- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 25 
காயத்ரிக்கும் ரகுவிற்குமான செல்ல சண்டை முதல் ஊடலாக உருப்பெற்று ஒருவாரம் கடந்திருந்தது. ரகுராம் இரண்டு முறை முயற்சி செய்து அவளிடம் பேச முனைய, மனைவி முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். இவனும் அதற்கு மேலே கெஞ்சவில்லை. அவனுக்குமே எப்போதும் ஒட்டி உரசிக் கொண்டே இருப்பதற்கு இதுபோல செல்ல சண்டைகளும் நிரம்ப பிடித்தது. வேண்டுமென்றே அவனிடம் வம்பளக்கும் காயத்ரி மனைவியாய் வசீகரித்தாள்.
காலையில் குளம்பியில் உப்பைக் கலந்து குடித்தவளை தாய் தந்தை முன்னே திட்ட முடியாது முறைத்து வைப்பான். அவன் இஸ்திரி செய்து வைத்திருந்த சட்டையை கசக்கியவளை இவன் காட்டுக் கத்தலாய் கத்த, அவள் அசையவில்லை. வேலை முடிந்து அவன் சோர்வாய் உள்ளே நுழைய, வேண்டுமென்ற குளிரூட்டியின் வெப்பநிலையை அதிகரீப்பவளை ஆனமட்டும் இவன் முறைத்தான். இரவு அவனுக்கு படுக்க இடம் கொடுக்காது விளிம்பில் தள்ளியிருந்தாள். காலை முதல் மாலை வரை ஏதோ ஒரு வகையில் அவனை வம்பிழுத்துக் கொண்டு தன்னிருப்பை அவனுக்குப் புரிய வைக்கும் காயத்ரி ரகுராமிற்கு வெகு புதிது. எப்போதும் பொறுப்பாய், நிமிர்வாய், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண் தானா இத்தனை சேட்டை செய்கிறாள் என அவனுக்கே சில நேரம் ஆச்சர்யம் பொங்கும்.
மாமியார் மாமனாரிடம் நல்ல மருமகள். வெளியே அனைவருக்குமான காயத்ரி முற்றிலும் வேறானவள். அவளுடைய விருப்ப வட்டத்தில் இருக்கும் ரகுராமிற்கு மட்டுமே காயத்ரியின் மற்றொரு பரிமாணம் தெரியும். அவனும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் சிரிப்பும் முறைப்புமாய்க் கடக்கப் பழகியிருந்தான்.
அன்றைக்கு காலையில் காயத்ரிதான் முதலில் கண்விழித்தாள். ரகுராம் வலதுகையைத் தூக்கி முகத்தை மறைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இருவருக்கும் இடையே இந்தியா பாகிஸ்தானுக்கான இடைவெளி. அதில் முகத்தில் முறுவல் பூக்க, மெதுவாய் நகர்ந்து அவனுக்கு அருகே சென்றவள், “ராம்...” என்றாள் மெல்லிய குரலில்.
“ஹம்ம்...” என்று முனங்கியவனிடம் பெரிதாய் பதில் இல்லை.
“ராம்...” இவள் மெலிதாய் அவனை உலுக்க, அந்தக் கைகளைப் பிடித்திழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவன் மேலே விழுந்தவள், “ராம்... ஹேப்பி பெர்த் டே டா!” என்றாள் அவன் தாடியடர்ந்த கன்னத்தில் முத்தமிட்டு. தூக்கத்திலும் அவனது முகத்தில் புன்னகை பூத்தது.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி!” என அவள்புறம் திரும்பி நன்றாய் அணைத்தான். காலைக் குளிரில் அவன் குரலின் கரகரப்பு இவளை ஏதோ செய்திருக்க கூடும்.
“உன் வாய்ஸ் ரொம்ப செக்சியா இருக்கு டா!” என அவன் செவியோரம் காயத்ரி முணுமுணுக்கவும், அவன் படக்கென கண்ணை விழித்திருந்தான். இவள் சிரிப்புடன் அவனிடமிருந்து விலகினாள். ரகுராம் முகத்தில் மெல்லிய சிரிப்பும் முறைப்பும் படர்ந்தது.
