- Messages
- 997
- Reaction score
- 2,809
- Points
- 93
அத்தியாயம் – 10
அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு... நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது... மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற சாயம் தரையில் பதித்திருந்த இளம் சாம்பல் நிற ஓடுகளுடன் போட்டி போட்டு அழகாய் மின்னியது... தளத்தின் மேற்கூரைகள் அலங்கார விளக்குகள் பளிச்சிடும் ஆதவனுக்குப் போட்டியாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது... குளுமை அள்ளித்தரும் விதமாக ஆங்காங்கே பொறுத்த பட்டிருந்த செடிகள் அந்த இடத்தை மேலும் அழகாய் காட்டியது... விசாலமான மேசைகள், சௌகரியமான நாற்காலிகள் என்று வேலை பார்ப்பவர்களின் மனதை அறிந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளும் அழகே...
அந்த தளத்தில் ஒவ்வொரு ப்ராஜெக்ட் அணிக்கும் ஒவ்வொரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும் அதில் வழக்கத்தை போலவே இந்த முறையும் கௌதமும் ஆதியும் ஒரே ப்ரொஜெக்ட்டில் தான் இருந்தனர்... இதற்கு காரணம் அவர்கள் இருவரின் அசாத்திய திறமையே...
“ஆதி இந்த பைலை கடைசியா ஒரு தடவை செக் பண்ணுடா கொஞ்ச நேரத்துல சப்மிட் பண்ணனும்... மேனேஜர் வாலு வாலுன்னு காத்திடு சுத்துறான்” தலை எல்லாம் கலைந்த படி சோர்வாய் ஆதியின் அருகில் அமர்ந்தான் கெளதம்...
“மச்சான் 22 கில் போட்டுட்டேன் இன்னும் 7 போட்டுட்டா உன்னோட ரெகார்ட்-அ பீட் பண்ணிடுவேன் கொஞ்ச நேரம் கம்முனு இரு”
“டேய் பப்ஜி விளையாடுற நேரமாடா இது...? அந்த சொட்ட வந்தா கழுத்தறுப்பான் ஒழுங்கா வேலைய பாரு”
“டேய் விளையாடுறதே அவரோட டீம்-ல தான்” கௌதமை நக்கலாய் பார்த்து சிறிது தன்னுடைய விளையாட்டை தொடர்ந்தான் ஆதி...
கெளதம் எட்டி மேனேஜர் கேபினை பார்க்க அவர் கணினியின் திரைக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு இருந்தார், “விளங்கிரும்”
“டோய் தம்பி ஒருத்தன் உன் பின்னாடி நிக்கிறான் பார்... எந்த ஊறு டா நீ நல்லா விளையாடுற...” அவன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான் ஆனந்தமாக...
சில நேரம் அவன் விளையாடுவதிலேயே கழிய கெளதம் தன்னுடைய கவனம் முழுவதையும் அவன் வேளையிலேயே செலுத்தி இருந்தான்... ஒரு வேலையை தெளிவாக முடிக்காமல் அவனுக்கு உறக்கம் என்பது இல்லாமல் போய்விடும் அது அவன் சிறு வயதில் இருந்தே வந்த பழக்கம்... ஆனால் நம் ஆதிக்கு அவ்வாறு இல்லை வேலை செய்யவேண்டிய நேரம் மட்டுமே செய்வான் விளையாட வேண்டிய நேரங்களில் விளையாடுவான் சுற்றி இருக்கும் யாவரையும் எளிதாக பேச்சில் கட்டிப்போடும் தண்மை அவனிடம்... அதை தான் அவனுடைய மேலாளரிடமும் காட்டினான் அவன் நேரம் அதுவும் வேலை செய்தது... ஆனால் அதற்கு இன்னோரு காரணம், அவனுடைய வேலையை சிறிதும் பிசிறில்லாமல் இருக்கும்...
“டேய் போதும் வா வந்து இத முடி, நீ முடிச்சா தான் என்னால அடுத்த எலிவேஷன்க்கு ஆர்கிடெக்ட் டீமுக்கு சென்ட் பண்ண முடியும்” கெளதம் பொறுமையை இழந்து அவனுடைய கைபேசியை வாங்கி வைத்துக் கொண்டான்...
“இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலையும் வேலையையே பாத்துக்குட்டே இருப்பான்”
“ஆதி காபி சப்புடா போறேன் வரியா?” ஒரு பெண் வந்து ஆதியிடம் கேட்டாள்...
‘வந்துட்டாளுக’ கெளதம் எரிச்சலுடன் பெருமூச்சு ஒன்று விட்டான்
“அச்சச்சோ கொஞ்சம் வேலை இருக்கே, நாம ஒரு ஹல்ஃப் அன் ஹௌர்-ல போகலாமா?”
அவள் முகம் புன்னகையில் விரிந்தது, “பரவாயில்ல ஆதி நா வெயிட் பண்றேன் நீ ஒர்க் முடிச்சிட்டு சொல்லு”
அவள் சென்றவுடன், “டேய் என்னம்மா கம்பி கட்டுற நீ”
“மச்சான் கண்ணு வைக்காதடா... பாரு அந்த பொண்ணு மனசு பீல் ஆக கூடாதுல அது தான் போகலாம்னு சொன்னேன்”
“உன் நடிப்பு எல்லாம் என்கிட்டே செல்லாது... மொத இத முடிக்க போறியா இல்லையா அப்றம் நீ யார் கூட வேணா நூல் விடு”
மடிக்கணினியை வாங்கிய ஆதி வேலை பார்க்க ஆரமிக்க அவனுடைய மேனேஜர் வந்து ஆதியின் தோள் தட்டி, “குட் ஜாப் ஆதி கீப் இட் அப்” என்று வந்த வழியே அவருடைய கேபினுள் நுழைந்தார்...
