- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 22 
“காயூ... தள்ளி உக்காரு முதல்ல நீ?” ரகு தடுமாறிய குரலில் அதட்டினாலும் அலைபேசியில்தான் பார்வை பதித்திருந்தான்.
“இடமே இல்ல ராம்!” என்றவள் இன்னுமே அவன் மீது சரிய, படக்கென அலைபேசியை அணைத்து தூர வைத்தவன், “காயூ...” என்றான் அதட்டலுடன். அவள் முகம் பார்க்கவில்லை.
“என்ன ராம்... என்னாச்சு?” வேண்டும் என்றே கேட்டவள் விரல்களால் மென்மையாக அவனது புருவத்தை வருடினாள். அதில் எச்சிலைக் கூட்டி விழுங்கிய ரகுராம், “காயூ... எனக்கு... நான்!” எனத் திக்கினான்.
“ஸ்பீச் காம்பெடிஷன் போறீயா ராம்?” எனக் குறும்பாய்க் கேட்டவளின் விரல்கள் இப்போது சற்றே கீழிறிங்கி அவனது உதடுகளை வருடின.
“என் லிப்ஸை விட உன்னோடது இவ்வளோ பிங்கா இருக்கே டா. கொஞ்சம் கலரை கடன் வாங்கிக்கவா?” எனக் கிசுகிசுப்பாய்க் கேட்டவளைப் பார்த்து முடியாது என பலமாக தலையை அசைத்தவன், “காயூ, ஐ நீட் சம் டைம் டி...” என்றான் பதற்றத்துடன்.
“ஹம்ம்... ஒரு ஒன் ஹவர் போதுமா ராம்?” அவள் குறும்பாய்க் கேட்க, ரகுராமிற்கு என்னவோ செய்தது. இத்தனை நெருக்கத்தில் அவனோடு ஒட்டியமர்ந்து கொண்டு இந்தப் பெண் அவனை இம்சை செய்தாள்.
“காயூ...” என அருகே வந்த அவளது முகத்தைக் கைக்கொண்டு தள்ளியவன், “நான்...நான் உன்னை இந்த மாதிரி எல்லாம் யோசிச்சது இல்ல டி. டக்குன்னு என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியலை!” அவன் தடுமாற்றதுடன் கூறினான்.
“இந்த மாதிரினா எப்படி ராம்? ஹக் பண்றதா? கிஸ் பண்றதா?” என அப்பாவியாய் கேட்டாள். அதில் கடியானவன், “ரொம்ப பண்ற காயூ நீ...” என அவளை மெதுவாய் தள்ளியமர வைத்து முறைத்தான்.
“ஓஹோ... ஒருநாள் நான் இப்படி பேசுனதுக்கு சாருக்கு கோபம் வருதோ? ஹம்ம், இத்தனை நாள் என்னை என்ன பாடுபடுத்துன? அதுக்கெல்லாம் மொத்தமா ஒன்னே ஒன்னு... சத்தமில்லாம ஒரு முத்தம். நீ தானே கேட்ட?” என அவன் செய்ததது போல தன்னுடைய உதட்டை தொட்டுவிட்டு அவனது உதடுகளையும் கைக் காண்பித்தவளைப் பார்த்து முறைக்க முயன்றவனின் உதடுகளில் சிரிப்பு ஏறியது.
“ஷட் அப் காயூ...” இன்னுமே உதட்டில் சிரிப்பு மிச்சமிருந்தது.
“அதைத்தான் ராம் நானும் சொல்றேன். என் உதட்டை ஷட் பண்ணு!” என அவன் சட்டையின் நுனியைப் பிடித்திழுத்தாள். அவள் வேண்டும் என்றே செய்கிறாள் என அவனுக்குமே புரிந்தது.
“காயூ... நோ சான்ஸ்!” அவன் சன்னமாய் அலறினான்.
“ப்ம்ச்... என்ன ராம் நீ. நேத்தே நான் எவ்வளோ எக்ஸைட்மெண்டா வந்தேன். நீ தூங்கி என் மூட் ஆஃப் பண்ணிட்ட. இன்னைக்கு ஒரு கிஸ்ஸூக்கே வழியில்லை!” போலியாய் அலுத்தவள், “நீயா கொடுத்தா பெக் கிஸ். நானா கொடுத்தா ப்ரெஞ்ச் கிஸ். எப்படி வசதி?” அவன் அன்றைக்கு கூறியதை வார்த்தை மாறாமல் உரைத்தவளைப் பார்த்து முறைக்க முடியாது தலையைப் பின்னிழுத்து சிரித்தான்.
“சரி...சொல்லு. நீயே தரியா? இல்ல?” என இழுக்க, “குடிகாரி...” என அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“ச்சீ... என்ன டா இது?” என முகத்தை சுளித்தவள், அவன் காதருகே சென்று, “சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப் போக மாட்டேன். சாகசத்தைக் காட்டு செத்துப் போக மாட்டேன். கொஞ்ச நேரம் என்னைக் கொல்லய்யா! ஐயா... கொஞ்சம் நேரம் என்னைக் கொல்லய்யா!” மெல்லிய குரலில் செவியில் உதடுகள் உரசிப் பாடினாள் பெண். அவன் காதில் உள்ள மென்னரம்புகள் எல்லாம் மெலிதாய் அதிர்ந்தன.
“காயூ...” மென்மையாய் அதட்டியவனின் வார்த்தைகளை இவள் மொத்தமாய் விழுங்கியிருந்தாள். கைகளை அவன் பின்னந்தலை முடியோடு சேர்த்து கோர்த்து தலையை சாய்த்து மூக்கு இடிக்காதவாறு கச்சிதமாக முத்தமிட்டவளிடம் முழுதாய் தன்னை ஒப்படைத்துவிட்டு விழிகளை மூடியவன் கைகள் அன்றைக்கு போல தயங்காது இடையோடு அவளை இழுத்து அணைத்துக் கொண்டன.
