பார்த்து மீண்டும் ஆதியின் கண்களை பார்த்து வேகமாக தலை ஆட்டினாள் இல்லை என்று, "என்ன என் தங்கச்சிய தவற வேற யார் அண்ணனு கூப்டாலும் புடிக்காது சொல்லிட்டேன் உனக்கும் சேத்து தான்"
"சாரி ஃபிரன்ட்-ன்னு சொல்லுறேன்... ஆனா நீங்க என்னைவிட ரொம்ப வயசானவரா தெரியிறீங்களே" என்றாள் பயத்தை கண்களில் வைத்து ஆதியின் கோவத்தை பார்த்து திக்கி திக்கி, "ஐ... மீன் பெரியவங்க...ம்ம்ம் ஆமா சீனியர் மாதிரி இருக்கீங்க" ஒருவழியாக சமாளி
த்துவிட்டாள்...
"நல்லா ஒளறு... வண்டில வந்து ஏறு" என்றவன் சாலையை கடக்க செல்ல அவன் பின்னே பூனையாய் வந்தாள்...
அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி. எவரிடமும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி வாய் மொழியவில்லை அவன். இன்று நடு இரவில் ஆள் அரவமற்ற ஒரு பாலத்தில் நின்று ஆனந்த கூத்தாடுகின்றான்.
"டேய் தண்ணி போடாமயே இந்த ஆட்டம் ஆடுறியேடா. கீழ இறங்கு" கௌதமின் காரில் அமர்ந்திருந்த தமிழ் முகத்தில் சிறு எரிச்சல். கௌதமிற்கோ தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
"ஆதி வாடா தூக்கம் வருது" நண்பனின் கெஞ்சல் மொழிகளோ அதிலிருந்த களைப்போ ஆதியின் செவிகளில் எட்டாமல் அவனுடைய தனி உலகில் லைத்திருந்தான் நிகழ் காலமும் கவலை அளிக்கவில்லை எதிர் காலமும் கவலை அளிக்கவில்லை அவனுக்கு இப்பொழுது, இந்த நொடி மட்டுமே ஆனந்தம் தந்தது காரணமே இல்லாமல்... ஒருவேளை மனதில் உள்ள கவலையை இவ்வாறு துரத்தி அடிக்கிறானோ என்ற எண்ணமும் அவன் முகத்தில் இருந்த சந்தோசத்தின் முன்னாள் சிலு சில்லாய் சிதறியது.
"வேலைய விட்டுட்டு வந்து ஆட்டத்தை பாரு... மனசுல ராஜான்னு நெனப்பு" இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஒரு மனிதனால் இவ்வளவு துள்ளலாக இருக்க முடியுமோ என்ற கேள்வியும் திருமண வயதில் தங்கையை வைத்து எந்த நம்பிக்கையில் கை நிரம்ப வருமானம் கிடைக்கும் வேலையை விடுபவன் மூடன் என்ற ஆதங்கத்தில் தமிழ் மொழிந்தான்.
"இல்ல... அது அவன் வேலைய விட்டுட்டு வந்த சந்தோசம் இல்ல என் வேலையையும் சேத்து பறிச்சதுக்கான ஆர்ப்பரிப்பு" தனக்கே தெரியாமல் ஆதி, கௌதமிற்கும் சேர்த்து விடுதலை பத்திரம் அனுப்பி வைத்துவிட்டான் அவர்கள் மேனேஜரிடம் அதை பற்றி கேட்டால், "நான் இல்லாம நீ இருக்க மாட்ட தான மச்சான் அது தான் உன் மனசு அறிஞ்சு ஒரு சிறிய உதவி தங்களுக்கு" என்று தூய தமிழில் முடித்தான்.
"அது எப்படி மச்சான் ஒருத்தன் வாழ்க்கைல கிறுக்கு தனத்தை மட்டுமே குத்தகைக்கு எடுத்து வாழ முடியுது?" ஆதியை பற்றி பல நாட்களாகவே இருந்த அந்த கேள்வியை இன்று கெளதம் தமிழிடம் கேட்டு விட்டான்.
