- Messages
- 1,091
- Reaction score
- 3,124
- Points
- 113
இஷ்டம் – 18 
காயத்ரி அமைதியாய் அமர்ந்திருந்தாள். அரைமணி நேரம் கடந்தும் ரகுராம் வரவில்லை. உடைந்து விடுவேன் என அனத்திய மனதும் கீழே விழவா என எட்டி நின்ற கண்ணீரையும் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள்.
‘என் ராம் வருவான்!’ மனம் அத்தனை உறுதியாய் நம்பியது. இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கான பணி நேரம் முடிந்திருக்க, அடுத்த சுழற்சிக்கான ஆள் வந்துவிட்டார். இவள் கவுண்டர் முன்னிருந்து எழுந்து வந்து அங்கிருந்த மேஜை முன்னே கைப்பையை வைத்துவிட்டு கையைக் கட்டிக்கொண்டு வாசலையே வெறித்திருந்தாள்.
“காயூ, என்ன, ஏன் இங்க உக்கார்ந்து இருக்க நீ?” என கார்த்திகா வினவ, “அது... ஃப்ரெண்ட் ஒருத்தவங்க வருவாங்க. அவங்களுக்காக காத்திருக்கேன்!” என்றாள் முயன்று முறுவலித்து.
“சரி... சரி. நான் கிளம்புறேன் டி!” என அவள் விடை பெற, இவள் அமர்ந்த இடத்திலிருந்து அசையாதிருந்தாள். ரகுராம் வந்துவிடுவான மனம் அத்தனையாய் நம்பிற்று. மணி ஒன்பதைத் தொட்டிருக்க, அவன் வரவேயில்லை. அலைபேசி இசைத்தது. தங்கராஜ் தான் அழைத்தார்.
“காயத்ரி என்னம்மா, இவ்வளோ நேரம் ஆச்சு. அப்பா வரவா கூப்பிட?” என அவர் கேட்க, “ஹ்கூம்... வேணாம் பா. நானே பத்து நிமிஷத்துல வந்துட்றேன் பா!” என்றவள் தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிவிட்டு கைப்பையை இறுகப் பற்றிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
எதிர்காற்று முகத்தில் மோத, விழிகள் கலங்கி கண்ணீர் வடிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். தந்தையின் முகம் பார்க்காது உடைமாற்றி வந்தவள் அவரை உண்ண வைத்து மாத்திரையை விழுங்க வைத்தாள். தூக்கம் வரவில்லை என மதுவைக் குடித்துவிட்டு அவர் உறங்கியிருக்க, இவளுக்கு உணவு உண்ணும் மனநிலை அற்றுப் போயிருந்தது.
கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து தலையை சாய்த்து கண்களை மூடியிருந்தாள். மூடிய விழிகளிலிருந்து உவர் நீர் அவளது கன்னத்தைப் பிசுபிசுக்க செய்தது.
‘ராம் வரலை. என் ராம் வரலை. அவன் என்னை வெறுத்துட்டான் போல!’ என மனம் எதை எதையோ யோசித்து காயம் கண்டிருந்த இதயத்தை இன்னுமே குத்திக் கிழிக்க, மௌனமாய் விசும்பியபடியே படுத்திருந்தாள். வலித்தது, இத்தனை நாட்களை விட ரகுராமின் ஒரே ஒரு உதாசீனம் அவளை மொத்தமாய் உடைத்துப் போட்டிருந்தது. இனிமேல் இந்த ரகுராம் ஒரு நண்பனாகக் கூட அவள் வாழ்க்கையில் இல்லை என்பதை நினைத்ததும் மளுக்கென விழிகள் தளும்பின. துடைத்துக் கொண்டே இருந்தாலும் அழுகை நிற்கவில்லை. எப்போதும் துணையாய் இருக்கும் தாயின் ஸ்பரிசம் கூட இன்றைக்கு அவளது மனதின் வெம்மையைத் தணிக்கவில்லை. அழுது கரைந்தாள்.
கேட்பாரற்று அழுதவளின் மெல்லிய கதறல் உடைந்து பெரிய கேவலாய் மாற, முகத்தை முட்டியில் புதைத்து விசும்பினாள். இந்த வலியை எதைக் கொண்டு போக்குவது என மனம் நிலையற்று அரற்றத் தொடங்க, நிமிர்ந்து தாயின் புகைப்படத்தை பார்த்தாள்.
