• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

இஷ்டம் - 25 💖 (முன் இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 25 💖
காயத்ரிக்கும் ரகுவிற்குமான செல்ல சண்டை முதல் ஊடலாக உருப்பெற்று ஒருவாரம் கடந்திருந்தது. ரகுராம் இரண்டு முறை முயற்சி செய்து அவளிடம் பேச முனைய, மனைவி முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். இவனும் அதற்கு மேலே கெஞ்சவில்லை‌. அவனுக்குமே எப்போதும் ஒட்டி உரசிக் கொண்டே இருப்பதற்கு இதுபோல செல்ல சண்டைகளும் நிரம்ப பிடித்தது. வேண்டுமென்றே அவனிடம் வம்பளக்கும் காயத்ரி மனைவியாய் வசீகரித்தாள்.
காலையில் குளம்பியில் உப்பைக் கலந்து குடித்தவளை தாய் தந்தை முன்னே திட்ட முடியாது முறைத்து வைப்பான். அவன் இஸ்திரி செய்து வைத்திருந்த சட்டையை கசக்கியவளை இவன் காட்டுக் கத்தலாய் கத்த, அவள் அசையவில்லை‌. வேலை முடிந்து அவன் சோர்வாய் உள்ளே நுழைய, வேண்டுமென்ற குளிரூட்டியின் வெப்பநிலையை அதிகரீப்பவளை ஆனமட்டும் இவன் முறைத்தான். இரவு அவனுக்கு படுக்க இடம் கொடுக்காது விளிம்பில் தள்ளியிருந்தாள். காலை முதல் மாலை வரை ஏதோ ஒரு வகையில் அவனை வம்பிழுத்துக் கொண்டு தன்னிருப்பை அவனுக்குப் புரிய வைக்கும் காயத்ரி ரகுராமிற்கு வெகு புதிது‌. எப்போதும் பொறுப்பாய், நிமிர்வாய், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண் தானா இத்தனை சேட்டை செய்கிறாள் என அவனுக்கே சில நேரம் ஆச்சர்யம் பொங்கும்.
மாமியார் மாமனாரிடம் நல்ல மருமகள். வெளியே அனைவருக்குமான காயத்ரி முற்றிலும் வேறானவள். அவளுடைய விருப்ப வட்டத்தில் இருக்கும் ரகுராமிற்கு மட்டுமே காயத்ரியின் மற்றொரு பரிமாணம் தெரியும். அவனும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் அனைத்தையும் சிரிப்பும் முறைப்புமாய்க் கடக்கப் பழகியிருந்தான்.
அன்றைக்கு காலையில் காயத்ரிதான் முதலில் கண்விழித்தாள். ரகுராம் வலதுகையைத் தூக்கி முகத்தை மறைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். இருவருக்கும் இடையே இந்தியா பாகிஸ்தானுக்கான இடைவெளி. அதில் முகத்தில் முறுவல் பூக்க, மெதுவாய் நகர்ந்து அவனுக்கு அருகே சென்றவள், “ராம்...” என்றாள் மெல்லிய குரலில்.
“ஹம்ம்...” என்று முனங்கியவனிடம் பெரிதாய் பதில் இல்லை.
“ராம்...” இவள் மெலிதாய் அவனை உலுக்க, அந்தக் கைகளைப் பிடித்திழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவன் மேலே விழுந்தவள், “ராம்... ஹேப்பி பெர்த் டே டா!” என்றாள் அவன் தாடியடர்ந்த கன்னத்தில் முத்தமிட்டு. தூக்கத்திலும் அவனது முகத்தில் புன்னகை பூத்தது.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி!” என அவள்புறம் திரும்பி நன்றாய் அணைத்தான். காலைக் குளிரில் அவன் குரலின் கரகரப்பு இவளை ஏதோ செய்திருக்க கூடும்.
“உன் வாய்ஸ் ரொம்ப செக்சியா இருக்கு டா!” என அவன் செவியோரம் காயத்ரி முணுமுணுக்கவும், அவன் படக்கென கண்ணை விழித்திருந்தான். இவள் சிரிப்புடன் அவனிடமிருந்து விலகினாள். ரகுராம் முகத்தில் மெல்லிய சிரிப்பும் முறைப்பும் படர்ந்தது.
“என்ன... என்ன லுக்கு?” உதட்டை வளைத்துக் கொண்டே எழுந்தவள் காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே சென்று தனக்கும் கணவனுக்கும் குளம்பியை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“பெர்த் டே ஸ்பெஷல் சில்லி பவுடர் காஃபியா காயூ?” என ரகுராம் கேலியாய் கேட்டுக் கொண்டே குளம்பியைப் பருக, கண்ணைச் சுருக்கி அவனை முறைத்தாள். அவன் அதை அசட்டை செய்தான். காயத்ரிதான் முதலில் குளித்து முடித்து கணவன் அவள் பிறந்தநாளிற்காக எடுத்துக் கொடுத்த அடர் நீல வண்ண காதிப் புடவையை உடுத்தி தலையில் துண்டோடு வந்தாள். அலைபேசியில் முழ்கி இருந்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவளது வழலைக் கட்டியின் மணம் இவனை நாசியை நிறைத்தது.
பளிச்சென்று குளித்து வந்த மனைவி அவனது கவனம் ஈர்த்தாள். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த புடவை அது. அத்தனை பாந்தமாக காயத்ரியைத் தழுவி இருந்தது. அவளுடைய வெள்ளை நிறத்திற்கு அடர் நிறம் வெகுவாக பொருந்திப் போக, பார்வை அப்படியே கீழறிங்கியது. ஒரு முறை மனைவியை கண்களால் அளந்தவன் தொண்டையைச் செருமினான். பார்வை தறிகெட்டு அவளில் படரவும், சங்கடத்துடன் பிடரியைக் கோதினான். பின்னர் தொண்டையைச் செருமி தன்னை சரி செய்து கொண்டு,
“நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே காயூ?” எனக் கேட்க, “பரவாயில்லை ராம். எப்படியும் மறந்திடுவன்னு நினைச்சேன். ஞாபகம் வச்சிருக்க போல?” எனக் கேலிக் குரலில் புருவத்தை உயர்த்தியவளை கணவன் முறைத்தான்.
