- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 19
மசமசத்துப் போன விழிகளை சிமிட்டி எழுந்தமர்ந்தாள் காயத்ரி. மணி ஒன்பதைக் கடந்தும் இன்னுமே விழிகளில் உறக்கம் மிச்சமிருந்தது. படுக்கையிலிருந்து கீழே இறங்கி இரண்டு எட்டுகள் வைத்ததும் தலை சுற்றுவது போலிருக்க, மெதுவாய் நினைவடுக்கில் நேற்றைய நிகழ்வைத் தூசி தட்டினாள். தந்தையின் மது பொத்தலை எடுத்து வாயில் சரித்தது மட்டுமே மங்கலாய் நினைவு வர, முகத்தை கழுவி பல் துலக்கியவள் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதைக் குடித்தாள். தலை சுற்றல் வெகுவாய் குறைய தலை வலித்தது. இன்னுமே மதுவின் வாடை தன்னுடலில் தங்கிருப்பதாய் தோன்றியதும் சட்டென அருவருப்பாய் உணர்ந்தாள்.
சுடு தண்ணீரில் அரை மணி நேரம் தலைக்கு குளித்து வந்து மேஜை விசிறியை இழுத்துப் போட்டு அதன் முன்னே அமர்ந்து தலையை உலர்த்தினாள். மூளை மெது மெதுவாக நேற்றைய நிகழ்வை அசை போட்டது. ரகுராம் இரவு தாமதமாக வந்ததை தொட்டு அவனிடம் சண்டை போட்டிருக்கிறாள் என்பது வரை உணர்ந்தாலும் பேசிய வார்த்தைகள் எதுவும் தெளிவாய் நினைவில் இல்லை.
அப்படியே அவன் தன் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டது நினைவு வர விரல்கள் இப்போது நெற்றியை வருடின. அதைத் தொட்டு அவனைக் கட்டாயப்படுத்தி கன்னத்தில் முத்தம் வாங்கியது, விழிகளில் முத்தமிட சொன்னது என தொடர்ந்து நினைவு வந்தது. கடைசியாய் அவன் உதடுகளில் இவள் கொடுத்த அழுத்தமான முத்தம் நினைவுக்கு வரவும், காயத்ரி தலையைக் கைகளில் தாங்கி அமர்ந்தாள். சட்டென அவளால் எதையும் ஏற்க முடியவில்லை. மதுவின் பிடியில் அனைத்தும் செய்திருந்தாலும் எல்லாம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக நினைவு வந்தது.
அதுவும் அவன் வேண்டாம் என்று மறுத்தும் இவள் வலிய சென்று முத்தமிட்டதை எண்ணி ஐயோவென்றானது. ‘கடவுளே!’ என நெற்றியிலே அறைந்தாள். எப்படி அவன் முகத்தில் விழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரிய சங்கோஜத்தை அளித்தது. ஏன் நேற்று மதுவைக் குடித்தோம் என காயத்ரி நொந்து போனாள். கண்டிப்பாக மனதிலிருந்த அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்தியிருப்போம் என்பதில் அவளுக்குத் துளியளவும் ஐயமில்லை.
‘என்ன பண்ணி வச்சிருக்க காயூ? அறிவுருக்கா உனக்கு? வேணாம் வேணாம்னு இப்படி கண்டபடி பேசி சும்மா இல்லை ரெண்டு நிமிஷத்துக்கு முத்தம் கொடுத்து வச்சிருக்க!’ என நினைத்தவளுக்கு நேற்றைக்கு அவள் முத்தமிட்டதும் ரகுராம் வெட்கப்பட்டது வரை சர்வ நிச்சயமாய் மனக்கண்ணில் நிழற்படமாக ஓட, தலையை எங்கேனும் மண்ணுக்குள் புதைந்து கொள்வோமா என்ற எண்ணம்தான்.
“காயூ, என்னாச்சுமா... உடம்பு எதுவும் சரியில்லையா?” எனத் தங்கராஜ் அவளின் முகத்தையும் அமர்ந்திருந்த விதத்தையும் பார்த்து வினவ, “இல்லப்பா... லேசா தலைவலி. அதான்!” என்றாள் முணுமுணுப்பாக.
“சரி டா...தலை வலிக்கும் போது தலைக்கு ஏன் குளிச்ச? நான் தோசை சுட்றேன். நீ சாப்பிடு!” என அவர் கூற, “ப்பா... அதெல்லாம் வேணாம். நீங்க இருங்க. நானே சமைக்கிறேன்...” என்றவளை விடாது அவரே சமைத்தார். நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின்னர் அவரது கைகளில் உண்டதும் காயத்ரிக்கு சட்டென விழிகள் கலங்கப் பார்த்தன. அதை சிமிட்டி தடுத்தாள். அன்றைக்கும் அவளுக்கு மதிய நேரப்பணிதான்.
அதனாலே உண்டுவிட்டு சற்று நேரம் அமைதியாய் அமர்ந்து யோசித்தாள். கண்டிப்பாக இன்றைக்கு ரகுராம் தன்னைப் பார்க்க வருவான் எனப் புத்திக்குப் புரிந்தது. எப்படி அவனை எதிர்கொள்ள என தடுமாற்றமாய் இருந்தது. தன்னை சங்கடப்படுத்தும்படி அவன் பேச மாட்டான் என்ற நம்பிக்கையில் பெருமூச்சு விட்டாள். ஆனால் அவன் பேசிய அனைத்துமே அவளை மண்ணுக்குள் புதைய சொல்லித் தூண்டும் என எண்ணயிருக்கவில்லை. அரை மனதாக கிளம்பி வேலைக்குச் சென்றாள்.
அன்றைய நாள் எப்போதும் போல இயல்பாகவே கடந்தது. நேரம் மாலை நெருங்கவும், காயத்ரி அவ்வப்போது வாயிலைப் பார்த்துக் கொண்டாள். நேற்றைக்கு அவன் வர வேண்டும் என்று எதிர்பார்த்த மனம்தான் இன்றைக்கு வராமல் போனால் நன்றாக இருக்குமென கூற, இவளுக்கே தன்னை நினைத்து சிரிப்பாக வந்தது.
“காயூ... என்ன தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்க?” என காரத்திகா அவளது தோளை இடிக்கவும், “ஒன்னும் இல்ல கார்த்தி...” என்றாள் மென்னகையுடன்.
“ரொம்ப நாள் கழிச்சு உன் முகத்துல சிரிப்பை பார்க்குறேன் காயூ!” என்றவள் சில நிமிடங்கள் யோசனைக்குப் பின்னே, “ஆமா...கார்த்திக் சாரோட சமாதானமாகிட்டீயா என்ன?” எனக் குறும்பாய்க் கேட்டாள். அவன் இத்தனை நாட்கள் காயத்ரியைப் பார்க்க வராது இருக்கும் போதே அவளாக அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிணக்கென புரிந்து கொண்டிருந்தாள். இன்றைக்கு காயத்ரி முகம் தெளிந்திருக்கவும், பிரச்சனை தீர்ந்து விட்டதென்று உணர்ந்தவள், அதைக் கேட்டாள்.
காயத்ரி தயக்கத்துடன் தலையை அசைக்க, “ஹம்ம்... எப்படி காயூ கார்த்திக் சாரை சமாதானம் பண்ண? எனக்கும் கொஞ்சம் சொல்லேன். எப்பவுமே சிரிச்சிட்டேயிருக்க மனுஷனுக்கு கோபம் எல்லாம் வருமா காயூ? எப்படி சமாதானமானீங்க?” என அவள் நச்சரிக்க, ‘முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணேன்!’ என மனம் கேலி செய்ய, உதடு வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள், “கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுனோம் டி. சமாதானம் ஆகிட்டோம்...” என்றாள் சமாளிப்பான புன்னகையுடன்.
“ஓஹோ... ஓகே. ஓகே, அப்புறம் அவரைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு காயூ. இன்னைக்கு ஃப்ரியா இருந்தா வர சொல்லேன். எனக்கே ஒன்னு ரெண்டு சைட்டுதான் இருக்கு. இப்படி நீயும் அவர்கூட சண்டை போட்டு அவரை வர விடாம பண்ணிட்ட!” என அலுத்தவளை இவள் மென்மையாய் முறைத்தாள்.
“சரி, சரி. அவரை வர சொல்லு டி. மேரேஜ் ஸ்டாப் ஆனப்புறம் அவரைப் பார்க்கவே முடியலை. ரெண்டு டைம் மெசேஜ் மட்டும் பண்ணேன். அவ்வளோதான்!” என்று வருந்தியவளை காயத்ரி அமைதியாய்ப் பார்த்தாள்.