சில நிமிடங்கள் என்ற எல்லையைக் கடந்து அவன் மொத்த சக்தியையும் ஒட்டு விடாது உறுஞ்சி உயிரைக் குடிக்கும் முத்தத்தை அவள் முடிவுக்கு கொண்டு வந்தப் போது இருவருக்குமே மூச்சு வாங்கியது. ரகுராம் விழிகள் மெதுவாய் கிறங்க, தலையை சாய்த்து விழிகளை மூடி அவள் உதட்டின் வெம்மையை உணர முயன்றான். காயத்ரி சப்தமிடாது எழுந்து சென்று ஒரு தலையணையை இருவருக்கும் இடையில் வைத்துவிட்டு போர்வையை கழுத்துவரைப் போர்த்தி முகத்தை மறைத்துக் கொண்டாள். வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றதான் முத்தம் கொடுப்பேன் என உளறினாள். ஆனால் அவனை அத்தனை அருகில் பார்த்ததும் சுயநினைவின்றி அன்றைக்குக் கொடுத்த முத்தம் அழையா விருந்தாளியாக வர, என்னுடைய ராம் என்ற எண்ணத்தில் முத்தமிட்டிருந்தாள். ஆனாலும் வெட்கமாய் போய்விட, முகத்தை மறைத்துக் கொண்டாள்.
ரகுராம் மெதுவாய் அந்த முத்ததிலிருந்து வெளியே வந்து விழிகளைத் திறக்க, காயத்ரி படுக்கச் சென்றிருந்தாள்.
“உசுப்பேத்தி விட்டுட்டு நீபாட்டுக்கு போய் படுத்தா என்ன அர்த்தம் டி?” அவன் பல்லைக் கடிக்க, “நீதானே டா டைம் கேட்ட. அப்போ உனக்கு டைம் வேணாமா ராம்?” மெதுவாய் தலையை உயர்த்தி அப்பாவியாய்க் கேட்டவளை அவன் முறைக்க, படக்கென முகத்தைப் போர்வைக்குள் மறைத்தாள். தங்களுக்கு இடையேயிருந்த தலையணையைத் தூக்கித் தூர எறிந்தவன், அவள் போர்வைக்குள் நுழைந்து பின்னிருந்து அவளை இறுக அணைத்தான்.
“காயூ... சாரி டி. நேத்து ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணியா?” அவன் கேட்டதும் இவளுக்கு சிரிப்பு வந்தது.
“ராம்...” என்றாள் சிரிப்பும் முறைப்புமாய்.
“நோ காயூ... நீ நிறைய மூவிஸ் வெப் சீரீஸ் எல்லாம் பார்த்து வெல் ப்ரிபேர்டா வந்திருப்ப இல்ல?” வேண்டுமென்றே அவன் சீண்ட, “ஷட் அப் ராம்!” சிரிப்பு வந்து உதடுகளில் மீண்டும் தொற்றிக்கொண்டது அவளுக்கு.
“காயூ...” ஏதோ பேச வந்தான்.
“அமைதியா படு ராம். இல்லைன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடுத்தது டெமோ தான் டா!” என்றாள் உதட்டில் இருந்த சிரிப்பு மாறாது.
“காயூ... உன்னை சிடுமூஞ்சின்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் பாரேன் உனக்குள்ள ஒரு ரெமோ!” அவன் சீண்ட, “டேய் எருமை... தூங்கு. எனக்குத் தூக்கும் வருது!” என முணுமுணுத்தாள்.
“அதெப்படி டி... சும்மா இருந்தவனை கிஸ் பண்ணி உசுப்பேத்தி விட்டுட்டு நீ தூங்கப் போனா என்ன அர்த்தம்? ஐ வாண்ட் ஒன் மோர் கிஸ்!” குறும்பாய் கேட்டான்.
“சும்மா விளையாட்டுக்கு கேக்காத ராம். நிஜமா கொடுத்துடுவேன் நான்!” அவள் குரலில் குறும்பும் கேலியும் நிரம்பி வழிந்தது.
“அதான்டி எனக்கும் வேணும்!” என்றவன் மெலிதாய் அவளது மேல் சட்டையைத் தளர்த்தி குட்டியாய் இருந்த தொப்பையை வருடியவன், “குடிகாரியோட குட்டித் தொப்பை!” என்றான் சிரிப்புடன். அவன் கையிலே ஒரு அடி அடித்து கையை விலக்கியவள், “இங்க இருந்த பில்லோ எங்கடா நாயே? ஹம்ம்?” என முறைத்தாள்.
“அதெதுக்கு காயூ?” அவன் புருவத்தை உயர்த்த, “ஹம்ம்... உன் கூட மனுஷன் படுப்பானா டா? சும்மா இல்லாம கையையும் காலையும் டொம்மு டொம்முன்னு மேல போட்ற. தூக்கமே கெட்டுப் போகுது!” வேண்டுமென்றே கத்தி முணுமுணுத்தாள்.
“கையைப் போட்டா போடா நாயேன்னு தொரத்திவிடாம அந்தக் கையைப் பிடிச்சு வச்சிக்கிட்டது யாரு டி?” அவன் முறைக்க, “ஆமா... இவரைப் பிடிச்சு வச்சுக்கிறாங்க...” உதட்டை சுழித்துக் கொண்டே மறுபுறம் திரும்பினாள்.
சிரிப்புடன் அவளை இழுத்து தன்னைப் பார்க்க வைத்து இறுக்கி அணைத்தவன், “இப்படி படுத்தா கை கால் போட்ற டிஸ்டபன்ஸ் இருக்காது காயூ!” என செவியருகே முணுமுணுத்தான். உவன் உதடுகளின் ஈரம் அவள் செவியை நனைத்தது.
“இப்படி படுத்தா நீ சாமியார் மாதிரி தூங்குவ டா. ஆனால் என்னால முடியாது. எண்ணெண்ணமோ தோணும் ராம்!” வெட்கமாய் முணுமுணுத்து அவன் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தாள். அவனுக்கு சிரிப்பில் முகம் மலர்ந்தது.
“டர்டி கேள் டி நீ?” என்றவன் பிடியைத் தளர்த்த, காயத்ரி நகராது அவனை ஒட்டியே படுத்திருந்தாள்.
“செவனேன்னு தூங்கப் போனவளை நீதான் டா டர்டியா யோசிக்க வச்ச?” என முறைத்தாள்.
“யாரு...நானு? ஹம்ம்... தம் கட்டி என்னைக் கிஸ் பண்ணது யாருடி?” அவன் எகிற, படக்கென மறுபுறம் திரும்பி படுத்தவள், “லைட்டை அமர்த்திட்டு தூங்கு ராம்...” என்று போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். சிரிப்பும் முறைப்புமாய் எழுந்து சென்று விளக்கை அணைத்து வந்தவன் மனைவியை பின்னிருந்து அணைக்க, அவள் அவனது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, புன்னகையுடனே இருவரும் உறங்கிப் போயினர்.
