- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 8
மேலும் இரண்டு நாட்கள் மௌனமாய் கழிந்திருந்தது. ரகுராம் எந்த வகையிலும் காயத்ரியை தொந்தரவு செய்யவில்லை. அவளுக்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும் என்று புத்திக்குப் புரிந்தது. ஆனாலும் அவளின் பாரா முகத்தால் இவன் தவித்துப் போயிருந்தான்.
இந்த பதினைந்து வருட நட்பில் இப்படியொரு பிணக்கை அவர்கள் உள்நுழைய விட்டதில்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வார்கள். பெரிதாய் கருத்து வேறுபாடெல்லாம் முளைத்ததாய் அவனுக்குமே நினைவில் இல்லை. ஏனோ காயத்ரி கொஞ்சம் கொஞ்சமாக தன்னைவிட்டு மனதளவில் தூரச் செல்கிறாள் எனப் புரிந்தாலும் எப்படி இதை சரி செய்ய என அவனுக்குப் புரியவில்லை. தன்னுடைய திருமணம்தான் அவளைப் பாதிக்கிறதா என எண்ணிப் பார்த்தான். ஒன்றுமே புரிபடவில்லை. பிரச்சனையின் அடிநாதம் எதுவென கண்டறிய முடியாது திணறினான்.
இப்போது அவள் எப்படி தனக்குத் தோழியோ, அதே போலத்தான் திருமணம் முடிந்தும் அவளுக்கும் தனக்குமான உறவுத் தொடரும் என அவனுடைய மனம் கூறினாலும், அதைப் பெண் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளே என ஆதங்கமாய் இருந்தது அவனுக்கு. எதைக் கொண்டு தங்களுடைய இடையே விழுந்த விரிசலை நிரப்ப எனத் தெரியாது தவித்தவன், மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் காயத்ரியின் வீட்டிற்குத்தான் சென்றான். வீடு பூட்டியிருந்தது.
அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். முதல் அழைப்பில் ஏற்காதவள் பின்னர் இரண்டாவது முறை ஏற்றுக் காதில் பொருத்தினாள்.
“காயூ, எங்க இருக்க நீ?” என அவன் யோசனையாக கேட்க, “அது... வெளிய இருக்கேன் ராம்!” என்றாள்.
“வெளியன்னா, எங்க இருக்க? அங்கிள் எங்க, அவரும் உன்கூடத்தான் இருக்காரா? வீடு பூட்டியிருக்கு?” எனக் கேட்டான்.
“ஹம்ம்... ஆமா, நானும் அப்பாவும் தான் இங்க ஹாஸ்பிடல் வந்தோம்!” என்றாள் மெல்லிய குரலில்.
“எந்த ஹாஸ்பிடல், என்னாச்சு அவருக்கு?”
“ஹம்ம்... நீ வொர்க் பண்ற ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்தான். அப்பாவுக்கு கொஞ்சம் பீபி அதிகமாகிடுச்சு. அதான் டாக்டர்கிட்டே வந்தோம்!” அவள் பட்டும் படாமலும் பேசியதில் இவனுக்கு கடுப்பாய் வந்தது.
“ஏன் எனக்கு கால் பண்ணலை காயூ, நான் அங்கதானே இருந்தேன். இப்போதான் ட்யூட்டி முடிஞ்சு வந்தேன். எனக்கு கால் பண்றதுக்கு என்ன உனக்கு?” என இவன் பொரிந்தான்.
“ஹம்ம்... நான் உன்னைத்தான் பார்க்கணும்னு சொன்னேன் ராம். ரகுராம் டாக்டர் ரொம்ப பிஸி, வேற டாக்டரைப் பாருங்கன்னு ரிசப்ஷனிஸ்ட் சொல்லிட்டாங்க. அதான் வேற டாக்டரைக் கன்சல்ட் பண்ணேன்!” என அவள் பதிலில் இவனுக்கு எரிச்சலானது.
“ஏன் இத்தனை நாள் என்னைப் பார்க்க ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கேட்டுத்தான் வந்தீயா? இன்னைக்கு என்ன புதுசா? எனக்கு ஒரு கால் பண்ணியிருந்தா, நான் அப்பாய்ன்மெண்ட் கொடுத்திருப்பேன்ல? இல்ல, பெர்சனலா கூட பார்த்திருக்கலாம்!” என அவன் கோபத்தில் பற்களை நறநறத்தான்.
“அதெதுக்கு ராம், எனக்கு முன்னாடி அத்தனை பேர் அப்பாய்மெண்டோட இருக்கும்போது வந்ததும் நான் உன்னைப் பார்த்தா நல்லா இருக்காது. நீயும் ட்ரீட்மெண்ட் தான் பார்க்கப் போற, அந்த டாக்டரும் அதேதான செய்றாரு. அவரைப் பார்த்தா என்ன? உன்னைப் பார்த்தா என்ன? ரெண்டு பேரும் மாத்திரை மருந்துதானே கொடுக்கப் போறீங்க!” என்றவள் அவன் பேசும் முன்னே, “வெளிய பூந்தொட்டி கீழே சாவி இருக்கு. வீட்டை திறந்து உள்ள வெயிட் பண்றதுன்னா வெயிட் பண்ணு. நாங்க வர அரை மணி நேரமாகும். இல்லை வேலை இருக்குன்னா கிளம்பு. இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நான் போய் பார்மஸில டேப்லெட் வாங்கிட்டு அப்பாவைக் கூட்டீட்டு வரணும்!” என்றவள் அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கு குபுகுபுவென கோபம் தொண்டை வரை மேலெழுந்தது.
அதை அடக்கிக் கொண்டவன் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று அமர்ந்தான். பசிக்க வேறு செய்ய, சாப்பிட என்ன இருக்கிறது எனப் பார்த்தான். குளிர்சாதன பெட்டியில் ஆப்பிளும் மாதுளையும் இருக்க, கத்தியை எடுத்துக்கொண்டு வந்து அவர்களது ஆஸ்தான இடத்தில் அமர்ந்தான்.
கூறிய நேரத்தைவிட இன்னுமே பத்து நிமிடங்கள் கழித்து தாமதமாகவே வந்தாள் காயத்ரி. அவளது இருசக்கர வாகனத்தில் செல்லாது தானியில் சென்றதிலே தங்கராஜின் உடல்நிலையை அவனால் கணிக்க முடிந்தது. சோர்ந்து போய் உள்ளே நுழைந்தவரை இவன் தோள் சாய்த்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.
“என்னாச்சு அங்கிள், திடீர்னு உடம்புக்கு என்ன பண்ணுச்சு, நீங்களாவது எனக்கு உடனே கால் பண்ணி இருக்கலாம்ல?” எனக் காயத்ரியை முறைத்துக் கொண்டே கேட்டான்.
“எனக்கு என்ன பண்ணுச்சுன்னு தெரியலை தம்பி. இதயத்துடிப்பு அதிகமாகிடுச்சு. வேர்த்து ஊத்தி, மயக்கம் போட்டுட்டேன். அப்புறம் காயூதான் ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போனா. டாக்டர் பிரஷர் அதிகமாகிடுச்சுன்னு சொல்லி ட்ரிப்ஸ் போட்டாங்க. காலைல இருந்து பெட்ல இருந்துட்டு இப்போதான் விட்டாங்க!” என அவர் பேசியதைக் கேட்டவனுக்கு காய்தரியை என்ன செய்தால் தகும் என்ற அளவிற்கு கோபம் வந்தது. காலையிலிருந்து தந்தைக்கு உடல்நிலை சரியில்லாது ஒற்றை ஆளாக இவள் கஷ்டப்பட்டிருக்கிறாள். அதே மருத்துவமனையில் இருந்த என்னை அழைத்துக் கூற வாய் வரவில்லையா? அந்த அளவிற்கு நான் வேண்டாதவனாகப் போய்விட்டேனா? என மனம் அடிவாங்கிப் போனது.