“என்ன... என்ன லுக்கு?” உதட்டை வளைத்துக் கொண்டே எழுந்தவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்று தனக்கும் கணவனுக்கும் குளம்பியை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“பெர்த் டே ஸ்பெஷல் சில்லி பவுடர் காஃபியா காயூ?” என ரகுராம் கேலியாய் கேட்டுக் கொண்டே குளம்பியைப் பருக, கண்ணைச் சுருக்கி அவனை முறைத்தாள். அவன் அதை அசட்டை செய்தான். காயத்ரிதான் முதலில் குளித்து முடித்து கணவன் அவள் பிறந்தநாளிற்காக எடுத்துக் கொடுத்த அடர் நீல வண்ண காதிப் புடவையை உடுத்தி தலையில் துண்டோடு வந்தாள். அலைபேசியில் முழ்கி இருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவளது வழலைக் கட்டியின் மணம் இவனை நாசியை நிறைத்தது.
பளிச்சென்று குளித்து வந்த மனைவி அவனது கவனம் ஈர்த்தாள். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த புடவை அது. அத்தனை பாந்தமாக காயத்ரியைத் தழுவி இருந்தது. அவளுடைய வெள்ளை நிறத்திற்கு அடர் நிறம் வெகுவாக பொருந்திப் போக, பார்வை அப்படியே கீழறிங்கியது. ஒரு முறை மனைவியை கண்களால் அளந்தவன் தொண்டையைச் செருமினான். பார்வை தறிகெட்டு அவளில் படரவும், சங்கடத்துடன் பிடரியைக் கோதினான். பின்னர் தொண்டையைச் செருமி தன்னை சரி செய்து கொண்டு,
“நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே காயூ?” எனக் கேட்க, “பரவாயில்லை ராம். எப்படியும் மறந்திடுவன்னு நினைச்சேன். ஞாபகம் வச்சிருக்க போல?” எனக் கேலிக் குரலில் புருவத்தை உயர்த்தியவளை கணவன் முறைத்தான்.
“முறைச்சது போதும் டா. அந்த கவர்ல உனக்கு ட்ரெஸ் இருக்கு. குளிச்சிட்டு அதைப் போட்டுக்கோ. கோவிலுக்கு வேற போகணும். சோ சீக்கிரம் கிளம்பு!” என காயத்ரி அதட்ட, இவன் அசிரத்தையாய் அந்தப் பையைப் பிரித்தான்.
“சீ... என்ன கலர் டி இது பஞ்சு மிட்டாய் கலரு. வேற கலரே உங்களுக்கு கிடைக்கலையா?” அவன் தீயாய் முறைக்க, “ப்ம்ச்... இது பேபி பிங்க் ராம். உனக்கு நல்லா இருக்கும். நானும் கௌதமிமாவும் சேர்ந்து செலக்ட் பண்ணோம்!” அவள் ரோஷமாய் கூறினாள்.
“நல்லா செலக்ட் பண்ணி இருக்கீங்க ரெண்டு பேரும்!” அவன் கடுப்புடன் கூற, “ரொம்ப பண்ணாத ராம். குளிச்சிட்டு இந்த ஷர்ட்தான் நீ போடணும். வேற போட்ட மவனே மூனு வேளையும் உப்பு போட்ட காஃபி தான்!” என மிரட்டிவிட்டு அகன்றவளை பார்வையாலே முறைத்து தள்ளியவன் அந்த சட்டையைத்தான் அணிந்து வந்தான்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்!” என கௌதமி மகன் உச்சியில் முத்தமிட, தேவராஜ் வாழ்த்தோடு மகனை அணைத்துக் கொண்டார். காயத்ரி மென்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள். கௌதமி அதிகாலையிலே எழுந்து மகனின் பிறந்த நாளுக்கென தடபுடலாக சமைத்திருந்தார். ரகுவால் நிறைய சாப்பிட முடியவில்லை. இருந்தாலும் தாயின் மனம் நோக கூடாது என அனைத்திலும் கொஞ்சமாய் உண்டான். வயிறும் மனதும் நிறைந்து போயிருந்தது.
“ராம்... நீயும் காயூவும் அப்படியே கோவிலுக்குப் போய்ட்டு வேலைக்குப் போங்க!” கௌதமி கூற, தலையை அசைத்தவன் கிளம்பி அமர, காயத்ரி தலையை உலர்த்தி பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். இவன் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தான். மல்லிகைப் பூவை கையில் வைத்துக் கொண்டு, “ஹேர் பின் எங்க போச்சு?” என முணுமுணுத்துக் கொண்டே விழிகளால் துழாவி கொண்டை ஊசியைக் கையில் எடுத்தவள், பூவை தலையில் வைத்தாள்.
