• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
இஷ்டம் – 21 💖
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. காயத்ரியின் புடவைக்கு மேல்சட்டை தைத்து வாங்கிய கௌதமி ரகுராமிடம் அவளது வீட்டில் சென்று கொடுத்து வரப் பணித்தார். இவன் அவள் வீடு நோக்கிச் சென்றான்.
ரகுராமின் வாகனச் சத்தம் கேட்டதும் விறுவிறுவென வாயிலுக்கு ஓடி வந்து நின்றனர் இரண்டு மத்திம வயது பெண்கள். பள்ளி முடித்து கல்லூரி எடுத்து வைத்திருக்கும் இருவரும் இரட்டையர்கள்.
“மாமா... ஸ்டாப், ஸ்டாப். மேரேஜ்க்கு முன்னாடி அக்காவைப் பார்க்க வரக் கூடாதுன்னு லாஸ்ட் டைமே ஆர்டர் போட்டு இருந்தோமே. மறந்துட்டீங்களா?” என வினோதா மாணவனை மிரட்டு ஆசிரியர் தொனியில் கேட்க, “ஆமா மாமா... அப்படி பார்க்கணும்னா கொஞ்சம் செலவாகுமே!” என்றாள் விஜிதா. இருவரும் ஷண்முகியின் பேத்திகள். அவர்கள் இருவரும் வழியை மறைத்து நிற்க, இவன் முகத்தில் முறுவல் பிறந்தது.
“சரி மச்சினிச்சீஸ், இந்த டைம் எண்ண டிமாண்ட்?” என அவன் புருவத்தை தூக்க, “ஆளுக்கு டூ பிஃப்டி கொடுங்க. அப்போதான் உள்ள விடுவோம்!” வினோதா கையை நீட்டியபடியே கேட்டாள்.
“ஃபூ... இவ்வளோதானா?” என்ற ரகுராம் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுடைய கையில் கொடுத்தான்.
“சண்டை போடாம பிரிச்சுக்கோங்க பேபீஸ்!” என அவன் சன்னமான சிரிப்புடன் உரைத்ததும், “மாமா... இதெல்லாம் நல்லா இல்லை. போங்கு...போங்க போங்க!” என விஜிதா சிணுங்கினாள்.
“மாமா...இந்தாங்க லிஸ்ட். ஆர்டர் போட்டுட்டு உள்ள போவீங்களாம்!” வினோதா வெள்ளைக் காகிதத்தை எடுத்து அவன் முன்னே ஆட்டிக் காண்பித்தாள்.

இவன் அதை வாங்கி வாசித்தான். “ப்ரௌனி, ஹாட் சாக்லேட், ஹனி கேக், சிக்கன் ரோல், வெயிட் சாக்லேட், க்வாலிட்டி வால்ஸ், வொயிட் சாஸ் பாஸ்தா!” என அவள் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, “சரி...இதான் லாஸ்ட். இனி ஊருக்கு போற வரைக்கும் நோ அவுட் சைட் புட்ஸ். இப்போ ஆர்டர் போடுங்க!” என்றான் கண்டிப்பும் அன்புமாய்.
“அட அட எங்க மாமா ரொம்ப ஸ்வீட்!” வினோதா பற்கள் தெரிய பளீரென புன்னகைத்தாள்.
“மாமா... லாஸ்ட் டைம் வந்தப்போவே ஏமாத்திட்டீங்க. இந்த டைம் நீங்க சொல்லியே ஆகணும். இந்த உம்முனா மூஞ்சி அக்காவுக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணீங்க நீங்க? அவ எப்படி உங்ககிட்டே லவ்வை சொன்னா? எனக்கு ஈகரா இருக்கு அதைத் தெரிஞ்சுக்க?” என இருவரும் அவனை ஆர்வமாய்ப் பார்த்தனர்.
பேசிக் கொண்டே மூவரும் உள்வரண்டாவிற்கு நகர்ந்திருந்தனர். மயில் மாணிக்க கொடியருகேதான் காயத்ரி அமர்ந்திருந்தாள். இரண்டு கைகளிலும் மருதாணி வைத்திருந்தாள். இவர்கள் பக்கம் பார்க்கவில்லை எனினும் அவர்களது உரையாடலை சின்ன சிரிப்புடன் கேட்டிருந்தாள்.
அவளை எட்டிப் பார்த்த ரகுராம் தொண்டையைச் செருமினான்.
“நான் எக்ஸ்ப்ளெய்ண் பண்ணா எஃபெக்ட் கம்மியா இருக்கும் பேபிஸ். பேசாம வீடியோவா காட்டவா?” என அவன் கேட்டதும் படக்கென நிமிர்ந்தாள் காயத்ரி. அவளது முகத்தில் இப்போது முறைப்பிருந்தது. கண்களாலே காட்டாதே என அவனை மிரட்டினாள்.
“வாவ் மாமா...இந்த சிடுமூஞ்சி காயத்ரிக்குள்ள ஒரு ரொமான்டிக் பெர்சனா? வீடியோ எல்லாம் எடுத்தீங்களா?” ஒருத்தி துள்ளலுடன் கேட்க, ரகுராம் புன்னகையுடன் அலைபேசியைக் கையில் எடுத்தான்.
காயத்ரிக்கு பக்கென்றிருந்தது. விறுவிறுவென அவர்கள் அருகே வந்தவள், “ராம்... உள்ளே வா. உன்கிட்ட பேசணும்!” என அவனைக் கண்களாலே எரித்தாள்.
“ஹக்கும்...அஹம், இன்னொரு நாள் வீடியோவைப் பார்க்கலாம் மச்சினிச்சீஸ். இப்போ வேணும்ன்றதை ஆர்டர் போடுங்க!” என அலைபேசியை அவர்களிடம் நீட்டினான். காயத்ரி அவனைக் கீழ் கண்ணால் முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“மாமா...இந்த சிடுமூஞ்சி அக்கா உங்களுக்கு வேணாம். கண்ணாலே எப்படி மிரட்டீட்டு போறா பாருங்க. பேசாம எங்க ரெண்டு பேத்துல ஒருத்தரைக் கட்டிக்கோங்க!” விஜிதா குறும்புடன் கூற, தாடையில் கைவைத்து யோசனை செய்தவன், “எதுக்கு ஓர வஞ்சனை பண்ணிட்டு. பேசாம ரெண்டு பேரையும் நானே கட்டிக்கிறேன்!” என இவன் சிரிப்புடன் கூறினான்.
