• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 15 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap – 15



செவி மடல்களை கிழிக்கும் அளவிற்கு மேல்நாட்டு பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க தன் முன்னே இருந்த மதுபானத்தை தொடவும் கை கூசியது ஆனாலும் மனம் அதை ஏற்க கூறி அழுத்தம் கொடுத்தது... கண்கள் கூசும் டிஸ்கோ விளக்குகள் அவ்வவ்வபொழுது மின்னி மறையும் நேரம் தன்னை சுற்றி இருந்த மனிதர்களை பார்த்து அலுத்துக்கொள்ளும் மனது... வலிகளுக்கும் வேதனைகளும் இடையில் கேலிக்காகவும் பொழுது போக்கிற்காகவும் மட்டுமே மதுவினை தொடும் கைகள் ஏராளம்...

“வாட் வுட் யு லைக் டு ஹவ் சார்?” பார்டெண்டர் ஒருவன் டிப் டாப்பாக கருமையான ஷர்ட் பாண்ட், பௌ டை ஒன்று அணிந்து பார்க்க பக்கா பட்டதாரியாக காட்சி அளித்தான்...

“ஏண்டா பீட்டரு என்ன பாக்க வெள்ள காரன் மாதிரியா இருக்கு இல்ல வட நாட்டு காரன் மாதிரி வெள்ளையா இருக்கேனா... எதுக்கு இப்ப இங்கிலிஷ்ல புளிப்பு காட்டிட்டு இருக்க?”

அசௌகரியமாக புன்னகை சிந்தியவன் மன்னிப்பாயாக ஒரு சிரிப்பை சிந்தி, “என்ன ட்ரிங்க்ஸ் குடுக்க சார்?” என்றான் அவன்...

“அப்டி வா வழிக்கு...” பார்வையை அங்கு கச்சிதமாக அடுக்கியிருந்த மது பாட்டில்கள் மீது படர விட்டவன் கண்களுக்கு ஒரு குவளை கவர்ச்சியாக தெரிந்தது, “ஆஹ்... அந்த ஊதா பாட்டில் எவ்ளோ?”

ஆதியை ஒரு மாதிரி பார்வை பார்த்து அவன் கூறிய இடத்தை பார்த்தவன், “சார் 75 % ஆல்கஹால் கன்டென்ட் இருக்க வோட்கா, இது பிரேசில் இம்போர்ட்டட் பிராண்ட்...”

“டேய் நிறுத்து... இத அடிச்சா போதை ஏறுமா? ஏறாதா?” – சற்று குளறலாகவே வந்தது ஆதியின் வார்த்தைகள்.

“நல்லாவே ஏறும் சார். அந்த பாட்டில் ஐம்பதாயிரம் வரும் சார் பட் அதோட பிராண்ட்ல ஸ்டார்டிங் ரேட் டென் தொளசண்ட்ல இருந்து இருக்குது” – பார்டெண்டர்

“ஏண்டா இங்க ரெண்டு பெக் அடிச்ச ஒடனே போதை ஏரும்ன்னு சொன்னாங்க... ஆனா நீங்க இவ்ளோ காசு கேக்குறீங்க? இந்த காச வச்சு நான் வைன் ஷாப்பயே வாங்கிருவேனே” ஐம்பதாயிரத்தில் எத்தனை மதுபான கடைகளை வாங்கலாம் என்ற சிறு கணக்கே நாயகனின் மனதினுள் ஓடியது,.

“ண்ணா இங்க எல்லாமே இம்மா விலை தான் வரும். இஷ்டம்னா குடி இல்லனா அந்த குட்டிக கூட ஆடிட்டு இடத்தை காலி பண்ணு” தர லோக்கலில் இறங்கி பேசினான் அந்த டிப் டாப் சட்டை காரன்...

அவன் பேச்சில் சாக்கான அதி, “என்ன டா இப்புடி இறங்கிட்ட... சரி ரெண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு 3 பெக் வரர் மாதிரி அண்ணனுக்கு பாத்து எதாவது பண்ணி குடுடா நல்லா ஜிவ்வ்வ்வ்வு-னு போதை ஏறனும்”

“அதுக்கு நீ கல்லு காச்சி தான் குடிக்கணும்... ஆமா இப்பயே போதைல இருக்க மாதிரி தானே நீ பேசுற” சந்தேகமாய் ஆதியை மேலும் கீழும் பார்த்தான்.

வெட்க சிரிப்போடு, “துப்பறிவாளன் டா தம்பி நீ... ரெண்டு தெரு தள்ளி இருக்குதுல ஒரு வைன் ஷாப் அதுல ஒரு கட்டிங் போட்டுட்டு தான் வந்தேன்... எவ்ளோ அடிச்சாலும் போதை ஏற மாட்டிக்கிது. அதான் இங்க வந்தேன்...”

ஆதி கூறியது போல் ஒரு பாட்டிலை எடுத்து வந்தவன், “என்ன ண்ணா லவ் பெலியரா?” ஒரு சிறிய அழகிய கண்ணாடி குவளையில் அதை விட சிறிய அளவு மதுபானத்தை தந்தான்...

ஒரே மிடறில் குடித்தவன், “நோ நோ... இன்னும் செட் பண்ணவே இல்ல. ஆனா நான் என் உயிர் கூட சண்டை போட்டுட்டேன்... தட்ஸ் வொய் (That’s why)”

“யோவ் என்னையா லூசு மாதிரி ஒளறுற? உன்கூட சண்டை நீயே போட்டுட்டு எதுக்குயா குடிக்கிற?” கடுப்பில் அந்த பார்டெண்டர் சத்தமாக எகிறினான்.