“பரதேசி என்னைக்கு ஆச்சும் ப்ராஜெக்ட் நல்லா பண்ணதுக்கு இப்புடி பாராட்டிருக்கானா... சொட்ட பயலே” கெளதம் புலம்புவதைப் பார்த்து ஆதி தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்...
“எப்படி டா அந்த ஆள இப்டி பைத்தியமாக்கி போட்டு வச்சிருக்க?”
“என் முதுகை பெருசா ஒரு மச்சம் இருக்கு பாக்குறியா”
“நீ என்ன சில்க் சுமிதாவா உன் முதுகை பாக்க”
“இல்ல நீ பாக்கணும்” ஆதி சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்...
“ஒரு ஆணியையும் நீ புடுங்க வேணாம்... ஆமா உதய பாத்தியா?” கெளதம் சிறு ஆவலோடும் அதிர்ச்சியோடும் கேட்டான்...
“மோச புடிக்கிற நாயி மூஞ்சிய பாத்தா தெரியாதா... தெரியும்டா நீ இங்க தான் வருவன்னு...
ஒன்னும் பெருசா பேசலடா அவன் என்னமோ சொன்னான் நானு என்னமோ சொல்லிட்டு வந்துட்டேன்”
“ஏண்டா உன்னையும் மனுஷன்னு மதிச்சு கேட்டதுக்கு என் புத்திய நானே செருப்பால அடிக்கணும்” கெளதம் முகத்தை திருப்பி வைத்து கொண்டான் கோவத்தில்...
ஆதிக்கு சிரிப்பு தான் வந்தது... இவர்களிடம் மறைத்து என்ன கிடைக்கப் போகிறது அவனுக்கு... சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடந்த நிகழ்வுகளில் வலி எல்லாம் உதய்க்கு தான் ஆனால் அதை அவனை விட அதிகம் அனுபவித்தது ஆதி... மனதளவில் சிதைந்து கிடந்தான்... வலிகளை தாங்கி தாங்கி அதை பழக்கப்படுத்தி இருந்தது விதி... வலிகளை போக்குபவன் வாழ்வில் இருந்து அகன்றதும் வலியை வெளி காட்டவும் வெறுக்க ஆரமித்தான்... நண்பர்களுக்காக சிரித்து, சகோதரிக்காக புன்னகைத்து, உலகிற்காக உயிர்ப்போடு நடமாடினான்... பனிரெண்டு வருட இடைவெளி ஒரு சிறு தாக்குதலை அவன் மனதில் உயிர்ப்பித்திருக்க வேண்டியே உதய்யை பார்க்க சென்றான் ஆனால் அந்த வெறுமை நிறைந்த கண்கள் ‘இனி உனக்கு என் வாழ்வில் இடம் இல்லை’ என்று பறைசாற்றியது... அந்த நொடி நினைவில் உரைத்தது அவன் முன் நிற்பது அவன் நண்பன் அல்ல...
“அவன் மாறிட்டாண்டா”
கௌதமிற்கு புரிந்தது அந்த குரலில் ஒலித்த வலியை... கண்கூட அவர்களின் நட்பை கவனித்தவன் அல்லவா ஒருவருக்கு சங்கடம் நேர்ந்தால் இன்னொருவரின் இதயம் பதறும்... உதய்யின் அமைதியை குழைக்காமல் ஆதி அவனுக்கு முன்னாள் நிற்பான் அதை போலவே ஆதி செய்யும் சேட்டைகளை தன் தலையில் ஏற்றிக் கொள்ளவான் உதய் மாதவன்... ஆதியை அடக்க கூடிய ஒரே மனிதன் உதய்... உதய்யின் அதிகாரத்தை அடக்க ஆதியால் மட்டுமே முடியும்...
“ஆனா அந்த திமிரு இருக்கு பாத்தியா? இன்னும் கொஞ்சம் கூட குறையல சொல்ல போனா இன்னும் கூடி தான் போயிருக்கு” கெளதம் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தினான் அந்த செல்ல கோபமும் ஆதிக்கு அழகாய் தான் இருந்தது...
“ஆதி ஒர்க் முடிஞ்சதா?” மீண்டும் அந்த பெண் வந்து கேட்டாள்... தனது வேளையில் மும்முரமாக இருந்த ஆதி, “இல்ல கொஞ்சம் பிஸி” என்றான் கணினியில் இருந்து கண்களை அகற்றாமல்...
கடந்த 2 வாரங்களாக அவன் இந்த பேச்சையே பேசாமல் தடுத்த வந்த நிலையில் ‘இவா ஒருத்தி அவனே பேசுறதே அதிசயம்’ கௌதமிற்கு அந்த பெண்ணை பார்க்க கோவம் மட்டுமே வந்தது... எத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறான் அதில் தேவை இல்லாமல் இந்த இடையூரு வேற...
“ஒகே ஆதி அப்ப நான் போறேன் பாய்” ஆதி ஒரு புன்னகையை அவளிடம் வீசி வேளையில் மும்முரமாக கெளதம் அவனை கேள்வியாய் நோக்கினான்...
“என்ன ஆதி அதிசயமா பொண்ண விட்டுட்டு வேலை எல்லாம் பாக்குற?”
ஆதியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை ஆனால் பதில் எதுவும் இல்லை அவன் மனம் வேறு எங்கோ சென்றது போன்ற எண்ணம்... கெளதம் அந்த சிரிப்பை புரிந்து கொண்டான்...