நெற்றி வெறுமையாக இருக்க அதில் குங்குமத்தை வைத்தவள் லேசாய் சிலுப்பிக் கொண்டிருந்த முடியை சரி செய்தாள். புடவையின் மடிப்பை நீவிவிட்டாள். ஒருமுறை கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்தியானவள், “ராம்... கிளம்பலாம் டா!” என அவசரமாய் கைப்பையை எடுத்து மாட்டினாள். இன்றைக்கு இரண்டு மணிநேரம் அனுமதி வாங்கிவிட்டிருந்தாள்.
“ஹம்ம்... போலாம் டி...” என்றவன் பார்வை அவள் நெற்றியிலிருந்த குங்குமத்தை தொட்டு கழுத்தில் மின்னிய தங்கத்தாலியில் நிலைத்தது. அழகாய் இருந்தாள் காயத்ரி. யாராக இருந்தாலும் ஒருமுறை மீண்டும் பார்க்க வைக்கும் முகம். அளவான கூந்தல், கொஞ்சம் பூசினார் போன்ற தேகம், தீர்க்கமான கண்கள், கூர் மூக்கு, சாயமிடாத உதடுகள் என பார்வை மனைவியை ஆராய்ந்தது. என்னவோ இன்றைக்கு அவள் தன்னை ஈர்ப்பதாய் ஒரு எண்ணம். எப்போதும் போலத்தான் இருந்தாள் காயத்ரி. ஆனால் இவனுக்குத்தான் என்னவோ போல இருந்தது. தோழியாய் பார்த்தவரை கண்ணியம் காத்தவனின் விழிகளின் கண்ணியம் இன்றைக்கு கரைந்து கொண்டிருந்தது.
அமைதியாய் மகிழுந்தை செலுத்தினான். காயத்ரி தந்தைக்கும் அழைத்து பேசி மதியம் அங்கே வருகிறேன் எனக் கூறி வைத்தவள், “என்ன பார்வை அடிக்கடி என்னை உரசுது ராம்?” என பக்கவாட்டாய்த் திரும்பிக் கேட்டாள்.
“அழகா இருக்கன்னு பார்த்தேன் டி...” அவன் கூறவும், “சே... அவ்ளோதானா டா? காலைல மெனக்கெட்டு எழுந்து குளிச்சி மேக்கப் போட்டா ஒரே வார்த்தைல முடிச்சுட்ட? உனக்கெல்லாம் எப்படிடா லவ் செட்டாகும். நான் மட்டும் உன்னை லவ் பண்ணலைன்னா இந்த ஜென்மத்துல உனக்கெல்லாம் காதல் வாச்சிருக்காது டா!” என்றாள் முறைப்பாய்.
“ஏய்... அழாக இருக்க. அதான் சொல்லிட்டேனே. வேற என்னடி சொல்ல சொல்ற?” அவன் சிரிப்புடன் கேட்க,
“அதை எப்போ சொல்லி இருக்கணும். காலைல ரூம்லயே சொல்லி அப்படி இப்படி ஒரு ரொமான்டிக் சீனை ஓட்டி முடிச்சு கார்ல வந்ததும் ஆஹோ ஓஹோன்னு என்னையும் என் அவுட் பிட்டையும் புகழ்ந்திருக்கணும் டா!” குறைபடித்தாள் மனைவி.
“அதெல்லாம் எனக்கு வரலை டி. அதுவும் இல்லாம கூடவே இருக்கல்ல. அதானலே பெருசா எதுவும் தோண மாட்டுது!” அவன் மனதில் உள்ளதை உள்ளபடியே உரைத்தான்.
“சச் அ அன் ரொமான்டிக் பெர்சன் டா நீ. எனக்கு வாய்ச்சது அவ்வளோதான்!” அவள் முணுமுணுக்க, ரகுவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“தட்ஸ் யுவர் ஃபேட் டி. நீயா சூஸ் பண்ணது!” ரகுராம் சிரிக்க, “ஆமா... ஆமா. ரொம்ப பெருமை பட்டுக்கணும் டா!” கலாய்த்தாள் மனைவி.