“ஹம்ம்... என்ன காயூ, அப்படி பார்க்குற? இது ஜஸ்ட் கன்சர்ன் டி. அப்புறம் எப்படித்தான் அந்தப் பொண்ணுக்கு இவரை வேண்டாம்னு சொல்ல மனசு வந்துச்சோ? எப்படிப்பட மனுஷன் தெரியுமா இவரு. நான் மட்டும் அன்னைக்கு மேரேஜ்க்குப் போய்ருந்தேன்னு வச்சுக்கோ, நடந்திருக்கதே வேற காயூ!” என்றவளின் பேச்சில் காயத்ரி அதிர்ந்தாள்.
“ஆமா காயூ, நீங்க ஏன் கவலைப்படுறீங்க கார்த்திக். நான் இருக்கேன் உங்களுக்கு. வாங்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணி இந்நேரம் புள்ளை குட்டியை பெத்து போட்டிருப்பேன் டி. சச் அ ஜென்யூன் பெர்சன் தெரியுமா இவரு? முகத்தை தவிர வேற எங்கேயும் பார்த்து பேச மாட்டாரு. பெருசா அலட்டல் இருக்காது. ஜோவியல், டாக்டர்னு என்னைக்குமே கெத்து காட்டுனது இல்ல. எல்லாத்தையும் விட அலைபாயுதே மாதவன் மாதிரி அழகா இருக்காருல்ல காயூ?” என்றவளின் பேச்சில் காயத்ரி இருமினாள்.
“நான் எப்படி இருக்கேன் காயூ. கொஞ்சம் டஸ்கி கலர்ல இருக்கதால ஒரு இன்பீரியர் காம்ப்ளக்ஸ் டி எனக்கு. இல்லைன்னா எப்பவோ ஒரு ப்ரபோசலைப் போட்டிருப்பேன். இப்போ கூட லேட்டாகலை. கடவுள் இன்னொரு சான்ஸ் கொடுத்திருக்காருன்னு மனசு கூப்பாடு போடுது. பேசாம ஐ லவ் யூ கார்த்திக்னு சொல்லிடவா காயூ?” என ஆர்வமாய்க் கேட்ட கார்த்திகாவை இவள் பாவமாய் பார்த்தாள். என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கி கொண்டன.
“நீ என்னடி முழிச்சுட்டே இருக்க? அவரை ஃபோன் பண்ணி அப்படியே இந்தப் பக்கம் வந்துட்டு போக சொல்லு!” என்றாள் தோழியைக் கையில் இடித்து.
“ஹம்ம்... அது, ராம் வருவான் கார்த்தி!” என்றாள் தயங்கியபடியே.
“சரி... சரி. நானே அவர்கிட்ட அலைபாயுதே ஸ்டைல்ல ப்ரபோஸ் பண்றேன். ரிஜெக்ட் பண்ணா கூட என் மனசு நோகாம பண்ணுவார் இல்ல?” என அவர் சிலாகிக்க, ராமின் மீது அவளுக்கு கோபம் வந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ரகுராம் உள்ளே நுழைந்தான். அவனது பார்வை காயத்ரி மீது அழுத்தமாகப் படிய, ஒரு நொடி அவன் விழிகளை சந்தித்துவிட்டு படக்கென குனிந்து கொண்டாள்.
மெதுவாய் விரல் நகங்களை வெகு கவனமாய் ஆராய்ந்தாள். அவன்புறம் பார்வையைப் படரவிடவில்லை.
“வாங்க சார்...வாங்க, உங்க மேல நான் கோபமா இருக்கேன்!” என்ற கார்த்திகாவின் குரலில் அவள்புறம் திரும்பியவனின் முகத்தில் மெல்லிய முறுவல்.
“கோபப்படுற அளவுக்கு நான் ஒன்னுமே செய்யலையே கார்த்திகா!” அவன் சிரிப்புடன் கேட்க,
“உங்க ஃப்ரெண்ட் கூட சண்டைன்னா அவகூட பேசலை, அவளைப் பார்க்க வரலை சரி. எங்களையும் ஏன் பார்க்க வரலை நீங்க. ஹம்ம், அப்போ அவளைப் பார்க்க வந்து சும்மா ஒப்புக்கு எங்ககிட்டே பேசுறீங்க. ரைட்?” என இவள் சிறுபிள்ளை தனமாய் முறுக்கிக் கொள்ள, அவன் முகம் மலர்ந்தது.
“சே... சே. அப்படிலாம் இல்ல கார்த்திகா. நான் கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். அதான் யார்கிட்டேயும் அவ்வளவா காண்டாக்ட்ல இல்லை மா!” அவன் பொறுமையாய் கூற, அவளுக்கும் அந்தக் காரணம் ஏற்புடையதாக இருக்கவும், தலையை அசைத்து ஆமோதித்தவள் பொதுவான பேச்சிற்குத் தாவினாள். காயத்ரி அவர்கள் புறம் வராது காலியான மாத்திரை அட்டைகளை எடுத்து குப்பைக் கூடையிலிட்டாள். என்ன என்ன மாத்திரைகள் தீர்ந்துவிட்டன என நோட்டில் குறித்து வைத்தாள். இல்லாத தூசியை மேஜை மீதிருந்து தட்டிவிட்டாள். ஹீமோபிலியா என்று வார வாரம் வந்து இரத்தம் உறைதல் காரணி குறைபாடுடையவர்களுக்கு கொடுத்த மருந்து மற்றும் இனிமேல் கொடுக்க வேண்டிய அளவு இருக்கிறதா எனப் பார்த்தாள்.
சர்வ நிச்சயமாய் அவன் முகம் பார்க்கும் திராணியற்றிருந்தாள் பெண். அவனைப் பார்த்ததும் தான் நேற்று அவனுக்கு முத்தமிட்டதுதான் முன்னின்று வந்து நிற்க, தனக்கே அது தோன்றுகிறது என்றால், அவனுக்கு கேட்க வேண்டுமா என மனம் கேலி செய்ய, நொந்து போனாள். ரகுராமின் பேச்சு கார்த்திகாவிடம் இருந்தாலும் பார்வை என்னவோ காயத்ரியை உரசத் தவறவில்லை. அவளும் அவன் பார்வையை உணர்ந்தாள்.
“காயூ, நா போய் நம்ப மூனு பேருக்கும் சூடா காஃபி வாங்கிட்டு வரேன்!” என்ற காரத்திகா ஒரு நொடி கண்கள் மின்ன நின்றவள், “காயூ, நீயே போய் வாங்கிட்டு வாடி. ப்ளீஸ், எனக்கு கால் வலிக்குது!” என அவளைப் பார்த்துக் கண்ணில் சைகை செய்தாள்.
‘ப்ளீஸ்டி... நீ போ, நாங்க ரெண்டு பேரும் தனியா பேசணும்!’ என கண்களாலே கார்த்திகா அவளிடம் கெஞ்ச, ‘இவ வேற!’ என நொந்த காயத்ரி அவ்விடம் விட்டு அகன்றால் போதும் என ஓடிவிட்டாள்.
“அப்புறம் சார், மேரேஜ் ஸ்டாப்பானது கஷ்டம்தான். அதுக்காக இப்படியே இருந்துடலாம்னு நினைக்காதீங்க. உங்களுக்காக நிறைய பொண்ணுங்க வெயிட்டிங்!” என்றாள் கேலியாய். அவன் சிரித்தான், பதிலுரைக்கவில்லை.
“ஹம்ம்... உங்களுக்குன்னு எதாவது எக்ஸ்பக்டேஷன் இருக்கா சார்? வொய்ஃப் இப்படி இருக்கணும், அது இதுன்னு?” என்றவளை யோசனையாகப் பார்த்தவன், “நாட் லைக் தட் கார்த்திகா. எனக்குப் பிடிச்சிருந்தா போதும்!” என்றான்.
“ஓஹோ... அப்போ என்னை உங்களுக்குப் பிடிக்குமா?” என கண்கள் மின்னக் கேட்டவளின் பேச்சு புரிந்தவன், “கார்த்திகா...” என்றழைத்தான் சங்கடத்துடன்.
“வெயிட்... வெயிட் கார்த்திக். நான் ப்ரிபேர் பண்ணி வச்சிருக்கதை சொல்லிட்றேன். அதுக்கப்புறம் நீங்க நோ சொல்லுங்க!” என்றவள் எழுந்து சென்று காகிதத்தால் செய்த ரோஜாவை எடுத்து வந்து அவன் முன்னே நீட்டியவள், “நீங்க அழகா இருக்கீங்கன்னு நினைக்கலை. உங்களை லவ் பண்ணணும்னு நினைக்கலை. பட் இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு கார்த்திக். யோசிச்சு சொல்லுங்க!” என குறும்பாய் பேசியவளைப் பார்த்து அவன் சிரித்துவிட்டான்.
