- Messages
- 997
- Reaction score
- 2,809
- Points
- 93
அத்தியாயம் – 1
வணக்கம் தமிழ்
நண்பர்களே
கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி. "பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்".
போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ போகும் முன், "டேய் அண்ணா.. என்ன டா பண்றீங்க உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு என் உயிரே போகுது" பதறிய படியே ஓடி வந்தாள் படித்து கொண்டு இருந்த புத்தகத்தை வைத்து விட்டு.
"வந்துட்டடா என் தங்கச்சி, அடியேய்ய்ய்... என் ராசாத்திதிதி... எங்க அம்மா பெத்த தெய்வமே, அண்ணனை நல்ல நேரத்துல தா மா வந்து காப்பாத்திருக்க. இங்க இருக்கான் பாரு இந்த திருட்டு பய அந்த பிள்ளையை எப்படி ஆச்சு இன்னைக்கு கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்றேனு சொன்னான் அவனையும் நம்பி...." அவன் குரல் சற்று உயர்த்தும் பதறி அவன் வாயை மூடினாள் திவ்யா.
"டேய் கத்தி கத்தி வீட்டையே எழுப்பிராத டா" ஹரி விஷ்ணுவை கெஞ்சியபடியே பின்னிருந்து அவனை படியில் தள்ளினான், "டேய் நா என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்டா, கொஞ்ச நேரம் பொறு டா" என்று படியிலேயே அமர்ந்து விட்டான்."இன்னைக்கு எனக்கு சங்கு கன்பார்ம்" ஹரி. போதையில் இருந்தாலும் விஷ்ணுவை விட எப்பொழுதும் தெளிவாகவே இருப்பான்.
"ராசாத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தேன்ல.... ஆ... அவனையும் நம்பி போனேன் டா நா. ஆனா அவன் அங்க என்ன பண்ணான் தெரியுமா...?"
வீட்டின் இருளில் தன் கூர்மையான பார்வையை படர விட்டு எவரும் இல்லை என்று உறுதி செய்த பின் அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள் திவ்யா, "ராசாத்தி ..ராசாத்தினு கூப்புடாதடா கேவலமா இருக்கு".
"ஆமா இப்ப இது தான் ரொம்ப முக்கியம் பாரு" ஹரி அவளை கடிந்தான். வலியில்துடித்தவன், "ஏன் டா ராசாத்தி அண்ணனை கிள்ளுன?" கண்ணில் நீர் கோர்த்து கேட்டான் விஷ்ணு பாவமான முகத்துடன்.
"ஏன்டா எருமைகளா நீங்க ரெண்டுபேரும் மாசம் மாசம் இப்டி ஒருத்தி பின்னாடி சுத்திட்டு இருப்பீங்க அப்பறம் அடுத்த மாசமே இன்னொருத்திப் பின்னாடி சுத்துவீங்க. த்தூ..உங்க துருப்புடிச்சக் காதல் கதையெல்லாம் எனக்கு வேணாம் ஒழுங்கா ரூமுக்கு போய்டுங்க, அண்ணா முழிச்சுதா இருக்கு மாட்டுனா செத்தோம்" என கோபத்துடனும் பயத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தபடியே கூறினாள் திவ்யா.
"அதெல்லாம் முடியாது நீ கதையை கேட்டே ஆகணும்" அடம் பிடித்தான் விஷ்ணு.
"டேய் உன்னோட ரூமுக்கு வந்து கூட கேக்குறேன் டா இப்ப தயவு பண்ணி போடா உன் ரூமுக்கு" கெஞ்சினாள் திவ்யா தன் சகோதரனிடம்.
"ஒகே அப்ப இப்போவே ரூமுக்கு போலாம் இவன் செஞ்சதை நா சொல்றேன்"அடக்கி வைத்து இருந்த மூச்சை மெல்ல விட்டாள் நிம்மதியில்.