“அஸ்கு புஸ்கு... போங்க மாமா!” அவள் சடைத்தாள்.
“சரி, உங்கங்க்கா கண்ல ஃபயர் விட்டுட்டு போனா. நான் போய் என்னென்னு கேட்குறேன்...” என நகர்ந்தான்.
“மாமா... நாங்க வீடியோவை எடுத்துப் பார்க்க போறோம்!” அவர்கள் இருவரும் மெலிதாய்க் கத்த, “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பேபீஸ். ஃபுல்லா பாஸ்வேர்ட் போட்டு ப்ரெடெக்ட் பண்ணி வச்சிருக்கேன்!” என திரும்பாலே கூறிவிட்டு நடந்தான் ரகுராம்.
“வாங்க தம்பி... வாங்கப்பா!” ஷண்முகியும் அவரது இரண்டாவது மகளும் கூடத்தில்தான் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.
“பாட்டீ, அம்மா ட்ரெஸ் ஸ்டிச் பண்ணி வந்துடுச்சுன்னு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அப்புறம் கொஞ்சம் ஜ்வல்ஸூம் இருக்கு!” என்றான் பையை அவர்களிடம் நீட்டி.
“சரிப்பா... உக்காருங்க, சாப்ட்டு போவீங்க...” என அவர் எழுந்து நிற்க, “பாட்டீ, நோ ஃபார்மாலிட்டீஸ். நான் தண்ணி குடிச்சிட்டு கிளம்புறேன்...” என்றான்.
“இருங்க தம்பி, தண்ணி எடுத்துட்டு வரேன்...” அவர் அகலப் பார்க்க, “நோ...நோ. நீங்க வொர்க்கை கண்டினியூ பண்ணுங்க. நானே போய் குடிச்சிக்கிறேன்...” என்றவன் சமையலறைக்குள் செல்ல, காயத்ரி சுவரில் சாய்ந்து நின்று அவனை முறைத்தாள்.
“இப்போ எதுக்கு ராம் வந்த?” அவள் சூடாய்க் கேட்க, “ஹே...ஜாக்கெட் ஸ்டிச் பண்ணிக் கொடுத்தது வந்துடுச்சு டி. அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்!” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறுபவனை முறைத்தவள், “வந்தா வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பாம சின்ன புள்ளைங்ககிட்டே என்னடா பேச்சு வேண்டி கிடக்கு? அவங்ககிட்டே போய் அந்த வீடியோவைக் காட்டுவீயா நீ?” சத்தம் உயர்த்தாமல் அவனைக் கடிந்தாள் பெண்.
“ஓஹோ... வீடியோ காட்டுனா தப்பு. பட், ஃபோர்ஸ் பண்ணி வேணாம் வேணாம்னு சொன்னவனைக் கிஸ் பண்ணா தப்பு இல்லையா காயூ?” அவன் அப்பாவியாய்க் கேட்டதும் இவளது முகம் சிவந்தது. எப்போது இந்தப் பையன் இந்தப் பேச்சை விடுவான் என ஆயசமாய் அவனைப் பார்த்தாள்.
“ராம்... இதை விடவே மாட்டீயா நீ?” கோபமாய்க் கூற முயன்றாலும் அவள் குரலில் மெலிதாய் கூச்சம் படர்ந்திருந்தது.
“சே! சே... லைஃப் டைம் கன்டென்ட் டி!” என்றான் குரலை தழைத்து கேலியாய். காயத்ரி வெளியே எட்டிப் பார்த்தாள்.
“ஏம்மா... கல்யாணத்துக்கு முன்னாடி என் புருஷன் முகத்தை நல்லா பார்க்க விட்டியா நீ? இப்போ உன் பேத்தின்னதும் வீடுவரை வந்து பேச விட்ற. இதெல்லாம் ஓர வஞ்சனை மா!” என ஷண்முகியின் இரண்டாவது மகள் செல்வமாரி சடைத்தார்.
“ஏன்டி... உங்க காலம் என்ன? இந்தக் காலம் என்ன? அதுவும் அவங்க என்ன தெரியாத பசங்களா? சின்ன வயசுல இருந்தே ஒன்னா மண்ணா வளர்ந்தவங்க. கல்யாணத்துக்கு முன்னாடி பேசக் கூடாது, பார்க்க கூடாதுன்னு சொல்ல முடியுமா என்ன?” என்ற ஷண்முகியின் பதிலும் காயத்ரியின் காதில் தெளிவாய் விழுந்து தொலைத்தது.
வெளியே அவளது பார்வை இருப்பதை உணர்ந்த ராம், “குடிகாரி...” என்றான் உரத்தக் குரலில்.
“ஷ்... சத்தம் போடாம பேசுடா. வெளிய அம்மாச்சி, சித்தி எல்லாம் இருக்காங்க!” என்றாள் அதட்டலாய்.
“சத்தம் போடாம ஒரு முத்தம் குடு காயூ. நான் அப்படியே சமத்துப் பையனா ஓடிடுவேனாம்!” என அவன் குறும்பாய்க் கூற, “ராம்... நீ வீட்டுக்கு கிளம்பு. உன் பேச்சே சரியில்ல!” அவனை முறைத்தாள் பெண்.
“நோ வே...ஒரே ஒரு கிஸ். ஒன்னே ஒன்னு!” என தனது உதட்டை தொட்டுவிட்டு அவளது உதட்டைக் கை காண்பித்தான். காயத்ரியின் முகம் சிவந்தது.
“ராம்... இப்போ நீ கிளம்பலை. சாவடிச்சுடுவேன். ஒழுங்கா ஓடிடு டா!” என்றாள் அடிக்குரலில். ஆனால் அவன் முகம் பார்க்க திராணியில்லை. கைவிரலில் உள்ள மருதாணியை ஆராய்ந்தாள். மெதுவாய் கன்னம் சூடேறியது.