“கார்த்திகா யூ ஆர் அமேசிங்!” புன்னகையுடன் அவள் கூற, “தேங்க் யூ டாக்டர் சாரே!” எனத் தலையைக் குனிந்து ஏற்றவள், “தென் இப்போ பதில் சொல்லலாம்!” என அவன் முகத்தை ஆர்வமாய்ப் பார்த்தாள்.
“சாரி கார்த்திகா, ஐ யம் கமிடட் வித் ஒன் கேர்ள்!” என்றான் தயங்கியபடியே. அவன் பார்வை குளம்பி கோப்பைகளுடன் உள்ளே வந்த காயத்ரியில் படிந்து மீண்டது. அவனது பேச்சு அவளுக்கும் கேட்டிருக்க, நிமிர்ந்து ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு கார்த்திகாவிடம் சென்றாள்.
“ரியலி கார்த்திக், என்னால நம்பவே முடியலை. நீங்க லவ் பண்றீங்களா? அதுவும் ஒரு பொண்ணை. வாவ், வாட் அ சர்ப்ரைஸ். யார் அந்த லக்கி கேர்ள்!” என உண்மையான அக்கறையுடன் கேட்டவளைப் பார்த்தவன் நிமிர்ந்து காயத்ரியைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தான்.
‘எதுவும் சொல்லிவிடாதே!’ எனக் கண்களால் அவனை மிரட்டினாள். அதைத் தோள் குலுக்கலில் புறந்தள்ளியவன், “ஹம்ம்... சொல்றது என்ன, உங்களுக்கு இன்ட்ரோவே கொடுக்குறேன்...” என எழுந்து அவளருகே வந்தான்.
“ராம்... எதுவும் சொன்ன, செத்த நீ...” என இவள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுக்க, அதைக் கிடப்பிலிட்டவன் அவளது தோளைச் சுற்றிக் கையைப் போட்டு, “சீக்கிரம் உங்க ஃப்ரெண்ட் காயூ மிஸஸ் காயத்ரி ரகுராமாகப் போறாங்க!” என்றான். கார்த்திகா அவளை அதிர்ந்து பார்க்க, இவள் அவளை சங்கடத்துடன் நோக்கியவாறே ரகுராமைக் கண்களில் எரித்தாள். வெடுக்கென அவன் கையைத் தட்டிவிட்டாள்.
“அடிப்பாவி பாதகத்தி... இவ்வளோ நேரம் நான் புலம்புனதை சும்மா கேட்டுட்டு இருந்தீயே... ஒரு வார்த்தை வாயைத் தொறந்து சொன்னா என்னடி?” எனக் கேட்டு காரத்திகா காயத்ரியை முறைக்க, “அது... கார்த்தி, அவன் ஏதோ உளர்றான்!” என்றாள் தடுமாறியபடியே.
“ஷட் அப் காயூ! என்கிட்ட சொல்றதுல என்ன வந்துச்சு உனக்கு? ஹம்ம். இதான் ஃப்ரெண்ட்ஷிப்பா?” எனக் கேட்டவள் வெடுக்கென தன் கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென நடக்க, இவள் கத்தியது எல்லாம் காற்றில் கலந்திருந்தது.
ரகுராமின் புறம் கோபமாகத் திரும்பியவள், “அறிவுருக்கா டா உனக்கு? ஹம்ம்... இப்படித்தான் கண்ட மேனிக்கு அவகிட்டே உளறி வைப்பீயா?” என சீறினாள்.
“யாருடி உளர்றது. நேத்து நீ குடிச்சிட்டு உளறுனதை விட நான் பேசுனது கம்மிதான்!” என அவன் பதிலுக்கு இரையவும், இவளது வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது. அவன் மேலும் எதுவும் பேசி விடுவானோ என எண்ணி பயந்தவள் அதை முகத்தில் காட்டாது ஒரு முறைப்புடன் வெளியே நடந்தாள்.
“காயூ, நான் உன்கிட்ட பேசணும்னுதான் வந்திருக்கேன்!” அவளோடு நடந்தபடியே ராம் உரைக்க, “ஐ டோன்ட் வாண்ட் டூ டாக் டூ யூ ராம்!” என்றாள் அவன் முகம் பார்க்காது.
“பட் ஐ வாண்ட் டூ டாக் டூ யு” அழுத்திக் கூறினான் ரகுராம்.
“எனக்கு இஷ்டம் இல்ல. நீ முதல்ல உன் வீட்டுக்கு கிளம்பு. என் பின்னாடி வராதே!” என பல்லைக் கடித்தவள் வாகனத்தை உயிர்ப்பித்து பறக்க, அவனும் அவளுக்குப் பின்னே சென்றான்.
வீட்டிற்குள்ளேயே நுழைந்ததும் அவனை உள்ளே வரவிடாது கதவை அடக்க வேண்டும் என அவள் எண்ணியதை தவிடு பொடியாக்கி அவளுடனே உள்ளே நுழைந்தவனை என்ன செய்வது எனத் தெரியாது திகைத்தவள், “ராம்... எதுக்கு வந்த நீ?” என்றாள் அதட்டலாய். ஆனால் அவன் முகம் பார்க்கத் தயங்கியது பெண்.
உள்ளே நுழைந்து விச்ராந்தையாக நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், “எனக்கு உன்கிட்ட பேசணும் காயூ. நிச்சயமா பேசாம போக மாட்டேன். சோ, என்னை போக சொல்றதை விட்டுட்டு வந்து இந்த சேர்ல உக்காரு!” அவனும் அதட்டலாய் மொழிய, காயத்ரி அசையாது வாயிலிலே நின்றாள். ஆனால் பார்வை அவன் முகத்தை தவிர வீட்டை சுற்றி வலம் வந்தது. ரகுராமிற்கு அவளது செய்கையில் உதட்டோரம் புன்னகை வழிந்தது. எப்போதும் எல்லோரையும் அதட்டி உருட்டி எட்ட நிற்க வைக்கும் காயூ இப்போது தயங்கித் தன் முகம் பார்க்காது தவிப்பதும் அவனுக்கு நிரம்ப பிடித்தது. இந்தப் பெண்ணின் மீதான பிடித்தம் இப்போது சுகமாய் அவனுக்குள்ளும் இறங்கியது.
“காயூ, முதல்ல என் முகத்தைப் பாருடி. என்கிட்ட என்ன உனக்கு எம்பேரிசிங்கான ஃபீலிங்க். ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் சீ மை ஃபேஸ்!” என்றான் அகமும் முகமும் கனிய.
காயத்ரி ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டவள் தைரியத்தை திரட்டி அவன் முகத்தைப் பார்த்தாள். “என்ன வேணும் ராம்?” என அழுத்தமாய்க் கேட்டாள்.
“நீதான் வேணும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் காயூ” என்றவனை ஆயாசமாகப் பார்த்தவள், “ராம்... உனக்கு எத்தனை தடவைடா சொல்லிப் புரிய வைக்கிறது? நான்தான் இது நடக்காதுன்னு சொல்றேன் இல்ல?” என்றாள் சோர்ந்த குரலில்.
“ஓ... நேத்து இதே வாய்தான் என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னது. என்கிட்ட சத்தியம் கூட வாங்குனது. கொடுத்த சத்தியத்தை திரும்ப வாங்குற பழக்கம் என்கில்ல டி!” அவளை சீண்டும் விதமாகப் பேசினான்.
“அது... அது நீ பொய் சொல்ற ராம்...” என்றாள் தடுமாறி.
“ஓஹோ... அப்போ நீ நேத்து போதைல பேசுனது, செஞ்சது எல்லாம் உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லைல?” ரகுராம் கேட்டதும் காயத்ரி பார்வையைத் தழைத்தவள், “ஹம்ம... அது. ஆமா, நான் என்ன பேசுனேன்னு ஞாபகம் இல்ல. நீ என்னை ஏமாத்தப் பார்க்குற ராம்!” தடுமாறியது குரலும் பார்வையும் பாவையும்தான். பொய்தான் கூறினாள். காலையிலிருந்து மூளையைக் கசக்கிப் பிழிந்து ஆதி முதல் அந்தம் வரை அவள் பேசியது அனைத்தையும் நினைவு கூர்ந்திருந்தாள். மது குடித்தால் இந்தளவிற்கா மனதில் இருப்பதை கொட்டுவோம் என தனக்கே ஒரு கொட்டும் வைத்துக் கொண்டாள். ஆனால் அவள் பேசிய அனைத்தையும் வெறும் உளறல் அல்ல. போதையிலும் தெளிவாய் எல்லாவற்றையும் உரைத்திருந்திருந்தாள். ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது தன்னை நினைத்தே.
