- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 21 
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. காயத்ரியின் புடவைக்கு மேல்சட்டை தைத்து வாங்கிய கௌதமி ரகுராமிடம் அவளது வீட்டில் சென்று கொடுத்து வரப் பணித்தார். இவன் அவள் வீடு நோக்கிச் சென்றான்.
ரகுராமின் வாகனச் சத்தம் கேட்டதும் விறுவிறுவென வாயிலுக்கு ஓடி வந்து நின்றனர் இரண்டு மத்திம வயது பெண்கள். பள்ளி முடித்து கல்லூரி எடுத்து வைத்திருக்கும் இருவரும் இரட்டையர்கள்.
“மாமா... ஸ்டாப், ஸ்டாப். மேரேஜ்க்கு முன்னாடி அக்காவைப் பார்க்க வரக் கூடாதுன்னு லாஸ்ட் டைமே ஆர்டர் போட்டு இருந்தோமே. மறந்துட்டீங்களா?” என வினோதா மாணவனை மிரட்டு ஆசிரியர் தொனியில் கேட்க, “ஆமா மாமா... அப்படி பார்க்கணும்னா கொஞ்சம் செலவாகுமே!” என்றாள் விஜிதா. இருவரும் ஷண்முகியின் பேத்திகள். அவர்கள் இருவரும் வழியை மறைத்து நிற்க, இவன் முகத்தில் முறுவல் பிறந்தது.
“சரி மச்சினிச்சீஸ், இந்த டைம் எண்ண டிமாண்ட்?” என அவன் புருவத்தை தூக்க, “ஆளுக்கு டூ பிஃப்டி கொடுங்க. அப்போதான் உள்ள விடுவோம்!” வினோதா கையை நீட்டியபடியே கேட்டாள்.
“ஃபூ... இவ்வளோதானா?” என்ற ரகுராம் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுடைய கையில் கொடுத்தான்.
“சண்டை போடாம பிரிச்சுக்கோங்க பேபீஸ்!” என அவன் சன்னமான சிரிப்புடன் உரைத்ததும், “மாமா... இதெல்லாம் நல்லா இல்லை. போங்கு...போங்க போங்க!” என விஜிதா சிணுங்கினாள்.
“மாமா...இந்தாங்க லிஸ்ட். ஆர்டர் போட்டுட்டு உள்ள போவீங்களாம்!” வினோதா வெள்ளைக் காகிதத்தை எடுத்து அவன் முன்னே ஆட்டிக் காண்பித்தாள்.
இவன் அதை வாங்கி வாசித்தான். “ப்ரௌனி, ஹாட் சாக்லேட், ஹனி கேக், சிக்கன் ரோல், வெயிட் சாக்லேட், க்வாலிட்டி வால்ஸ், வொயிட் சாஸ் பாஸ்தா!” என அவள் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, “சரி...இதான் லாஸ்ட். இனி ஊருக்கு போற வரைக்கும் நோ அவுட் சைட் புட்ஸ். இப்போ ஆர்டர் போடுங்க!” என்றான் கண்டிப்பும் அன்புமாய்.
“அட அட எங்க மாமா ரொம்ப ஸ்வீட்!” வினோதா பற்கள் தெரிய பளீரென புன்னகைத்தாள்.
“மாமா... லாஸ்ட் டைம் வந்தப்போவே ஏமாத்திட்டீங்க. இந்த டைம் நீங்க சொல்லியே ஆகணும். இந்த உம்முனா மூஞ்சி அக்காவுக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணீங்க நீங்க? அவ எப்படி உங்ககிட்டே லவ்வை சொன்னா? எனக்கு ஈகரா இருக்கு அதைத் தெரிஞ்சுக்க?” என இருவரும் அவனை ஆர்வமாய்ப் பார்த்தனர்.
பேசிக் கொண்டே மூவரும் உள்வரண்டாவிற்கு நகர்ந்திருந்தனர். மயில் மாணிக்க கொடியருகேதான் காயத்ரி அமர்ந்திருந்தாள். இரண்டு கைகளிலும் மருதாணி வைத்திருந்தாள். இவர்கள் பக்கம் பார்க்கவில்லை எனினும் அவர்களது உரையாடலை சின்ன சிரிப்புடன் கேட்டிருந்தாள்.
அவளை எட்டிப் பார்த்த ரகுராம் தொண்டையைச் செருமினான்.
“நான் எக்ஸ்ப்ளெய்ண் பண்ணா எஃபெக்ட் கம்மியா இருக்கும் பேபிஸ். பேசாம வீடியோவா காட்டவா?” என அவன் கேட்டதும் படக்கென நிமிர்ந்தாள் காயத்ரி. அவளது முகத்தில் இப்போது முறைப்பிருந்தது. கண்களாலே காட்டாதே என அவனை மிரட்டினாள்.
“வாவ் மாமா...இந்த சிடுமூஞ்சி காயத்ரிக்குள்ள ஒரு ரொமான்டிக் பெர்சனா? வீடியோ எல்லாம் எடுத்தீங்களா?” ஒருத்தி துள்ளலுடன் கேட்க, ரகுராம் புன்னகையுடன் அலைபேசியைக் கையில் எடுத்தான்.
காயத்ரிக்கு பக்கென்றிருந்தது. விறுவிறுவென அவர்கள் அருகே வந்தவள், “ராம்... உள்ளே வா. உன்கிட்ட பேசணும்!” என அவனைக் கண்களாலே எரித்தாள்.
