- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 26
(இறுதி அத்தியாயம்)
அதிகாலை ஐந்துமணி,
புரண்டு படுத்த காயத்ரிக்கு முதலில் விழுப்பு தட்டியது. செவியருகே மெல்லிய குறட்டையுடன் கணவனின் மூச்சு காற்று மோத, முகத்தில் மெல்லிய புன்னகைப் படர அவன் புறம் திரும்பினாள். இருவரும் ஒரு போர்வைக்குள் சுருண்டிருந்தாலும் அவன் தலையை மட்டும் இவள்புறம் வைத்து குப்புறப்படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவளுக்குமே இன்னும் சிறிது நேரம் உறங்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
ஆனாலும் காலை ஏழு மணிக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும். நேற்றே இரண்டு மணிநேரம் அனுமதி பெற்றிருந்தாள். இன்றைக்கும் செல்லாவிடில் அது நன்றாக இருக்காது. சொந்தக் காரணங்களுக்காக வேலையில் அலட்சியம் காட்டுவது அவளுக்குப் பிடிக்காது ஒன்று. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவள் சோம்பேறித் தனத்தை உதறிவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.
தலைக்கு குளித்து முடித்தவள் புடவையை உடுத்தும் போது முகத்தில் புன்னகை படர்ந்தது.
“சேலையை விட கவர்ச்சியான ட்ரெஸ் எதுவும் இல்லடி!” என கணவன் நேற்று முணுமுணுத்தது இன்னுமே செவியில் எதிரொலிக்க, “ஸ்வீட் ராஸ்கல்!” என அவனை செல்லமாய் திட்டியபடியே புடவையை உடுத்தி முடித்தாள். பின்னர் மேஜை விசிறி ஒருபுறம் மூலையில் இருந்தது. உபயோகப்படுத்தாமல் நீண்ட நாட்களாக தூசியடைந்து கிடக்க, அதை தூசி தட்டி எடுத்து நாற்காலியை அதற்கு முன்பு போட்டவள் தலையை உலர்த்தினாள். குளித்து வந்தும் உறக்கம் தீரவில்லை. தலை உலரட்டும் என அப்படியே கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள். சிறிது நேரம் கடக்க, ரகுராமிற்கு அறையின் வெளிச்சத்தில் கண்கள் கூசியது.
இமையை முயன்று பிரித்தவன் கண்களை சுழற்ற, அமர்ந்து கொண்டு உறங்கும் மனைவிதான் பார்வையை நிறைத்தாள். வாஞ்சையாய் அவளைப் பார்த்தவன் எழுந்து சென்றான். தலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. தரையில் அமர்ந்து அவளது மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான். காயத்ரி ஒரு நொடி திடுக்கிட்டாலும் கணவன்தான் என உணர்ந்ததும், “அதுக்குள்ள ஏன் எழுந்த ராம்?”. அவன் தலையில் கை வைத்தாள்.
“தூக்கம் போய்டுச்சு டி!” தெளிவில்லாத குரலில் உரைத்தவன் குளித்திருந்தவளின் சுகந்ததை நாசியில் நிரப்பிக் கொண்டான். கையைப் அப்படியே எடுத்து அவளது இடையோடு அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவனின் செய்கையில் அவளுக்கு முறுவல் பிறந்தது.
அவன் தலையைக் கோதியவள், “தூக்கம் வந்தா இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே டா?” என ஆதுரமாய்க் கேட்டாள்.
“இல்ல காயூ... தூக்கம் போய்டுச்சு. நீ லீவ் போடலாம் இல்லை. யூ லுக் வெரி டயர்ட் அண்ட் ஸ்லீப்பீ டூ!” என்றான் தலையை நிமிர்த்தாது.
“இல்லை ராம், இப்போலாம் அடிக்கடி லீவ் அண்ட் பெர்மிஷன் போட்றேன். இன்னைக்கும் லீவ் போட்டா நல்லா இருக்காது டா. மதியம் வந்து தூங்கிக்கிறேன்!” என்றாள் அவன் தலையைக் கோதுவதை நிறுத்தாமல்.
“ஹம்ம்... காயூ, நேத்து நீ கம்பர்டபிளா ஃபீல் பண்ணியா?” அவன் தயங்கியபடியே கேட்க, “தெரியலையே ராம்!” காயூ குறும்பாய்க் கூற, படக்கென நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் கணவன். காயத்ரி உதட்டிலிருந்த சிரிப்பில் இவன் முகத்தில் மென்முறைப்பு படர்ந்தது.
“ஹம்ம்... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு ராம். ஐ ரியலி என்ஜாய்ட் இட்!” இயல்பாய்த் தோளைக் குலுக்கியவளை முறைக்க முயன்றவன் முகத்தில் அவனையும் அறியாது வெட்கப் புன்னகை உதிர்ந்தது.
“பொண்ணாடி நீயெல்லாம்... கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உனக்கு?” எனக் கேட்டவனுக்குப் பதில் கூற வந்தவளின் வாயை எட்டி தன் கரத்தால் மூடியவன், “நீ என்ன சொல்லப் போறன்னு தெரியும். எடக்கு மடக்கா எதாவது சொல்லித் தொலைவ!” மெலிதாய் கண்டித்தான் ரகுராம்.
அவன் கையைத் தட்டிவிட்டவள், “நீதானே டா கேள்வி கேட்ட. பதில் சொல்ல வேணாமா?” வெகு சிரத்தையுடன் கேட்டாள் மனைவி.
“ஆணியே புடுங்க வேணாம். நீ கிளம்பு, நானே உன்னை ட்ராப் பண்றேன்...” என்றான் ரகுராம்.
“வேணாம்... அப்புறம் மதியம் ஆட்டோல வரணும் டா. அது ஒத்து வராது, நானே போய்க்கிறேன்!” என்றவள் எழுந்து சென்று துண்டை ஜன்னல் கதவில் காய வைத்தாள்.
“இல்ல காயூ, மதியம் நானே உன்னை பிக்கப் பண்ண வரேன். இன்னைக்கு நான் ஆஃப்!” பதிலளித்தவனை யோசனையாக பார்த்தவள், “வீக் டேய்ஸ்ல உனக்கென்ன லீவு?” எனக் கேட்டாள்.
கையைத் தூக்கி சோம்பல் முறைத்தவன், “செம்ம டயர்ட் காயூ. அதான் லீவ் சொல்லிட்டேன்!” உடலை வளைத்தவனைப் பார்த்து ஏதோ கூற வந்தவள் உதட்டுக்குள் புன்னகையை அடக்க, அவள் மனதிற்குள் நினைத்ததை ஊகித்தவன், “அடிங்... கொழுப்பு கூடிப் போச்சு!” என அடிக்க வந்தவனிடமிருந்து தப்பி குடுகுடுவென வெளியே ஓடிவிட்டாள் பெண். இவனுக்கு முகத்திலிருந்த புன்னகை வாடவேயில்லை.