“தெரியும் டி... இப்படி எதாவது சொல்லுவன்னுதான் நேத்தே எவிடென்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்!” என்றவனை இவள் நிமிர்ந்து கேள்வியாகப் பார்க்க, “இங்க வா, வந்து உக்காரு. எவிடன்ஸை காட்டுறேன்!” என அழைத்தான். அவனை முறைத்துக் கொண்டே தள்ளியமர்ந்தாள்.
அவளுக்கு அருகே வந்து தோளில் கைப் போட்டவன், “நேத்து நீ என்ன பேசுனேன்னு நீயே கேளு!” என்றவன் அவளைச் சுற்றியிருந்த கையில் அலைபேசியை ஆட்டிக் காண்பித்து நேற்றைக்கு தான் எடுத்த காணொளியை ஓடவிட்டான். காயத்ரியும் அவனும் கட்டிப் பிடித்து நின்றிருந்தனர். அவன் திருமணத்திற்கு சம்மதம் கேட்டது, இவள் சத்தியத்தோடு முத்தம் வாங்கி பின் அவனை ஆழந்து முத்தமிட்டது வரை அத்தனையும் பதிவு செய்திருந்தான். இமை சிமிட்டாமல் அந்தக் காணொளி முழுவதையும் பார்த்து முடித்திருந்தாள்.
என்னதான் நேற்றைக்கு நடந்தது நினைவில் நின்றாலும் இன்றைக்கு அதனை காணொளியாகப் பார்த்ததும் காயத்ரிக்கு முகத்தை எங்காவது மறைத்து கொள்ளலாம் என்ற எண்ணம் தான். அவன் கையைத் தட்டிவிட்டு மறுபுறம் திரும்பி நின்றவள், “அறிவிருக்கா ராம் உனக்கு? இதெல்லாம் வீடியோ எடுப்பீயா நீ?” என எரிச்சலாய்க் கேட்டாள். வெட்கமாய் வந்தது அவளுக்கு. அவன் முன்னே காண்பிக்க இயலாது கோபமாய் பேசித் தொலைத்தாள்.
“இன்டென்ஷனலா எடுக்கலை காயூ. இந்த மாதிரி நீ எதாவது பிராடு வேலை பார்ப்பன்னு தோணுச்சு. அதான் நான் வீடியோ எடுத்தேன். பட் லாஸ்ட் கிஸ்ஸிங் சீன் நானே எக்ஸ்பெக்ட் பண்ணலை!” என அவன் மேலும் பேசும் முன்னர், “ஸ்டாபிட் ராம். கிளம்பு முதல்ல!” என்றாள் கோபமாய்.
“கிளம்புறேன் கிளம்புறேன் காயூ. நீ முதல்ல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு...” என்றான் அலட்டிக்காது. இவளுக்கு கோபமும் எரிச்சலும் ஒருங்கே படர்ந்தது.
“அது முடியாது ராம்!” பட்டென அவள் பொரிந்தாள்.
“ஓஹோ... அப்போ நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்ட!” என்றவன் எழுந்து அவளருகே வர சடாரென்று திரும்பியவள், “ராம், பக்கத்துல வராதே!” என்றாள் அதட்டலாய்.
ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி வைத்து முன்னேறியவன், “நேத்து நைட் வரைக்கும் கூட நீ எனக்கு ஓகே சொல்லலைன்னா வேற யாரையாவது கூட பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன் டி. பட் நேத்து நீ பேசுனப்போதான் எனக்குப் புரிஞ்சது!” என அவள் விழிகளை ஆழப் பார்த்தவனை அவளும் அமைதியாக நோக்கினாள்.
“இந்த காயத்ரி என்னைத் தவிர யார் கூடவும் சந்தோஷமா வாழ மாட்டான்னு நேத்துதான் எனக்குத் தெரிஞ்சது!” என்றான் நிறுத்தி நிதானமாக அவள் முகம் பார்த்து. ஒரு நொடி விழிகளை சிமிட்டியவள், “உங்க அப்பா அம்மாவை சம்மதிக்க வச்சு என் அப்பாகிட்ட பொண்ணு கேட்க சொல்லு ராம். அப்புறம் நான் சம்மதிக்கிறேன்!” அவளும் வெகு நிதானமாக பதிலளித்தாள்.
“ஓஹோ... என்னால அவங்களை கன்வின்ஸ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறல்ல?” அவன் கேலியாக உதட்டை வளைக்க, “நிச்சயமா...” என அவளும் தோளைக் குலுக்கினாள்.
“ரைட் காயூ... ஒன் வீக்ல என் அப்பா அம்மாவோட வந்து உன் அப்பாகிட்டே பேசுறேன். இந்த மந்த்லயே நல்ல நாளா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றான் உறுதியானக் குரலில். அவள் அவனைப் பார்த்தாள் ஒழிய பதிலுரைக்கவில்லை.
“நான் வரேன் காயூ...” என்றவன் சில நொடிகள் யோசித்துவிட்டு அவளருகே வந்தான்.
“காயூ உன்கிட்ட ஒன்னு சொல்லணும்!” தீவிரக் குரலில் கூறியவனை இவள் கேள்வியாகப் பார்க்க, “இல்ல, பிரிட்டிஷ்காரனே தோத்துடுவான்!” என்றான் கேலியான குரலில்.
அவள் புரியாது நோக்க, “என்ன கிஸ்ஸுடி... ப்பா, ஃபர்ஸ்ட் டைம் கொடுக்குற மாதிரியா கொடுத்த. உன்கிட்ட தான் கத்துக்கணும் போல. இப்போ நினைச்சா கூட உடம்பெல்லாம் சிலிர்க்குது டி. இட்ஸ் அ டிவைன் ஃபீலிங்!” அவன் சிலாகித்து குறும்புடன் கூறி முடித்ததும் காயத்ரி காதைப் பொத்திக் கொண்டு மறுபுறம் திரும்பியவள், “இன்னும் ஒரு வார்த்தைப் பேசுன, சாவடிச்சுடுவேன் டா. முதல்ல கிளம்பு நீ!” என்றாள் கோபமாய். ஆனாலும் குரல் லேசாய் சிணுங்கியது.
“காயூ...நிஜமா டி. பொய் எல்லாம் சொல்லலை!” என அவன் வேறு பேசும் முன்னே அறைக்குள் சென்று கதவை அடைத்தவள், “வீட்டுக்கு முதல்ல கிளம்பித் தொலை டா. அதுக்கு முன்ன அந்த வீடியோவை டெலிட் பண்ற நீ!” என்றாள் அதட்டலாய்.
“நோ வே...இந்த வீடியோ ரொம்ப ப்ரஷியஸ் காயூ. ஃபர்ஸ்ட் இயர் ஆன்வர்சரிக்கு இதை ப்ரேம் போட்டு பெட் ரூம்ல மாட்டலாம்!” என்று அவன் உரைக்க, கதவை திறந்து கையில் அகப்பட்ட சீப்பை அவன் மீது எறிந்தவள், “இடத்தைக் காலி பண்ணு டா எருமை!” பல்லை நறதறத்தாள். அதேக் கேலியும் குறும்புமாய் அவன் விடை பெற, காயத்ரி தலையனையில் முகம் புதைத்தாள்.
அவன் கூறிய வார்த்தைகளைத்தான் அந்தக் காணொளியைக் காணும்போது அவளது மனதும் கூறியது. முத்தமிட்டது நினைவு வந்தாலும் இப்படி ஆழ்ந்து அனுபவித்து சில பல நிமிடங்களை அந்த முத்தம் விழுங்கியிருக்க வேணாம் என சிணுங்கினாள் பெண்.
‘போச்சு... காலம் முழுக்க இதை சொல்லியே என்னைக் கிண்டல் பண்ணுவானே. என்ன பண்ணி வச்சிருக்க காயூ?” எனத் தலையிலே தட்டினாள்.
ரகுராம் கூறியது போலவே ஒரு வாரத்தில் பெண்ணைக் கேட்டு அடுத்த பத்து நாட்களில் காயத்ரியைத் தன் மனைவியாக்கியிருந்தான்.
தொடரும்...