“யாருடா அந்த பொண்ணு?” ஆர்வம் நிறைந்த குரலில் கெளதம் அவன் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்தான்
“என் மான் குட்டிடா” அவன் குரலில் வர்ணிக்க இயலாத ஒரு ஆனந்தம், நிம்மதி இருந்தது பல வருடங்கள் கழிந்து இந்த சந்தோசம் அவன் முகத்தில்...
“இது எப்ப இருந்து?” கெளதம் சிரித்துக் கொண்டே கேட்டான்...
“எல்லாம் உங்க அப்பா தாண்டா”
“அவரு உனக்கும் இந்த வேலை பாத்தாறா?” கெளதம் வாய் விட்டு கேட்டுவிட்டான் வந்த சந்தோஷத்தில்...
“போடா கேனையா...” என்று மணிமேகலையை சந்தித்ததிலிருந்து அவளை வீட்டில் இறக்கி விட்டது வரை அனைத்தையும் கூறினான்...
“ஏண்டா நீ தான் லூசு மாதிரி இருக்க வர போற பொண்ணை ஆச்சும் தெளிவா புடிக்க மாட்டியா?” ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டான்...
அவனை மேலும் கீழும் பார்த்த ஆதி, “நீ ஒரு அரை லூசு நீ கல்யாணம் பண்ணிக்க போற பவித்ரா ஒரு முக்கால் லூசு உனக்கு பொறக்க போற பிள்ளை ஒரு முழு லூசு... நீ எல்லாம் என்ன பத்தி பேசுறியாடா பாடிசோடா” அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அவன் தலையில் ஊற்றினான் விளையாட்டாக... அதில் சிரித்த கெளதம் ஓடிச் சென்று அருகில் இருந்த இங்க் பாட்டிலை எடுத்து வந்து அவனுடைய வெள்ளை சட்டையில் ஊற்றினான்... இதை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் சகா நண்பர்கள் சிரித்து கொண்டிருந்தனர்... இது அங்கே நாடாகும் வழக்கம் தான்... ஒரு சில நேரங்களில் இருவரும் சேர்ந்து பாட்டிற்கு ஆடுவது கூட நடக்கும்...
“நான் அறிவாளின்னு சொல்லு” ஆதி கௌதமை துரத்திக்கொண்டே கேட்டான்... இவர்கள் விளையாடுவதற்கு இந்த சிறு சீண்டல் பேச்சு ஒரு சாக்காகவே சிக்கியது கையில்...
“நான் அறிவாளி” கெளதம் சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து தப்பித்து ஓட... அவர்கள் ஆனந்தம் அங்கு உள்ள அனைவருக்கும் ஒட்டிக் கொண்டது...
“டேய் நில்லுடா மவனே கைல கெடச்ச கைமா தான் நீயி” கௌதமை தடுத்து நிறுத்த இப்பெண்கள் அவனுக்கு முன்னே வர கெளதம் அதிர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்க அங்கிருந்த டேபிள்களுக்கு இடையில் ஓடி அவனை மடக்கிய ஆதி அவனை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தான், “ஆதி ஒரு அறிவாளி... சொல்லுடா” ஆதியின் கையில் இன்னொரு பாட்டில் தண்ணீர்...
“செத்தாலும் சொல்ல மாட்டேன் போடா லூசு பயலே” சிரித்து சிரித்து கௌதமிற்கு வயிறு வலிக்க ஆரமித்தது...
“நீ காயத்திரி ஆண்ட்டிய சைட் அடிக்கிறத பவித்ராக் கிட்ட சொல்லிடுவேன்”
“போடா போடா அவளை நான் அவங்ககிட்ட ஏற்கனவே இன்ட்ரோ கொடுத்துட்டேன்”
“இப்புடி பட்ட குடும்பம் என்ன பத்தி பேசுறிங்களா...” எழுந்து நின்று கெளதமை மெதுவாக காலில் மிதித்து, “பாம்பாட்டி இருக்குடா உனக்கு ஒரு நாள் உனக்கு பர்ஸ்ட் நைட் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன்... அதையும் ஏற்கனவே பண்ணிட்டேன்னு சொல்ல முடியாதுல உன்னால”
“டேய் நீ ஹனுமான் மாதிரி இருக்கன்னு என்னையும் அப்டி ஆக்கிடாதடா... நீ அறிவாளி தான் நானு ஒதுக்குறேன்” கெளதம் ஆதியிடம் கெஞ்சினான்...
“போடா பேரிக்கா மண்டையா... நான் கேட்டப்ப நீ சொல்லல அதுனால” என்று எழுந்தவன் கௌதமின் காதிற்கு அருகில் வந்து, “உன் கல்யாணம் நைட் உன் கூட தான் நானு தங்குவேன்... நாம எல்லாரும் சேந்து கார்ட்ஸ் விளையாடலாம்...”
“ஆதி எனக்கும் சேத்து ஒரு இடம் போட்டு வை” அந்த வழியே சென்ற அவர்கள் நண்பன் ஒருவன் அசால்டாக சொல்ல...
“மச்சி அன்னைக்கு நைட் எல்லாருக்கும் கெளதம் வீட்டுல தான் போஸ்ட்-வெட்டிங் பார்ட்டி என் மாப்ள ட்ரீட்” ஆதி கெளதம் தோளில் கை போட்டு உரக்க கூற அங்கு சிரிப்பொலி மட்டுமே கேட்டது...
“ஒரே சந்தோசம் தான் கௌதமுக்கு” அங்கு உள்ள இன்னொருவன் சொல்ல...
“போடு ட்ரீட் தான்” ஆதி கௌதமின் நெஞ்சில் குத்த...