எதுவும் பேசாது அவள் மேஜை மீது வைத்து சென்ற மருத்துவ அறிக்கையை எடுத்துப் படித்துப் பார்த்தான். என்ன மாத்திரை மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள் என பார்த்தவன், “பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்ல அங்கிள். இனிமே பீபி அதிகமாகாம பார்த்துக்கோங்க. திடீர்னு 220 பீபி போற அளவுக்கு என்னாச்சு அங்கிள்? என்ன சாப்டீங்க?” எனக் கேட்டறிந்தவன், இனிமேல் நடை பயிற்சி செய்ய வேண்டும், முறையான உணவு உட்கொள்ள வேண்டும், இரவு தூங்க வேண்டும், முக்கியமாக மது அருந்தக் கூடாதென மருத்துவராய் அறிவுரை வழங்க, தங்கராஜ் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டார்.
பத்து நிமிடத்திலேயே தட்டில் இரண்டு தோசையுடன் தேங்காய் சட்னியும் அரைத்து எடுத்து வந்தாள் காயத்ரி. “ப்பா... இந்தாங்க, காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்கீங்க. இதை தோசையை சாப்ட்டு மாத்திரைப் போட்டு தூங்குங்கப்பா. தூங்கி எழுந்திரிச்சா உடம்பு சரியா போய்டும்!” எனக் குழந்தைக்கு கூறுவது போல அவரை உண்ண வைத்தாள். ஒரு குவளையில் பாலை எடுத்து வந்து மாத்திரையை விழுங்கச் செய்தவள், படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்தினாள்.
“ப்பா... நீங்க வெளியப் படுக்க வேணாம். பேசாம உள்ள வந்து படுங்கப்பா. எதுவும்னா என்னைக் கூப்பிடுங்க. நீங்களா எதுவும் மாத்திரையைப் போட வேணாம்!” என்றாள் பயந்து போன குரலில். காலையில் இருந்து மாலை வரை மருத்துவமனையில் இருந்த காயத்ரிக்கு நெஞ்சு முழுவதும் பயம் படர்ந்தது. எப்படி இந்தளவிற்கு இவருக்கு இரத்தம் அழுத்தம் உயர்ந்தது என அவளுக்குமே தெரியவில்லை. இவள் சரியான நேரத்திற்கு மருத்துவனை செல்லாவிட்டிருந்தால் கை கால் செயலிழப்பு கூட ஏற்றப்பட்டிருக்க கூடுமென மருத்துவர் கூறிய வார்த்தை இவளை உலுக்கியிருந்தது.
இப்போது நினைத்தால் கூட உடலும் உள்ளமும் நடுங்கிப் போனது. யாருமற்று வெளியே இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு நெஞ்சு முட்டுமளவிற்கு அழுகை வந்தது. ராமை அழைத்துக் கொள் என மனம் அரற்ற, மூளை அதை தடை செய்திருந்தது. தந்தைக்கு என்னவானது எனத் தெரியாத அரைமணி நேரம் அவளுடைய உயிர் உடலில் இல்லை. தாயை இழந்து இத்தனை வருடங்களாகியிருந்தாலும் இன்னுமே அவரது இழப்பை இவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தானே ராமிடம் தாயைத் தேடி அழுதாள். இப்போதும் தந்தையும் தன்னைவிட்டுச் சென்றுவிட்டால் யாருமற்று அநாதையாகிவிடுவோமே என நினைத்ததும் குபுக்கென்று விழிகள் நனைந்து போயின. யாருடைய பார்வைக்கும் காட்சிப் பொருளாக விரும்பாமல் தனியாளாக அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்து வீடு நுழைந்திருந்தாள். ஆனாலும் இதோ இப்போது உள்ளே வந்து ரகுராமைப் பார்த்ததும் அவனிடம் தன் பயத்தை, காயங்களைக் கூறி தாய்மடி தேடி அழச் சொல்லி மனம் அரற்றியது. எங்கே அவனது முகத்தைப் பார்த்தால் உடைந்து விடுவோமோ என மனம் அஞ்ச, அதனாலே அவனொருவன் அங்கிருக்கிறான் என்று தெரியாதது போல நடந்து கொண்டாள். தங்கராஜ் வெளியே படுத்துக் கொள்வதாக உரைத்துவிட்டார். காயத்ரி அவ்விடம் விட்டு அகன்றிருந்தாள்.
சமையலறைக்குள் அவள் இருப்பதை உணர்ந்தவன் உள்ளே சென்றான். தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தான். சோர்ந்து களைத்திருந்தாள். விழிகள் சிவப்பேறியிருந்தன. ஏனோ தானோவென்று தலையை வாரிவிட்டு, கையில் கிடைத்த உடையை அவள் அணிந்து சென்ற விதத்திலேயே நிலைமையின் தீவிரம் அவனுக்குப் புரிந்திருந்தது.
“சாப்டீயா காயூ, காலைல இருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட?” என அவன் கேட்டதும் முனுக்கென இவளது கண்களில் நீர் தளும்பியது. அதை அவனுக்கு காட்டாது உள்ளிழுத்தாள். உண்மையிலே காலையிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அமர்ந்த இடத்திலே பைத்தியம் போலத்தான் உட்கார்ந்திருந்தாள். துணைக்கு யாருமில்லை. ஆறுதல் மொழி சொல்ல ரகுராம் இல்லை. அவனொருவன் இல்லையென்ற ஒரு காரணமே அவளை மொத்தமாய் துவண்டு போகச் செய்திருந்தது. ஒரே ஒரு அழைப்பு விடுத்திருந்தால் இருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு தனக்காக வந்திருப்பான் என எண்ணியதும் மனம் வலித்தது.
இப்படி நாள் முழுவதும் அவளை உண்ணாது விட்டிருக்க மாட்டான் என அவளுக்குமே புரிந்தது. அதட்டியாவது உண்ண வைத்திருப்பான் என நினைத்ததும் உதடுகளில் விரக்தி புன்னகை உதிர்ந்தது.
“உன்னைத்தான் கேட்குறேன். சாப்பிட்டீயா? இல்லையா காயூ?” அவன் அதட்டலாய்க் கேட்க, “சாப்பிட்ற மாதிரி சிட்சுவேஷன் இல்ல. அதான் சாப்பிடலை ராம்!” என்றாள் அமைதியான குரலில்.
“சரி சாப்பிடு, உன்கிட்ட பேசணும்!” என்றான் அவனும் அமைதியாக.
“ராம், நான் ரொம்ப டயர்டா இருக்கேன். எதுனாலும் காலைல பேசலாம்!” என்றாள் அவன் முகத்தைக் கூடப் பார்க்காது.
“சரி, காலைல பேசலாம். நீ சாப்பிடு முதல்ல!” என அவன் கூற, அவனுக்கும் சேர்த்து இரண்டு தோசை களை சுட்டு தட்டிலிட்டு நீட்டினாள்.
“நீயூம் சாப்ட்டு போ, டைமாச்சு. பசிக்கும் ராம்!” என தட்டை நீட்டியவளிடம் மறுக்காது வாங்கி உண்டான். இருவரும் அமைதியாய் உண்டு முடித்தனர். அவள் பாத்திரங்களை ஒதுங்க வைக்க, இவன் சில நிமிடங்கள் அவளைப் பார்த்தான்.
“ரெஸ்ட் எடு காயூ!” என்றவன் அவளருகே வந்து தலையில் கை வைக்கச் சென்றுப் பின்னர் தயங்கியபடியே அப்படியே நின்றான்.
“நான் போய்ட்டு வரேன் காயூ!” என அவன் விறுவிறுவென செல்ல, இவள் அவனது முதுகை மட்டும் வெறித்துப் பார்த்தாள். வெளியே செல்லவில்லை. விறுவிறுவென அறைக்குள் சென்றவள் அலமாரியைத் திறந்து உள்ளே வைத்திருந்த தாயின் புகைப்படத்தை எடுத்து மார்போடு அணைத்து சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் இப்போது கேட்பாரற்று சுதந்திரமாய் வெளியேறியது.