“முறைச்சது போதும் டா. அந்த கவர்ல உனக்கு ட்ரெஸ் இருக்கு. குளிச்சிட்டு அதைப் போட்டுக்கோ. கோவிலுக்கு வேற போகணும். சோ சீக்கிரம் கிளம்பு!” என காயத்ரி அதட்ட, இவன் அசிரத்தையாய் அந்தப் பையைப் பிரித்தான்.
“சீ... என்ன கலர் டி இது பஞ்சு மிட்டாய் கலரு. வேற கலரே உங்களுக்கு கிடைக்கலையா?” அவன் தீயாய் முறைக்க, “ப்ம்ச்... இது பேபி பிங்க் ராம். உனக்கு நல்லா இருக்கும். நானும் கௌதமிமாவும் சேர்ந்து செலக்ட் பண்ணோம்!” அவள் ரோஷமாய் கூறினாள்.
“நல்லா செலக்ட் பண்ணி இருக்கீங்க ரெண்டு பேரும்!” அவன் கடுப்புடன் கூற, “ரொம்ப பண்ணாத ராம்‌. குளிச்சிட்டு இந்த ஷர்ட்தான் நீ போடணும். வேற போட்ட மவனே மூனு வேளையும் உப்பு போட்ட காஃபி தான்!” என மிரட்டிவிட்டு அகன்றவளை பார்வையாலே முறைத்து தள்ளியவன் அந்த சட்டையைத்தான் அணிந்து வந்தான்.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்!” என கௌதமி மகன் உச்சியில் முத்தமிட, தேவராஜ் வாழ்த்தோடு மகனை அணைத்துக் கொண்டார். காயத்ரி மென்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள். கௌதமி அதிகாலையிலே எழுந்து மகனின் பிறந்த நாளுக்கென தடபுடலாக சமைத்திருந்தார். ரகுவால் நிறைய சாப்பிட முடியவில்லை. இருந்தாலும் தாயின் மனம் நோக கூடாது என அனைத்திலும் கொஞ்சமாய் உண்டான். வயிறும் மனதும் நிறைந்து போயிருந்தது.
“ராம்... நீயும் காயூவும்‌ அப்படியே கோவிலுக்குப் போய்ட்டு வேலைக்குப் போங்க!” கௌதமி கூற, தலையை அசைத்தவன் கிளம்பி அமர, காயத்ரி தலையை உலர்த்தி பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். இவன் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தான். மல்லிகைப் பூவை கையில் வைத்துக் கொண்டு, “ஹேர் பின் எங்க போச்சு?” என முணுமுணுத்துக் கொண்டே விழிகளால் துழாவி கொண்டை ஊசியைக் கையில் எடுத்தவள், பூவை தலையில் வைத்தாள்.

நெற்றி வெறுமையாக இருக்க அதில் குங்குமத்தை வைத்தவள் லேசாய் சிலுப்பிக் கொண்டிருந்த முடியை சரி செய்தாள். புடவையின் மடிப்பை நீவிவிட்டாள். ஒருமுறை கண்ணாடியில் தன்னைப் பார்த்து திருப்தியானவள், “ராம்... கிளம்பலாம் டா!” என அவசரமாய் கைப்பையை எடுத்து மாட்டினாள். இன்றைக்கு இரண்டு மணிநேரம் அனுமதி வாங்கிவிட்டிருந்தாள்.
“ஹம்ம்... போலாம் டி...” என்றவன் பார்வை அவள் நெற்றியிலிருந்த குங்குமத்தை தொட்டு கழுத்தில் மின்னிய தங்கத்தாலியில் நிலைத்தது. அழகாய் இருந்தாள் காயத்ரி. யாராக இருந்தாலும் ஒருமுறை மீண்டும் பார்க்க வைக்கும் முகம். அளவான கூந்தல், கொஞ்சம் பூசினார் போன்ற தேகம், தீர்க்கமான கண்கள், கூர் மூக்கு, சாயமிடாத உதடுகள் என பார்வை மனைவியை ஆராய்ந்தது. என்னவோ இன்றைக்கு அவள் தன்னை ஈர்ப்பதாய் ஒரு எண்ணம். எப்போதும் போலத்தான் இருந்தாள் காயத்ரி. ஆனால் இவனுக்குத்தான் என்னவோ போல இருந்தது. தோழியாய் பார்த்தவரை கண்ணியம் காத்தவனின் விழிகளின் கண்ணியம் இன்றைக்கு கரைந்து கொண்டிருந்தது.
அமைதியாய் மகிழுந்தை செலுத்தினான். காயத்ரி தந்தைக்கும் அழைத்து பேசி மதியம் அங்கே வருகிறேன் எனக் கூறி வைத்தவள், “என்ன பார்வை அடிக்கடி என்னை உரசுது ராம்?” என பக்கவாட்டாய்த் திரும்பிக் கேட்டாள்.
“அழகா இருக்கன்னு பார்த்தேன் டி...” அவன் கூறவும், “சே... அவ்ளோதானா டா? காலைல மெனக்கெட்டு எழுந்து குளிச்சி மேக்கப் போட்டா ஒரே வார்த்தைல முடிச்சுட்ட? உனக்கெல்லாம் எப்படிடா லவ் செட்டாகும். நான் மட்டும் உன்னை லவ் பண்ணலைன்னா இந்த ஜென்மத்துல உனக்கெல்லாம் காதல் வாச்சிருக்காது டா!” என்றாள் முறைப்பாய்.