நெஞ்சை பிடித்த கெளதம் வழியில் நெளிந்து, “சனியனே ட்ரீட் கேட்டே என் சொத்து எல்லாம் நீ தாண்டா காலி பண்ணுற... நடக்காததுக்கு நா ஏண்டா உனக்கு ட்ரீட் தரணும்”
“ஐ மாப்ள சார்பு டா நீ ஆனாலும் பரவாயில்ல நீ தராட்டி போடா உன் வாலட் எங்க இருக்கும்னு எனக்கு தெரியாதா”
“டேய் திட்டு பயலே உனக்கு பயந்து தாண்டா நானு இப்ப எல்லாம் பர்ஸ் யூஸ் பண்ணுறதையே விட்டுட்டேன்”
“மாப்ள ட்ரீட் கூட எனக்கு தர மாட்டியா?”
“ட்ரீட் தான தந்துட்டா போச்சு” நக்கலாய் அதிகாரம் நிறைந்த தொனியில் அவர்கள் பின்னே ஒலித்தது ஒரு குரல்...
சுற்றி இருந்த அனைவரும் வந்த நபரை பார்த்து வேகமாக அவர் அவர் இருக்கைக்கு செல்ல ஆதி மட்டும் அவரை சந்தேக பார்வையுடன் நோக்கினான் காரணம் அவரும் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பார்வையில் இருந்த அர்த்தத்தை அவனால் எளிதில் அறிந்துகொள்ள இயலவில்லை... ஆம் அவன் முன் நிற்பது ஈஸ்வரன் தான்... உதய் மாதவனின் தாய் மாமன் ஈஸ்வரன்...
பார்வையை அவர் பின்னே செலுத்த அங்கே ஆதியை சுருங்கிய கண்களுடன் கேள்வியாய் நின்றான் விஷ்ணு ஏனோ அவனை பார்க்க ஆதிக்கு உதய்யின் தாயை பார்ப்பது போன்ற எண்ணம்... அதே கண்கள் அந்த கருவிழியில் இருந்த வெகுளித்தனமான பார்வை அவன் மனதிற்கு ஒருவித அமைதியை வாரி வாரி இரைத்து...
அவன் முன்னாள் இருந்த நாற்காலியை எடுத்து அமர்ந்த ஈஸ்வரன், “என்ன தம்பி நல்லா இருக்கியா?” என்றார் ஆதியை புன்னகை நிறைந்த முகத்துடன் நோக்கி...
“ம்ம்ம்ம்ம்ம்”
ஈஸ்வரன் வெளியில் சிரித்தாலும் உள் மனதில் அவனது திமிரான பதிலில் கோவம் இருக்கதான் செய்தது, “என்ன தம்பி பேச்சு எப்படியும் கம்மியா தான் இருக்கும் போல ?” என்றார் ஏளனமான கேள்வியுடன்...
வந்த ஆத்திரத்தை அடக்கியவன் “ஆமா சார் தேவை இல்லாத இடத்துல எல்லாம் நான் பேசுறது இல்ல” சோம்பல் முறித்தவாறே அந்த பேச்சில் ஆர்வம் இல்லை என்றே காட்டினான் ஆதி...
அந்த ஆர்வமில்லாத பேச்சை கேட்க விஷ்ணு தனது பொறுமையை இழுத்து புடித்து வைத்துக்கொண்டிருந்தான் அதுவும் அவன் மாமாவிடம் இவ்வாறு ஒருவர் பேசுவது இதுவே முதல் முறை தன் சகோதரன் கூட அவரிடம் இவ்வாறு பேசியது அவனுக்கு நினைவில் இல்லை...
“இப்ப எதுக்கு இவ்ளோ சீன் போடுற நீ?” கடுப்பில் ஈஸ்வரனை பார்த்து, “அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன் கூட பேசிக்கிட்டு நம்ம ஸ்டேட்டஸ்-அ மறந்து பேசிட்டு இருக்கீங்க ஆனா அவனை பாருங்க எவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கான்”
“உன் அண்ணனுக்கு இருக்க அதே திமிரு... ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்... சேரி கெளம்புறீங்களா வேலை நிறையா இருக்கு... டேய் கெளதம் வாடா”
ஆதியை நோக்கி வேகமாக சென்ற விஷ்ணுவை தடுத்து நிறுத்திய ஈஸ்வரன், “வா மாப்ள போலாம்” என்று அவனை அங்கிருந்து அழைத்து சென்றார்...
“அவரு உதய்யோட மாமா தான?” விஷ்ணுவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றவை பார்த்து கேட்டான் கெளதம்...
“ம்ம்ம்ம் ஆமா... அது விஷ்ணு”
“பாத்தாலே தெரியுதுடா அப்டியே காயத்திரமா மாதிரியே இருக்கான்” ஆம் என்று ஆதி தலை ஆசைதான்... ஏனோ அந்த நாட்களுக்கு மீண்டும் செல்ல மனம் அடித்துக்கொண்டது...
“டேய் நான் வீட்டுக்கு போறேன் நீயே வேலைய பாத்துக்கோ” இதற்கும் மேல் அவனால் அந்த வேலையில் கவனம் செலுத்த இயலும் என்று தோணவில்லை...
“மூஞ்சிய அப்டி வைக்காத நா என் மான் குட்டிய பாக்க போறேன் பாத்து ரொம்ப நாள் ஆச்சு” என்று தனது வண்டி சாவியை எடுத்து ஓட, “டேய் மேனேஜர்-ட சொல்லிட்டு போடா” ஆனால் இது பொய் என்று கெளதம் அறிந்தாலும் அவனை தடுக்க மனம் வர வில்லை...
“அத வே
ற அசிங்கமா சொல்லிக்கிட்டு...” அடுத்த நொடி ஆதி அலுவலகத்தை விட்டு வெளியில்...
அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு... நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது... மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற சாயம் தரையில் பதித்திருந்த இளம் சாம்பல் நிற ஓடுகளுடன் போட்டி போட்டு அழகாய் மின்னியது... தளத்தின் மேற்கூரைகள் அலங்கார விளக்குகள் பளிச்சிடும் ஆதவனுக்குப் போட்டியாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது... குளுமை அள்ளித்தரும் விதமாக ஆங்காங்கே பொறுத்த பட்டிருந்த செடிகள் அந்த இடத்தை மேலும் அழகாய் காட்டியது... விசாலமான மேசைகள், சௌகரியமான நாற்காலிகள் என்று வேலை பார்ப்பவர்களின் மனதை அறிந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளும் அழகே...
அந்த தளத்தில் ஒவ்வொரு ப்ராஜெக்ட் அணிக்கும் ஒவ்வொரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும் அதில் வழக்கத்தை போலவே இந்த முறையும் கௌதமும் ஆதியும் ஒரே ப்ரொஜெக்ட்டில் தான் இருந்தனர்... இதற்கு காரணம் அவர்கள் இருவரின் அசாத்திய திறமையே...
“ஆதி இந்த பைலை கடைசியா ஒரு தடவை செக் பண்ணுடா கொஞ்ச நேரத்துல சப்மிட் பண்ணனும்... மேனேஜர் வாலு வாலுன்னு காத்திடு சுத்துறான்” தலை எல்லாம் கலைந்த படி சோர்வாய் ஆதியின் அருகில் அமர்ந்தான் கெளதம்...
“மச்சான் 22 கில் போட்டுட்டேன் இன்னும் 7 போட்டுட்டா உன்னோட ரெகார்ட்-அ பீட் பண்ணிடுவேன் கொஞ்ச நேரம் கம்முனு இரு”
“டேய் பப்ஜி விளையாடுற நேரமாடா இது...? அந்த சொட்ட வந்தா கழுத்தறுப்பான் ஒழுங்கா வேலைய பாரு”
“டேய் விளையாடுறதே அவரோட டீம்-ல தான்” கௌதமை நக்கலாய் பார்த்து சிறிது தன்னுடைய விளையாட்டை தொடர்ந்தான் ஆதி...
கெளதம் எட்டி மேனேஜர் கேபினை பார்க்க அவர் கணினியின் திரைக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு இருந்தார், “விளங்கிரும்”
“டோய் தம்பி ஒருத்தன் உன் பின்னாடி நிக்கிறான் பார்... எந்த ஊறு டா நீ நல்லா விளையாடுற...” அவன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான் ஆனந்தமாக...
சில நேரம் அவன் விளையாடுவதிலேயே கழிய கெளதம் தன்னுடைய கவனம் முழுவதையும் அவன் வேளையிலேயே செலுத்தி இருந்தான்... ஒரு வேலையை தெளிவாக முடிக்காமல் அவனுக்கு உறக்கம் என்பது இல்லாமல் போய்விடும் அது அவன் சிறு வயதில் இருந்தே வந்த பழக்கம்... ஆனால் நம் ஆதிக்கு அவ்வாறு இல்லை வேலை செய்யவேண்டிய நேரம் மட்டுமே செய்வான் விளையாட வேண்டிய நேரங்களில் விளையாடுவான் சுற்றி இருக்கும் யாவரையும் எளிதாக பேச்சில் கட்டிப்போடும் தண்மை அவனிடம்... அதை தான் அவனுடைய மேலாளரிடமும் காட்டினான் அவன் நேரம் அதுவும் வேலை செய்தது... ஆனால் அதற்கு இன்னோரு காரணம், அவனுடைய வேலையை சிறிதும் பிசிறில்லாமல் இருக்கும்...
“டேய் போதும் வா வந்து இத முடி, நீ முடிச்சா தான் என்னால அடுத்த எலிவேஷன்க்கு ஆர்கிடெக்ட் டீமுக்கு சென்ட் பண்ண முடியும்” கெளதம் பொறுமையை இழந்து அவனுடைய கைபேசியை வாங்கி வைத்துக் கொண்டான்...
“இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலையும் வேலையையே பாத்துக்குட்டே இருப்பான்”
“ஆதி காபி சப்புடா போறேன் வரியா?” ஒரு பெண் வந்து ஆதியிடம் கேட்டாள்...
‘வந்துட்டாளுக’ கெளதம் எரிச்சலுடன் பெருமூச்சு ஒன்று விட்டான்
“அச்சச்சோ கொஞ்சம் வேலை இருக்கே, நாம ஒரு ஹல்ஃப் அன் ஹௌர்-ல போகலாமா?”
அவள் முகம் புன்னகையில் விரிந்தது, “பரவாயில்ல ஆதி நா வெயிட் பண்றேன் நீ ஒர்க் முடிச்சிட்டு சொல்லு”
அவள் சென்றவுடன், “டேய் என்னம்மா கம்பி கட்டுற நீ”
“மச்சான் கண்ணு வைக்காதடா... பாரு அந்த பொண்ணு மனசு பீல் ஆக கூடாதுல அது தான் போகலாம்னு சொன்னேன்”
“உன் நடிப்பு எல்லாம் என்கிட்டே செல்லாது... மொத இத முடிக்க போறியா இல்லையா அப்றம் நீ யார் கூட வேணா நூல் விடு”
மடிக்கணினியை வாங்கிய ஆதி வேலை பார்க்க ஆரமிக்க அவனுடைய மேனேஜர் வந்து ஆதியின் தோள் தட்டி, “குட் ஜாப் ஆதி கீப் இட் அப்” என்று வந்த வழியே அவருடைய கேபினுள் நுழைந்தார்...