தனது இருக்கையிலிருந்து எழுந்தவன், “ஏய் என்ன மரியாதை குறையுது ஒழுங்கா சார் சொல்லு டா பாடி சோடா... இல்ல இந்த இடமே ரெண்டாகிடும்”

தனக்கு மேல் எகிறியவனை பதட்டத்துடன் அடக்கிய அந்த பார்டெண்டர், “சாரி சார் சத்தம் போடாதீங்க அப்றம் என் வேலைக்கு வேட்டு தான்”

“சரி மன்னிச்சு வுடுறேன். உயிர்ன்னா நாம மட்டுமே இல்லடா நாம உயிருக்கு உயிரா யாரை ரொம்ப நேசிக்கிறோமோ அவங்க தான் நம்ம உயிர்” தனது இதயத்தை சட்டையில் மேல் காட்டி, “பாரு அடி வாங்கி வாங்கி வீங்கிருச்சு”

அவனுக்கு ஒத்து ஊதிய அந்த கைப்புள்ளை, “ஐயோ ஆமா சார் இப்டி வீங்கிருக்கு ... நா போய் ஐஸ் கட்டி எடுத்துட்டு வரவா?” அழகாக ஆதிக்கு அந்த இளையவன் குடை பிடித்தான்.

“வேணாம் டா சரி ஆகிடும்...” – ஆதி

“யார் சார் உங்க உயிர்?” – பார்டெண்டர்

“அட என்ன டா இதுகூட தெரியாதா உனக்கு? நம்ம உதய் தான்” – ஆதி

யார் என்று தெரியாமலே தலை ஆட்டிய அந்த பார்டெண்டர், “என்ன சார் பிரச்னை உங்களுக்குள்ள?”

“சார் வேணாம் டா அண்ணானே சொல்லு”

பொதுவாக இது போல் தங்களது வாடிக்கையாளர்களிடம் அவர்கள் விருப்பத்திற்கிணங்க பேசுவதும் அவர்களுடைய பணியாகும், ஆனால் முக்கால்வாசி மனிதர்கள் பார்டெண்டர்களை ஒரு துச்சமாகவே கருதுவார்கள். அவர்கள் மத்தியில் ஆதியை போல் ஒரு சிலரே இருப்பர்...

“சரி நீங்க சொல்லுங்க என்ன பிரச்னை?” நண்பனுக்காக குடிப்பவர்கள் எல்லாம் பார்ப்பதே அரிது அதிலும் இவன் உதய் என்னும் பெயரை கூறும் பொழுது அதிலிருந்த அழுத்தமும் வலியும் தனியே...

“நான் ஒரு பெரியயயயயய தப்பு பண்ணிட்டேன் டா மன்னிக்கவே முடியாத தப்பு பண்ணிட்டேன். அது தான் என்ன தூக்கி போட்டுட்டான்... ஆனா நான் அவன் இடத்துல இருந்தா இன்னேரம் கண்டிப்பா அவனை மன்னிச்சிருப்பேன் ஏனா என்னால அவனை விட்டு இருக்க முடியாது...” உணர்ச்சிகளின் பிடியில் ஆதியின் குரல் அழுத்தமாக மெதுவாக ஒலித்தது

ஒரு நக்கல் சிரிப்புடன், “ண்ணா அவனா நீ” என்று எழுதவனை அவன் கழுதோடு கை போட்டு இழுத்த ஆதி அவன் தலையில் இரண்டு கொட்டு கொட்டி, “அடிங்க... பேச்ச பாரு பேச்ச”

“ஐயோ அண்ணா ஓனர் பாத்தா காச்சிருவாரு வுற்று ண்ணா” – பார்டெண்டர்

தன் இருக்கையில் மீண்டும் அமர்ந்தவன், “பொழச்சு போ... மேல சொல்றேன் கேளு... நாங்க ஸ்கூல்ல எப்டி தெரியுமா இருந்தோம்? ஸ்கூல்ல ஆதி உதய் னு சொன்னாலே அவிங்க முகத்துல ஒரு பொறாமை தெரியும்... எனக்காக என்ன வேணாலும் ஒருத்தன் செய்வான்னு சொன்னா கண்ண மூடிட்டு அவன் பேர மட்டும் தான் சொல்லுவேன்...

எனக்காக அடி வாங்கிருக்கான், எனக்காக டீ.சி வாங்கிருக்கான், எனக்காக தம்பி தங்கச்சிக கிட்ட இருந்து விலகிருக்கான், எனக்காக சாவ கூட சந்தோசமா கண்ண மூடிட்டு ஏத்துருக்கான். ஆனா நான் அவனுக்காக எதுவுமே பண்ணது இல்ல... அவன் சந்தோசத்தை நாசமாக்குனேன், அவன் குடும்பத்தை அவன்கிட்ட இருந்து பிரிச்சேன், அவன் நம்பிக்கையை குழி தோண்டி பொதச்சிட்டேன்”

பேச்சை பாதியிலேயே நிறுத்தியவன், “டேய் சைடு கேப்ல சரக்க ஆட்டைய போட பாக்கறியா ஊத்துடா தேங்கா மண்டையா”

அவன் குவளையில் மீண்டும் மதுபானத்தை நிறைக்க, “தோ இது இருக்குது பாரு, இது அவனுக்கு சுத்தமா புடிக்காது....”

ஆதி பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அருகில் ஒருவன் பொத்தென்று அந்த பார் டேபிளில் விழ, கடினப்பட்டு அந்த நாற்காலியில் அவன் அமர்ந்தான்... ஆதியை நோக்கி அவன் பின் புறம் இருக்க, அவனது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் தோற்றம் பரிட்சயமாய் இருந்தது...

“நீ குடுக்குற சரக்குல எனக்கு போதையே ஏறளடா என் வென்று... அவன்ட்ட போய் கேக்குறேன் என்ன சரக்கு அடிச்சான்னு” என்று அந்த குடிமகனிடம் செல்ல அவன் கையை பிடித்து நிறுத்தினான் அந்த பார்டெண்டர்...

“சார் இந்தாங்க இத குடிங்க” என்றான் அவன்

அவனை பொருட்படுத்தாமல் அந்த முகம் தெரியாதவனின் அமர்ந்திருந்த பார் நாற்காலியை எத்தியவன், “யார்ரா நீயி கரண்ட் கம்பில அடிபட்ட காக்கா மாதிரி விழுந்து கிடக்குற?”

“சாக்கடைல விழுந்த பன்னி மாதிரி கத்திட்டு இருக்க நீ, என்னை காக்கான்னு சொல்றியாடா கோங்காங்கோ” என்றவன் ஆதியை நோக்கி வேகமாக திரும்ப அங்கு இருந்தது விஷ்ணு...

உதய்யின் உடன்பிறந்த சகோதரன்... கண்கள் சிவக்க போதையின் வீரியம் அப்பட்டமாக தெரிந்தது அவனிடம்.