“ஏய்... அழாக இருக்க. அதான் சொல்லிட்டேனே. வேற என்னடி சொல்ல சொல்ற?” அவன் சிரிப்புடன் கேட்க,
“அதை எப்போ சொல்லி இருக்கணும். காலைல ரூம்லயே சொல்லி அப்படி இப்படி ஒரு ரொமான்டிக் சீனை ஓட்டி முடிச்சு கார்ல வந்ததும் ஆஹோ ஓஹோன்னு என்னையும் என் அவுட் பிட்டையும் புகழ்ந்திருக்கணும் டா!” குறைபடித்தாள் மனைவி.
“அதெல்லாம் எனக்கு வரலை டி. அதுவும் இல்லாம கூடவே இருக்கல்ல. அதானலே பெருசா எதுவும் தோண மாட்டுது!” அவன் மனதில் உள்ளதை உள்ளபடியே உரைத்தான்.
“சச் அ அன் ரொமான்டிக் பெர்சன் டா நீ. எனக்கு வாய்ச்சது அவ்வளோதான்!” அவள் முணுமுணுக்க, ரகுவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“தட்ஸ் யுவர் ஃபேட் டி. நீயா சூஸ் பண்ணது!” ரகுராம் சிரிக்க, “ஆமா... ஆமா. ரொம்ப பெருமை பட்டுக்கணும் டா!” கலாய்த்தாள் மனைவி.
“ஹம்ம்... நான் உன்னை மாதிரி கஞ்சம் எல்லாம் இல்ல டா. இந்த பேபி பிங்க் கலர் ஷேர்ட் உன்னோட கலர்க்கு சூப்பரா இருக்கு. சும்மாவே அலைபாயுதே கார்த்திக்னு பீட்டர் விடுவ. இப்போ சொல்லவா வேணும். ஷார்ப் ஐய்ஸ் அண்ட் நோஸ். அப்புறம் பிங்க் கலர் லிப்ஸ். நல்ல பிட்டான பாடின்னு நீ செம்ம ஃபிகர் டா!” என அவள் வர்ணித்தலில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
“போதும் டி... கோவில் வந்துடுச்சு. இறங்கு!” என மெலிதாய் அதட்டினான். இருவரும் கடவுளை தரிசித்துவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
“நான் ஆட்டோ இல்ல பஸ்ல வீட்டுக்குப் போய்க்கிறேன் ராம்...” என்றவளுக்கு தலையை அசைத்து விடை கொடுத்தான் ரகுராம். காயத்ரிக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் வேலை முடிய தந்தையைப் பார்க்க சென்றாள். மதிய உணவு அவரோடு உண்டுவிட்டு மாலை நான்குமணி போல வீட்டிற்கு சென்றாள். உடை மாற்றி மாமியாருடன் பேசிக் கொண்டே மாலை தேநீருடன் இளையராஜாவை இருவரும் அலசிக் கொண்டிருந்தனர். இவள் எஸ்‌.பி.பி பாடலைப் புகழ்ந்து கொண்டிருக்க, அவர் எம்‌.எஸ்.வி என தன்னுடைய விருப்ப பாடகரின் புராணத்தோடு சிறு விவாதத்தையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

காயத்ரியின் அலைபேசி இசைத்தது‌. மாமியாரிடம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தவள், ரகுராம் பெயரைப் பார்த்ததும், “என்ன ராம்? இந்த டைம்ல கால் பண்ணி இருக்க?” என அழைப்பை ஏற்று யோசனையாகக் கேட்டாள்.
“ஹம்ம்..‌. சும்மாதான். என்ன பண்ற காயூ?” அவன் குரலில் லேசான தயக்கம்.
“என்ன டா வேள்வி. என்ன பண்ணுவேன். சும்மாதான் அம்மாவோட பேசிட்டு இருக்கேன். உனக்கென்ன வேலை இல்லையா? என் கூட கடலை போட கால் பண்ணிட்டீயா?” என மெல்லிய சிரிப்புடன் கேட்டாள். அங்கே அவனின் முறைப்பு இவளுக்கு இங்கே தெரிந்திருக்க, உதடுகளில் புன்னகை நெளிந்தது.
“ப்ம்ச்... நைட் டின்னருக்கு வெளிய போகலாம்ன்னு கேக்க கூப்ட்டேன். வரீயா? இல்லையா?” அவன் கடுப்புடன் கேட்க, ஒரு நிமிடம் காயத்ரியின் முகம் திகைத்தது.
“ராம்... க்ராஸ் டாக் எதுவும் வந்துடுச்சு போல டா. இன்னொரு தடவை என்னென்னு சொல்லு டா!” என அவள் அதிசயித்துக் கேட்க, “காயூ...” எனப் பல்லைக் கடித்தவன், “நான்தான் கேட்டேன். டின்னர் போகலாமா? வேணாமா?” எனக் கடிந்தான்.
“ச்சு... இப்போதான் இருந்திருந்து என் புருஷனுக்கு ரொமான்டிகா நடக்கணும்னு தோணி இருக்கு. வேணாம்னு சொல்லுவானேன். வரேன் டா!” என சிரிப்புடன் குதூகலித்தாள் மனைவி.
“ஹம்ம்...” என சில நொடிகள் தயங்கியவன், “சேரி கட்டிக்கோ. ஜீன்ஸ் டீ ஷர்ட் எல்லாம் வேணாம்!” என்றான் முணுமுணுப்புடன்.
“ஓஹோ... அப்போ ஜீன்ஸ் டீ ஷர்ட்டே போட்றேன் ராம்!” என அவள் வெகு சிரத்ததையாய்க் கூற, ராமின் பற்கள் நறநறக்கும் சத்தம் இங்கு வரைக் கேட்டிருக்க கூடும் என்பதற்கு சாட்சியாக இவளது முகத்தில் குறும்பு சிரிப்பு நிரம்பி வழிந்தது.
 
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
"என்னமோ பண்ணித் தொலை டி...” என அவன் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க, “க்யூட் ராம்!” என திரையில் தெரிந்த அவன் புகைப்படத்தை எடுத்து உதடுகளில் ஒட்டிக் கொண்டாள்.