வெளியே சென்ற ரகுராம் சட்டை பையில் கையை வைத்து தேட வாகனத்தின் சாவி அங்கில்லை. எங்கே வைத்தோம் என யோசித்துக் கொண்டே உள்ளே வந்து மேஜையைப் பார்க்க, அங்கில்லை. அப்படியே உள்ளே சென்றவன் குளிர்சாதன பெட்டியருகே செல்ல, அதன் மேலேதான் வைத்திருந்தான். அதை எடுத்துக் கொண்டு திரும்பியவனின் கால்கள் மெலிதாய்க் கேட்ட விசும்பல் சத்தத்தில் நின்று போயின. சில நொடிகள் தயங்கியவன் பாதியாய் மூடியிருந்தக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
உடலைக் குறுக்கிக் கையில் தாயின் புகைப்படத்தை வைத்து விசும்பிக் கொண்டிருந்தாள் காயத்ரி. இவனது அரவம் உணர்ந்தவள் பட்டென நிமிர்ந்து பார்க்க, ரகுராம் உணர்வு துடைத்த முகத்துடன் அவளைப் பார்த்திருந்தான். ஒரு நொடி என்ன செய்வது என ஸ்தம்பித்தது மூளை. பின்னர் எழுந்து நின்றவள் புகைப்படத்தை வைத்துவிட்டு முகத்தைத் துடைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன... என்ன வேணும் ராம்?” என்றாள் இடறிய குரலை மறைக்க முயன்று தோற்றவளாக. எதுவுமே யோசிக்காதவன் அவளை இழுத்து அணைத்திருந்தான். காயத்ரி அவனை அணைக்கவில்லை. கைகளை அப்படியே தொங்கப்
போட்டிருந்தாள். இளகியிருந்த இதயம் இன்னுமே இறுக ஆரம்பித்தது.
“ரொம்ப பயந்துட்டீயா காயூ?” என்றவனின் வார்த்தைகளில் கண்ணீர் முன்னே வந்து பதிலுரைக்க முயன்றது. அவனது அணைப்பிலே தலையை இடம் வலமாக அசைத்து மெதுவாய் அவனிடமிருந்து பிரிந்தவள் கண்ணீரோடு, “இல்ல ராம். ஐ யம் ஓகே, அம்மா ஞாபகம் வந்துடுச்சு டா. அவ்வளோதான், மத்தபடி ஐ யம் ஆல் ரைட்!” என்றாள் சோபையாய் புன்னகைத்து. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அவன் அணைத்தப் போது இன்னுமே அழ சொல்லி மனம் உந்த, மூளையின் கட்டுப்பாட்டில் தன்னுடைய உணர்வுகளுக்கு அணை போட்டாள்.
அவளை அமைதியாய் பார்த்தவன், “இந்த மேரேஜை கால் ஆஃப் பண்ணலாம்னு இந்த செகண்ட் தோணுது காயூ!” என்றான் வலி நிறைந்த குரலில். அவனது பேச்சில் இவளது இதயம் திடுக்கிட்டு போனது. அதிர்ந்து அவனைப் பார்த்தவள், “ராம்... ஏன் டா?” என்றாள் குரல் நடுங்க.
“ஹம்ம்... எனக்கு என் காயூ வேணும்னு தோணுது. இந்த மேரேஜ் ப்ரபோசல் ஸ்டார்ட் பண்ணதுல இருந்து நீ என்கிட்ட ரொம்ப டிஸ்டென்ஸ் மெயின்டெய்ண் பண்ற. என்னமோ ரொம்ப வலிக்குது டி. பதினஞ்சு வருஷமா கூட தானே இருக்கேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போய் ஒரு நாள் ஃபுல்லா நான் வொர்க் பண்ற ஹாஸ்பிடல்லயே இருந்திருக்க. ஆனால், ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லணும்னு தோணலை. அப்படியென்ன நான் வேண்டாதவனா போய்ட்டேன்னு கஷ்டமா இருக்கு காயூ. உன் கூட நான் எப்பவுமே ஒரு ஃப்ரெண்டா துணைக்கு இருப்பேன்னு உனக்குத் தோணலையா? இந்த மேரேஜ் தான் உன்னையும் என்னையும் பிரிக்கும்னா, அது தேவையில்லாதது. எனக்கு என் பழைய காயூ வேணும்!” என்றான் உடைந்தழுத குரலில். என்னவோ கோபம் கொண்டு வந்தவனால் முன்னே நிற்பவளிடம் கோபத்தைக் காண்பிக்க முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் அவனுக்கும் விழிகள் கலங்கின.
விழிகளில் தளும்பிய நீரை கண்ணை சிமிட்டி உள்ளிழுத்தவள், அவனது பிம்பத்தை கண்களில் நிரப்பிக்கொண்டு பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்து விழிகளைத் தாழ்த்தி கொண்டாள். “முட்டாள்தனமா பேசாத ராம். நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீ உளறாத, ஒழுங்கா கல்யாண வேலையைப் பாரு!” என்றாள் அதட்டலாய்.
“நோ.. நீ வாயைத் திறந்து என்ன பிரச்சனைன்னு சொல்லாம, நான் இந்த ப்ரபோசலை கன்டினியூ பண்றதா இல்ல!” என்றவனை எரிச்சலாய் நிமிர்ந்து பார்த்தாள்.
“லூசா டா நீ? அங்க உன் அம்மா அப்பா ஆசையா உனக்கு மேரேஜ் ரெடி பண்ணா, நான் பேசலை, புடலங்காயல உப்பில்லைன்னு கல்யாணத்தை நிப்பாட்டுவானாம். ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு எப்படி ராம் உன்னால இப்படி பேச முடியுது? எனக்காக இப்போ மேரேஜ் வேணாம்னு சொல்றவன், கல்யாணமானப் பின்னாடி பொண்டாட்டி வேணாம்னு சொல்வீயா? உனக்கே அது முட்டாள்தனமா தெரியலை?” என கடினக் குரலில் கேட்டாள்.
“நீ வாயைத் திறந்து சொல்லாம, நான் என் முடிவை மாத்தப் போறது இல்ல. காலைல இருந்து தனியாளா இத்தனையும் பார்த்திருக்கீயே, என்னை ஏன் கூப்பிடலை?” என ஆரம்பித்த இடத்திலே வந்து நின்றான்.
“நான் கூப்பிடலைன்னு நீ பார்த்தீயா? நர்ஸ் கிட்டே கேட்டப்போ நீ ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்கேன்னு சொன்னாங்க. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். என்னால சமாளிக்க முடிஞ்சது ராம். அதனாலதான் எல்லாத்தையும் நானே பார்த்தேன். சப்போஸ் முடியலைன்னு தோணுச்சுன்னா, கண்டிப்பா உன்னைக் கூப்ட்டிருப்பேன்!” என்றாள் பொய்யும் மெய்யுமாக.
“அப்புறம் ஏன்டி இப்போ உக்காந்து அழுதுட்டு இருக்க?” ஆதங்கமாய் அவன் கேட்டான்.
“ஏன்... அழக்கூடாது? காலைல இருந்து யாரும் இல்லாம தனியாளா அவரைப் பார்த்துக்கிட்டதால நான் ரொம்ப ஸ்ட்ராங்க, அழக்கூடாதுன்னு என் மூஞ்சில எழுதி இருக்கா என்ன? நானும் மனுஷி தானே? எனக்கும் அழுகை, கோபம் எல்லா வரும் ராம். பத்து வயசுல இதோ இந்த மகராசி என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க. அப்போ கூட அப்பான்னு ஒருத்தர் இருந்தார். கஷ்டம் நஷ்டம்னு அவரோட எல்லாத்தையும் பார்த்தேன். இப்போ அவரும் இல்லாம போய்ட்டா, அநாதையா நின்னுடுவோம்னு நினைச்சு அழுறேன். இந்த மனுஷன் இல்லன்னை யாரு இருக்கா என்னக்குன்னு சொல்லிக்கன்னு நினைக்கும் போது அழுகை வருது. அதான் அழுதேன், போதுமா? காரணம் தெரிஞ்சிடுச்சா? இப்போ கிளம்பறீயா?” என தந்தைக்கு கேட்டு விட கூடாதே என மெலிதாய் கத்தினாள். கண்களில் பொலபொலவென கண்ணீர் வடிந்தது. அமைதியாய் அவளருகே அமர்ந்தவன், தோளோடு அணைத்துக் கொண்டான். இவள் அசையாது இறுகிப் போயிருந்தாள்.