காயத்ரி உண்டு முடித்து வேலைக்குத் தாயாராக, ரகுராம் இருசக்கர வாகனத்தில் அவளை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு வந்தான். சிறிது நேரம் தொலைக்காட்சியில் பொழுதை போக்கிவிட்டு உண்டுவிட்டு குட்டியாய் ஒரு தூக்கம் போட்டான். மணி பதினொன்றைத் தொட, குளித்துவிட்டு வந்தவன் காயத்ரியை அழைக்க செல்லலாம் என எழ, மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அவன் இருப்பு அங்கே அவசியம் என்பதால் மறுத்துக் கூற வந்தவன், “ஓகே, ஆஃப் ஹன் அவர்ல அங்க இருப்பேன் நான்!” எனத் தாயிடம் கூறிவிட்டு கிளம்பினான். வழியிலே காயத்ரிக்கும் அழைத்தான்.
“ராம்... ஒரு ட்வென்டி மினிட்ஸ் கழிச்சு வா டா!” அவள் கூற, நெற்றியை தேய்த்தவன், “காயூ, சாரி... ஒரு அவசர கேஸ்டி. நான் தான் ஹேண்டில் பண்றேன். சோ என்னோட ப்ரசென்ஸ் அங்க ரொம்ப இம்பார்டெண்ட் டி!” என்றான் தயக்கமாய்.
“சரி ராம், இட்ஸ் ஓகே விடு. நான் ஆட்டோல வீட்டுக்குப் போய்க்கிறேன்!” அவள் கூற, “கோபம் இல்லைல காயூ?” என மெல்லிய சங்கடத்துடன் கேட்டான் இவன்.
“ப்ம்ச்... அதெல்லாம் ஒன்னும் இல்ல ராம். நீ முதல்ல பேஷண்டை பாரு. எனக்கென்ன வீட்டுக்கு வழியா தெரியாது. நான் போய்க்கிறேன் டா. எதையும் யோசிக்காத. வொர்க்ல கான்சென்ரேட் பண்ணு!” என்றவளின் குரலில் சமாதானமடைந்தவன் மருத்துவமனையை நோக்கி நகர்ந்தான்.
காயத்ரி வேலை முடிந்ததும் தானியில் வீடு வந்து சேர்ந்தாள். முதலில் தந்தையைப் போய் பார்த்துவிட்டு பின்னரே இங்கே வந்தாள். கௌதமியுடன் சேர்ந்து உண்டுவிட்டு படுக்கையில் விழுந்ததுதான் நினைவு இருந்தது. அடித்தது போட்டது போல உறங்கினாள்.
மாலை ஆறு மணிக்குத்தான் விழிப்பு தட்டியது. வெளியே கௌதமி சாமி கும்பிடுவது தெரிய எழுந்து கலைந்த முடியை சரி செய்து முகம் கழுவிவிட்டு அவரோடு சென்று சாமி கும்பிட்டாள். பின்னர் மாமியாரும் மருமகளும் இரவு உணவை சமைத்து முடித்தனர். தேவராஜ் வந்துவிட்டார். ரகுராம் வரத் தாமதமாகும் என தாயிடமும் தாரத்திடமும் தனித் தனியாக அழைத்துக் கூறிவிட்டான்.
அவர்கள் மூவரும் உண்டு முடித்தனர். காயத்ரி ராம் வந்ததும், தான் உணவைப் பரிமாறுவதாகக் கூறி கௌதமியை உறங்கச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். மதியம் நீண்ட நேரம் உறங்கியதால் இப்போது தூக்கம் வரவில்லை. ஒரு புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து வாசிக்கத் தொடங்கினாள். ரகுராம் வர இரவு பத்தானது. தன்னிடம் உள்ள மற்றொரு சாவியை வைத்து வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அறைக்குள்ளே அவனுடைய காலடித்தடங்கள் பதியவும் நிமிர்ந்த காயூ, “வா ராம்!” என்றாள் புன்னகைத்து. அவளைக் கண்டதும் சோர்வாய் இருந்த முகத்தில் மெல்லிய முறுவல் பிறந்தது.
“ப்ரெஷாகிட்டு வா ராம், சாப்பிடு முதல்ல. பார்க்கவே டயர்டா தெரியுற!” என்றவாறே கையிலிருந்த புத்தகத்தை அப்படியே மேஜை மீது கவிழ்த்தி வைத்தாள்.
“ஃபைவ் மினிட்ஸ் காயூ!” என்றவன் தன்னை சுத்தம் செய்து உடை மாற்றி வர, காயூ கையிலெடுத்திருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு திரும்பும் முன்னே கணவன் அவள் மீது சரிந்து மார்பில் தலையைப் புதைத்துப் படுத்துக் கொண்டான். இவளுக்கு முகம் மென்மையானது.
அவனது முன்னெற்றியில் குனிந்து இதழ் பதித்தவள், “என்ன ராம்?” என்றாள் வாஞ்சையுடன்.
“ஹம்ம்... இன்னைக்கு க்ரிட்டிகல் கேஸ் காயூ. உட்கார நேரமில்லாம அதுல மாட்டிக்கிட்டோம். செம்ம டயர்ட்!” என்றான்.
“சரி, கேஸ் சக்ஸஸ் தானே?” அவள் தலையைக் கோதிபடியே கேட்க, “யெஸ்... சக்ஸஸ்தான். எல்லாம் முடிச்சி டெஸ்ட் எடுத்து கன்பார்ம் பண்ணிட்டு வர டைம் ஆகிடுச்சு!” முகத்தை மறுபுறம் திருப்பி அவள் விழிகளைப் பார்த்தவாறு உரைத்தவன் அணைப்பைத் தளர்த்தவில்லை.
“சரி... வா, வந்து சாப்ட்டு தூங்கலாம்!” என எழப் போனவளை இறுக்கி அணைத்தவன், “நோ காயூ...” என்றான்.
“என்ன டா?” சுகமாய் சலித்தபடியே அவன் முன்னெற்றியில் படர்ந்த முடியைக் கோதி கணவனின் முகம் பார்த்தாள்.
அவள் விழிகளை காணத் திராணியற்று அவளுள் புதைந்தவன், “வேலைல கன்செட்ரேஷன் மிஸ் ஆகுது காயூ. நீதான் கண்ணு முன்னாடி வந்து இம்சை பண்ற டி!” என்றான் முனங்கலாக. இவளுக்கு நொடியில் சிரிப்பு மலர்ந்தது.
“அதொன்னும் இல்ல ராம்!” என இழுத்தவள், “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு சொல்வாங்க இல்ல, அதான் இது. ஹம்ம்... ஒரு தொன்னூறு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்!” என்றாள் நமுட்டுச் சிரிப்புடன். அவளை நிமிர்ந்து முறைத்தான் கணவன்.
“அப்படிலாம் போகாது காயூ!” சிலிர்த்தவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவள், “நீ முதல்ல வந்து சாப்பிடு டா. அப்புறம் இதை பத்தி டிபேட் வச்சுக்கலாம்!” என்றாள் ஆதுரமாக.
அவள் கையைப் பிடித்து அதில் முத்தமிட்டவன், “பசிக்குது... ஆனால் பசிக்கலை!” என்றவன் கொஞ்சம் நகர்ந்து அவளது கழுத்தில் முகம் புதைத்து மென்மையாய் முத்தமிட்டான். காயத்ரிக்கு சிரிப்பு வந்தது.
“சாப்ட்டு வரலாம் ராம்!” அதட்டியவளின் வார்த்தைகளை ஆறடி ஆண்மகன் தன் உதடுகளைக் கொண்டு களவாடியிருந்தான். நேற்றைக்கு போல வேட்கையும் வேகமும் இல்லை. இன்றைக்கு பொறுமையும் விவேகமுமாய் மனைவியைக் கொண்டாடினான்.