“டேய் ஆர்வ கோளாறு நீயா... இங்க என்னடா பண்ணுற? எங்க உன்னோட இருக்குற சுப்புணி (ஜாக்கி சான் கார்ட்டூன் கேரக்டர் ஒன்னு)” ஆதி ஆர்வமாய் தனது இருக்கையை அவனுக்கு அருகில் போட்டு அமர்ந்தான்...

“கதகளி...” கண்களில் மிரட்சி கூட்டி அமர்ந்த இடத்திலேயே ஆடி காட்டியவன், “கதகளி ஆடடடட வந்தேன்” – விஷ்ணு

“அப்டியே வெளிய போய் ஆடுடா ரெண்டு காசாவது பாக்கலாம்” – ஆதி

“உன் படத்தை இங்க ஒட்டாத. நானே பயங்கர மூட் அவுட்-ல இருக்கேன் இதுல நீ வேற இன்னும் எரிய வைக்காத” என்ற தனக்கு முன்னே இருந்த ஒரு மதுபான குவளையை எடுத்து அழகாக குடித்தான் சிறு தடுமாற்றமும் இன்றி.

“என்னடா உன்னையும் உன் அண்ணன் அசிங்கமா பேசி அனுப்பிட்டானா?”

சிறுக சிறுக மதுவின் மடியில் முழுதும் சாய ஆரமித்தான் விஷ்ணு. ஆனால் ஆதி ஓரளவிற்கு நிதானத்தில் இருந்தான், “அவன் பேசிருந்தா தான் பிரச்சனையே இல்லையே”

“அவன் அவ்ளோ சீக்கிரம் கோவ படுறவன் இல்ல நீ என்ன பண்ணுன?”

“கொஞ்சம்... கொஞ்சம்” என்று வாய் கூற, கை தன்னால் இயன்ற அளவு விரிந்தது, “அதிகமா பேசிட்டேன், என்ன விட்டுட்டு தள்ளி இருக்க சொல்லிட்டேன் எப்பவுமே... நீயே சொல்லு அண்ணே அண்ணேன்னு அவனை சின்ன வயசுல இருந்து கால சுத்தி சுத்தி வந்தவன என்ன பன்னிருக்கணும்?”

“ஓங்கி ஒரு எத்து விட்ருக்கனும்” ஆதியின் பதிலில் அந்த பார்டெண்டர் வாய் விட்டு சிரித்தான்.

“அத பன்னிருந்தா கூட சந்தோச பற்றுப்பேனே” அழுக ஆரமித்தான் விஷ்ணு, சிறு விசும்பல் வெடிக்க ஆதியால் சிரிப்பை கட்டு படுத்த இயலவில்லை, “ஆனா அவன் என்ன மனுஷனாவே மதிக்கல... ஹரிக்கு அப்றம் அவனை தான் அதிகம் தேடுவேன்... ஒதுங்கி ஒதுங்கி போனான். அது தான் எனக்கு கோவமே...”

“டேய் நிறுத்து...” ஆதி குறுக்கிட்டு, “நானே சோகம் பாடிட்டு இருக்கேன் நீ வேற போடா வென்று” அந்த இடத்தை விட்டு எழுந்து விஷ்ணுவை விட்டு தூர சென்று அமர்ந்து மீண்டும் அந்த பார்டெண்டருடன் வழக்கமான சோக கதையை பாட ஆரமித்தவன் விஷ்ணுவை திரும்பியே பார்க்க வில்லை...

மறுபுறம் சோகமே உருவாய் உலகையே வெறுத்து அமர்ந்து இருந்தான் விஷ்ணு. ஒரு புறம் ஹரியின் ஒதுக்கம், சித்தியின் மாறுதல் பேச்சு, தனித்து அவனுக்கு மட்டும் கவனம் செலுத்தியது என்று ஒரு புறம் மனதை இம்சிக்க மறு புறம் உதய்யின் உதாசீனம் இதயத்தை சக்கையாய் பிசைந்தது, திட்டுவதற்காக ஆவது விஷ்ணுவிடம் வருபவன் அன்று தனது கோவ பேச்சில் முற்றும் பேச்சை துறந்தான். ஆனால் அந்த நிலையிலும் தன் மேல் உள்ள தவறை அறியவில்லை...

வீட்டிற்கு எந்த வித பயமும் இல்லாமல் செல்வதை அறவே வெறுத்தான்... வாரம் இரண்டு மூன்று முறை போதையில் சென்றாலும் தண்டிக்கவோ முறைக்கவோ சகோதரன் அங்கு இல்லையே, உணவு மேஜையில் கை பேசியை எடுக்கும் பொழுது எச்சரிக்கை பார்வை வீச உதய் இல்லை.

அலுவலகத்தில் வேண்டும் என்றே செய்யும் தவறுகளுக்கு கூட உதய்யிடம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால், அவனுடைய தண்டனையை வேண்டும் என்றே ஹரிக்கு தர பட்டது விஷ்ணுவின் கண் முன்னே.... ஹரி உதய்யை மிஞ்சி விஷ்ணுவை தனித்து விட்டான்...

அடுத்தத் தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதற்கு கூட விஷ்ணு இல்லாமல் செல்லாதவன் கடந்த மூன்று வாரங்களாக விஷ்ணுவிடம் முழுதாக ஒரு நிமிடம் பேசியது இல்லை. எங்கும் தனித்தே சென்றான்... விஷ்ணுவாக சென்று பேச முயன்றால் கூட அவனை சிறு சிரிப்புடன் தள்ளி வைத்தான் ஹரி.

“என்ன ப்ரோ ரொம்ப ஸ்ட்ரைன்(strain) பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல தலைல இருக்க ப்ராப்லம்ஸ் எதுவும் லேஸ் (less) ஆகலையா?”

அவனுக்கு முன்னே இருந்து ஒரு அமெரிக்க ஒலியழுத்தம் (accent) கேட்க்க மங்கலான பார்வையில் தலையை நிமிர்த்து பார்க்க அங்கே ஒரு அமெரிக்கன் சாயலில் ஒருவன் விஷ்ணுவை பார்த்துப் புன்சிரிப்புடன் நின்றான்...