பின்னர் கௌதமியிடம் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். சைந்தவியுடனான திருமணத்திற்கென்று ரகுராம் எடுத்துக் கொடுத்த சேலையை உடுத்தாது அப்படியே வைத்திருந்தவள், அதை எடுத்து அதற்குப் பொருத்தமான மேல் சட்டையை தேர்ந்தெடுத்தாள். மீண்டும் ஒருமுறை அசதிப் போக குளித்து முடித்து வெகு சிரத்தையாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
ரகுராம் ஆறுமணிக்குத்தான் வந்தான். உள்ளே நுழைந்தவனின் புருவம் ஒரு நொடி ஏறியிருந்தது. “கார்ஜியஸ் காயூ!” என அவன் மெலிதாய் முணுமுணுக்க, அவள் செவிகளிலும் விழுந்தது.
“ஓஹோ.‌.!” என உதட்டை வளைத்தவள், “நான் ரெடியாகிட்டேன் ராம். டென் மினிட்ஸ்ல வர்ற நீ...” என்றவள் கூடத்திற்கு சென்றுவிட இவனும் பத்து நிமிடத்தில் தயாராகி வந்தான். கௌதமியிடம் கூறிவிட்டு இருவரும் அகன்றனர்
‌அன்றைக்கு தேவராஜிற்கு முக்கியமான சிகிச்சை ஒன்றிருக்க, அவர் வீடு வந்திருக்கவில்லை .
“எங்கப் போறோம் ராம்?” என செல்லும் வழியை அவதானிக்க முடியன்றபடியே காயத்ரி வினவினாள்.
“இட்டாலியன் ஃபோர்ட்!” அவன் கூற, காயத்ரிக்கு அந்த உணவகம் வெகு பரிட்சயம்தான்.
“அதெப்படி ராம் டின்னர் டேட்க்கு என்னை சேரி கட்டீட்டு வர சொன்ன. நீ மட்டும் க்ரீம் கலர் ஷர்ட் டார்க் காஃபி கலர் பேண்ட்னு ட்ரென்டியா வந்திருக்க. ப்ளான் பண்ணித்தானே பண்ண நீ! பழிவாங்கிட்டல்ல?” ஆன மட்டும் முறைத்தவளிடம் அவன் கடகடவென சிரித்திருந்தான்.
“நீ எப்படி இருந்தாலும் அழகாதான் தெரிவ காயூ...” சிரிப்பினூடே கூறியவனை கடுகடுத்துப் பார்த்தவள் ஜன்னலின் புறம் திரும்பிக் கொண்டாள். அவர்கள் உணவகத்திற்குள் நுழைய, அனைவருமே நவநாகரீக உடையணிந்து வந்தனர். காயத்ரி மட்டும் சேலை அணிந்திருக்கவும் மெல்லிய கூச்சத்துடன் அவர்களுக்கென முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்.

ரகுராம் அருகே அமர, “நீ வீட்டுக்கு வா ராம். உன்னை வச்சுக்கிறேன்!” என அவள் அடிக்குரலில் போலியாய் மிரட்ட, தொண்டையைக் கனைத்தவன், “எனக்கு ஓகே தான் டி...” என்றான் பார்வையை அவள் மீது மேயவிட்டபடி.
காயத்ரி புரியாது அவனைப் பார்க்க அதற்குள்ளே, “வாட் டூ யூ வாண்ட் சார்?” எனக் கேட்டு ஊழியர் ஒருவன் வந்து நின்றான். அவனிடம் இருவரும் தங்களுக்கு வேண்டியதை கூறிவிட்டு பார்வையை அப்படியே உணவகத்தின் சுற்றுப் புறத்தில் பதித்திருந்தனர். திருச்சியின் நான்கு வழி சாலையில் அமைந்திருந்தது அந்த உணவகம். இத்தாலியன் வகை உணவிற்கு பெயர் போனது. சுற்றிலும் கண்ணாடித் தடுப்போடு குட்டி குட்டியாய் ஆங்காங்கே விளக்குகள் ஒளிர்ந்து மிளிர, பின்னணியில் மெலிதாய் இசையை கசிய விட்டிருக்க, அவர்கள் மேஜை மீதிருந்த மெழுகுவர்த்தி இன்னுமே அந்த சூழ்நிலைக்கு உயிர் கொடுத்தது.
மெலிதாய் குளிரூட்டியின் குளிர் உடலை துளைக்க, “செம்ம ஆம்பியன்ஸ் ராம். சேன்சே இல்ல!” என்றவள் மேற்கூரையைப் பார்த்துவிட்டு, “இன்டீரியர் கூட கேச்சியா இருக்கு டா...” என்றாள் அந்த சூழ்நிலையை ரசித்தபடி. ரகுராம் அனைத்திற்கும் ஹம்ம் எனப் பதிலளித்தபடி மெல்லிய சாம்பலும் நீலமும் கலந்த மென்பட்டு சேலையில் மிளிர்ந்த மனைவியைத்தான் கண்களால் களவாடிக் கொண்டிருந்தான்.

கன்னத்திற்கும் வலது காதிற்கும் இடையே குட்டியாய் இருந்த மச்சம் இத்தனை வருடங்களில் இன்றைக்குத்தான் அவன் கண்களுக்கு புலப்பட்டிருக்க கூடும். அதை வருடிப் பார்க்கும் ஆவல் எழுந்தது. தொண்டைக் குழி ஏறியிறங்க, பார்வையைக் கட்டுக்குள் வைக்க முயன்றான். எழில் கூடி தன் முன்னே மெல்லிய சிரிப்புடன் பேசிக் கொண்டிருப்பவளிடம் கைக்கட்டி ரசிப்பது அவனுக்கு பேரவஸ்தையாய் இருந்தது.
“ராம்... அங்க என்ன வேடிக்கைப் பார்க்குற நீ?” தன்னைத்தான் அவன் கவனிக்கிறான் என்பதை உணராத காயூ அதட்டலிட, அதில் தெளிந்தவன், “என்ன... என்ன டி?” என்றான் தடுமாறி.