“முத்தம் வாங்காம நான் போக மாட்டேன் காயூ. ஐ நீட் டீப் ப்ரெஞ்ச் கிஸ்!” அவள் விழிப் பார்த்துக் கூறியபடி வந்தவனைப் பார்த்து அதிர்ந்தவள், “ராம், வெளிய எல்லாரும் இருக்காங்க. உள்ள வந்தா அசிங்கமாகிடும் டா. கிளம்பு நீ. இல்லைன்னா மருதாணி அழிஞ்சாலும் பரவாயில்லைன்னு உன் கன்னத்துல அப்பிடுவேன். அப்புறம் கல்யாணதப்போ முகம் சிவந்து வந்து நிப்ப. பார்த்துக்கோ!” தடுமாறினாலும் அவனை மிரட்டியவள் சுவரோடு ஒன்றினாள். தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும் அசையாது நின்றான் ரகுராம்.
“காயூ... எந்தப் படத்துல டி பார்த்து இவ்வளோ பெர்பெக்டா மூக்கு இடிக்காத மாதிரி கிஸ் பண்ண கத்துக்கிட்ட?” அவன் கேட்டதும் காயத்ரியின் முகம் இன்னுமே சிவந்தது.
“கல்யாணத்துக்கு முன்னாடி அடிவாங்கணும்னு நினைச்சு வந்தீயா டா நீ?” அவன் முகம் பார்க்காது கேட்டாள்.
“வெட்கப்படுறீயா டி காயூ? இதுவும் நல்லாதான் இருக்கு. ஆனால் நீ என்னை தானே வெட்கப்பட வப்ப?” என தலையை சாய்த்து அவள் முகம் பார்த்து உரைத்தவனை முறைக்க முயன்றவளின் உதடுகளில் சிறு கீற்றாய் சிரிப்பு முளைத்து தொலைத்தது.
“இப்படிலாம் பேசாத ராம். எனக்கு எம்பேரிசிங்கா இருக்கு. இனிமே அந்த வீடியோ பத்தி பேசுன, பேச வாய் இருக்காது டா!” என்ன முயன்றும் அவளது குரலில் கடுமை இல்லை. இந்தப் பையன் ஏன் இப்படி பேசுகிறான் என சிரிப்பும் முறைப்புமாய் பேசினாள்.
“அப்போ நீ கிஸ் தர மாட்ட ரைட்?” கேட்டவன் கையை சுற்றி வளைத்து அவள் முகத்தருகே கொண்டு வர, காயத்ரி பயந்து மருதாணி இட்ட கையை தூக்கச் செல்ல, “வெயிட் வெயிட் காயூ... நீ அமைதியா இருந்தா ஒன்னும் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்...” என்றவனை நம்பாது பார்த்தாள் பெண். ஆனாலும் கைகள் கீழே இறங்கின.
“எனக்கு இன்னொரு டவுட். அதை மட்டும் க்ளியர் பண்ணு...” என்றவன் கைகளை பட்டென அவளிடையில் வைத்து வருடவும் காயத்ரிக்கு குப்பென முகம் சிவந்து போனது.
“ராம்...முதல்ல நீ கிளம்பு டா. டவுட்டெல்லாம் அப்புறம் கிளியர் பண்ணிக்கலாம்!” என படபடப்புடன் பேசினாள்.
“ஹ்கூம்... இப்பவே நீ க்ளியர் பண்ணு. இதென்ன காயூ, இடுப்பவே காணோம். எங்கடி இடுப்பை!” என்றவன் அவளது வயிற்றில் ஐந்து விரல்களையும் வைத்து வருடி, “குடிச்சு குடிச்சு தொப்பை வச்சிருச்சா காயூ? அன்னைக்கே ஐ பெல்ட் இட்!” என அவன் பேசியதும் பட்டென வயிற்று உள்ளிழுத்துக் கொண்டவள், “ஆமா... அப்படித்தான் தொப்பை இருக்கும். இந்த ஜென்மத்துல உனக்கு இந்த குடிகாரிதான் டா!” என்றாள் ரோஷமாய்‌. ஆனால் அவளுக்குமே சிரிப்பு வந்தது.
அவன் மேலே பேசும் முன்னே, “ராம், மேரேஜ்க்கு அப்புறம் ப்ரெஞ்ச் கிஸ்ஸென்னா, டிப்ரண்ட் டிப்ரெண்டா தரேன். முதல்ல இப்போ இடத்தைக் காலி பண்ணு நீ. பத்து நிமிஷமா என்னை இம்சை பண்ணுற நீ?” அவள் முணுமுணுக்கவும், ஆச்சர்யத்தில் இவனது முகம் முழுவதும் சிரிப்பு படர்ந்தது.
“அப்போ இன்னும் நிறைய தெரியுமா டி உனக்கு?” குறும்பாய்க் கேட்க, ஒரு நொடி மூச்சை இழுத்து வெளிவிட்டவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா... எல்லாத்தையும் உன்கிட்டே தான் ட்ரை பண்ண முடியும். நீயே சொன்னாலும் நான் விடமாட்டேன் ராம்!” வெட்கமும் சிரிப்புமாய் அவள் கூறியதும்,
“ஐ யம் வெய்டிங் காயூ!” எனப் புருவத்தை உயர்த்தியவன், “இப்போ வெட்கமெல்லாம் போய்டுச்சா காயூ. அப்போ நான் கல்யாணத்துக்குப் பின்ன ரொம்ப கஷ்டப்பட தேவையில்ல போல?” அவள் முகம் பார்த்து ரகசியக் குரலில் உரைத்தவனைப் பார்த்த காயூ, “நீயேன் டா கஷ்டப்பட போற‌. நான்தான் கஷ்டப்படுவேன்!" கேலியாய் அவள் முணுமுணுக்கவும், ரகுராமின் முகம் சிவந்து போனது. அவள் கூற்றின் அர்த்தம் அவனுக்குமே தெளிவாய் புரிந்தது.