“காயூ!” என நொடிக்கு நூறு முறை காயத்ரி ஜெபம்தான். கோபமாய், பாசமாய், அதட்டலாய், கவலையாய் என எத்தனையோ உணர்வுகளில் காயூவென அழைத்திருக்கிறான். ஆனால் காதலில் பிதற்றி மோகத்தில் திளைத்து வந்த இந்த காயூ இவளுக்குப் புதிது. வெட்கமாய் வந்தாலும் அவனை ஏற்றிருந்தாள். குளிரூட்டியின் குளிருக்கு மனைவின் உடல் சூட்டில் இதம் கண்டு பூனைக்குட்டியாய் சுருண்டு அவளை உரசியபடியே படுத்துக் கொண்டான் கணவன்.
அவன் முதுகில் தட்டிய காயத்ரி, “ரிலாக்ஸ் ராம்... ரிலாக்ஸ்!” என்றாள்.
“ஹம்ம்...” என்ற முனங்கலுடன் அவளை அட்டைப் போல ஒட்டிக் கொண்டான்.
“காயூ, உன்னை மாதிரியே அழகா ஒரு கேர்ள் பேபி பெத்துக்கலாம் டி!” என்றான் அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசத்தை நாசியில் நிரப்பியபடி.
அவனையே ஆசையாக பார்த்தவள், “வொய் நாட்... மூனு குழந்தைங்கப் பெத்துக்கலாம் ராம்!” என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சீக்கிரம் பெத்துக்கலாம் காயூ. டிலே பண்ண வேணாம்!” என்றான் எதிர்பார்ப்பாய். இருவருமே ஒற்றைக் குழந்தையாய் வளர்ந்துவிட்ட காரணத்தினால் குழந்தை வேண்டும் என்று மனதில் ஏக்கம் மேலெழுந்தது.
“ப்ம்ச்... இப்போதானே டா ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம். உடனே எப்படி பேபி வரும் டாக்டரே. பொறுமை அவசியம்!” என்றாள் கண்ணை சிமிட்டி.
அவனுக்கு உதடுகளில் புன்னகை ஏற, “குடிகாரி...” என்றான் செல்லமாய்.
“ஹம்ம்... சரி, பசிக்கலையா டா உனக்கு? வரும்போது எதுவும் சாப்ட்டு வந்தீயா?” என யோசனையாகக் கேட்டாள்.
“அப்போ பசி தெரியலை. பட் இப்போ செம்மையா பசி வயித்தைக் கிள்ளுது!” வயிற்றைத் தடவினான் கணவன். அவனை முறைத்தவள் எழுந்து தன்னை சரிப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் செல்ல, இவனும் பின்னே சென்றான். குருமாவை சூடு செய்தவள் தட்டில் மூன்று இடியாப்பத்தோடு பரிமாற, அவன் அடுப்படி திண்டில் ஏறியமர்ந்து உண்டான். காயத்ரி அவனுக்கு என்ன வேண்டும் என முகம் பார்த்துப் பரிமாற, இவன் காதலாய் மனைவியை நோக்கினான்.
“வேற யாரை நான் மேரேஜ் பண்ணி இருந்தாலும் இந்த கெமிஸ்ட்ரி, இந்த லவ் எல்லாம் சாத்தியமே இல்லைல காயூ?” எனக் கேட்டவனிடம் புருவத்தை உயர்த்திப் புன்னகைத்தாள் மனைவி. பதிலில்லை அவளிடம்.
“நீ எனக்கு எல்லா வகையிலயும் ஒரு குட் கம்பெனியன் தெரியுமா? நம்ப ஃபர்ஸ்ட் மீட்ல இருந்து இப்போ வரை நான் அதை உணர்ந்திருக்கேன் காயூ. மோர் ஓவர் இந்த சிடுமூஞ்சி காயத்ரியோட பல பரிமாணத்தை, இந்த உலகத்துக்கு காட்ட முடியாத நிறைய விஷயம் எனக்கே எனக்குன்னு நினைக்கும் போதே எனக்கு சந்தோஷமா இருக்கு டி. மேரேஜ் பண்ணும்போது எனக்கு ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. உன்னை ஃப்ரெண்டா மட்டுமே பார்க்குறேன். பட் எப்படி உன் கூட லைஃபை லீட் பண்ண போறேனோ? உன்னோட எக்ஸ்பெக்டேஷன் நிறைய இருக்கலாம். என்னால ஃபுல் பில் பண்ண முடியுமான்னு தோணிட்டே இருந்தது. பட் இந்த ரெண்டு நாளா உன்னைப் பார்ததாலே கண்ட கண்ட நினைப்பா இருக்கு டி!” கடைசி வார்த்தையை மட்டும் முணுமுணுத்துவிட்டு மனைவி முகம் பார்க்கத் தயங்கி குனிந்து இடியாப்பத்தை வாயில் அடைத்தவனைப் பார்த்து இவளுக்கு உதடுகளில் புன்னகை ஏறின.
“வரும் டா... வரும்!” வலிக்காதவாறு அவன் காதை திருகியவள், “ராம் என்னோட அதிகபட்ச எதிர்பார்ப்பே என்னென்னு தெரியுமா டா?” எனக் கேட்டாள். நிமிர்ந்து மனைவி முகத்தைப் பார்த்தவன் தெரியாது என மென்மையாய் தலையை அசைத்தான்.
“உன் கூட இருக்கணும், எனக்கே எனக்குன்னு அக்கறையா, அன்பா இருக்க இந்த ராமோட காதல், கோபம், மோகம்னு எல்லாமே எனக்கு மட்டும் சொந்தமா இருக்கணும். வேற யாரும் உரிமை கொண்டாட கூடாது. நீ என் ராமா இருந்தா போதும். இதுதான் என்னோட அதிகபட்ச எக்ஸ்பெக்டேஷன்!” என்றாள் மெல்லிய முறுவலுடன்.
அவளைப் பார்த்து புன்னகைத்து கையைக் கழுவியவன், “காயூ, கிட்ட வாயேன்!” என அழைத்தான். அவள் என்னவென்ற யோசனையுடன் அவன் அருகே செல்ல நெற்றி முட்டி அவள் முன்னுச்சியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “ஐ லவ் யூ காயூ. உன் அளவுக்கு என்னால காதலிக்க முடியுமான்னு தெரியலை. பட் இருந்தாலும் என் காயூவை நான் நல்லா பார்த்துப்பேன்!” என்றான்.
அவனைப் பார்த்து சிரித்த காயத்ரி, “என் ராம் அளவுக்கு யாராலுயும் என்னைக் கேர் பண்ண முடியாது டா மடையா!” என அவன் தலையில் தட்டி புன்னகையுடன் நடந்தவளின் காலடித் தடத்தைப் பின்பற்றி நடந்தவன் அறையிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான். உண்டவுடன் உறக்கம் வரவில்லை.
“என்ன தூக்கம் வரலையா டா?” எனக் கேட்டுக் கொண்டே காயத்ரி மெத்தையில் விழுந்தாள். அவன் புறம் திரும்பி முகத்தைப் பார்க்குமாறு படுத்தாள்.