“அங்கிள்க்கு அப்படிலாம் எதுவும் ஆகாது காயூ. சின்ன ப்ராப்ளம் தான். அதுவும் சீக்கிரம் சரியாகிடும். உன்னை தனியாள விட்ற அளவுக்கு நான் மோசமானவன் இல்லைடி!” என்றான் அவளைக் குற்றம்சாட்டும் விதமாக. அவன் கையை மெதுவாய் விலக்கியவள், “ப்ம்ச்... நான் உன்னைக் குத்தமா சொல்லலை ராம். நீ என்னோட ஃப்ரெண்ட். எனக்காக நீ வருவன்னு எனக்குத் தெரியும். ஆனால், என்னால முடியும்னு தோணுது. அப்படியே எந்த வழியும் இல்லைன்னா, உன்னைத் தவிர யார்கிட்டேயும் போக மாட்டேன். அது உனக்கே தெரியும் இல்ல?” என்றாள். இப்போது குரல் நிதானத்திற்கு வந்திருந்தது.
“அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன் காயூ. ஆனால், இன்னையோட அந்த எண்ணத்துக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிடலாம்னு தோணுது!” என்றவன் அவள் முகம், “இதோ... இப்படி யாரும் இல்லைன்னு தனியா உக்கார்ந்து அழுற இந்த மூஞ்சியைப் பார்த்துட்டுப் போனா, எனக்கு இன்னைக்கு தூக்கம் கூட சரியா வராதுடி. ஏன் நான் இல்லையா? தனியா உக்கார்ந்து அழற அளவுக்கு உன்னை விட்டுட்டேனேன்னு குற்ற உணர்வா இருக்கு காயூ!” என்றான் நிதானமாய்.
“உன் மேல தப்பே இல்லாத விஷயத்துக்கு உன்னை நீயே ப்ளேம் பண்ணி தியாகி பட்டம் எதுக்கு வாங்கணும்னு நினைக்கிற ராம்?” என மெலிதாய்க் கடுப்புடன் அவள் கேட்க, அவனின் அலைபேசி இசைத்தது. அதை துண்டித்துவிட்டு பதிலளிக்க விழைந்தான். மீண்டும் அது இசைக்க, “ஃபோன்ல யாரு? போய் பேசிட்டு வா!” என்றாள் இவள்.
“இல்ல... வேணாம்!” என அவன் துண்டிக்க செல்ல, காயத்ரி கைபேசியைப் பறித்திருந்தாள்.
“மை லைஃப்!” என பெயர் வர, சைந்தவி முகப்பு படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். உணர்வுகளற்று சலனமில்லாது அதைப் பார்த்து விழிகளை சிமிட்டி நீரைத் தடுத்தவள், “நீ பேசிட்டு வா ராம். எதுவும் அர்ஜென்டா இருக்கப் போகுது!” என்றாள் துக்கத்தை விழுங்கிய தொண்டையை சரி செய்து.
“இல்ல காயூ, அது டெய்லி இந்த டைம்க்கு பேசி பழகிட்டேன். சோ அவ கால் பண்றா!” என்றவன் பதிலில் காயூவின் மனம் மேலும் மேலும் அடிபட்டுப் போனது.
“பரவாயில்லை, அட்டென்ட் பண்ணி ரெண்டு நிமிஷம் பேசிடு. இல்லன்னா அவங்க என்னவோ ஏதோன்னு பதறிடுவாங்க ராம்!” என்றாள் வெகு நிதானமாக தன் உணர்வுகளை மறைத்து. தலையை அசைத்தவன் அழைப்பை ஏற்று மெதுவாய் நகர்ந்து சென்றான். இவள் அமைதியாய் சுவரை வெறித்திருந்தாள். ஐந்து நிமிடத்தில் வந்தவன், “சைந்து உன்கிட்ட பேசணும்னு சொல்றா!” என்றான் தயங்கி.
எதுவும் கூறாத காயத்ரி கைபேசியை வாங்கி செவியில் பொருத்தினாள். “காயூ, இப்போதான் ராம் சொன்னாரு. அப்பாவுக்கு ஒன்னும் இல்ல. சீக்கிரம் குணமாகிடுவாரு. நீங்க பயப்படாதீங்க!” என்றாள் ஆதரவாக.
“ஹம்ம்... தேங்க் யூ சைந்து!” என இவள் சம்பிரதாயமாகப் பேசினாள்.
“ஹம்ம்... அப்புறம் இன்னொன்னு சொல்லணும். நீங்க ஏதோ டிஸ்டர்ப்டா இருக்கீங்கன்னு சொன்னாரு ரகு. டோன்ட் வொர்ரீ, உங்க ஃப்ரெண்டை உங்ககிட்டே இருந்து பிரிச்சு வில்லி வேலை எல்லாம் பார்க்க மாட்டேன். ஐ கேன் பீல் யூவர் இன்செக்யூரிட்டி. உங்களோட ராம் உங்களுக்குத்தான்!” என்றாள் அவள். காயத்ரி நிமிர்ந்து ஒருமுறை இவனைப் பார்த்தவள், “சைந்து, ஐ யம் ஓகே. நீங்க சொன்ன மாதிரி ஐயம் லிட்டில் பிட் டிஸ்டர்ப்ட். சீக்கிரம் ஓகே ஆகிடுவேன். நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க!” என்றாள்.
“நோ பார்மாலிட்டீஸ் காயூ, எங்கேஜ்மெண்ட்க்கு முத ஆளா நீங்க வரணும். நான் எக்ஸ்பெக்ட் பண்ணுவேன். உங்க ஃப்ரெண்ட் வேற பேசுற பத்து வார்த்தைல நாலு வார்த்தை என் காயூன்னு சொல்றாரு. அப்போ நீங்க இல்லாம எப்படி பங்கசன் நடக்கும். கண்டிப்பா வாங்க!” என்றாள் புன்னகை முகமாக.
“ஷ்யூர் சைந்தவி, நான் ராம்கிட்டே ஃபோனைக் கொடுக்குறேன்!” என்றவள் அவனிடம் அலைபேசியைக் கொடுத்தாள். சைந்தவயிடம் பேசி அழைப்பைத் துண்டித்தவன் காயத்ரியையே பார்த்தான். அவள் அவன் முகம் பார்க்கவில்லை. மெதுவாய் நடந்து அவளருகே சென்றவன் வயிற்றோடு அவளது தலையை அழுத்தி, “ஐ வில் பீ வித் யூ ஃபார் எவர் காயூ!” என்றவன், “தூங்கு டி எதையும் நினைக்காம!” என்றுவிட்டு அகன்றான். இவள் சென்று கதவை அடைத்துவிட்டு வந்து படுக்கையில் வீழ்ந்தாள். இத்தனை நேரம் வழிந்த கண்ணீர் வற்றிப் போயிருந்தது. அமைதியாய் படுத்திருந்தாள்.
அழுகை வந்ததுதான். ரகுராம் அவளை அணைத்தப் போது கேவி வந்தது. உடைந்தழுது அனைத்தையும் கூறிவிடலாம் என மனம் முந்திக் கொண்டு வந்தது. ஆனாலும் இறுகிப் போய் விட்டாள். அவனில்லாத இந்த ஒரு நாளே வாழ்க்கையின் மிச்ச பக்கங்கள் எப்படியிருக்கும் என கடவுள் காண்பித்திருந்தார். இதே ராம் இருந்திருந்தால் இத்தனை துன்பமெல்லாம் நேர்ந்திருக்காதே. அவன் உடன் இருக்கிறான் என்ற ஒன்றே அவளுக்கு முழு பலத்தையும் அளித்திருக்கும். நாதியற்று அமர்ந்திருந்த பொழுதுகள் கரைந்திருக்கும். அவன் அனைத்தையும் பார்த்திருப்பான்தான். ஆனாலும் இன்றைக்கு அவனை அழைத்தால் வந்துவிடுவான். ஆனால் இது போலொரு சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தால் அவனால் வர முடியாது போனால் சத்தியமாய் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கு இதுவே பரவாயில்லை. தந்தையை இனிமேல் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் இப்போது வியாபித்தது. தாயின் புகைப்படத்தை நொஞ்சோடு அழுத்தியவள், “நீதான் நான் வேணாம்னு போய்ட்ட. அவரையாவது ப்ளீஸ் எனக்காக விட்டு வைம்மா. யாரும் இல்லாம அநாதையா இருக்குற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லம்மா!” என விசும்பிக் கொண்டே உறங்காது விழித்திருந்தாள்.
தொடரும்...

மேலும் இரண்டு நாட்கள் மௌனமாய் கழிந்திருந்தது. ரகுராம் எந்த வகையிலும் காயத்ரியை தொந்தரவு செய்யவில்லை. அவளுக்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும் என்று புத்திக்குப் புரிந்தது. ஆனாலும் அவளின் பாரா முகத்தால் இவன் தவித்துப் போயிருந்தான்.