மறுநாள் வீடே கலகலவென்றிருந்தது. இன்றைக்கு இரவு தேவராஜின் அக்கா குடும்பங்கள் விடை பெறுவதாய் இருக்க, இறைச்சியை சமைத்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். பெண்கள் வெளியே கடைத் தெருவுக்குச் சென்று தங்களுக்கு தேவை, தேவையில்லாதது என அனைத்தையுமே வாங்கி பையில் அடுக்கினர். ஆண்கள் அவர்களுக்குத் துணைக்குச் சென்றனர்.
காயத்ரி மெதுவாய் அவர்கள் கூட்டில் இணைந்தாள். மூத்த இரண்டு அக்காக்களும் அவளைக் கண்டு முகத்தைத் திருப்பிச் செல்ல, மூன்றாவது பெண் காயத்ரியை தன்னருகே அமர்த்திக் கொண்டார். அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அப்படித்தான் என் எதிர்வினையும் என்பது போல இருந்து கொண்டாள். அவர்கள் தன்னைப் பற்றி பேசினால் பதிலுக்கு பதில் கூற வேண்டும் என அவள் நினைத்திருக்க, அதற்கு வேலையின்றி போனது. முன்பு அவள் மூன்றாவது வீட்டுப் பெண்ணாக இருந்ததால் எளிதில் எடுத்தெறிந்து பேசினர். ஆனால் இப்போது அண்ணன் வீட்டு மருமகள். எப்படி இருப்பினும் வாழ்நாள் முழுவதும் அண்ணன் வீட்டு உறவு அவர்களுக்கு வேண்டும். அதனாலே அவளிடம் பெரிதாய் வார்த்தையாடவில்லை. காயத்ரிக்கும் அது புரியத்தான் செய்தது. கௌதமி வேறு மருமகளை அருகிலே வைத்துக் கொண்டார். அவளை தன் நாத்தானார்கள் காயப்படுத்திவிடக் கூடாது என கவனமாய் இருந்தார். ரகுராம் எங்கிருந்தாலும் பார்வை மனைவியிடம் தான். அதில் அவளுக்குப் புன்னகை முளைத்தது.
மாலை எல்லோரும் தங்களது பயணப்பையை தயார் செய்ய, இரவு உணவோடு அவர்கள் விடை பெற்றனர். ரகுராமும் தேவராஜூம் அனைவரையும் பேருந்து ஏற்றிவிட்டு வரச் சென்றனர். வீடே வெறிச்சோடி கிடந்தது.
காயத்ரியும் கௌதமியும் அலங்கோலமாய் இருந்த சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்படியே மாமியார் மருமகளுக்கு இடையே பேச்சுவார்த்தை சென்றது.
“ம்மா... அன்னைக்கு ராம் கல்யாணம் நின்னப்போ என்ன நடந்துச்சுமா. நானும் விதவிதமா கேக்குறேன். உங்கப் புள்ளை வாயைத் தொறக்க மாட்றான் மா?” என அவர் கழுவிய பாத்திரங்களை துடைத்துக் கூடையில் அடுக்கியபடியே கேட்டாள் காயத்ரி.
“அட நீ ஏன் காயூ? அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கே சரியா தெரியலை. இவங்க அப்பா கோபமா பேசி சண்டை போட, பயத்துல நின்னுட்டு இருந்தேன் நான். ராமும் அந்தப் பொண்ணு சைந்தவி, அப்புறம் இன்னொரு பையன், அவளோட அண்ணனுங்க மட்டும்தான் ரூம்க்குள்ள இருந்தாங்க. வெளில இருந்த எங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. ஆனால் கல்யாணத்துல பொண்ணுக்கு இஷ்டம் இல்ல. வேற பையனைக் காதலிச்சாளாம். அந்தப் பையன் இப்போ வந்து வம்பு பண்றான்றவரை புரிஞ்சது. அப்புறம் இவன்தான் எதையும் கேட்க கூடாதுன்னு எங்களை சத்தம் போட்டு கூட்டீட்டு வந்துட்டான். அதுக்குப்பறம் நடந்தது உனக்கே தெரியும்ல காயூ?” அவர் கேட்க, இவள் தலையை யோசனையுடன் அசைத்தாள். வேலை முடிய, அறைக்குள் சென்றாள். ரகுராம் இன்னும் வந்திருக்கவில்லை.
தன்னுடைய பெட்டியை இன்னும் பிரிக்காமல் வைத்திருந்தவள், இப்போது நேரம் கிடைக்கவும் நிலைப்பேழையைத் திறந்து ரகுவின் துணிகளை ஒரு ஓரமாய் ஒதுக்கிவிட்டு இவளுடைய துணிகளை அழகாய் மடித்து அடுக்கத் தொடங்கினாள். இடையே ஒரு சின்ன புகைப்பட தொகுப்பு வெளியே வந்து விழ, அதை சின்ன சிரிப்புடன் தடவியவள் கட்டிலில் வைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். சில பல நிமிடங்களில் ரகுராம் வந்துவிட்டான்.
“அடிப்பாவி... முக்கால்வாசி பீரோவை ஆக்குபை பண்ணிட்டு கொஞ்சுண்டு என் ட்ரெஸ்க்கு ஸ்பேஸ் கொடுத்திருக்க?” என முறைப்போடு அவளருகே வந்து அமர்ந்தவனைப் பார்த்து சட்டை செய்யாதவள் வேலையைத் தொடர்ந்தாள். அவளையே முறைத்தவனின் பார்வையில் அந்தப் புகைப்படத் தொகுப்பு கண்களில் விழ, “என்னடி இது?” எனக் கேட்டுப் பிரித்தான்.
“ஃபோட்டோஸ் ராம். நம்ப ஸ்கூல் காலேஜ்ல எடுத்தது!” என்றவள் துணியை அடுக்கி முடித்துவிட்டு அவனருகே வந்து அமர்ந்தாள். ரகுராம் ஒவ்வொரு புகைப்படமாய்த் திருப்பிப் பார்த்தான். காயத்ரி ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்த புகைப்படங்கள் எல்லாம் வரிசையாய் அணிவகுத்திருந்தன.
“ஃப்ரைஸ் வாங்கும்போது மூஞ்சியை ஏன் இப்படி வச்சிருக்க காயூ? ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி?” உதட்டைக் கோணியவனை முறைத்தவள், “நான் நல்லாதான் டேன்ஸ் ஆடுனேன் ராம். ஃபர்ஸ்ட் ப்ரைஸ் தாராம செகண்ட் கொடுத்தாங்க. அதான் மூஞ்சியைத் தூக்கி வச்சிருந்தேன்!” என சிரித்தாள் இவள்.