அவனை முறைத்தவள், “பின்னாடி என்ன டா பார்வை? பக்கத்துல பொண்டாட்டி இருக்காளே, அவளை சைட்டிப்போம்னு என்னைக்காவது தோணியிருக்கா உனக்கு? ஹம்ம்? அடுத்த பொண்ணுங்களைப் பார்த்துட்டு இருக்க?” அடிக்குரலில் கடிந்தாள் பெண். ரகுராம் புரியாது காயத்ரிக்கு பின்னே எட்டிப் பார்க்க இரண்டு இளம் யுவதிகள் அமர்ந்திருந்தனர். அழகாய் இருந்தார்கள் தான்‌. ஆனால் இந்நொடி காயத்ரியைத் தவிர யாரும் அழகாய் அவன் கண்ணிற்கு தெரிய சர்வ நிச்சயமாய் வாய்ப்பில்லை.
‘டீனேஜ் பையன் போல பிஹேவ் பண்ற ராம்!’ அலைபாய்ந்த மனதையும் விழிகளையும் அதட்டி அடக்கியவன், “ஹம்ம்... பொண்டாட்டி அழகா இருந்தா நான் ஏன்டி மத்த பொண்ணுங்களைப் பார்க்க போறேன்...” அவளை வம்பிழுத்தான்.
அதில் அவனை முறைத்தவள், “வீட்டுக்கு வாடா மவனே. எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு இருக்கு...” என்றவாறே தன் முன்னே இருந்த உணவை உண்ணத் தொடங்கினாள். காயத்ரிக்கு ஒரு வாய் உணவை உள்ளிறக்கிப் பின்னர், “டேஸ்டி ராம்...” என ரசித்து மெதுவாய் உண்டாள். ரகுராம் அவளது பாவனையில் சின்ன புன்னகையுடன் சாப்பிட்டான்.
வாங்கிய எதையும் வீண் செய்து விடக் கூடாது என காயத்ரி முடிந்தளவு உண்ண, “போதும் காயூ... நிறைய சாப்பிடாத. வேஸ்டான நோ ப்ராப்ளம்!” என அதட்டியவனை மூக்கைச் சுருக்கிப் பார்த்தவள், “நான் சாப்பிடறதைத்தான் நீ பார்த்துட்டு இருந்தீயா டா?” என்ற அதட்டலுடன் உண்டு முடித்து பணத்தை செலுத்திவிட்டு இருவரும் மகிழுந்தில் ஏறினர்.
ஏறியதும் இருக்கையில் சாய்ந்தமர்ந்தவள், “ப்பா... ரொம்ப நாளைக்குப் பிறகு ஹெவியா சாப்ட்டிருக்கேன். இப்போ போய் பெட்ல விழுந்தா சுகமா தூக்கம் வரும்!” என்றாள் உண்ட மயக்கத்துடன்.

திசைமாற்றியில் கையை வைத்திருந்தவன் நொடியில் அவளைத் திரும்பி முறைத்துவிட்டு, “ப்ம்ச்... நம்ப வீட்டுக்குப் போய் தூங்க போறதில்ல இப்போ!” என்றான் கடுப்புடன்.
‘நான் ஒன்னு நினைச்சா இவ ஒன்னு சொல்லுவா...’ மனதிற்குள் கடுகடுத்தான்.
“வேற எங்கேயும் போகுற ப்ளானா ராம். பட் எனக்கு தூக்கமா வருது டா!” என்று சலித்தாள்.
“ப்ம்ச்... உன்னலாம் ரொமான்டிகா லாங் ட்ரைவ் கூட்டீட்டுப் போகலாம்னு நினைச்சது என் தப்பு...” அவன் முறைக்கவும், காயத்ரி முகத்தில் முறுவல் பூத்தது.
“சரி விடு... போகலாம். ஹைவேஸ்ல வண்டியை விடு. பட் ஹை ஸ்பீட்ல போகக் கூடாது. ஸ்பீட் கன்ட்ரோலா இருக்கணும்!” என்றாள் அவன் தோளில் தட்டி நிமிர்ந்து அமர்ந்து. அதில் சமாதானமானவன் தலையை அசைத்து அப்படியே பிரதான சாலையில் மகிழுந்தை செலுத்தினான். இரவு நேரத்தில் வெகுவாய் ஜனத்திரள் காணப்பட்டது. ஆங்காங்கே விளக்குகள் எரிந்து இரவை விரட்டப் போராடிக் கொண்டிருக்க, ஜன்னலில் ஊடுருவிய காற்றில் காயத்ரிக்கு விழிகள் சொக்கியது. தூங்கினால் ரகுராம் முகத்தை தூக்க கூடுமென எண்ணி முயன்று விழிகளை விரித்து வைத்திருந்தாள்.
“ரொம்ப கஷ்டப்பட்டு தூக்கத்தை கன்ட்ரோல் பண்ண வேணாம் காயூ!” அவன் முணுமுணுக்க, “ஸ்வீட் ராம்...” என அவன் கன்னத்தைக் கிள்ளியவள் சில பல நிமிடங்களிலே உறங்கிப் போனாள்.
“கும்பகர்ணி...” என முணுமுணுத்தான். அப்படியே கைப்போன போக்கில் சாலையில் சென்றான். சிறிது நேரத்தில் மனைவி அவன் தோளில் சாய்த்து அவனது கையை இறுகப் பிடித்துக் கொள்ள மெதுவாய் முகத்தைப் புன்னகை ஆக்கிரமித்தது. அப்படியே குனிந்து அவள் நெற்றியில் மென்முத்தமிட்டான்.
“லவ் யூ ராம்!” என அவள் உதடுகள் முணுமுணுக்க, “இதெல்லாம் நல்லா சொல்லு டி. வெளிய கூட்டீட்டு வந்தா சாப்ட்டு தூங்கி வழி!” சலுகையாய் அலுத்துக் கொண்டவனுக்குள் சுகமாய் மனைவி இறங்கினாள். தோழி என்ற வரையறைகளை எல்லாம் இன்றோடு தகர்த்து எறிய வேண்டும் என்றொரு வேட்கையும் எண்ணமும் எழ, மூச்சை இழுத்துவிட்டான்.
