• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

துருவம் - 10, 11 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
அத்தியாயம் – 10

அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு... நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது... மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற சாயம் தரையில் பதித்திருந்த இளம் சாம்பல் நிற ஓடுகளுடன் போட்டி போட்டு அழகாய் மின்னியது... தளத்தின் மேற்கூரைகள் அலங்கார விளக்குகள் பளிச்சிடும் ஆதவனுக்குப் போட்டியாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது... குளுமை அள்ளித்தரும் விதமாக ஆங்காங்கே பொறுத்த பட்டிருந்த செடிகள் அந்த இடத்தை மேலும் அழகாய் காட்டியது... விசாலமான மேசைகள், சௌகரியமான நாற்காலிகள் என்று வேலை பார்ப்பவர்களின் மனதை அறிந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளும் அழகே...
அந்த தளத்தில் ஒவ்வொரு ப்ராஜெக்ட் அணிக்கும் ஒவ்வொரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும் அதில் வழக்கத்தை போலவே இந்த முறையும் கௌதமும் ஆதியும் ஒரே ப்ரொஜெக்ட்டில் தான் இருந்தனர்... இதற்கு காரணம் அவர்கள் இருவரின் அசாத்திய திறமையே...
“ஆதி இந்த பைலை கடைசியா ஒரு தடவை செக் பண்ணுடா கொஞ்ச நேரத்துல சப்மிட் பண்ணனும்... மேனேஜர் வாலு வாலுன்னு காத்திடு சுத்துறான்” தலை எல்லாம் கலைந்த படி சோர்வாய் ஆதியின் அருகில் அமர்ந்தான் கெளதம்...
“மச்சான் 22 கில் போட்டுட்டேன் இன்னும் 7 போட்டுட்டா உன்னோட ரெகார்ட்-அ பீட் பண்ணிடுவேன் கொஞ்ச நேரம் கம்முனு இரு”
“டேய் பப்ஜி விளையாடுற நேரமாடா இது...? அந்த சொட்ட வந்தா கழுத்தறுப்பான் ஒழுங்கா வேலைய பாரு”
“டேய் விளையாடுறதே அவரோட டீம்-ல தான்” கௌதமை நக்கலாய் பார்த்து சிறிது தன்னுடைய விளையாட்டை தொடர்ந்தான் ஆதி...
கெளதம் எட்டி மேனேஜர் கேபினை பார்க்க அவர் கணினியின் திரைக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு இருந்தார், “விளங்கிரும்”
“டோய் தம்பி ஒருத்தன் உன் பின்னாடி நிக்கிறான் பார்... எந்த ஊறு டா நீ நல்லா விளையாடுற...” அவன் போக்கில் பேசிக்கொண்டிருந்தான் ஆனந்தமாக...
சில நேரம் அவன் விளையாடுவதிலேயே கழிய கெளதம் தன்னுடைய கவனம் முழுவதையும் அவன் வேளையிலேயே செலுத்தி இருந்தான்... ஒரு வேலையை தெளிவாக முடிக்காமல் அவனுக்கு உறக்கம் என்பது இல்லாமல் போய்விடும் அது அவன் சிறு வயதில் இருந்தே வந்த பழக்கம்... ஆனால் நம் ஆதிக்கு அவ்வாறு இல்லை வேலை செய்யவேண்டிய நேரம் மட்டுமே செய்வான் விளையாட வேண்டிய நேரங்களில் விளையாடுவான் சுற்றி இருக்கும் யாவரையும் எளிதாக பேச்சில் கட்டிப்போடும் தண்மை அவனிடம்... அதை தான் அவனுடைய மேலாளரிடமும் காட்டினான் அவன் நேரம் அதுவும் வேலை செய்தது... ஆனால் அதற்கு இன்னோரு காரணம், அவனுடைய வேலையை சிறிதும் பிசிறில்லாமல் இருக்கும்...
“டேய் போதும் வா வந்து இத முடி, நீ முடிச்சா தான் என்னால அடுத்த எலிவேஷன்க்கு ஆர்கிடெக்ட் டீமுக்கு சென்ட் பண்ண முடியும்” கெளதம் பொறுமையை இழந்து அவனுடைய கைபேசியை வாங்கி வைத்துக் கொண்டான்...
“இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலையும் வேலையையே பாத்துக்குட்டே இருப்பான்”
“ஆதி காபி சப்புடா போறேன் வரியா?” ஒரு பெண் வந்து ஆதியிடம் கேட்டாள்...
‘வந்துட்டாளுக’ கெளதம் எரிச்சலுடன் பெருமூச்சு ஒன்று விட்டான்
“அச்சச்சோ கொஞ்சம் வேலை இருக்கே, நாம ஒரு ஹல்ஃப் அன் ஹௌர்-ல போகலாமா?”
அவள் முகம் புன்னகையில் விரிந்தது, “பரவாயில்ல ஆதி நா வெயிட் பண்றேன் நீ ஒர்க் முடிச்சிட்டு சொல்லு”
அவள் சென்றவுடன், “டேய் என்னம்மா கம்பி கட்டுற நீ”
“மச்சான் கண்ணு வைக்காதடா... பாரு அந்த பொண்ணு மனசு பீல் ஆக கூடாதுல அது தான் போகலாம்னு சொன்னேன்”
“உன் நடிப்பு எல்லாம் என்கிட்டே செல்லாது... மொத இத முடிக்க போறியா இல்லையா அப்றம் நீ யார் கூட வேணா நூல் விடு”
மடிக்கணினியை வாங்கிய ஆதி வேலை பார்க்க ஆரமிக்க அவனுடைய மேனேஜர் வந்து ஆதியின் தோள் தட்டி, “குட் ஜாப் ஆதி கீப் இட் அப்” என்று வந்த வழியே அவருடைய கேபினுள் நுழைந்தார்...
“பரதேசி என்னைக்கு ஆச்சும் ப்ராஜெக்ட் நல்லா பண்ணதுக்கு இப்புடி பாராட்டிருக்கானா... சொட்ட பயலே” கெளதம் புலம்புவதைப் பார்த்து ஆதி தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தான்...
“எப்படி டா அந்த ஆள இப்டி பைத்தியமாக்கி போட்டு வச்சிருக்க?”
“என் முதுகை பெருசா ஒரு மச்சம் இருக்கு பாக்குறியா”
“நீ என்ன சில்க் சுமிதாவா உன் முதுகை பாக்க”
“இல்ல நீ பாக்கணும்” ஆதி சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்...
“ஒரு ஆணியையும் நீ புடுங்க வேணாம்... ஆமா உதய பாத்தியா?” கெளதம் சிறு ஆவலோடும் அதிர்ச்சியோடும் கேட்டான்...
“மோச புடிக்கிற நாயி மூஞ்சிய பாத்தா தெரியாதா... தெரியும்டா நீ இங்க தான் வருவன்னு...
ஒன்னும் பெருசா பேசலடா அவன் என்னமோ சொன்னான் நானு என்னமோ சொல்லிட்டு வந்துட்டேன்”
“ஏண்டா உன்னையும் மனுஷன்னு மதிச்சு கேட்டதுக்கு என் புத்திய நானே செருப்பால அடிக்கணும்” கெளதம் முகத்தை திருப்பி வைத்து கொண்டான் கோவத்தில்...
ஆதிக்கு சிரிப்பு தான் வந்தது... இவர்களிடம் மறைத்து என்ன கிடைக்கப் போகிறது அவனுக்கு... சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடந்த நிகழ்வுகளில் வலி எல்லாம் உதய்க்கு தான் ஆனால் அதை அவனை விட அதிகம் அனுபவித்தது ஆதி... மனதளவில் சிதைந்து கிடந்தான்... வலிகளை தாங்கி தாங்கி அதை பழக்கப்படுத்தி இருந்தது விதி... வலிகளை போக்குபவன் வாழ்வில் இருந்து அகன்றதும் வலியை வெளி காட்டவும் வெறுக்க ஆரமித்தான்... நண்பர்களுக்காக சிரித்து, சகோதரிக்காக புன்னகைத்து, உலகிற்காக உயிர்ப்போடு நடமாடினான்... பனிரெண்டு வருட இடைவெளி ஒரு சிறு தாக்குதலை அவன் மனதில் உயிர்ப்பித்திருக்க வேண்டியே உதய்யை பார்க்க சென்றான் ஆனால் அந்த வெறுமை நிறைந்த கண்கள் ‘இனி உனக்கு என் வாழ்வில் இடம் இல்லை’ என்று பறைசாற்றியது... அந்த நொடி நினைவில் உரைத்தது அவன் முன் நிற்பது அவன் நண்பன் அல்ல...
“அவன் மாறிட்டாண்டா”
கௌதமிற்கு புரிந்தது அந்த குரலில் ஒலித்த வலியை... கண்கூட அவர்களின் நட்பை கவனித்தவன் அல்லவா ஒருவருக்கு சங்கடம் நேர்ந்தால் இன்னொருவரின் இதயம் பதறும்... உதய்யின் அமைதியை குழைக்காமல் ஆதி அவனுக்கு முன்னாள் நிற்பான் அதை போலவே ஆதி செய்யும் சேட்டைகளை தன் தலையில் ஏற்றிக் கொள்ளவான் உதய் மாதவன்... ஆதியை அடக்க கூடிய ஒரே மனிதன் உதய்... உதய்யின் அதிகாரத்தை அடக்க ஆதியால் மட்டுமே முடியும்...
“ஆனா அந்த திமிரு இருக்கு பாத்தியா? இன்னும் கொஞ்சம் கூட குறையல சொல்ல போனா இன்னும் கூடி தான் போயிருக்கு” கெளதம் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தினான் அந்த செல்ல கோபமும் ஆதிக்கு அழகாய் தான் இருந்தது...
“ஆதி ஒர்க் முடிஞ்சதா?” மீண்டும் அந்த பெண் வந்து கேட்டாள்... தனது வேளையில் மும்முரமாக இருந்த ஆதி, “இல்ல கொஞ்சம் பிஸி” என்றான் கணினியில் இருந்து கண்களை அகற்றாமல்...
கடந்த 2 வாரங்களாக அவன் இந்த பேச்சையே பேசாமல் தடுத்த வந்த நிலையில் ‘இவா ஒருத்தி அவனே பேசுறதே அதிசயம்’ கௌதமிற்கு அந்த பெண்ணை பார்க்க கோவம் மட்டுமே வந்தது... எத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறான் அதில் தேவை இல்லாமல் இந்த இடையூரு வேற...
“ஒகே ஆதி அப்ப நான் போறேன் பாய்” ஆதி ஒரு புன்னகையை அவளிடம் வீசி வேளையில் மும்முரமாக கெளதம் அவனை கேள்வியாய் நோக்கினான்...
“என்ன ஆதி அதிசயமா பொண்ண விட்டுட்டு வேலை எல்லாம் பாக்குற?”
ஆதியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை ஆனால் பதில் எதுவும் இல்லை அவன் மனம் வேறு எங்கோ சென்றது போன்ற எண்ணம்... கெளதம் அந்த சிரிப்பை புரிந்து கொண்டான்...
“யாருடா அந்த பொண்ணு?” ஆர்வம் நிறைந்த குரலில் கெளதம் அவன் அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்தான்
“என் மான் குட்டிடா” அவன் குரலில் வர்ணிக்க இயலாத ஒரு ஆனந்தம், நிம்மதி இருந்தது பல வருடங்கள் கழிந்து இந்த சந்தோசம் அவன் முகத்தில்...
“இது எப்ப இருந்து?” கெளதம் சிரித்துக் கொண்டே கேட்டான்...
“எல்லாம் உங்க அப்பா தாண்டா”
“அவரு உனக்கும் இந்த வேலை பாத்தாறா?” கெளதம் வாய் விட்டு கேட்டுவிட்டான் வந்த சந்தோஷத்தில்...