“ம்கூம்... நீ கையைக் காலை அப்படியும் இப்படியும் ஆடி எல்லாரையும் ஏமாத்தியிருப்ப. ஆனால் அவனுங்க உஷாரா செகண்ட் ப்ரைஸ் கொடுத்துட்டானுங்க. இதுல சோகம் வேற. நீதான் நடனப்புயல் ஆச்சே. காலேஜ் கல்சுரல்ஸ்ல நான் பார்த்திருக்கேனே!” என அவன் உடல் குலுங்க சிரித்ததும் கடியானவள் அவன் கையிலே நறுக்கென கிள்ளி வைத்தாள்.
ஆனாலும் அவனது சிரிப்பு தொடர்ந்தது. அவள் ஆறாம் வகுப்பு தொடங்கியதும் அனைத்து படத்திலும் ரகுராம் உடனிருந்தான்.
அவன் பாரதியார் வேடமிட்டு முதல் பரிசு வாங்கிய புகைப்படத்தைக் காண்பித்தவன், “பாரதி நேர்ல வந்தா கூட இவ்வளோ தத்ரூபமா இருந்துக்காது இல்ல காயூ. என் கலை சேவையைப் பாராட்டி அப்பவே ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கொடுத்திருக்காங்க பாருடி...” என அவன் பெருமையாய் உரைத்ததும் மேலிருந்து கீழாய் அவனைக் கேலியாகப் பார்த்தவள், “இருக்கதுலயே ஈஸியான வேஷம் பாரதியாரைக் காபி பண்றதுதான் டா. ஏதோ நாசா விஞ்ஞானி ரேஞ்சுக்கு பீட்டர் விடாத. மூஞ்சூறு மாதிரி ஒரு மூஞ்சி!” என அவள் கூறியதும், “நீ ஆடுன டேன்ஸ்க்கு நான் போட்ட வேஷமே பரவாயில்லை...” என சிலுப்பினான் இவன். இருவரும் அந்தத் தொகுப்பை சிரிப்புடன் பார்த்தனர்.
பின்னர் இருந்த அனைத்திலுமே இருவரும் ஜோடியாய்தான் நின்றிருந்தனர். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலையோமா, பிரிவு உபச்சார விழா, சுற்றுலா சென்றது என அனைத்திலுமே ஒன்றாய் நிறைந்து கிடந்தனர். காயத்ரி தனியாய் இருந்த புகைப்படத்தை விட அவனோடு இருக்கும் அத்தனையிலும் முகமும் அகமும் மலர புன்னகைத்திருந்தாள். அதுவே அவளது மனத்தை காட்டியது. ஒவ்வொரு புகைப்படத்தையும் அத்தனையாய் பத்திரப்படுத்தியிருந்தாள் பெண். கல்லூரியில் கூட நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தனர்.
புகைப்பட தொகுப்பின் பின்பகுதியில் ஓரிரு வெள்ளைக் காகிதங்கள் இருக்க, அதில் இவள் ஏதோ எழுதி வைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் காயத்ரி படக்கென தொகுப்பை அவனிடமிருந்து கைப்பற்ற நினைக்க, ரகு அதைத் தலைக்கு மேலே தூக்கியிருந்தான்.
“ராம்... ஃபோட்டோஸ் அவ்வளோ தான். நீ பார்த்தது போதும். குடு!” கட்டிலில் ஏறி அதை வாங்க முயன்றாள்.
அவனும் ஏறி நின்றவன், “நோ வே...நீ என்ன கிறுக்கி இருக்கன்னு நான் பார்க்கணும்!” என்றான் சிரிப்புடன்.
“அது என் பெர்சனல். அதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிற. ஒழுங்கா குடுத்துடு டா!” இவள் அதட்டலாய் கேட்க, அவன் அப்படியே கட்டிலிலிருந்து குதித்து அதை படிக்கத் தொடங்கினான்.
“ராம்...நாயே.. படிக்காத டா!” அவள் பதறிக் கொண்டே அருகே வர, அவன் அங்குமிங்கும் நடந்து கடகடவென படித்து முடித்திருந்தான்.
“ஓஹோ...
அளவிட முடியாத நம்பிக்கை
அதீத நேசம்
அன்பின் பற்றுதல்
அலாதிப்பிரியம்
உன்னதமான பக்தனொருவன் கடவுளிடம்
கொண்டதைப் போலொரு
முக்திநிலை!
அதுவொரு உத்தமமான பரிபூரணம் – காயத்ரியின் ராமிற்கான காதல்!” என அவன் வாசித்து முடித்ததும் காயத்ரி வெடக்கத்தில் ஒற்றைக் கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
“ராம்... போதும் டா... க்ரிஞ்சா எதாவது எழுதி வச்சிருப்பேன் நான்!” அவள் சிணுங்கியபடி ஒரு கையை அவனை நோக்கி நீட்ட, “ஆஹா... போடி...” என்றவன் மேலும் வாசித்தான்.
“காதலின் நியதிகள் அலாதியானவை. எதற்கும் உடன்படாதவை. விதிகளை எல்லாம் வீழச் செய்பவை. கடவுளைக் கண்ட பக்தனின் நிலை அது. பரவசத்தோடு நவரசத்தையும் உண்ட பக்தனைப் பித்தனாக்குபவை!” என அவன் கூறவும் இவள் ஓடிச்சென்று தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். அவனது முகத்தில் சன்னமான சிரிப்பு.
“சே... ஒரு கவிஞை வளரவிடாம பண்ணிட்டாங்கப்பா!” என அவன் கேலியாய் உரைக்க, கையில் அகப்பட்ட தலையணையை அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.
“போதும் டா... கொல்லப்போறேன் உன்னை. நீ முதல்ல அதை வச்சிட்டு வந்து படு!” என ஒற்றை விரலை காட்டித் தலையணையில் புதைந்திருந்த தலையை தூக்கி மிரட்டியவளைப் பார்த்து நம்பியார் சிரிப்பை உதிர்த்தவன், “இன்னும் ஒரு வருஷத்துக்கு கண்டென்ட் தேறும் போல டி...” என்றான்.