"அப்பறம் டா ராசாத்தி வரப்ப அப்பா ஸ்டடி ரூம்ல ஒரு பாட்டில் சரக்க எடுத்துட்டு வா" பொறுமையை முற்றிலும் துறந்த ஹரி பின்னால் இருந்து அவனை ஒரே எத்து விட்டான், "நாயே ... அடிச்சிருக்க சரக்கு பத்தலயாம் இன்னும் கேக்குதாக்கும் மூடிட்டு தூங்குற வேலைய பாரு".
விஷ்ணு தலையில் ஏற்பட்ட காயம் கூட தெரியாமல் மீண்டும் பேச தொடங்கினான், கை தாங்கலாய் அவனை தோளில் கிடத்திய ஹரியைப் பார்த்து சிரித்தான் விஷ்ணு, "டேய் நீ பாக்குற பார்வையே சரி இல்ல""ஆமா டா ஹரி நீயு அழகா தா இருக்க" தன் பார்வையை ஹரியிடம் இருந்து அகற்றாமல் கூறினான் விஷ்ணு.
"கருமம் புடிச்சவிங்க" முகத்தை சுளித்தாள் திவ்யா, "டேய் அண்ணா என்ன நீங்க ரெண்டு பெரும் லவ் பண்றிங்களா?" வாயை மூடி சிரித்தாள் ஹரியின் முக பாவனையை பார்த்து.
"சீ இவனையா அதுக்கு நா செத்துரலாம்"
"அப்டி என்ன தா டா நடந்துச்சு இவன் உன்ன வச்ச கண்ணு வாங்காம பாத்துக்குட்டே இருக்கான், எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேர் மேலயும் டவுட்டா இருக்கு"
"அது வந்து தங்கச்சி" என்று நெளிந்துக்கொண்டே ஆரம்பித்தான் ஹரி , "அந்த புள்ள சொன்னான்ல"
"ஹ்ம்ம் .." மேலும் கீழும் அவன் வெக்க படுவதை கண்டு சிரித்தாள்."அந்த புள்ள இவன விட நா கலர் ஆ ... ஹண்ட்சம்ஆ .., ஹாட் ஆ .. இருக்கேன் னு சொல்லுச்சு" தலையை கீழே தொங்கவிட்டான் வெக்கத்தில்.
"அய்ய.. வழியிது தொடச்சிக்கோ" என்று கூறினாள் .இதுவரை அமைதியாக இருந்த விஷ்ணு இப்பொழுது 'ஓ' வென ஒப்பாரி வைக்க தொடங்கினான்.
"பாத்தியா ராசாத்தி இவன் பண்ண வேலைய எனக்கு கரெக்ட் பண்ணி விட சொன்னா இவனுக்கு கரக்ட் பண்ணிட்டான். நா ஒரு வாரமா அத சுத்தி சுத்தி அதுக்கு புடிச்சது எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சேன் ஆனா அது..." வராத அழுகையை வலுக்கட்டாயமாக வர வைத்து அழுதான்.
"அப்டி என்ன தா டா இவன் பண்ணுனான்" கடுப்பில் ஹரியிடம் கேட்டாள் திவ்யா.
"நீங்க டயர்ட்ஆ இருப்பிங்க நா சொல்றேன் சார்"
அவ்வளவு தான் . தன் அணைப்பில் அவ்வளவு நேரம் இருந்த விஷ்ணுவை பயத்தில் அந்த குரல் கேட்ட அடுத்த நொடி கீழே தள்ளினான் ஹரி, சுயம் அறியாது பொத்தென்று கீழ விழுந்தவன் வழியில் துடித்தபடியே , "வர வர நீ அண்ணனை மாறியே மிமிக்கிரி பண்ற மேன். ஆனா அண்ணா வாய்ஸ் மாறி இல்ல, பெட்டெர் லக் நெஸ்ட் டைம்" என்று அவன் காலை தோளாய் நினைத்து தட்டி கொடுத்தான்.
"அட குடிகார நாயே பேசுனதே அவன் தான் டா" பதற்றத்தில் வாயிலேயே முணுமுத்தான். திடீர் வருகையால் திவ்யாவிற்கு கை கால் எல்லாம் உதறல் எடுத்தது.