மசமசத்துப் போன விழிகளை சிமிட்டி எழுந்தமர்ந்தாள் காயத்ரி. மணி ஒன்பதைக் கடந்தும் இன்னுமே விழிகளில் உறக்கம் மிச்சமிருந்தது. படுக்கையிலிருந்து கீழே இறங்கி இரண்டு எட்டுகள் வைத்ததும் தலை சுற்றுவது போலிருக்க, மெதுவாய் நினைவடுக்கில் நேற்றைய நிகழ்வைத் தூசி தட்டினாள். தந்தையின் மது பொத்தலை எடுத்து வாயில் சரித்தது மட்டுமே மங்கலாய் நினைவு வர, முகத்தை கழுவி பல் துலக்கியவள் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதைக் குடித்தாள். தலை சுற்றல் வெகுவாய் குறைய தலை வலித்தது. இன்னுமே மதுவின் வாடை தன்னுடலில் தங்கிருப்பதாய் தோன்றியதும் சட்டென அருவருப்பாய் உணர்ந்தாள்.
சுடு தண்ணீரில் அரை மணி நேரம் தலைக்கு குளித்து வந்து மேஜை விசிறியை இழுத்துப் போட்டு அதன் முன்னே அமர்ந்து தலையை உலர்த்தினாள். மூளை மெது மெதுவாக நேற்றைய நிகழ்வை அசை போட்டது. ரகுராம் இரவு தாமதமாக வந்ததை தொட்டு அவனிடம் சண்டை போட்டிருக்கிறாள் என்பது வரை உணர்ந்தாலும் பேசிய வார்த்தைகள் எதுவும் தெளிவாய் நினைவில் இல்லை.
அப்படியே அவன் தன் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டது நினைவு வர விரல்கள் இப்போது நெற்றியை வருடின. அதைத் தொட்டு அவனைக் கட்டாயப்படுத்தி கன்னத்தில் முத்தம் வாங்கியது, விழிகளில் முத்தமிட சொன்னது என தொடர்ந்து நினைவு வந்தது. கடைசியாய் அவன் உதடுகளில் இவள் கொடுத்த அழுத்தமான முத்தம் நினைவுக்கு வரவும், காயத்ரி தலையைக் கைகளில் தாங்கி அமர்ந்தாள். சட்டென அவளால் எதையும் ஏற்க முடியவில்லை. மதுவின் பிடியில் அனைத்தும் செய்திருந்தாலும் எல்லாம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக நினைவு வந்தது.
அதுவும் அவன் வேண்டாம் என்று மறுத்தும் இவள் வலிய சென்று முத்தமிட்டதை எண்ணி ஐயோவென்றானது. ‘கடவுளே!’ என நெற்றியிலே அறைந்தாள். எப்படி அவன் முகத்தில் விழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே பெரிய சங்கோஜத்தை அளித்தது. ஏன் நேற்று மதுவைக் குடித்தோம் என காயத்ரி நொந்து போனாள். கண்டிப்பாக மனதிலிருந்த அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்தியிருப்போம் என்பதில் அவளுக்குத் துளியளவும் ஐயமில்லை.
‘என்ன பண்ணி வச்சிருக்க காயூ? அறிவுருக்கா உனக்கு? வேணாம் வேணாம்னு இப்படி கண்டபடி பேசி சும்மா இல்லை ரெண்டு நிமிஷத்துக்கு முத்தம் கொடுத்து வச்சிருக்க!’ என நினைத்தவளுக்கு நேற்றைக்கு அவள் முத்தமிட்டதும் ரகுராம் வெட்கப்பட்டது வரை சர்வ நிச்சயமாய் மனக்கண்ணில் நிழற்படமாக ஓட, தலையை எங்கேனும் மண்ணுக்குள் புதைந்து கொள்வோமா என்ற எண்ணம்தான்.
“காயூ, என்னாச்சுமா... உடம்பு எதுவும் சரியில்லையா?” எனத் தங்கராஜ் அவளின் முகத்தையும் அமர்ந்திருந்த விதத்தையும் பார்த்து வினவ, “இல்லப்பா... லேசா தலைவலி. அதான்!” என்றாள் முணுமுணுப்பாக.
“சரி டா...தலை வலிக்கும் போது தலைக்கு ஏன் குளிச்ச? நான் தோசை சுட்றேன். நீ சாப்பிடு!” என அவர் கூற, “ப்பா... அதெல்லாம் வேணாம். நீங்க இருங்க. நானே சமைக்கிறேன்...” என்றவளை விடாது அவரே சமைத்தார். நீண்ட நெடிய வருடங்களுக்குப் பின்னர் அவரது கைகளில் உண்டதும் காயத்ரிக்கு சட்டென விழிகள் கலங்கப் பார்த்தன. அதை சிமிட்டி தடுத்தாள். அன்றைக்கும் அவளுக்கு மதிய நேரப்பணிதான்.
அதனாலே உண்டுவிட்டு சற்று நேரம் அமைதியாய் அமர்ந்து யோசித்தாள். கண்டிப்பாக இன்றைக்கு ரகுராம் தன்னைப் பார்க்க வருவான் எனப் புத்திக்குப் புரிந்தது. எப்படி அவனை எதிர்கொள்ள என தடுமாற்றமாய் இருந்தது. தன்னை சங்கடப்படுத்தும்படி அவன் பேச மாட்டான் என்ற நம்பிக்கையில் பெருமூச்சு விட்டாள். ஆனால் அவன் பேசிய அனைத்துமே அவளை மண்ணுக்குள் புதைய சொல்லித் தூண்டும் என எண்ணயிருக்கவில்லை. அரை மனதாக கிளம்பி வேலைக்குச் சென்றாள்.
அன்றைய நாள் எப்போதும் போல இயல்பாகவே கடந்தது. நேரம் மாலை நெருங்கவும், காயத்ரி அவ்வப்போது வாயிலைப் பார்த்துக் கொண்டாள். நேற்றைக்கு அவன் வர வேண்டும் என்று எதிர்பார்த்த மனம்தான் இன்றைக்கு வராமல் போனால் நன்றாக இருக்குமென கூற, இவளுக்கே தன்னை நினைத்து சிரிப்பாக வந்தது.
“காயூ... என்ன தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்க?” என காரத்திகா அவளது தோளை இடிக்கவும், “ஒன்னும் இல்ல கார்த்தி...” என்றாள் மென்னகையுடன்.
“ரொம்ப நாள் கழிச்சு உன் முகத்துல சிரிப்பை பார்க்குறேன் காயூ!” என்றவள் சில நிமிடங்கள் யோசனைக்குப் பின்னே, “ஆமா...கார்த்திக் சாரோட சமாதானமாகிட்டீயா என்ன?” எனக் குறும்பாய்க் கேட்டாள். அவன் இத்தனை நாட்கள் காயத்ரியைப் பார்க்க வராது இருக்கும் போதே அவளாக அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ பிணக்கென புரிந்து கொண்டிருந்தாள். இன்றைக்கு காயத்ரி முகம் தெளிந்திருக்கவும், பிரச்சனை தீர்ந்து விட்டதென்று உணர்ந்தவள், அதைக் கேட்டாள்.
காயத்ரி தயக்கத்துடன் தலையை அசைக்க, “ஹம்ம்... எப்படி காயூ கார்த்திக் சாரை சமாதானம் பண்ண? எனக்கும் கொஞ்சம் சொல்லேன். எப்பவுமே சிரிச்சிட்டேயிருக்க மனுஷனுக்கு கோபம் எல்லாம் வருமா காயூ? எப்படி சமாதானமானீங்க?” என அவள் நச்சரிக்க, ‘முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணேன்!’ என மனம் கேலி செய்ய, உதடு வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள், “கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுனோம் டி. சமாதானம் ஆகிட்டோம்...” என்றாள் சமாளிப்பான புன்னகையுடன்.
“ஓஹோ... ஓகே. ஓகே, அப்புறம் அவரைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு காயூ. இன்னைக்கு ஃப்ரியா இருந்தா வர சொல்லேன். எனக்கே ஒன்னு ரெண்டு சைட்டுதான் இருக்கு. இப்படி நீயும் அவர்கூட சண்டை போட்டு அவரை வர விடாம பண்ணிட்ட!” என அலுத்தவளை இவள் மென்மையாய் முறைத்தாள்.
“சரி, சரி. அவரை வர சொல்லு டி. மேரேஜ் ஸ்டாப் ஆனப்புறம் அவரைப் பார்க்கவே முடியலை. ரெண்டு டைம் மெசேஜ் மட்டும் பண்ணேன். அவ்வளோதான்!” என்று வருந்தியவளை காயத்ரி அமைதியாய்ப் பார்த்தாள்.