நீண்ட பெருமூச்சுடன், "ஹ்ம்ம் நீ வாய தொறந்து கேட்டுட்டடா நான் கேக்கல அவ்வளவு தான் நமக்குள்ள வித்யாசம்"
காரின் ஹாரனை விடாமல் அடித்ததன் பலனாக தான் நின்றிருந்த பாலத்தின் சுவற்றிலிருந்து கீழே இறங்கினான் ஆதி, "மச்சி இன்னைக்கு ஸ்டார்ஸ் எல்லாம் அழகா இருக்குதுல?"
"ம்ம்ம் அது எல்லாம் நல்லா தான் இருக்கும் ஆனா உன் கூட சேந்தா நாளைக்கு என் பொண்டாட்டி என்ன செருப்பாலேயே அடிப்பாளோங்கிற பயம் தான் இப்ப அதிகமா வருது" இதோடு பவித்ரா முப்பது முறை கௌதமிற்கு அழைத்துவிட்டாள். அவர்கள் வழக்கமாக பேசும் நேரம் கடந்து இரண்டு மணி நேரம் ஆகியது. மகிழி, தமிழின் மண உறுதி செய்யப்பட்ட பெண் தமிழுக்கு தற்பொழுது கூட ஒரு முறை அழைத்திருந்தாள் ஆனால் அவளிடம் பேசும் நிலையிலா ஆதி அவனை வைத்திருக்கிறான்?
"இதுக்கு தான் அப்பயே சொன்னேன் அந்த கோண முக்கி வேணாம்டா வேணாம்டான்னு கேட்டியா அனுபவி ராஜா அனுபவி" என்று களிப்பில் சிரித்தவன் காரின் போணட்டில் ஏறி அமர்ந்தான் இரவின் அரசனாகிய நிலாவை ரசித்த வண்ணம்.
"ம்ம்ம் உன் பேச்ச கேட்டா எனக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்... வண்டில ஏறுடா தூக்கம் கண்ண கட்டுது" அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நண்பர்களை சிறு உதட்டு சலிப்புடன் தவிர்த்தவன், "என் கண் முன்னாடி நம்ம எதிர்காலம் பிரகாசமா தெரியாது மாப்பிள்ளை" என்றான் எதையோ மனதில் வைத்து.
கௌதமை காட்டி, "எங்க அத இந்த முகத்த பாத்துட்டு சொல்லு பாப்போம்" பரிதாபமாக முகத்தை வைத்து நின்றான் கெளதம் தமிழுக்கு ஒரு நன்றியை தெரிவித்து, தன் நிலையை விலக்கியதற்கு.
"அட இவன் கெடக்குறாண்டா பர்ஸ் வாயன்... நீ தைரியமா இரு மாப்பிள்ளை நமக்கு ஐ.நா சபைலயே போஸ்டிங் தருவாய்ங்க" என்று கௌதமின் கழுத்தில் கை போட்டு நண்பனை ஆசுவாச படுத்த விரும்பினான்.
அதையும் அந்த சிறு குழந்தை நம்பியது, "மாப்பிள்ளை நல்லி எலும்புக்காக தான நீ இந்த வேலைய பாத்துருக்க? நான் இனிமே என் வாழ்க்கைல நல்லியே சாப்புட மாட்டேண்டா வீட்டுல கல்யாண பேச்சு ஆரமிக்கிற இந்த நேரத்துல வேலை இல்லாம இருந்தா இந்த கருவாயனே எனக்கு பொண்ணு தர விட மாட்டாண்டா" கெஞ்சலும் கொஞ்சலுமாய் நண்பனிடம் தனது நிலையை எடுத்துரைத்தான் கெளதம்.
"உனக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்றவனை ஒரே வெட்டு மாப்பிள்ளை"
"டேய் அடங்குடா... வண்டில ஏறு" தமிழ் ஆதியின் கை புடித்து வண்டியில் தள்ள முயற்சிக்க அதை தவிடுபுடியாக்கி அசராமல் முகத்தில் இன்னும் சிரிப்பை கட்டி நின்றான்.