இந்த பதினைந்து வருட நட்பில் இப்படியொரு பிணக்கை அவர்கள் உள்நுழைய விட்டதில்லை. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வார்கள். பெரிதாய் கருத்து வேறுபாடெல்லாம் முளைத்ததாய் அவனுக்குமே நினைவில் இல்லை. ஏனோ காயத்ரி கொஞ்சம் கொஞ்சமாக தன்னைவிட்டு மனதளவில் தூரச் செல்கிறாள் எனப் புரிந்தாலும் எப்படி இதை சரி செய்ய என அவனுக்குப் புரியவில்லை. தன்னுடைய திருமணம்தான் அவளைப் பாதிக்கிறதா என எண்ணிப் பார்த்தான். ஒன்றுமே புரிபடவில்லை. பிரச்சனையின் அடிநாதம் எதுவென கண்டறிய முடியாது திணறினான்.
இப்போது அவள் எப்படி தனக்குத் தோழியோ, அதே போலத்தான் திருமணம் முடிந்தும் அவளுக்கும் தனக்குமான உறவுத் தொடரும் என அவனுடைய மனம் கூறினாலும், அதைப் பெண் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளே என ஆதங்கமாய் இருந்தது அவனுக்கு. எதைக் கொண்டு தங்களுடைய இடையே விழுந்த விரிசலை நிரப்ப எனத் தெரியாது தவித்தவன், மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் காயத்ரியின் வீட்டிற்குத்தான் சென்றான். வீடு பூட்டியிருந்தது.
அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். முதல் அழைப்பில் ஏற்காதவள் பின்னர் இரண்டாவது முறை ஏற்றுக் காதில் பொருத்தினாள்.
“காயூ, எங்க இருக்க நீ?” என அவன் யோசனையாக கேட்க, “அது... வெளிய இருக்கேன் ராம்!” என்றாள்.
“வெளியன்னா, எங்க இருக்க? அங்கிள் எங்க, அவரும் உன்கூடத்தான் இருக்காரா? வீடு பூட்டியிருக்கு?” எனக் கேட்டான்.
“ஹம்ம்... ஆமா, நானும் அப்பாவும் தான் இங்க ஹாஸ்பிடல் வந்தோம்!” என்றாள் மெல்லிய குரலில்.
“எந்த ஹாஸ்பிடல், என்னாச்சு அவருக்கு?”
“ஹம்ம்... நீ வொர்க் பண்ற ராமகிருஷ்ணா ஹாஸ்பிடல்தான். அப்பாவுக்கு கொஞ்சம் பீபி அதிகமாகிடுச்சு. அதான் டாக்டர்கிட்டே வந்தோம்!” அவள் பட்டும் படாமலும் பேசியதில் இவனுக்கு கடுப்பாய் வந்தது.
“ஏன் எனக்கு கால் பண்ணலை காயூ, நான் அங்கதானே இருந்தேன். இப்போதான் ட்யூட்டி முடிஞ்சு வந்தேன். எனக்கு கால் பண்றதுக்கு என்ன உனக்கு?” என இவன் பொரிந்தான்.
“ஹம்ம்... நான் உன்னைத்தான் பார்க்கணும்னு சொன்னேன் ராம். ரகுராம் டாக்டர் ரொம்ப பிஸி, வேற டாக்டரைப் பாருங்கன்னு ரிசப்ஷனிஸ்ட் சொல்லிட்டாங்க. அதான் வேற டாக்டரைக் கன்சல்ட் பண்ணேன்!” என அவள் பதிலில் இவனுக்கு எரிச்சலானது.
“ஏன் இத்தனை நாள் என்னைப் பார்க்க ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கேட்டுத்தான் வந்தீயா? இன்னைக்கு என்ன புதுசா? எனக்கு ஒரு கால் பண்ணியிருந்தா, நான் அப்பாய்ன்மெண்ட் கொடுத்திருப்பேன்ல? இல்ல, பெர்சனலா கூட பார்த்திருக்கலாம்!” என அவன் கோபத்தில் பற்களை நறநறத்தான்.
“அதெதுக்கு ராம், எனக்கு முன்னாடி அத்தனை பேர் அப்பாய்மெண்டோட இருக்கும்போது வந்ததும் நான் உன்னைப் பார்த்தா நல்லா இருக்காது. நீயும் ட்ரீட்மெண்ட் தான் பார்க்கப் போற, அந்த டாக்டரும் அதேதான செய்றாரு. அவரைப் பார்த்தா என்ன? உன்னைப் பார்த்தா என்ன? ரெண்டு பேரும் மாத்திரை மருந்துதானே கொடுக்கப் போறீங்க!” என்றவள் அவன் பேசும் முன்னே, “வெளிய பூந்தொட்டி கீழே சாவி இருக்கு. வீட்டை திறந்து உள்ள வெயிட் பண்றதுன்னா வெயிட் பண்ணு. நாங்க வர அரை மணி நேரமாகும். இல்லை வேலை இருக்குன்னா கிளம்பு. இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நான் போய் பார்மஸில டேப்லெட் வாங்கிட்டு அப்பாவைக் கூட்டீட்டு வரணும்!” என்றவள் அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கு குபுகுபுவென கோபம் தொண்டை வரை மேலெழுந்தது.
அதை அடக்கிக் கொண்டவன் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று அமர்ந்தான். பசிக்க வேறு செய்ய, சாப்பிட என்ன இருக்கிறது எனப் பார்த்தான். குளிர்சாதன பெட்டியில் ஆப்பிளும் மாதுளையும் இருக்க, கத்தியை எடுத்துக்கொண்டு வந்து அவர்களது ஆஸ்தான இடத்தில் அமர்ந்தான்.
கூறிய நேரத்தைவிட இன்னுமே பத்து நிமிடங்கள் கழித்து தாமதமாகவே வந்தாள் காயத்ரி. அவளது இருசக்கர வாகனத்தில் செல்லாது தானியில் சென்றதிலே தங்கராஜின் உடல்நிலையை அவனால் கணிக்க முடிந்தது. சோர்ந்து போய் உள்ளே நுழைந்தவரை இவன் தோள் சாய்த்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.
“என்னாச்சு அங்கிள், திடீர்னு உடம்புக்கு என்ன பண்ணுச்சு, நீங்களாவது எனக்கு உடனே கால் பண்ணி இருக்கலாம்ல?” எனக் காயத்ரியை முறைத்துக் கொண்டே கேட்டான்.
“எனக்கு என்ன பண்ணுச்சுன்னு தெரியலை தம்பி. இதயத்துடிப்பு அதிகமாகிடுச்சு. வேர்த்து ஊத்தி, மயக்கம் போட்டுட்டேன். அப்புறம் காயூதான் ஹாஸ்பிடல் கூட்டீட்டுப் போனா. டாக்டர் பிரஷர் அதிகமாகிடுச்சுன்னு சொல்லி ட்ரிப்ஸ் போட்டாங்க. காலைல இருந்து பெட்ல இருந்துட்டு இப்போதான் விட்டாங்க!” என அவர் பேசியதைக் கேட்டவனுக்கு காய்தரியை என்ன செய்தால் தகும் என்ற அளவிற்கு கோபம் வந்தது. காலையிலிருந்து தந்தைக்கு உடல்நிலை சரியில்லாது ஒற்றை ஆளாக இவள் கஷ்டப்பட்டிருக்கிறாள். அதே மருத்துவமனையில் இருந்த என்னை அழைத்துக் கூற வாய் வரவில்லையா? அந்த அளவிற்கு நான் வேண்டாதவனாகப் போய்விட்டேனா? என மனம் அடிவாங்கிப் போனது.
எதுவும் பேசாது அவள் மேஜை மீது வைத்து சென்ற மருத்துவ அறிக்கையை எடுத்துப் படித்துப் பார்த்தான். என்ன மாத்திரை மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள் என பார்த்தவன், “பயப்பட்ற அளவுக்கு ஒன்னும் இல்ல அங்கிள். இனிமே பீபி அதிகமாகாம பார்த்துக்கோங்க. திடீர்னு 220 பீபி போற அளவுக்கு என்னாச்சு அங்கிள்? என்ன சாப்டீங்க?” எனக் கேட்டறிந்தவன், இனிமேல் நடை பயிற்சி செய்ய வேண்டும், முறையான உணவு உட்கொள்ள வேண்டும், இரவு தூங்க வேண்டும், முக்கியமாக மது அருந்தக் கூடாதென மருத்துவராய் அறிவுரை வழங்க, தங்கராஜ் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டார்.