“ஹம்ம்... என்ன காயூ, அப்படி பார்க்குற? இது ஜஸ்ட் கன்சர்ன் டி. அப்புறம் எப்படித்தான் அந்தப் பொண்ணுக்கு இவரை வேண்டாம்னு சொல்ல மனசு வந்துச்சோ? எப்படிப்பட மனுஷன் தெரியுமா இவரு. நான் மட்டும் அன்னைக்கு மேரேஜ்க்குப் போய்ருந்தேன்னு வச்சுக்கோ, நடந்திருக்கதே வேற காயூ!” என்றவளின் பேச்சில் காயத்ரி அதிர்ந்தாள்.
“ஆமா காயூ, நீங்க ஏன் கவலைப்படுறீங்க கார்த்திக். நான் இருக்கேன் உங்களுக்கு. வாங்கன்னு சொல்லி கல்யாணம் பண்ணி இந்நேரம் புள்ளை குட்டியை பெத்து போட்டிருப்பேன் டி. சச் அ ஜென்யூன் பெர்சன் தெரியுமா இவரு? முகத்தை தவிர வேற எங்கேயும் பார்த்து பேச மாட்டாரு. பெருசா அலட்டல் இருக்காது. ஜோவியல், டாக்டர்னு என்னைக்குமே கெத்து காட்டுனது இல்ல. எல்லாத்தையும் விட அலைபாயுதே மாதவன் மாதிரி அழகா இருக்காருல்ல காயூ?” என்றவளின் பேச்சில் காயத்ரி இருமினாள்.
“நான் எப்படி இருக்கேன் காயூ. கொஞ்சம் டஸ்கி கலர்ல இருக்கதால ஒரு இன்பீரியர் காம்ப்ளக்ஸ் டி எனக்கு. இல்லைன்னா எப்பவோ ஒரு ப்ரபோசலைப் போட்டிருப்பேன். இப்போ கூட லேட்டாகலை. கடவுள் இன்னொரு சான்ஸ் கொடுத்திருக்காருன்னு மனசு கூப்பாடு போடுது. பேசாம ஐ லவ் யூ கார்த்திக்னு சொல்லிடவா காயூ?” என ஆர்வமாய்க் கேட்ட கார்த்திகாவை இவள் பாவமாய் பார்த்தாள். என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கி கொண்டன.
“நீ என்னடி முழிச்சுட்டே இருக்க? அவரை ஃபோன் பண்ணி அப்படியே இந்தப் பக்கம் வந்துட்டு போக சொல்லு!” என்றாள் தோழியைக் கையில் இடித்து.
“ஹம்ம்... அது, ராம் வருவான் கார்த்தி!” என்றாள் தயங்கியபடியே.
“சரி... சரி. நானே அவர்கிட்ட அலைபாயுதே ஸ்டைல்ல ப்ரபோஸ் பண்றேன். ரிஜெக்ட் பண்ணா கூட என் மனசு நோகாம பண்ணுவார் இல்ல?” என அவர் சிலாகிக்க, ராமின் மீது அவளுக்கு கோபம் வந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ரகுராம் உள்ளே நுழைந்தான். அவனது பார்வை காயத்ரி மீது அழுத்தமாகப் படிய, ஒரு நொடி அவன் விழிகளை சந்தித்துவிட்டு படக்கென குனிந்து கொண்டாள்.
மெதுவாய் விரல் நகங்களை வெகு கவனமாய் ஆராய்ந்தாள். அவன்புறம் பார்வையைப் படரவிடவில்லை.
“வாங்க சார்...வாங்க, உங்க மேல நான் கோபமா இருக்கேன்!” என்ற கார்த்திகாவின் குரலில் அவள்புறம் திரும்பியவனின் முகத்தில் மெல்லிய முறுவல்.
“கோபப்படுற அளவுக்கு நான் ஒன்னுமே செய்யலையே கார்த்திகா!” அவன் சிரிப்புடன் கேட்க,
“உங்க ஃப்ரெண்ட் கூட சண்டைன்னா அவகூட பேசலை, அவளைப் பார்க்க வரலை சரி. எங்களையும் ஏன் பார்க்க வரலை நீங்க. ஹம்ம், அப்போ அவளைப் பார்க்க வந்து சும்மா ஒப்புக்கு எங்ககிட்டே பேசுறீங்க. ரைட்?” என இவள் சிறுபிள்ளை தனமாய் முறுக்கிக் கொள்ள, அவன் முகம் மலர்ந்தது.
“சே... சே. அப்படிலாம் இல்ல கார்த்திகா. நான் கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். அதான் யார்கிட்டேயும் அவ்வளவா காண்டாக்ட்ல இல்லை மா!” அவன் பொறுமையாய் கூற, அவளுக்கும் அந்தக் காரணம் ஏற்புடையதாக இருக்கவும், தலையை அசைத்து ஆமோதித்தவள் பொதுவான பேச்சிற்குத் தாவினாள். காயத்ரி அவர்கள் புறம் வராது காலியான மாத்திரை அட்டைகளை எடுத்து குப்பைக் கூடையிலிட்டாள். என்ன என்ன மாத்திரைகள் தீர்ந்துவிட்டன என நோட்டில் குறித்து வைத்தாள். இல்லாத தூசியை மேஜை மீதிருந்து தட்டிவிட்டாள். ஹீமோபிலியா என்று வார வாரம் வந்து இரத்தம் உறைதல் காரணி குறைபாடுடையவர்களுக்கு கொடுத்த மருந்து மற்றும் இனிமேல் கொடுக்க வேண்டிய அளவு இருக்கிறதா எனப் பார்த்தாள்.
சர்வ நிச்சயமாய் அவன் முகம் பார்க்கும் திராணியற்றிருந்தாள் பெண். அவனைப் பார்த்ததும் தான் நேற்று அவனுக்கு முத்தமிட்டதுதான் முன்னின்று வந்து நிற்க, தனக்கே அது தோன்றுகிறது என்றால், அவனுக்கு கேட்க வேண்டுமா என மனம் கேலி செய்ய, நொந்து போனாள். ரகுராமின் பேச்சு கார்த்திகாவிடம் இருந்தாலும் பார்வை என்னவோ காயத்ரியை உரசத் தவறவில்லை. அவளும் அவன் பார்வையை உணர்ந்தாள்.
“காயூ, நா போய் நம்ப மூனு பேருக்கும் சூடா காஃபி வாங்கிட்டு வரேன்!” என்ற காரத்திகா ஒரு நொடி கண்கள் மின்ன நின்றவள், “காயூ, நீயே போய் வாங்கிட்டு வாடி. ப்ளீஸ், எனக்கு கால் வலிக்குது!” என அவளைப் பார்த்துக் கண்ணில் சைகை செய்தாள்.
‘ப்ளீஸ்டி... நீ போ, நாங்க ரெண்டு பேரும் தனியா பேசணும்!’ என கண்களாலே கார்த்திகா அவளிடம் கெஞ்ச, ‘இவ வேற!’ என நொந்த காயத்ரி அவ்விடம் விட்டு அகன்றால் போதும் என ஓடிவிட்டாள்.
“அப்புறம் சார், மேரேஜ் ஸ்டாப்பானது கஷ்டம்தான். அதுக்காக இப்படியே இருந்துடலாம்னு நினைக்காதீங்க. உங்களுக்காக நிறைய பொண்ணுங்க வெயிட்டிங்!” என்றாள் கேலியாய். அவன் சிரித்தான், பதிலுரைக்கவில்லை.
“ஹம்ம்... உங்களுக்குன்னு எதாவது எக்ஸ்பக்டேஷன் இருக்கா சார்? வொய்ஃப் இப்படி இருக்கணும், அது இதுன்னு?” என்றவளை யோசனையாகப் பார்த்தவன், “நாட் லைக் தட் கார்த்திகா. எனக்குப் பிடிச்சிருந்தா போதும்!” என்றான்.
“ஓஹோ... அப்போ என்னை உங்களுக்குப் பிடிக்குமா?” என கண்கள் மின்னக் கேட்டவளின் பேச்சு புரிந்தவன், “கார்த்திகா...” என்றழைத்தான் சங்கடத்துடன்.
“வெயிட்... வெயிட் கார்த்திக். நான் ப்ரிபேர் பண்ணி வச்சிருக்கதை சொல்லிட்றேன். அதுக்கப்புறம் நீங்க நோ சொல்லுங்க!” என்றவள் எழுந்து சென்று காகிதத்தால் செய்த ரோஜாவை எடுத்து வந்து அவன் முன்னே நீட்டியவள், “நீங்க அழகா இருக்கீங்கன்னு நினைக்கலை. உங்களை லவ் பண்ணணும்னு நினைக்கலை. பட் இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு கார்த்திக். யோசிச்சு சொல்லுங்க!” என குறும்பாய் பேசியவளைப் பார்த்து அவன் சிரித்துவிட்டான்.