ஆனால் அந்த திமிரான குரலுக்கு சொந்தக்காரனோ உதய் மாதவன், எதார்த்தமான பார்வையை அவர்கள் மீது பதித்தான். சாதாரண டீ ஷர்ட் டிராக் பாண்டில் இருந்தாலும் அவனுடைய திமிர் மட்டும் அவன் நிற்கும் தோற்றத்திலேயே தெரியும். 6 அடி 2 அங்குலம், எப்பொழுதும் சீராக கோதி இருக்கும் கேசம் இன்று சற்றே கலைந்தாலும் அழகாகவே இருந்தது அவனுக்கு, தீ போல் சுட்டு எரிக்கும் கண்கள், செதுக்கி வைத்தாற்போல் கூர் மூக்கு, அளவாய் பேசும் உதடுகள் சிகரெட்டை தீண்டாமல் இயற்கையாய் சிவந்தே இருக்கும். கோட் சூட்டில் இருக்கும் அந்த மிடுக்கான தோற்றம் இந்த சாதாரண டீ-ஷிர்டிலும் அச்சு பிசையாமல் இருந்தது அதே கம்பீரம், கண்களில் வூடுருவி பார்க்கும் கூறிய கண்களும் இரண்டு இளசுகளுக்கு நடுக்கத்தை மட்டுமே தந்தது. இரவின் இருளிலும் அவனுடைய தேகம் மினுமினுத்தது, இளசுகளை ஒரு நொடியில் அளவெடுத்தவன் நிதான நடையை அவர்கள் நோக்கி எடுத்து வைத்தான் எந்த உணர்ச்சியையும் வெளி காட்டாமல். அவன் எடுத்து வைத்த ஓவ்வொரு அடியும் விஷ்ணுவிற்கும் திவ்யாவிற்கு வயிறில் என்னென்னமோ செய்தது.
"என்ன டா எனக்கு எங்க பாத்தாலும் அண்ணனை மாதிரியே தெரியாது, உர்..னு இருக்கான் டா போதைல பாத்தாலும் , ஆங்கிரி பறவை" தன் கூற்றுக்கு தானே சிரித்துக்கொண்டான் விஷ்ணு .
"சனியனே கண்ண தொறந்து நல்ல பாரு நிக்கிறது அவன் தா" கீழே இருத்தவனிடம் குனிந்து அவனை எழுப்பி விட்டான் திட்டிக்கொண்டே, "ஆமாடா வர வர கண்ணு சரியா தெரிய மாட்டிக்கிது, இத சாக்கா சொல்லி ஒரு நாள் ஆபீஸ் போகாம கட் அடிச்சிரலா" தான் மாட்டிக்கொண்டது கூட அறியாமல் ஆனந்தத்தில் திளைத்து இருந்தான் விஷ்ணு.
வேறு வழி இல்லாமல் ஓடி சென்று திவ்யா ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து ஹரியிடம் கொடுத்தாள் , வாங்கி அவன் மேல் பயத்தில் ஊற்றினான், "நாசமா போன்றவனே நீயு செத்து என்னையு கொல்லாமை விட மாட்டா, நிதானத்துக்கு வா டா தயவு செஞ்சு "
ஊற்றிய நீரில் சற்று கண் தெளிந்தவன், "அதுக்குள்ள என்ன குளிக்க வைக்காத டா போதை போயிரு" கதறினான் விஷ்ணு."கண்ண நல்ல விரிச்சு பாரு உயிரே போயிரு" அவன் பின் முதுகில் ஓங்கி ஒரு குத்தினான் வலியில் கத்தியவன் விரித்த கண்களை கொண்டு முன் நின்றவனை பார்த்ததும் எச்சிலை முழுங்கி ஹரியின் அருகில் சென்று, "ஏண்டா எனக்கு இன்னும் போதை போகல அப்டி தான, எனக்கு என்னமோ அண்ணன் முன்னாடி இருக்கா மாறியே இருக்கு"
இவர்கள் செய்த குறும்பு தனத்தை பார்த்து ரசித்தவன் உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் காட்டாமல் வெற்று பார்வையை தெளித்து கொண்டே இருந்தான்.