“இல்ல காயூ... இப்போதானே சாப்டேன். கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கேன்!” என்றவனையே பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி சிறிது நேரத்திலே கண்ணயர்ந்திருக்க, ரகுராம் எழுந்து வந்து மனைவியை அணைத்துப் படுத்தான். அவன் இருப்பை உணர்ந்தவள் அவன்புறம் திரும்ப, அவளைப் பத்திரமாய் தன்னுள் பத்திரப்படுத்தினான் கணவன்.
சில பல வருடங்களுக்குப் பிறகு
முத்தம் தீர்ந்து, மோகம் மோட்சம் அடைந்து, காமம் கரைந்தப் பின்னும் கரை காணாத காதல் பொழுதுகள் அவை. சோம்பேறித் தனத்தோடு பிண்ணிப் பிணைந்திருந்த ஞாயிறை பிரியத்தோடு வரவேற்கும் காலை பொழுது அவ்வளவே. அதிகாலை ஆறு ஏழெல்லாம் எல்லாம் கனவுகள் நீளும் ஆழ்ந்த உறக்கத்திற்கு பாத்திப்பட்டவை. அன்றைக்கு அந்த வீட்டின் இளவரசி ஸ்பூர்த்தியின் குரல்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
“ப்பா... திஸ் இஸ் நாட் வொய்லட். திஸ் இஸ் லாவண்டர்!” என சிணுங்கிய மகளின் குண்டு கன்னத்தில் முத்தமிட்ட ரகுராம், “சாரிடா ஸ்பூர்த்தி, வேற ப்ரிஞ்சால் வரையலாம்!” என மகளை சமாதானம் செய்தான்.
“ஹ்கூம்... போங்க!” சிலுப்பியபடியே கூந்தலை பின்னிழுத்தவள், “இந்த லேடிஸ் பிங்கருக்காவது ஒழுங்கா கலர் கொடுங்கப்பா!” என தந்தையை முறைத்து பச்சை வண்ணத்தை தூரிகையில் எடுத்து அவனிடம் நீட்டினாள். அதைக் கொடுக்கும் போதே இலவச இணைப்பாக அவனது கன்னத்தில் பச்சை வண்ணம் முத்தமிட்டிருந்தது.
ரகுராம் சிரத்தையாக மகள் சொன்ன வேலையை செய்ய, அறைக்குள்ளிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கட்டிலில் காலை நீட்டியிருந்த காயத்ரி அவர்களைத்தான் பார்த்திருந்தாள். உதட்டில் சிரிப்பு நீள, வலது கையில் ஒரு கோப்பை குளம்பி இருந்தது.
“ஹம்ம்... உனக்கு யாருப்பா டாக்டர் வேலை கொடுத்தா. ஒழுங்கா கலர் கூட பண்ணத் தெரியலை. போப்பா...” என ஸ்பூர்த்தி தந்தையிடம் கோபம் கொள்ள, காயத்ரி படக்கென்று சிரித்திருந்தாள்.
அதில் கணவன் அவளைத் திரும்பி முறைத்து கையிலிருந்த மெழுகு பூச்சை அவள் மீது எறிந்தான். பின்னர் மீண்டும் புகார் வாசிக்க தொடங்கிய குழந்தையை சமாதானம் செய்து இருவரும் வண்ணம் தீட்டி முடித்திருக்க, “நான் பாட்டிக்கிட்டே காட்டீட்டு வரேன் பா!” என சின்னவள் எழுந்து ஓட, ரகுராம் கன்னத்திலிருந்த வண்ணத்தை துடைத்துக் கொண்டே மனைவிக்கு அருகே வந்தமர்ந்தான்.
“ஒழுங்கா கலரிங் கூட பண்ண தெரியாதவனுக்கு எல்லாம் யாருப்பா டாக்டர் வேலை குடுத்தது!” நமுட்டுச் சிரிப்புடன் கேட்ட மனைவியை முறைத்துக் கொண்டே அவளது மடியில் படுத்தான். இடையில் அவளது ஏழு மாத வயிறு இடிக்க, கொஞ்சம் நகர்ந்து தொடையில் தலை வைத்தவன், “காயூ, செகண்ட் ரிலீஸ் இப்போ பண்றோம். தேர்ட் எப்போ பண்ண போறோம்?” என வெகு சிரத்தையாகக் கேட்டான்.
அவனை முறைத்த காயத்ரி, “முதல்ல இதைப் பெத்துக்குறேன். தென் அடுத்ததைப் பார்க்கலாம்!” என்றாள்.
“ப்பா...” என மகள் குரல் கொடுத்துக் கொண்டே அறையை நோக்கி ஓடி வருவதை உணர்ந்த ரகுராம் மனைவி மடியிலிருந்து எழப் பார்க்க, “ராம்... ஒழுங்கா படுக்குற நீ? அப்படியென்ன அவளுக்கு அடம்? ஹம்ம்? இப்போ மட்டும் நீ எழுந்திருச்ச, அவ்வளோதான்!” என்றாள் மிரட்டலாய்.
அவன் அசையாது அவளது மடியில் படுத்திருக்க, “ப்பா... பாட்டீ சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க!” என அனைத்தையும் நுழைந்தவள் தந்தை தாயின் மடியில் படுத்திருப்பதை பார்த்ததும் உதட்டை பிதுக்கினாள்.
“டேடி... என் மடியில மட்டும் தான் படுப்பேன்னு ப்ராமிஸ் பண்ணீங்க. உங்களுக்கு மறந்துடுச்சா?” என மகள் கண்ணைக் கசக்கி முகத்தை சுருக்கவும், படக்கென மனைவி மடியிலிருந்து எழுந்தவன், “நோ..நோ அப்பா ஸ்பூர்த்தி பாப்பா மடியிலதான் படுப்பேன்!” என அவளைத் தூக்கிக் கொண்டு வந்து அமர வைத்து அவள் மடிமீது படுத்தான்.
மகள் தாயைப் பார்த்துப் பற்கள் தெரிய புன்னகைக்க, இடையில் கை வைத்து மெதுவாய் எழுந்து நின்றவள், கணவனை முறைத்துப் பார்க்க, அவன் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
“நைட்டு காயூ காயூன்னுட்டு என்னை உரசிட்டு வந்து படு டா. அப்ப உன்னை பார்த்துக்குறேன். இன்னைக்கு நீ தரையிலதான் படுக்கணும்!” என அவள் கடுகடுத்துவிட்டு செல்ல, “நைட்டு நீ என்னைக் கீழே படுக்க வச்சுட்டா என் பேரை மாத்திக்கிறேன் டி குடிகாரி!” என்றவனின் பேச்சில் இவளுக்கு வெட்கம் வர, உதட்டுக்குள் எதையோ முணுமுணுத்துவிட்டு நகன்றவளை முகம் முழுக்க சிரிப்புடன் ஆசையாய்ப் பார்த்திருந்தான் கணவன். அவர்கள் வாழ்க்கையின் வசந்த பக்கங்களும் அவன் புன்னகையைப் போல இன்னுமின்னும் நீண்டு கிடந்தது.