“ரொம்ப வலிக்குது மா. நீயும் என்னைவிட்டு போய்ட்ட. இப்போ ராமும் போய்ட்டான் மா. இனிமே எனக்குன்னு யாரு இருக்கா சொல்லு?” எனத் தேம்பியவள் மெதுவாய் மரத்திருந்த கால்களை நகர்த்திக்கொண்டு வெளியே சென்றாள்.
தங்கராஜ் மதுவின் பிடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவர் கட்டிலுக்கு அருகே அமர்ந்தவள் அமைதியாய் கீழே அவர் வைத்திருந்த மதுபானப் பொத்தலைப் பார்த்தாள்.
“ப்பா... ஏன்பா குடிச்சி குடிச்சு உடம்பை கெடுத்துக்குறீங்க? குடிக்காதீங்கப்பா!” என சிறுவயது காயத்ரி தந்தையிடம் அழுது கொண்டே உரைக்க, “உடம்பு வலிச்சா மாத்திரை போட்டுக்கலாம் டா. இது மனசு வலி. குடிச்சா மட்டும்தான் போகும் டா. நீ அழாத. போ போய் படுத்து தூங்கு!” எனத் தந்தையின் பதில் இன்றும் அவளது செவிகளில் மோதின. விவரம் தெரிந்த பின்னர் அவரிடம் சண்டையிட்டு பேசாமல் இருந்து என எத்தனையோ வழிகளில் தந்தையை திருத்த முயன்றாள். ஆனால் முடியாது போன போது மதுவின் மீது கட்டுடங்காத வெறுப்பு உண்டாகிற்று. குடிப்பவர்களைப் பார்த்தாலே அவளுக்கு எரிச்சல் வரும். அப்படி இருப்பவளுக்கு அந்த மது பொத்தலைத் தொடக் கைகள் நடுங்கின.
‘சாரி மா... சாரி ராம், ஒரே ஒருநாள் இதை குடிச்சிட்டு அப்பா மாதிரி நிம்மதியா தூங்கிக்கிறேன் மா. மனசு ரொம்ப வலிக்குது மா!’ என மனதிற்குள்ளே இருவரிடமும் தேம்பியபடி மன்னிப்புக் கேட்டவள், அதைத் திறந்து மடமடவென மொத்தத்தையும் வாயில் சரித்திருந்தாள். குடித்ததும் மதுவின் வாடையில் குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்தது.
சில பல நிமிடங்களிலே சுர்ரென தலையில் ஏதோ எறியது போலிருக்க, எழுந்து நின்றாள். உடல் சமநிலையை தொலைத்திருக்க, மெதுவாய் நடந்து உள்ளே சென்று வெகு கவனமாய் பூட்டை எடுத்து கதவை இறுகப் பூட்டிவிட்டு நீள்விருக்கையில் சாய்ந்தாள்.
மனம் மட்டுப்பட்டு இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் பறப்பது போலிருந்தது. கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, போதையினூடே விசும்பினாள். நேரம் பதினொன்றைத் தொட்டு நிமிட முள் நகர ஆரம்பிக்க, காயத்ரியின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. செவி அதை உள்வாங்கினாலும் அசையாது அமர்ந்திருந்தாள்.
கதவு மேலும் பலமாய் தட்ட இமைகளை கடினப்பட்டு விழித்துப் பார்த்தாள். யாரது இந்த நேரத்தில் என மனம் திடுக்கிட, அலைபேசி இசைத்து. எடுத்துப் பார்த்தாள். ரகுராம்தான் அழைத்தான். அழைப்பைத் துண்டித்தாள்.
“ஓபன் தி டோர் காயூ. ஐ யம் வெய்ட்டிங் அவுட்சைட்!” என அவன் அனுப்பியிருக்க, சில நொடிகள் யோசித்தவள் மெதுவாய் நடந்து சென்று இரண்டு பூட்டையும் திறந்துவிட்டு அவன் முகம் பார்க்காது சுவரை அங்காங்கே பிடித்து உள்ளே வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிவிட்டு அப்படியே கீழே அமர்ந்தாள்.
ரகுராம் காலணியை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தவன் அவளது கதவு அடைக்கும் சத்ததில்தான் கவனித்தான். நெற்றியை சுருக்கியவன், “காயூ, வெளிய வா!” என்றான் அதட்டலாய்.