திவ்யா பக்கம் திரும்பி, "சார் என்ன பண்ணார் னு கேடல்ல? ". பே பே வென விழித்து கொண்டு நின்றவள். "கேட்டல்ல" என்று மறுமுறை அழுத்தியதும். எல்லாப்பக்கமும் தலை அசைத்தாள். " அவரு டெய்லி என்கிட்ட அட்டெண்டென்ஸ் போட்டுட்டு நேரா பைனான்ஸ் டிபார்ட்மென்ட் போய்டுவாரு, அங்க போயி அந்த பொண்ணு பேரு என்ன ஹரி?" தெரியாமல் கேட்பது போல் கேட்டான், "ப்ரியா" வேகமாக கூறிய ஹரியை முறைதான் விஷ்ணு.
"கரெக்ட் ப்ரியா. அந்த பொண்ணு கிட்ட போய் கரெக்ட்ஆ அது கணக்கு சொல்ற வரைக்கு சார் லைன் பய் லைன்ஆ கேள்வி கேட்டுட்டு தா அடுத்த வேலையே பாப்பாரு, அதுவும் மொத்த கம்பெனியோட கணக்கையு ஒரு மணி நேரத்துல கேட்ருவாரு, அவ்வளவுவு ... திறமை. இவ்வளோ வேலைக்கும் இடைல போயி பிட்சா சாக்லேட் அதுவும் ஹார்ட் போட்ட சாக்லேட் வாங்கி குடுத்து, அது மட்டும் இல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு போயி சேருற வரைக்கு ரெண்டு பேரும் இருந்து பாத்துட்டு பை பை சொல்லிட்டு தா வருவாங்க.ப் பா.. சொல்ற எனக்கே எவளோ டயர்டா இருக்கே தம்பிக்கு எவ்ளோ டயர்டா இருக்கும்"என்றான் நக்கலாக.
(கீழே தொடர்ந்து படிக்க)
வணக்கம் தமிழ்
நண்பர்களே
கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி. "பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்".
போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ போகும் முன், "டேய் அண்ணா.. என்ன டா பண்றீங்க உங்க ரெண்டு பேரையும் வச்சுக்கிட்டு என் உயிரே போகுது" பதறிய படியே ஓடி வந்தாள் படித்து கொண்டு இருந்த புத்தகத்தை வைத்து விட்டு.
"வந்துட்டடா என் தங்கச்சி, அடியேய்ய்ய்... என் ராசாத்திதிதி... எங்க அம்மா பெத்த தெய்வமே, அண்ணனை நல்ல நேரத்துல தா மா வந்து காப்பாத்திருக்க. இங்க இருக்கான் பாரு இந்த திருட்டு பய அந்த பிள்ளையை எப்படி ஆச்சு இன்னைக்கு கரெக்ட் பண்ண ஹெல்ப் பண்றேனு சொன்னான் அவனையும் நம்பி...." அவன் குரல் சற்று உயர்த்தும் பதறி அவன் வாயை மூடினாள் திவ்யா.
"டேய் கத்தி கத்தி வீட்டையே எழுப்பிராத டா" ஹரி விஷ்ணுவை கெஞ்சியபடியே பின்னிருந்து அவனை படியில் தள்ளினான், "டேய் நா என் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருக்கேன்டா, கொஞ்ச நேரம் பொறு டா" என்று படியிலேயே அமர்ந்து விட்டான்."இன்னைக்கு எனக்கு சங்கு கன்பார்ம்" ஹரி. போதையில் இருந்தாலும் விஷ்ணுவை விட எப்பொழுதும் தெளிவாகவே இருப்பான்.
"ராசாத்தி என்னமோ சொல்லிட்டு இருந்தேன்ல.... ஆ... அவனையும் நம்பி போனேன் டா நா. ஆனா அவன் அங்க என்ன பண்ணான் தெரியுமா...?"