“அடிங்க...” என அவளது தலையில் தட்ட சென்றான். ஆனாலும் அவன் முகத்தில் வெட்கத்தின் சாயல். மெலிதாய் குனிந்து அடியிலிருந்து தப்பித்தவள் முட்டிக் கையால் அவனைத் திருப்பி, “கிளம்பு டா...” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறி பெரியவர்கள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அறைக்குள் நுழைந்தாள். இவனுமே சிறு சங்கடத்துடன் அவர்களிடம் கூறிவிட்டு வெளியேறினான். வினோதா விஜிதா கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு ரகு விடைபெற்றான்.
இவர்கள் இருவரும் வாங்கியதை உண்டு முடித்து பாசமாய் அக்கா என அழைத்துக் கொண்டே காயத்ரி அறைக்குள் நுழைய, “போச்சு... போச்சு. இவளுகளோட முடியலை கடவுளே. அவன் ஒருத்தன் படுத்துறது பத்தலைன்னு இந்தக் குட்டிச் சாத்தானுங்க வேற. இன்னைக்கு தூங்குன மாதிரிதான்!” என அவள் நொந்து கொள்ள, இருவரும் சேர்ந்து அவளை ஒருபாடு படுத்தியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை சுபயோக சுபதினத்தில் திருச்சியிலிருந்த அந்த கூடலழகர் கோவிலில் வெகுவாய் ஜனத்திரள் காணப்பட்டது. பச்சை வண்ணப் பட்டுடுத்தி மல்லிகை சரம் சரசரக்க கழுத்தில் மாலையோடு காயத்ரி, ரகுராம் அருகே நின்றிருந்தாள். அவனுமே கல்யாணத்துக்கே உரிய பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்தான்.
ஐயர் மந்திரங்களை உரைத்துக் கொண்டிருக்க, சுற்றத்தார் அவர்களை சுற்றி வளைத்திருந்தனர். முதல்நாளே தேவராஜின் மொத்த குடும்பமும் வந்திறங்கி இருந்தது. காயத்ரியின் தாய் மாமா வீட்டினர் காலையில் இங்கே கோவிலுக்கு வந்துவிட்டிருந்தனர். அவளுடைய சித்தி பெரியம்மா முறையில் உள்ளவர்களும் புடைசூழ நின்றிருந்தாள். இவர்களை எல்லாம் தாய் உயிரோடிருக்கும் போது அவள் பார்த்தது. அடுத்தது இன்றைக்குத்தான் பார்க்கிறாள். அதிலும் அவளது தாய் மாமான் முகமே அவளுக்கு மறந்து விட்டிருந்தது. இதோ இப்போது அவர் பெயருக்கு முன் நிற்க, அவள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. வந்து வாழ்த்துவிட்டு செல்லுங்கள் என்றொரு பாவனைதான்.
எல்லாவற்றையும் விட ரகுராம் அருகே இப்படியொரு மணக்கோலத்தில் நிற்கும் போதே அவளையும் அறியாது மனதில் நிம்மதி அடர்ந்தது. அதனாலே மற்றவர்களைப் பற்றி அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
 
Administrator
Staff member
Messages
1,091
Reaction score
3,124
Points
113
“அக்கா... மாமா உன்னை சைட் அடிச்சிட்டே இருக்காரு!” வினோதா காயத்ரியின் காதில் முணுமுணுக்க, “சும்மா இரு வினோ!” என அவளை அதட்டியவள் மெதுவாய் ரகுராமின் புறம் பார்வையைத் திருப்பினாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“ராம்... என்னையே ஏன் டா பார்க்குற?” இவள் மெல்லிய குரலில் கடிய, “நீ செம்ம ஃபிகர் காயூ... ஆனால் இப்போதான் அழகா தெரியுற டி!” என்றவனை முறைத்தவள், “சாவடிச்சுடுவேன் ராம்!” என முணுமுணுத்தாள். சிரிப்புடன் பார்வையை அவன் திருப்பிக் கொள்ள, யாருடைய பார்வையோ காயத்ரியைக் குறுகுறுக்கச் செய்தது. விழிகளை மெதுவாய் சுழற்றினாள். யுக்தேஷ் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“வா யுக்தா!” வார்த்தையில்லாமல் உதட்டை அசைத்து அவனை அழைத்தாள். தலையை அசைத்தவனின் முகத்தில் புன்னகை இல்லை. அவளுக்காக வந்திருக்கிறான் என காயத்ரிக்கும் புரிந்தது.
“ஏன் டா ரகு, உனக்கு மட்டும் எப்படி டா அழகழகா பொண்ணுங்க மாட்றாங்க. ஒரு கல்யாணம் நின்னதும்‌ தாடி வச்சு தேவதாஸ் ஆகிடுவன்னு பார்த்தா இப்படி சிரிச்சிட்டே அழகான பொண்ணு கூட ஜோடிப் போட்டு நிக்கிறீயே டா!” உதட்டைக் கடித்து சிரிப்புடன் அவ்தேஷ் கேட்க, அவனை முறைக்க முயன்ற ரகுராமின் முகத்திலும் சிரிப்பு தொற்றிக் கொண்டது.
“ஆமா மச்சான்... எனக்கும் இதே டவுட்தான்!” கௌரேஷூம் குரல் கொடுக்க, “மூடிட்டு நில்லுங்க டா!” என்ற ரகுவின் உதடுகளில் சிரிப்பின் சாயல் மிச்சமிருந்தது.
ஐயர் மந்திரங்களை கூறிக் கொண்டே தாலியை எடுத்து வந்து காயத்ரியின் தாய்மாமாவின் கையில் கொடுக்க, அவர் அதை வாங்கி ரகுராமிடம் கொடுத்தார். பெண் நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைக்க அந்த சிரித்த முகத்தை அகத்தில் பதித்துக் கொண்டே ரகு அவள் விழிகளைப் பார்த்து கொண்டே இரண்டு முடிச்சுகளை இட, கௌதமி வீட்டு சொந்தத்தில் ஒரு பெண் நாத்தனார் முடிச்சை இட்டு முடித்தாள். அவளது நெற்றியில் குங்குமத்தை உடையவன் இட, காயத்ரி மெலிதாய் கலங்கிய விழிகளை சிமிட்டிக் கொண்டாள். அக்னி சாட்சியாக இருவரும் கைப்பிடித்து ஏழு முறை வலம் வந்தனர். பின்னர் அவளது விரலில் மெட்டியணிந்து அவர்களை உறவை உறுதி
செய்தியிருந்தான் ரகுராம்.