"ஏண்டா நீ பெரிய ஆள் ஆனதும் என்ன பண்ணுவ?" கண்களில் கனவோடும் இதழ்களில் மகிழ்ச்சியிலும் மூழ்கியிருந்த ஆதிக்கு தங்களை தாண்டி செல்லும் வாகனங்களின் புழுதி காற்றும் தென்றலாய் தெரிந்தது.
"ம்ம்ம்... வாக்கிங் போவேன்" சலிப்புடன் தமிழும், "மச்சி பெரிய ஹோட்டல் காட்டுறோம்" பரவசத்தில் கௌதமும் பதிலளித்தனர்.
தமிழை பார்த்து, "பாத்தியா இதுனால தான் நீ இன்னும் வாத்தியாவே இருக்க..."
"டேய் நிறுத்து..." கெளதம் ஆதியை குறுக்கிட்டு, "நீ என்ன பிளான்ல இருக்க?" ஏதோ புடிபட்டாலும் சரியாக புள்ளிகளை சேர்க்க இயலாமல் எண்ணங்கள் அலைபாய்ந்தது கௌதமிற்கு ஆதியின் செயலில்...
"பிஸ்னஸ் பண்ண போறோம்" ஆலோசனைகள் செய்யவில்லை, அதில் சந்திக்கப்போகும் இழப்புகளை பற்றிக் கவலையில்லை, பலமுறை யோசித்து நிதானத்தில் முடிவெடுத்தவன் போல் வெறும் கூற்றாய் மட்டுமே வந்தது ஆதியின் வார்த்தைகள்.
"கன்பார்ம். இவ்வளவு நேரம் இவன் கிறுக்கு புடிச்ச மாதிரி இருக்கான்னு நெனச்சேன் இப்ப தான தெரியுது இவன் நமக்கே தெரியாம போதைல இருக்கான்"
"ஏண்டா ஒரு மனுஷனோட ஆசைய வெளிய சொன்னா அவனை பைத்தியம்ன்னு சொல்லுவிங்களோ?" முகத்தில் சிரிப்பு இருந்தாலும் ஒரு கடுமை அவன் கண்களில்...
"ம்ம்ம் இருக்கலாம் ஆனா நம்ம கனவுக்கும் ஒரு தகுதின்னு ஒன்னு இருக்குதுல கைல பத்து பைசா காசு இல்ல, எந்த தைரியத்துல இந்த முடிவு எடுத்த நீ? இதுனால தான் நீ, இவன் வேலையையும் சேத்து கெடுத்து விட்டியா?" வலிக்க வலிக்க கேள்வி கேட்டாலும் அதிலிருந்த உண்மையை ஆதியால் மறுக்க இயலவில்லை ஆனாலும் அவனுடைய முடிவில் தெளிவாய் நின்றிருந்தான்.
"காச மட்டுமே வச்சிட்டு இங்க யாரும் தொழில் பாக்க வர்றது இல்ல... திறமை தன் அவசியம் அது என்கிட்டே கொஞ்சம் இருக்குது... கூட இருக்க புடிச்சா இருங்க இல்லனா அவசியமே இல்ல கிளம்புங்க" ஒருவருடைய கனவு நிறைவேற பணம் மட்டும் தான் இந்த உலகிற்கு தேவையா? எனில் படிப்பறிவு இல்லாதவனும் செல்வமற்றவனும் தகுதியற்றவனாகி விடுவார்களா என்ற கோவத்தில் ஆதியின் வார்த்தை வெளி வந்தன.
"உன்ன வீட்டுல விட்டுட்டு நாங்க கிளம்ப தான் போறோம்... இவனால் நான் திருப்பியும் அந்த யானை தலையன் (மேனேஜர்) கால்ல விழுகணும்" தன் பங்கிற்கு கௌதமும் தான் நண்பனுடைய இந்த அர்த்தமில்லாத திட்டத்தில் இணைய போவதில்லை என்று மறைமுகமாக கூறி ஆதியின் நம்பிக்கையை அசைத்து பார்த்துவிட்டான். இனி இவர்களிடம் இதை பற்றி விளக்கி பயனில்லை என்று உணர்ந்தவன் அவர்களாக இனி வந்தால் மட்டுமே தனது திட்டத்தை பற்றி அவர்களிடம் கூற போவதாக மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.