“போடா கேனையா...” என்று மணிமேகலையை சந்தித்ததிலிருந்து அவளை வீட்டில் இறக்கி விட்டது வரை அனைத்தையும் கூறினான்...
“ஏண்டா நீ தான் லூசு மாதிரி இருக்க வர போற பொண்ணை ஆச்சும் தெளிவா புடிக்க மாட்டியா?” ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்டான்...
அவனை மேலும் கீழும் பார்த்த ஆதி, “நீ ஒரு அரை லூசு நீ கல்யாணம் பண்ணிக்க போற பவித்ரா ஒரு முக்கால் லூசு உனக்கு பொறக்க போற பிள்ளை ஒரு முழு லூசு... நீ எல்லாம் என்ன பத்தி பேசுறியாடா பாடிசோடா” அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அவன் தலையில் ஊற்றினான் விளையாட்டாக... அதில் சிரித்த கெளதம் ஓடிச் சென்று அருகில் இருந்த இங்க் பாட்டிலை எடுத்து வந்து அவனுடைய வெள்ளை சட்டையில் ஊற்றினான்... இதை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் சகா நண்பர்கள் சிரித்து கொண்டிருந்தனர்... இது அங்கே நாடாகும் வழக்கம் தான்... ஒரு சில நேரங்களில் இருவரும் சேர்ந்து பாட்டிற்கு ஆடுவது கூட நடக்கும்...
“நான் அறிவாளின்னு சொல்லு” ஆதி கௌதமை துரத்திக்கொண்டே கேட்டான்... இவர்கள் விளையாடுவதற்கு இந்த சிறு சீண்டல் பேச்சு ஒரு சாக்காகவே சிக்கியது கையில்...
“நான் அறிவாளி” கெளதம் சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து தப்பித்து ஓட... அவர்கள் ஆனந்தம் அங்கு உள்ள அனைவருக்கும் ஒட்டிக் கொண்டது...
“டேய் நில்லுடா மவனே கைல கெடச்ச கைமா தான் நீயி” கௌதமை தடுத்து நிறுத்த இப்பெண்கள் அவனுக்கு முன்னே வர கெளதம் அதிர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சிக்க அங்கிருந்த டேபிள்களுக்கு இடையில் ஓடி அவனை மடக்கிய ஆதி அவனை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்தான், “ஆதி ஒரு அறிவாளி... சொல்லுடா” ஆதியின் கையில் இன்னொரு பாட்டில் தண்ணீர்...
“செத்தாலும் சொல்ல மாட்டேன் போடா லூசு பயலே” சிரித்து சிரித்து கௌதமிற்கு வயிறு வலிக்க ஆரமித்தது...
“நீ காயத்திரி ஆண்ட்டிய சைட் அடிக்கிறத பவித்ராக் கிட்ட சொல்லிடுவேன்”
“போடா போடா அவளை நான் அவங்ககிட்ட ஏற்கனவே இன்ட்ரோ கொடுத்துட்டேன்”
“இப்புடி பட்ட குடும்பம் என்ன பத்தி பேசுறிங்களா...” எழுந்து நின்று கெளதமை மெதுவாக காலில் மிதித்து, “பாம்பாட்டி இருக்குடா உனக்கு ஒரு நாள் உனக்கு பர்ஸ்ட் நைட் எப்படி நடக்குதுன்னு நானும் பாக்குறேன்... அதையும் ஏற்கனவே பண்ணிட்டேன்னு சொல்ல முடியாதுல உன்னால”
“டேய் நீ ஹனுமான் மாதிரி இருக்கன்னு என்னையும் அப்டி ஆக்கிடாதடா... நீ அறிவாளி தான் நானு ஒதுக்குறேன்” கெளதம் ஆதியிடம் கெஞ்சினான்...
“போடா பேரிக்கா மண்டையா... நான் கேட்டப்ப நீ சொல்லல அதுனால” என்று எழுந்தவன் கௌதமின் காதிற்கு அருகில் வந்து, “உன் கல்யாணம் நைட் உன் கூட தான் நானு தங்குவேன்... நாம எல்லாரும் சேந்து கார்ட்ஸ் விளையாடலாம்...”
“ஆதி எனக்கும் சேத்து ஒரு இடம் போட்டு வை” அந்த வழியே சென்ற அவர்கள் நண்பன் ஒருவன் அசால்டாக சொல்ல...
“மச்சி அன்னைக்கு நைட் எல்லாருக்கும் கெளதம் வீட்டுல தான் போஸ்ட்-வெட்டிங் பார்ட்டி என் மாப்ள ட்ரீட்” ஆதி கெளதம் தோளில் கை போட்டு உரக்க கூற அங்கு சிரிப்பொலி மட்டுமே கேட்டது...
“ஒரே சந்தோசம் தான் கௌதமுக்கு” அங்கு உள்ள இன்னொருவன் சொல்ல...
“போடு ட்ரீட் தான்” ஆதி கௌதமின் நெஞ்சில் குத்த...
நெஞ்சை பிடித்த கெளதம் வழியில் நெளிந்து, “சனியனே ட்ரீட் கேட்டே என் சொத்து எல்லாம் நீ தாண்டா காலி பண்ணுற... நடக்காததுக்கு நா ஏண்டா உனக்கு ட்ரீட் தரணும்”
“ஐ மாப்ள சார்பு டா நீ ஆனாலும் பரவாயில்ல நீ தராட்டி போடா உன் வாலட் எங்க இருக்கும்னு எனக்கு தெரியாதா”
“டேய் திட்டு பயலே உனக்கு பயந்து தாண்டா நானு இப்ப எல்லாம் பர்ஸ் யூஸ் பண்ணுறதையே விட்டுட்டேன்”
“மாப்ள ட்ரீட் கூட எனக்கு தர மாட்டியா?”
“ட்ரீட் தான தந்துட்டா போச்சு” நக்கலாய் அதிகாரம் நிறைந்த தொனியில் அவர்கள் பின்னே ஒலித்தது ஒரு குரல்...
சுற்றி இருந்த அனைவரும் வந்த நபரை பார்த்து வேகமாக அவர் அவர் இருக்கைக்கு செல்ல ஆதி மட்டும் அவரை சந்தேக பார்வையுடன் நோக்கினான் காரணம் அவரும் அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பார்வையில் இருந்த அர்த்தத்தை அவனால் எளிதில் அறிந்துகொள்ள இயலவில்லை... ஆம் அவன் முன் நிற்பது ஈஸ்வரன் தான்... உதய் மாதவனின் தாய் மாமன் ஈஸ்வரன்...
பார்வையை அவர் பின்னே செலுத்த அங்கே ஆதியை சுருங்கிய கண்களுடன் கேள்வியாய் நின்றான் விஷ்ணு ஏனோ அவனை பார்க்க ஆதிக்கு உதய்யின் தாயை பார்ப்பது போன்ற எண்ணம்... அதே கண்கள் அந்த கருவிழியில் இருந்த வெகுளித்தனமான பார்வை அவன் மனதிற்கு ஒருவித அமைதியை வாரி வாரி இரைத்து...
அவன் முன்னாள் இருந்த நாற்காலியை எடுத்து அமர்ந்த ஈஸ்வரன், “என்ன தம்பி நல்லா இருக்கியா?” என்றார் ஆதியை புன்னகை நிறைந்த முகத்துடன் நோக்கி...
“ம்ம்ம்ம்ம்ம்”
ஈஸ்வரன் வெளியில் சிரித்தாலும் உள் மனதில் அவனது திமிரான பதிலில் கோவம் இருக்கதான் செய்தது, “என்ன தம்பி பேச்சு எப்படியும் கம்மியா தான் இருக்கும் போல ?” என்றார் ஏளனமான கேள்வியுடன்...
வந்த ஆத்திரத்தை அடக்கியவன் “ஆமா சார் தேவை இல்லாத இடத்துல எல்லாம் நான் பேசுறது இல்ல” சோம்பல் முறித்தவாறே அந்த பேச்சில் ஆர்வம் இல்லை என்றே காட்டினான் ஆதி...
அந்த ஆர்வமில்லாத பேச்சை கேட்க விஷ்ணு தனது பொறுமையை இழுத்து புடித்து வைத்துக்கொண்டிருந்தான் அதுவும் அவன் மாமாவிடம் இவ்வாறு ஒருவர் பேசுவது இதுவே முதல் முறை தன் சகோதரன் கூட அவரிடம் இவ்வாறு பேசியது அவனுக்கு நினைவில் இல்லை...
“இப்ப எதுக்கு இவ்ளோ சீன் போடுற நீ?” கடுப்பில் ஈஸ்வரனை பார்த்து, “அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன் கூட பேசிக்கிட்டு நம்ம ஸ்டேட்டஸ்-அ மறந்து பேசிட்டு இருக்கீங்க ஆனா அவனை பாருங்க எவ்ளோ திமிரா பேசிட்டு இருக்கான்”
“உன் அண்ணனுக்கு இருக்க அதே திமிரு... ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்... சேரி கெளம்புறீங்களா வேலை நிறையா இருக்கு... டேய் கெளதம் வாடா”
ஆதியை நோக்கி வேகமாக சென்ற விஷ்ணுவை தடுத்து நிறுத்திய ஈஸ்வரன், “வா மாப்ள போலாம்” என்று அவனை அங்கிருந்து அழைத்து சென்றார்...
“அவரு உதய்யோட மாமா தான?” விஷ்ணுவை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றவை பார்த்து கேட்டான் கெளதம்...
“ம்ம்ம்ம் ஆமா... அது விஷ்ணு”
“பாத்தாலே தெரியுதுடா அப்டியே காயத்திரமா மாதிரியே இருக்கான்” ஆம் என்று ஆதி தலை ஆசைதான்... ஏனோ அந்த நாட்களுக்கு மீண்டும் செல்ல மனம் அடித்துக்கொண்டது...
“டேய் நான் வீட்டுக்கு போறேன் நீயே வேலைய பாத்துக்கோ” இதற்கும் மேல் அவனால் அந்த வேலையில் கவனம் செலுத்த இயலும் என்று தோணவில்லை...
“மூஞ்சிய அப்டி வைக்காத நா என் மான் குட்டிய பாக்க போறேன் பாத்து ரொம்ப நாள் ஆச்சு” என்று தனது வண்டி சாவியை எடுத்து ஓட, “டேய் மேனேஜர்-ட சொல்லிட்டு போடா” ஆனால் இது பொய் என்று கெளதம் அறிந்தாலும் அவனை தடுக்க மனம் வர வில்லை...
“அத வே
ற அசிங்கமா சொல்லிக்கிட்டு...” அடுத்த நொடி ஆதி அலுவலகத்தை விட்டு வெளியில்...
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
“நைட் நேரத்துல யாராச்சும் ஒர்க் அவுட் பண்ணுவாங்களா”
“காலைல எழுந்திரிக்க முடியல அது தான் இப்ப பண்றேன்... ஏண்டா இப்புடி எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்குட்டே இருக்க போர் அடிக்கலயா உனக்கு...” ஆதவன் உதய்யின் கெஸ்ட் ஹவுசில் போடப்பட்டிருந்த டம் பெல்ஸ்ஸை (dumbbells) எடுத்து வேலை பார்த்துக்கொண்டே கேட்டான்...
இயந்திரமாய் வாழ்ந்த பின்பும் இயற்கை நிரம்பாத செயற்கை வாழ்வின் வெறுமையை நொடி பொழுதும் அனுபவித்த வண்ணம் இருந்தது அவன் இதயம் அதன் பிரதிபலிப்பே இந்த வேலையை தன் முழு நேர தொழிலாக மாற்றி இருந்தான் தனக்கென எந்த விருப்பு வெறுப்பும் இன்றி...
“பின்ன உன்ன மாதிரி காலேஜ் காலேஜ்-ஆ போகவா?” நக்கலும் சிரிப்பும் நிறைந்த குரலில் ஆதவனின் கவனம் அவன் புறம் திரும்ப உதய் இன்னும் வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...