மணமக்கள் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள, அப்படியே அருகிலிருந்த மண்டபத்தை நோக்கி நகர்ந்தனர். ஏற்கனவே மண்டபத்தில் உறவினர்கள் வரத் தொடங்கி இருக்க, ஒவ்வொருவராய் வாழ்த்தி முடித்து பரிசுகளை வழங்கினர். ஷண்முகியும் செல்வமாரியும் மூத்தப் பெண்களாய் அனைத்தையும் பெண் வீட்டு சார்பாக எடுத்து செய்ய, தங்கராஜ் உறவினர்களை உபசரித்தார். மாப்பிள்ளை வீட்டில் ஆட்களுக்கு பஞ்சமில்லாது போக ஆளாளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்தனர்.
ரகுராம் நேற்றே அத்தைகளிடம் காயத்ரியைப் பற்றி தவறாக எதுவும் பேசக் கூடாது என கண்டிப்புடன் கூறிவிட்டான். அதற்கு முத்தவர் கோபம் கொண்டு வீட்டிற்கே கிளம்பி விடுகிறேன் என தொடங்க, தேவராஜ்தான் சகோதரிகளை சமாதானம் செய்ய திணறிப்போனார். ஒருவழியாய் அனைவரையும் சமாளித்து திருமணம் நன்முறையில் முடிந்திருந்தது.
மேடையிலே நின்றிருந்த மணமக்கள் உணவு உண்ண அழைத்துச் செல்லப்பட்டனர். இடையிடையே குளிர்பானங்களும் அருந்தினர். காயத்ரி அலுவல் ரீதியான நட்புகள் வந்து வாழ்த்திவிட்டு செல்ல, ரகுராம் வேலை பார்க்கும் மருத்துவமனையில் இருந்து ஒருத்தர் விடாது அனைவரும் வந்திருந்தனர்.
நேரம் மெதுவாய் மாலையைத் தொட, மணமக்கள் முதலில் காயத்ரியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே அரை மணிநேரம் இருந்துவிட்டு அப்படியே ரகுராமின் வீட்டை அடைந்தனர். பால் பழம் என அடுத்தடுத்த சடங்குகள் நடைபெற, காயத்ரி சோர்ந்து போனாள். ராமின் முகத்திலுமே சோர்வு அப்பியிருந்தது. ஆனாலும் இருவர் முகத்திலிருந்த புன்னகையும் வாடவேயில்லை.
காயத்ரி மீண்டும் குளித்து முடித்து இரவு சடங்கிற்காக அலங்காரம் செய்ய அமர வைக்கப்பட்டாள். வினோதா அருகே அமர்ந்து அவளுக்கு உணவை ஊட்ட, விஜிதாவும் மற்றொரு பெண்ணும் அலங்காரம் செய்தனர். ஷண்முகியும் அவரது இரண்டு பெண்களும் கௌதமியிடம் மறுநாள் விருந்து பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.‌
“விஜி, வினோ...மேக்கப் முடிஞ்சதா? போங்க... போய் சாப்பிடுங்க. வீட்டுக்கு கிளம்பணும்!” என செல்வமாரி அவர்களை அதட்டி உணவு உண்ண வைத்தார். காயத்ரி கண்ணாடியின் முன்பு அமர்ந்திருந்தாள். இரண்டு கைகளையும் பொன் வளையல் ஆக்கிரமித்திருக்க, புதிதாய் கட்டிய ஈரமாயிருந்த மஞ்சள் கயிறு அவளது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருமுறை அதைத் தடவித் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அவளுடைய ராம், அவளுக்கு மட்டுமே என மொத்தமாய் எழுதி வாங்கிவிட்ட நிறைவு மனதெங்கும் பரவியது. இதுவரை இருந்த பாதுகாப்பின்மை, வலி, வேதனை என அனைத்துமே மெல்ல மெல்ல கரைந்திருக்க, ஆசுவாசமாய் அமர்ந்தாள்.
பத்து மணிக்குத்தான் நல்ல நேரம் என காயத்ரி அறையிலே அமர்ந்திருந்தாள். இடையிடையே பெரியவர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். நேரம்‌ பத்தை நெருங்கியதும், ஷண்முகியும் அவரது இரண்டு மகள்களுடன் கௌதமியுடன் வந்தார்.

பெரியவர்களிடம் இவள் ஆசிர்வாதம் பெற, “காயூ, எல்லாம் பார்த்துக்கோ டி. நாங்க இப்போ கிளம்புறோம். நாளைக்கு மறுவீட்டுக்கு மாப்பிள்ளையோட வந்து சேரு!” என்ற ஷண்முகி விடை பெற, இவள் கூடத்திற்கு வந்தாள். தங்கராஜ் மகளைத்தான் பார்த்திருந்தார்.

அவர் அருகே வந்தவள், “சாப்டீங்களா பா? போனதும் மறக்காம மாத்திரையைப் போடுங்க!” கண்டிப்பாய் உரைத்தவள், “விஜி, வினோ... என் ரூம்ல யெல்லோ கலர் கப்போர்ட்ல என்னென்ன மாத்திரை எப்போ கொடுக்கணும்னு எழுதி வச்சிருக்கேன். பார்த்து எடுத்து அப்பாவுக்கு கொடுங்க!” என அவர்களிடமும் உரைத்தாள்.
“சரிக்கா... நான் பார்த்துக்கிறேன்!” வினோதா கூற, இவள் புன்னகையுடன் தலையை அசைத்தாள். பிறந்ததிலிருந்தே உடனிருந்த மகளைப் பிரியும் போது இன்னுமே பிரியம் அதிகரிப்பதை உணர்ந்த தங்கராஜ், “வரேன் மா!” என்றார்.
“ஹம்ம் பா!” புன்னகையுடன் தலையை அசைத்தவளின் தலையைத் தடவியவரின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் பெண்.