பத்து நிமிடத்திலேயே தட்டில் இரண்டு தோசையுடன் தேங்காய் சட்னியும் அரைத்து எடுத்து வந்தாள் காயத்ரி. “ப்பா... இந்தாங்க, காலைல இருந்து எதுவும் சாப்பிடாம இருக்கீங்க. இதை தோசையை சாப்ட்டு மாத்திரைப் போட்டு தூங்குங்கப்பா. தூங்கி எழுந்திரிச்சா உடம்பு சரியா போய்டும்!” எனக் குழந்தைக்கு கூறுவது போல அவரை உண்ண வைத்தாள். ஒரு குவளையில் பாலை எடுத்து வந்து மாத்திரையை விழுங்கச் செய்தவள், படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்தினாள்.
“ப்பா... நீங்க வெளியப் படுக்க வேணாம். பேசாம உள்ள வந்து படுங்கப்பா. எதுவும்னா என்னைக் கூப்பிடுங்க. நீங்களா எதுவும் மாத்திரையைப் போட வேணாம்!” என்றாள் பயந்து போன குரலில். காலையில் இருந்து மாலை வரை மருத்துவமனையில் இருந்த காயத்ரிக்கு நெஞ்சு முழுவதும் பயம் படர்ந்தது. எப்படி இந்தளவிற்கு இவருக்கு இரத்தம் அழுத்தம் உயர்ந்தது என அவளுக்குமே தெரியவில்லை. இவள் சரியான நேரத்திற்கு மருத்துவனை செல்லாவிட்டிருந்தால் கை கால் செயலிழப்பு கூட ஏற்றப்பட்டிருக்க கூடுமென மருத்துவர் கூறிய வார்த்தை இவளை உலுக்கியிருந்தது.
இப்போது நினைத்தால் கூட உடலும் உள்ளமும் நடுங்கிப் போனது. யாருமற்று வெளியே இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு நெஞ்சு முட்டுமளவிற்கு அழுகை வந்தது. ராமை அழைத்துக் கொள் என மனம் அரற்ற, மூளை அதை தடை செய்திருந்தது. தந்தைக்கு என்னவானது எனத் தெரியாத அரைமணி நேரம் அவளுடைய உயிர் உடலில் இல்லை. தாயை இழந்து இத்தனை வருடங்களாகியிருந்தாலும் இன்னுமே அவரது இழப்பை இவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தானே ராமிடம் தாயைத் தேடி அழுதாள். இப்போதும் தந்தையும் தன்னைவிட்டுச் சென்றுவிட்டால் யாருமற்று அநாதையாகிவிடுவோமே என நினைத்ததும் குபுக்கென்று விழிகள் நனைந்து போயின. யாருடைய பார்வைக்கும் காட்சிப் பொருளாக விரும்பாமல் தனியாளாக அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்து வீடு நுழைந்திருந்தாள். ஆனாலும் இதோ இப்போது உள்ளே வந்து ரகுராமைப் பார்த்ததும் அவனிடம் தன் பயத்தை, காயங்களைக் கூறி தாய்மடி தேடி அழச் சொல்லி மனம் அரற்றியது. எங்கே அவனது முகத்தைப் பார்த்தால் உடைந்து விடுவோமோ என மனம் அஞ்ச, அதனாலே அவனொருவன் அங்கிருக்கிறான் என்று தெரியாதது போல நடந்து கொண்டாள். தங்கராஜ் வெளியே படுத்துக் கொள்வதாக உரைத்துவிட்டார். காயத்ரி அவ்விடம் விட்டு அகன்றிருந்தாள்.
சமையலறைக்குள் அவள் இருப்பதை உணர்ந்தவன் உள்ளே சென்றான். தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள். அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தான். சோர்ந்து களைத்திருந்தாள். விழிகள் சிவப்பேறியிருந்தன. ஏனோ தானோவென்று தலையை வாரிவிட்டு, கையில் கிடைத்த உடையை அவள் அணிந்து சென்ற விதத்திலேயே நிலைமையின் தீவிரம் அவனுக்குப் புரிந்திருந்தது.
“சாப்டீயா காயூ, காலைல இருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட?” என அவன் கேட்டதும் முனுக்கென இவளது கண்களில் நீர் தளும்பியது. அதை அவனுக்கு காட்டாது உள்ளிழுத்தாள். உண்மையிலே காலையிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அமர்ந்த இடத்திலே பைத்தியம் போலத்தான் உட்கார்ந்திருந்தாள். துணைக்கு யாருமில்லை. ஆறுதல் மொழி சொல்ல ரகுராம் இல்லை. அவனொருவன் இல்லையென்ற ஒரு காரணமே அவளை மொத்தமாய் துவண்டு போகச் செய்திருந்தது. ஒரே ஒரு அழைப்பு விடுத்திருந்தால் இருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு தனக்காக வந்திருப்பான் என எண்ணியதும் மனம் வலித்தது.
இப்படி நாள் முழுவதும் அவளை உண்ணாது விட்டிருக்க மாட்டான் என அவளுக்குமே புரிந்தது. அதட்டியாவது உண்ண வைத்திருப்பான் என நினைத்ததும் உதடுகளில் விரக்தி புன்னகை உதிர்ந்தது.
“உன்னைத்தான் கேட்குறேன். சாப்பிட்டீயா? இல்லையா காயூ?” அவன் அதட்டலாய்க் கேட்க, “சாப்பிட்ற மாதிரி சிட்சுவேஷன் இல்ல. அதான் சாப்பிடலை ராம்!” என்றாள் அமைதியான குரலில்.
“சரி சாப்பிடு, உன்கிட்ட பேசணும்!” என்றான் அவனும் அமைதியாக.
“ராம், நான் ரொம்ப டயர்டா இருக்கேன். எதுனாலும் காலைல பேசலாம்!” என்றாள் அவன் முகத்தைக் கூடப் பார்க்காது.
“சரி, காலைல பேசலாம். நீ சாப்பிடு முதல்ல!” என அவன் கூற, அவனுக்கும் சேர்த்து இரண்டு தோசை களை சுட்டு தட்டிலிட்டு நீட்டினாள்.
“நீயூம் சாப்ட்டு போ, டைமாச்சு. பசிக்கும் ராம்!” என தட்டை நீட்டியவளிடம் மறுக்காது வாங்கி உண்டான். இருவரும் அமைதியாய் உண்டு முடித்தனர். அவள் பாத்திரங்களை ஒதுங்க வைக்க, இவன் சில நிமிடங்கள் அவளைப் பார்த்தான்.
“ரெஸ்ட் எடு காயூ!” என்றவன் அவளருகே வந்து தலையில் கை வைக்கச் சென்றுப் பின்னர் தயங்கியபடியே அப்படியே நின்றான்.
“நான் போய்ட்டு வரேன் காயூ!” என அவன் விறுவிறுவென செல்ல, இவள் அவனது முதுகை மட்டும் வெறித்துப் பார்த்தாள். வெளியே செல்லவில்லை. விறுவிறுவென அறைக்குள் சென்றவள் அலமாரியைத் திறந்து உள்ளே வைத்திருந்த தாயின் புகைப்படத்தை எடுத்து மார்போடு அணைத்து சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் இப்போது கேட்பாரற்று சுதந்திரமாய் வெளியேறியது.