“காயூ... தள்ளி உக்காரு முதல்ல நீ?” ரகு தடுமாறிய குரலில் அதட்டினாலும் அலைபேசியில்தான் பார்வை பதித்திருந்தான்.
“இடமே இல்ல ராம்!” என்றவள் இன்னுமே அவன் மீது சரிய, படக்கென அலைபேசியை அணைத்து தூர வைத்தவன், “காயூ...” என்றான் அதட்டலுடன். அவள் முகம் பார்க்கவில்லை.
“என்ன ராம்... என்னாச்சு?” வேண்டும் என்றே கேட்டவள் விரல்களால் மென்மையாக அவனது புருவத்தை வருடினாள். அதில் எச்சிலைக் கூட்டி விழுங்கிய ரகுராம், “காயூ... எனக்கு... நான்!” எனத் திக்கினான்.
“ஸ்பீச் காம்பெடிஷன் போறீயா ராம்?” எனக் குறும்பாய்க் கேட்டவளின் விரல்கள் இப்போது சற்றே கீழிறிங்கி அவனது உதடுகளை வருடின.
“என் லிப்ஸை விட உன்னோடது இவ்வளோ பிங்கா இருக்கே டா. கொஞ்சம் கலரை கடன் வாங்கிக்கவா?” எனக் கிசுகிசுப்பாய்க் கேட்டவளைப் பார்த்து முடியாது என பலமாக தலையை அசைத்தவன், “காயூ, ஐ நீட் சம் டைம் டி...” என்றான் பதற்றத்துடன்.
“ஹம்ம்... ஒரு ஒன் ஹவர் போதுமா ராம்?” அவள் குறும்பாய்க் கேட்க, ரகுராமிற்கு என்னவோ செய்தது. இத்தனை நெருக்கத்தில் அவனோடு ஒட்டியமர்ந்து கொண்டு இந்தப் பெண் அவனை இம்சை செய்தாள்.
“காயூ...” என அருகே வந்த அவளது முகத்தைக் கைக்கொண்டு தள்ளியவன், “நான்...நான் உன்னை இந்த மாதிரி எல்லாம் யோசிச்சது இல்ல டி. டக்குன்னு என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியலை!” அவன் தடுமாற்றதுடன் கூறினான்.
“இந்த மாதிரினா எப்படி ராம்? ஹக் பண்றதா? கிஸ் பண்றதா?” என அப்பாவியாய் கேட்டாள். அதில் கடியானவன், “ரொம்ப பண்ற காயூ நீ...” என அவளை மெதுவாய் தள்ளியமர வைத்து முறைத்தான்.
“ஓஹோ... ஒருநாள் நான் இப்படி பேசுனதுக்கு சாருக்கு கோபம் வருதோ? ஹம்ம், இத்தனை நாள் என்னை என்ன பாடுபடுத்துன? அதுக்கெல்லாம் மொத்தமா ஒன்னே ஒன்னு... சத்தமில்லாம ஒரு முத்தம். நீ தானே கேட்ட?” என அவன் செய்ததது போல தன்னுடைய உதட்டை தொட்டுவிட்டு அவனது உதடுகளையும் கைக் காண்பித்தவளைப் பார்த்து முறைக்க முயன்றவனின் உதடுகளில் சிரிப்பு ஏறியது.
“ஷட் அப் காயூ...” இன்னுமே உதட்டில் சிரிப்பு மிச்சமிருந்தது.
“அதைத்தான் ராம் நானும் சொல்றேன். என் உதட்டை ஷட் பண்ணு!” என அவன் சட்டையின் நுனியைப் பிடித்திழுத்தாள். அவள் வேண்டும் என்றே செய்கிறாள் என அவனுக்குமே புரிந்தது.
“காயூ... நோ சான்ஸ்!” அவன் சன்னமாய் அலறினான்.
“ப்ம்ச்... என்ன ராம் நீ. நேத்தே நான் எவ்வளோ எக்ஸைட்மெண்டா வந்தேன். நீ தூங்கி என் மூட் ஆஃப் பண்ணிட்ட. இன்னைக்கு ஒரு கிஸ்ஸூக்கே வழியில்லை!” போலியாய் அலுத்தவள், “நீயா கொடுத்தா பெக் கிஸ். நானா கொடுத்தா ப்ரெஞ்ச் கிஸ். எப்படி வசதி?” அவன் அன்றைக்கு கூறியதை வார்த்தை மாறாமல் உரைத்தவளைப் பார்த்து முறைக்க முடியாது தலையைப் பின்னிழுத்து சிரித்தான்.
“சரி...சொல்லு. நீயே தரியா? இல்ல?” என இழுக்க, “குடிகாரி...” என அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“ச்சீ... என்ன டா இது?” என முகத்தை சுளித்தவள், அவன் காதருகே சென்று, “சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப் போக மாட்டேன். சாகசத்தைக் காட்டு செத்துப் போக மாட்டேன். கொஞ்ச நேரம் என்னைக் கொல்லய்யா! ஐயா... கொஞ்சம் நேரம் என்னைக் கொல்லய்யா!” மெல்லிய குரலில் செவியில் உதடுகள் உரசிப் பாடினாள் பெண். அவன் காதில் உள்ள மென்னரம்புகள் எல்லாம் மெலிதாய் அதிர்ந்தன.
“காயூ...” மென்மையாய் அதட்டியவனின் வார்த்தைகளை இவள் மொத்தமாய் விழுங்கியிருந்தாள். கைகளை அவன் பின்னந்தலை முடியோடு சேர்த்து கோர்த்து தலையை சாய்த்து மூக்கு இடிக்காதவாறு கச்சிதமாக முத்தமிட்டவளிடம் முழுதாய் தன்னை ஒப்படைத்துவிட்டு விழிகளை மூடியவன் கைகள் அன்றைக்கு போல தயங்காது இடையோடு அவளை இழுத்து அணைத்துக் கொண்டன.