*சுபம்*
மறக்காம எல்லாரும் கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ். அடுத்த கதை "சர்வமும் அவள் மயம்!" அடுத்த வாரத்துல ஒரு நல்ல நாள்ல தொடங்கலாம்
🫶

அதிகாலை ஐந்துமணி,
புரண்டு படுத்த காயத்ரிக்கு முதலில் விழுப்பு தட்டியது. செவியருகே மெல்லிய குறட்டையுடன் கணவனின் மூச்சு காற்று மோத, முகத்தில் மெல்லிய புன்னகைப் படர அவன் புறம் திரும்பினாள். இருவரும் ஒரு போர்வைக்குள் சுருண்டிருந்தாலும் அவன் தலையை மட்டும் இவள்புறம் வைத்து குப்புறப்படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவளுக்குமே இன்னும் சிறிது நேரம் உறங்க வேண்டும் என்ற எண்ணம்தான்.
ஆனாலும் காலை ஏழு மணிக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும். நேற்றே இரண்டு மணிநேரம் அனுமதி பெற்றிருந்தாள். இன்றைக்கும் செல்லாவிடில் அது நன்றாக இருக்காது. சொந்தக் காரணங்களுக்காக வேலையில் அலட்சியம் காட்டுவது அவளுக்குப் பிடிக்காது ஒன்று. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவள் சோம்பேறித் தனத்தை உதறிவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.
தலைக்கு குளித்து முடித்தவள் புடவையை உடுத்தும் போது முகத்தில் புன்னகை படர்ந்தது.
“சேலையை விட கவர்ச்சியான ட்ரெஸ் எதுவும் இல்லடி!” என கணவன் நேற்று முணுமுணுத்தது இன்னுமே செவியில் எதிரொலிக்க, “ஸ்வீட் ராஸ்கல்!” என அவனை செல்லமாய் திட்டியபடியே புடவையை உடுத்தி முடித்தாள். பின்னர் மேஜை விசிறி ஒருபுறம் மூலையில் இருந்தது. உபயோகப்படுத்தாமல் நீண்ட நாட்களாக தூசியடைந்து கிடக்க, அதை தூசி தட்டி எடுத்து நாற்காலியை அதற்கு முன்பு போட்டவள் தலையை உலர்த்தினாள். குளித்து வந்தும் உறக்கம் தீரவில்லை. தலை உலரட்டும் என அப்படியே கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள். சிறிது நேரம் கடக்க, ரகுராமிற்கு அறையின் வெளிச்சத்தில் கண்கள் கூசியது.
இமையை முயன்று பிரித்தவன் கண்களை சுழற்ற, அமர்ந்து கொண்டு உறங்கும் மனைவிதான் பார்வையை நிறைத்தாள். வாஞ்சையாய் அவளைப் பார்த்தவன் எழுந்து சென்றான். தலையில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. தரையில் அமர்ந்து அவளது மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான். காயத்ரி ஒரு நொடி திடுக்கிட்டாலும் கணவன்தான் என உணர்ந்ததும், “அதுக்குள்ள ஏன் எழுந்த ராம்?”. அவன் தலையில் கை வைத்தாள்.
“தூக்கம் போய்டுச்சு டி!” தெளிவில்லாத குரலில் உரைத்தவன் குளித்திருந்தவளின் சுகந்ததை நாசியில் நிரப்பிக் கொண்டான். கையைப் அப்படியே எடுத்து அவளது இடையோடு அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவனின் செய்கையில் அவளுக்கு முறுவல் பிறந்தது.
அவன் தலையைக் கோதியவள், “தூக்கம் வந்தா இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே டா?” என ஆதுரமாய்க் கேட்டாள்.
“இல்ல காயூ... தூக்கம் போய்டுச்சு. நீ லீவ் போடலாம் இல்லை. யூ லுக் வெரி டயர்ட் அண்ட் ஸ்லீப்பீ டூ!” என்றான் தலையை நிமிர்த்தாது.
“இல்லை ராம், இப்போலாம் அடிக்கடி லீவ் அண்ட் பெர்மிஷன் போட்றேன். இன்னைக்கும் லீவ் போட்டா நல்லா இருக்காது டா. மதியம் வந்து தூங்கிக்கிறேன்!” என்றாள் அவன் தலையைக் கோதுவதை நிறுத்தாமல்.
“ஹம்ம்... காயூ, நேத்து நீ கம்பர்டபிளா ஃபீல் பண்ணியா?” அவன் தயங்கியபடியே கேட்க, “தெரியலையே ராம்!” காயூ குறும்பாய்க் கூற, படக்கென நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் கணவன். காயத்ரி உதட்டிலிருந்த சிரிப்பில் இவன் முகத்தில் மென்முறைப்பு படர்ந்தது.
“ஹம்ம்... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு ராம். ஐ ரியலி என்ஜாய்ட் இட்!” இயல்பாய்த் தோளைக் குலுக்கியவளை முறைக்க முயன்றவன் முகத்தில் அவனையும் அறியாது வெட்கப் புன்னகை உதிர்ந்தது.
“பொண்ணாடி நீயெல்லாம்... கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உனக்கு?” எனக் கேட்டவனுக்குப் பதில் கூற வந்தவளின் வாயை எட்டி தன் கரத்தால் மூடியவன், “நீ என்ன சொல்லப் போறன்னு தெரியும். எடக்கு மடக்கா எதாவது சொல்லித் தொலைவ!” மெலிதாய் கண்டித்தான் ரகுராம்.
அவன் கையைத் தட்டிவிட்டவள், “நீதானே டா கேள்வி கேட்ட. பதில் சொல்ல வேணாமா?” வெகு சிரத்தையுடன் கேட்டாள் மனைவி.
“ஆணியே புடுங்க வேணாம். நீ கிளம்பு, நானே உன்னை ட்ராப் பண்றேன்...” என்றான் ரகுராம்.
“வேணாம்... அப்புறம் மதியம் ஆட்டோல வரணும் டா. அது ஒத்து வராது, நானே போய்க்கிறேன்!” என்றவள் எழுந்து சென்று துண்டை ஜன்னல் கதவில் காய வைத்தாள்.
“இல்ல காயூ, மதியம் நானே உன்னை பிக்கப் பண்ண வரேன். இன்னைக்கு நான் ஆஃப்!” பதிலளித்தவனை யோசனையாக பார்த்தவள், “வீக் டேய்ஸ்ல உனக்கென்ன லீவு?” எனக் கேட்டாள்.
கையைத் தூக்கி சோம்பல் முறைத்தவன், “செம்ம டயர்ட் காயூ. அதான் லீவ் சொல்லிட்டேன்!” உடலை வளைத்தவனைப் பார்த்து ஏதோ கூற வந்தவள் உதட்டுக்குள் புன்னகையை அடக்க, அவள் மனதிற்குள் நினைத்ததை ஊகித்தவன், “அடிங்... கொழுப்பு கூடிப் போச்சு!” என அடிக்க வந்தவனிடமிருந்து தப்பி குடுகுடுவென வெளியே ஓடிவிட்டாள் பெண். இவனுக்கு முகத்திலிருந்த புன்னகை வாடவேயில்லை.
காயத்ரி உண்டு முடித்து வேலைக்குத் தாயாராக, ரகுராம் இருசக்கர வாகனத்தில் அவளை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு வந்தான். சிறிது நேரம் தொலைக்காட்சியில் பொழுதை போக்கிவிட்டு உண்டுவிட்டு குட்டியாய் ஒரு தூக்கம் போட்டான். மணி பதினொன்றைத் தொட, குளித்துவிட்டு வந்தவன் காயத்ரியை அழைக்க செல்லலாம் என எழ, மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அவன் இருப்பு அங்கே அவசியம் என்பதால் மறுத்துக் கூற வந்தவன், “ஓகே, ஆஃப் ஹன் அவர்ல அங்க இருப்பேன் நான்!” எனத் தாயிடம் கூறிவிட்டு கிளம்பினான். வழியிலே காயத்ரிக்கும் அழைத்தான்.