“பரதேசி என்னைக்கு ஆச்சும் ப்ராஜெக்ட் நல்லா பண்ணதுக்கு இப்புடி பாராட்டிருக்கானா... சொட்ட பயலே” கெளதம் புலம்புவதைப் பார்த்து ஆதி தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்...
“எப்படி டா அந்த ஆள இப்டி பைத்தியமாக்கி போட்டு வச்சிருக்க?”
“என் முதுகை பெருசா ஒரு மச்சம் இருக்கு பாக்குறியா”
“நீ என்ன சில்க் சுமிதாவா உன் முதுகை பாக்க”
“இல்ல நீ பாக்கணும்” ஆதி சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்...
“ஒரு ஆணியையும் நீ புடுங்க வேணாம்... ஆமா உதய பாத்தியா?” கெளதம் சிறு ஆவலோடும் அதிர்ச்சியோடும் கேட்டான்...
“மோச புடிக்கிற நாயி மூஞ்சிய பாத்தா தெரியாதா... தெரியும்டா நீ இங்க தான் வருவன்னு...
ஒன்னும் பெருசா பேசலடா அவன் என்னமோ சொன்னான் நானு என்னமோ சொல்லிட்டு வந்துட்டேன்”
“ஏண்டா உன்னையும் மனுஷன்னு மதிச்சு கேட்டதுக்கு என் புத்திய நானே செருப்பால அடிக்கணும்” கெளதம் முகத்தை திருப்பி வைத்து கொண்டான் கோவத்தில்...
ஆதிக்கு சிரிப்பு தான் வந்தது... இவர்களிடம் மறைத்து என்ன கிடைக்கப் போகிறது அவனுக்கு... சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடந்த நிகழ்வுகளில் வலி எல்லாம் உதய்க்கு தான் ஆனால் அதை அவனை விட அதிகம் அனுபவித்தது ஆதி... மனதளவில் சிதைந்து கிடந்தான்... வலிகளை தாங்கி தாங்கி அதை பழக்கப்படுத்தி இருந்தது விதி... வலிகளை போக்குபவன் வாழ்வில் இருந்து அகன்றதும் வலியை வெளி காட்டவும் வெறுக்க ஆரமித்தான்... நண்பர்களுக்காக சிரித்து, சகோதரிக்காக புன்னகைத்து, உலகிற்காக உயிர்ப்போடு நடமாடினான்... பனிரெண்டு வருட இடைவெளி ஒரு சிறு தாக்குதலை அவன் மனதில் உயிர்ப்பித்திருக்க வேண்டியே உதய்யை பார்க்க சென்றான் ஆனால் அந்த வெறுமை நிறைந்த கண்கள் ‘இனி உனக்கு என் வாழ்வில் இடம் இல்லை’ என்று பறைசாற்றியது... அந்த நொடி நினைவில் உரைத்தது அவன் முன் நிற்பது அவன் நண்பன் அல்ல...
“அவன் மாறிட்டாண்டா”
கௌதமிற்கு புரிந்தது அந்த குரலில் ஒலித்த வலியை... கண்கூட அவர்களின் நட்பை கவனித்தவன் அல்லவா ஒருவருக்கு சங்கடம் நேர்ந்தால் இன்னொருவரின் இதயம் பதறும்... உதய்யின் அமைதியை குழைக்காமல் ஆதி அவனுக்கு முன்னாள் நிற்பான் அதை போலவே ஆதி செய்யும் சேட்டைகளை தன் தலையில் ஏற்றிக் கொள்ளவான் உதய் மாதவன்... ஆதியை அடக்க கூடிய ஒரே மனிதன் உதய்... உதய்யின் அதிகாரத்தை அடக்க ஆதியால் மட்டுமே முடியும்...
“ஆனா அந்த திமிரு இருக்கு பாத்தியா? இன்னும் கொஞ்சம் கூட குறையல சொல்ல போனா இன்னும் கூடி தான் போயிருக்கு” கெளதம் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தினான் அந்த செல்ல கோபமும் ஆதிக்கு அழகாய் தான் இருந்தது...
“ஆதி ஒர்க் முடிஞ்சதா?” மீண்டும் அந்த பெண் வந்து கேட்டாள்... தனது வேளையில் மும்முரமாக இருந்த ஆதி, “இல்ல கொஞ்சம் பிஸி” என்றான் கணினியில் இருந்து கண்களை அகற்றாமல்...
கடந்த 2 வாரங்களாக அவன் இந்த பேச்சையே பேசாமல் தடுத்த வந்த நிலையில் ‘இவா ஒருத்தி அவனே பேசுறதே அதிசயம்’ கௌதமிற்கு அந்த பெண்ணை பார்க்க கோவம் மட்டுமே வந்தது... எத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறான் அதில் தேவை இல்லாமல் இந்த இடையூரு வேற...
“ஒகே ஆதி அப்ப நான் போறேன் பாய்” ஆதி ஒரு புன்னகையை அவளிடம் வீசி வேளையில் மும்முரமாக கெளதம் அவனை கேள்வியாய் நோக்கினான்...
“என்ன ஆதி அதிசயமா பொண்ண விட்டுட்டு வேலை எல்லாம் பாக்குற?”
ஆதியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை ஆனால் பதில் எதுவும் இல்லை அவன் மனம் வேறு எங்கோ சென்றது போன்ற எண்ணம்... கெளதம் அந்த சிரிப்பை புரிந்து கொண்டான்...