அமைதியாக சென்று வண்டியில் அமர்ந்தவன் அவன் வீடு வந்து சேரும் வரையிலும் அமைதியாய் இருந்தது அவன் எண்ணத்தை பற்றி மறுபரிசீலனை செய்கிறான் என்று நண்பர்கள் தவறாக நினைக்க ஆனால் ஆதியோ தனியாக என்ன செய்யலாம், எவ்வாறு பணம் சேர்ப்பதென்று புரியாமல் ஆழந்த சிந்தனையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான்.
"ஆதி வீடு வந்துருச்சு" தமிழின் குரல் அவன் எண்ண அலைகளை அடக்கி நிகழ்காலத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது, "சரிடா வர்றேன்" என்று ஒன்றும் நடவாதது போல் வீட்டினுள் சென்றவனுக்கு எப்பொழுதும் போல் சகோதரனுக்காக காத்திருப்பது போல் கையில் புத்தகத்துடன் வரவேற்பறையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் சஹானா.
ஒரு நிமிடம் அவளது முகத்தை பார்த்ததும் அவள் எதிர்காலம் கண்கள் முன்னாள் வந்து படம் ஆட தான் தவறாக முடிவெடுத்துவிட்டோமோ என்ற சந்தேகம் நொடி பொழுதில் வந்து மறைந்தது, "தூங்க போ மா" என்றவன் குளியலறைக்குள் புகுந்துகொண்டான் சகோதரியை பார்க்க துணிச்சலின்றி. தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவனுக்கு வரவேற்பறை விளக்கு சுடர்விட்டு கொண்டிருக்க சகோதரி தனக்காக காத்திருப்பது தெரிந்து சிரித்த முகத்துடன் நடையை தொடர்ந்தான்...
"என்ன சஹானா தூக்கம் வரலையா?"
"வந்துச்சுண்ணே ஆனா உனக்காக தான் வெயிட் பண்றேன் வா ஒக்காரு சாப்பிடலாம்" சாப்பிட மனமே இல்லை ஆனாலும் உணவை வீணாக்குவது அவனுக்கு புடிக்காததால் மறுபேச்சின்றி அமர்ந்தான் ஆதி கேசவன்.
அமைதியாக உண்ண ஆரமித்தவன் மனமே இல்லாமல் சாப்பிடுவதை பார்த்து, "எதுவும் பிரச்சனையா ண்ணா?"
"எனக்கென்ன டா பிரச்னை வர போகுது... சந்தோசமா இருக்கேன்"
"இல்லன்னா நீ சரி இல்ல என்கிட்ட சொல்லு" சகோதரனின் கைப்பற்றி அழுத்தம் தந்தாள் அவனை தேற்றும் பொருட்டு.
"உன் அண்ணன் இப்ப வேலை வெட்டி இல்லாத வி.ஐ.பி டா" என்றவன் சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்து கழுவி வைத்து சகோதரியின் மறுமொழி என்னவாக என்ற பதத்தோடு அவள் முகம் பார்க்க அவளோ சாதாரண செய்தியை கேட்டது போன்று ஆசுவாசமாக சகோதரனை பார்த்திருந்தாள்.
"நீ எதாவது யோசிக்காம இந்த முடிவை எடுத்திருக்க மாட்ட ண்ணா" என்றவளது இதழ்கள் சிரிப்பில், நம்பிகையில் விரிந்திருந்தது. அவன் அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து, "ம்ம்ம் சொல்லு அடுத்து என்ன பண்ற பிளான்?" அந்த கண்ணில் இருந்த ஆர்வம் சிறு சிரிப்பை அவன் இதழ்களுக்கு கொடுத்தது...