“கார்த்திகா யூ ஆர் அமேசிங்!” புன்னகையுடன் அவள் கூற, “தேங்க் யூ டாக்டர் சாரே!” எனத் தலையைக் குனிந்து ஏற்றவள், “தென் இப்போ பதில் சொல்லலாம்!” என அவன் முகத்தை ஆர்வமாய்ப் பார்த்தாள்.
“சாரி கார்த்திகா, ஐ யம் கமிடட் வித் ஒன் கேர்ள்!” என்றான் தயங்கியபடியே. அவன் பார்வை குளம்பி கோப்பைகளுடன் உள்ளே வந்த காயத்ரியில் படிந்து மீண்டது. அவனது பேச்சு அவளுக்கும் கேட்டிருக்க, நிமிர்ந்து ஒரு நொடி அவனைப் பார்த்துவிட்டு கார்த்திகாவிடம் சென்றாள்.
“ரியலி கார்த்திக், என்னால நம்பவே முடியலை. நீங்க லவ் பண்றீங்களா? அதுவும் ஒரு பொண்ணை. வாவ், வாட் அ சர்ப்ரைஸ். யார் அந்த லக்கி கேர்ள்!” என உண்மையான அக்கறையுடன் கேட்டவளைப் பார்த்தவன் நிமிர்ந்து காயத்ரியைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தான்.
‘எதுவும் சொல்லிவிடாதே!’ எனக் கண்களால் அவனை மிரட்டினாள். அதைத் தோள் குலுக்கலில் புறந்தள்ளியவன், “ஹம்ம்... சொல்றது என்ன, உங்களுக்கு இன்ட்ரோவே கொடுக்குறேன்...” என எழுந்து அவளருகே வந்தான்.
“ராம்... எதுவும் சொன்ன, செத்த நீ...” என இவள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுக்க, அதைக் கிடப்பிலிட்டவன் அவளது தோளைச் சுற்றிக் கையைப் போட்டு, “சீக்கிரம் உங்க ஃப்ரெண்ட் காயூ மிஸஸ் காயத்ரி ரகுராமாகப் போறாங்க!” என்றான். கார்த்திகா அவளை அதிர்ந்து பார்க்க, இவள் அவளை சங்கடத்துடன் நோக்கியவாறே ரகுராமைக் கண்களில் எரித்தாள். வெடுக்கென அவன் கையைத் தட்டிவிட்டாள்.
“அடிப்பாவி பாதகத்தி... இவ்வளோ நேரம் நான் புலம்புனதை சும்மா கேட்டுட்டு இருந்தீயே... ஒரு வார்த்தை வாயைத் தொறந்து சொன்னா என்னடி?” எனக் கேட்டு காரத்திகா காயத்ரியை முறைக்க, “அது... கார்த்தி, அவன் ஏதோ உளர்றான்!” என்றாள் தடுமாறியபடியே.
“ஷட் அப் காயூ! என்கிட்ட சொல்றதுல என்ன வந்துச்சு உனக்கு? ஹம்ம். இதான் ஃப்ரெண்ட்ஷிப்பா?” எனக் கேட்டவள் வெடுக்கென தன் கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு விறுவிறுவென நடக்க, இவள் கத்தியது எல்லாம் காற்றில் கலந்திருந்தது.
ரகுராமின் புறம் கோபமாகத் திரும்பியவள், “அறிவுருக்கா டா உனக்கு? ஹம்ம்... இப்படித்தான் கண்ட மேனிக்கு அவகிட்டே உளறி வைப்பீயா?” என சீறினாள்.
“யாருடி உளர்றது. நேத்து நீ குடிச்சிட்டு உளறுனதை விட நான் பேசுனது கம்மிதான்!” என அவன் பதிலுக்கு இரையவும், இவளது வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது. அவன் மேலும் எதுவும் பேசி விடுவானோ என எண்ணி பயந்தவள் அதை முகத்தில் காட்டாது ஒரு முறைப்புடன் வெளியே நடந்தாள்.
“காயூ, நான் உன்கிட்ட பேசணும்னுதான் வந்திருக்கேன்!” அவளோடு நடந்தபடியே ராம் உரைக்க, “ஐ டோன்ட் வாண்ட் டூ டாக் டூ யூ ராம்!” என்றாள் அவன் முகம் பார்க்காது.
“பட் ஐ வாண்ட் டூ டாக் டூ யு” அழுத்திக் கூறினான் ரகுராம்.
“எனக்கு இஷ்டம் இல்ல. நீ முதல்ல உன் வீட்டுக்கு கிளம்பு. என் பின்னாடி வராதே!” என பல்லைக் கடித்தவள் வாகனத்தை உயிர்ப்பித்து பறக்க, அவனும் அவளுக்குப் பின்னே சென்றான்.
வீட்டிற்குள்ளேயே நுழைந்ததும் அவனை உள்ளே வரவிடாது கதவை அடக்க வேண்டும் என அவள் எண்ணியதை தவிடு பொடியாக்கி அவளுடனே உள்ளே நுழைந்தவனை என்ன செய்வது எனத் தெரியாது திகைத்தவள், “ராம்... எதுக்கு வந்த நீ?” என்றாள் அதட்டலாய். ஆனால் அவன் முகம் பார்க்கத் தயங்கியது பெண்.
உள்ளே நுழைந்து விச்ராந்தையாக நீள்விருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், “எனக்கு உன்கிட்ட பேசணும் காயூ. நிச்சயமா பேசாம போக மாட்டேன். சோ, என்னை போக சொல்றதை விட்டுட்டு வந்து இந்த சேர்ல உக்காரு!” அவனும் அதட்டலாய் மொழிய, காயத்ரி அசையாது வாயிலிலே நின்றாள். ஆனால் பார்வை அவன் முகத்தை தவிர வீட்டை சுற்றி வலம் வந்தது. ரகுராமிற்கு அவளது செய்கையில் உதட்டோரம் புன்னகை வழிந்தது. எப்போதும் எல்லோரையும் அதட்டி உருட்டி எட்ட நிற்க வைக்கும் காயூ இப்போது தயங்கித் தன் முகம் பார்க்காது தவிப்பதும் அவனுக்கு நிரம்ப பிடித்தது. இந்தப் பெண்ணின் மீதான பிடித்தம் இப்போது சுகமாய் அவனுக்குள்ளும் இறங்கியது.
“காயூ, முதல்ல என் முகத்தைப் பாருடி. என்கிட்ட என்ன உனக்கு எம்பேரிசிங்கான ஃபீலிங்க். ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் சீ மை ஃபேஸ்!” என்றான் அகமும் முகமும் கனிய.
காயத்ரி ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டவள் தைரியத்தை திரட்டி அவன் முகத்தைப் பார்த்தாள். “என்ன வேணும் ராம்?” என அழுத்தமாய்க் கேட்டாள்.
“நீதான் வேணும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் காயூ” என்றவனை ஆயாசமாகப் பார்த்தவள், “ராம்... உனக்கு எத்தனை தடவைடா சொல்லிப் புரிய வைக்கிறது? நான்தான் இது நடக்காதுன்னு சொல்றேன் இல்ல?” என்றாள் சோர்ந்த குரலில்.
“ஓ... நேத்து இதே வாய்தான் என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னது. என்கிட்ட சத்தியம் கூட வாங்குனது. கொடுத்த சத்தியத்தை திரும்ப வாங்குற பழக்கம் என்கில்ல டி!” அவளை சீண்டும் விதமாகப் பேசினான்.
“அது... அது நீ பொய் சொல்ற ராம்...” என்றாள் தடுமாறி.
“ஓஹோ... அப்போ நீ நேத்து போதைல பேசுனது, செஞ்சது எல்லாம் உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லைல?” ரகுராம் கேட்டதும் காயத்ரி பார்வையைத் தழைத்தவள், “ஹம்ம... அது. ஆமா, நான் என்ன பேசுனேன்னு ஞாபகம் இல்ல. நீ என்னை ஏமாத்தப் பார்க்குற ராம்!” தடுமாறியது குரலும் பார்வையும் பாவையும்தான். பொய்தான் கூறினாள். காலையிலிருந்து மூளையைக் கசக்கிப் பிழிந்து ஆதி முதல் அந்தம் வரை அவள் பேசியது அனைத்தையும் நினைவு கூர்ந்திருந்தாள். மது குடித்தால் இந்தளவிற்கா மனதில் இருப்பதை கொட்டுவோம் என தனக்கே ஒரு கொட்டும் வைத்துக் கொண்டாள். ஆனால் அவள் பேசிய அனைத்தையும் வெறும் உளறல் அல்ல. போதையிலும் தெளிவாய் எல்லாவற்றையும் உரைத்திருந்திருந்தாள். ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது தன்னை நினைத்தே.