“ஹம்ம்... நான் உன்னை மாதிரி கஞ்சம் எல்லாம் இல்ல டா. இந்த பேபி பிங்க் கலர் ஷேர்ட் உன்னோட கலர்க்கு சூப்பரா இருக்கு. சும்மாவே அலைபாயுதே கார்த்திக்னு பீட்டர் விடுவ. இப்போ சொல்லவா வேணும். ஷார்ப் ஐய்ஸ் அண்ட் நோஸ். அப்புறம் பிங்க் கலர் லிப்ஸ். நல்ல பிட்டான பாடின்னு நீ செம்ம ஃபிகர் டா!” என அவள் வர்ணித்தலில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
“போதும் டி... கோவில் வந்துடுச்சு. இறங்கு!” என மெலிதாய் அதட்டினான். இருவரும் கடவுளை தரிசித்துவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
“நான் ஆட்டோ இல்ல பஸ்ல வீட்டுக்குப் போய்க்கிறேன் ராம்...” என்றவளுக்கு தலையை அசைத்து விடை கொடுத்தான் ரகுராம். காயத்ரிக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் வேலை முடிய தந்தையைப் பார்க்க சென்றாள். மதிய உணவு அவரோடு உண்டுவிட்டு மாலை நான்குமணி போல வீட்டிற்கு சென்றாள். உடை மாற்றி மாமியாருடன் பேசிக் கொண்டே மாலை தேநீருடன் இளையராஜாவை இருவரும் அலசிக் கொண்டிருந்தனர். இவள் எஸ்.பி.பி பாடலைப் புகழ்ந்து கொண்டிருக்க, அவர் எம்.எஸ்.வி என தன்னுடைய விருப்ப பாடகரின் புராணத்தோடு சிறு விவாதத்தையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
காயத்ரியின் அலைபேசி இசைத்தது. மாமியாரிடம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தவள், ரகுராம் பெயரைப் பார்த்ததும், “என்ன ராம்? இந்த டைம்ல கால் பண்ணி இருக்க?” என அழைப்பை ஏற்று யோசனையாகக் கேட்டாள்.
“ஹம்ம்... சும்மாதான். என்ன பண்ற காயூ?” அவன் குரலில் லேசான தயக்கம்.
“என்ன டா வேள்வி. என்ன பண்ணுவேன். சும்மாதான் அம்மாவோட பேசிட்டு இருக்கேன். உனக்கென்ன வேலை இல்லையா? என் கூட கடலை போட கால் பண்ணிட்டீயா?” என மெல்லிய சிரிப்புடன் கேட்டாள். அங்கே அவனின் முறைப்பு இவளுக்கு இங்கே தெரிந்திருக்க, உதடுகளில் புன்னகை நெளிந்தது.
“ப்ம்ச்... நைட் டின்னருக்கு வெளிய போகலாம்ன்னு கேக்க கூப்ட்டேன். வரீயா? இல்லையா?” அவன் கடுப்புடன் கேட்க, ஒரு நிமிடம் காயத்ரியின் முகம் திகைத்தது.
“ராம்... க்ராஸ் டாக் எதுவும் வந்துடுச்சு போல டா. இன்னொரு தடவை என்னென்னு சொல்லு டா!” என அவள் அதிசயித்துக் கேட்க, “காயூ...” எனப் பல்லைக் கடித்தவன், “நான்தான் கேட்டேன். டின்னர் போகலாமா? வேணாமா?” எனக் கடிந்தான்.
“ச்சு... இப்போதான் இருந்திருந்து என் புருஷனுக்கு ரொமான்டிகா நடக்கணும்னு தோணி இருக்கு. வேணாம்னு சொல்லுவானேன். வரேன் டா!” என சிரிப்புடன் குதூகலித்தாள் மனைவி.
“ஹம்ம்...” என சில நொடிகள் தயங்கியவன், “சேரி கட்டிக்கோ. ஜீன்ஸ் டீ ஷர்ட் எல்லாம் வேணாம்!” என்றான் முணுமுணுப்புடன்.
“ஓஹோ... அப்போ ஜீன்ஸ் டீ ஷர்ட்டே போட்றேன் ராம்!” என அவள் வெகு சிரத்ததையாய்க் கூற, ராமின் பற்கள் நறநறக்கும் சத்தம் இங்கு வரைக் கேட்டிருக்க கூடும் என்பதற்கு சாட்சியாக இவளது முகத்தில் குறும்பு சிரிப்பு நிரம்பி வழிந்தது.