“ராம்... ஒரு ட்வென்டி மினிட்ஸ் கழிச்சு வா டா!” அவள் கூற, நெற்றியை தேய்த்தவன், “காயூ, சாரி... ஒரு அவசர கேஸ்டி. நான் தான் ஹேண்டில் பண்றேன். சோ என்னோட ப்ரசென்ஸ் அங்க ரொம்ப இம்பார்டெண்ட் டி!” என்றான் தயக்கமாய்.
“சரி ராம், இட்ஸ் ஓகே விடு. நான் ஆட்டோல வீட்டுக்குப் போய்க்கிறேன்!” அவள் கூற, “கோபம் இல்லைல காயூ?” என மெல்லிய சங்கடத்துடன் கேட்டான் இவன்.
“ப்ம்ச்... அதெல்லாம் ஒன்னும் இல்ல ராம். நீ முதல்ல பேஷண்டை பாரு. எனக்கென்ன வீட்டுக்கு வழியா தெரியாது. நான் போய்க்கிறேன் டா. எதையும் யோசிக்காத. வொர்க்ல கான்சென்ரேட் பண்ணு!” என்றவளின் குரலில் சமாதானமடைந்தவன் மருத்துவமனையை நோக்கி நகர்ந்தான்.
காயத்ரி வேலை முடிந்ததும் தானியில் வீடு வந்து சேர்ந்தாள். முதலில் தந்தையைப் போய் பார்த்துவிட்டு பின்னரே இங்கே வந்தாள். கௌதமியுடன் சேர்ந்து உண்டுவிட்டு படுக்கையில் விழுந்ததுதான் நினைவு இருந்தது. அடித்தது போட்டது போல உறங்கினாள்.
மாலை ஆறு மணிக்குத்தான் விழிப்பு தட்டியது. வெளியே கௌதமி சாமி கும்பிடுவது தெரிய எழுந்து கலைந்த முடியை சரி செய்து முகம் கழுவிவிட்டு அவரோடு சென்று சாமி கும்பிட்டாள். பின்னர் மாமியாரும் மருமகளும் இரவு உணவை சமைத்து முடித்தனர். தேவராஜ் வந்துவிட்டார். ரகுராம் வரத் தாமதமாகும் என தாயிடமும் தாரத்திடமும் தனித் தனியாக அழைத்துக் கூறிவிட்டான்.
அவர்கள் மூவரும் உண்டு முடித்தனர். காயத்ரி ராம் வந்ததும், தான் உணவைப் பரிமாறுவதாகக் கூறி கௌதமியை உறங்கச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். மதியம் நீண்ட நேரம் உறங்கியதால் இப்போது தூக்கம் வரவில்லை. ஒரு புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து வாசிக்கத் தொடங்கினாள். ரகுராம் வர இரவு பத்தானது. தன்னிடம் உள்ள மற்றொரு சாவியை வைத்து வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அறைக்குள்ளே அவனுடைய காலடித்தடங்கள் பதியவும் நிமிர்ந்த காயூ, “வா ராம்!” என்றாள் புன்னகைத்து. அவளைக் கண்டதும் சோர்வாய் இருந்த முகத்தில் மெல்லிய முறுவல் பிறந்தது.
“ப்ரெஷாகிட்டு வா ராம், சாப்பிடு முதல்ல. பார்க்கவே டயர்டா தெரியுற!” என்றவாறே கையிலிருந்த புத்தகத்தை அப்படியே மேஜை மீது கவிழ்த்தி வைத்தாள்.
“ஃபைவ் மினிட்ஸ் காயூ!” என்றவன் தன்னை சுத்தம் செய்து உடை மாற்றி வர, காயூ கையிலெடுத்திருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு திரும்பும் முன்னே கணவன் அவள் மீது சரிந்து மார்பில் தலையைப் புதைத்துப் படுத்துக் கொண்டான். இவளுக்கு முகம் மென்மையானது.
அவனது முன்னெற்றியில் குனிந்து இதழ் பதித்தவள், “என்ன ராம்?” என்றாள் வாஞ்சையுடன்.
“ஹம்ம்... இன்னைக்கு க்ரிட்டிகல் கேஸ் காயூ. உட்கார நேரமில்லாம அதுல மாட்டிக்கிட்டோம். செம்ம டயர்ட்!” என்றான்.
“சரி, கேஸ் சக்ஸஸ் தானே?” அவள் தலையைக் கோதிபடியே கேட்க, “யெஸ்... சக்ஸஸ்தான். எல்லாம் முடிச்சி டெஸ்ட் எடுத்து கன்பார்ம் பண்ணிட்டு வர டைம் ஆகிடுச்சு!” முகத்தை மறுபுறம் திருப்பி அவள் விழிகளைப் பார்த்தவாறு உரைத்தவன் அணைப்பைத் தளர்த்தவில்லை.
“சரி... வா, வந்து சாப்ட்டு தூங்கலாம்!” என எழப் போனவளை இறுக்கி அணைத்தவன், “நோ காயூ...” என்றான்.
“என்ன டா?” சுகமாய் சலித்தபடியே அவன் முன்னெற்றியில் படர்ந்த முடியைக் கோதி கணவனின் முகம் பார்த்தாள்.
அவள் விழிகளை காணத் திராணியற்று அவளுள் புதைந்தவன், “வேலைல கன்செட்ரேஷன் மிஸ் ஆகுது காயூ. நீதான் கண்ணு முன்னாடி வந்து இம்சை பண்ற டி!” என்றான் முனங்கலாக. இவளுக்கு நொடியில் சிரிப்பு மலர்ந்தது.
“அதொன்னும் இல்ல ராம்!” என இழுத்தவள், “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்னு சொல்வாங்க இல்ல, அதான் இது. ஹம்ம்... ஒரு தொன்னூறு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்!” என்றாள் நமுட்டுச் சிரிப்புடன். அவளை நிமிர்ந்து முறைத்தான் கணவன்.
“அப்படிலாம் போகாது காயூ!” சிலிர்த்தவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டவள், “நீ முதல்ல வந்து சாப்பிடு டா. அப்புறம் இதை பத்தி டிபேட் வச்சுக்கலாம்!” என்றாள் ஆதுரமாக.
அவள் கையைப் பிடித்து அதில் முத்தமிட்டவன், “பசிக்குது... ஆனால் பசிக்கலை!” என்றவன் கொஞ்சம் நகர்ந்து அவளது கழுத்தில் முகம் புதைத்து மென்மையாய் முத்தமிட்டான். காயத்ரிக்கு சிரிப்பு வந்தது.
“சாப்ட்டு வரலாம் ராம்!” அதட்டியவளின் வார்த்தைகளை ஆறடி ஆண்மகன் தன் உதடுகளைக் கொண்டு களவாடியிருந்தான். நேற்றைக்கு போல வேட்கையும் வேகமும் இல்லை. இன்றைக்கு பொறுமையும் விவேகமுமாய் மனைவியைக் கொண்டாடினான்.