“ஹக்கும்...அஹம், இன்னொரு நாள் வீடியோவைப் பார்க்கலாம் மச்சினிச்சீஸ். இப்போ வேணும்ன்றதை ஆர்டர் போடுங்க!” என அலைபேசியை அவர்களிடம் நீட்டினான். காயத்ரி அவனைக் கீழ் கண்ணால் முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“மாமா...இந்த சிடுமூஞ்சி அக்கா உங்களுக்கு வேணாம். கண்ணாலே எப்படி மிரட்டீட்டு போறா பாருங்க. பேசாம எங்க ரெண்டு பேத்துல ஒருத்தரைக் கட்டிக்கோங்க!” விஜிதா குறும்புடன் கூற, தாடையில் கைவைத்து யோசனை செய்தவன், “எதுக்கு ஓர வஞ்சனை பண்ணிட்டு. பேசாம ரெண்டு பேரையும் நானே கட்டிக்கிறேன்!” என இவன் சிரிப்புடன் கூறினான்.
“அஸ்கு புஸ்கு... போங்க மாமா!” அவள் சடைத்தாள்.
“சரி, உங்கங்க்கா கண்ல ஃபயர் விட்டுட்டு போனா. நான் போய் என்னென்னு கேட்குறேன்...” என நகர்ந்தான்.
“மாமா... நாங்க வீடியோவை எடுத்துப் பார்க்க போறோம்!” அவர்கள் இருவரும் மெலிதாய்க் கத்த, “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பேபீஸ். ஃபுல்லா பாஸ்வேர்ட் போட்டு ப்ரெடெக்ட் பண்ணி வச்சிருக்கேன்!” என திரும்பாலே கூறிவிட்டு நடந்தான் ரகுராம்.
“வாங்க தம்பி... வாங்கப்பா!” ஷண்முகியும் அவரது இரண்டாவது மகளும் கூடத்தில்தான் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.
“பாட்டீ, அம்மா ட்ரெஸ் ஸ்டிச் பண்ணி வந்துடுச்சுன்னு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அப்புறம் கொஞ்சம் ஜ்வல்ஸூம் இருக்கு!” என்றான் பையை அவர்களிடம் நீட்டி.
“சரிப்பா... உக்காருங்க, சாப்ட்டு போவீங்க...” என அவர் எழுந்து நிற்க, “பாட்டீ, நோ ஃபார்மாலிட்டீஸ். நான் தண்ணி குடிச்சிட்டு கிளம்புறேன்...” என்றான்.
“இருங்க தம்பி, தண்ணி எடுத்துட்டு வரேன்...” அவர் அகலப் பார்க்க, “நோ...நோ. நீங்க வொர்க்கை கண்டினியூ பண்ணுங்க. நானே போய் குடிச்சிக்கிறேன்...” என்றவன் சமையலறைக்குள் செல்ல, காயத்ரி சுவரில் சாய்ந்து நின்று அவனை முறைத்தாள்.
“இப்போ எதுக்கு ராம் வந்த?” அவள் சூடாய்க் கேட்க, “ஹே...ஜாக்கெட் ஸ்டிச் பண்ணிக் கொடுத்தது வந்துடுச்சு டி. அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்!” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறுபவனை முறைத்தவள், “வந்தா வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பாம சின்ன புள்ளைங்ககிட்டே என்னடா பேச்சு வேண்டி கிடக்கு? அவங்ககிட்டே போய் அந்த வீடியோவைக் காட்டுவீயா நீ?” சத்தம் உயர்த்தாமல் அவனைக் கடிந்தாள் பெண்.
“ஓஹோ... வீடியோ காட்டுனா தப்பு. பட், ஃபோர்ஸ் பண்ணி வேணாம் வேணாம்னு சொன்னவனைக் கிஸ் பண்ணா தப்பு இல்லையா காயூ?” அவன் அப்பாவியாய்க் கேட்டதும் இவளது முகம் சிவந்தது. எப்போது இந்தப் பையன் இந்தப் பேச்சை விடுவான் என ஆயசமாய் அவனைப் பார்த்தாள்.
“ராம்... இதை விடவே மாட்டீயா நீ?” கோபமாய்க் கூற முயன்றாலும் அவள் குரலில் மெலிதாய் கூச்சம் படர்ந்திருந்தது.
“சே! சே... லைஃப் டைம் கன்டென்ட் டி!” என்றான் குரலை தழைத்து கேலியாய். காயத்ரி வெளியே எட்டிப் பார்த்தாள்.
“ஏம்மா... கல்யாணத்துக்கு முன்னாடி என் புருஷன் முகத்தை நல்லா பார்க்க விட்டியா நீ? இப்போ உன் பேத்தின்னதும் வீடுவரை வந்து பேச விட்ற. இதெல்லாம் ஓர வஞ்சனை மா!” என ஷண்முகியின் இரண்டாவது மகள் செல்வமாரி சடைத்தார்.
“ஏன்டி... உங்க காலம் என்ன? இந்தக் காலம் என்ன? அதுவும் அவங்க என்ன தெரியாத பசங்களா? சின்ன வயசுல இருந்தே ஒன்னா மண்ணா வளர்ந்தவங்க. கல்யாணத்துக்கு முன்னாடி பேசக் கூடாது, பார்க்க கூடாதுன்னு சொல்ல முடியுமா என்ன?” என்ற ஷண்முகியின் பதிலும் காயத்ரியின் காதில் தெளிவாய் விழுந்து தொலைத்தது.