காயத்ரிக்கும் ரகுவிற்குமான செல்ல சண்டை முதல் ஊடலாக உருப்பெற்று ஒருவாரம் கடந்திருந்தது. ரகுராம் இரண்டு முறை முயற்சி செய்து அவளிடம் பேச முனைய, மனைவி முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். இவனும் அதற்கு மேலே கெஞ்சவில்லை. அவனுக்குமே எப்போதும் ஒட்டி உரசிக் கொண்டே இருப்பதற்கு இதுபோல செல்ல சண்டைகளும் நிரம்ப பிடித்தது. வேண்டுமென்றே அவனிடம் வம்பளக்கும் காயத்ரி மனைவியாய் வசீகரித்தாள்.
காலையில் குளம்பியில் உப்பைக் கலந்து குடித்தவளை தாய் தந்தை முன்னே திட்ட முடியாது முறைத்து வைப்பான். அவன் இஸ்திரி செய்து வைத்திருந்த சட்டையை கசக்கியவளை இவன் காட்டுக் கத்தலாய் கத்த, அவள் அசையவில்லை. வேலை முடிந்து அவன் சோர்வாய் உள்ளே நுழைய, வேண்டுமென்ற குளிரூட்டியின் வெப்பநிலையை அதிகரீப்பவளை ஆனமட்டும் இவன் முறைத்தான். இரவு அவனுக்கு படுக்க இடம் கொடுக்காது விளிம்பில் தள்ளியிருந்தாள். காலை முதல் மாலை வரை ஏதோ ஒரு வகையில் அவனை வம்பிழுத்துக் கொண்டு தன்னிருப்பை அவனுக்குப் புரிய வைக்கும் காயத்ரி ரகுராமிற்கு வெகு புதிது. எப்போதும் பொறுப்பாய், நிமிர்வாய், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண் தானா இத்தனை சேட்டை செய்கிறாள் என அவனுக்கே சில நேரம் ஆச்சர்யம் பொங்கும்.
மாமியார் மாமனாரிடம் நல்ல மருமகள். வெளியே அனைவருக்குமான காயத்ரி முற்றிலும் வேறானவள். அவளுடைய விருப்ப வட்டத்தில் இருக்கும் ரகுராமிற்கு மட்டுமே காயத்ரியின் மற்றொரு பரிமாணம் தெரியும். அவனும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் சிரிப்பும் முறைப்புமாய்க் கடக்கப் பழகியிருந்தான்.
அன்றைக்கு காலையில் காயத்ரிதான் முதலில் கண்விழித்தாள். ரகுராம் வலதுகையைத் தூக்கி முகத்தை மறைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இருவருக்கும் இடையே இந்தியா பாகிஸ்தானுக்கான இடைவெளி. அதில் முகத்தில் முறுவல் பூக்க, மெதுவாய் நகர்ந்து அவனுக்கு அருகே சென்றவள், “ராம்...” என்றாள் மெல்லிய குரலில்.
“ஹம்ம்...” என்று முனங்கியவனிடம் பெரிதாய் பதில் இல்லை.
“ராம்...” இவள் மெலிதாய் அவனை உலுக்க, அந்தக் கைகளைப் பிடித்திழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவன் மேலே விழுந்தவள், “ராம்... ஹேப்பி பெர்த் டே டா!” என்றாள் அவன் தாடியடர்ந்த கன்னத்தில் முத்தமிட்டு. தூக்கத்திலும் அவனது முகத்தில் புன்னகை பூத்தது.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி!” என அவள்புறம் திரும்பி நன்றாய் அணைத்தான். காலைக் குளிரில் அவன் குரலின் கரகரப்பு இவளை ஏதோ செய்திருக்க கூடும்.
“உன் வாய்ஸ் ரொம்ப செக்சியா இருக்கு டா!” என அவன் செவியோரம் காயத்ரி முணுமுணுக்கவும், அவன் படக்கென கண்ணை விழித்திருந்தான். இவள் சிரிப்புடன் அவனிடமிருந்து விலகினாள். ரகுராம் முகத்தில் மெல்லிய சிரிப்பும் முறைப்பும் படர்ந்தது.