வீட்டின் இருளில் தன் கூர்மையான பார்வையை படர விட்டு எவரும் இல்லை என்று உறுதி செய்த பின் அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள் திவ்யா, "ராசாத்தி ..ராசாத்தினு கூப்புடாதடா கேவலமா இருக்கு".
"ஆமா இப்ப இது தான் ரொம்ப முக்கியம் பாரு" ஹரி அவளை கடிந்தான். வலியில்துடித்தவன், "ஏன் டா ராசாத்தி அண்ணனை கிள்ளுன?" கண்ணில் நீர் கோர்த்து கேட்டான் விஷ்ணு பாவமான முகத்துடன்.
"ஏன்டா எருமைகளா நீங்க ரெண்டுபேரும் மாசம் மாசம் இப்டி ஒருத்தி பின்னாடி சுத்திட்டு இருப்பீங்க அப்பறம் அடுத்த மாசமே இன்னொருத்திப் பின்னாடி சுத்துவீங்க. த்தூ..உங்க துருப்புடிச்சக் காதல் கதையெல்லாம் எனக்கு வேணாம் ஒழுங்கா ரூமுக்கு போய்டுங்க, அண்ணா முழிச்சுதா இருக்கு மாட்டுனா செத்தோம்" என கோபத்துடனும் பயத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தபடியே கூறினாள் திவ்யா.
"அதெல்லாம் முடியாது நீ கதையை கேட்டே ஆகணும்" அடம் பிடித்தான் விஷ்ணு.
"டேய் உன்னோட ரூமுக்கு வந்து கூட கேக்குறேன் டா இப்ப தயவு பண்ணி போடா உன் ரூமுக்கு" கெஞ்சினாள் திவ்யா தன் சகோதரனிடம்.
"ஒகே அப்ப இப்போவே ரூமுக்கு போலாம் இவன் செஞ்சதை நா சொல்றேன்"அடக்கி வைத்து இருந்த மூச்சை மெல்ல விட்டாள் நிம்மதியில்.
"அப்பறம் டா ராசாத்தி வரப்ப அப்பா ஸ்டடி ரூம்ல ஒரு பாட்டில் சரக்க எடுத்துட்டு வா" பொறுமையை முற்றிலும் துறந்த ஹரி பின்னால் இருந்து அவனை ஒரே எத்து விட்டான், "நாயே ... அடிச்சிருக்க சரக்கு பத்தலயாம் இன்னும் கேக்குதாக்கும் மூடிட்டு தூங்குற வேலைய பாரு".
விஷ்ணு தலையில் ஏற்பட்ட காயம் கூட தெரியாமல் மீண்டும் பேச தொடங்கினான், கை தாங்கலாய் அவனை தோளில் கிடத்திய ஹரியைப் பார்த்து சிரித்தான் விஷ்ணு, "டேய் நீ பாக்குற பார்வையே சரி இல்ல""ஆமா டா ஹரி நீயு அழகா தா இருக்க" தன் பார்வையை ஹரியிடம் இருந்து அகற்றாமல் கூறினான் விஷ்ணு.
"கருமம் புடிச்சவிங்க" முகத்தை சுளித்தாள் திவ்யா, "டேய் அண்ணா என்ன நீங்க ரெண்டு பெரும் லவ் பண்றிங்களா?" வாயை மூடி சிரித்தாள் ஹரியின் முக பாவனையை பார்த்து.
"சீ இவனையா அதுக்கு நா செத்துரலாம்"
"அப்டி என்ன தா டா நடந்துச்சு இவன் உன்ன வச்ச கண்ணு வாங்காம பாத்துக்குட்டே இருக்கான், எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேர் மேலயும் டவுட்டா இருக்கு"
"அது வந்து தங்கச்சி" என்று நெளிந்துக்கொண்டே ஆரம்பித்தான் ஹரி , "அந்த புள்ள சொன்னான்ல"
"ஹ்ம்ம் .." மேலும் கீழும் அவன் வெக்க படுவதை கண்டு சிரித்தாள்."அந்த புள்ள இவன விட நா கலர் ஆ ... ஹண்ட்சம்ஆ .., ஹாட் ஆ .. இருக்கேன் னு சொல்லுச்சு" தலையை கீழே தொங்கவிட்டான் வெக்கத்தில்.