“முடியாது ராம்!” என்றவள் விசும்பும் சத்தம் இவனை அடைந்தது.
“ப்ம்ச்... இப்போ எதுக்கு டி அழுதுட்டு இருக்க?” இவன் கோபமாய்க் கேட்க, அவளிடம் பதிலில்லை.
“உன்கிட்டே தானே காயூ கேட்குறேன். பதில் சொல்லு டி. எதுக்கு நீ அழற?” என அவன் அழுத்திக் கேட்க, “நீ ஏன் என்னை பார்க்க ஹாஸ்பிடல் வரலை டா. நான் எவ்வளோ நேரம் உனக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா?” என்றாள் அழுதக் குரலில்.
“நீ ஃபோன் பண்ணதும் நான் கிளம்பலாம்னுதான் டி நினைச்சேன். பட், ஒரு ஹார்ட் அட்டாக் கேஸ். நைட் ட்யூட்டி டாக்டர் வர லேட். அதுக்காக அப்படி அந்த பேஷண்டை விட்டுட்டு வர முடியுமா? அதான் அவருக்கு ட்ரீட்மெண்ட் பார்த்து சேஃப் சோன்க்கு வந்ததும் நேரா இங்க வந்தேன்!” என்றான் விளக்கமாய்.
“பொய் சொல்லாத டா. உனக்கு என்னைப் பார்க்க புடிக்கலை. உனக்கு நான் வேணாம். அதான் எதாவது ரீசன் வச்சிருக்க. நீ என்னை வெறுத்துட்ட ராம்!” என்றவளின் பேச்சு மதுவின் பிடியிலும் தெளிவாய் இருந்தது.
“லூசு மாதிரி நீயா உளறாத காயூ!” அவன் எரிச்சலாய் பேச,
“ஆமா... நான் பேசுறது உனக்கு உளறலாதான் இருக்கும் ராம். உனக்கு பேச விருப்பம் இல்லைன்னு தெரியுது. அவ்வளோ கஷ்டப்பட்டு நீ என் கூட பேச வேணாம்!” என்றவள், “அம்மா என்னைவிட்டு போனப்போ நானும் அவங்க கூட செத்தா போய்ட்டேன். விதியேன்னு வாழ்ந்தேன் இல்ல. அதே மாதிரி நீ என்கூட இல்லைனாலும் செத்தெல்லாம் போக மாட்டேன். எனக்கான காலம் வரைக்கும் வாழ்ந்துட்டு யாருக்கும் பாரமா இல்லாம கிளம்பிடுவேன்!” என அவள் தேம்பியபடியே கூற, இவனுக்கு மனம் கனத்துப் போனது.
“காயூ ப்ளீஸ், நீ மொத கதவைத் தொற. நம்ப பேசிக்கலாம்!” என்றான் பொறுமையான குரலில்.
“பேச என்ன இருக்கு ராம். நீதானே கேட்ட, நமக்குள்ள பேச என்ன இருக்கு. நீ உன் வழியைப் பார்த்துட்டுப் போ. உன் அப்பா குடிக்காத ரொம்ப நல்ல மனுஷனா இருக்கவோரோட பொண்ணைப் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரு. பணக்கார பொண்ணா, உங்க அந்தஸ்துக்கு ஏத்த பொண்ணா பார்த்து நீ சந்தோஷமா வாழு ராம். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்!” என்றவளை என்ன செய்தால் தகுமென ரகுராமின் மூளை சூடாகிப் போயிருந்தது.
“இப்போ கதவைத் திறக்க முடியுமா? முடியாதா?” என அவன் அடிக்குரலில் கேட்க, “முடியாது ராம். நீ முதல்ல கிளம்பு. லேட் நைட் வீட்டுக்கு வராதன்னு சொல்லி இருக்கேன்ல?” என அதட்டலாய் பதில் அவளிடமிருந்து வந்தது.