“என்ன... என்ன லுக்கு?” உதட்டை வளைத்துக் கொண்டே எழுந்தவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்று தனக்கும் கணவனுக்கும் குளம்பியை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“பெர்த் டே ஸ்பெஷல் சில்லி பவுடர் காஃபியா காயூ?” என ரகுராம் கேலியாய் கேட்டுக் கொண்டே குளம்பியைப் பருக, கண்ணைச் சுருக்கி அவனை முறைத்தாள். அவன் அதை அசட்டை செய்தான். காயத்ரிதான் முதலில் குளித்து முடித்து கணவன் அவள் பிறந்தநாளிற்காக எடுத்துக் கொடுத்த அடர் நீல வண்ண காதிப் புடவையை உடுத்தி தலையில் துண்டோடு வந்தாள். அலைபேசியில் முழ்கி இருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவளது வழலைக் கட்டியின் மணம் இவனை நாசியை நிறைத்தது.
பளிச்சென்று குளித்து வந்த மனைவி அவனது கவனம் ஈர்த்தாள். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த புடவை அது. அத்தனை பாந்தமாக காயத்ரியைத் தழுவி இருந்தது. அவளுடைய வெள்ளை நிறத்திற்கு அடர் நிறம் வெகுவாக பொருந்திப் போக, பார்வை அப்படியே கீழறிங்கியது. ஒரு முறை மனைவியை கண்களால் அளந்தவன் தொண்டையைச் செருமினான். பார்வை தறிகெட்டு அவளில் படரவும், சங்கடத்துடன் பிடரியைக் கோதினான். பின்னர் தொண்டையைச் செருமி தன்னை சரி செய்து கொண்டு,
“நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே காயூ?” எனக் கேட்க, “பரவாயில்லை ராம். எப்படியும் மறந்திடுவன்னு நினைச்சேன். ஞாபகம் வச்சிருக்க போல?” எனக் கேலிக் குரலில் புருவத்தை உயர்த்தியவளை கணவன் முறைத்தான்.
“முறைச்சது போதும் டா. அந்த கவர்ல உனக்கு ட்ரெஸ் இருக்கு. குளிச்சிட்டு அதைப் போட்டுக்கோ. கோவிலுக்கு வேற போகணும். சோ சீக்கிரம் கிளம்பு!” என காயத்ரி அதட்ட, இவன் அசிரத்தையாய் அந்தப் பையைப் பிரித்தான்.
“சீ... என்ன கலர் டி இது பஞ்சு மிட்டாய் கலரு. வேற கலரே உங்களுக்கு கிடைக்கலையா?” அவன் தீயாய் முறைக்க, “ப்ம்ச்... இது பேபி பிங்க் ராம். உனக்கு நல்லா இருக்கும். நானும் கௌதமிமாவும் சேர்ந்து செலக்ட் பண்ணோம்!” அவள் ரோஷமாய் கூறினாள்.
“நல்லா செலக்ட் பண்ணி இருக்கீங்க ரெண்டு பேரும்!” அவன் கடுப்புடன் கூற, “ரொம்ப பண்ணாத ராம். குளிச்சிட்டு இந்த ஷர்ட்தான் நீ போடணும். வேற போட்ட மவனே மூனு வேளையும் உப்பு போட்ட காஃபி தான்!” என மிரட்டிவிட்டு அகன்றவளை பார்வையாலே முறைத்து தள்ளியவன் அந்த சட்டையைத்தான் அணிந்து வந்தான்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்!” என கௌதமி மகன் உச்சியில் முத்தமிட, தேவராஜ் வாழ்த்தோடு மகனை அணைத்துக் கொண்டார். காயத்ரி மென்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள். கௌதமி அதிகாலையிலே எழுந்து மகனின் பிறந்த நாளுக்கென தடபுடலாக சமைத்திருந்தார். ரகுவால் நிறைய சாப்பிட முடியவில்லை. இருந்தாலும் தாயின் மனம் நோக கூடாது என அனைத்திலும் கொஞ்சமாய் உண்டான். வயிறும் மனதும் நிறைந்து போயிருந்தது.
“ராம்... நீயும் காயூவும் அப்படியே கோவிலுக்குப் போய்ட்டு வேலைக்குப் போங்க!” கௌதமி கூற, தலையை அசைத்தவன் கிளம்பி அமர, காயத்ரி தலையை உலர்த்தி பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். இவன் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தான். மல்லிகைப் பூவை கையில் வைத்துக் கொண்டு, “ஹேர் பின் எங்க போச்சு?” என முணுமுணுத்துக் கொண்டே விழிகளால் துழாவி கொண்டை ஊசியைக் கையில் எடுத்தவள், பூவை தலையில் வைத்தாள்.