இது தான் உதய் வேலை ஒரு புறம் இருந்தாலும் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சிறிய அசைவும் அவன் கண்ணில் இருந்து தப்பாது...
“அட நெனச்சேன் ஒரே ஆளு வேற வேற வண்டில என்ன தொடர்ந் வரப்பையே நெனச்சேன்... இந்த வேலை வெட்டி இல்லாத நாய் தான் அந்த வேலைய பாத்துருக்கும்ன்னு”
“உன் கண்ணுல இருந்து யாரு தான் சிக்காம இருக்க முடியும்... ஆனாலும் நான் ஒரு ஆள உன் பின்னாடி வைப்பேன்... சரி சொல்லு யார் அது?”
ஆதவனுக்கு தென்றலும் புயலுமாய் மனம் தொட்டது காற்றின் நினைவுகள்...
“அத உன் ஆள வச்சு நீயே கண்டு புடி... நீ தான் பெரிய ஆள் ஆச்சே...”
“ம்ம்ம் அப்ப யாரோ ஒரு ஆள் இருக்கு? ம்ம்ம் கண்டுப் புடிக்கிறேன்”
“புடி புடி... ஆனா நீ இருக்க பாரேன் எல்லாத்தையும் அமைதியா பண்ணி முடிச்சிடுற”
“நா என்னடா பண்ணுனேன்?” உதய் அப்பாவியாக கேட்டான்...
“என்ன என்ன சொல்றான் பாருங்க” ஆதவன் தலையில் அடித்து கொண்டு வியர்வையால் நனைந்த அவன் சட்டையை கழட்டி உதய் மீது எறிந்தான்...
“ச்சீ ச்சீ நாறுதுடா”
“பின்ன ரெண்டு நாள் குளிக்காம இருந்தா நாறாம மனக்குமா?”
“போட மொத வீட்டை விட்டு...”
“அப்ப சோறுக்கு என்ன பண்ணுவ உங்க சித்தி வேற நீ சாப்புடுறது என் பொறுப்புன்னு காதுல ஓதி ஓதி விட்ருக்காங்க... சரி கதைக்கு வா பேச்சை எப்டி எல்லாம் மாத்தணும்னு உன்கிட்ட தான் கத்துக்கணும்.. அந்த பொண்ண பத்தி என்ன தெரிஞ்சது?”
“வேற என்ன பணம் தான்... ஆனா இன்னும் பெருசா எதுவும் பாக்க சொல்லல...”
“உன் அசிஸ்டன்ட் தான கேக்க வேண்டியது தான... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீ புள்ளி வச்சா போதும் அதுவே எல்லாத்தையும் அடுத்து ஒளறிடும்” உதய்க்கு சிரிப்பு தானாக உதட்டில் குடிக்கொண்டது அவள் அப்படி பட்ட பெண் தானே மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டாள் ஆனால் அவளது இயலாமையை காட்டிக் கொள்ளவும் என்றும் விரும்ப மாட்டாள்...
உதய்யின் கைபேசி சினுங்க அதை எடுத்து பார்த்தவன் அதில் ஜெயன் அனுப்பி இருந்த படத்தை பார்த்து புருவம் உயர்த்தி தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தான்... மனதில் ஒரு வித தளர்வு நேர்ந்தது போன்ற எண்ணம்... கால்கள் வேரூன்றியது போன்ற உணர்வு உடல் எங்கும் பரவி இருந்தது... நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது... நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது... ஆனால் இந்த நொடி எதை அனுபவிக்க வேண்டும் என்று சந்தேகம் மனதை ஆட்கொண்டது...
உதய்யின் அமைதியை பார்த்த ஆதவன் அவனது கைபேசியை வாங்கி பார்க்க அதில் தெரிந்த ஆதியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து நின்றான்...
உடனே ஜெயனை அழைக்க, “சொல்லுங்க சார்”
“எங்க இருக்கான் அவன்?”
“அவரு கெஸ்ட் ஹவுஸ் தெரு முக்குல தான் நிக்கிறாரு சார்”
உதய் கைபேசியை மீண்டும் வாங்கி பார்த்தவன் ஆதியின் தோற்றத்தை ஆழ்ந்து கவனித்தான்... ஆனால் ஜெயனின் வார்த்தைகளும் காதில் விழுக தான் செய்தது...
“இப்பயும் நிக்கிறானா?”
“ஆமா சார்... மதியம்-ல இருந்து இங்க தான் நிக்கிறாரு இணைக்கு மட்டும் இல்ல நெறய நாள் இப்புடி தான் வந்து நின்னுருக்காரு ஆனா வேற ஏதாச்சும் வீட்டுக்கு வந்துருப்பாருனு நெனச்சேன்...” ஆதவன் உதய்யை திரும்பி பார்க்க அவன் மொட்டை மாடியை நோக்கி வேக எட்டுக்களை வைத்து ஓடிக்கொண்டிருந்தான்...
“ஏதாச்சும் பண்ணனுமா சார்?”
“எத்தனை தடவ சொல்றது ஜெயன் அவனை ஒன்னும் பண்ணாத... நம்ம ஆளுங்க அவன் பக்கமே போக கூடாது... புரிஞ்சுதா?” கோவமாக கூறினான் ஆதவன்...
“சரி சார்” என்றான் யோசனையுடன் ஜெயன்... இந்த மனிதனுக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்று கேள்வி மட்டுமே விருட்சமாய் வளர்ந்து நின்றது ஜெயனின் மனதில்...
உதய் மொட்டை மாடிக்கு சென்று அந்த தெருவின் முனையில் வண்டியில் அமர்ந்து அதில் தலை வைத்து படுத்திருந்த ஆதியை பார்த்தான்... ஏதோ சொல்ல முடியாத உணர்வு தொண்டையை அடைத்தது...
அவன் வலியில் இருப்பது அவன் தோற்றத்திலேயே தெரிந்தது... எத்தனை நாட்கள் இவ்வாறு நின்றிருக்கின்றான்? எதற்காக இங்கே நிற்கிறான்? எவ்வளவு நேரம் இவ்வாறே நிற்கிறான்? கேள்வி மேல் கேள்வி அவன் மூலையில் வரிசை கட்டி நின்றது... ஆனால் எதற்கு? என்ன பிரச்சனையாக இருந்தாலும் இவ்வாறு இரவில் தெருவில் நிற்க வேண்டுமா... மனதில் கசப்பு பரவுவது போன்ற வலி நிறைந்த உணர்வு அலைபாய்ந்தது...
உதய்யின் பின்னால் வந்து நின்ற ஆதவனுக்கு தெரிந்தது அவன் என்ன யோசிக்கிறான் எப்படி தன் உணர்ச்சிகளை அடக்கி வைத்திருக்கின்றான் என்று அவன் முகமே எடுத்து கூறியது... அந்த நொடி உதய் மேல் ஆதவனுக்கு இருந்த கோவம் எல்லாம் காற்றில் கரைந்தோடியது இவ்வளவு பாசத்தை உள்ளுக்குள் வைத்து வெளியில் ஏன் கோவம் என்னும் முகமுடியை போட வேண்டும்...
“எதுக்குடா இவன் இங்க நிக்கிறான்?” உதய்க்கு முகம் எல்லாம் சிவந்திருந்தது கோவத்தில்...
“என்ன கேட்டா”
“கேட்டு சொல்லு டா”
“என்னால எல்லாம் முடியாது நீயே பொய் அவன்ட கேளு”
“டேய் சாவடிக்காத செம காண்டுல இருக்கேன் அவனை மொத கிளம்ப சொல்லு இல்லனா ஜெயன் கிட்ட சொல்லிடுவேன் அப்றம் என்கிட்டே மூஞ்சிய தூக்கிட்டு இருக்க கூடாது நீ”
“சொல்லு எனக்கு என்ன வந்துச்சு? நீ ஆச்சு அவனாச்சு” அவ்வளவு அலட்சியமாக ஆதவன் கூறினான்...
“ஏண்டா இப்புடி பண்ணுற...?”
“அவன் நின்னா உனக்கு என்னடா... ஏதோ ஒரு அநாதை பையன் நிக்கிறானு நெனச்சிட்டு விற்று”
உதய்யின் முகம் கோவத்தில் சிவந்து கருத்தது... மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தவன் தான் ஆனால் இந்த வார்த்தை நிச்சயம் அவன் சுமக்க வேண்டிய அவசியமே இல்லை வாழ்க்கையில் வலியை நிறைய அனுபவித்தவன்... இவ்வாறு எல்லாம் அவனை யாரும் பேசி விட கூடாதென்பதற்காக தானே இருபத்தி நான்கு மணி நேரமும் அவனுடனே இருந்தான் அந்த வெறுமையை உணர விடாமல்...
“நீயே இப்புடி பேசுனா மத்தவங்களுக்கு நமக்கும் என்னடா வித்யாசம்?” ஏதோ தன்னையே பேசியது போன்ற வலி தெரிந்தது அவன் கண்களில்... அந்த வலி ஆதவனின் இதயத்தை குளிர்வித்து...
‘என்ன என்னமோ பேசுனியேடா ஆனா வெளிய காட்டுற கோவம் எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தான் என்னைக்கு தான் இதை எல்லாம் மறக்க போறியா தெரியல’ மனதில் நினைத்ததை வெளியில் கூறாமல் வண்டியில் தலை சாய்த்து படுத்திருந்த ஆதியை மட்டுமே ஆதவன் பார்த்திருந்தான் உள்ளுக்குள் ஒரு மன்னிப்பையும் சிந்தி, ‘மன்னிச்சிருடா உன்ன அனாதைன்னு சொன்னதுக்கு... உனக்கு எப்பையும் நாங்க இருப்போம் இத்தனை வருஷத்து பிரிவையும் சேந்து சந்தோசமா அனுபவிப்போம்... அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கனும்’
“என்னடா கனவு கண்டுக்கிட்டு இருக்க மொத அவனை கிளம்ப சொல்லு அப்றம் கண்ட கண்ட நாய் எல்லாம் அவனை பேசும்” உதய் ஆதவனிடம் எரிந்து விழ...
ஆதவன் உதய்யை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்து, “இவனுகளே சண்டை போடுவானுகலாம் இவனுகளே திடுப்பானுகலாம் அப்பறம் இவனுகளே சப்போர்ட் பண்ணிக்குவானுகலாம்... நல்லா இருக்குடா உங்க கதை... இவைங்க போதைக்கு நாம தா ஊறுகாய்”
“பொலம்பாம ஜெயன்-கு போன் போடு”
“அவன் எல்லாம் வேணாம் நானே பாத்துக்குறேன்” உதய் அவன் மொத கவனத்தையும் ஆதியின் மீதே வைத்திருந்தான்...
அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த இடத்தில விஷ்ணுவும் ஹரியும் அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்தினர்... சத்தம் கேட்ட ஆதி தலையை நிமிர்த்தி பார்க்க அவர்கள் இருவரையும் கண்டு கேள்வியாய் பார்த்து உதய்யின் வீட்டை ஒரு முறை பார்த்து மீண்டும் சகோதர்களின் புறம் பார்த்து வண்டியை விட்டு இறங்கி அதில் சாய்ந்து நின்றான் ஒரு ஆர்வமற்ற பார்வையுடன்... பேசுறத பேசிட்டு வேகமா போ என்ற பார்வை அது...
அந்த பக்கம் ஆதவன் உதய்யிடம், “இவனுகளுக்குள்ள என்னடா பிரச்னை மூஞ்சிய தூக்கி வச்சிட்டே இருக்கானுங்க?”