“காயூ!” என நொடிக்கு நூறு முறை காயத்ரி ஜெபம்தான். கோபமாய், பாசமாய், அதட்டலாய், கவலையாய் என எத்தனையோ உணர்வுகளில் காயூவென அழைத்திருக்கிறான். ஆனால் காதலில் பிதற்றி மோகத்தில் திளைத்து வந்த இந்த காயூ இவளுக்குப் புதிது. வெட்கமாய் வந்தாலும் அவனை ஏற்றிருந்தாள். குளிரூட்டியின் குளிருக்கு மனைவின் உடல் சூட்டில் இதம் கண்டு பூனைக்குட்டியாய் சுருண்டு அவளை உரசியபடியே படுத்துக் கொண்டான் கணவன்.
அவன் முதுகில் தட்டிய காயத்ரி, “ரிலாக்ஸ் ராம்... ரிலாக்ஸ்!” என்றாள்.
“ஹம்ம்...” என்ற முனங்கலுடன் அவளை அட்டைப் போல ஒட்டிக் கொண்டான்.
“காயூ, உன்னை மாதிரியே அழகா ஒரு கேர்ள் பேபி பெத்துக்கலாம் டி!” என்றான் அவள் கூந்தலில் முகம் புதைத்து வாசத்தை நாசியில் நிரப்பியபடி.
அவனையே ஆசையாக பார்த்தவள், “வொய் நாட்... மூனு குழந்தைங்கப் பெத்துக்கலாம் ராம்!” என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன், “சீக்கிரம் பெத்துக்கலாம் காயூ. டிலே பண்ண வேணாம்!” என்றான் எதிர்பார்ப்பாய். இருவருமே ஒற்றைக் குழந்தையாய் வளர்ந்துவிட்ட காரணத்தினால் குழந்தை வேண்டும் என்று மனதில் ஏக்கம் மேலெழுந்தது.
“ப்ம்ச்... இப்போதானே டா ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம். உடனே எப்படி பேபி வரும் டாக்டரே. பொறுமை அவசியம்!” என்றாள் கண்ணை சிமிட்டி.
அவனுக்கு உதடுகளில் புன்னகை ஏற, “குடிகாரி...” என்றான் செல்லமாய்.
“ஹம்ம்... சரி, பசிக்கலையா டா உனக்கு? வரும்போது எதுவும் சாப்ட்டு வந்தீயா?” என யோசனையாகக் கேட்டாள்.
“அப்போ பசி தெரியலை. பட் இப்போ செம்மையா பசி வயித்தைக் கிள்ளுது!” வயிற்றைத் தடவினான் கணவன். அவனை முறைத்தவள் எழுந்து தன்னை சரிப்படுத்திக் கொண்டு சமையலறைக்குள் செல்ல, இவனும் பின்னே சென்றான். குருமாவை சூடு செய்தவள் தட்டில் மூன்று இடியாப்பத்தோடு பரிமாற, அவன் அடுப்படி திண்டில் ஏறியமர்ந்து உண்டான். காயத்ரி அவனுக்கு என்ன வேண்டும் என முகம் பார்த்துப் பரிமாற, இவன் காதலாய் மனைவியை நோக்கினான்.
“வேற யாரை நான் மேரேஜ் பண்ணி இருந்தாலும் இந்த கெமிஸ்ட்ரி, இந்த லவ் எல்லாம் சாத்தியமே இல்லைல காயூ?” எனக் கேட்டவனிடம் புருவத்தை உயர்த்திப் புன்னகைத்தாள் மனைவி. பதிலில்லை அவளிடம்.
“நீ எனக்கு எல்லா வகையிலயும் ஒரு குட் கம்பெனியன் தெரியுமா? நம்ப ஃபர்ஸ்ட் மீட்ல இருந்து இப்போ வரை நான் அதை உணர்ந்திருக்கேன் காயூ. மோர் ஓவர் இந்த சிடுமூஞ்சி காயத்ரியோட பல பரிமாணத்தை, இந்த உலகத்துக்கு காட்ட முடியாத நிறைய விஷயம் எனக்கே எனக்குன்னு நினைக்கும் போதே எனக்கு சந்தோஷமா இருக்கு டி. மேரேஜ் பண்ணும்போது எனக்கு ஒரு உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சு. உன்னை ஃப்ரெண்டா மட்டுமே பார்க்குறேன். பட் எப்படி உன் கூட லைஃபை லீட் பண்ண போறேனோ? உன்னோட எக்ஸ்பெக்டேஷன் நிறைய இருக்கலாம். என்னால ஃபுல் பில் பண்ண முடியுமான்னு தோணிட்டே இருந்தது. பட் இந்த ரெண்டு நாளா உன்னைப் பார்ததாலே கண்ட கண்ட நினைப்பா இருக்கு டி!” கடைசி வார்த்தையை மட்டும் முணுமுணுத்துவிட்டு மனைவி முகம் பார்க்கத் தயங்கி குனிந்து இடியாப்பத்தை வாயில் அடைத்தவனைப் பார்த்து இவளுக்கு உதடுகளில் புன்னகை ஏறின.
“வரும் டா... வரும்!” வலிக்காதவாறு அவன் காதை திருகியவள், “ராம் என்னோட அதிகபட்ச எதிர்பார்ப்பே என்னென்னு தெரியுமா டா?” எனக் கேட்டாள். நிமிர்ந்து மனைவி முகத்தைப் பார்த்தவன் தெரியாது என மென்மையாய் தலையை அசைத்தான்.
“உன் கூட இருக்கணும், எனக்கே எனக்குன்னு அக்கறையா, அன்பா இருக்க இந்த ராமோட காதல், கோபம், மோகம்னு எல்லாமே எனக்கு மட்டும் சொந்தமா இருக்கணும். வேற யாரும் உரிமை கொண்டாட கூடாது. நீ என் ராமா இருந்தா போதும். இதுதான் என்னோட அதிகபட்ச எக்ஸ்பெக்டேஷன்!” என்றாள் மெல்லிய முறுவலுடன்.
அவளைப் பார்த்து புன்னகைத்து கையைக் கழுவியவன், “காயூ, கிட்ட வாயேன்!” என அழைத்தான். அவள் என்னவென்ற யோசனையுடன் அவன் அருகே செல்ல நெற்றி முட்டி அவள் முன்னுச்சியில் அழுத்தமாக முத்தமிட்டவன், “ஐ லவ் யூ காயூ. உன் அளவுக்கு என்னால காதலிக்க முடியுமான்னு தெரியலை. பட் இருந்தாலும் என் காயூவை நான் நல்லா பார்த்துப்பேன்!” என்றான்.
அவனைப் பார்த்து சிரித்த காயத்ரி, “என் ராம் அளவுக்கு யாராலுயும் என்னைக் கேர் பண்ண முடியாது டா மடையா!” என அவன் தலையில் தட்டி புன்னகையுடன் நடந்தவளின் காலடித் தடத்தைப் பின்பற்றி நடந்தவன் அறையிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான். உண்டவுடன் உறக்கம் வரவில்லை.
“என்ன தூக்கம் வரலையா டா?” எனக் கேட்டுக் கொண்டே காயத்ரி மெத்தையில் விழுந்தாள். அவன் புறம் திரும்பி முகத்தைப் பார்க்குமாறு படுத்தாள்.