“ஹம்ம்...இந்த மூஞ்சியைப் பார்க்காம, இந்த வாய்ஸைக் கேட்காம இருக்க முடியலேன்னு போன் பண்ணி யாரு கூப்ட்டது?” என அவன் குரலை உயர்த்த, “ஆமா... நான் தான் வர சொன்னேன். அதான் சொன்ன டைம்க்கு வந்து கிழிச்சிட்ட நீ. முதல்ல கிளம்பு ராம்!” என்றாள் தெளிவான குரலில். அழுகை நின்றிருந்தது. ரகுராம் வந்த போதே மனம் சற்று சமன்பட்டிருக்க, உள்ளே சென்ற மதுதான் உள்ளக் கிடங்கை மொத்தமாய் கொட்டிக் கவிழ்த்தது.
“நிஜமா நான் கிளம்பிடுவேன் காயூ!” அவன் மிரட்ட, “போடா... யாரு உன்னைப் பார்க்கலைன்னு அழுதா. முதல்ல இடத்தைக் காலி பண்ணு!” என்றாள் ரோஷமாய்.
“சரி நான் கிளம்புறேன்!” என்று அவன் கூறி சில பல நிமிடங்கள் கழித்து வெளியே அரவமற்றுப் போனது. மெதுவாய் எழுந்த காயத்ரி கதவைத் திறந்து வெளியே வர, சுவரில் சாய்ந்து நின்று அவளையே அழுத்தமாய்ப் பார்த்திருந்தான் ரகுராம். ஒரு நொடி அவள் முகம் அதிர்ந்து போனது.
அவன் அவளருகே வர முயல, “ராம், ஸ்டே தேர். கிட்ட வராத!” என்றவள் முகத்தை வேறுபுறம் திருப்பினாள். அவள் குடித்திருந்த மதுவைப் பற்றி அவன் அறிவதில் அவளுக்கு உடன்பாடில்லை.
மெது மெதுவாய் ஒவ்வொரு எட்டுகளாக காயத்ரி எடுத்து வைத்து நீள்விருக்கையை நோக்கி நகர, இவனது புருவங்கள் யோசனையாய் சுருங்க, “காயூ, உடம்புக்கு என்ன பண்ணுது?” என அவளது தோளை அழுத்திப் பிடிக்கவும், சிறுமூளையின் கட்டுபாட்டை இழந்த உடல் சமநிலையின்றி தடுமாறி கீழே விழச் செல்ல, நொடியில் வலக்கரம் கொண்டு அவளது இடையைப் பிடித்து தன்னோடு அணைத்திருந்தான்.
அவன் மார்பில் மோதி நின்றவள், “என்னை விடு ராம்!” என நிமிர்ந்து அவள் கோபமாய் உரைக்க, ரகுராம் அவளிடமிருந்து வந்த மதுவாடையில் அதிர்ந்து போனான்.
“காயூ, குடிச்சிருக்கீயா?” என அவன் அதிர்ச்சியாக, அவனது கையை இடையிலிருந்து எடுத்து விட்டவள் மெதுவாய் நகர்ந்து இருக்கையின் கைப்பிடியைப் பிடித்து அதில் அமர்ந்தவள், “இங்க வந்து உக்காரு டா!” என்றாள் தெளிவான குரலில். நடையில் தள்ளாட்டம் இல்லையென்றால் நிச்சயமாக அவள் குடித்திருப்பதை அறிய முடியாது. ஏனென்றால் பேச்சில் எவ்வித குழறலும் இல்லை. தெளிவாகப் பேசினாள்.
கோபமாய் அவளருகே அமர்ந்தவன், “இப்போ எதுக்கு டி குடிச்ச? அறிவில்ல உனக்கு, உங்கப்பா குடிச்சாலே உமட்டுது. எனக்குப் பிடிக்கலைன்னு புலம்புறவ எனத்துக்கு இப்போ குடிச்ச?” என அவன் சீறலாய்க் கேட்க, அதிராமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“வாயைத் தொறந்து சொல்லு டி. அறிவிருக்கவன் பண்ற காரியமா இது?” என அவன் கடிய,
“எங்கப்பா கிட்டே சின்ன வயசுல ஏன்பா குடிக்கிறன்னு கேட்டேன். உடம்பு வலிக்கு மாத்திரை இருக்கு. மனசு வலிக்கு இதுதான் மா மாத்திரை. அதான் குடிக்கிறேன்னு சொன்னாரு டா. எனக்கும் மனசு முழுக்க வலி. எனக்கிருக்க ஒரே ஃப்ரெண்ட் நீதான். நீயும் என்னைப் பார்க்க வரலை. அம்மாவும் இல்லாத பொண்ணு நான். யார்கிட்டே என் கஷ்டத்தை சொல்லி அழறது. தோ, வெளிய குடிச்சிட்டு படுத்துருக்க மனுஷன் கிட்டயா சொல்ல முடியும். அதான் ராம் குடிச்சேன்!” என்றவளை இவன் சலனமற்றுப் பார்த்தான்.