“எல்லாம் மாமா பாத்த வேலை தான்”
“மொத அந்த ஆள பாத்து செஞ்சு விடணும்... அவரு போற போக்கே சரி இல்ல நேத்து கூட என்னமோ தப்பு பண்ற மாதிரி அவரு வீட்டுக்கே பயந்து பயந்து போனாரு”
எங்கோப் பொறித் தட்டியது அவரைப் பற்றி கேட்டவுடன் “ஆதிகிட்ட யாரு விசியத்தை சொன்னது-னு ஜெயன் விசாரிச்சானான்னு கேளு”
“விருத்தாச்சலம்-னு ஒருத்தர் சார்” அவர்கள் பின்னே வந்து நின்ற ஜெயன் தனது ஐ-பாட் எடுத்து அவன் முன் நீட்டினான்... அதில் ஐம்பது வயதிற்கு குறையாமல் இருந்த சற்று பூசிய உடல் வாகுடைய ஒரு மனிதர் திரையை பார்த்து சிரித்த வண்ணம் இருந்தார்... கோட், சூட், டை என்று பக்கா தொழிலதிபரின் தோற்றம் ஆனால் அந்த கண்களில் இருந்த எகத்தாளம் ஏதோ ஒன்று சரியாய் படவில்லை...
“இத கண்டு புடிக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு மாசம் தேவ பட்டுச்சா ஜெயன்?”
“இல்ல சார் அவரை மீட் பண்ணதை வெளிய காட்ட விரும்பாத மாதிரி இருந்துச்சு சிசிடீவி ஃப்பூட்டேஜ் எல்லாமே அழிஞ்சிருந்துச்சு சார் அது தான் கொஞ்சம் லேட்... இவரு ஆதியை நம்ம கான்ஸ்டருக்ஷன் கம்பெனி-கு வெளிய பாத்து மீட் பன்னிருக்காரு அதுக்கு அப்றம் ஒரு காபி ஷாப்-ல மீட் பண்ணி பேசிருக்காங்க அவங்க மீட் பண்ணுன அடுத்த நாள் தான் அவரு நம்ம ஆபீஸ்-கு வந்து உங்கள மீட் பண்ணாரு... இவரு சிங்கப்பூர்ல கான்ஸ்டருக்ஷன் கம்பெனி வச்சிருக்காரு இவருக்கும் ஆதிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல ஆனா அவங்க கிட்ட தட்ட அரை மணி நேரத்திற்கு மேல பேசிருக்காங்க சார் அதுக்கு அப்றம் அவரு ஒடனே சிங்கப்பூக்கு கெளம்பி போய்ட்டாரு...”
“அவருக்கும் மாமாக்கும் எதாவது சம்மந்தம்?”
“இல்ல சார் ரெண்டு பேரும் இது வரைக்கும் மீட் பண்ணது கூட இல்லை”
மறுப்பாய் தலை அசைத்தவன், “இல்ல ஜெயன் எனக்கு அப்டி தோணல அவரு அன்னைக்கு மீட்டிங்-ல அவனை பாத்ததே சரி இல்லை இன்னும் கொஞ்சம் டீடைல்லா விசாரிங்க எவ்வளவு வேகமா முடியுமோ அவ்ளோ வேகமா எனக்கு தகவல் வேணும்... ஆதவா ஆதியை கிளோஸ்-ஆ வாட்ச் பண்ணு அவனை மட்டும் இல்ல தமிழ், கெளதம் மூணு பேரையும் வாட்ச் பண்ணு உனக்கு டைம் கெடக்கிறப்ப, மாமாவை அவன் பக்கத்துல வர விடாம பாத்துக்கோ அது உன் பொறுப்பு... எனக்கு எதிரா இருக்க எல்லாருமே அவரோட நண்பர்கள்... மாமா மேல ஒரு கண்ணு இருக்கட்டும் ஜெயன்... நீங்களா ஜேர்மன்-ல என்ன நடக்குதுன்னு சொல்லுவிங்கனு நானு எதிர் பாத்துட்டே இருக்கேன் எனக்கு இன்னும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்குற மாதிரி தெரியல “
தலை அசைத்த ஜெயன், “ஒரு வாரம் டைம் குடுங்க சார்... சார் நீரஜ் கொஞ்சம் பிரச்னை பண்ணுறாரு”
“ஆபீஸ்ல நாளைக்கு பேசிக்கலாமா...” அது கேள்வியாய் வராமல் கட்டளையை மட்டுமே வந்தது அதை புரிந்து கொண்ட ஜெயன் அந்த இடத்தை விட்டு நகர இருவரும் ஆதியை நோக்கி தனது பார்வையை திருப்பினர்...
இப்பொழுதும் அதே போல் அவர்களுக்கு தனது வலது புற முகத்தை மட்டுமே காட்டி வண்டியில் அமர்ந்திருந்த ஆதி அவர்களை ஒரு பொருட்டாய் மதிக்காமல் ஒரு சிகரெட்டை எடுத்து பத்தவைத்து, “என்னடா ரொம்ப நேரமா நிக்கிறீங்க என்ன வேணும் பசிக்கிதா காசு இல்லையா?” ஏதோ பிச்சைக்காரனை பார்ப்பது போல பேசினான்...
அதோடு நிறுத்தாமல் ஒரு ஐம்பது ருபாய் எடுத்து அவர்கள் முன் நீட்டியவன், “உங்க அண்ணன் வயசு பசங்களுக்கு காசு கூட தர மாட்டான் போல... இந்தா வச்சுக்கோ... நல்லா முட்ட தோசையை சாப்பிடுங்க இருவது ருபாய் தான்”
தலை சூடேற ஆதியை நோக்கி கை ஓங்கி வந்த விஷ்ணுவை ஹரி தடுத்து நிறுத்த அந்த இடத்தில் அசராமல் அவர்களை சற்றும் மாறாத அதே ஏளன பார்வையை பதித்திருந்தான், “என்ன மயித்துக்கு நீ என்ன தடுக்குற என்ன பிச்சை போடுறானா அவன்? அடிச்சேன்னு வை குறுக்கு எலும்பு ஒடஞ்சிடும்”
அவன் பேச்சில் நக்கலாக சிரித்த ஆதி, “டேய் என்னடா உங்க பிரச்னை?”
“யாருடா நீ?”
“என்ன பத்தி தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?”
“உனக்கு அவளோ சீன் எல்லாம் இல்ல... எதுக்கு இப்ப நீ எங்க வீட்டுக்கு முன்னாடி நிக்கிற?” மேலும் கேள்வி மட்டுமே வந்தது சகோதரர்களிடமிருந்து...
“தோடா உங்க வீட்டுக்கு நான் வந்து குடிச்சிட்டு ஆட்டம் போட்டேனா நான் ரோடு-ல நிக்கிறேன் எவனுக்கும் கேக்க உரிமை இல்ல” என்று தனது சிகெரெட்டை ஆழ்ந்து இழுத்து அவர்கள் முகத்திற்கு நேராக ஊதினான்...
“இன்னைக்கு இவனுக்கு என் கையாள தான் சாவு” என்று விஷ்ணு ஆதியை நோக்கி வர இந்த முறை ஹரியாலும் அவனை தடுக்க இயலவில்லை... ஆனால் அவனை ஆர்வமின்றி பார்த்தவன் தன்னை நோக்கி ஓங்கிய விஷ்ணுவின் கைகளை பிடித்து அவன் முதுகிற்கு பின்னால் பிடித்து வைத்து தனக்கு எதிரே மூன்று வீடுகளை தாண்டி இருந்த உதய்யின் கெஸ்ட் ஹவுஸின் மேல் தலத்தில் நின்றிருந்த உதய்யை பார்த்து விஷ்ணுவை கை காட்டி பிறகு உதய்யை நோக்கி ஒற்றை விரலை நீட்டி வா என்று சைகை செய்து மீண்டும் விஷ்ணுவின் புறம் குறித்து சைகை செய்தான்...
“என்ன எலும்பு உடையிற சத்தம் கேக்குதா”
ஆதி ஹரியிடம் கேட்க ஹரி என்ன செய்வதென்று தெரியாமல் ஆதியிடம், “தெரியாம பேசிட்டான் விற்றுங்களேன்” கெஞ்சினான்...
“ம்ம்ம்ம்ம் உனக்கு இருக்குற விவரம் இவனுக்கு இல்லையே டா தம்பி...” சிகெரெட்டை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து உள் இழுத்தவன் ஹரியை பார்த்து புன்னகையை சிந்தினான்...
இவை எல்லாம் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த உதய் எந்த ஒரு உணர்வும் காட்டாமல் நிற்க விஷ்ணு தான் வலியில் துடித்துக் கொண்டிருந்தான், “ஸ்ஸ்ஸ் டேய் கைய விடு டா”
அங்கு ஆதவன், “என்னடா சொல்றான் அவன்?” என்றான் ஆதியின் சைகை பாஷை புரியாமல்...
“நான் போயி விஷ்ணுவை கூட்டிட்டு போகணுமாம்”
“டேய் போகாத... அங்க பாரு உன் தம்பி அவன் கூட சண்டை போட நெனச்சது மொத தப்பு விடு கொஞ்ச நேரம் அடி வாங்கட்டும் அப்ப ஆச்சும் கொஞ்சம் கம்மியா பேசட்டும்... ஆனா ஏன் டா உன் வாயையும் அவனுக்கு சேத்து குடுத்துட்டியா... என்னம்மா பேசுறான் வாய் வலிக்குமோ வலிக்காதோ?”
உதய் எதுவும் பேசவில்லை அவன் அமைதியே விஷ்ணுவிற்கு மேலும் மேலும் வலியை தர, உதய் ஆதவனை பார்க்க அதை புரிந்து கொண்ட ஆதவன் வெளியே சென்று ஆதியை தடுத்து நிறுத்தினான், “விடு டா அவனை”
ஆனால் அதை கேட்டால் அது ஆதி இல்லையே தனது பிடியை இறுக்கிய ஆதியின் பார்வை அங்கே மொட்டை மாடியில் மார்புக்கு குறுக்கே கை கட்டி நின்ற உதய்யை நோக்கி அனலாய் வீசியது... உதய்யோ நீ என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள் என்று அசராமல் நின்றான்...
“டேய் விடு டா அவனை உன் வீரத்தை சின்ன பையன்கிட்ட காட்டாத விடுன்னு சொல்றேன்ல” என்று ஆதியின் கையை விஷ்ணுவிடமிருந்து தளர்த்தியவன் விஷ்ணுவை பார்த்து முறைத்து...
“எதுக்குடா அவன்கி
ட்ட வம்பு வளத்துட்டு இருக்க அவனுக்கு பாக்ஸிங் தெரியும் நீ ஒரே அடில செத்துடுவ”
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
“என்னது பாக்ஸிங்-ஆ” ஹரி வாயை பிளந்து ஆதியை பார்த்தான், “நல்ல வேலை உனக்கு ஹெல்ப் பன்றேன்னு நான் நடுவுல வரலடா” நிம்மதி பெருமூச்சுடன் ஆனந்தமாக ஹரி விஷ்ணுவின் காதில் முணுமுணுக்க விஷ்ணு அவனை தீ பார்வை பார்த்தான்...
“என்ன இன்னும் உனக்கு தனியா பத்திரிகை வாசிக்கணுமா கெளம்பு மொத” என்று ஹரியையும் விஷ்ணுவையும் அனுப்பி வைத்தவன் ஆதியை பார்த்து, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ?”
“ஏண்டா ஸ்கிரிப்ட் எழுதி வச்ச மாதிரி எல்லாரும் ஒரே கேள்வியை கேக்குறீங்க... உனக்கு எல்லாம் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல கெளம்பு”
“டேய் ஆதி எதுவுவா இருந்தாலும் மனசு விட்டு பேசுடா உன் முகமே சரி இல்ல” என்று நெருங்கி வந்தவனை நிறுத்திய ஆதி...