சிறிது நேரம் சுற்றியவன் பின்னர் வீட்டிற்கு சென்று மகிழுந்தை நிறுத்தினான். இன்னுமே காயத்ரி அசையாது தூங்க, “காயூ... வீட்டுக்கு வந்துட்டோம். எழுந்திரி!” என்றான் அவள் கன்னத்தில் மென்மையாய் தட்டியபடி.
“ஹம்ம்...” என்றவாறே கண்ணை ஒரு கையால் கசக்கி எழுந்து கீழே இறங்கியவள் கண்களில் தூக்கம் அப்படியே மிச்சம் இருந்தது. அந்த தூக்கம் கெடாதவாறு அறைக்குள் நுழைந்து உறங்க வேண்டும் என்ற அவளது எண்ணம் புரிந்தவன், “காயூ... ஃபேஸ் வாஷ் பண்ணி ப்ரெஷ்ஷா உள்ள வா!” என்றான் மெல்லிய குரலில்.
கண்களை சிமிட்டி அவன் முகத்தை யோசனையாகப் பார்த்தவள், “ரூம்க்குள்ள போய் கிரிக்கெட்டா விளையாட போற. தூங்கதானே போறோம். அதுக்கு எதுக்கு நான் ப்ரெஷ்ஷா இருக்கணும்?” எனக் மெலிதாய் கடுப்புடன் கேட்டாள்.
“சொன்னதை செய் டி...” அவன் அதட்ட, வாய்க்குள் எதையோ முனங்கிவிட்டு முகம் கழுவினாள். இருவரும் உள்ளே நுழைய இன்னுமே தூக்க கலக்கத்தில் தட்டுத் தடுமாறி நடந்தாள் காயத்ரி.
“கும்பகர்ணி... தடுமாறாம ஒழுங்கா நட டி!” அவன் அதட்ட, “நான் ஒன்னும் தடுமாறலை...” என ரோஷத்துடன் தெளிவாய் நடந்தவளின் தூக்கம் காத தூரம் சென்றிருந்தது.
இருவரும் உள்ளே நுழைய, ரகுராம் கட்டிலில் அமர்ந்தான். அவன் பார்வை மனைவி மீது படிந்தது. தலையை கலைத்து தூக்கி கொண்டையிட்டவள் காதிலும் கழுத்திலும் அணிந்திருந்த நகையை அகற்றி அலமாரியில் வைத்துப் பூட்டியவள் நிலைபேழையைத் திறந்து வரிசையாய் இருந்த உடைகளில் ஒன்றை உருவி தோளில் போட, அலைபேசி இசைத்தது.
ஷண்முகிதான் அழைத்திருந்தார். முகம் நொடியில் மலர, எடுத்து உற்சாகத்துடன் அவரிடம் பேசினாள். இருபக்கமும் முகமன் விசாரித்து முடிய, “ஏன் டி... கல்யாணமாகி இத்தனை மாசம் ஆச்சு. நல்ல செய்தி எதுவும் இல்லையா டி?” என ஷண்முகி தான் அழைத்த நோக்கத்திற்கு வந்தார்.
‘ம்ப்ச்... ஒரு கிஸ்ஸூக்கே வழியில்லையாம். இதுல புள்ளை குட்டிக்கு போய்டுச்சு இந்த அம்மாச்சி!’ என நினைத்தவள், “அதெல்லாம் பொறுமையா சொல்றோம் அம்மாச்சி!” என்றாள் இழுவையாக.
“இப்போதான் உனக்கு இருபதுன்னு நினைப்பா டி. ஹம்ம்... காலகாலத்துல நல்ல செய்தி சொல்ற வழியைப் பாரு!” அவர் அதட்ட, “ஏம்மாச்சி... அவன்கிட்ட போன் தரேன். இதே வார்த்தையில இதே டோன்ல மறுபடியும் சொல்றீயா?” என நக்கலாகக் கேட்டாள்.
“ஏய்... மாப்பிள்ளைகிட்டே போய் இதெல்லாம் கேட்க முடியுமா டி?” அவர் அதட்ட, “அதானே... உனக்கு நான்தான் கிள்ளு கீரை. ஃபோனை வை அம்மாச்சி. நாளைக்கு பேசலாம். நீ போய் தூங்கு...” எனக் கூறி அலைபேசியை வைத்தாள். ரகுராமிற்கு அவள் பேசியது எல்லாம் காதில் விழவில்லை. ஆனாலும் பார்வை அவளிடமிருந்து எங்கேயும் விலகாது சண்டித்தனம் செய்தது.
“ஏசி போட்டும் உனக்கு ஏன் ராம் வேர்த்து ஊத்தது?” எனக் கேட்ட காயத்ரி ஜன்னல் கதவை திறக்க, குபுகுபுவென ஈரக்காற்று உள்ளே நுழைந்தது.
“பேசாம ஜன்னலைத் திறந்து வச்சுடலாம் போல. ஏசியே தேவையில்லை!” என்றவளைப் பார்த்த ரகுராம், “காயூ... இங்க வா...” எனத் தலையை அசைத்து அழைத்தான்.
“டூ மினிட்ஸ் ராம். ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். அப்புறம் பேசலாம்!” என அவள் இரண்டு எட்டுகள் வைக்க, “நோ நீட் டூ சேஞ்ச் ட்ரெஸ். நீ முதல்ல இங்க வாடி...” என்றான் அதட்டலாய்.
மூக்கை சுருக்கி அவனை முறைத்தவள், “என்னடா.... அப்போதுல இருந்து அதட்டிட்டே இருக்க. என்னவாம் உனக்கு?” என அவனருகே வந்து கேட்டாள்.