"அய்ய.. வழியிது தொடச்சிக்கோ" என்று கூறினாள் .இதுவரை அமைதியாக இருந்த விஷ்ணு இப்பொழுது 'ஓ' வென ஒப்பாரி வைக்க தொடங்கினான்.
"பாத்தியா ராசாத்தி இவன் பண்ண வேலைய எனக்கு கரெக்ட் பண்ணி விட சொன்னா இவனுக்கு கரக்ட் பண்ணிட்டான். நா ஒரு வாரமா அத சுத்தி சுத்தி அதுக்கு புடிச்சது எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சேன் ஆனா அது..." வராத அழுகையை வலுக்கட்டாயமாக வர வைத்து அழுதான்.
"அப்டி என்ன தா டா இவன் பண்ணுனான்" கடுப்பில் ஹரியிடம் கேட்டாள் திவ்யா.
"நீங்க டயர்ட்ஆ இருப்பிங்க நா சொல்றேன் சார்"
அவ்வளவு தான் . தன் அணைப்பில் அவ்வளவு நேரம் இருந்த விஷ்ணுவை பயத்தில் அந்த குரல் கேட்ட அடுத்த நொடி கீழே தள்ளினான் ஹரி, சுயம் அறியாது பொத்தென்று கீழ விழுந்தவன் வழியில் துடித்தபடியே , "வர வர நீ அண்ணனை மாறியே மிமிக்கிரி பண்ற மேன். ஆனா அண்ணா வாய்ஸ் மாறி இல்ல, பெட்டெர் லக் நெஸ்ட் டைம்" என்று அவன் காலை தோளாய் நினைத்து தட்டி கொடுத்தான்.
"அட குடிகார நாயே பேசுனதே அவன் தான் டா" பதற்றத்தில் வாயிலேயே முணுமுத்தான். திடீர் வருகையால் திவ்யாவிற்கு கை கால் எல்லாம் உதறல் எடுத்தது.
ஆனால் அந்த திமிரான குரலுக்கு சொந்தக்காரனோ உதய் மாதவன், எதார்த்தமான பார்வையை அவர்கள் மீது பதித்தான். சாதாரண டீ ஷர்ட் டிராக் பாண்டில் இருந்தாலும் அவனுடைய திமிர் மட்டும் அவன் நிற்கும் தோற்றத்திலேயே தெரியும். 6 அடி 2 அங்குலம், எப்பொழுதும் சீராக கோதி இருக்கும் கேசம் இன்று சற்றே கலைந்தாலும் அழகாகவே இருந்தது அவனுக்கு, தீ போல் சுட்டு எரிக்கும் கண்கள், செதுக்கி வைத்தாற்போல் கூர் மூக்கு, அளவாய் பேசும் உதடுகள் சிகரெட்டை தீண்டாமல் இயற்கையாய் சிவந்தே இருக்கும். கோட் சூட்டில் இருக்கும் அந்த மிடுக்கான தோற்றம் இந்த சாதாரண டீ-ஷிர்டிலும் அச்சு பிசையாமல் இருந்தது அதே கம்பீரம், கண்களில் வூடுருவி பார்க்கும் கூறிய கண்களும் இரண்டு இளசுகளுக்கு நடுக்கத்தை மட்டுமே தந்தது. இரவின் இருளிலும் அவனுடைய தேகம் மினுமினுத்தது, இளசுகளை ஒரு நொடியில் அளவெடுத்தவன் நிதான நடையை அவர்கள் நோக்கி எடுத்து வைத்தான் எந்த உணர்ச்சியையும் வெளி காட்டாமல். அவன் எடுத்து வைத்த ஓவ்வொரு அடியும் விஷ்ணுவிற்கும் திவ்யாவிற்கு வயிறில் என்னென்னமோ செய்தது.