வெளியே அவளது பார்வை இருப்பதை உணர்ந்த ராம், “குடிகாரி...” என்றான் உரத்தக் குரலில்.
“ஷ்... சத்தம் போடாம பேசுடா. வெளிய அம்மாச்சி, சித்தி எல்லாம் இருக்காங்க!” என்றாள் அதட்டலாய்.
“சத்தம் போடாம ஒரு முத்தம் குடு காயூ. நான் அப்படியே சமத்துப் பையனா ஓடிடுவேனாம்!” என அவன் குறும்பாய்க் கூற, “ராம்... நீ வீட்டுக்கு கிளம்பு. உன் பேச்சே சரியில்ல!” அவனை முறைத்தாள் பெண்.
“நோ வே...ஒரே ஒரு கிஸ். ஒன்னே ஒன்னு!” என தனது உதட்டை தொட்டுவிட்டு அவளது உதட்டைக் கை காண்பித்தான். காயத்ரியின் முகம் சிவந்தது.
“ராம்... இப்போ நீ கிளம்பலை. சாவடிச்சுடுவேன். ஒழுங்கா ஓடிடு டா!” என்றாள் அடிக்குரலில். ஆனால் அவன் முகம் பார்க்க திராணியில்லை. கைவிரலில் உள்ள மருதாணியை ஆராய்ந்தாள். மெதுவாய் கன்னம் சூடேறியது.
“முத்தம் வாங்காம நான் போக மாட்டேன் காயூ. ஐ நீட் டீப் ப்ரெஞ்ச் கிஸ்!” அவள் விழிப் பார்த்துக் கூறியபடி வந்தவனைப் பார்த்து அதிர்ந்தவள், “ராம், வெளிய எல்லாரும் இருக்காங்க. உள்ள வந்தா அசிங்கமாகிடும் டா. கிளம்பு நீ. இல்லைன்னா மருதாணி அழிஞ்சாலும் பரவாயில்லைன்னு உன் கன்னத்துல அப்பிடுவேன். அப்புறம் கல்யாணதப்போ முகம் சிவந்து வந்து நிப்ப. பார்த்துக்கோ!” தடுமாறினாலும் அவனை மிரட்டியவள் சுவரோடு ஒன்றினாள். தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும் அசையாது நின்றான் ரகுராம்.
“காயூ... எந்தப் படத்துல டி பார்த்து இவ்வளோ பெர்பெக்டா மூக்கு இடிக்காத மாதிரி கிஸ் பண்ண கத்துக்கிட்ட?” அவன் கேட்டதும் காயத்ரியின் முகம் இன்னுமே சிவந்தது.
“கல்யாணத்துக்கு முன்னாடி அடிவாங்கணும்னு நினைச்சு வந்தீயா டா நீ?” அவன் முகம் பார்க்காது கேட்டாள்.
“வெட்கப்படுறீயா டி காயூ? இதுவும் நல்லாதான் இருக்கு. ஆனால் நீ என்னை தானே வெட்கப்பட வப்ப?” என தலையை சாய்த்து அவள் முகம் பார்த்து உரைத்தவனை முறைக்க முயன்றவளின் உதடுகளில் சிறு கீற்றாய் சிரிப்பு முளைத்து தொலைத்தது.
“இப்படிலாம் பேசாத ராம். எனக்கு எம்பேரிசிங்கா இருக்கு. இனிமே அந்த வீடியோ பத்தி பேசுன, பேச வாய் இருக்காது டா!” என்ன முயன்றும் அவளது குரலில் கடுமை இல்லை. இந்தப் பையன் ஏன் இப்படி பேசுகிறான் என சிரிப்பும் முறைப்புமாய் பேசினாள்.
“அப்போ நீ கிஸ் தர மாட்ட ரைட்?” கேட்டவன் கையை சுற்றி வளைத்து அவள் முகத்தருகே கொண்டு வர, காயத்ரி பயந்து மருதாணி இட்ட கையை தூக்கச் செல்ல, “வெயிட் வெயிட் காயூ... நீ அமைதியா இருந்தா ஒன்னும் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்...” என்றவனை நம்பாது பார்த்தாள் பெண். ஆனாலும் கைகள் கீழே இறங்கின.
“எனக்கு இன்னொரு டவுட். அதை மட்டும் க்ளியர் பண்ணு...” என்றவன் கைகளை பட்டென அவளிடையில் வைத்து வருடவும் காயத்ரிக்கு குப்பென முகம் சிவந்து போனது.
“ராம்...முதல்ல நீ கிளம்பு டா. டவுட்டெல்லாம் அப்புறம் கிளியர் பண்ணிக்கலாம்!” என படபடப்புடன் பேசினாள்.
“ஹ்கூம்... இப்பவே நீ க்ளியர் பண்ணு. இதென்ன காயூ, இடுப்பவே காணோம். எங்கடி இடுப்பை!” என்றவன் அவளது வயிற்றில் ஐந்து விரல்களையும் வைத்து வருடி, “குடிச்சு குடிச்சு தொப்பை வச்சிருச்சா காயூ? அன்னைக்கே ஐ பெல்ட் இட்!” என அவன் பேசியதும் பட்டென வயிற்று உள்ளிழுத்துக் கொண்டவள், “ஆமா... அப்படித்தான் தொப்பை இருக்கும். இந்த ஜென்மத்துல உனக்கு இந்த குடிகாரிதான் டா!” என்றாள் ரோஷமாய். ஆனால் அவளுக்குமே சிரிப்பு வந்தது.