நிமிர்ந்து தொண்டையைச் செருமி உதடுகளை ஈரப்படுத்தியவன், சில நொடிகள் தயங்கி, “ஐ வாண்ட் டூ ஃபீல் யூ காயூ. முழுசா வொஃய்பா உன்னை உணரணும் டி...” என்றான் அவள் விழி பார்த்து. ஜன்னல் வழி வந்த குளிர் காற்றோடு அவன் குரல் கரகரத்துப் போயிருந்தது. கண்கள் முழுவதும் மயக்கத்துடன் பேசும் ரகுராம் அவளுக்குப் புதிது‌. அவன் மென்னுணர்வுகள் தாங்கி வந்த வார்த்தைகளைக் கிரகிக்க முயன்ற காயத்ரியிடம் நொடி நேர திகைப்பு. பின்னர் தலையைப் பின்னால் சரித்து சிரிக்கத் தொடங்கினாள்.
“விளையாடாத ராம்...” என்றாள் அதே புன்னகையுடன்‌.
“ஏய்... நான் சீரிஸா சொல்றேன் டி!” அவன் பார்வையில் இப்போது முறைப்பு கூடியது.
“சரி... நம்புறேன் விடு. நான் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்ததும் சீரியஸா பேசுனீயா? இல்லை விளையாட்டுக்குப் பேசுனீயான்னு டிஸ்கஸ் பண்ணலாம்!” என நகரச் சென்றவளின் கையைப் பிடித்திழுத்து அவள் வயிற்றில் முகம் புதைத்தவன், “காயூ... டீனேஜ் பையன் மாதிரி பிஹேவ் பண்றேன் டி நான்!” என்றான் முணுமுணுப்புடன். அவள் முகத்தில் மெலிதாய் புன்னகை படர, ஆதுரமாய் அவன் தலையைக் கோதினாள்.‌
“என்னாச்சு ராம்?” எனக் கேட்டாள் அவன் தலையைக் கலைத்து.
அவள் அணைப்பிலிருந்து விலகாது தலையைத் தூக்கி, “அது...” எனத் தடுமாறியவன், “காலைல இருந்து உன் முகத்தைப் பார்த்து பேச முடியலை டி. கண்ணு எங்க எங்கயோ போகுது. ஐ பெல்ட் சம்திங் அன்எக்ஸ்ப்ளெய்ண்ட்...” என்றவன் அவள் கையை தன் இதயத்தில் அழுத்தி, “ஹார்ட் பீட் கூட கன்ட்ரோல்ல இல்ல என்னை மாதிரி!” என்றான் வெட்கமும் தயக்கமுமாய்.
முகம்‌ முழுவதும் படரப்பார்த்த புன்னகையை உதட்டோடு அடக்கிய காயத்ரி, “அட்ரீனல் ரஷ்ஷா இருக்கும் டா!” என்றாள் கேலியாய். அவளை முறைத்தான் கணவன்.
“சரி விடு. பொண்டாட்டியை அப்படி இப்படி பார்க்கலைன்னாதான் டா தப்பு. பார்த்தா தப்பே இல்ல!” என்றாள் நமுட்டுச் சிரிப்புடன். அவனிடம் பதிலில்லை. மீண்டும் அவள் இடையில் புதைந்து உதட்டை அழுத்தி அங்கேயே முத்தமிட, காயத்ரி சட்டென மின்சாரம் பாய்ந்தது போல சிலிர்த்தாள். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவன் தலை முடியைப் பிடித்து தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவள், “ஹம்ம்... சரி, இப்போ என்ன பண்ணலாம்ன்ற ராம். சீக்கிரம் ஒரு முடிவை எடுத்தா நான் போய் ட்ரெஸ்ஸாவது மாத்துவேன் டா. பட்டுப் புடவை நசநசன்னு இருக்கு...” என்றாள் போலியான அலுப்புடன்.
“கிஸ் மீ...” என்றான் அவள் முகம் பார்த்து மையலுடன்.
“நோ...” என தலையை அசைத்துப் பிரிந்தவள், “உனக்கு வேணும்னா நீதான் டா கிஸ் பண்ணணும். நான் பண்ண மாட்டேன்!” எனக் கையை கட்சி உதட்டைக் கோணியவளைப் பார்த்து பிடரி முடியைக் கோதியவன், “படுத்துற காயூ..” என அனல் மூச்சோடு முணுமுணுத்தான்.
“யாரு நானாடா? ஹம்ம்... ட்ரெஸ் மாத்தப் போனவளை இழுத்து நிறுத்தி கண்ணைப் பார்க்க முடியலை. காதால கேட்க முடியலைன்னு கதையடிச்சுட்டு...” என்றவளின் பேச்சை நிறுத்தியிருந்தான் ரகுராம். காயத்ரி தடுமாறி கீழே விழச் செல்ல, இடையோடு இழுத்து தூக்கி மூக்கு உரச மூச்சு முட்ட முட்ட அழுத்தி முத்தமிட்டான். காயத்ரிக்கு ஒரு நொடி ஆச்சர்யம் பின் மயக்கம். தன் கையை அவன் தோளில் இட்டு மாலையாக்கினாள்.
அப்படியே நடந்து சென்று கட்டிலில் மனைவியைப் பொத்தொன்று போட்டு அவள் மீதே சரிந்தான். அவளுக்குள் இன்னும் இன்னும் ஆழமாய் மூழ்கி போக ஆசை கிளர்ந்தது அவனுக்குள். அவள் இடை பற்றி தன்னிடம் இன்னும் சேர்த்துக் கொண்டவன், “முடியலடி என்னால…” தவித்த குரலில் அவளில் தடம்புரண்டு முணுமுணுத்தான்.

காயத்ரிக்கு அவன் முகம் பதிந்த இடத்தில் மனம் பதறினாலும் உடல் இளகத் தொடங்க, “ராம்... என்னடா பண்ற!” என்றாள் வெட்கத்துடன். அவன் கொடுக்கும் உணர்வுகளை இவளாலும் தாங்க முடியவில்லை. முகம் சிவந்தது. உடல் தளர்ந்தது. அப்படியே முன்னேறி அவள் கழுத்தில் முகம் புதைத்தவன், “ஐ நீட் யூ காயூ!” என்றவன் அவள் செவியில் முத்தமிட, காதின் மென்னரம்புகள் அதிர்ந்தன.