நெற்றி வெறுமையாக இருக்க அதில் குங்குமத்தை வைத்தவள் லேசாய் சிலுப்பிக் கொண்டிருந்த முடியை சரி செய்தாள். புடவையின் மடிப்பை நீவிவிட்டாள். ஒருமுறை கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்தியானவள், “ராம்... கிளம்பலாம் டா!” என அவசரமாய் கைப்பையை எடுத்து மாட்டினாள். இன்றைக்கு இரண்டு மணிநேரம் அனுமதி வாங்கிவிட்டிருந்தாள்.
“ஹம்ம்... போலாம் டி...” என்றவன் பார்வை அவள் நெற்றியிலிருந்த குங்குமத்தை தொட்டு கழுத்தில் மின்னிய தங்கத்தாலியில் நிலைத்தது. அழகாய் இருந்தாள் காயத்ரி. யாராக இருந்தாலும் ஒருமுறை மீண்டும் பார்க்க வைக்கும் முகம். அளவான கூந்தல், கொஞ்சம் பூசினார் போன்ற தேகம், தீர்க்கமான கண்கள், கூர் மூக்கு, சாயமிடாத உதடுகள் என பார்வை மனைவியை ஆராய்ந்தது. என்னவோ இன்றைக்கு அவள் தன்னை ஈர்ப்பதாய் ஒரு எண்ணம். எப்போதும் போலத்தான் இருந்தாள் காயத்ரி. ஆனால் இவனுக்குத்தான் என்னவோ போல இருந்தது. தோழியாய் பார்த்தவரை கண்ணியம் காத்தவனின் விழிகளின் கண்ணியம் இன்றைக்கு கரைந்து கொண்டிருந்தது.
அமைதியாய் மகிழுந்தை செலுத்தினான். காயத்ரி தந்தைக்கும் அழைத்து பேசி மதியம் அங்கே வருகிறேன் எனக் கூறி வைத்தவள், “என்ன பார்வை அடிக்கடி என்னை உரசுது ராம்?” என பக்கவாட்டாய்த் திரும்பிக் கேட்டாள்.
“அழகா இருக்கன்னு பார்த்தேன் டி...” அவன் கூறவும், “சே... அவ்ளோதானா டா? காலைல மெனக்கெட்டு எழுந்து குளிச்சி மேக்கப் போட்டா ஒரே வார்த்தைல முடிச்சுட்ட? உனக்கெல்லாம் எப்படிடா லவ் செட்டாகும். நான் மட்டும் உன்னை லவ் பண்ணலைன்னா இந்த ஜென்மத்துல உனக்கெல்லாம் காதல் வாச்சிருக்காது டா!” என்றாள் முறைப்பாய்.
“ஏய்... அழாக இருக்க. அதான் சொல்லிட்டேனே. வேற என்னடி சொல்ல சொல்ற?” அவன் சிரிப்புடன் கேட்க,
“அதை எப்போ சொல்லி இருக்கணும். காலைல ரூம்லயே சொல்லி அப்படி இப்படி ஒரு ரொமான்டிக் சீனை ஓட்டி முடிச்சு கார்ல வந்ததும் ஆஹோ ஓஹோன்னு என்னையும் என் அவுட் பிட்டையும் புகழ்ந்திருக்கணும் டா!” குறைபடித்தாள் மனைவி.
“அதெல்லாம் எனக்கு வரலை டி. அதுவும் இல்லாம கூடவே இருக்கல்ல. அதானலே பெருசா எதுவும் தோண மாட்டுது!” அவன் மனதில் உள்ளதை உள்ளபடியே உரைத்தான்.
“சச் அ அன் ரொமான்டிக் பெர்சன் டா நீ. எனக்கு வாய்ச்சது அவ்வளோதான்!” அவள் முணுமுணுக்க, ரகுவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“தட்ஸ் யுவர் ஃபேட் டி. நீயா சூஸ் பண்ணது!” ரகுராம் சிரிக்க, “ஆமா... ஆமா. ரொம்ப பெருமை பட்டுக்கணும் டா!” கலாய்த்தாள் மனைவி.