அவன் மேலே பேசும் முன்னே, “ராம், மேரேஜ்க்கு அப்புறம் ப்ரெஞ்ச் கிஸ்ஸென்னா, டிப்ரண்ட் டிப்ரெண்டா தரேன். முதல்ல இப்போ இடத்தைக் காலி பண்ணு நீ. பத்து நிமிஷமா என்னை இம்சை பண்ணுற நீ?” அவள் முணுமுணுக்கவும், ஆச்சர்யத்தில் இவனது முகம் முழுவதும் சிரிப்பு படர்ந்தது.
“அப்போ இன்னும் நிறைய தெரியுமா டி உனக்கு?” குறும்பாய்க் கேட்க, ஒரு நொடி மூச்சை இழுத்து வெளிவிட்டவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா... எல்லாத்தையும் உன்கிட்டே தான் ட்ரை பண்ண முடியும். நீயே சொன்னாலும் நான் விடமாட்டேன் ராம்!” வெட்கமும் சிரிப்புமாய் அவள் கூறியதும்,
“ஐ யம் வெய்டிங் காயூ!” எனப் புருவத்தை உயர்த்தியவன், “இப்போ வெட்கமெல்லாம் போய்டுச்சா காயூ. அப்போ நான் கல்யாணத்துக்குப் பின்ன ரொம்ப கஷ்டப்பட தேவையில்ல போல?” அவள் முகம் பார்த்து ரகசியக் குரலில் உரைத்தவனைப் பார்த்த காயூ, “நீயேன் டா கஷ்டப்பட போற. நான்தான் கஷ்டப்படுவேன்!" கேலியாய் அவள் முணுமுணுக்கவும், ரகுராமின் முகம் சிவந்து போனது. அவள் கூற்றின் அர்த்தம் அவனுக்குமே தெளிவாய் புரிந்தது.
“அடிங்க...” என அவளது தலையில் தட்ட சென்றான். ஆனாலும் அவன் முகத்தில் வெட்கத்தின் சாயல். மெலிதாய் குனிந்து அடியிலிருந்து தப்பித்தவள் முட்டிக் கையால் அவனைத் திருப்பி, “கிளம்பு டா...” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறி பெரியவர்கள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அறைக்குள் நுழைந்தாள். இவனுமே சிறு சங்கடத்துடன் அவர்களிடம் கூறிவிட்டு வெளியேறினான். வினோதா விஜிதா கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு ரகு விடைபெற்றான்.
இவர்கள் இருவரும் வாங்கியதை உண்டு முடித்து பாசமாய் அக்கா என அழைத்துக் கொண்டே காயத்ரி அறைக்குள் நுழைய, “போச்சு... போச்சு. இவளுகளோட முடியலை கடவுளே. அவன் ஒருத்தன் படுத்துறது பத்தலைன்னு இந்தக் குட்டிச் சாத்தானுங்க வேற. இன்னைக்கு தூங்குன மாதிரிதான்!” என அவள் நொந்து கொள்ள, இருவரும் சேர்ந்து அவளை ஒருபாடு படுத்தியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை சுபயோக சுபதினத்தில் திருச்சியிலிருந்த அந்த கூடலழகர் கோவிலில் வெகுவாய் ஜனத்திரள் காணப்பட்டது. பச்சை வண்ணப் பட்டுடுத்தி மல்லிகை சரம் சரசரக்க கழுத்தில் மாலையோடு காயத்ரி, ரகுராம் அருகே நின்றிருந்தாள். அவனுமே கல்யாணத்துக்கே உரிய பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்தான்.
ஐயர் மந்திரங்களை உரைத்துக் கொண்டிருக்க, சுற்றத்தார் அவர்களை சுற்றி வளைத்திருந்தனர். முதல்நாளே தேவராஜின் மொத்த குடும்பமும் வந்திறங்கி இருந்தது. காயத்ரியின் தாய் மாமா வீட்டினர் காலையில் இங்கே கோவிலுக்கு வந்துவிட்டிருந்தனர். அவளுடைய சித்தி பெரியம்மா முறையில் உள்ளவர்களும் புடைசூழ நின்றிருந்தாள். இவர்களை எல்லாம் தாய் உயிரோடிருக்கும் போது அவள் பார்த்தது. அடுத்தது இன்றைக்குத்தான் பார்க்கிறாள். அதிலும் அவளது தாய் மாமான் முகமே அவளுக்கு மறந்து விட்டிருந்தது. இதோ இப்போது அவர் பெயருக்கு முன் நிற்க, அவள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. வந்து வாழ்த்துவிட்டு செல்லுங்கள் என்றொரு பாவனைதான்.
எல்லாவற்றையும் விட ரகுராம் அருகே இப்படியொரு மணக்கோலத்தில் நிற்கும் போதே அவளையும் அறியாது மனதில் நிம்மதி அடர்ந்தது. அதனாலே மற்றவர்களைப் பற்றி அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது. காயத்ரியின் புடவைக்கு மேல்சட்டை தைத்து வாங்கிய கௌதமி ரகுராமிடம் அவளது வீட்டில் சென்று கொடுத்து வரப் பணித்தார். இவன் அவள் வீடு நோக்கிச் சென்றான்.