“உங்ககிட்ட வந்து சொந்தம் கொண்டாடுற அளவுக்கு நா கிறுக்கு புடிச்சு சுத்தலை... அப்புடியே சுத்தினாலும் ரோடு ரோடா சுத்துவேனே தவற கண்டிப்பா உங்க கிட்ட வர மாட்டேன்... வந்துட்டானுக நல்லவன் மாதிரி” வார்த்தைகளை அல்லி வீசியவன் மறு பேச்சின்றி தனது வண்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டான்...
அத்தியாயம் – 11


தலையை அழுத்தி கண்களை இருக்க மூடி நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்திருந்த உதய் என்ன நினைக்கின்றான் என்று தெரியாமல் அடுத்த என்ன வேலை செய்ய என்று தெரியாமல் அவனுக்கு சற்று தள்ளி நின்று கடந்த அரை மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி... நேரம் செல்ல செல்ல தன்னை அறியாமல் தூக்கம் வர அதை கட்டுப்படுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தாள்...
‘காலைல வந்த ஒடனே தூங்குறவன் கொஞ்சம் வீட்டுல தூங்கி எந்திரிச்சிட்டு தான் வர்றது... இவனை பாத்து நமக்கும் தூக்கம் வருதே’
இதற்குமேல் பொறுத்தால் தான் அந்த இடத்திலேயே தூங்கி சரிந்து விடுவோம் என்று உணர்ந்து உள் சென்றிருந்த குரலை கடினப்பட்டு வெளியில் இழுத்து, “சார்” என்றாள்...
அவனிமிருந்து பதில் எதுவும் இல்லை... ‘நெஜமாவே தூங்கிட்டாரா?’ வியந்தவள் அவனது இருக்கைக்கு அருகே செல்ல கால்கள் நடுங்கினாலும் மனதில் இருந்த தயக்கத்தையும் ஓரம் தள்ளி அவனுக்கு அருகில் சென்றவள் அவனது அகன்ற தோள்களை தொட சென்ற கைகளை பாதியிலேயே நிறுத்தியது அவனது சிறிய அசைவு... திடுக்கிட்டு இரண்டடி பின்னே சென்று நெஞ்சில் கைவைத்து வேகமாக சென்ற இதயத்துடிப்பை அடக்கி வைத்தாள்...
இதயத்தை நிலைக்கு கொண்டு வந்த பிறகு அவனது அமைதியான மற்றும் ஆழ்ந்த யோசனையில் இருந்த முகத்தை உன்னிப்பாக கவனித்தவளுக்கு என்றும் இல்லாமல் இன்று அவன் சற்று வித்யாசமாக தெரிந்தான்... அந்த வித்யாசம் என்ன என்றால் அவனை ஒவ்வொரு அணுவாக கவனித்தாள் அந்த குளிர்ந்த எசியையும் தாண்டி அவன் விருப்பப்படி ஓடும் அந்த மின்விசிறியின் காற்று அவன் அடர்த்தியான தலைமுடியை வருடி சென்ற பொழுது அதற்கு இணைய அசைந்தாடும் அவன் ஒற்றை முடி அவன் அமைதிக்கு இடையூறாக தோன்றியது.
அதில் சுருங்கும் அவன் நெற்றியும் புருவங்களும் ஒரு வித சிலிர்ப்பை அவள் உடலில் தந்தது... அந்த செதுக்கி வைத்தாற்போல் இருந்த அந்த கூர்மையான மூக்கும் அவன் முகத்தில் இருக்கும் கம்பீரமும் அவன் கண்களில் எப்பொழுதும் தெரியும் அந்த அதிகாரமும், உயிரின் ஆழம் வரை சென்று ஊடுருவும் பார்வையும் இல்லாதது அவளுக்கு ஒரு நிம்மதி அளித்தது இந்த சிறு இடைவேளை அவனை ரசிக்க போதுமானதாக இருந்தது...
அவனுடைய மறைமுகமான உதவிகளும் அவளை ரகசியமாய் பார்க்கும் பார்வையும் மனதில் ஒரு சிறிய ஆனந்தம் கலந்த ஆசையை தூண்டிவிட... “ஆனாலும் இவரு இவ்ளோ ஹண்ட்ஸோமா இருக்க கூடாது... பேசாம இவரையே கரெக்ட் பண்ணிடலாமோ” என்று நினைத்தவுக்கு அவன் கன்னங்களை கிள்ளி விளையாட ஆசை எழுந்தது யாழினிக்கு...
அவன் கன்னங்களை தாண்டி சென்ற அவள் கண்கள் அவனது கழுத்து வரை பட்டன் போடப் பட்டிருந்த அந்த விலையுயர்ந்த சட்டையையும் கோட் சுட்டும் பார்த்ததும் தான் நினைவிருக்கு வந்தது அவனுடைய தகுதியும் அவளுடைய நிலைமையும்...
உள்ளத்தில் உதித்த அந்த நந்தவனம் நொடி பொழுதில் இருன்டிட இதயமும் கனமாகியது... ‘அட நாம ஆசை பட்டது எப்பதான் கெடச்சிருக்குது பீல் பண்ணாத யாழ்... அதுவும் ஒரு நிமிசத்துல வந்த க்ரஸ் தான் இது’ ஆனாலும் இதயத்தில் உதித்த விரக்தி அந்த காந்த கண்களில் அப்பட்டமாக தெரிந்தது...
தனக்கு தானே ஆறுதல் அளித்துக் கொண்டிருந்த நேரம் உதய் சட்டென எழுந்து அமர்ந்து ஜெயனுக்கு அழைத்தான், “ஜெயன் வாங்க இங்க” என்று எழுந்து அவன் இருக்கைக்கு அருகில் இருந்த அலமாரியில் இருந்த பைலை எல்லாம் எடுத்து புரட்ட ஆரமித்தான்... இவை எல்லாம் நொடி பொழுதில் நிகழ்த்திட அவன் என்ன செய்துக் கொண்டிருந்தான்? என்ன திடீரென யோசித்தான்...? அப்ப இவ்வளவு நேரம் தூங்கலையா...?? என்று புரியாமல் வியப்பாக அவனையே யாழினி பார்த்துக் கொண்டிருந்தாள்... அலமாரியில் ஒரு பைலை எடுத்தவன் தனது மடிக்கணினியில் எதையோ தேட அந்த நேரம் அறைக்குள் வந்து நின்றான் ஜெயன் மின்னல் வேகத்தில்...
“சொல்லுங்க சார்”
“ஜெயன் நீரஜ் மும்பைல ஒரு புது ரிசார்ட் வாங்கிரூக்கானு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னிங்கல”
“ஆமா சார் அது பீச் பக்கத்துல இருக்குது”
“அவனுக்கு ப்ராபிட் தர்ற மாதிரி பீச்க்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துலயே ரெண்டு ரிசார்ட் இருந்துச்சு, அந்த ரிசார்ட் ரொம்ப டேமேஜ் ஆன ஸ்டேஜ்ல இருக்குது அவன் ஏன்அந்த ரிசார்ட் வாங்குனான்-னு எனக்கு ரொம்ப நாள் டவுட் இருந்துச்சு இன்னைக்கு தான் அதுக்கு பதில் கிடைச்சிருக்குது...
இங்க பாருங்க ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் கம்பெனி எடுத்த இந்த பெரிய ப்ராஜெக்ட் தான் பிக்ஃபூட் இந்தியா (Bigfoot India) கார்ஸ்-கு வர்ற ஸ்பேர் பார்ட்ஸ் மட்டும் இல்லாம எலக்ட்ரிக் கார்ஸ்-கு இன்ஜின் தயாரிக்கிறது அதுவும் லோ பட்ஜெட். இது கவர்மன்ட் ப்ராஜெக்ட். ஆனா, ப்ராஜெக்ட் ஸ்டார்ட் ஆகி 7வது மந்த்ல ப்ராஜெக்ட்-ல ஒரு பெரிய சேஞ் வந்துச்சு ப்ராஜெக்ட் ஓட டைம் கொறஞ்சது ரெண்டு வருசத்துக்கு பண்ண வேண்டிய ப்ராஜெக்ட் ஒரு வர்சதுக்குள்ள முடிக்கணும்னு டெட் லைன். அதுனால ஒரு சின்ன ஸ்டார்ட்-அப் கம்பெனி அவங்க கூட சேந்து ஒர்க் பண்ண கவர்மன்ட் ஆர்டர் போட்டுச்சு அப்ப தான் ப்ராப்லம் ஸ்டார்ட் ஆனதே... நீரஜ் அவனோட பார்ட்னர் கூட சேந்து அந்த சின்ன கம்பெனி ஓட ஐடியாஸ் எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணாங்க சோ அந்த கம்பெனி பிரஷர்-ல ப்ராஜெக்ட்ல இருந்து வெளியேறுனாங்க.
நொவ் கமிங் டு தி பாயிண்ட் இந்த ரிசார்ட்கும் அந்த ப்ராஜெக்ட்க்கும் ஏதோ கண்ணேக்க்ஷன் இருக்கனும்... மெயின் பாயிண்ட் இந்த ரிசார்ட் பேர்பக்ட் கண்டிஷன்-ல இருக்குது பட் இன்னும் யூஸ்க்கு வரல சோ சம்திங் இஸ் நாட் ரைட் தேர்... ஜெயன் நீங்க அந்த ரிசார்ட் சுத்தி நம்ம ஆளுங்கள வாட்ச் பண்ண சொல்லுங்க முக்கியமா நைட் நேரத்துல... நேரம் காலம் பத்தி கவலை இல்லை அங்க எதாவது சந்தேக படுற மாதிரி ஒரு சின்ன விசியம் நடந்தாலும் எனக்கு நியூஸ் ஒடனே வரணும்... இத வச்சு தான் என்னோட ப்ராஜெக்ட் என் கைக்கு வர வைக்கணும்”
‘எங்க இருந்து எங்க முடிச்சு போடுறாரு’ அவனை வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி. ஆனால் என்ன சொன்னாலும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்குது...
“ஏன் அண்ணா இவரு எப்பையுமே இப்புடி தான் லூசு மாதிரியே பேசுவாரா?” அவளை கேள்வியாய் பார்த்த ஜெயன் புருவங்கள் உயர்த்த, “இல்ல நல்லா தூங்கிட்டு இருந்தாரு திடீர்னு எந்திரிச்சு சம்மந்தமே இல்லாம எதையோ பேசுறாரு... இல்ல எனக்கு புரியல” என்றாள் குழப்பத்துடன்...
அந்த அமைதியின் உறைவிடமான அறையில் அவளது பதுங்கிய குரலும் அவன் கூர்மையான செவிகளில் அழகாக ஒலித்தது... மேலோங்கிய சிரிப்பை உள்ளடக்கியவன் ஜெயனை பேச விடாமல், “நேத்து உங்ககிட்ட ரிப்போர்ட் என்ன ஆச்சு யாழினி?”
“உங்க டேபிள்ல வச்சிட்டேன் சார் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடியே” அந்த ஒரு மணி நேரம் சற்று பம்மியே வந்தது...
“ஒகே”
“சார் நீங்க சொன்ன இடத்துல 100 ஏக்கர் இடம் இந்த வாரம் ரெஸிஜிஸ்டெர் பண்ணிடலாம் நீங்க ஒரு தடவை வந்து பாத்துட்டு கன்ப்பார்ம் பண்ணிட்டா”
“என்ன என்ன அதுல இருக்கும்?”