“கஷ்டமா இருக்கு டா. நான் நிம்மதியா தூங்கி ரொம்ப மாசமாச்சு ராம். கண்ணை மூடுனாலே நீதான்டா வந்து நிக்கிற. நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சும் ஏன் உன்னை எனக்கு இவ்வளோ பிடிச்சதுன்னு டெய்லி அழுதுட்டே தூங்குறதால ஒழுங்காவே தூக்கம் வர மாட்டுது டா. அதான் ஒரே ஒருநாள் நிம்மதியா எதையும் நினைக்காம தூங்கலாம்னு குடிச்சேன் ராம். ஆனாலும் எல்லாமே எனக்கு நினைவுல இருக்கு டா. இன்னும் நிறையா குடிச்சா உன்னை மறப்பேனா ராம்? எதாவது மருந்து இருந்தா இன்ஜெக்ட் பண்ணு டா. உன்னை மறக்கணும் ராம் நான். ஏன்னா நான் உன் மேல ஆசைப்பட்றது பேராசையாம் டா!” என்றாள் இருக்கையில் சாய்ந்து முகத்தை அவன்புறம் திருப்பி. விழிகளில் நீர் வழிந்தது. அவளைப் பேசவிட்டு அவன் அமைதியாய் இருந்தான்.
“எங்கப்பா குடிச்சா நான் என்னடா பண்ண முடியும். நானும் அழுது பார்த்தேன். கோபப்பட்டு அவர்கிட்டே பேசாம சாப்பிடாம இருந்து கூடப் பார்த்தேன். ஆனால், அவர் என் பேச்சைக் கேட்கலைடா. அதுக்கும் மேல என்னால என்ன பண்ண முடியும். அவர் குடிகாரர் தான். அவரோட மகள் நான்தான். அதை இந்த ஜென்மத்துல என்னால மாத்த முடியாது ராம்!” என்றாள் கசந்த முறுவலுடன்.
“உங்கப்பா ரொம்ப நல்லவர் ராம். படிச்சு முடிச்சு டாக்டராகி குடும்பத்தை நல்லா பார்த்துக்கிட்டவரு. உங்கம்மாகிட்டே சிடுசிடுன்னு விழுந்தாலும் நல்லாதானே பார்த்துகிறார். உன் மேல அவருக்கு ரொம்ப பாசம் இல்ல ராம். எனக்கு அவர் மேல மரியாதை இருக்கு டா. உனக்கும் உன் அப்பான்னா ரொம்ப பிடிக்கும் இல்ல. அதான் டா நீ எனக்கு வேணாம்னு சொல்றேன். உங்கப்பா என்னை மருமகளா அக்செப்ட் பண்ணிக்க மாட்டாரு ராம். நானா இல்லை உங்கப்பாவான்ற ஒரு சிட்சுவேஷன் வந்தா நீ ரொம்ப கஷ்டப்படுவ டா. அதான் நான் உன்னை வேணாம்னு சொல்றேன் ராம்!” என்றாள் மெலிதான முறுவலுடன்.
“அப்பா என்ன சொன்னாரு காயூ?” இப்போதுதான் ராம் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
“ஹம்ம்... உனக்கு ஞாபகம் இருக்கா ராம். சின்ன வயசுல டெய்லி உங்க வீட்டுக்கு ஈவ்னிங் நான் வருவேன். நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஹோம் வொர்க் பண்ணுவோம். உங்கம்மா கையால டெய்லி நைட் சாப்ட்டு தானே நான் என் வீட்டுக்குப் போவேன். அப்புறம் ஒருநாள் நான் உங்க வீட்டுக்கு வர்றதை நிறுத்திட்டேனே. உனக்கு ஏன்னு தெரியுமா ராம்?” என அவள் கேட்க, ரகுராமிற்கும் நன்றாய் அது நினைவில் இருந்தது.