ரகுராமின் வாகனச் சத்தம் கேட்டதும் விறுவிறுவென வாயிலுக்கு ஓடி வந்து நின்றனர் இரண்டு மத்திம வயது பெண்கள். பள்ளி முடித்து கல்லூரி எடுத்து வைத்திருக்கும் இருவரும் இரட்டையர்கள்.
“மாமா... ஸ்டாப், ஸ்டாப். மேரேஜ்க்கு முன்னாடி அக்காவைப் பார்க்க வரக் கூடாதுன்னு லாஸ்ட் டைமே ஆர்டர் போட்டு இருந்தோமே. மறந்துட்டீங்களா?” என வினோதா மாணவனை மிரட்டு ஆசிரியர் தொனியில் கேட்க, “ஆமா மாமா... அப்படி பார்க்கணும்னா கொஞ்சம் செலவாகுமே!” என்றாள் விஜிதா. இருவரும் ஷண்முகியின் பேத்திகள். அவர்கள் இருவரும் வழியை மறைத்து நிற்க, இவன் முகத்தில் முறுவல் பிறந்தது.
“சரி மச்சினிச்சீஸ், இந்த டைம் எண்ண டிமாண்ட்?” என அவன் புருவத்தை தூக்க, “ஆளுக்கு டூ பிஃப்டி கொடுங்க. அப்போதான் உள்ள விடுவோம்!” வினோதா கையை நீட்டியபடியே கேட்டாள்.
“ஃபூ... இவ்வளோதானா?” என்ற ரகுராம் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவளுடைய கையில் கொடுத்தான்.
“சண்டை போடாம பிரிச்சுக்கோங்க பேபீஸ்!” என அவன் சன்னமான சிரிப்புடன் உரைத்ததும், “மாமா... இதெல்லாம் நல்லா இல்லை. போங்கு...போங்க போங்க!” என விஜிதா சிணுங்கினாள்.
“மாமா...இந்தாங்க லிஸ்ட். ஆர்டர் போட்டுட்டு உள்ள போவீங்களாம்!” வினோதா வெள்ளைக் காகிதத்தை எடுத்து அவன் முன்னே ஆட்டிக் காண்பித்தாள்.
இவன் அதை வாங்கி வாசித்தான். “ப்ரௌனி, ஹாட் சாக்லேட், ஹனி கேக், சிக்கன் ரோல், வெயிட் சாக்லேட், க்வாலிட்டி வால்ஸ், வொயிட் சாஸ் பாஸ்தா!” என அவள் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல, “சரி...இதான் லாஸ்ட். இனி ஊருக்கு போற வரைக்கும் நோ அவுட் சைட் புட்ஸ். இப்போ ஆர்டர் போடுங்க!” என்றான் கண்டிப்பும் அன்புமாய்.
“அட அட எங்க மாமா ரொம்ப ஸ்வீட்!” வினோதா பற்கள் தெரிய பளீரென புன்னகைத்தாள்.
“மாமா... லாஸ்ட் டைம் வந்தப்போவே ஏமாத்திட்டீங்க. இந்த டைம் நீங்க சொல்லியே ஆகணும். இந்த உம்முனா மூஞ்சி அக்காவுக்கு எப்படி ப்ரபோஸ் பண்ணீங்க நீங்க? அவ எப்படி உங்ககிட்டே லவ்வை சொன்னா? எனக்கு ஈகரா இருக்கு அதைத் தெரிஞ்சுக்க?” என இருவரும் அவனை ஆர்வமாய்ப் பார்த்தனர்.
பேசிக் கொண்டே மூவரும் உள்வரண்டாவிற்கு நகர்ந்திருந்தனர். மயில் மாணிக்க கொடியருகேதான் காயத்ரி அமர்ந்திருந்தாள். இரண்டு கைகளிலும் மருதாணி வைத்திருந்தாள். இவர்கள் பக்கம் பார்க்கவில்லை எனினும் அவர்களது உரையாடலை சின்ன சிரிப்புடன் கேட்டிருந்தாள்.
அவளை எட்டிப் பார்த்த ரகுராம் தொண்டையைச் செருமினான்.
“நான் எக்ஸ்ப்ளெய்ண் பண்ணா எஃபெக்ட் கம்மியா இருக்கும் பேபிஸ். பேசாம வீடியோவா காட்டவா?” என அவன் கேட்டதும் படக்கென நிமிர்ந்தாள் காயத்ரி. அவளது முகத்தில் இப்போது முறைப்பிருந்தது. கண்களாலே காட்டாதே என அவனை மிரட்டினாள்.
“வாவ் மாமா...இந்த சிடுமூஞ்சி காயத்ரிக்குள்ள ஒரு ரொமான்டிக் பெர்சனா? வீடியோ எல்லாம் எடுத்தீங்களா?” ஒருத்தி துள்ளலுடன் கேட்க, ரகுராம் புன்னகையுடன் அலைபேசியைக் கையில் எடுத்தான்.
காயத்ரிக்கு பக்கென்றிருந்தது. விறுவிறுவென அவர்கள் அருகே வந்தவள், “ராம்... உள்ளே வா. உன்கிட்ட பேசணும்!” என அவனைக் கண்களாலே எரித்தாள்.