"என்ன டா எனக்கு எங்க பாத்தாலும் அண்ணனை மாதிரியே தெரியாது, உர்..னு இருக்கான் டா போதைல பாத்தாலும் , ஆங்கிரி பறவை" தன் கூற்றுக்கு தானே சிரித்துக்கொண்டான் விஷ்ணு .
"சனியனே கண்ண தொறந்து நல்ல பாரு நிக்கிறது அவன் தா" கீழே இருத்தவனிடம் குனிந்து அவனை எழுப்பி விட்டான் திட்டிக்கொண்டே, "ஆமாடா வர வர கண்ணு சரியா தெரிய மாட்டிக்கிது, இத சாக்கா சொல்லி ஒரு நாள் ஆபீஸ் போகாம கட் அடிச்சிரலா" தான் மாட்டிக்கொண்டது கூட அறியாமல் ஆனந்தத்தில் திளைத்து இருந்தான் விஷ்ணு.
வேறு வழி இல்லாமல் ஓடி சென்று திவ்யா ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து ஹரியிடம் கொடுத்தாள் , வாங்கி அவன் மேல் பயத்தில் ஊற்றினான், "நாசமா போன்றவனே நீயு செத்து என்னையு கொல்லாமை விட மாட்டா, நிதானத்துக்கு வா டா தயவு செஞ்சு "
ஊற்றிய நீரில் சற்று கண் தெளிந்தவன், "அதுக்குள்ள என்ன குளிக்க வைக்காத டா போதை போயிரு" கதறினான் விஷ்ணு."கண்ண நல்ல விரிச்சு பாரு உயிரே போயிரு" அவன் பின் முதுகில் ஓங்கி ஒரு குத்தினான் வலியில் கத்தியவன் விரித்த கண்களை கொண்டு முன் நின்றவனை பார்த்ததும் எச்சிலை முழுங்கி ஹரியின் அருகில் சென்று, "ஏண்டா எனக்கு இன்னும் போதை போகல அப்டி தான, எனக்கு என்னமோ அண்ணன் முன்னாடி இருக்கா மாறியே இருக்கு"
இவர்கள் செய்த குறும்பு தனத்தை பார்த்து ரசித்தவன் உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியில் காட்டாமல் வெற்று பார்வையை தெளித்து கொண்டே இருந்தான்.
திவ்யா பக்கம் திரும்பி, "சார் என்ன பண்ணார் னு கேடல்ல? ". பே பே வென விழித்து கொண்டு நின்றவள். "கேட்டல்ல" என்று மறுமுறை அழுத்தியதும். எல்லாப்பக்கமும் தலை அசைத்தாள். " அவரு டெய்லி என்கிட்ட அட்டெண்டென்ஸ் போட்டுட்டு நேரா பைனான்ஸ் டிபார்ட்மென்ட் போய்டுவாரு, அங்க போயி அந்த பொண்ணு பேரு என்ன ஹரி?" தெரியாமல் கேட்பது போல் கேட்டான், "ப்ரியா" வேகமாக கூறிய ஹரியை முறைதான் விஷ்ணு.
"கரெக்ட் ப்ரியா. அந்த பொண்ணு கிட்ட போய் கரெக்ட்ஆ அது கணக்கு சொல்ற வரைக்கு சார் லைன் பய் லைன்ஆ கேள்வி கேட்டுட்டு தா அடுத்த வேலையே பாப்பாரு, அதுவும் மொத்த கம்பெனியோட கணக்கையு ஒரு மணி நேரத்துல கேட்ருவாரு, அவ்வளவுவு ... திறமை. இவ்வளோ வேலைக்கும் இடைல போயி பிட்சா சாக்லேட் அதுவும் ஹார்ட் போட்ட சாக்லேட் வாங்கி குடுத்து, அது மட்டும் இல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு போயி சேருற வரைக்கு ரெண்டு பேரும் இருந்து பாத்துட்டு பை பை சொல்லிட்டு தா வருவாங்க.ப் பா.. சொல்ற எனக்கே எவளோ டயர்டா இருக்கே தம்பிக்கு எவ்ளோ டயர்டா இருக்கும்"என்றான் நக்கலாக.
(கீழே தொடர்ந்து படிக்க)