சில நிமிடங்கள் என்ற எல்லையைக் கடந்து அவன் மொத்த சக்தியையும் ஒட்டு விடாது உறுஞ்சி உயிரைக் குடிக்கும் முத்தத்தை அவள் முடிவுக்கு கொண்டு வந்தப் போது இருவருக்குமே மூச்சு வாங்கியது. ரகுராம் விழிகள் மெதுவாய் கிறங்க, தலையை சாய்த்து விழிகளை மூடி அவள் உதட்டின் வெம்மையை உணர முயன்றான். காயத்ரி சப்தமிடாது எழுந்து சென்று ஒரு தலையணையை இருவருக்கும் இடையில் வைத்துவிட்டு போர்வையை கழுத்துவரைப் போர்த்தி முகத்தை மறைத்துக் கொண்டாள். வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றதான் முத்தம் கொடுப்பேன் என உளறினாள். ஆனால் அவனை அத்தனை அருகில் பார்த்ததும் சுயநினைவின்றி அன்றைக்குக் கொடுத்த முத்தம் அழையா விருந்தாளியாக வர, என்னுடைய ராம் என்ற எண்ணத்தில் முத்தமிட்டிருந்தாள். ஆனாலும் வெட்கமாய் போய்விட, முகத்தை மறைத்துக் கொண்டாள்.
ரகுராம் மெதுவாய் அந்த முத்ததிலிருந்து வெளியே வந்து விழிகளைத் திறக்க, காயத்ரி படுக்கச் சென்றிருந்தாள்.
“உசுப்பேத்தி விட்டுட்டு நீபாட்டுக்கு போய் படுத்தா என்ன அர்த்தம் டி?” அவன் பல்லைக் கடிக்க, “நீதானே டா டைம் கேட்ட. அப்போ உனக்கு டைம் வேணாமா ராம்?” மெதுவாய் தலையை உயர்த்தி அப்பாவியாய்க் கேட்டவளை அவன் முறைக்க, படக்கென முகத்தைப் போர்வைக்குள் மறைத்தாள். தங்களுக்கு இடையேயிருந்த தலையணையைத் தூக்கித் தூர எறிந்தவன், அவள் போர்வைக்குள் நுழைந்து பின்னிருந்து அவளை இறுக அணைத்தான்.
“காயூ... சாரி டி. நேத்து ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணியா?” அவன் கேட்டதும் இவளுக்கு சிரிப்பு வந்தது.
“ராம்...” என்றாள் சிரிப்பும் முறைப்புமாய்.
“நோ காயூ... நீ நிறைய மூவிஸ் வெப் சீரீஸ் எல்லாம் பார்த்து வெல் ப்ரிபேர்டா வந்திருப்ப இல்ல?” வேண்டுமென்றே அவன் சீண்ட, “ஷட் அப் ராம்!” சிரிப்பு வந்து உதடுகளில் மீண்டும் தொற்றிக்கொண்டது அவளுக்கு.
“காயூ...” ஏதோ பேச வந்தான்.
“அமைதியா படு ராம். இல்லைன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கொடுத்தது டெமோ தான் டா!” என்றாள் உதட்டில் இருந்த சிரிப்பு மாறாது.
“காயூ... உன்னை சிடுமூஞ்சின்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் பாரேன் உனக்குள்ள ஒரு ரெமோ!” அவன் சீண்ட, “டேய் எருமை... தூங்கு. எனக்குத் தூக்கும் வருது!” என முணுமுணுத்தாள்.
“அதெப்படி டி... சும்மா இருந்தவனை கிஸ் பண்ணி உசுப்பேத்தி விட்டுட்டு நீ தூங்கப் போனா என்ன அர்த்தம்? ஐ வாண்ட் ஒன் மோர் கிஸ்!” குறும்பாய் கேட்டான்.
“சும்மா விளையாட்டுக்கு கேக்காத ராம். நிஜமா கொடுத்துடுவேன் நான்!” அவள் குரலில் குறும்பும் கேலியும் நிரம்பி வழிந்தது.
“அதான்டி எனக்கும் வேணும்!” என்றவன் மெலிதாய் அவளது மேல் சட்டையைத் தளர்த்தி குட்டியாய் இருந்த தொப்பையை வருடியவன், “குடிகாரியோட குட்டித் தொப்பை!” என்றான் சிரிப்புடன். அவன் கையிலே ஒரு அடி அடித்து கையை விலக்கியவள், “இங்க இருந்த பில்லோ எங்கடா நாயே? ஹம்ம்?” என முறைத்தாள்.
“அதெதுக்கு காயூ?” அவன் புருவத்தை உயர்த்த, “ஹம்ம்... உன் கூட மனுஷன் படுப்பானா டா? சும்மா இல்லாம கையையும் காலையும் டொம்மு டொம்முன்னு மேல போட்ற. தூக்கமே கெட்டுப் போகுது!” வேண்டுமென்றே கத்தி முணுமுணுத்தாள்.
“கையைப் போட்டா போடா நாயேன்னு தொரத்திவிடாம அந்தக் கையைப் பிடிச்சு வச்சிக்கிட்டது யாரு டி?” அவன் முறைக்க, “ஆமா... இவரைப் பிடிச்சு வச்சுக்கிறாங்க...” உதட்டை சுழித்துக் கொண்டே மறுபுறம் திரும்பினாள்.
சிரிப்புடன் அவளை இழுத்து தன்னைப் பார்க்க வைத்து இறுக்கி அணைத்தவன், “இப்படி படுத்தா கை கால் போட்ற டிஸ்டபன்ஸ் இருக்காது காயூ!” என செவியருகே முணுமுணுத்தான். உவன் உதடுகளின் ஈரம் அவள் செவியை நனைத்தது.
“இப்படி படுத்தா நீ சாமியார் மாதிரி தூங்குவ டா. ஆனால் என்னால முடியாது. எண்ணெண்ணமோ தோணும் ராம்!” வெட்கமாய் முணுமுணுத்து அவன் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தாள். அவனுக்கு சிரிப்பில் முகம் மலர்ந்தது.
“டர்டி கேள் டி நீ?” என்றவன் பிடியைத் தளர்த்த, காயத்ரி நகராது அவனை ஒட்டியே படுத்திருந்தாள்.
“செவனேன்னு தூங்கப் போனவளை நீதான் டா டர்டியா யோசிக்க வச்ச?” என முறைத்தாள்.
“யாரு...நானு? ஹம்ம்... தம் கட்டி என்னைக் கிஸ் பண்ணது யாருடி?” அவன் எகிற, படக்கென மறுபுறம் திரும்பி படுத்தவள், “லைட்டை அமர்த்திட்டு தூங்கு ராம்...” என்று போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். சிரிப்பும் முறைப்புமாய் எழுந்து சென்று விளக்கை அணைத்து வந்தவன் மனைவியை பின்னிருந்து அணைக்க, அவள் அவனது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, புன்னகையுடனே இருவரும் உறங்கிப் போயினர்.