“போதும் காயூ, நாங்க கிளம்புறோம். அதான் காலைல அங்க வந்துடுவ இல்ல. அப்புறம் உங்கப்பாவை பார்க்கணும்னா பத்து நிமிஷம் ரெண்டு தெரு தாண்டுனா பார்த்துடப் போற. அதுக்கே இப்படியா?” என ஷண்முகி சடைக்க, “அம்மாச்சி!” என அவரை உதட்டைக் கோணி முறைத்தாள். அவர்கள் விடை பெற, தேவராஜ் அக்காவின் பெண்கள் காயத்ரியை ரகுராம் அறை வரை சென்று விட்டுவிட்டு வந்தனர்.
என்னதான் காதல் என்று இத்தனை வருடங்கள் அவனை மனதில் சுமந்தாலும் கணவன், அவர்களுக்கு இடையேயான உறவு என்று வரும்போது காயத்ரியிடம் மெலிதான கூச்சமும் சங்கோஜமும் வந்து ஒட்டிக் கொண்டது. பதற்றம் மேவினாலும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தவளின் முகம் ஒரு நொடி ஆச்சர்யத்தில் அதிர்ந்தது. பின்னே உதடுகளில் சிரிப்பு தானாய் முளைத்து தொலைத்தது.
அறை முதலிரவிற்கே உரிய பிரத்யோக அலங்காரத்தில் ஜொலிக்க, ஊதுபத்தியுடன் வாசனை திரவியமும் நாசியை நிறைத்தது. இவள் புன்னகையுடன் உள் நுழைந்து கதவை சாற்றிவிட்டு கையிலிருந்த பால் சொம்பை மேஜை மீது வைத்தாள். அருகே இனிப்பு கார வகைகள் இடம் பெற்றிருந்தன.
மெதுவாய் சத்தம் செய்யாது ரகுராம் அருகே சென்று நின்றாள் காயத்ரி. பட்டு வேட்டை சட்டையை அவிழ்த்து ஒரு ஓரமாய் தூக்கிப் போட்டிருந்தான். முக்கால்வாசி வரை காலை மறைக்கும் அளவிற்கு குட்டி கால்சராயும் தொளதொளவென டீஷர்ட் வகையிலான மேல்சட்டையும் அணிந்து குப்புறப்படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ரகுராம். மெத்தையிலிருந்த பூக்களை எல்லாம் உதறிவிட்டு வேறொரு மெத்தை விரிப்பை விரித்திருக்கிறான் என ஊகித்தவள் மெதுவாய் அவனது தலையை வருட, வளையல் சத்தத்தோடு அவளது சுகந்தமும் நாசியை நிறைக்க, கரத்தை உயர்த்தி வளைகரத்தைப் பிடித்தான்.
“காயூ... செம்ம டயர்ட் நான். சாரி, துக்கமா வருது!” தெளிவில்லாத குரலில் அவன் உளற, “ச்சு... தூங்கு ராம். எனக்கும் டயர்டாதான் இருக்கு!” என அவன் கன்னத்தை வாஞ்சையுடன் தடவிவிட்டாள்.
“ஹம்ம்... நீயும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து படுடி!” என்றவன் மறுபுறம் தலையைத் திருப்பி படுத்தான். அவனுக்கு தலையை அசைத்தவள், ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த உடைப் பெட்டியிலிருந்து இரவு உடையை மட்டும் வெளியே எடுத்தாள். நகைகளை அகற்றிவிட்டு கழிவறைக்குள் சென்று உடைமாற்றி வந்தவள் பாலை வீணடிக்க விரும்பாது குடித்து முடித்தாள்.
பின்னர் ஆங்காங்கே சிதறிக் கிடந்த அவனது உடைகளை எடுத்துக் கூடையில் போட்டுவிட்டு விளக்கணைத்துவிட்டு அவனருகே வந்து படுத்ததும் உடல் ஓய்விற்கு கெஞ்சியது. காலையில் நான்கு மணிக்கு எழுந்தாள். இப்போது மணி பதினொன்றைத் தொட்டிருக்க, இவ்வளவு நேரமும் ஓய்வின்றி சடங்கு சம்பிரதாயங்கள் என பெரியவர்கள் படுத்தி எடுத்துவிட்டனர். இப்போது படுத்ததும் விழிகள் சொக்கின.
அவள் முதல்நிலை உறக்கத்தை தொட, படக்கென்று ரகுராம் அவளருகே உருண்டு வந்து கையையும் காலையும் அவள் மீது போட்டிருந்தான். ஒரு நொடி திடுக்கிட்டு விழித்தவள், ரகுராம் தான் என்பதில் மூச்சை வெளிவிட்டாள். அவன் கால் கனமாய் இருக்க, மெதுவாய் அதை நகர்த்திவிட்டு அவனருகே இன்னும் நகர்ந்து படுத்து அவன் கையை வயிற்றோடு பிடித்துக் கொண்டவள் பாதியில் விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள். நீண்ட நாளைக்குப் பின்னர் இருக்கும் சூழ்நிலை அனைத்தையும் மறந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
திரைச்சீலைகளைக் கடந்து மெதுவாய் முகத்தில் வெயில்படவும் கண்களை சுருக்கினான் ரகுராம். அவன் கைகளை யாரோ இறுக்கிப் பிடித்திருக்கும் உணர்வு. போதாத குறைக்கு முகத்தில் ஏதோ தொந்தரவு செய்ய, எரிச்சலுடன் விழிகளைத் திறந்தான். காயத்ரியின் கூந்தல் கற்றைகள் தான் அவனை தொந்தரவு செய்தன. நொடியில் எரிச்சல் குறைந்து முகத்தில் முறுவல் பூத்தது. காயத்ரி மறுபுறம் திரும்பி படுத்திருக்க, இவன் அவளை வயிற்றோடு அணைத்திருந்தான். அவனது கைகளை பெண் தன்னோடு பிடித்து வைத்திருந்தாள்.