“Yeah, nothing helps” அவன் தன்னுடைய மது குவளையை கோவத்தில் எரிய அது சுக்கு நூறாக சிதறியது...

அந்த சத்தத்தில் விஷ்ணுவை திரும்பி பார்த்த ஆதி அவனை ஒரு முறை உன்னிப்பாய் கவனித்து அவன் முன் பார்டெண்டராக இருந்த அந்த அமெரிக்கனையும் பார்த்து மீண்டும் தனது பார்வையை மாற்றினான்...

“ஐ கேன் ஹெல்ப் யூ பர்கெட் திங்ஸ் (I can help you forget things)”

அவன் கூறிய பொழுது அதில் இருந்த வன்மத்தை, தந்திரத்தை காணும் நிலையில் இல்லாது, “வாட்’ஸ் தட்?” கேள்வி கேட்டான் விஷ்ணு.

“இட் மே காஸ்ட் மோர் தான் யூ குட் அப்போர்ட் (It may cost more than you could afford)”

மூளையை சூழ்ந்துள்ள குழப்பங்களை அகற்ற கிடைத்த ஒரே தீர்வை விடுவதாக இல்லை, யோசிக்காமல் கையில் இருந்த பியாஜெட்(Piaget) கை கடிகாரத்தை கழட்டி அந்த மேஜையில் வைத்து கையை நீட்டினான், “ஐ திங்க் இட் வுட் பி மோர் தான் ஏனப், நொவ் ஹாண்ட் மீ மை ட்ரின்க் (I think it would be more than enough, now hand me my drink)”

“சில் மேன். இட்’ஸ் நாட் அ ட்ரின்க், இட்’ஸ் ஜஸ்ட் அ பவுடர் டு ரெப்ரஷ் யுவர் ப்ரைன் (Chill man. It’s not a drink, it’s just a powder to refresh your brain)” தனது உள் சட்டையிலிருந்து ஒரு சிறிய பாக்கெட்டை எடுத்தவன் அதிலிருந்த போதை பொடியை ஒரு மதுபானத்தில் கொட்டி, “அண்ட் தேர் ஐஸ் யுவர் ஹெவன் ட்ரின்க் (and there is your heaven drink)” நொடி பொழுது யோசிக்காமல் அதை ஒரு மிடறில் அருந்தினான் விஷ்ணு...

குடலில் அது பணித்த ஒரு ஒரு நொடியும் அவனது இதயம் மயிலிறகில் வருடியது போன்ற மென்மை பரவ முகத்தில் அரும்பியது ஒரு புன்னகை... கண்களை மூடி படுத்தவன் கண்களின் முன்னே வந்தான் ஹரி மற்றும் உதய்...

ஹரி விஷ்ணுவின் தோளில் கை போட்டு மதுபானத்தில் பங்கிற்கு வர உதய்யோ வழக்கம் போல் இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கையில் இருந்த மதுபானத்தை பார்த்து, ‘பேசாம இவனுக்கும் ஒரு பெக் குடுத்துட வேண்டியது தான் எப்ப பாத்தாலும் வெறப்பாவே இருக்கான்’ விஷ்ணு ஹரியின் காதில் கிசுகிசுத்தான்...

அந்த நேரம் ஹரியின் கைபேசி அடிக்க அதை அன்டன் செய்து விஷ்ணுவின் காதில் வைத்தான் அந்த பக்கம் அவன் சித்தி காய்ச்சிய காச்சில் அவன் காதிலிருந்து ரத்தம் வழியாத குறை தான்...

விஷ்ணு தன் உலகில் சஞ்சலித்திருக்க அந்த பார்டெண்டரின் பார்வை விஷ்ணுவையும் அந்த அமெரிக்கா பார்டெண்டரையும் அடிக்கடி சந்திக்க, “ஏண்டா அவனை அடிக்கடி பாக்குற?”

“நா ஒன்னு சொல்லுவேன் அத யார் கிட்டையும் சொல்லாதீங்க...” – பார்டெண்டர்

ஆர்வமாக, “சொல்லு” என்றான் ஆதி.

“சத்தியம் பண்ணுங்க யார் கிட்டையும் சொல்ல கூடாது” – பார்டெண்டர்

அவன் தலையில் கை வைத்து, “நான் சத்தியத்தை மீற மாட்டேன் இப்ப சொல்லு”

“அந்த அமெரிக்கா காரன் இருக்கான்ல அவன் என்னமோ தப்பு பன்றான் ண்ணா. பெரிய கார்ல வருவான் நல்ல கொழுத்த பணக்காரன் தான். ஆனா, எதுக்கு இங்க வந்து வேலை பாக்குறான்னு தெரியல கைல நெறையா குட்டி குட்டி பாக்கெட் வச்சிருப்பான் எங்கையோ தப்பு நடக்குது” – பார்டெண்டர்

“குட்டி குட்டி பாக்கெட்னா?” குழப்பமாய் கேட்டான் ஆதி.

“ஒரே ஒரு தடவ தன் பாத்தேன் என்னமோ வெள்ளை கலர்-ல இருந்துச்சு எனக்கு என்னமோ டோப்-னு தோணுது” – பார்டெண்டர்

அவனது பதிலில் துணுக்குற்றவனின் போதை காற்றில் பறந்தது வேகமாய் விஷ்ணுவின் புறம் திரும்ப அந்த அமெரிக்கா பார்டெண்டர் கீழிருந்து ஒரு மதுபான குவளையை விஷ்ணுவின் முன் வைத்தான்... வேகமாக எழுந்து சென்று அதை விஷ்ணு அருந்துவதற்கு முன்னாள் அவன் கையை பிடித்து தடுத்தான்...

விஷ்ணு ஒரே ஒரு முறை சிறிய அளவில் குடித்த பொழுதும் உதய் அவனுக்கு அருகில் வந்துகொண்டே இருந்தான், மாயையில்... அவனது ஆழ்ந்த ஆசைகள் எல்லாம் அதில் நடந்துகொண்டே இருந்தது அதில் இன்னும் திளைக்க விரும்பி குடிக்க நினைத்தவனை ஆதியின் கைகள் தடுக்க மனதின் வலி கோவமாய் மாறி ஆதியை ஓங்கி குத்தினான் விஷ்ணு...