"வேற என்ன பிஸ்னஸ் தான் ஆனா கெளதம், தமிழ் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியல அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்குது கூடவே இருக்கவனுகளே புரிஞ்சிக்க மாட்டிக்கிறானுக அடுத்து என்ன பன்னுறதுன்னு தெரியல" முகத்தை கைகளால் மூடி தேய்த்தான் என்ன செய்வதென்று தெரியாமல். கைகளில் முழுதாக ஒரு லட்சம் ருபாய் கூட கையில் இல்லை, "என் கனவெல்லாம் போச்சா சஹானா?" என்றவன் குரலில் இருந்த வழியும் வேதனையும் உடன் பிறந்த ரத்தத்திற்கு உறுத்தியது.
தன்னை எந்த நிலையிலும் கலங்க விடாத சகோதரன் இன்று கலங்கி நிற்பது சகோதரிக்கு நெஞ்சில் பாரத்தை தந்தது... அவன் கை பற்றி, "நீ ஏன் ண்ணா கவலை படுற உன்னோட திறமைக்கும் குணத்துக்கும் நீ கண்டிப்பா நல்லா வருவ. தமிழ் அண்ணாக்கு கல்யாணம்... அடுத்து ஒடனே பவிக்கு கல்யாணம் பண்ணனும் அவங்க. கெளதம் அண்ணாக்கும் அடுத்து கல்யாணம் நீயே யோசி கல்யாணம் ஆக போறவங்க இந்த நேரத்துல ரிஸ்க் எடுப்பாங்களா? நீயே இந்த இடத்துல இருந்தாலும் இத தான் செஞ்சிருப்ப" அவள் கூறுவதும் சரியாகவே பட்டது ஆதிக்கு.
"உன் கனவு கண்டிப்பா நடக்கும் நம்ம வீட்டுல இருக்குற நகை எல்லாம் எடுத்துக்கோ ண்ணா... ஆபத்துல இருக்குற நேரத்துல யூஸ் பண்ணிக்க தான இந்த ஜெவெல்ஸ் எல்லாம்" சிறிது பணம் சேர்ந்தாலும் அதில் சிறிது சிறிது நகை வாங்கி சேர்த்துக்கொண்டிருக்கிறான் கடந்த மூன்று வருடங்களாக சஹானாவின் திருமணத்திற்காக... தந்தையின் பெயரை கூறி கடன் கேட்பவர்கள் ஒரு புறம் இருக்க வேலைக்கு சேர்ந்த நாட்களிலிருந்து செலுத்த ஆரமித்து கடன் அடுத்த நான்கு வருடங்கள் ஆதியின் கடுமையான உழைப்பால் இப்பொழுது தான் தீர்ந்தது.
"இல்லடா அந்த நகை மேல கை வைக்க மாட்டேன் உனக்கு மாப்பிள்ளை பாக்க ஷீலா கிட்ட சொல்லிட்டேன் இந்த விசயத்துல நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்" திடீரெனெ வரம் அமைந்துவிட்டால் என்ன செய்வதென்று யோசித்தவன் ஒரு காத தூரம் அந்த நினைவை தள்ளியே வைத்தான்.
அப்பொழுது தான் ஆதவனின் கேள்வி அவளுக்கு புரிந்தது அவன் செய்கையை ஒதுக்கி வைத்து சகோதரனை சம்மதிக்க வைக்கும் செயலில் முதலில் முன்னேறினாள், "புரிஞ்சிக்கோ ண்ணா உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு இப்ப நீ பண்ணி வைக்கணும்ன்னு நனைந்த கல்யாணத்த இன்னும் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம் நான் ஒண்ணுமே சொல்லல ஆனா இப்ப நீ அத யூஸ் பண்ணிக்கோ இத விட ரெண்டு மடங்கு நீ எனக்கு நகை போடுவ..."
"உன் அண்ணன் மேல நீ அளவுகடந்து நம்பிக்கை வச்சிருக்க டா என்னால அத காப்பாத்த முடியுமான்னு தெரியல" அவள் நம்பிக்கை அவனுக்கு முதல் முறை பயத்தைப் பரிசளித்தது...