“ஒரு 57 ஏக்கர் தென்னந்தோப்பு தனி இடம் அத விட்டு ஒரு நானுறு மீட்டர் தள்ளி 21 ஏக்கர் நெல் அதுகூடவே மிச்சம் இருக்க 22 ஏக்கர்ல வாழைதோப்பு, மாந்தோப்பு, லெமன், கொய்யா, சாமை இப்புடி எல்லாம் சேந்து இருக்குது சார்”
“எனக்கு ஒரே ஒரு ஆசைத் தாண்டா உதய்... நம்ம குடும்பமா வருசத்துக்கு ஒருப் பத்து நாள் எந்த ஒருத் தொழில் சம்மந்தமானப் பேச்சும் இல்லாம ஆயிரம் தென்னைமரத்துக்கு நடுல இருக்க ஒருக் குட்டி வீட்டுல நாம எல்லாரும் சந்தோசமா இருக்கனும். அப்டியே ஆதி, கெளதம், ஆதவன், தமிழ் பேரையும் அப்புடியே வர சொல்லிடு. அந்தப் பசங்க இல்லாம எனக்கு இப்ப எல்லாம் எதுவுமே செய்யத் தோன மாட்டிக்கிது...
தாகத்துக்கு இந்த மினெரல் வாட்டர் இல்லாம இளநீர் தண்ணிக் குடிச்சிட்டு ராத்திரி நேரத்துல மாடிலப் போய் நிலாச்சோறு என் கையாள எல்லாருக்கும் உருண்டைப் பண்ணிக் குடுக்கணும் தம்பி, காலைல விறகு அடுப்புல வச்சு மண் பானைலச் சாப்பாடு ஆக்கி போடணும். அப்புடியே பம்ப் செட்டுல குளிச்சிட்டு இருக்குறப் பிரச்சனை எல்லாம் மறக்குற அளவுக்கு குளிக்கணும்... அந்தக் கிராமத்து வாழக்கையை ஒருப் பத்து நாள் மட்டும் அனுபவிக்கனும் உதய்... உங்க அப்பாக் கிட்ட இதச் சொன்னாச் சிரிச்சிட்டுப் போய்ட்டாருடா, நீ நல்ல நிலைமைக்கு வந்து அம்மாக்குச் சும்மாக் கொஞ்சம் இடம் வாங்கி ஒரு இந்த ஆசைய மட்டும் பண்ணிடு...” காதில் தாயின் வார்த்தை ஒலித்துக்கொண்டே இருந்தது...
“பம்ப் செட்டு இருக்கும்ல ஜெயன்?”
‘இவரு என்ன கொழந்த மாதிரி பம்ப் செட்டு பத்தி கேக்குறாரு...’ அவனது மன வேதனையை அறியாமல் தன்னுள் சிரித்தவன், “எல்லாமே இருக்கும் சார் ஒன்னு இல்ல பல பம்ப் செட்டு இருக்குது...”
“சரி நாளைக்கு ப்ராபர்ட்டி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ஒரு தடவ செக் பண்ணிட்டு சொல்லுங்க ரெஜிஸ்டர் பண்ணிடலாம்”
“யார் நேம்ல சார்” பதில் தெரிந்தும் இந்த முறையாவது வேறு பதில் வரும் என்ற ஒரு நப்பாசையில் தான் இன்றும் கேட்டான்...
“இது என்ன கேள்வி வழக்கம் போல தம்பி தங்கச்சி பேர்ல ஈக்குவல்லா ஷேர் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிடுங்க”
இதுவே உதய். தனக்கென ஒரு போதும் எதையும் செய்திட மாட்டான் வாங்கும் ஒவ்வொரு பொருளும் அவர்கள் நால்வருக்கே... ஆனால் இது அவர்கள் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வான் அதன் அர்த்தம் இப்பொழுது வரை ஜெயனுக்கும் விளங்கவில்லை அதை அவனிடம் கேட்கும் துணிவும் அவனுக்கு எழுந்ததில்லை...
“பேசாம ஒன்னு பண்ணு... ஒரு வேஷ்டி துண்டு கட்டிட்டு அவனுகளுக்கு வேலை பாக்க ஆரமிச்சிடு அது ஒன்னு மட்டும் தான் நீ பண்ணல”
உதய்யின் பேச்சை கேட்ட ஆதவன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே உள்ளே வர அவனை பொருட்படுத்தாமல் தனது வேலையை பார்க்க ஆரமித்தான் உதய்...
‘கரெக்ட்டு’ என்று ஜெயன் மெச்சுதல் பார்வையோடு ஆதவனை பார்த்தான்...
ஆதவனின் பார்வை அங்கு ஓரமாக நிற்கும் யாழினியை பார்த்து பளிச்சிட்டது, “ஹலோ மிஸ். யாழினி நல்லா இருக்கீங்களா?” என்றான் ஒரு குறும்பு பார்வையோடு உதய்யிடம் ஒரு பக்க பார்வையை வைத்து...
“சார் ரெண்டு நாள் முன்னாடி தான பாத்திங்க... என்கிட்டே கூட சாக்லேட் திருடி சாப்டிங்க மறந்து போச்சா?” என்றாள் புன்னகையுடன் அவனை வாரியது தெரியாமல்...
‘இது உனக்கு தேவையா?’ என்று உதய் ஆதவனை பார்த்து, “சொல்லு டா எதுக்கு வந்துருக்க?” என்றான்...
“ஒண்ணுமில்ல மச்சான் உங்க வீட்டுல உனக்கு கல்யாண பேச ஆரமிக்க பேசிட்டு இருந்தாங்க அது தான் உன் காதுல போட்டுட்டு அப்டியே என்ன பண்ணுறான்னு பாக்கலாம்னு வந்தேன்” என்று கூறியவன் கண்கள் தரை தாழ்ந்து நின்ற யாழினியின் முகத்தை அளந்து நின்றது...
“சரி பாக்கட்டும்... நீ சொல்லு ஆதியை பத்தி விசாரிக்க என்ன ஆச்சு?”
“அட அது கெடக்குது மச்சான் உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?”
“டேய் உனக்கு பொழுது போகலனா என்கிட்டே வந்துருவ போடா வேலைய பாரு போ”
“மச்சி சொல்லுடா அப்ப தான் நான் போவேன்... இல்லனா விடிய விடிய இங்க தான் இருப்பேன்” குழந்தை போல் ஆடம் பிடித்தான் ஆதவன்...
இவை எல்லாம் யாழினி நண்பனை பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ளவே இந்த ஆராய்ச்சி அதை உணர்ந்து கொண்ட உதய் அவனை கேலி செய்யும் நோக்கோடு அவனுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான்...
“இருடா மச்சான் இந்த ஃப்லோர்க்கு தனியா ரெண்டு கார்டுஸ் போடணும்னு நெனச்சேன் நீ இருந்தா இன்னும் வசதியா போச்சு சாப்பாடு நைட்-கு ஜெயன் வாங்கி குடுத்துட்டு தான் நீங்க போகணும்”
“ஐயோ சிரிச்சிட்டேன்... பேசமா வரியா நீயும் காலேஜ்-ல ஒரு பொண்ணு பாத்துருக்கேன் அந்த போனோட பிரன்ட் நல்லா இருக்கா...”
தன் வாக்கில் பேசிக் கொண்டிருந்த ஆதவனை தடுத்த உதய், “டேய் லூசு பயலே வந்ததுல இருந்து தொன தொணன்னு லூசு மாதிரியே பேசிட்டு இருக்க வெளிய போ டா மொத”
“மச்சி நீ எனக்காக கோவில் கட்டுவனு எல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்கேன் ஆனா நீ உன் நண்பனை பாத்து வெளிய போன்னு சொல்லிட்டியே” நெஞ்சில் கை வைத்து நடித்தான் ஆதவன்...
“உன்ன எல்லாம் கூட வச்சிருக்கதே பெருசுடா உனக்கு எல்லாம் விஷம் வச்சு பொறந்தபயே கொன்னுருக்கணும் அப்டி பண்ணிருந்தா ஆச்சும் உன் தம்பிக்கு ஆச்சும் பொறுப்பு வந்துருக்கும் இப்ப பாரு அவனும் உன்ன மாதிரியே உருப்புடாம ஊரு ஊரா சுத்திட்டு இருக்கான்... நானும் நிம்மதியா இருந்திருப்பேன்”
“வாய்ப்பில்லை ராஜா... டேய் அவனை பத்தி சொல்ல மறந்துட்டேன் உன்கிட்ட... அவன் நேத்து என்ன ஒரு பிரச்சனைனு காலேஜ்-கு துணைக்கு கூட்டிட்டு போனான் சரி பசங்க கூட பிரச்சனைன்னு நெனச்சு போனேன் ஆனா அங்க போனதுக்கு அப்றம் தான் தெரிஞ்சது ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்து அவ அப்பன் காரன் இவன் கைய உடைக்க காத்துட்டு இருந்திருக்கான்”
ஆதவனின் பேச்சில் ஆர்வம் பொங்க அவனையே பார்த்து ஜெயனும் யாழினியும் ஆழ்த்திட அவன் மேலும் தொடர்ந்தான், “காலேஜ் வாசலையே அவன் நிக்கிறாண்டா இவன் கார பாத்த ஒடனே கார உள்ளேயே விடாம வண்டிய வழி மாத்திட்டான்... நானும் சரி பேசி சமாளிச்சிடலாம்னு பாத்தா அவன் எடுத்த ஒடனே அருவா கம்புனு போய்ட்டான்...
சரி பயபுள்ள என்ன பண்ணுச்சுனு கேட்டேன்... ‘இவன் என் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்துருக்கான்’ னு சொன்னாரு... ‘லவ் லெட்டர் தான சார் புடிக்கலான விட்ருங்க ஏன் அடிக்கிற அளவுக்கு வர்றிங்க’ -னு இவனை நம்பி வீரப்பா பேசுனேன் டா ஆனா பயபுள்ள என்ன தெரியுமா பன்னிருக்கான்...?? ரெண்டு லவ் லெட்டர் குடுத்து உனக்கு புடிக்கலைனா உன் தங்கச்சிக்கு இந்த லெட்டர்-அ பாஸ் பண்ணிடுன்னு எழுதிருக்கான் அத அந்த பொண்ணோட அப்பன் பாத்துட்டான்”
“அப்றம்” என்றாள் யாழினி ஆர்வம் தெறிக்கும் குரலில் முகத்தில் சிறு புன்னகையுடன்...
“அப்றம் என்ன பின்னாடி திரும்பி ஏண்டா அப்டி பண்ணணு மிரட்டுற மாதிரி நடிக்கலாம்னு திரும்புனா ஆளையே காணோம்டா ஓடிப் போய்ட்டான் என்ன மட்டும் அந்த குண்டன் கிட்ட தனியா விட்டுட்டு... அவன் என்னமோ நான் அவன் பொண்டாட்டிக்கு லெட்டர் குடுத்த மாதிரி வச்சு செஞ்சிட்டான்” அவன் கூறிய தொனியை கேட்டு யாழினி அடக்கமாட்டாமல் சிரிக்க ஆரமித்தாள்...
“வடிவேல் மாதிரி சட்டை கிழிஞ்சு தான் எஸ்கேப் ஆனேன்... அப்றம் வந்து நிக்கிறாண்டா என் தம்பி கைல ஜூஸோட நல்லவன் மாதிரி...”
“சார் உங்கள பாத்தா வடிவேல் மாதிரியே இருக்கு” ஜெயன் மனதில் நினைத்ததை யாழினி வாய் திறந்து கூறிவிட்டாள்...
“சிரி மா சிரி...” ஆதவன் அலுத்துக்கொண்டான் கண்களை உருட்டி...
“சரி வந்த விசையத்தை சொல்லுடா வேலை நெறய இருக்கு...” என்றான் உதய் அவன் கதையில் ஆர்வம் காட்டாமல்... இது அடிக்கடி நிகழ் நிகழ்வு தானே பழகி இருந்தான் உதய் மாதவன்...
“ஆதியை பாக்க உன் மாமா ரெண்டு நாளா ட்ரை பண்ணிட்டே இருக்காரு... நேத்து ஆபீஸ்-ல பாத்துருக்காரு...”
இது தெரிந்தது தானே... இவ்வாறு நடக்கும் என்று உதய் முன்னரே யூகித்திருந்தான்...