“தெரியும் டி... இப்படி எதாவது சொல்லுவன்னுதான் நேத்தே எவிடென்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்!” என்றவனை இவள் நிமிர்ந்து கேள்வியாகப் பார்க்க, “இங்க வா, வந்து உக்காரு. எவிடன்ஸை காட்டுறேன்!” என அழைத்தான். அவனை முறைத்துக் கொண்டே தள்ளியமர்ந்தாள்.
அவளுக்கு அருகே வந்து தோளில் கைப் போட்டவன், “நேத்து நீ என்ன பேசுனேன்னு நீயே கேளு!” என்றவன் அவளைச் சுற்றியிருந்த கையில் அலைபேசியை ஆட்டிக் காண்பித்து நேற்றைக்கு தான் எடுத்த காணொளியை ஓடவிட்டான். காயத்ரியும் அவனும் கட்டிப் பிடித்து நின்றிருந்தனர். அவன் திருமணத்திற்கு சம்மதம் கேட்டது, இவள் சத்தியத்தோடு முத்தம் வாங்கி பின் அவனை ஆழந்து முத்தமிட்டது வரை அத்தனையும் பதிவு செய்திருந்தான். இமை சிமிட்டாமல் அந்தக் காணொளி முழுவதையும் பார்த்து முடித்திருந்தாள்.
என்னதான் நேற்றைக்கு நடந்தது நினைவில் நின்றாலும் இன்றைக்கு அதனை காணொளியாகப் பார்த்ததும் காயத்ரிக்கு முகத்தை எங்காவது மறைத்து கொள்ளலாம் என்ற எண்ணம் தான். அவன் கையைத் தட்டிவிட்டு மறுபுறம் திரும்பி நின்றவள், “அறிவிருக்கா ராம் உனக்கு? இதெல்லாம் வீடியோ எடுப்பீயா நீ?” என எரிச்சலாய்க் கேட்டாள். வெட்கமாய் வந்தது அவளுக்கு. அவன் முன்னே காண்பிக்க இயலாது கோபமாய் பேசித் தொலைத்தாள்.
“இன்டென்ஷனலா எடுக்கலை காயூ. இந்த மாதிரி நீ எதாவது பிராடு வேலை பார்ப்பன்னு தோணுச்சு. அதான் நான் வீடியோ எடுத்தேன். பட் லாஸ்ட் கிஸ்ஸிங் சீன் நானே எக்ஸ்பெக்ட் பண்ணலை!” என அவன் மேலும் பேசும் முன்னர், “ஸ்டாபிட் ராம். கிளம்பு முதல்ல!” என்றாள் கோபமாய்.
“கிளம்புறேன் கிளம்புறேன் காயூ. நீ முதல்ல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு...” என்றான் அலட்டிக்காது. இவளுக்கு கோபமும் எரிச்சலும் ஒருங்கே படர்ந்தது.
“அது முடியாது ராம்!” பட்டென அவள் பொரிந்தாள்.
“ஓஹோ... அப்போ நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்ல மாட்ட!” என்றவன் எழுந்து அவளருகே வர சடாரென்று திரும்பியவள், “ராம், பக்கத்துல வராதே!” என்றாள் அதட்டலாய்.
ஒவ்வொரு அடியாய் அவளை நோக்கி வைத்து முன்னேறியவன், “நேத்து நைட் வரைக்கும் கூட நீ எனக்கு ஓகே சொல்லலைன்னா வேற யாரையாவது கூட பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சேன் டி. பட் நேத்து நீ பேசுனப்போதான் எனக்குப் புரிஞ்சது!” என அவள் விழிகளை ஆழப் பார்த்தவனை அவளும் அமைதியாக நோக்கினாள்.
“இந்த காயத்ரி என்னைத் தவிர யார் கூடவும் சந்தோஷமா வாழ மாட்டான்னு நேத்துதான் எனக்குத் தெரிஞ்சது!” என்றான் நிறுத்தி நிதானமாக அவள் முகம் பார்த்து. ஒரு நொடி விழிகளை சிமிட்டியவள், “உங்க அப்பா அம்மாவை சம்மதிக்க வச்சு என் அப்பாகிட்ட பொண்ணு கேட்க சொல்லு ராம். அப்புறம் நான் சம்மதிக்கிறேன்!” அவளும் வெகு நிதானமாக பதிலளித்தாள்.
“ஓஹோ... என்னால அவங்களை கன்வின்ஸ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறல்ல?” அவன் கேலியாக உதட்டை வளைக்க, “நிச்சயமா...” என அவளும் தோளைக் குலுக்கினாள்.
“ரைட் காயூ... ஒன் வீக்ல என் அப்பா அம்மாவோட வந்து உன் அப்பாகிட்டே பேசுறேன். இந்த மந்த்லயே நல்ல நாளா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றான் உறுதியானக் குரலில். அவள் அவனைப் பார்த்தாள் ஒழிய பதிலுரைக்கவில்லை.
“நான் வரேன் காயூ...” என்றவன் சில நொடிகள் யோசித்துவிட்டு அவளருகே வந்தான்.
“காயூ உன்கிட்ட ஒன்னு சொல்லணும்!” தீவிரக் குரலில் கூறியவனை இவள் கேள்வியாகப் பார்க்க, “இல்ல, பிரிட்டிஷ்காரனே தோத்துடுவான்!” என்றான் கேலியான குரலில்.
அவள் புரியாது நோக்க, “என்ன கிஸ்ஸுடி... ப்பா, ஃபர்ஸ்ட் டைம் கொடுக்குற மாதிரியா கொடுத்த. உன்கிட்ட தான் கத்துக்கணும் போல. இப்போ நினைச்சா கூட உடம்பெல்லாம் சிலிர்க்குது டி. இட்ஸ் அ டிவைன் ஃபீலிங்!” அவன் சிலாகித்து குறும்புடன் கூறி முடித்ததும் காயத்ரி காதைப் பொத்திக் கொண்டு மறுபுறம் திரும்பியவள், “இன்னும் ஒரு வார்த்தைப் பேசுன, சாவடிச்சுடுவேன் டா. முதல்ல கிளம்பு நீ!” என்றாள் கோபமாய். ஆனாலும் குரல் லேசாய் சிணுங்கியது.
“காயூ...நிஜமா டி. பொய் எல்லாம் சொல்லலை!” என அவன் வேறு பேசும் முன்னே அறைக்குள் சென்று கதவை அடைத்தவள், “வீட்டுக்கு முதல்ல கிளம்பித் தொலை டா. அதுக்கு முன்ன அந்த வீடியோவை டெலிட் பண்ற நீ!” என்றாள் அதட்டலாய்.
“நோ வே...இந்த வீடியோ ரொம்ப ப்ரஷியஸ் காயூ. ஃபர்ஸ்ட் இயர் ஆன்வர்சரிக்கு இதை ப்ரேம் போட்டு பெட் ரூம்ல மாட்டலாம்!” என்று அவன் உரைக்க, கதவை திறந்து கையில் அகப்பட்ட சீப்பை அவன் மீது எறிந்தவள், “இடத்தைக் காலி பண்ணு டா எருமை!” பல்லை நறதறத்தாள். அதேக் கேலியும் குறும்புமாய் அவன் விடை பெற, காயத்ரி தலையனையில் முகம் புதைத்தாள்.
அவன் கூறிய வார்த்தைகளைத்தான் அந்தக் காணொளியைக் காணும்போது அவளது மனதும் கூறியது. முத்தமிட்டது நினைவு வந்தாலும் இப்படி ஆழ்ந்து அனுபவித்து சில பல நிமிடங்களை அந்த முத்தம் விழுங்கியிருக்க வேணாம் என சிணுங்கினாள் பெண்.
‘போச்சு... காலம் முழுக்க இதை சொல்லியே என்னைக் கிண்டல் பண்ணுவானே. என்ன பண்ணி வச்சிருக்க காயூ?” எனத் தலையிலே தட்டினாள்.
ரகுராம் கூறியது போலவே ஒரு வாரத்தில் பெண்ணைக் கேட்டு அடுத்த பத்து நாட்களில் காயத்ரியைத் தன் மனைவியாக்கியிருந்தான்.
தொடரும்...