“பதில் சொல்லுடி...” என இன்னும் அவளைத் தன்னோடு இறுக்கினான் கணவன்.
“இதெல்லாம் கேட்கணுமா டா?” என அவள் மெலிதாய் சிணுங்க, ரகுராம் சிதறிப் போனான். அடுத்த எந்தக் கேள்வியும் இல்லை. முத்தத்தோடு மொத்தமாய் அவளைக் கொள்ளையிடத் தொடங்கினான்.‌ காயத்ரி வெட்கப்பட்டாலும் விலகவில்லை. அவன் கைகளில் நெகிழ்ந்து கிடந்தாள். விலகும் எண்ணம் இல்லாதவனைப் போல அவளை ஆராதித்தான் கணவன்.
மூச்சு வாங்கி அவள் கழுத்தோரம் புதைந்தவன், “காயூ... கொஞ்சமாச்சு வேணான்னு தடுத்து நிறுத்திடு. நீ ஓவர் க்வாப்ரேட் பண்ற. ஐ காண்ட் கன்ட்ரோல் மை செல்ஃப். உன்னை ஹேர்ட் பண்ணிடுவேன் டி...” என தவிப்பாய் தாபமேறிய குரலில் செவியோரம் முணுமுணுத்தான்.
“ராம்...” செல்லமாய் அதட்டி அவன் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தியவள், “உன்னைத் தடுத்து என்ன டா பண்ண போறேன். என் ராம்க்கு இஸ்லாததுன்னு என்கிட்ட எதுவுமே இருக்க கூடாது!” வெட்கத்துடன் கூறியவளின் வார்த்தைகளில் ரகுராம் நிறைந்து போனான். பேசிய உதட்டில் அழுந்த முத்தமிட்டவன் அவளைக் கொண்டாடி தீர்த்திருந்தான். காமம் கரைந்து முத்தம் முற்றுப் பெற்றப் போதும் அவளோடு பின்னிப் பிணைந்து கிடந்தான் கணவன். அவள் வெட்கப்பட்டாளோ இல்லையோ? ரகுராம் முகம் சிவந்துதான் கிடந்தது. எத்தனை தடுமாற்றம், தயக்கம் என தன்னிலை இழந்த பொழுதில் கூட அவளுக்ககாகப் பார்த்தவனை இறுக்கி அணைத்திருந்தாள் மனைவி.
“காயூ... சச் அ டிவைன் ஃபீலிங் டி. நீ... செம்ம ஃபிகர், உனக்கு செம்ம ஸ்ட்ரக்சர்!” என சன்னமாய் சிரிப்புடன் முணுமுணுத்தவனைப் பார்த்து முறைக்க முயன்றவள் தலையணையில் முகம் புதைத்தாள். இன்னுமே ஏதோதோ பேசி அவளிடம் அடிகளைப் பெற்றுக் கொண்டான் கணவன்.

அவனிடமிருந்து விலகி
போர்வையில் சுருண்டவள், “இதுக்கும் மேல ஏதாவது பேசுன கடிச்சு வச்சுடுவேன் டா!” என சிணுங்கினாள் பெண்.

போர்வையோடு அவளை அணைத்துக் கொண்டவன், “இப்போதான் காயூ ஐ பெல்ட் ரிலாஸ்க்ஸ்ட். காலை உன்னைப் பார்த்ததுட்டுப் போய் பேஷண்டை கூட ஒழுங்கா பார்க்க முடியலை! என்ன ஃபீலிங் டி இது... ப்பா முடியலை” என முனங்கலுடன் அவள் தோளில் ஈரம் படர முத்தமிட்டான்.

காயத்ரி வெட்கமும் சிரிப்புமாய் அவனைத் தள்ளிவிட்டவள், “ராம்... என் பேக்ரவுண்ட்ல சிட்சுவேஷன் சாங்க் கேட்குதுடா!” என்றாள் அப்பாவியாய்.‌ அவன் முகத்தில் யோசனை படர்ந்தது.
“என்ன சாங்க் டி?” என அவன் கேட்க, மேஜை மீதிருந்த அலைபேசியை உயிர்பித்த காயத்ரி, “இந்த பாட்டுதான் டா!” என ஒலிக்க விட்டாள்.
“நீ.. நீ புதுக் கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க!” என்றப் பாடலை தொடர்ந்து, “பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு
மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்!” எனத் தொடர்ந்து, “அழகிய அசுரா... அழகிய அசுரா. அத்து மீற ஆசையில்லையா?” என தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் காதல் சொட்டும் பாடல்களை அவள் ஒலிக்க விட, ரகுராம் முகத்தில் சிரிப்பு வழிய, காயத்ரி வெட்கத்துடன் தலையணையில் முகம் புதைத்தாள்.
“வெட்கமாவே இல்லையா டி உனக்கு. எல்லாம் ஐட்டம் சாங்!” அவன் கேலியாகக் கூற, “அதான் சிட்சுவேஷனுக்குப் போடலாம்னு எடுத்து வச்சேன்!” என்றாள் குறும்பாய்.
“நீயெல்லாம் பொண்ணா பொறந்து இருக்க கூடாது டி...” என்றவன் புறம் திரும்பி அவனை இறுக அணைத்தவள், “அப்பு நம்ப கே-வா இருந்திருப்போம் டா!” என்றாள் நக்கலாய். முறைக்க முயன்றவன் கடகடவென சிரிக்கத் தொடங்க, காயத்ரி அதைத் தன் உதட்டால் மூடியிருந்தாள். அவள் தொடங்கியதை கணவன் முற்றுப்புள்ளி இடாது பக்கத்தில் காற்புள்ளி இட்டு நிரப்பினான்.

தொடரும்...






























































 
Top