எதற்காக தன்னுடைய தாய் மாமன் இவ்வாறு தன்மேல் வன்மம் வைத்திருக்கின்றார் என்று இன்று வரை உதய்யால் அனுமானிக்க இயலவில்லை... விஷ்ணுவிடம் அவர் காட்டும் நெருக்கம், பாசம், அக்கறை எல்லாம் அவனுடன் மட்டுமே நின்றுவிட அதுவம் அவன் கண்களுக்குப் போலியாகவேத் தெரிந்தது அதுவும் அவன் சித்தி சித்தப்பாவிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் பொறுக்க இயலாதக் கோவத்தை அளித்தாலும் அவருடைய வயதிற்கே மரியாதையை அளித்து வந்தான்... அவருடைய இந்த குணம் தனக்கு மட்டுமா தவறாகத் தென்படுகின்றது என்று நினைத்தப் பொழுது ஹரி அவரை தவிர்க்கும் விதமும் சகோதரிகளை அவர் இருக்கும் பொழுது அவர் முன்னே அனுமதிக்காமல் இருக்க தனக்கு தோன்றியது அவனுக்கும் தோன்றியுள்ளது என்று புரிந்துக்கொண்டான்...
“ஆதி என்ன சொன்னான்?”
“வழக்கம் போல அவரை மதிக்காம அனுப்பி விட்டுட்டான்” உதய்யின் உதடுகளில் மெலிய புன்னகை அரும்பியது...
“ம்ம்ம்ம்ம்”
“என்னடா கதையா சொல்லிட்டு இருக்கேன் அவன் ஒரு லூசுடா இப்ப இப்புடி இருப்பான் நாளைக்கு உனக்கு எதிரா எதாவது காட்டுன ஒடனே மாறிடுவான் எத்தனை நாள் தான் அவரை அவன் முன்னாடி வராம தடுக்க முடியும்னு நினைக்கிற?” – ஆதவன்
“டேய் அவன் லூசு தான் அதுக்காக அவன் முட்டாள் இல்லை போகட்டும் எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்ளோ தூரம் என் மாமா போகட்டும் எனக்குன்னு ஒரு மூளை இருக்குதுல அத வச்சு நான் பொழச்சுக்குவேன்”
“என்னமோ போ ஆதி விசயத்துல நீ ரொம்ப ஈஸியா இருக்க அவனை பத்தி உனக்கும் தெரியும் எப்ப எப்டி இருப்பான்னு தெரியாது...” – ஆதவன்
ஆதவனின் பதிலில் சத்தமாக சிரித்துவிட்டான் உதய், “ஏண்டா இன்னுமா நீ அவனை நம்பிட்டு இருக்க? என்ன பலி வாங்கணும்னு நெனச்சிருந்தா அவன் எப்பையோ பன்னிருப்பான்... இன்னேரம் வழக்கம் போல எதாவது ஒரு டீ கடைல அந்த ரெண்டு காமெடி பீஸ் கூட சேந்து என் கார் டயர பஞ்சர் ஆக்குறதா இல்ல செருப்பை திருடுறதான்னு யோசிச்சிட்டு இருப்பானுக...”
வராத ஜூஸை வா வா என்று போராடி இழுத்துக் கொண்டிருந்தான் கெளதம்... அதை ஏக்கமாய் பார்த்து நின்ற தமிழ்...
அந்த தெருவில் இருக்கும் ஒரு சிறிய டீ கடை அது எப்பொழுதும் ஆட்கள் அதிகமாகவும் அல்லாமல் குறைவாகவும் அல்லாமல் இருக்கும் இடம். அங்கிருக்கும் டீயின் வாசனை போவோர் வருவோரை எல்லாம் கட்டி இழுக்கும், அதை நம்பி தான் இவர்களும் முதல் முறை அங்கு சென்றனர் பிறகு அங்கிருக்கும் அந்த ரோஸ் மில்க்கின் சுவையில் மயங்கி அங்கேயே அவர்கள் சங்கத்தை கூட்ட தொடங்கினர் வாரம் ஒரு முறையேனும் அங்கு செல்லாமல் அவர்கள் பொழுது ஓயாது...
“மச்சா
ன் எனக்கு ஒரு வாய் டா” தமிழ் கெஞ்சி கொஞ்சி பார்த்தும் கெளதம் அசரவில்லை...
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
“மச்சான் இது யோசிக்கிறவங்களுக்கு நீ அமைதியா நின்னு வேடிக்கை பாரு போ”
“சாமியோவ் சாத்துக்குடி ஜூஸ் கூட நல்லாதான் போடுற” ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்த கெளதம் அந்த கடைக்காரர் குப்புசாமியை பாராட்டினான்...
“பச்சை தண்ணி கூட வைக்க தெரியாதவன்லாம் என்ன பேசுறான்... மொத அந்த பாக்கி ரெண்டாயிரத்தை தா டா”
“என்ன குப்பு காசு எல்லாம் கேக்குற?” எகிறினான் தமிழ்...
“ஏண்டா உங்களுக்கு ஓசில ஜூஸ் குடுக்குறதுக்கா எங்க ஆத்தா என்ன பெத்து போட்டுச்சு...” இது அங்கே நடக்கும் வழக்கமே...
இதை எல்லாம் பொறுமையாய் வண்டியில் சாய்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதி மேலும் இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று அமைதியாய் நின்றான்...
“ரைட்டு விடு ரோஸ் மில்க் தரியா தாகமா இருக்கு. இவனே ஜூஸ் குடிச்சுபுட்டான்” அப்பாவியாய் கேட்டான் தமிழ் அவரிடம்...
“அந்தா பச்சை தண்ணி இருக்குது பாரு போய் குடி”
“ஆதி...” – தமிழ்
பொறுமை காற்றில் பறக்க, “யோவ் குப்புசாம்மி குடேன்யா அவனுக்கு நான்... காசு தரேன்” ஆதி கூற அவர் அவர்கள் மூவரையும் முறைத்துக்கொண்டு அவனுக்கு கொடுத்தார்...
“டேய் எனக்கு கொஞ்சம்...” கெளதம் தமிழிடம் கெஞ்ச, “தர மாட்டேண் டா உனக்கு தர மாட்டேண் டா நீ எனக்கு தந்தியா?” சிறு பிள்ளையாய் சண்டையிட்டு கொண்டிருந்தனர்...
“மச்சான் போதும் டா வேணும்னா நீ இன்னொன்னு வாங்கிக்கோ டா ஆனா தயவுசெஞ்சு ஏதாச்சும் ஐடியா சொல்லுங்க டா” ஆதி கெஞ்சிக் கொண்டிருந்தான்...
“என்ன ஐடியா மாப்பிள்ளை?” அந்த கடையில் இருந்த ஒரு குச்சி முட்டையை எடுத்து சப்பிகொண்டே கெளதம் ஆதியிடம் கேட்டான்...
“அந்த குச்சியை வச்சே கொறவளைய கிழிச்சிடுவேன்... சனியனே சாகடிக்காத”
உதய்யை பழிவாங்கவே இந்த கூட்டம் ஆனால் அதை எவ்வாறு செய்ய்வதென்று தெரியாத ஆதி அறிவில் வளமை பெற்றிருக்கும் அவனது நண்பர்களிடம் தஞ்சம் புகுந்தான்... அறிவுரைக்கு லஞ்சம் கேட்டே இந்த ஜூஸ் நாடகம் நடக்கின்றது...
“ஐயோ மச்சி டென்ஷன் ஆகாத இப்புடியே கத்துனனா BP வந்துடும்” தமிழ் ஆதியின் தோளில் கைபோட்டு சமாதான படுத்த, “ஏய் சீய் கைய எடு நாயே ஐடியா சொல்றிங்களா இல்ல குடிச்சதுக்கு காசு குடுக்குறீங்களா?”
“நான் சொல்றேன்” கெளதம் முந்தினான், “அவன் வாக்கிங் போறப்ப நாய் விட்டு கடிக்க விட்ரலாமா”
“போ டா லூசு... அவன் நாய்க்கு எல்லாம் பயப்பட மாட்டான்... அவன் வாக்கிங் போறப்ப பர்ஸ்ச திருடிறலாமா?” – தமிழ்
“அவனுக்கு இருக்குற காசுக்கு அந்த பர்ஸ் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல... பேசாம அவன் வாக்கிங் போறப்ப ஆளு வச்சு முகத்தை துணியால மூடி மண்டைல ரெண்டு கொட்டு கொட்டிட்டு ஓடிறலாமா?”- கெளதம்
“கேக்கவே நல்லா இருக்குது டா ஆனா அவனுக்கு ரெண்டு கொட்டு எல்லாம் பத்தாதே...” நாடியை தடவி யோசித்த தமிழ், “ஏண்டா ஆதி இப்புடி பண்ணிட்டா?”
“எப்புடி?” புருவங்களை உயர்த்தி எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் கேட்டான் ஆதி...
“அவனோட கார் டயர பஞ்சர் ஆக்கிடலாமா வீட்டுக்கு நடந்தே போகட்டும்”
“போ டா பூல் ரோட்டுல வேற டாக்ஸி... ஏன் அவனே ஓராயிரம் கார் வச்சிருப்பான்... நான் சொல்றேண் டா அவன் வாக்கிங் போறப்ப...” கௌதமை இடை மரித்த தமிழ்...
“டேய் நீ இன்னும் வாக்கிங்ல இருந்து வரலையா?”
வண்டியில் இருந்து நிமிர்ந்து நின்ற ஆதி, “நான் ஒரு ஐடியா சொல்றேன்...” என்ன என்று ஆர்வமாய் அவனை பார்த்தனர் இருவரும், “குப்புசாம்மிகிட்ட எலி மருந்து இருந்தா வாங்கி குடிச்சிட்டு அதோ அங்க வருது பாரு தண்ணி வண்டி அதுல அடிபட்டுச் செத்துருங்க... நாட்டுல ஜனத் தொகையாச்சும் கம்மி ஆகும்” என்றான் அடக்கி வைத்தக் கோபத்துடன்...
“அப்டிலாம் சொல்லாத ஆதி” பொய் கண்ணீர் வடித்தனர் இருவரும்...
“நடிக்காதிங்க டா நானும் எவ்வளவு நேரம் தான் அமைதியவே இருக்கது கேன கூமுட்டை மாதிரி பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் அவ்ளோ பாசம் அவன்மேல் இருந்தா போங்க அவன்ட சும்மா இங்க இருந்து நடிச்சிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல யாருக்கும்...”
“ஆதி அப்டிலாம் இல்லடா எங்களுக்கு நீயும் முக்கியம் தான் டா... அவன் உன்னோட உதய்டா...” – தமிழ்
“என் உதய்ங்கிற நால தான் டா சண்டை போட போறேன். வேற யாராச்சும்னா இன்னேரம் அவனை பொதச்ச இடத்துல புல்லே மொளச்சிருக்கும்... அவன் என்ன கண்டந்துண்டமா வெட்டி போட்ருந்தா கூட சந்தோசமா செத்துருப்பேன் ஆனா அவன் என் அப்பா மேல கை வச்சிருக்கான்... எந்த புள்ளையால பாத்துட்டு சும்மா இருந்துருக்க முடியும்? நான் பட்ட கஷ்டத்துக்கு இல்லனாலும் என் தங்கச்சி ஓட கண்ணீருக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்... சொல்ல வைப்பேன்” என்றான் தீர்க்கமாக...
“உதய் அப்புடி பண்ணிருப்பான்னு நம்புறியா ஆதி?”
“கண்ணு முன்னாடி எல்லா ஆதாரமும் இருக்கே டா... அவன் அதப் பண்ணலைனா ஏன் அதை மறுத்துப் பேச மாட்டிக்கிறான்? அப்ப அவன் பண்ணிருக்கானு தான அர்த்தம்?”
“வெறும் ஆதாரத்தை வச்சு ஒரு முடிவுக்கு வராத ஆதி” கௌதமின் குரலில் ஒரு கடுமை கலந்த இறைஞ்சுதல் இருந்தது...