“ஹம்ம்... நான் உன்னை மாதிரி கஞ்சம் எல்லாம் இல்ல டா. இந்த பேபி பிங்க் கலர் ஷேர்ட் உன்னோட கலர்க்கு சூப்பரா இருக்கு. சும்மாவே அலைபாயுதே கார்த்திக்னு பீட்டர் விடுவ. இப்போ சொல்லவா வேணும். ஷார்ப் ஐய்ஸ் அண்ட் நோஸ். அப்புறம் பிங்க் கலர் லிப்ஸ். நல்ல பிட்டான பாடின்னு நீ செம்ம ஃபிகர் டா!” என அவள் வர்ணித்தலில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
“போதும் டி... கோவில் வந்துடுச்சு. இறங்கு!” என மெலிதாய் அதட்டினான். இருவரும் கடவுளை தரிசித்துவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
“நான் ஆட்டோ இல்ல பஸ்ல வீட்டுக்குப் போய்க்கிறேன் ராம்...” என்றவளுக்கு தலையை அசைத்து விடை கொடுத்தான் ரகுராம். காயத்ரிக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் வேலை முடிய தந்தையைப் பார்க்க சென்றாள். மதிய உணவு அவரோடு உண்டுவிட்டு மாலை நான்குமணி போல வீட்டிற்கு சென்றாள். உடை மாற்றி மாமியாருடன் பேசிக் கொண்டே மாலை தேநீருடன் இளையராஜாவை இருவரும் அலசிக் கொண்டிருந்தனர். இவள் எஸ்.பி.பி பாடலைப் புகழ்ந்து கொண்டிருக்க, அவர் எம்.எஸ்.வி என தன்னுடைய விருப்ப பாடகரின் புராணத்தோடு சிறு விவாதத்தையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
காயத்ரியின் அலைபேசி இசைத்தது. மாமியாரிடம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தவள், ரகுராம் பெயரைப் பார்த்ததும், “என்ன ராம்? இந்த டைம்ல கால் பண்ணி இருக்க?” என அழைப்பை ஏற்று யோசனையாகக் கேட்டாள்.
“ஹம்ம்... சும்மாதான். என்ன பண்ற காயூ?” அவன் குரலில் லேசான தயக்கம்.
“என்ன டா வேள்வி. என்ன பண்ணுவேன். சும்மாதான் அம்மாவோட பேசிட்டு இருக்கேன். உனக்கென்ன வேலை இல்லையா? என் கூட கடலை போட கால் பண்ணிட்டீயா?” என மெல்லிய சிரிப்புடன் கேட்டாள். அங்கே அவனின் முறைப்பு இவளுக்கு இங்கே தெரிந்திருக்க, உதடுகளில் புன்னகை நெளிந்தது.
“ப்ம்ச்... நைட் டின்னருக்கு வெளிய போகலாம்ன்னு கேக்க கூப்ட்டேன். வரீயா? இல்லையா?” அவன் கடுப்புடன் கேட்க, ஒரு நிமிடம் காயத்ரியின் முகம் திகைத்தது.
“ராம்... க்ராஸ் டாக் எதுவும் வந்துடுச்சு போல டா. இன்னொரு தடவை என்னென்னு சொல்லு டா!” என அவள் அதிசயித்துக் கேட்க, “காயூ...” எனப் பல்லைக் கடித்தவன், “நான்தான் கேட்டேன். டின்னர் போகலாமா? வேணாமா?” எனக் கடிந்தான்.
“ச்சு... இப்போதான் இருந்திருந்து என் புருஷனுக்கு ரொமான்டிகா நடக்கணும்னு தோணி இருக்கு. வேணாம்னு சொல்லுவானேன். வரேன் டா!” என சிரிப்புடன் குதூகலித்தாள் மனைவி.
“ஹம்ம்...” என சில நொடிகள் தயங்கியவன், “சேரி கட்டிக்கோ. ஜீன்ஸ் டீ ஷர்ட் எல்லாம் வேணாம்!” என்றான் முணுமுணுப்புடன்.
“ஓஹோ... அப்போ ஜீன்ஸ் டீ ஷர்ட்டே போட்றேன் ராம்!” என அவள் வெகு சிரத்ததையாய்க் கூற, ராமின் பற்கள் நறநறக்கும் சத்தம் இங்கு வரைக் கேட்டிருக்க கூடும் என்பதற்கு சாட்சியாக இவளது முகத்தில் குறும்பு சிரிப்பு நிரம்பி வழிந்தது.