“யாருடா அந்த பொண்ணு?” ஆர்வம் நிறைந்த குரலில் கெளதம் அவன் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்தான்
“என் மான் குட்டிடா” அவன் குரலில் வர்ணிக்க இயலாத ஒரு ஆனந்தம், நிம்மதி இருந்தது பல வருடங்கள் கழிந்து இந்த சந்தோசம் அவன் முகத்தில்...
“இது எப்ப இருந்து?” கெளதம் சிரித்துக் கொண்டே கேட்டான்...
“எல்லாம் உங்க அப்பா தாண்டா”
“அவரு உனக்கும் இந்த வேலை பாத்தாறா?” கெளதம் வாய் விட்டு கேட்டுவிட்டான் வந்த சந்தோஷத்தில்...
“போடா கேனையா...” என்று மணிமேகலையை சந்தித்ததிலிருந்து அவளை வீட்டில் இறக்கி விட்டது வரை அனைத்தையும் கூறினான்...
“ஏண்டா நீ தான் லூசு மாதிரி இருக்க வர போற பொண்ணை ஆச்சும் தெளிவா புடிக்க மாட்டியா?” ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டான்...
அவனை மேலும் கீழும் பார்த்த ஆதி, “நீ ஒரு அரை லூசு நீ கல்யாணம் பண்ணிக்க போற பவித்ரா ஒரு முக்கால் லூசு உனக்கு பொறக்க போற பிள்ளை ஒரு முழு லூசு... நீ எல்லாம் என்ன பத்தி பேசுறியாடா பாடிசோடா” அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அவன் தலையில் ஊற்றினான் விளையாட்டாக... அதில் சிரித்த கெளதம் ஓடிச் சென்று அருகில் இருந்த இங்க் பாட்டிலை எடுத்து வந்து அவனுடைய வெள்ளை சட்டையில் ஊற்றினான்... இதை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் சகா நண்பர்கள் சிரித்து கொண்டிருந்தனர்... இது அங்கே நாடாகும் வழக்கம் தான்... ஒரு சில நேரங்களில் இருவரும் சேர்ந்து பாட்டிற்கு ஆடுவது கூட நடக்கும்...
“நான் அறிவாளின்னு சொல்லு” ஆதி கௌதமை துரத்திக்கொண்டே கேட்டான்... இவர்கள் விளையாடுவதற்கு இந்த சிறு சீண்டல் பேச்சு ஒரு சாக்காகவே சிக்கியது கையில்...
“நான் அறிவாளி” கெளதம் சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து தப்பித்து ஓட... அவர்கள் ஆனந்தம் அங்கு உள்ள அனைவருக்கும் ஒட்டிக் கொண்டது...
“டேய் நில்லுடா மவனே கைல கெடச்ச கைமா தான் நீயி” கௌதமை தடுத்து நிறுத்த இப்பெண்கள் அவனுக்கு முன்னே வர கெளதம் அதிர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்க அங்கிருந்த டேபிள்களுக்கு இடையில் ஓடி அவனை மடக்கிய ஆதி அவனை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தான், “ஆதி ஒரு அறிவாளி... சொல்லுடா” ஆதியின் கையில் இன்னொரு பாட்டில் தண்ணீர்...
“செத்தாலும் சொல்ல மாட்டேன் போடா லூசு பயலே” சிரித்து சிரித்து கௌதமிற்கு வயிறு வலிக்க ஆரமித்தது...
“நீ காயத்திரி ஆண்ட்டிய சைட் அடிக்கிறத பவித்ராக் கிட்ட சொல்லிடுவேன்”
“போடா போடா அவளை நான் அவங்ககிட்ட ஏற்கனவே இன்ட்ரோ கொடுத்துட்டேன்”
“இப்புடி பட்ட குடும்பம் என்ன பத்தி பேசுறிங்களா...” எழுந்து நின்று கெளதமை மெதுவாக காலில் மிதித்து, “பாம்பாட்டி இருக்குடா உனக்கு ஒரு நாள் உனக்கு பர்ஸ்ட் நைட் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன்... அதையும் ஏற்கனவே பண்ணிட்டேன்னு சொல்ல முடியாதுல உன்னால”
“டேய் நீ ஹனுமான் மாதிரி இருக்கன்னு என்னையும் அப்டி ஆக்கிடாதடா... நீ அறிவாளி தான் நானு ஒதுக்குறேன்” கெளதம் ஆதியிடம் கெஞ்சினான்...
“போடா பேரிக்கா மண்டையா... நான் கேட்டப்ப நீ சொல்லல அதுனால” என்று எழுந்தவன் கௌதமின் காதிற்கு அருகில் வந்து, “உன் கல்யாணம் நைட் உன் கூட தான் நானு தங்குவேன்... நாம எல்லாரும் சேந்து கார்ட்ஸ் விளையாடலாம்...”
“ஆதி எனக்கும் சேத்து ஒரு இடம் போட்டு வை” அந்த வழியே சென்ற அவர்கள் நண்பன் ஒருவன் அசால்டாக சொல்ல...
“மச்சி அன்னைக்கு நைட் எல்லாருக்கும் கெளதம் வீட்டுல தான் போஸ்ட்-வெட்டிங் பார்ட்டி என் மாப்ள ட்ரீட்” ஆதி கெளதம் தோளில் கை போட்டு உரக்க கூற அங்கு சிரிப்பொலி மட்டுமே கேட்டது...
“ஒரே சந்தோசம் தான் கௌதமுக்கு” அங்கு உள்ள இன்னொருவன் சொல்ல...
“போடு ட்ரீட் தான்” ஆதி கௌதமின் நெஞ்சில் குத்த...