தாயை இழந்து தந்தையோடு இந்த ஊருக்கு காயத்ரி வந்ததும் இவன் படிக்கும் பள்ளியில்தான் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தாள். யாரிடனும் சேராது தனித்து அமர்ந்த தாயை நினைத்து அழுது கொண்டே இருப்பாள் காயத்ரி.
“ஏய் பொண்ணே, எதுக்கு அழுதுட்ட இருக்க நீ?” என இவன் அவளிடம் அதட்ட, “என் அம்மா செத்துப் போய்ட்டாங்க. சாமிகிட்டே போய்ட்டாங்க. அதான் அழுறேன். உனக்கு அம்மா இருக்காங்க இல்ல. அதான் நீ சிரிச்சிட்டே இருக்க!” என அவள் தேம்பியது இன்றுமே அவனுக்கு ஞாபகம் இருந்தது. இவன்தானே அவளைத் தேற்றி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று கௌதமி உனக்கும் அம்மாதான் என சமாதானம் செய்து தாயை அவளோடு பங்கிட்டு காயத்ரியின் நட்பை பெற்றிருந்தான். அதற்குப் பின்னர் தினமும் அவள் இவர்கள் வீட்டிற்கு தவறாது வந்துவிடுவாள். ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது திடீரென ஒருநாள் அவளின் வருகை நின்று போனது. ஏனென்று இவன் அழுத்திக் கேட்டும் காயத்ரி வாயைத் திறக்கவில்லை. இவனும் சரியென அவளிடம் கூறிவிட்டு தினமும் இவனே காயத்ரியின் வீட்டிற்கு தினமும் வந்து சென்றான்.
ரகுராம் சில நொடிகள் அதை யோசித்துவிட்டு அவளைப் பார்த்து தலையை அசைக்க, “ஏன் அப்புறம் உங்க வீட்டுக்கு நான் வரலைன்னு தெரியுமா ராம். என் அப்பா ஒருநாள் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்ததை உங்கப்பா பார்த்ததுட்டார் போல. அப்புறம் நான் இருக்கும்போதே கோபமா உன் அம்மாகிட்டே ‘குடிகாரன் பொண்ணெல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள சேர்க்குற கௌதமி. இந்தப் புள்ளையோட அப்பனைப் பார்த்து நாளைக்கு நம்ப புள்ளையும் குடிக்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்றது? நம்பளோட குணம் நம்ப கூட பழகுறவங்களை வச்சுத்தான் இருக்கும்னு சொல்லுவாங்க. தகுதி தராதாரம் இல்லாம உன் மகன் பழகுவானா?’ ன்னு கேட்டுட்டார்டா. செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு ராம். உங்கம்மாவை உங்கப்பா கோபமா பேசி பார்த்திருக்கேன். ஆனால், என் முன்னாடியே என்னை வச்சிட்டே அவர் பேசுனதும் என்னமோ என்னையே அவர் கை நீட்டி அடிச்சது போல மனசு வலிச்சது டா. அப்போ எனக்கு பதிமூனு வயசு தானே இருக்கும் ராம். அன்னைக்கு வீட்டுக்கு வந்து அழுதேன் டா. அப்புறம் உங்க வீட்டுக்கே வரக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன். ஆனாலும் நடந்ததை உன்கிட்ட சொல்லி பிரச்சனையாக்க விரும்பலை டா. உன்னைப் பொறுத்தவரை உங்கப்பா உனக்கு ஹீரோ ராம். எனக்காக உங்களுக்கு இடையில பிரச்சனை வரக் கூடாதுன்னு நான் உன்கூட ஃப்ரெண்ட் ஷிப்பை கட் பண்ணலாம்னு நினைச்சேன். பட் நீ என்னை விடலை ராம். நீயா வருவ, அன்பா பார்த்துப்ப. எதுனாலும் அக்கறையா செய்வ. நான் சாப்ட்டேனான்னு என் வயிறு வாட விடாம பார்த்துப்பல்ல ராம். அதன் உன் மேல எனக்கு இவ்வளோ காதல் போல?” என சின்ன சிரிப்புடன் கேட்டவளை இவன் வேதனை மிகப் பார்த்தான்.

காயத்ரி அமைதியாய் அமர்ந்திருந்தாள். அரைமணி நேரம் கடந்தும் ரகுராம் வரவில்லை. உடைந்து விடுவேன் என அனத்திய மனதும் கீழே விழவா என எட்டி நின்ற கண்ணீரையும் கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தாள்.