நிதானத்தில் இல்லாமல் இருந்ததால் முகத்திற்கு குறிவைக்க அது ஆதி நெஞ்சில் பட்டது, “உனக்கு வேணும்னா வாங்கிக்கோ ஏண்டா என்ன குடிக்க விடாம தடுக்குற?” அவ்வளவு வெறி அவன் பேச்சில்....

மீண்டும் அந்த குவளையை குடிக்க போக இந்த முறை ஆதி அதை கீழே தட்டி விட்டான். அதில் இன்னும் வெறி ஏறிய விஷ்ணு ஆதியின் சட்டையை கொத்தாக பற்றி சிவந்த கண்களுடன், “எதுக்குடா அத தள்ளி விட்ட? இது தான் அவன்கிட்ட இருக்க கடைசி சரக்குன்னு சொன்னான்... இப்ப நா எங்க போவேன்” என்றவன் ஆதியிடமிருந்து தன் பிடியை தளர்த்தி கீழே சிதறி கிடந்த கண்ணாடி குவளையில் ஒட்டி இருந்த சிறிது பானத்தை எடுத்து ஆக்ரோஷமாக அருந்த அதையும் கோவத்தில் ஆதி தட்டி விட்டு அவனை பிடித்து நிறுத்தினான்...

“டேய் விஷ்ணு அது ட்ரிங்க்ஸ் இல்லடா, டோப் (dope i.e drugs)”

தன் சட்டையில் இருந்த ஆதியின் கையை பற்றி தழுவியவன், “எதுவா இருந்தா எனக்கு என்ன... எங்க அவன்?” அந்த அமெரிக்கா பார்டெண்டரை சுற்றிலும் தேட தனது மங்கலான கண்களுக்கு அவன் வெளியேறுவது தெரிந்தது வேகமாக அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்க மீண்டும் அவனை தடுத்தான் ஆதி...

“டேய் வெளிய வாடா. அது நீ நனைந்த மாதிரி இல்ல” அவனது கணத்தில் சில முறை தட்டி பார்த்தும் பயன் இல்லை விஷ்ணுவின் கண்களில் அதே போதையின் தாக்கம் சற்றும் குறையாமல் இருந்தது...

போதையின் வீரியமோ, தாக்கமோ ஆதியின் கையிலிருந்து திமிறி அந்த அமெரிக்கனை நாடினான், “டூ யு ஹவ் சம் மோர் ஹெவன் ட்ரின்க்? (உன்கிட்ட இன்னும் கொஞ்சம் அந்த ட்ரின்க் இருக்கா?)”


சாதுர்யமாக, “சாரி மேன் ஐ திங்க் யு மிஸ்அன்டெர்ஸ்டூட் மீ, தட்’ஸ் எ ஆர்டினரி ட்ரின்க் (சாரி மேன் நீ தப்பா நினைச்சிட்டானு நினைக்கிறன், அது சாதாரண ட்ரின்க் தான்)”
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
“யு ஆடட் சம்திங் டு இட் டோன்ட் ளை (அதுல என்னமோ சேத்த பொய் சொல்லாத)”

தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அவனிடம் ஒப்படைக்க அவனும் வேகமாக ஒரு சிறிய பாக்கெட்டை அவனிடம் கொடுத்த நேரம் சரியாக அவனுக்கு பின்னே வந்த ஆதியை பார்த்தவன், “சாரி ஜென்டில் மேன்” என்று நகர அவனது கையை பிடித்து மன்றாட ஆரமித்தான் விஷ்ணு...

தனது கையில் தந்த பொட்டலத்தை திறந்து வாயில் போட, கோபமுற்ற ஆதி விஷ்ணுவை தனது புறம் திருப்பி அவனது கன்னத்தில் ஒரு முறை பலமாக அறைந்தான். அதில் சற்று நிதானம் திரும்பியவன் தரையில் அப்படியே அமர்ந்து விட்டான்...

அவனை முழுவதும் ஆராய்ந்த ஆதி அவனுக்கு அருகில் மண்டியிட்டு, “என்ன பன்னிட்டு இருக்கன்னு உனக்கு தெரியிதா இல்லையா? எதுக்குடா உனக்கு இவ்வளவு கோவம், வாழ்க்கையே வெறுத்த பைத்தியம் மாதிரி பன்னிட்டு இருக்க? உன் அண்ணனுக்கு தெரிஞ்சா எவ்ளோ பீல் பண்ணுவான்னு தெரியுமா?”

“தெரியும்” ஆத்திரத்தில் அறிவை இழந்து கத்தினான் விஷ்ணு, “எல்லாமே தெரியும்” அழுந்த தலையை கோதி முகத்தை முட்டியில் வைத்து கால்களை கட்டி அமர்ந்துவிட்டேன்... அவனை பார்க்க பாவமாக இருந்தது ஆதிக்கு. அவனுக்கு அருகில் அவனை போலவே அமர்ந்து விட்டான்...

“டேய் ஆம்பள பையன் அழுக கூடாதுடா... உங்க அண்னே சொல்லி குடுக்கல?” விஷ்ணுவின் விசும்பல் சத்தம் கேட்டு ஆதி கேட்க சட்டென அவனை நிமிர்ந்து பார்த்து, “யோவ் மூக்கு உறிஞ்சிட்டு இருந்தேன் கோல்டு வந்துருச்சு போல” மூக்கை மீண்டும் உறிஞ்சினான் விஷ்ணு.

“ச்ச நான் கூட நீ திருந்திடியோனு நெனச்சேன்” என்று தனது பேண்டில் வைத்திருந்த ஒரு மதுபானத்தை எடுத்து குடிக்க ஆரமித்தான் ஆதி...

“எனக்கு கொஞ்சம் வேணும்” – விஷ்ணு

“உள்ள போய் வாங்கிக்கோ” – ஆதி

“எனக்கு வேணும்” – விஷ்ணு

“சரி ஒரு நூறு ரூபாய வச்சிட்டு வாங்கிக்கோ... அதுவு இல்லாம இது லோக்கல் சரக்கு... ஆனா இது தான் டா கிக்கா இருக்கு ப்ப்ப்பா” பானத்தை அனுபவித்து ஒரு மிடறு அருந்தினான் ஆதி, ஆனால் விஷ்ணுவை பத்திரமாக வீட்டில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து நிதானத்தில் இருக்கும்படியும் பார்த்துக்கொண்டான்.