“ஹக்கும்...அஹம், இன்னொரு நாள் வீடியோவைப் பார்க்கலாம் மச்சினிச்சீஸ். இப்போ வேணும்ன்றதை ஆர்டர் போடுங்க!” என அலைபேசியை அவர்களிடம் நீட்டினான். காயத்ரி அவனைக் கீழ் கண்ணால் முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
“மாமா...இந்த சிடுமூஞ்சி அக்கா உங்களுக்கு வேணாம். கண்ணாலே எப்படி மிரட்டீட்டு போறா பாருங்க. பேசாம எங்க ரெண்டு பேத்துல ஒருத்தரைக் கட்டிக்கோங்க!” விஜிதா குறும்புடன் கூற, தாடையில் கைவைத்து யோசனை செய்தவன், “எதுக்கு ஓர வஞ்சனை பண்ணிட்டு. பேசாம ரெண்டு பேரையும் நானே கட்டிக்கிறேன்!” என இவன் சிரிப்புடன் கூறினான்.
“அஸ்கு புஸ்கு... போங்க மாமா!” அவள் சடைத்தாள்.
“சரி, உங்கங்க்கா கண்ல ஃபயர் விட்டுட்டு போனா. நான் போய் என்னென்னு கேட்குறேன்...” என நகர்ந்தான்.
“மாமா... நாங்க வீடியோவை எடுத்துப் பார்க்க போறோம்!” அவர்கள் இருவரும் மெலிதாய்க் கத்த, “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பேபீஸ். ஃபுல்லா பாஸ்வேர்ட் போட்டு ப்ரெடெக்ட் பண்ணி வச்சிருக்கேன்!” என திரும்பாலே கூறிவிட்டு நடந்தான் ரகுராம்.
“வாங்க தம்பி... வாங்கப்பா!” ஷண்முகியும் அவரது இரண்டாவது மகளும் கூடத்தில்தான் அமர்ந்து காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தனர்.
“பாட்டீ, அம்மா ட்ரெஸ் ஸ்டிச் பண்ணி வந்துடுச்சுன்னு கொடுத்துட்டு வர சொன்னாங்க. அப்புறம் கொஞ்சம் ஜ்வல்ஸூம் இருக்கு!” என்றான் பையை அவர்களிடம் நீட்டி.
“சரிப்பா... உக்காருங்க, சாப்ட்டு போவீங்க...” என அவர் எழுந்து நிற்க, “பாட்டீ, நோ ஃபார்மாலிட்டீஸ். நான் தண்ணி குடிச்சிட்டு கிளம்புறேன்...” என்றான்.
“இருங்க தம்பி, தண்ணி எடுத்துட்டு வரேன்...” அவர் அகலப் பார்க்க, “நோ...நோ. நீங்க வொர்க்கை கண்டினியூ பண்ணுங்க. நானே போய் குடிச்சிக்கிறேன்...” என்றவன் சமையலறைக்குள் செல்ல, காயத்ரி சுவரில் சாய்ந்து நின்று அவனை முறைத்தாள்.
“இப்போ எதுக்கு ராம் வந்த?” அவள் சூடாய்க் கேட்க, “ஹே...ஜாக்கெட் ஸ்டிச் பண்ணிக் கொடுத்தது வந்துடுச்சு டி. அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்!” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறுபவனை முறைத்தவள், “வந்தா வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பாம சின்ன புள்ளைங்ககிட்டே என்னடா பேச்சு வேண்டி கிடக்கு? அவங்ககிட்டே போய் அந்த வீடியோவைக் காட்டுவீயா நீ?” சத்தம் உயர்த்தாமல் அவனைக் கடிந்தாள் பெண்.
“ஓஹோ... வீடியோ காட்டுனா தப்பு. பட், ஃபோர்ஸ் பண்ணி வேணாம் வேணாம்னு சொன்னவனைக் கிஸ் பண்ணா தப்பு இல்லையா காயூ?” அவன் அப்பாவியாய்க் கேட்டதும் இவளது முகம் சிவந்தது. எப்போது இந்தப் பையன் இந்தப் பேச்சை விடுவான் என ஆயசமாய் அவனைப் பார்த்தாள்.
“ராம்... இதை விடவே மாட்டீயா நீ?” கோபமாய்க் கூற முயன்றாலும் அவள் குரலில் மெலிதாய் கூச்சம் படர்ந்திருந்தது.
“சே! சே... லைஃப் டைம் கன்டென்ட் டி!” என்றான் குரலை தழைத்து கேலியாய். காயத்ரி வெளியே எட்டிப் பார்த்தாள்.
“ஏம்மா... கல்யாணத்துக்கு முன்னாடி என் புருஷன் முகத்தை நல்லா பார்க்க விட்டியா நீ? இப்போ உன் பேத்தின்னதும் வீடுவரை வந்து பேச விட்ற. இதெல்லாம் ஓர வஞ்சனை மா!” என ஷண்முகியின் இரண்டாவது மகள் செல்வமாரி சடைத்தார்.
“ஏன்டி... உங்க காலம் என்ன? இந்தக் காலம் என்ன? அதுவும் அவங்க என்ன தெரியாத பசங்களா? சின்ன வயசுல இருந்தே ஒன்னா மண்ணா வளர்ந்தவங்க. கல்யாணத்துக்கு முன்னாடி பேசக் கூடாது, பார்க்க கூடாதுன்னு சொல்ல முடியுமா என்ன?” என்ற ஷண்முகியின் பதிலும் காயத்ரியின் காதில் தெளிவாய் விழுந்து தொலைத்தது.