‘என் ராம் வருவான்!’ மனம் அத்தனை உறுதியாய் நம்பியது. இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கான பணி நேரம் முடிந்திருக்க, அடுத்த சுழற்சிக்கான ஆள் வந்துவிட்டார். இவள் கவுண்டர் முன்னிருந்து எழுந்து வந்து அங்கிருந்த மேஜை முன்னே கைப்பையை வைத்துவிட்டு கையைக் கட்டிக்கொண்டு வாசலையே வெறித்திருந்தாள்.
“காயூ, என்ன, ஏன் இங்க உக்கார்ந்து இருக்க நீ?” என கார்த்திகா வினவ, “அது... ஃப்ரெண்ட் ஒருத்தவங்க வருவாங்க. அவங்களுக்காக காத்திருக்கேன்!” என்றாள் முயன்று முறுவலித்து.
“சரி... சரி. நான் கிளம்புறேன் டி!” என அவள் விடை பெற, இவள் அமர்ந்த இடத்திலிருந்து அசையாதிருந்தாள். ரகுராம் வந்துவிடுவான மனம் அத்தனையாய் நம்பிற்று. மணி ஒன்பதைத் தொட்டிருக்க, அவன் வரவேயில்லை. அலைபேசி இசைத்தது. தங்கராஜ் தான் அழைத்தார்.
“காயத்ரி என்னம்மா, இவ்வளோ நேரம் ஆச்சு. அப்பா வரவா கூப்பிட?” என அவர் கேட்க, “ஹ்கூம்... வேணாம் பா. நானே பத்து நிமிஷத்துல வந்துட்றேன் பா!” என்றவள் தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிவிட்டு கைப்பையை இறுகப் பற்றிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
எதிர்காற்று முகத்தில் மோத, விழிகள் கலங்கி கண்ணீர் வடிந்தது. எதையும் பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். தந்தையின் முகம் பார்க்காது உடைமாற்றி வந்தவள் அவரை உண்ண வைத்து மாத்திரையை விழுங்க வைத்தாள். தூக்கம் வரவில்லை என மதுவைக் குடித்துவிட்டு அவர் உறங்கியிருக்க, இவளுக்கு உணவு உண்ணும் மனநிலை அற்றுப் போயிருந்தது.
கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்து தலையை சாய்த்து கண்களை மூடியிருந்தாள். மூடிய விழிகளிலிருந்து உவர் நீர் அவளது கன்னத்தைப் பிசுபிசுக்க செய்தது.
‘ராம் வரலை. என் ராம் வரலை. அவன் என்னை வெறுத்துட்டான் போல!’ என மனம் எதை எதையோ யோசித்து காயம் கண்டிருந்த இதயத்தை இன்னுமே குத்திக் கிழிக்க, மௌனமாய் விசும்பியபடியே படுத்திருந்தாள். வலித்தது, இத்தனை நாட்களை விட ரகுராமின் ஒரே ஒரு உதாசீனம் அவளை மொத்தமாய் உடைத்துப் போட்டிருந்தது. இனிமேல் இந்த ரகுராம் ஒரு நண்பனாகக் கூட அவள் வாழ்க்கையில் இல்லை என்பதை நினைத்ததும் மளுக்கென விழிகள் தளும்பின. துடைத்துக் கொண்டே இருந்தாலும் அழுகை நிற்கவில்லை. எப்போதும் துணையாய் இருக்கும் தாயின் ஸ்பரிசம் கூட இன்றைக்கு அவளது மனதின் வெம்மையைத் தணிக்கவில்லை. அழுது கரைந்தாள்.
கேட்பாரற்று அழுதவளின் மெல்லிய கதறல் உடைந்து பெரிய கேவலாய் மாற, முகத்தை முட்டியில் புதைத்து விசும்பினாள். இந்த வலியை எதைக் கொண்டு போக்குவது என மனம் நிலையற்று அரற்றத் தொடங்க, நிமிர்ந்து தாயின் புகைப்படத்தை பார்த்தாள்.
“ரொம்ப வலிக்குது மா. நீயும் என்னைவிட்டு போய்ட்ட. இப்போ ராமும் போய்ட்டான் மா. இனிமே எனக்குன்னு யாரு இருக்கா சொல்லு?” எனத் தேம்பியவள் மெதுவாய் மரத்திருந்த கால்களை நகர்த்திக்கொண்டு வெளியே சென்றாள்.