வெளியே சென்ற ரகுராம் சட்டை பையில் கையை வைத்து தேட வாகனத்தின் சாவி அங்கில்லை. எங்கே வைத்தோம் என யோசித்துக் கொண்டே உள்ளே வந்து மேஜையைப் பார்க்க, அங்கில்லை. அப்படியே உள்ளே சென்றவன் குளிர்சாதன பெட்டியருகே செல்ல, அதன் மேலேதான் வைத்திருந்தான். அதை எடுத்துக் கொண்டு திரும்பியவனின் கால்கள் மெலிதாய்க் கேட்ட விசும்பல் சத்தத்தில் நின்று போயின. சில நொடிகள் தயங்கியவன் பாதியாய் மூடியிருந்தக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
உடலைக் குறுக்கிக் கையில் தாயின் புகைப்படத்தை வைத்து விசும்பிக் கொண்டிருந்தாள் காயத்ரி. இவனது அரவம் உணர்ந்தவள் பட்டென நிமிர்ந்து பார்க்க, ரகுராம் உணர்வு துடைத்த முகத்துடன் அவளைப் பார்த்திருந்தான். ஒரு நொடி என்ன செய்வது என ஸ்தம்பித்தது மூளை. பின்னர் எழுந்து நின்றவள் புகைப்படத்தை வைத்துவிட்டு முகத்தைத் துடைத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன... என்ன வேணும் ராம்?” என்றாள் இடறிய குரலை மறைக்க முயன்று தோற்றவளாக. எதுவுமே யோசிக்காதவன் அவளை இழுத்து அணைத்திருந்தான். காயத்ரி அவனை அணைக்கவில்லை. கைகளை அப்படியே தொங்கப்
போட்டிருந்தாள். இளகியிருந்த இதயம் இன்னுமே இறுக ஆரம்பித்தது.
“ரொம்ப பயந்துட்டீயா காயூ?” என்றவனின் வார்த்தைகளில் கண்ணீர் முன்னே வந்து பதிலுரைக்க முயன்றது. அவனது அணைப்பிலே தலையை இடம் வலமாக அசைத்து மெதுவாய் அவனிடமிருந்து பிரிந்தவள் கண்ணீரோடு, “இல்ல ராம். ஐ யம் ஓகே, அம்மா ஞாபகம் வந்துடுச்சு டா. அவ்வளோதான், மத்தபடி ஐ யம் ஆல் ரைட்!” என்றாள் சோபையாய் புன்னகைத்து. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அவன் அணைத்தப் போது இன்னுமே அழ சொல்லி மனம் உந்த, மூளையின் கட்டுப்பாட்டில் தன்னுடைய உணர்வுகளுக்கு அணை போட்டாள்.
அவளை அமைதியாய் பார்த்தவன், “இந்த மேரேஜை கால் ஆஃப் பண்ணலாம்னு இந்த செகண்ட் தோணுது காயூ!” என்றான் வலி நிறைந்த குரலில். அவனது பேச்சில் இவளது இதயம் திடுக்கிட்டு போனது. அதிர்ந்து அவனைப் பார்த்தவள், “ராம்... ஏன் டா?” என்றாள் குரல் நடுங்க.
“ஹம்ம்... எனக்கு என் காயூ வேணும்னு தோணுது. இந்த மேரேஜ் ப்ரபோசல் ஸ்டார்ட் பண்ணதுல இருந்து நீ என்கிட்ட ரொம்ப டிஸ்டென்ஸ் மெயின்டெய்ண் பண்ற. என்னமோ ரொம்ப வலிக்குது டி. பதினஞ்சு வருஷமா கூட தானே இருக்கேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போய் ஒரு நாள் ஃபுல்லா நான் வொர்க் பண்ற ஹாஸ்பிடல்லயே இருந்திருக்க. ஆனால், ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லணும்னு தோணலை. அப்படியென்ன நான் வேண்டாதவனா போய்ட்டேன்னு கஷ்டமா இருக்கு காயூ. உன் கூட நான் எப்பவுமே ஒரு ஃப்ரெண்டா துணைக்கு இருப்பேன்னு உனக்குத் தோணலையா? இந்த மேரேஜ் தான் உன்னையும் என்னையும் பிரிக்கும்னா, அது தேவையில்லாதது. எனக்கு என் பழைய காயூ வேணும்!” என்றான் உடைந்தழுத குரலில். என்னவோ கோபம் கொண்டு வந்தவனால் முன்னே நிற்பவளிடம் கோபத்தைக் காண்பிக்க முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் அவனுக்கும் விழிகள் கலங்கின.
விழிகளில் தளும்பிய நீரை கண்ணை சிமிட்டி உள்ளிழுத்தவள், அவனது பிம்பத்தை கண்களில் நிரப்பிக்கொண்டு பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்து விழிகளைத் தாழ்த்தி கொண்டாள். “முட்டாள்தனமா பேசாத ராம். நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். நீ உளறாத, ஒழுங்கா கல்யாண வேலையைப் பாரு!” என்றாள் அதட்டலாய்.
“நோ.. நீ வாயைத் திறந்து என்ன பிரச்சனைன்னு சொல்லாம, நான் இந்த ப்ரபோசலை கன்டினியூ பண்றதா இல்ல!” என்றவனை எரிச்சலாய் நிமிர்ந்து பார்த்தாள்.
“லூசா டா நீ? அங்க உன் அம்மா அப்பா ஆசையா உனக்கு மேரேஜ் ரெடி பண்ணா, நான் பேசலை, புடலங்காயல உப்பில்லைன்னு கல்யாணத்தை நிப்பாட்டுவானாம். ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு எப்படி ராம் உன்னால இப்படி பேச முடியுது? எனக்காக இப்போ மேரேஜ் வேணாம்னு சொல்றவன், கல்யாணமானப் பின்னாடி பொண்டாட்டி வேணாம்னு சொல்வீயா? உனக்கே அது முட்டாள்தனமா தெரியலை?” என கடினக் குரலில் கேட்டாள்.
“நீ வாயைத் திறந்து சொல்லாம, நான் என் முடிவை மாத்தப் போறது இல்ல. காலைல இருந்து தனியாளா இத்தனையும் பார்த்திருக்கீயே, என்னை ஏன் கூப்பிடலை?” என ஆரம்பித்த இடத்திலே வந்து நின்றான்.
“நான் கூப்பிடலைன்னு நீ பார்த்தீயா? நர்ஸ் கிட்டே கேட்டப்போ நீ ஆப்ரேஷன் தியேட்டர்ல இருக்கேன்னு சொன்னாங்க. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். என்னால சமாளிக்க முடிஞ்சது ராம். அதனாலதான் எல்லாத்தையும் நானே பார்த்தேன். சப்போஸ் முடியலைன்னு தோணுச்சுன்னா, கண்டிப்பா உன்னைக் கூப்ட்டிருப்பேன்!” என்றாள் பொய்யும் மெய்யுமாக.
“அப்புறம் ஏன்டி இப்போ உக்காந்து அழுதுட்டு இருக்க?” ஆதங்கமாய் அவன் கேட்டான்.
“ஏன்... அழக்கூடாது? காலைல இருந்து யாரும் இல்லாம தனியாளா அவரைப் பார்த்துக்கிட்டதால நான் ரொம்ப ஸ்ட்ராங்க, அழக்கூடாதுன்னு என் மூஞ்சில எழுதி இருக்கா என்ன? நானும் மனுஷி தானே? எனக்கும் அழுகை, கோபம் எல்லா வரும் ராம். பத்து வயசுல இதோ இந்த மகராசி என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க. அப்போ கூட அப்பான்னு ஒருத்தர் இருந்தார். கஷ்டம் நஷ்டம்னு அவரோட எல்லாத்தையும் பார்த்தேன். இப்போ அவரும் இல்லாம போய்ட்டா, அநாதையா நின்னுடுவோம்னு நினைச்சு அழுறேன். இந்த மனுஷன் இல்லன்னை யாரு இருக்கா என்னக்குன்னு சொல்லிக்கன்னு நினைக்கும் போது அழுகை வருது. அதான் அழுதேன், போதுமா? காரணம் தெரிஞ்சிடுச்சா? இப்போ கிளம்பறீயா?” என தந்தைக்கு கேட்டு விட கூடாதே என மெலிதாய் கத்தினாள். கண்களில் பொலபொலவென கண்ணீர் வடிந்தது. அமைதியாய் அவளருகே அமர்ந்தவன், தோளோடு அணைத்துக் கொண்டான். இவள் அசையாது இறுகிப் போயிருந்தாள்.