மறுநாள் வீடே கலகலவென்றிருந்தது. இன்றைக்கு இரவு தேவராஜின் அக்கா குடும்பங்கள் விடை பெறுவதாய் இருக்க, இறைச்சியை சமைத்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். பெண்கள் வெளியே கடைத் தெருவுக்குச் சென்று தங்களுக்கு தேவை, தேவையில்லாதது என அனைத்தையுமே வாங்கி பையில் அடுக்கினர். ஆண்கள் அவர்களுக்குத் துணைக்குச் சென்றனர்.
காயத்ரி மெதுவாய் அவர்கள் கூட்டில் இணைந்தாள். மூத்த இரண்டு அக்காக்களும் அவளைக் கண்டு முகத்தைத் திருப்பிச் செல்ல, மூன்றாவது பெண் காயத்ரியை தன்னருகே அமர்த்திக் கொண்டார். அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. நீங்கள் என்னிடம் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அப்படித்தான் என் எதிர்வினையும் என்பது போல இருந்து கொண்டாள். அவர்கள் தன்னைப் பற்றி பேசினால் பதிலுக்கு பதில் கூற வேண்டும் என அவள் நினைத்திருக்க, அதற்கு வேலையின்றி போனது. முன்பு அவள் மூன்றாவது வீட்டுப் பெண்ணாக இருந்ததால் எளிதில் எடுத்தெறிந்து பேசினர். ஆனால் இப்போது அண்ணன் வீட்டு மருமகள். எப்படி இருப்பினும் வாழ்நாள் முழுவதும் அண்ணன் வீட்டு உறவு அவர்களுக்கு வேண்டும். அதனாலே அவளிடம் பெரிதாய் வார்த்தையாடவில்லை. காயத்ரிக்கும் அது புரியத்தான் செய்தது. கௌதமி வேறு மருமகளை அருகிலே வைத்துக் கொண்டார். அவளை தன் நாத்தானார்கள் காயப்படுத்திவிடக் கூடாது என கவனமாய் இருந்தார். ரகுராம் எங்கிருந்தாலும் பார்வை மனைவியிடம் தான். அதில் அவளுக்குப் புன்னகை முளைத்தது.
மாலை எல்லோரும் தங்களது பயணப்பையை தயார் செய்ய, இரவு உணவோடு அவர்கள் விடை பெற்றனர். ரகுராமும் தேவராஜூம் அனைவரையும் பேருந்து ஏற்றிவிட்டு வரச் சென்றனர். வீடே வெறிச்சோடி கிடந்தது.
காயத்ரியும் கௌதமியும் அலங்கோலமாய் இருந்த சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்படியே மாமியார் மருமகளுக்கு இடையே பேச்சுவார்த்தை சென்றது.
“ம்மா... அன்னைக்கு ராம் கல்யாணம் நின்னப்போ என்ன நடந்துச்சுமா. நானும் விதவிதமா கேக்குறேன். உங்கப் புள்ளை வாயைத் தொறக்க மாட்றான் மா?” என அவர் கழுவிய பாத்திரங்களை துடைத்துக் கூடையில் அடுக்கியபடியே கேட்டாள் காயத்ரி.
“அட நீ ஏன் காயூ? அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கே சரியா தெரியலை. இவங்க அப்பா கோபமா பேசி சண்டை போட, பயத்துல நின்னுட்டு இருந்தேன் நான். ராமும் அந்தப் பொண்ணு சைந்தவி, அப்புறம் இன்னொரு பையன், அவளோட அண்ணனுங்க மட்டும்தான் ரூம்க்குள்ள இருந்தாங்க. வெளில இருந்த எங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. ஆனால் கல்யாணத்துல பொண்ணுக்கு இஷ்டம் இல்ல. வேற பையனைக் காதலிச்சாளாம். அந்தப் பையன் இப்போ வந்து வம்பு பண்றான்றவரை புரிஞ்சது. அப்புறம் இவன்தான் எதையும் கேட்க கூடாதுன்னு எங்களை சத்தம் போட்டு கூட்டீட்டு வந்துட்டான். அதுக்குப்பறம் நடந்தது உனக்கே தெரியும்ல காயூ?” அவர் கேட்க, இவள் தலையை யோசனையுடன் அசைத்தாள். வேலை முடிய, அறைக்குள் சென்றாள். ரகுராம் இன்னும் வந்திருக்கவில்லை.
தன்னுடைய பெட்டியை இன்னும் பிரிக்காமல் வைத்திருந்தவள், இப்போது நேரம் கிடைக்கவும் நிலைப்பேழையைத் திறந்து ரகுவின் துணிகளை ஒரு ஓரமாய் ஒதுக்கிவிட்டு இவளுடைய துணிகளை அழகாய் மடித்து அடுக்கத் தொடங்கினாள். இடையே ஒரு சின்ன புகைப்பட தொகுப்பு வெளியே வந்து விழ, அதை சின்ன சிரிப்புடன் தடவியவள் கட்டிலில் வைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். சில பல நிமிடங்களில் ரகுராம் வந்துவிட்டான்.
“அடிப்பாவி... முக்கால்வாசி பீரோவை ஆக்குபை பண்ணிட்டு கொஞ்சுண்டு என் ட்ரெஸ்க்கு ஸ்பேஸ் கொடுத்திருக்க?” என முறைப்போடு அவளருகே வந்து அமர்ந்தவனைப் பார்த்து சட்டை செய்யாதவள் வேலையைத் தொடர்ந்தாள். அவளையே முறைத்தவனின் பார்வையில் அந்தப் புகைப்படத் தொகுப்பு கண்களில் விழ, “என்னடி இது?” எனக் கேட்டுப் பிரித்தான்.
“ஃபோட்டோஸ் ராம். நம்ப ஸ்கூல் காலேஜ்ல எடுத்தது!” என்றவள் துணியை அடுக்கி முடித்துவிட்டு அவனருகே வந்து அமர்ந்தாள். ரகுராம் ஒவ்வொரு புகைப்படமாய்த் திருப்பிப் பார்த்தான். காயத்ரி ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்த புகைப்படங்கள் எல்லாம் வரிசையாய் அணிவகுத்திருந்தன.
“ஃப்ரைஸ் வாங்கும்போது மூஞ்சியை ஏன் இப்படி வச்சிருக்க காயூ? ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி?” உதட்டைக் கோணியவனை முறைத்தவள், “நான் நல்லாதான் டேன்ஸ் ஆடுனேன் ராம். ஃபர்ஸ்ட் ப்ரைஸ் தாராம செகண்ட் கொடுத்தாங்க. அதான் மூஞ்சியைத் தூக்கி வச்சிருந்தேன்!” என சிரித்தாள் இவள்.