சகோதரனின் வாக்கியத்திற்கு சிறு சிரிப்புடன், "பத்து வயசுலயே உன் மேல நம்பிக்கை வச்சு உன் கைய புடிச்சேன் இப்ப அந்த நம்பிக்கை போருக்கும்னு நனைக்கிறியா ண்ணா? நீ சாப்புடலனாலும் நான் இது வரைக்கும் ஒரு வேலை சாப்பாடு இல்லாம இருந்ததில்லை ண்ணா நீ என்ன அப்டி விட்டதும் இல்ல... அப்டி பட்ட நீ என்னோட வாழ்க்கைய எப்படி பாத்துக்குவன்னு எனக்கு தெரியும்" என்றவள் தனது கையை காண்பிக்க அது ஆதியின் கைகளில் அடைபட்டிருந்தது. இந்த ஒரு நம்பிக்கை போதாதா அவனுக்கு தனது இலட்சியத்தை சாதிக்க? நூறு யானைகளின் பலம் கிடைத்த மகிழ்ச்சி மனதில்...
"என்ன பிஸ்னஸ் பண்ண போறண்ணா?"
"அப்பா கம்பெனிய ரி-பில்ட் பண்ண போறேன்" அவன் உதட்டில் இருந்த சிரிப்பில் இருந்த வன்மத்தையும், கோபத்தையும் பாவம் வெளுத்ததெல்லாம் பாலாய் நினைப்பவளுக்கு பிரித்து பார்க்க தெரியவில்லை....
காலை எழுந்து தனது ராயல் என்பீல்ட் வண்டியை எடுத்து வெளியில் சென்றவனுக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி... மணிமேகலை அங்குள்ள ஒரு தெருக்கடையில் தனது காலை உணவை உண்டுகொண்டிருந்தாள் வேக வேகமாக, 'அட நம்ம மான்குட்டி' மனதினுள் சிலாகித்தவன் வண்டியின் ஹாரனை அவள் கவனம் ஈர்க்கும் வரை அழுத்தினான்...
ஆதியை பார்த்தவள் திருட்டு முழியோடு வேறு புறம் திரும்பிக்கொண்டாள், "பார்றா சேட்டையை" வாயினுள் முணுமுணுத்தவன் வண்டியிலிருந்து இறங்கி அவள் இருக்கும் திசை நோக்கி நடந்தான்... அவன் அவளை நெருங்கும் முன் இருந்த இரண்டு வாய் தோசையை ஒரே வாயில் திணித்தவள் கையை கழுவ செல்லும்போது புரை எற அவள் அருகில் சென்றிருந்த ஆதிக்கு சிரிப்பு வந்து விட்டது, "நான் என்ன புடிங்கியா சாப்புட போறேன் ஏன் இந்த அவசரம்?" என்று சிரித்தவன் அவள் தலையில் தட்டி தண்ணீர் தம்ளரை அவள் கையில் திணித்தான், "குடிங்க"
மறுக்காமல் அதை வாங்கி அருந்தியவள், "தேங்க்ஸ்" ஒரு சங்கடத்துடன் அவன் விழிகளை தவிர்த்தாள்.
"என்ன வீட்டுல காசு குடுக்கலயா இந்த சின்ன கடைல சாப்புடுற?" என்றான் அவளுடன் பேச்சை வளர்க்கும் எண்ணத்துடன். "இல்லையே என்கிட்டே பைவ் ஹன்ட்ரேட் ருபீஸ் இருக்கே" தனது பர்சினுள் இருந்து தான் வைத்திருந்த புத்தம் புதிய ஐநூறுபாய் தாளை எடுத்து காண்பித்தாள், "எனக்கு ஸ்ட்ரீட் புட்ஸ் புடிக்கும் ஆனா அப்பா ஸ்ட்ரிக்ட்டா நோ சொல்லிட்டாங்க அது தான் வீட்டுல டயட்-னு பொய் சொல்லிட்டு இப்டி இங்க வந்து அப்பாக்கு தெரியாம சாப்புடுறேன்" என்றவளது இதழ்கள் புன்னகையில் மலர்த்திருந்தன.