நெஞ்சை பிடித்த கெளதம் வழியில் நெளிந்து, “சனியனே ட்ரீட் கேட்டே என் சொத்து எல்லாம் நீ தாண்டா காலி பண்ணுற... நடக்காததுக்கு நா ஏண்டா உனக்கு ட்ரீட் தரணும்”
“ஐ மாப்ள சார்பு டா நீ ஆனாலும் பரவாயில்ல நீ தராட்டி போடா உன் வாலட் எங்க இருக்கும்னு எனக்கு தெரியாதா”
“டேய் திட்டு பயலே உனக்கு பயந்து தாண்டா நானு இப்ப எல்லாம் பர்ஸ் யூஸ் பண்ணுறதையே விட்டுட்டேன்”
“மாப்ள ட்ரீட் கூட எனக்கு தர மாட்டியா?”
“ட்ரீட் தான தந்துட்டா போச்சு” நக்கலாய் அதிகாரம் நிறைந்த தொனியில் அவர்கள் பின்னே ஒலித்தது ஒரு குரல்...
சுற்றி இருந்த அனைவரும் வந்த நபரை பார்த்து வேகமாக அவர் அவர் இருக்கைக்கு செல்ல ஆதி மட்டும் அவரை சந்தேக பார்வையுடன் நோக்கினான் காரணம் அவரும் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பார்வையில் இருந்த அர்த்தத்தை அவனால் எளிதில் அறிந்துகொள்ள இயலவில்லை... ஆம் அவன் முன் நிற்பது ஈஸ்வரன் தான்... உதய் மாதவனின் தாய் மாமன் ஈஸ்வரன்...
பார்வையை அவர் பின்னே செலுத்த அங்கே ஆதியை சுருங்கிய கண்களுடன் கேள்வியாய் நின்றான் விஷ்ணு ஏனோ அவனை பார்க்க ஆதிக்கு உதய்யின் தாயை பார்ப்பது போன்ற எண்ணம்... அதே கண்கள் அந்த கருவிழியில் இருந்த வெகுளித்தனமான பார்வை அவன் மனதிற்கு ஒருவித அமைதியை வாரி வாரி இரைத்து...
அவன் முன்னாள் இருந்த நாற்காலியை எடுத்து அமர்ந்த ஈஸ்வரன், “என்ன தம்பி நல்லா இருக்கியா?” என்றார் ஆதியை புன்னகை நிறைந்த முகத்துடன் நோக்கி...
“ம்ம்ம்ம்ம்ம்”
ஈஸ்வரன் வெளியில் சிரித்தாலும் உள் மனதில் அவனது திமிரான பதிலில் கோவம் இருக்கதான் செய்தது, “என்ன தம்பி பேச்சு எப்படியும் கம்மியா தான் இருக்கும் போல ?” என்றார் ஏளனமான கேள்வியுடன்...
வந்த ஆத்திரத்தை அடக்கியவன் “ஆமா சார் தேவை இல்லாத இடத்துல எல்லாம் நான் பேசுறது இல்ல” சோம்பல் முறித்தவாறே அந்த பேச்சில் ஆர்வம் இல்லை என்றே காட்டினான் ஆதி...
அந்த ஆர்வமில்லாத பேச்சை கேட்க விஷ்ணு தனது பொறுமையை இழுத்து புடித்து வைத்துக்கொண்டிருந்தான் அதுவும் அவன் மாமாவிடம் இவ்வாறு ஒருவர் பேசுவது இதுவே முதல் முறை தன் சகோதரன் கூட அவரிடம் இவ்வாறு பேசியது அவனுக்கு நினைவில் இல்லை...
“இப்ப எதுக்கு இவ்ளோ சீன் போடுற நீ?” கடுப்பில் ஈஸ்வரனை பார்த்து, “அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன் கூட பேசிக்கிட்டு நம்ம ஸ்டேட்டஸ்-அ மறந்து பேசிட்டு இருக்கீங்க ஆனா அவனை பாருங்க எவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கான்”
“உன் அண்ணனுக்கு இருக்க அதே திமிரு... ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்... சேரி கெளம்புறீங்களா வேலை நிறையா இருக்கு... டேய் கெளதம் வாடா”
ஆதியை நோக்கி வேகமாக சென்ற விஷ்ணுவை தடுத்து நிறுத்திய ஈஸ்வரன், “வா மாப்ள போலாம்” என்று அவனை அங்கிருந்து அழைத்து சென்றார்...
“அவரு உதய்யோட மாமா தான?” விஷ்ணுவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றவை பார்த்து கேட்டான் கெளதம்...
“ம்ம்ம்ம் ஆமா... அது விஷ்ணு”
“பாத்தாலே தெரியுதுடா அப்டியே காயத்திரமா மாதிரியே இருக்கான்” ஆம் என்று ஆதி தலை ஆசைதான்... ஏனோ அந்த நாட்களுக்கு மீண்டும் செல்ல மனம் அடித்துக்கொண்டது...
“டேய் நான் வீட்டுக்கு போறேன் நீயே வேலைய பாத்துக்கோ” இதற்கும் மேல் அவனால் அந்த வேலையில் கவனம் செலுத்த இயலும் என்று தோணவில்லை...
“மூஞ்சிய அப்டி வைக்காத நா என் மான் குட்டிய பாக்க போறேன் பாத்து ரொம்ப நாள் ஆச்சு” என்று தனது வண்டி சாவியை எடுத்து ஓட, “டேய் மேனேஜர்-ட சொல்லிட்டு போடா” ஆனால் இது பொய் என்று கெளதம் அறிந்தாலும் அவனை தடுக்க மனம் வர வில்லை...
“அத வே
ற அசிங்கமா சொல்லிக்கிட்டு...” அடுத்த நொடி ஆதி அலுவலகத்தை விட்டு வெளியில்...