வெளியே அவளது பார்வை இருப்பதை உணர்ந்த ராம், “குடிகாரி...” என்றான் உரத்தக் குரலில்.
“ஷ்... சத்தம் போடாம பேசுடா. வெளிய அம்மாச்சி, சித்தி எல்லாம் இருக்காங்க!” என்றாள் அதட்டலாய்.
“சத்தம் போடாம ஒரு முத்தம் குடு காயூ. நான் அப்படியே சமத்துப் பையனா ஓடிடுவேனாம்!” என அவன் குறும்பாய்க் கூற, “ராம்... நீ வீட்டுக்கு கிளம்பு. உன் பேச்சே சரியில்ல!” அவனை முறைத்தாள் பெண்.
“நோ வே...ஒரே ஒரு கிஸ். ஒன்னே ஒன்னு!” என தனது உதட்டை தொட்டுவிட்டு அவளது உதட்டைக் கை காண்பித்தான். காயத்ரியின் முகம் சிவந்தது.
“ராம்... இப்போ நீ கிளம்பலை. சாவடிச்சுடுவேன். ஒழுங்கா ஓடிடு டா!” என்றாள் அடிக்குரலில். ஆனால் அவன் முகம் பார்க்க திராணியில்லை. கைவிரலில் உள்ள மருதாணியை ஆராய்ந்தாள். மெதுவாய் கன்னம் சூடேறியது.
“முத்தம் வாங்காம நான் போக மாட்டேன் காயூ. ஐ நீட் டீப் ப்ரெஞ்ச் கிஸ்!” அவள் விழிப் பார்த்துக் கூறியபடி வந்தவனைப் பார்த்து அதிர்ந்தவள், “ராம், வெளிய எல்லாரும் இருக்காங்க. உள்ள வந்தா அசிங்கமாகிடும் டா. கிளம்பு நீ. இல்லைன்னா மருதாணி அழிஞ்சாலும் பரவாயில்லைன்னு உன் கன்னத்துல அப்பிடுவேன். அப்புறம் கல்யாணதப்போ முகம் சிவந்து வந்து நிப்ப. பார்த்துக்கோ!” தடுமாறினாலும் அவனை மிரட்டியவள் சுவரோடு ஒன்றினாள். தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும் அசையாது நின்றான் ரகுராம்.
“காயூ... எந்தப் படத்துல டி பார்த்து இவ்வளோ பெர்பெக்டா மூக்கு இடிக்காத மாதிரி கிஸ் பண்ண கத்துக்கிட்ட?” அவன் கேட்டதும் காயத்ரியின் முகம் இன்னுமே சிவந்தது.
“கல்யாணத்துக்கு முன்னாடி அடிவாங்கணும்னு நினைச்சு வந்தீயா டா நீ?” அவன் முகம் பார்க்காது கேட்டாள்.
“வெட்கப்படுறீயா டி காயூ? இதுவும் நல்லாதான் இருக்கு. ஆனால் நீ என்னை தானே வெட்கப்பட வப்ப?” என தலையை சாய்த்து அவள் முகம் பார்த்து உரைத்தவனை முறைக்க முயன்றவளின் உதடுகளில் சிறு கீற்றாய் சிரிப்பு முளைத்து தொலைத்தது.
“இப்படிலாம் பேசாத ராம். எனக்கு எம்பேரிசிங்கா இருக்கு. இனிமே அந்த வீடியோ பத்தி பேசுன, பேச வாய் இருக்காது டா!” என்ன முயன்றும் அவளது குரலில் கடுமை இல்லை. இந்தப் பையன் ஏன் இப்படி பேசுகிறான் என சிரிப்பும் முறைப்புமாய் பேசினாள்.
“அப்போ நீ கிஸ் தர மாட்ட ரைட்?” கேட்டவன் கையை சுற்றி வளைத்து அவள் முகத்தருகே கொண்டு வர, காயத்ரி பயந்து மருதாணி இட்ட கையை தூக்கச் செல்ல, “வெயிட் வெயிட் காயூ... நீ அமைதியா இருந்தா ஒன்னும் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்...” என்றவனை நம்பாது பார்த்தாள் பெண். ஆனாலும் கைகள் கீழே இறங்கின.
“எனக்கு இன்னொரு டவுட். அதை மட்டும் க்ளியர் பண்ணு...” என்றவன் கைகளை பட்டென அவளிடையில் வைத்து வருடவும் காயத்ரிக்கு குப்பென முகம் சிவந்து போனது.
“ராம்...முதல்ல நீ கிளம்பு டா. டவுட்டெல்லாம் அப்புறம் கிளியர் பண்ணிக்கலாம்!” என படபடப்புடன் பேசினாள்.
“ஹ்கூம்... இப்பவே நீ க்ளியர் பண்ணு. இதென்ன காயூ, இடுப்பவே காணோம். எங்கடி இடுப்பை!” என்றவன் அவளது வயிற்றில் ஐந்து விரல்களையும் வைத்து வருடி, “குடிச்சு குடிச்சு தொப்பை வச்சிருச்சா காயூ? அன்னைக்கே ஐ பெல்ட் இட்!” என அவன் பேசியதும் பட்டென வயிற்று உள்ளிழுத்துக் கொண்டவள், “ஆமா... அப்படித்தான் தொப்பை இருக்கும். இந்த ஜென்மத்துல உனக்கு இந்த குடிகாரிதான் டா!” என்றாள் ரோஷமாய். ஆனால் அவளுக்குமே சிரிப்பு வந்தது.
