• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எனக்குள் காலம் - 10

Member
Messages
37
Reaction score
2
Points
8
டிசம்பர் 10... காலை வேளை சக்தி எழுந்து ஆயத்தம் ஆகி நேராக ரமயாவின் வீட்டிற்கு செல்கிறான். ரம்யா தயாராக காத்து கொண்டு இருக்கிறாள் கண்காட்சி செல்ல.
"ரம்யா..."என வீட்டின் வெளியே நின்று குரல் கொடுக்கிறான் சக்தி.
சக்தியின் குரலை கேட்டவுடன் கதவை திறந்து வெளியே வருகிறாள் ரம்யா.
"வாந்துட்டியா ஒரு வழியா..."என பெருமூச்சு விட்டபடி ரம்யா சக்தியை நோக்கி வர,
"போலாமா..."என சக்தி கேட்கிறான்.
"போலாம் சக்தி..."என ரம்யா கூறுகிறாள்.
இருவரும் நடந்து சென்று சைக்கிளில் செல்கின்றனர் கண்காட்சிக்கு.
கண்காட்சியின் உள்ளே சென்று பல விஷயங்களை ஒவ்வொன்றாக பார்க்கின்றனர். ஆனால் சக்தி ரம்யாவை தனியாக விடவில்லை. எப்பொழுதும் கூடவே இருக்கிறான்.
"இன்னும் இரண்டு நாள்தான் ரம்யா....இந்த இரண்டு நாள் மட்டும் உன்னை காப்பாத்திட்டா வருங்காலத்தை என்னால மாத்த முடியும்...என் அம்மாவும் இறக்க மாட்டாங்க...இது என்னால முடியும்...இது என்னால முடியும்...என் அம்மாவை என்னால காப்பாத்த முடியும்..."என மனதினுள் எண்ணியவாறே ரம்யாவை பார்க்கிறான் சக்தி.
நீல நிற உடையில் மிகவும் அழகாக நின்று கொண்டு இருக்கும் ரம்யாவை பார்த்து வியந்து போகிறான் சக்தி.அப்பொழுது சக்திக்கு திடீரென ஒரு நினைவு வருகிறது. ரம்யாவை இதே இடத்தில் இதே நீல நிற உடையில் பார்த்தது போன்ற நினைவு.
"இதே மாதிரி பார்த்து இருக்கோம் ஏற்கனவே...அப்போ இது முன்னாடியே நடந்து இருக்கு...இது என்னோட வருங்காலத்தோட இறந்த கால நினைவுகள் ..அப்போ நடந்ததுதான் இப்போது நடக்குது போல...அப்போ நான் எதையுமே மாத்தல இன்னும்...ஏற்கனவே நடந்ததுதான் மீண்டும் நடக்குது போல..."என மனதினுள் ஓட, சக்திக்கு உடல் வேர்க்கிறது.
"இப்போ என்ன பண்றது...என்ன பண்றது...எப்படி நான் ரம்யாவை காப்பாத்துவேன்..."என எண்ணி கொண்டே ரம்யாவை பார்க்க, ரம்யா அவனை பார்க்கிறாள்.
"என்னாச்சு... என்ன உனக்கு உடம்பெல்லாம் வேர்க்குது..."என ரம்யா சக்தியை பார்த்து கேட்கிறாள்.
"ஒன்னும் ஆகலை...கொஞ்சம் கூட்டம் அதான் வேற ஒன்னும் இல்லை..."என சக்தி யோசித்து கொண்டே ரம்யாவை பார்க்கிறான்.
"ஏண்டா...நாங்க மூணு பேர் இருக்கறது உனக்கு கூட்டமா..."என ஆஷாவின் குரல் கேட்க, குரல் வந்த திசையை நோக்கி திரும்புகிறான் சக்தி. அங்கு சந்தீப், கோபிநாத் மற்றும் ஆஷா நின்று கொண்டு இருக்கின்றனர்.
"வரல சொன்னீங்க..."என சக்தி ஆச்சர்யத்தில் கேட்க,
"சும்மா....கடைசி நேரம் பிளான் பண்ணோம்...வந்துட்டோம்..."என கூறுகிறான் கோபிநாத்.
"நீங்க வந்தது சந்தோசம்"என புன்னகையுடன் பார்க்கிறான் சக்தி.
"என்னாச்சு உனக்கு...எதுக்கு இப்போ சிரிக்கறே..."என சந்தீப் கேட்க,
"ஒன்னும் இல்ல....நீங்க இங்கேயே இருங்க...நான் இப்போ வந்தரேன்..."என கூறிவிட்டு சக்தி செல்ல,
சக்தி செல்லும் திசையை பார்க்கிறான் சந்தீப்.
"நல்ல வேளை இப்போ இவங்க வந்தாங்க...நாளைக்கும் நாளை மறுநாள் இந்த ரெண்டு நாளும் நல்லா கவனமா இருக்கணும்...அவ கூடயே இருக்கணும்... அப்போதான் அவ கடத்தபடறத தடுக்க முடியும்...என்ன பண்ணலாம்..."என நடந்தபடி கழிவறைக்கு சென்று தன் முகத்தை கழுவுகிறான் சக்தி.
"டிசம்பர் 11 அவ கடத்தப்பட்ட நாள்...டிசம்பர் 12 அவ பிறந்த நாள்...இந்த இரண்டு நாளும் அவளை பாத்துக்கணும்...டிசம்பர் 12 அவளை நம்ம வீட்டுக்கு பர்த்டே பார்ட்டி சொல்லி கூட்டிட்டு வரலாம்...நாளைக்கு என்ன பண்றது...அவ கூடயே இருக்கணும்..."என எண்ணியவாறு தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறான் சக்தி.
"இது நமக்கு கிடைச்சு இருக்க மறுவாய்ப்பு...இதை தவறவிடாமல் உபயோகப் படுத்தனும்..."என எண்ணி கொண்டே அங்கிருந்து வெளியே வந்து அவர்கள் நண்பர்கள் இருக்கும் இடத்தை அடைகிறான் சக்தி. வெளியே வந்த சக்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்கிறான் சக்தி. கண்காட்சி முடிந்து மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர் சக்தியும் ரம்யாவும்.
"சக்தி..."என ரம்யா சக்தியை அழைக்க,
"என்ன ரம்யா..."என சக்தி அவளை பார்க்க,
"ரொம்ப தேங்க்ஸ் சக்தி..."என ரம்யா அவனை பாரக்க
"எனக்கு எதுக்கு ரம்யா Thanks..."என ரம்யாவின் விழியை பார்க்க முடியாமல் குனிந்து கொள்கிறான் சக்தி.
"நான் இவ்வளவு நாள் இப்படி சந்தோசமாக இருந்தது இல்லை ...ரொம்ப நாள் கழிச்சு நான் இவ்வளவு சந்தோசமாக இருக்கேன்...எல்லாம் உன்னால்தான் சக்தி...ரொம்ப தேங்க்ஸ்..."என ரம்யா கூறுகிறாள்.
"ச்சே...இதுக்கு எல்லாம் எதுக்கு ரம்யா.... விடு..."என சக்தி கூறுகிறான்.
இருவரும் ரம்யாவின் வீட்டினை அடைந்து ரம்யாவுடம் இருந்து விடை பெறுகிறான். ரம்யாவை அவளின் வீட்டினுள் விட்டுவிட்டு,"உன்னை காப்பாத்தறேன் ரம்யா..."என மனதினுள் நினைத்தவாறு அங்கு இருந்து தன் வீட்டிற்கு செல்கிறான் சக்தி.

(டிக்....டிக்...டிக்...)
 
Top