"அப்ப எனக்கு ரெண்டு தோசை சொல்லேன் சாப்டுக்குட்டே பேசலாம்" என்றவன் அருகில் இருந்த ஒரு நாற்காலியில் தான் அமர்ந்து அவளுக்கும் ஒன்றை எடுத்து போட்டான்...
வேகமாக முடியாதென்று தலை ஆட்டினாள், "அது தான் ஐநூறுபா காசு வச்சிருக்கல்ல வாங்கி தர மாட்டியா?"
"நான் மனி தர்றேன் பட் நீங்க வாங்கிக்கோங்க அப்பா வெளிய கெளம்புற டைம் இது இங்கிட்டு தான் கிராஸ் பண்ணுவாங்க... இல்லனா வேற கடைக்கு போகலாமா?" போகலாமா என்று அவனிடம் தலை ஆட்டி கேட்டவளது காதில் இருந்த அழகிய கல் வேலைபாடில் இருந்த அந்த காதணியிடம் தான் அவன் காதல் நிறைந்த கண்கள் சென்றது... அவள் அசையும் அசைவிற்கெல்லாம் செல்லும் அந்த சிறிய ஆபர்ணத்திடம் போட்டி போட மனம் துடித்தது ஆதிக்கு...
நீண்ட பெருமூச்சுடன், "ரைட்டு விடு நான் கிளம்புறேன்" என்று எழுந்தவனை தடுத்தாள் மணிமேகலை சொற்கள்... "என்ன யூனிவர்சிட்டில ட்ராப் பண்றிங்களா?" உடலை சிறிது சாய்த்து அவன் முகத்தை நோக்கும் எண்ணத்துடன் ஆவலாய் பார்த்தாள் ஆதியை...
அவளை திரும்பி பார்த்தவன் அவள் கண்களில் மின்ன மின்ன கண்டது அவனது ராயல் ஏபிஎல்டை மட்டுமே... நொடிக்கொருமுறை ஆதியையும் அவன் வண்டியையும் ஆசையாய் பார்த்தது அவள் விழிகள் அந்த சிறு குழந்தை ஆசையில் சிரிப்பு வர, "உங்க அப்பா பாத்துட்டா என்ன பண்ணுவ?" என்றான் அவளை சீண்டும் பொருட்டு...
"தெரிஞ்ச அண்ணனு சொல்லிடுவேன்" அலுங்காமல் தோளை குலுக்கி சிரமமே இல்லாமல் ஆதியின் நெஞ்சில் தீயை இறக்கினாள் ஒரே வார்த்தைக் கொண்டு...
எங்கேனும் சென்று முட்டிக்கொள்ளலாம் போன்று தெரிந்தது, "ஓ ஹோ என்ன பாத்தா உனக்கு அண்ணன் மாதிரி தெரியுறேனா?" என்று சற்று குரலை உயர்த்தி எகிறியவனை பார்த்து மிரண்டவள் அக்கம் பக்கம் பார்த்து மீண்டும் ஆதியின் கண்களை பார்த்து வேகமாக தலை ஆட்டினாள் இல்லை என்று, "என்ன என் தங்கச்சிய தவற வேற யார் அண்ணனு கூப்டாலும் புடிக்காது சொல்லிட்டேன் உனக்கும் சேத்து தான்"
"சாரி ஃபிரன்ட்-ன்னு சொல்லுறேன்... ஆனா நீங்க என்னைவிட ரொம்ப வயசானவரா தெரியிறீங்களே" என்றாள் பயத்தை கண்களில் வைத்து ஆதியின் கோவத்தை பார்த்து திக்கி திக்கி, "ஐ... மீன் பெரியவங்க...ம்ம்ம் ஆமா சீனியர் மாதிரி இருக்கீங்க" ஒருவழியாக சமாளி
த்துவிட்டாள்...
"நல்லா ஒளறு... வண்டில வந்து ஏறு" என்றவன் சாலையை கடக்க செல்ல அவன் பின்னே பூனையாய் வந்தாள்...