“பரவாயில்ல எனக்கு வேணும்” அழுத்தமாய் விஷ்ணு கூற வேறு வழி இல்லாமல் ஆதி அவனிடம் அந்த பாட்டிலை நீட்டினான். அதை வாங்கிய விஷ்ணு ஆதியை விட்டு சற்று தள்ளி அமர்ந்து மது பாட்டில் அவனுக்கு கண்ணில் படாமல் வைத்து அந்த போதை பொருளை அதில் கொட்ட போக ஆதி கண்டு விட்டான்...

தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து, “வகுந்துருவேன். இப்ப தான சொன்னேன் குடிக்காதன்னு” என்று அந்த பாக்கெட்டை வாங்க அதை விடாது இருக்க பற்றி இருந்தான் விஷ்ணு...

“பக்கிங் பஸ்டர்ட் லீவு இட்” – விஷ்ணு

“என்னடா பொசுக்குன்னு கெட்ட வார்த்தைல திட்டிட? இதுக்காகவே தர மாட்டேன் போடா” இருவரும் சிறு குழந்தை போல அந்த சிறு பாக்கெட்டிற்காக சண்டை போட்டி கொண்டிருக்க அது கிளிவேனா என்று அடம் பிடித்தது, “எனக்கு அது வேணும் விடுடா”

“சொன்னா புரிஞ்சுக்கோ டா இதுக்கு அடிக்ட் ஆகிட்டா ரொம்ப கஷ்டம். ஜஸ்ட் டெம்ப்ரவரி சொல்யுஷன் தா கிடைக்கும். நீயே உன்ன கெடுத்துக்காத” – ஆதி

“ஏன் புரிஞ்சுக்க மாட்டிக்கிற? இது இருந்தா தான் என் பேமிலி என் கூட இருக்கு ஐ நீட் தெம் பிசைடு மீ ரைட் நொவ் (எனக்கு அவங்க இப்பயே என் பக்கத்துல வேணும்)”

“அப்ப உன் அண்ணண் உனக்கு வேணாமா?” – ஆதி

“அவனுக்காக தான் டா நான் இதையே குடிக்கிறேன். ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டிக்கிற?” விஷ்ணு அழுகை பாதி கோவம் பாதி சேர்ந்து கத்தினான்... “அவன் என்கிட்டே பேசி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு... இத குடிச்சா அவன் என்கூட என் தோள்ல கை போடு பேசுறான். இப்ப சொல்லு நான் குடிக்கிறதுல என்ன தப்பு?”

“சரி டா குடி ஆனா தற்காலிகமான சந்தோஷத்துக்கு நிரந்தரமா உன் அண்ணனை நீ இழக்கனும்னு ஆசை பட்டா தாராளமா குடி. ஆனா நான் போனதும் குடி”

“என்னமோ அவனை முழுசா தெரிஞ்ச மாதிரி பேசுற உங்க பிரச்சனைல என்ன ஏண்டா இழுக்குற?” இன்னும் அந்த பாக்கெட்டில் இருந்து பிடியை இருவரும் தளர்த்தாமல் இருந்தனர்

“டேய் அவனுக்கு அவனை பத்தி தெரிஞ்சதை விட எனக்கு அவனை பத்தி நல்லா தெரியும்... இந்தா கைல இருக்கே... இந்த போதை இத ஒரு வாரம் யூஸ் பன்னதுக்கு உன் அண்ணண் ரெண்டு வாரம் என்கூட பேசாம இருந்தான்... ஆனா இப்ப உன் மேல இருக்க கோவத்துக்கு காலம் முழுக்க பேச மாட்டான் உன்கிட்ட... முடிவு பண்ணிக்கோ”

நொடிகள் கழிய விஷ்ணுவின் நிதானமும் குறைய தொடங்கியது. சரியாக அந்த நேரம் பார்த்து உதய்யின் ஆட்கள் வர அவர்கள் இருவரும் அந்த போதை பொருளை கையில் பிடித்து நின்ற காட்சி படமாக்கப்பட்டு ஜெயனுக்கு அனுப்பப்பட்டது... ஆதியை சுற்றி ஆட்கள் வைத்திருந்த ஈஸ்வரனும் அந்த இடத்திற்கு சைரியாக வந்து சேர்ந்தார் மருமகனும், ஆதியும் ஒரே இடத்தில் இருப்பதை அறிந்து...

உதய்யின் ஆட்கள் விஷ்ணுவை நோக்கி வர உடனே விஷ்ணுவின் பிடியிலிருந்து அந்த பாக்கெட்டை எடுத்து தானே வைத்துக்கொண்டான்... இதை பார்த்த ஈஸ்வரன் கண்டும் காணாதது போல் விஷ்ணுவிடம் சென்று, “என்ன மாப்பிள்ளை இதெல்லாம்?” அக்கறையாக.

“ஏன் மாமா நீங்க தண்ணி அடிக்க மாட்டிங்களா? நாம ஒரு தடவ சேந்து கூட அடிச்சிருக்கோமே நியாபகம் இல்லையா?”

“இது நல்ல குடும்பமா இருக்கே” ஆதி எதார்த்தமாக கூற ஆதியை ஒரு அடி விஷ்ணுவை விட்டு தள்ளியே வைத்தனர்...

அதை கவனித்த விஷ்ணு அவர்களை பார்த்து வேகமாக தனது மாமனிடம் சென்று மெதுவாக, “அவன் எதுவும் பண்ணல மாமா அவரை விட்ருங்க...”

“சரி மாப்பிள்ளை நா பாத்துக்குறேன் நீ போ. யோவ் மாப்பிள்ளையை வீட்டுல பத்திரமா விட்டுருங்க” தனது ஆட்களிடம் ஏவி அவனை காரினுள் அமர வைத்து உதய்யின் முதன்மை காவலாளியை அழைத்தார்...