“இல்ல காயூ... இப்போதானே சாப்டேன். கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கேன்!” என்றவனையே பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி சிறிது நேரத்திலே கண்ணயர்ந்திருக்க, ரகுராம் எழுந்து வந்து மனைவியை அணைத்துப் படுத்தான். அவன் இருப்பை உணர்ந்தவள் அவன்புறம் திரும்ப, அவளைப் பத்திரமாய் தன்னுள் பத்திரப்படுத்தினான் கணவன்.
சில பல வருடங்களுக்குப் பிறகு
முத்தம் தீர்ந்து, மோகம் மோட்சம் அடைந்து, காமம் கரைந்தப் பின்னும் கரை காணாத காதல் பொழுதுகள் அவை. சோம்பேறித் தனத்தோடு பிண்ணிப் பிணைந்திருந்த ஞாயிறை பிரியத்தோடு வரவேற்கும் காலை பொழுது அவ்வளவே. அதிகாலை ஆறு ஏழெல்லாம் எல்லாம் கனவுகள் நீளும் ஆழ்ந்த உறக்கத்திற்கு பாத்திப்பட்டவை. அன்றைக்கு அந்த வீட்டின் இளவரசி ஸ்பூர்த்தியின் குரல்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
“ப்பா... திஸ் இஸ் நாட் வொய்லட். திஸ் இஸ் லாவண்டர்!” என சிணுங்கிய மகளின் குண்டு கன்னத்தில் முத்தமிட்ட ரகுராம், “சாரிடா ஸ்பூர்த்தி, வேற ப்ரிஞ்சால் வரையலாம்!” என மகளை சமாதானம் செய்தான்.
“ஹ்கூம்... போங்க!” சிலுப்பியபடியே கூந்தலை பின்னிழுத்தவள், “இந்த லேடிஸ் பிங்கருக்காவது ஒழுங்கா கலர் கொடுங்கப்பா!” என தந்தையை முறைத்து பச்சை வண்ணத்தை தூரிகையில் எடுத்து அவனிடம் நீட்டினாள். அதைக் கொடுக்கும் போதே இலவச இணைப்பாக அவனது கன்னத்தில் பச்சை வண்ணம் முத்தமிட்டிருந்தது.
ரகுராம் சிரத்தையாக மகள் சொன்ன வேலையை செய்ய, அறைக்குள்ளிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து கட்டிலில் காலை நீட்டியிருந்த காயத்ரி அவர்களைத்தான் பார்த்திருந்தாள். உதட்டில் சிரிப்பு நீள, வலது கையில் ஒரு கோப்பை குளம்பி இருந்தது.
“ஹம்ம்... உனக்கு யாருப்பா டாக்டர் வேலை கொடுத்தா. ஒழுங்கா கலர் கூட பண்ணத் தெரியலை. போப்பா...” என ஸ்பூர்த்தி தந்தையிடம் கோபம் கொள்ள, காயத்ரி படக்கென்று சிரித்திருந்தாள்.
அதில் கணவன் அவளைத் திரும்பி முறைத்து கையிலிருந்த மெழுகு பூச்சை அவள் மீது எறிந்தான். பின்னர் மீண்டும் புகார் வாசிக்க தொடங்கிய குழந்தையை சமாதானம் செய்து இருவரும் வண்ணம் தீட்டி முடித்திருக்க, “நான் பாட்டிக்கிட்டே காட்டீட்டு வரேன் பா!” என சின்னவள் எழுந்து ஓட, ரகுராம் கன்னத்திலிருந்த வண்ணத்தை துடைத்துக் கொண்டே மனைவிக்கு அருகே வந்தமர்ந்தான்.
“ஒழுங்கா கலரிங் கூட பண்ண தெரியாதவனுக்கு எல்லாம் யாருப்பா டாக்டர் வேலை குடுத்தது!” நமுட்டுச் சிரிப்புடன் கேட்ட மனைவியை முறைத்துக் கொண்டே அவளது மடியில் படுத்தான். இடையில் அவளது ஏழு மாத வயிறு இடிக்க, கொஞ்சம் நகர்ந்து தொடையில் தலை வைத்தவன், “காயூ, செகண்ட் ரிலீஸ் இப்போ பண்றோம். தேர்ட் எப்போ பண்ண போறோம்?” என வெகு சிரத்தையாகக் கேட்டான்.
அவனை முறைத்த காயத்ரி, “முதல்ல இதைப் பெத்துக்குறேன். தென் அடுத்ததைப் பார்க்கலாம்!” என்றாள்.
“ப்பா...” என மகள் குரல் கொடுத்துக் கொண்டே அறையை நோக்கி ஓடி வருவதை உணர்ந்த ரகுராம் மனைவி மடியிலிருந்து எழப் பார்க்க, “ராம்... ஒழுங்கா படுக்குற நீ? அப்படியென்ன அவளுக்கு அடம்? ஹம்ம்? இப்போ மட்டும் நீ எழுந்திருச்ச, அவ்வளோதான்!” என்றாள் மிரட்டலாய்.
அவன் அசையாது அவளது மடியில் படுத்திருக்க, “ப்பா... பாட்டீ சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க!” என அனைத்தையும் நுழைந்தவள் தந்தை தாயின் மடியில் படுத்திருப்பதை பார்த்ததும் உதட்டை பிதுக்கினாள்.
“டேடி... என் மடியில மட்டும் தான் படுப்பேன்னு ப்ராமிஸ் பண்ணீங்க. உங்களுக்கு மறந்துடுச்சா?” என மகள் கண்ணைக் கசக்கி முகத்தை சுருக்கவும், படக்கென மனைவி மடியிலிருந்து எழுந்தவன், “நோ..நோ அப்பா ஸ்பூர்த்தி பாப்பா மடியிலதான் படுப்பேன்!” என அவளைத் தூக்கிக் கொண்டு வந்து அமர வைத்து அவள் மடிமீது படுத்தான்.
மகள் தாயைப் பார்த்துப் பற்கள் தெரிய புன்னகைக்க, இடையில் கை வைத்து மெதுவாய் எழுந்து நின்றவள், கணவனை முறைத்துப் பார்க்க, அவன் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான்.
“நைட்டு காயூ காயூன்னுட்டு என்னை உரசிட்டு வந்து படு டா. அப்ப உன்னை பார்த்துக்குறேன். இன்னைக்கு நீ தரையிலதான் படுக்கணும்!” என அவள் கடுகடுத்துவிட்டு செல்ல, “நைட்டு நீ என்னைக் கீழே படுக்க வச்சுட்டா என் பேரை மாத்திக்கிறேன் டி குடிகாரி!” என்றவனின் பேச்சில் இவளுக்கு வெட்கம் வர, உதட்டுக்குள் எதையோ முணுமுணுத்துவிட்டு நகன்றவளை முகம் முழுக்க சிரிப்புடன் ஆசையாய்ப் பார்த்திருந்தான் கணவன். அவர்கள் வாழ்க்கையின் வசந்த பக்கங்களும் அவன் புன்னகையைப் போல இன்னுமின்னும் நீண்டு கிடந்தது.
*சுபம்*
மறக்காம எல்லாரும் கமெண்ட் பண்ணுங்க பட்டூஸ். அடுத்த கதை "சர்வமும் அவள் மயம்!" அடுத்த வாரத்துல ஒரு நல்ல நாள்ல தொடங்கலாம்