நேரத்தைப் பார்க்க காலை ஏழென காட்டியது. மெதுவாய் அவளிடமிருந்து பிரிந்தான். அவன் அசைவிற்கும் காயத்ரி எழவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இவன் எழுந்து காலைக் கடன்களை முடித்து குளித்து உடைமாற்றி வந்தப் பின்னரும் கூட அவள் எழவில்லை. வெளியே எல்லோரும் காத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில், “காயூ... குடிகாரி, கும்பகர்ணி எழுந்திரிடி!” என அவள் கன்னத்தில் தாட்டினான்.
“ராம்...” அவன் கையைத் தட்டிவிட்டாள் பெண்.
“எல்லாரும் வெளிய வெயிட் பண்றாங்க டி‌. நான் மட்டும் வெளிய போகவா? அது நல்லா இருக்காது. எழுந்திரி டி!” என அவள் காதருகே சென்று ரகு கூறவும், காயத்ரி இமைகளைக் கடினப்பட்டு பிரித்தாள். இன்னுமே உறக்கத்திற்கு விழிகள் கெஞ்சின.
“ராம்... கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் டா!” கனமான போர்வையின் கதகதப்பில் சுருண்டு மறுபுறம் திரும்பிப் படுத்தவளைப் பார்த்தவனின் முகம் கனிந்து போனது.
“ரெண்டு நாள் காயூ. கெஸ்ட் எல்லாரும் வீட்டுக்குப் போய்ட்டாங்கன்னா, நீ எப்ப வேணாலும் எழுந்திரிக்கலாம். இப்போ போய் குளிச்சிட்டு வா காயூ!” என்று அவளருகே அமர்ந்தவனின் மடியில் தலையை வைத்தவள், “ஹம்ம்...” என்ற முனங்கலோடு இரண்டு நிமிடம் அவன் உடல் சூட்டை ஸ்பரிசித்துவிட்டு எழுந்து குளித்து உள்ளேயே புடவையை உடுத்தி வெளியே வந்தாள். தலையிலிருந்த துண்டை உதறி அருகேயிருந்த மேஜையில் உலர வைத்தவள், முடியை சிறிய இழுபட்டையில் அடக்கினாள். நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு கணவனைப் பார்த்தாள். அவன் அலைபேசியில் புதைந்திருந்த தலையை நிமிர்த்தினான்.
“போகலாமா காயூ?” எனக் கேட்டு ரகு எழ, இருவரும் வெளியே சென்றனர். காயத்ரி யாருடைய முகத்தையும் காணாது தயங்கியபடியே வெளியே வர, “வாங்க... வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க முதல்ல!” என கௌதமி இருவரையும் அமர்த்தி உணவு உண்ண வைத்தார்.
“தலையை காய வச்சுப் பின்னிட்டு இந்தப் பூவை வச்சுக்கோ காயூ. உங்க அம்மாச்சி காலைலயே ஃபோன் பண்ணிட்டாங்க. ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு கிளம்புங்க...” என அவர் கொடுத்தப் பூவோடு காயத்ரி அறைக்குள் நுழைய, ரகுராம் இளையவர்களோடு அமர்ந்தான். யுக்தாவிற்கும் அவனுக்கும் இடையேயான போர் இன்னும் முற்றுப் பெறவில்லை. அப்படியே தொடர்ந்து கொண்டிருக்க, இவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. காயத்ரி தயாராகி வரவும் இருவரும் அங்கே சென்றனர்.
“வாங்க மாப்பிள்ளை, வாடி காயூ!” ஷண்முகி இருவரையும் வரவேற்க, “ஹம்ம்... கல்யாணம் முடிஞ்சு ஒருநாள் தானே ஆகுது அம்மாச்சி. யாரோ வீட்டுக்கு வந்த மாதிரி என்ன வரவேற்பு!” என உதட்டை சுழித்து சடைத்துக் கொண்டே தந்தையின் அருகே சென்று அமர்ந்தாள் காயத்ரி.
“கல்யாணம் முடிஞ்ச மறு நிமிஷமே இது உன் வீடு இல்ல டி. இனிமே உன் புருஷன் வீடுதான் உனக்கு அயோத்தி!” என்றவரை முறைத்தவள், “எங்கப்பாவுக்கு சாப்பாடு கொடுத்தீயா நீ?” என அவரைக் கேள்வி கேட்டாள்.
“நான் அப்பவே சமைச்சுட்டு சாப்பிட கூப்ட்டேன்‌‌. மாப்பிள்ளைதான் மக வந்ததும் சாப்பிட்றேன்னு சொல்லிட்டாரு...” அவர் கூறியதும், “ப்பா...இவ்வளோ நேரம் ஏன் சாப்பிடலை?” என அவரை கடித்து கொண்டே எழுந்தவள் சமையலறைக்குள் சென்று உணவை எடுத்து வந்து அவரிடம் அதட்டலாயக் கொடுக்க, அவளை அன்பாய்ப் பார்த்தார் பெரியவர். நேற்று ஒரு நாள் இரவின் மகளின் இன்மையிலே இந்த அதட்டலை அவர் வெகுவாய் தேடியிருந்தார்.
அவரது முகத்தைப் பார்த்தவள், “சாப்பிடுங்கப்பா... மாத்திரை போடணும் இல்ல?” என மென்மையாய்க் கேட்டாள். அவர் உண்டதும் மாத்திரையை கொடுத்தாள். ஷண்முகி ரகுராமை கவனிக்கிறேன் என்ற பெயரில் அவன் முன்னே இனிப்பு காரமென அனைத்தையும் நிரப்பி அன்பு தொல்லை செய்து கொண்டிருந்தார்.
“அம்மாச்சி, இப்போதான் ரெண்டு பேரும் சாப்ட்டு வந்தோம். அவன் வயித்துல இடம் இருக்காது. அப்புறம் சாப்பிடுவான்!” காயத்ரி அவனைக் காப்பாற்ற இடை புகுந்தாள்.
“ஏன்டி... என்ன இன்னும் அவன் இவன்னு பேசிட்டு இருக்க? அவர்னு மரியாதையா பேசு!” அவர் கடிய, ரகுராம் குறும்புடன் அவளைப் பார்த்தான்.