“வலுக்கட்டாயமா மாப்பிள்ளைக்கு போதை குடுத்துருக்கான் அவன்... மாப்பிள்ளையே இத என்கிட்டே சொன்னான்... உதய் வரைக்கும் கொண்டு போக கூடாது தான். ஆனா மறைச்சா நல்லா இருக்காது... ஆனாலும் அவன்கிட்ட இத சொல்லாதீங்க” கட்டளையாய் கூற அவருக்கு தெரியும் தானே தனது முதலாளியிடம் இவர்கள் எதையும் மறைப்பது இல்லை என்று அதனால் வேண்டும் என்றே அவர் கூறினார்... மறு புறம் காவல் துறையினருக்கும் மறக்காமல் தகவல் தெரிவித்திருந்தார்...

“ஓகே சார்” என்று அவன் நகர...

“என்ன பெருசு என்ன பிளான் போடுற?” தெனாவெட்டாக ஈஸ்வரனை பார்த்து ஆதி கேட்டான்...

“ஒன்னும் இல்ல தம்பி குடும்ப விசியம்...” – ஈஸ்வரன்

“ஓஹோ... அப்ப கிண்டில ரத்தினம் நகர், 3 nd ஸ்ட்ரீட், பச்சை கலர் வீட்டு, மேல் மாடில நடக்குறத்தையும் இப்டி தான் இவங்ககிட்ட எல்லாம் சொல்லுவிங்களா மாமா?” அந்த மாமா வார்த்தையில் அழுத்தம் கொடுத்து...

என்று தன்னை தேடி வந்து தனது மருமகனுக்கே எதிரான ஆதாரங்களை மூன்றாவது மனிதனிடம் கொடுத்தாரோ அன்றே அவர் மீது தனது நண்பர்களை வைத்து விசாரிக்க ஆரமித்து விட்டான் அதன் பதில்களே அவருடைய சின்ன வீட்டின் தகவல் ஆதியின் கையில்...

சற்றும் பதட்டம் அடையாமல் அவனை உற்று நோக்கியவர் ஒரு மெச்சுதல் பார்வையை அவன் மீது பதித்தார்... முழுமையான நிதானத்தில் இல்லாவிட்டாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை அளவெடுக்கும் பார்வையும், திமிரான பேச்சும் அவரை சிலிர்க்கவைத்தது என்று தான் கூற வேண்டும்...

தனது அலைபேசி ஒழிக்க அதை ஆதியை பார்த்து உயிர்பித்தவர், “சொல்லுபா உதய்”

“….”

“இல்லப்பா பிரச்சனை எதுவும் இல்லை நான் பாத்துக்குறேன்”

“….”

“ம்ம்ம்ம்”

“….”

“ஆமா விஷ்ணுவ வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன்...”

“….”

“இல்ல உதய், நீ நெனைக்கிற மாதிரி அவன் மேல எந்த தப்பும் இல்ல...”

“….”

“சொல்றத கேளு உதய்... அவன்...”

“….”

“நீ பண்றது தப்புனு எனக்கு என்னமோ தோணுது...”

“….”

“உதய்... உதய்...” அவர் கத்த அந்த பக்கம் இணைப்பு துண்டிக்க பட்டிருந்தது...

“நீ இந்த இருந்து வேகமா போய்ட்டு” ஈஸ்வரன் நல்ல பிள்ளையாக மாற முயன்றார்.

“நான் என்னாத்துக்கு போகணும் போயா அடிச்ச போதைய உன் மருமகன் இறக்கி விட்டுட்டு போய்ட்டான் இப்ப மொத இருந்து ஆரமிக்கணும்”

“மிஸ்டர் ஆதி கேசவன், உதய் போலீஸ் கிட்ட கம்ப்லைன் பன்னிட்டான். கம்பி எணணும்னு ஆசை இருந்தா தாராளமா நீங்க இங்கையே இருங்க”

ஈஸ்வரனின் ஐந்து அடி எட்டு அங்குலம் உயரத்தை தனது ஆறடியில் எளிதாக அடக்கி அவருக்கு நேராக நின்று, “அது இப்டி... உன் மருமகன் உதய் தவற மத்த எல்லாரையும் நீ நண்பனாகிக்கிற? எதாவது திருட்டு வேலை பாக்குறியா?” சரியாக கேட்டுவிட்டான் ஒரு வியூகத்தில்.

அடக்கப்பட்ட கோபத்துடன், “பெத்தவங்க இருந்திருந்தா இன்னேரம் மரியாதை எல்லாம் சொல்லி குடுத்துருப்பாங்க... இல்ல தம்பி?”

“அப்ப உன் அப்பா அம்மாவும் உன்ன பெத்து போட்ட ஒடனே போய் சேந்துட்டாங்களோ?” வற்றாத திமிருடன் ஆதி.

“சரி தம்பி பாத்து பத்திரமா போயிடு வாங்க. உதய் சொல்லி போலீஸ் வருது இன்னும் ஆயுசுக்கும் நீ அங்க தான்...” – ஈஸ்வரன்

“யோவ் மூடிட்டு போயிரு போதைல இருந்தா நா கொஞ்சம் அதிகமாவே கேட்ட வார்த்தை பேசுவேன் கேக்க ரெடியா?” – ஆதி

‘உன் வாய உனக்கே திருப்பி விடுறேண்டா அது வரைக்கும் ஆடிக்கோ’ மனதில் க்ரோதத்துடன் அந்த இடத்திலிருந்து விடைப் பெற்றார் ஈஸ்வரன்...

அவர் சரியாக அந்த இடத்திலிருந்து செல்லவிருந்த நேரம் போலீஸ் வண்டி வந்தது, “ஆத்தி போலீஸு” பயத்தில் தனது வண்டியை எங்கு நிறுத்தினோமென்று தெரியாமல் சுற்றி சுற்றி தேடியும் கிடைக்கவில்லை. அதற்குள் ஈஸ்வரனின் பார்வையை உணர்த்த அந்த இன்ஸ்பெக்டர் நேராக ஆதியின் அருகில் வந்து ஒரு கேள்வி கேட்காமல் அவன் கையில் விலங்கை மாட்டினார், “என்ன சார், எதுக்கு என்ன அர்ரெஸ்ட் பண்றீங்க?”

“கஞ்சா வித்தா அர்ரெஸ்ட் பண்ணாம பாரத் ரத்னா குடுக்க சொல்லவா?” இறுக்கமான முகத்துடன் காவலர்களுக்கே உரித்தான தோரணையுடன் அந்த இன்ஸ்பெக்டர் வினவினார்.