அவன் மேலே பேசும் முன்னே, “ராம், மேரேஜ்க்கு அப்புறம் ப்ரெஞ்ச் கிஸ்ஸென்னா, டிப்ரண்ட் டிப்ரெண்டா தரேன். முதல்ல இப்போ இடத்தைக் காலி பண்ணு நீ. பத்து நிமிஷமா என்னை இம்சை பண்ணுற நீ?” அவள் முணுமுணுக்கவும், ஆச்சர்யத்தில் இவனது முகம் முழுவதும் சிரிப்பு படர்ந்தது.
“அப்போ இன்னும் நிறைய தெரியுமா டி உனக்கு?” குறும்பாய்க் கேட்க, ஒரு நொடி மூச்சை இழுத்து வெளிவிட்டவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா... எல்லாத்தையும் உன்கிட்டே தான் ட்ரை பண்ண முடியும். நீயே சொன்னாலும் நான் விடமாட்டேன் ராம்!” வெட்கமும் சிரிப்புமாய் அவள் கூறியதும்,
“ஐ யம் வெய்டிங் காயூ!” எனப் புருவத்தை உயர்த்தியவன், “இப்போ வெட்கமெல்லாம் போய்டுச்சா காயூ. அப்போ நான் கல்யாணத்துக்குப் பின்ன ரொம்ப கஷ்டப்பட தேவையில்ல போல?” அவள் முகம் பார்த்து ரகசியக் குரலில் உரைத்தவனைப் பார்த்த காயூ, “நீயேன் டா கஷ்டப்பட போற. நான்தான் கஷ்டப்படுவேன்!" கேலியாய் அவள் முணுமுணுக்கவும், ரகுராமின் முகம் சிவந்து போனது. அவள் கூற்றின் அர்த்தம் அவனுக்குமே தெளிவாய் புரிந்தது.
“அடிங்க...” என அவளது தலையில் தட்ட சென்றான். ஆனாலும் அவன் முகத்தில் வெட்கத்தின் சாயல். மெலிதாய் குனிந்து அடியிலிருந்து தப்பித்தவள் முட்டிக் கையால் அவனைத் திருப்பி, “கிளம்பு டா...” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறி பெரியவர்கள் முகம் பார்க்க கூச்சப்பட்டு அறைக்குள் நுழைந்தாள். இவனுமே சிறு சங்கடத்துடன் அவர்களிடம் கூறிவிட்டு வெளியேறினான். வினோதா விஜிதா கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு ரகு விடைபெற்றான்.
இவர்கள் இருவரும் வாங்கியதை உண்டு முடித்து பாசமாய் அக்கா என அழைத்துக் கொண்டே காயத்ரி அறைக்குள் நுழைய, “போச்சு... போச்சு. இவளுகளோட முடியலை கடவுளே. அவன் ஒருத்தன் படுத்துறது பத்தலைன்னு இந்தக் குட்டிச் சாத்தானுங்க வேற. இன்னைக்கு தூங்குன மாதிரிதான்!” என அவள் நொந்து கொள்ள, இருவரும் சேர்ந்து அவளை ஒருபாடு படுத்தியிருந்தனர்.
வெள்ளிக்கிழமை சுபயோக சுபதினத்தில் திருச்சியிலிருந்த அந்த கூடலழகர் கோவிலில் வெகுவாய் ஜனத்திரள் காணப்பட்டது. பச்சை வண்ணப் பட்டுடுத்தி மல்லிகை சரம் சரசரக்க கழுத்தில் மாலையோடு காயத்ரி, ரகுராம் அருகே நின்றிருந்தாள். அவனுமே கல்யாணத்துக்கே உரிய பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்தான்.
ஐயர் மந்திரங்களை உரைத்துக் கொண்டிருக்க, சுற்றத்தார் அவர்களை சுற்றி வளைத்திருந்தனர். முதல்நாளே தேவராஜின் மொத்த குடும்பமும் வந்திறங்கி இருந்தது. காயத்ரியின் தாய் மாமா வீட்டினர் காலையில் இங்கே கோவிலுக்கு வந்துவிட்டிருந்தனர். அவளுடைய சித்தி பெரியம்மா முறையில் உள்ளவர்களும் புடைசூழ நின்றிருந்தாள். இவர்களை எல்லாம் தாய் உயிரோடிருக்கும் போது அவள் பார்த்தது. அடுத்தது இன்றைக்குத்தான் பார்க்கிறாள். அதிலும் அவளது தாய் மாமான் முகமே அவளுக்கு மறந்து விட்டிருந்தது. இதோ இப்போது அவர் பெயருக்கு முன் நிற்க, அவள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. வந்து வாழ்த்துவிட்டு செல்லுங்கள் என்றொரு பாவனைதான்.
எல்லாவற்றையும் விட ரகுராம் அருகே இப்படியொரு மணக்கோலத்தில் நிற்கும் போதே அவளையும் அறியாது மனதில் நிம்மதி அடர்ந்தது. அதனாலே மற்றவர்களைப் பற்றி அவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.