“ம்கூம்... நீ கையைக் காலை அப்படியும் இப்படியும் ஆடி எல்லாரையும் ஏமாத்தியிருப்ப. ஆனால் அவனுங்க உஷாரா செகண்ட் ப்ரைஸ் கொடுத்துட்டானுங்க. இதுல சோகம் வேற. நீதான் நடனப்புயல் ஆச்சே. காலேஜ் கல்சுரல்ஸ்ல நான் பார்த்திருக்கேனே!” என அவன் உடல் குலுங்க சிரித்ததும் கடியானவள் அவன் கையிலே நறுக்கென கிள்ளி வைத்தாள்.
ஆனாலும் அவனது சிரிப்பு தொடர்ந்தது. அவள் ஆறாம் வகுப்பு தொடங்கியதும் அனைத்து படத்திலும் ரகுராம் உடனிருந்தான்.
அவன் பாரதியார் வேடமிட்டு முதல் பரிசு வாங்கிய புகைப்படத்தைக் காண்பித்தவன், “பாரதி நேர்ல வந்தா கூட இவ்வளோ தத்ரூபமா இருந்துக்காது இல்ல காயூ. என் கலை சேவையைப் பாராட்டி அப்பவே ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கொடுத்திருக்காங்க பாருடி...” என அவன் பெருமையாய் உரைத்ததும் மேலிருந்து கீழாய் அவனைக் கேலியாகப் பார்த்தவள், “இருக்கதுலயே ஈஸியான வேஷம் பாரதியாரைக் காபி பண்றதுதான் டா. ஏதோ நாசா விஞ்ஞானி ரேஞ்சுக்கு பீட்டர் விடாத. மூஞ்சூறு மாதிரி ஒரு மூஞ்சி!” என அவள் கூறியதும், “நீ ஆடுன டேன்ஸ்க்கு நான் போட்ட வேஷமே பரவாயில்லை...” என சிலுப்பினான் இவன். இருவரும் அந்தத் தொகுப்பை சிரிப்புடன் பார்த்தனர்.
பின்னர் இருந்த அனைத்திலுமே இருவரும் ஜோடியாய்தான் நின்றிருந்தனர். பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலையோமா, பிரிவு உபச்சார விழா, சுற்றுலா சென்றது என அனைத்திலுமே ஒன்றாய் நிறைந்து கிடந்தனர். காயத்ரி தனியாய் இருந்த புகைப்படத்தை விட அவனோடு இருக்கும் அத்தனையிலும் முகமும் அகமும் மலர புன்னகைத்திருந்தாள். அதுவே அவளது மனத்தை காட்டியது. ஒவ்வொரு புகைப்படத்தையும் அத்தனையாய் பத்திரப்படுத்தியிருந்தாள் பெண். கல்லூரியில் கூட நிறைய புகைப்படங்கள் எடுத்திருந்தனர்.
புகைப்பட தொகுப்பின் பின்பகுதியில் ஓரிரு வெள்ளைக் காகிதங்கள் இருக்க, அதில் இவள் ஏதோ எழுதி வைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் காயத்ரி படக்கென தொகுப்பை அவனிடமிருந்து கைப்பற்ற நினைக்க, ரகு அதைத் தலைக்கு மேலே தூக்கியிருந்தான்.
“ராம்... ஃபோட்டோஸ் அவ்வளோ தான். நீ பார்த்தது போதும். குடு!” கட்டிலில் ஏறி அதை வாங்க முயன்றாள்.
அவனும் ஏறி நின்றவன், “நோ வே...நீ என்ன கிறுக்கி இருக்கன்னு நான் பார்க்கணும்!” என்றான் சிரிப்புடன்.
“அது என் பெர்சனல். அதெல்லாம் நீ எதுக்குப் படிக்கிற. ஒழுங்கா குடுத்துடு டா!” இவள் அதட்டலாய் கேட்க, அவன் அப்படியே கட்டிலிலிருந்து குதித்து அதை படிக்கத் தொடங்கினான்.
“ராம்...நாயே.. படிக்காத டா!” அவள் பதறிக் கொண்டே அருகே வர, அவன் அங்குமிங்கும் நடந்து கடகடவென படித்து முடித்திருந்தான்.
“ஓஹோ...
அளவிட முடியாத நம்பிக்கை
அதீத நேசம்
அன்பின் பற்றுதல்
அலாதிப்பிரியம்
உன்னதமான பக்தனொருவன் கடவுளிடம்
கொண்டதைப் போலொரு
முக்திநிலை!
அதுவொரு உத்தமமான பரிபூரணம் – காயத்ரியின் ராமிற்கான காதல்!” என அவன் வாசித்து முடித்ததும் காயத்ரி வெடக்கத்தில் ஒற்றைக் கையால் முகத்தை மூடிக் கொண்டாள்.
“ராம்... போதும் டா... க்ரிஞ்சா எதாவது எழுதி வச்சிருப்பேன் நான்!” அவள் சிணுங்கியபடி ஒரு கையை அவனை நோக்கி நீட்ட, “ஆஹா... போடி...” என்றவன் மேலும் வாசித்தான்.
“காதலின் நியதிகள் அலாதியானவை. எதற்கும் உடன்படாதவை. விதிகளை எல்லாம் வீழச் செய்பவை. கடவுளைக் கண்ட பக்தனின் நிலை அது. பரவசத்தோடு நவரசத்தையும் உண்ட பக்தனைப் பித்தனாக்குபவை!” என அவன் கூறவும் இவள் ஓடிச்சென்று தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். அவனது முகத்தில் சன்னமான சிரிப்பு.
“சே... ஒரு கவிஞை வளரவிடாம பண்ணிட்டாங்கப்பா!” என அவன் கேலியாய் உரைக்க, கையில் அகப்பட்ட தலையணையை அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.
“போதும் டா... கொல்லப்போறேன் உன்னை. நீ முதல்ல அதை வச்சிட்டு வந்து படு!” என ஒற்றை விரலை காட்டித் தலையணையில் புதைந்திருந்த தலையை தூக்கி மிரட்டியவளைப் பார்த்து நம்பியார் சிரிப்பை உதிர்த்தவன், “இன்னும் ஒரு வருஷத்துக்கு கண்டென்ட் தேறும் போல டி...” என்றான்.