“ப்ம்ச்... அம்மாச்சி... மதியத்துக்கு என்ன மெனு?” எனப் பேச்சை மாற்றினாள்.
“அதை நாங்க பார்த்துக்கிறோம். நீ மாப்பிள்ளையைக் கூட்டீட்டு போய் ரூம்க்குள்ள ரெஸ்ட் எடுக்க வை...” என்றார் அவர்.
“ராம் வா...வந்து கொஞ்ச ரெஸ்ட் எடு நீ...” என்றவளை ஷண்முகி கண்களால் முறைக்க அவரை சட்டை செய்யாமல் அறைக்குள் சென்றாள். அவள் பின்னே நுழைந்தவன், “தனியா உக்கார்ந்து என்ன பண்ண காயூ. போரடிக்கும் டி...” என்றான் முணுமுணுப்பாய்.
“ஹம்ம்... ஹால்ல உக்கார்ந்து டீவி பார்க்குறீயா ராம்?” அவள் யோசனையாக கேட்க, “ம்ஹூம்...” என்றான்.
“அப்புறம் என்ன டா பண்ண போற?” அவள் மெலிதாய் அதட்ட, “என் மச்சினிச்சிங்க கூட விளையாடப் போறேன்...” என்றவன், “விஜி, வினோ...” எனக் கத்தி அழைத்தான்.
புடவையின் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி அவனை முறைத்தவள், “நீ என்ன விளையாடுவன்னு எனக்குத் தெரியும். மூடிக்கிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரி. இல்லைன்னா ஃபோன்ல எதுவும் மூவி பாரு. அப்படியும் போரடிச்சதுன்னா வெளிய போய் ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ணு!” என்றாள் கண்டிப்புடன்.
“நோ...நோ, விஜி வினோவோட டைம் ஸ்பெண்ட் பண்ணணும் காயூ!” அப்பாவியாயக் கூறியவனை இவள் முறைக்க, அதற்குள்ளே இரண்டு வாண்டுகளும் வந்துவிட்டனர்.
“மாமா... வாங்க, பெட் வச்சே செஸ் விளையாடலாம். தோத்தவங்க‌ வின் பண்றவங்க கேட்குறதை வாங்கிக் கொடுக்கணும்!” விஜிதா கண்களை உருட்டி ஆர்வமாய்க் கூற, “நோ பாஸ்ட் புட் அலவ்ட். வேற எதுவும்னா நான் வரேன்...” என அவன் கூற, “ஓகே... என்ன வாங்கலாம்னு அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம்.‌ இப்போ வாங்க விளையாடலாம்...” என இருவரும் அவனை வெளியே வரண்டாவிற்கு இழுத்துச் செல்ல, காயத்ரி பெரியவர்களுடன் சமையல் செய்ய சென்றாள்.
சமைத்து முடித்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்டனர். ரகுராம் நண்பர்களை பார்க்க கிளம்ப, காயத்ரிக்கு வயிறு நிறைய உண்டது தூக்கத்தை வரவழைத்தது. அறைக்குச் சென்று சிறிது நேரம் தூங்கி எழுந்து மாலை தேநீரோடு இவர்கள் விடைபெற, ஷண்முகியும் அவரது மகள்கள் பேத்திகளுடன் மதுரைக்குப் புறப்பட ஆயத்தமானார். காயத்ரியை அழைத்து அவர் அறிவுரை கூற எதையும் மறுக்காது தலையை மட்டும் அசைத்துக் கேட்டுக் கொண்டவள் சிந்தையில் ஏற்றவில்லை.
“ப்பா...நாளைல இருந்து பக்கத்த தெருவுல இருந்து ஒரு அக்கா வீட்டுல சமைக்க, வீட்டு வேலை செய்ய வருவாங்க. நான் ஏற்கனவே சொல்லி வச்சுட்டேன். இன்னைக்கு ஃபோன் பண்ணி ரிமைண்ட் பண்றேன். நீங்களா எதையும் செய்ய வேணாம்...” என தந்தையிடம் அறிவுறுத்தியவள் அந்தப் பெண்மணிக்கும் அழைத்து அவரது வருகையை உறுதி செய்து கொண்டாள். பின்னர் இருவரும் அங்கிருந்து ரகுவின் வீடு நோக்கி நகர்ந்தனர்.
தேவராஜின் அக்காக்கள் குடும்பம் நாளைக்குத்தான் கிளம்புவதாக ஏற்பாடு. எனவே அனைவரும் கூடத்தில் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருக்க, காயத்ரி அதில் கலந்து கொள்ளவில்லை. கௌதமி அருகே அமர்ந்தாள். பின்னர் இரவு உணவை அவர்களோடு சேர்ந்து சமைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள். பட்டு சேலை கசகசவென்றிருக்க, இரவு உடையை எடுத்தாள். கட்டிலில் அமர்ந்திருந்த ரகுராம் அவளைத்தான் பார்த்திருந்தான். இவள் பார்த்ததும் படக்கென அலைபேசியில் தலையைப் புதைக்க, காயத்ரி உதடுகளில் சிரிப்பு தொற்றியது.
‘மாட்டுனடா மவனே! ஒரு முத்தத்துக்கு என்னை என்னப் பாடுபடுத்துன? வரேன் இரு’ என மனதில் முணுமுணுத்துக் கொண்டே உடைமாற்றி வந்தவள் அவனுக்கு அருகே இடிப்பது போல அமர்ந்தாள்.

தொடரும்...

சாரி கைய்ஸ்... எதிர்பாராம ஒரு முக்கிய வேலை. அதான் இந்தப் பக்கம் வரலை. இனிமே ஸ்டோரி முடிக்கிற வரை நோ லீவ் 🙈😌 நம்புனாதா சோறு.



















































 
Well-known member
Messages
465
Reaction score
342
Points
63
முத்தம் கேட்டுட்டு மொத்தமா தூங்கிட்டியே டாக்டர் 😜😜😜😜
 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Namakku soaru thaan mukkiyammmmm😜😜😜😜😜😜
 
Top