“சார் நீங்க தப்பா நனைக்கிறிங்க நா அதெலாம் யூஸ் பண்ண மாட்டேன்”

“எங்களுக்கு இன்பர்மேஷன் வந்துச்சு கிளம்பு மதத்தை போலீஸ் ஸ்டேஷன்ல உனக்கு தெளிவா சொல்றேன்”

அவரது கையி உதறியவன், “என்ன போலிஸ்ங்கிற திமிரா போயா மொத. நீ பாத்தியா நான் கஞ்சா விக்கிறத? இல்ல எவன் உன்ட்ட இன்பர்மேஷன் குடுதான்னு சொல்லு அவன்ட்ட நான் பேசணும்”

“ஓ துரைக்கு ஆதாரம், சாட்சி எல்லாம் இருந்தா தான் வருவீங்களோ”

“சார் தப்பே பண்ணாம நான் எதுக்கு சார் வாய மூடிட்டு வரணும் அதையும் மீறி நீங்க என்ன கூட்டிட்டு போகணும்னு நெனச்சா உங்கள கூட அடிப்பேன்”

“காட்டுறேன் டா உன்னோட மண்டவாளத்தை காட்டுறேன் போலீஸ் காரனையே அடிக்கிறேன்னு சொல்ற அளவு உனக்கு தைரியம்... அத எப்படி குறைக்கிறேன்னு பாரு... யோவ் கான்ஸ்டபில் இவனை செக் பண்ணுயா”

இன்ஸ்பெக்டர் பேச்சை கேட்டு ஒருவர் வந்து ஆதியை ஆய்வு செய்ய அப்பொழுது தான் அவனுக்கு நினைவில் வந்தது விஷ்ணுவிடமிருந்து வாங்கிய பாக்கெட் அவனது பாக்கெட்டில் இருப்பது, ‘சோழமுத்தா போச்சா’ என்றிருந்தது அவனுக்கு...

சரியாக அதை எடுத்தவர், “சார் இது கெடச்சது” என்று எடுத்து நீட்டினார் அதை பார்த்த அந்த இன்ஸ்பெக்டர் முகத்தில் ஒரு கேலி புன்னகை, “என்ன சண்டியரே போகலாமா? உனக்கு அங்க போய் நா கம்பு சுத்துற விதையை சொல்லி குடுகுறேண்டா வா”

“சார் இது என்னோடது இல்ல...”

“பின்ன உங்க அப்பனோடதா?”

சுறு சுறுவென தலைக்கு கோவம் ஏறியது ஆதிக்கு... கொத்தாக அவரது காலரை பிடித்து, “டேய் வயசுல பெரியவன்னும் பாக்க மாட்டேன் உன் பதவிக்கும் மரியாதை குடுக்க மாட்டேன் கொன்னு பொதச்சிடுவேன் ஜாக்கிரதை” அடிக்குரலில் அந்த இடமே அதிரும் வகையில் சீறினான்...

இன்ஸ்பெக்டர் மீது அவன் பாய்ந்ததும் மற்ற காவல்துறையினர் ஆதியின் பிடியை முறிக்க பாடு பட்டனர்... ஒரு வழியாக அவனை அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து பிரித்து அவனது கையை மடக்கி துவைத்தெடுத்தனர்... அடி பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தமாய் அடி விழுக வலியில் துடித்தவன் சிறிது நேரம் கூட நீடிக்காமல் மயக்கம் அடைந்தான்...

கண் விழித்து பார்த்த பொழுது ஒரு இருட்டு அறையில் தரையில் கிடந்தான். இன்னும் இரவு மாறாமல் இருந்தது... கண்களை அந்த இருளில் படர விட்டு தான் சிறையில் தான் உள்ளோம் என்று உறுதி செய்த பின்னர் முதுகு பகுதியில் இருக்கும் வலி தாளாமல் மீண்டும் தரையில் வீழ்ந்தான்... வலியில் கண்களை திறக்க இயலாவிடினும் செவிகளில் வெளியிலிருந்து சத்தம் தெளிவாக கேட்டது...

“சார் அவன் பாக்கெட்ல போதை பொருள் இருந்தது ஆனா அவன் அத விக்கிறான்னு எந்த ஆதாரமும் இல்ல... எத வச்சு அவனை உள்ள தள்ள சொல்றிங்க... என்ன அடிச்சான்னு வேணும்னா ரெண்டு வருஷம் உள்ள தள்ளலாம் மத்தபடி வேற எந்த தண்டனையும் குடுக்க முடியாது சார்” இன்ஸ்பெக்டரின் சோர்வான குரல் தெளிவாக அந்த அமைதியை கிழித்து அவன் காதில் ஒலித்தது...

“யோவ் இந்த கதை எல்லாம் எனக்கு தேவ இல்ல... இவன் மேல எந்த தப்பும் இல்லனு விஷ்ணு சொல்றான் ஆனா உதய் எப்படி ஆவது அவனை உள்ள வைக்க சொல்றான்... பாரு இந்தா மறுபடியும் போன் வருது, இவிங்களுக்குள்ள என்ன தா பிரச்சனையோ இவனை அழிக்க பதினெட்டு வயசுல இருந்து என்னையே ஏவி விடுறான்.

தங்கச்சி பையன்னு வேற வழியே இல்லாம நானும் இவன் பண்ணுற தப்புக்கு எல்லாம் தூது போறேன்... எதாவது போட்டோஷாப் பண்ணி ஆதாரத்தை ரெடி பண்ணு... கொறஞ்சது பத்து வருஷம் இவன் உள்ள இருக்கனும்... காலைல எப்.ஐ.ஆர் பைல் ப
ண்ணிட்டு தகவல் அனுப்பு இல்ல மேல இருந்து பிரஷர் வரும் உனக்கு”

உணர்ச்சிகளற்ற முகத்தை இருளில் பதித்து சுயத்தை இழக்க ஆரமித்தான் ஆதி...


Epdi iruku??
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Mama negga oru nall Kandipa aadhi udhai ta maatuva appo paru ne enna aaga pora nu 😤😤
Friends kulla sandai pota vaikura idiot 😡😡😡😡
 
Top