“அங்கிள்க்கு அப்படிலாம் எதுவும் ஆகாது காயூ. சின்ன ப்ராப்ளம் தான். அதுவும் சீக்கிரம் சரியாகிடும். உன்னை தனியாள விட்ற அளவுக்கு நான் மோசமானவன் இல்லைடி!” என்றான் அவளைக் குற்றம்சாட்டும் விதமாக. அவன் கையை மெதுவாய் விலக்கியவள், “ப்ம்ச்... நான் உன்னைக் குத்தமா சொல்லலை ராம். நீ என்னோட ஃப்ரெண்ட். எனக்காக நீ வருவன்னு எனக்குத் தெரியும். ஆனால், என்னால முடியும்னு தோணுது. அப்படியே எந்த வழியும் இல்லைன்னா, உன்னைத் தவிர யார்கிட்டேயும் போக மாட்டேன். அது உனக்கே தெரியும் இல்ல?” என்றாள். இப்போது குரல் நிதானத்திற்கு வந்திருந்தது.
“அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன் காயூ. ஆனால், இன்னையோட அந்த எண்ணத்துக்கு ஃபுல் ஸ்டாப் வச்சிடலாம்னு தோணுது!” என்றவன் அவள் முகம், “இதோ... இப்படி யாரும் இல்லைன்னு தனியா உக்கார்ந்து அழுற இந்த மூஞ்சியைப் பார்த்துட்டுப் போனா, எனக்கு இன்னைக்கு தூக்கம் கூட சரியா வராதுடி. ஏன் நான் இல்லையா? தனியா உக்கார்ந்து அழற அளவுக்கு உன்னை விட்டுட்டேனேன்னு குற்ற உணர்வா இருக்கு காயூ!” என்றான் நிதானமாய்.
“உன் மேல தப்பே இல்லாத விஷயத்துக்கு உன்னை நீயே ப்ளேம் பண்ணி தியாகி பட்டம் எதுக்கு வாங்கணும்னு நினைக்கிற ராம்?” என மெலிதாய்க் கடுப்புடன் அவள் கேட்க, அவனின் அலைபேசி இசைத்தது. அதை துண்டித்துவிட்டு பதிலளிக்க விழைந்தான். மீண்டும் அது இசைக்க, “ஃபோன்ல யாரு? போய் பேசிட்டு வா!” என்றாள் இவள்.
“இல்ல... வேணாம்!” என அவன் துண்டிக்க செல்ல, காயத்ரி கைபேசியைப் பறித்திருந்தாள்.
“மை லைஃப்!” என பெயர் வர, சைந்தவி முகப்பு படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். உணர்வுகளற்று சலனமில்லாது அதைப் பார்த்து விழிகளை சிமிட்டி நீரைத் தடுத்தவள், “நீ பேசிட்டு வா ராம். எதுவும் அர்ஜென்டா இருக்கப் போகுது!” என்றாள் துக்கத்தை விழுங்கிய தொண்டையை சரி செய்து.
“இல்ல காயூ, அது டெய்லி இந்த டைம்க்கு பேசி பழகிட்டேன். சோ அவ கால் பண்றா!” என்றவன் பதிலில் காயூவின் மனம் மேலும் மேலும் அடிபட்டுப் போனது.
“பரவாயில்லை, அட்டென்ட் பண்ணி ரெண்டு நிமிஷம் பேசிடு. இல்லன்னா அவங்க என்னவோ ஏதோன்னு பதறிடுவாங்க ராம்!” என்றாள் வெகு நிதானமாக தன் உணர்வுகளை மறைத்து. தலையை அசைத்தவன் அழைப்பை ஏற்று மெதுவாய் நகர்ந்து சென்றான். இவள் அமைதியாய் சுவரை வெறித்திருந்தாள். ஐந்து நிமிடத்தில் வந்தவன், “சைந்து உன்கிட்ட பேசணும்னு சொல்றா!” என்றான் தயங்கி.
எதுவும் கூறாத காயத்ரி கைபேசியை வாங்கி செவியில் பொருத்தினாள். “காயூ, இப்போதான் ராம் சொன்னாரு. அப்பாவுக்கு ஒன்னும் இல்ல. சீக்கிரம் குணமாகிடுவாரு. நீங்க பயப்படாதீங்க!” என்றாள் ஆதரவாக.
“ஹம்ம்... தேங்க் யூ சைந்து!” என இவள் சம்பிரதாயமாகப் பேசினாள்.
“ஹம்ம்... அப்புறம் இன்னொன்னு சொல்லணும். நீங்க ஏதோ டிஸ்டர்ப்டா இருக்கீங்கன்னு சொன்னாரு ரகு. டோன்ட் வொர்ரீ, உங்க ஃப்ரெண்டை உங்ககிட்டே இருந்து பிரிச்சு வில்லி வேலை எல்லாம் பார்க்க மாட்டேன். ஐ கேன் பீல் யூவர் இன்செக்யூரிட்டி. உங்களோட ராம் உங்களுக்குத்தான்!” என்றாள் அவள். காயத்ரி நிமிர்ந்து ஒருமுறை இவனைப் பார்த்தவள், “சைந்து, ஐ யம் ஓகே. நீங்க சொன்ன மாதிரி ஐயம் லிட்டில் பிட் டிஸ்டர்ப்ட். சீக்கிரம் ஓகே ஆகிடுவேன். நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்க!” என்றாள்.
“நோ பார்மாலிட்டீஸ் காயூ, எங்கேஜ்மெண்ட்க்கு முத ஆளா நீங்க வரணும். நான் எக்ஸ்பெக்ட் பண்ணுவேன். உங்க ஃப்ரெண்ட் வேற பேசுற பத்து வார்த்தைல நாலு வார்த்தை என் காயூன்னு சொல்றாரு. அப்போ நீங்க இல்லாம எப்படி பங்கசன் நடக்கும். கண்டிப்பா வாங்க!” என்றாள் புன்னகை முகமாக.
“ஷ்யூர் சைந்தவி, நான் ராம்கிட்டே ஃபோனைக் கொடுக்குறேன்!” என்றவள் அவனிடம் அலைபேசியைக் கொடுத்தாள். சைந்தவயிடம் பேசி அழைப்பைத் துண்டித்தவன் காயத்ரியையே பார்த்தான். அவள் அவன் முகம் பார்க்கவில்லை. மெதுவாய் நடந்து அவளருகே சென்றவன் வயிற்றோடு அவளது தலையை அழுத்தி, “ஐ வில் பீ வித் யூ ஃபார் எவர் காயூ!” என்றவன், “தூங்கு டி எதையும் நினைக்காம!” என்றுவிட்டு அகன்றான். இவள் சென்று கதவை அடைத்துவிட்டு வந்து படுக்கையில் வீழ்ந்தாள். இத்தனை நேரம் வழிந்த கண்ணீர் வற்றிப் போயிருந்தது. அமைதியாய் படுத்திருந்தாள்.
அழுகை வந்ததுதான். ரகுராம் அவளை அணைத்தப் போது கேவி வந்தது. உடைந்தழுது அனைத்தையும் கூறிவிடலாம் என மனம் முந்திக் கொண்டு வந்தது. ஆனாலும் இறுகிப் போய் விட்டாள். அவனில்லாத இந்த ஒரு நாளே வாழ்க்கையின் மிச்ச பக்கங்கள் எப்படியிருக்கும் என கடவுள் காண்பித்திருந்தார். இதே ராம் இருந்திருந்தால் இத்தனை துன்பமெல்லாம் நேர்ந்திருக்காதே. அவன் உடன் இருக்கிறான் என்ற ஒன்றே அவளுக்கு முழு பலத்தையும் அளித்திருக்கும். நாதியற்று அமர்ந்திருந்த பொழுதுகள் கரைந்திருக்கும். அவன் அனைத்தையும் பார்த்திருப்பான்தான். ஆனாலும் இன்றைக்கு அவனை அழைத்தால் வந்துவிடுவான். ஆனால் இது போலொரு சந்தர்ப்பம் மீண்டும் வாய்த்தால் அவனால் வர முடியாது போனால் சத்தியமாய் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கு இதுவே பரவாயில்லை. தந்தையை இனிமேல் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் இப்போது வியாபித்தது. தாயின் புகைப்படத்தை நொஞ்சோடு அழுத்தியவள், “நீதான் நான் வேணாம்னு போய்ட்ட. அவரையாவது ப்ளீஸ் எனக்காக விட்டு வைம்மா. யாரும் இல்லாம அநாதையா இருக்குற அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லம்மா!” என விசும்பிக் கொண்டே உறங்காது விழித்திருந்தாள்.
தொடரும்...