நண்பர்கள் இடையில் நட்பு உருவாகவிடினும் மேலும் பிளவு ஏற்பட யாரும் விரும்பவில்லை... அதில் ஆதவனும் சரி கெளதம், தமிழும் சரி குறியாய் இருந்தனர் ஆனால் ஆதியும் உதய்யும் சிரமமே இன்றி தகர்த்தனர் எளிதாய்...
“இங்க பாருங்க என்ன சமாளிக்கிற வேலைய இதோட நிறுத்திக்கோங்க கூட இருக்கதா இருந்தா இருங்க இல்லனா நானே என்ன பண்ணணுமோ அத பணிக்குவேன்... நான் முடிவு பண்ணது பண்ணது தான்”
“டேய் நீ செய்றது தப்பு தான் ஆனாலும் நாங்க உன் கூட இருப்போம் எப்பையுமே... எல்லை மீறி நீ போக மாட்டங்கிற நம்பிக்கைல...” ஒரு சிறு புன்னகையுடன் தமிழ் கூற...
தலையை அசைத்து அவன் கூறியதை ஏற்றுக்கொண்ட ஆதியிடம் கெளதம், “என்ன பண்ணலாம்னு இருக்க?”
“சரியாய் வருமான்னு தெரியல... எனக்கு குடுத்த அதே அடியை அவனுக்கு நானும் கொடுக்கணும்னு ஆசை படுறேன்...”
“அவன் கம்பெனி-ல கை வைக்க போறியா?” – கெளதம் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் வாயை பிளந்து...
“என்ன டா லூசு மாதிரி பேசுற அவன் எவ்ளோ பெரிய கம்பெனி வச்சிருக்கான் அதுல நம்மளால ஒரு சின்ன துரும்பை கூட அசைக்க முடியாது”
தன்னுடைய பையிலிருந்து ஒரு டாக்குமெண்டை எடுத்து நீட்டிய ஆதி, “என்னால முடியாது ஆனா இது பண்ணிடும்ல?”
புரியாது விழித்த இருவரும் அதை வாங்கி பார்த்து அதிர்ந்தனர்... அதில் உதய்யின் கட்டுமான நிறுவனம் கட்டிய 10 அடுக்குமாடி இல்லங்கள் அதன் அனுமதிக்கு அதிகமான தளங்களை கட்டியதாக இருந்தது அதுமட்டும் இன்றி அதில் பயன்படுத்திய பொருட்களின் தரம் அவர்கள் குறிப்பிட்டிருந்த தரத்திற்கு மிக குறைவாக பயன்படுத்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தது...
“இது எப்டி டா உனக்கு கெடச்சது?” – தமிழ் ஆச்சிரியமாக கேட்டான்...
“நேத்து அவன் மாமா வந்தாருனு சொன்னேன்ல அப்ப அவரு தான் குடுத்தாரு”
“நானும் அங்க தானே டா இருந்தேன் எப்டி எனக்கு தெரியாம நீ எல்லார்கிட்டையும் பேசுற?” – கெளதம்
“அவரு பேசல டா பைலை எதார்த்தமா வைக்கிற மாதிரி வச்சிட்டு போய்ட்டாரு...”
“அவரு மேலயே எனக்கு டவுட் இருக்குதுடா எதுக்கு சொந்த தங்கச்சி பையன மாட்டி விடணும்? அதுவும் முன்ன பின்ன தெரியாத ஒருத்தன்கிட்ட” தமிழின் கேள்வியில் ஆமோதித்து கௌதம் தலை ஆசைதான்...
“எனக்கும் டவுட் இருக்குது டா ஆனா அவரு ஆரம்ப காலத்துல அவன் மேல ரொம்ப பாசமா இருப்பாரு அவனே அடிக்கடி சொல்லிருக்கான் அதை. ஆனா, அந்த கண்ணுல என்னமோ சரி இல்லன்னு எனக்கு தோணுது. இன்னொரு பக்கம் பாத்தா விஷ்ணு அவர் கூட என்ன பண்ணுறான்னு யோசனையாவும் இருக்குது... நேத்து நைட்-ல இருந்து இதே யோசனை தான் எனக்கு தலையும் புரியல வாலும் புரியல இது எல்லாத்துக்கும் மேல உதய் அப்டி பண்ணுவானானு எனக்கு குழப்பம் வேற... அவன் மேல தப்பு இருக்கோ இல்லையோ அவனை நான் கண்டிப்பா பழி வாங்குவேன் இது எனக்கு கிடைச்ச ஒரு துருப்பு சீட்டு மாதிரி”
யோசனையில் ஆதி சிகையை கோதி அவன் பாக்கெட்-ல் இருந்து ஒரு சிகெரெட்டை எடுத்து பற்ற வைத்து ஆழ்ந்து அந்த துர்-புகையை உள் இழுத்தான்...
“அவன் மேல ஒரு அடி பட்டாலும் துடிச்சு போய் நிப்பியே டா ஆனா இன்னைக்கு நீயே அதுக்கு காரணமா இருக்கலாமா ஆதி?” கவலை தேய்ந்த முகத்துடன் தமிழ் ஆதியை ஏறிட்டான்...
“ஆதி பால (ball) இங்க பாஸ் பண்ணுடா” வேர்வை சொட்ட சொட்ட இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஆதியின் கவனத்தை உதய்யின் குரல் ஈர்த்தது...
அவன் மேல் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் அவனிடம் கால்பந்தை மாற்றி விட்டவன் உதய்யை திரும்பி பார்க்காமலே வெற்றி களிப்பில் முகம் மலத்திருக்க உற்சாக படுத்திக்கொண்டிருந்த நண்பர்களை பார்த்து சிரித்து நின்றிருந்தான்...
கால்பந்தை கைப்பற்றும் நோக்கில் ஒருவன் உதய்யிடம் போராடிக்கொண்டிருக்க, வேறொருவன் வேண்டும் என்றே உதய்யை இடித்துவிட்டு கீழே சரியவைக்க சத்தத்தில் திரும்பி பார்த்த ஆதி பொங்கி எழுந்த ஆத்திரத்தில் உதய்யை நோக்கி ஓடினான்...
உதய்யை தூக்கி நிற்கவைத்தவன் அவன் உடலை தலை முதல் கால் வரை ஆராய்ந்து அவன் கணுக்கால், கைகள், கன்னம் என சிராய்த்திருந்த இடங்களை பார்த்ததும் உதய்யின் கட்டுப்பாட்டில் இருந்து புயலாய் அவனை தள்ளி விட்டவனை நோக்கி வேக வேகமாய் நடந்தான்... அவன் நடந்த வேகமே கூறியது அவனுடைய கோவத்தின் அளவை...
“எவன் டா என் உதய தள்ளி விட்டது? சொல்லு எவன் தள்ளி விட்டது... நான் இருக்குறப்பயே எந்த நாய்க்கு என் உதய் மேல கை வைக்க தைரியம் வந்துச்சு... தில்லு இருந்தா வந்து இந்த ஆதியை தாண்டி இப்ப என் உதய் மேல கை வைக்க பாரு... அவனை தள்ளி விட்டவன் கால ஒடச்சு, ஒடஞ்ச காலோட இந்த மொத்த கிரௌண்ட்டையும் நாய் மாதிரி ஓட ஓட விரட்டலை நான் ஆதி இல்ல டா... கோத்தா ஆம்பளையா இருந்தா இப்ப வாங்க டா...” வேர்வை சொட்ட கண்கள் சிவக்க கர்ஜித்த ஆதியின் குரல் அந்த மைதானத்தையே அதிர வைத்தது...
என்ன செய்தும் ஆதியின் சீற்றலை தடுக்க யவரும் இல்லை... சொல்லை காப்பாற்றும் வகையில் நண்பன் மீது கை வைத்தவனின் காலை உடைத்தே வளாகத்தை விட்டு அனுப்பிவைத்தான். அதனால் எழுந்த பெரிய போராட்டத்தில் இரண்டு வாரம் பள்ளியில் இருந்து நீக்கினர். நண்பனுக்கு துணையாய் பழியை தானும் சுமந்து உதயும் அவனுடன் வீடு சென்றது இன்றளவும் அழகாய் நினைவில் நின்றது...
அந்த நாள் உதய், ஆதியை வறுத்தெடுத்து இன்றளவும் நினைவில் இருக்க அந்த அழகிய நினைவுகளை தலையை உலுக்கி தள்ளி வைத்தான் உதய்யின் உயிர் ஆதி...
“இப்ப என்ன பண்ண போற?” கெளதம் கேட்க தோளை உலுக்கி பதில் கூறினான்.
ஆதி உதய்யின் அருகில் இருந்த வரை எந்த துன்பமும் அவனை நெருங்க விடவில்லை ஆதி. ஆனால் இன்று அவன் கண்ணில் தெரிந்த வலியை பார்த்தவனுக்கு தன்னை குறை கூறுவதா? அவன் குடும்பத்தை குறை கூறுவதா என்று தெரியவில்லை. கைபேசியை எடுத்து இருந்த ஆத்திரத்தை எல்லாம் காலை அட்டன் செய்த ஆதவன் இறக்கினான்...
“ஹலோ”
“என்ன டா பண்ணிட்டு இருக்க நீ... உன்ன நம்பி தான டா அவனை தனியா விட்டு வந்தேன் அவனை பாதுக்காம என்ன புடுங்குற வேலையா நீ பாக்குற... பெரிய இவனாட்டம் பேசுன அன்னைக்கு. இப்ப எங்க போச்சு அந்த பேச்சு மயிறு எல்லாம்... உங்கள எல்லாம் நம்பி ஒரு ஆணியையும் புடுங்க முடியாது போல... கவனிச்சிக்கிறேன் எல்லாத்தையும் இருக்குது இனி எல்லாருக்கும்” பட்டாசாய் உச்சகட்டக் கோவத்தில் பொறிந்தவன் உடனே இணைப்பை துண்டித்தான் ஆதி...
மறுபுறம் துண்டித்த கை பேசியை காதிலிருந்து எடுத்த ஆதவன் அதை அப்பாவியாய் பார்த்தான், “என்ன டா இவனா போன் பன்னான் இவனா திட்டினான்... இவனா வச்சிட்டான்... என்ன பன்னேனு சொல்லிட்டு தான் தி
ட்டேண் டா?” ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆதவன் பாவம்...
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
டேய் நீங்க ஐந்து பேர் எப்படி தா இப்படி இருக்கிங்க ஒருத்தர் மேல ஒருத்தர் என்னமா பாசமா வைத்து 💓💓🥰🥰இப்படி சண்டை போடுறுக இப்போ போய். இருத்தலும் சந்தோசமா இருக்கு தமிழ், கௌதம், ஆதவன் இவக உதய் ,ஆதி ஏதுவும் பண்ண விடாம pathukuragala .. 😍😍அதன் friendship 😻🥳 சிக்கிரம எல்லா problem solve பண்ணி நீங்க பிரண்ட்ஸ் இருக்கணும் 💕💕💕💕
 
Messages
37
Reaction score
4
Points
8
டேய் நீங்க ஐந்து பேர் எப்படி தா இப்படி இருக்கிங்க ஒருத்தர் மேல ஒருத்தர் என்னமா பாசமா வைத்து 💓💓🥰🥰இப்படி சண்டை போடுறுக இப்போ போய். இருத்தலும் சந்தோசமா இருக்கு தமிழ், கௌதம், ஆதவன் இவக உதய் ,ஆதி ஏதுவும் பண்ண விடாம pathukuragala .. 😍😍அதன் friendship 😻🥳 சிக்கிரம எல்லா problem solve பண்ணி நீங்க பிரண்ட்ஸ் இருக்கணும் 💕💕💕💕
thank u so much...
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
ஐவர் பாசம் ஒரே குழம்பல் அழும்பல் 😄😄😄😄😄
 
Top