தங்கராஜ் மதுவின் பிடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவர் கட்டிலுக்கு அருகே அமர்ந்தவள் அமைதியாய் கீழே அவர் வைத்திருந்த மதுபானப் பொத்தலைப் பார்த்தாள்.
“ப்பா... ஏன்பா குடிச்சி குடிச்சு உடம்பை கெடுத்துக்குறீங்க? குடிக்காதீங்கப்பா!” என சிறுவயது காயத்ரி தந்தையிடம் அழுது கொண்டே உரைக்க, “உடம்பு வலிச்சா மாத்திரை போட்டுக்கலாம் டா. இது மனசு வலி. குடிச்சா மட்டும்தான் போகும் டா. நீ அழாத. போ போய் படுத்து தூங்கு!” எனத் தந்தையின் பதில் இன்றும் அவளது செவிகளில் மோதின. விவரம் தெரிந்த பின்னர் அவரிடம் சண்டையிட்டு பேசாமல் இருந்து என எத்தனையோ வழிகளில் தந்தையை திருத்த முயன்றாள். ஆனால் முடியாது போன போது மதுவின் மீது கட்டுடங்காத வெறுப்பு உண்டாகிற்று. குடிப்பவர்களைப் பார்த்தாலே அவளுக்கு எரிச்சல் வரும். அப்படி இருப்பவளுக்கு அந்த மது பொத்தலைத் தொடக் கைகள் நடுங்கின.
‘சாரி மா... சாரி ராம், ஒரே ஒருநாள் இதை குடிச்சிட்டு அப்பா மாதிரி நிம்மதியா தூங்கிக்கிறேன் மா. மனசு ரொம்ப வலிக்குது மா!’ என மனதிற்குள்ளே இருவரிடமும் தேம்பியபடி மன்னிப்புக் கேட்டவள், அதைத் திறந்து மடமடவென மொத்தத்தையும் வாயில் சரித்திருந்தாள். குடித்ததும் மதுவின் வாடையில் குடலைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வந்தது.
சில பல நிமிடங்களிலே சுர்ரென தலையில் ஏதோ எறியது போலிருக்க, எழுந்து நின்றாள். உடல் சமநிலையை தொலைத்திருக்க, மெதுவாய் நடந்து உள்ளே சென்று வெகு கவனமாய் பூட்டை எடுத்து கதவை இறுகப் பூட்டிவிட்டு நீள்விருக்கையில் சாய்ந்தாள்.
மனம் மட்டுப்பட்டு இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் பறப்பது போலிருந்தது. கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, போதையினூடே விசும்பினாள். நேரம் பதினொன்றைத் தொட்டு நிமிட முள் நகர ஆரம்பிக்க, காயத்ரியின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. செவி அதை உள்வாங்கினாலும் அசையாது அமர்ந்திருந்தாள்.
கதவு மேலும் பலமாய் தட்ட இமைகளை கடினப்பட்டு விழித்துப் பார்த்தாள். யாரது இந்த நேரத்தில் என மனம் திடுக்கிட, அலைபேசி இசைத்து. எடுத்துப் பார்த்தாள். ரகுராம்தான் அழைத்தான். அழைப்பைத் துண்டித்தாள்.
“ஓபன் தி டோர் காயூ. ஐ யம் வெய்ட்டிங் அவுட்சைட்!” என அவன் அனுப்பியிருக்க, சில நொடிகள் யோசித்தவள் மெதுவாய் நடந்து சென்று இரண்டு பூட்டையும் திறந்துவிட்டு அவன் முகம் பார்க்காது சுவரை அங்காங்கே பிடித்து உள்ளே வந்து அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிவிட்டு அப்படியே கீழே அமர்ந்தாள்.
ரகுராம் காலணியை கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தவன் அவளது கதவு அடைக்கும் சத்ததில்தான் கவனித்தான். நெற்றியை சுருக்கியவன், “காயூ, வெளிய வா!” என்றான் அதட்டலாய்.
“முடியாது ராம்!” என்றவள் விசும்பும் சத்தம் இவனை அடைந்தது.
“ப்ம்ச்... இப்போ எதுக்கு டி அழுதுட்டு இருக்க?” இவன் கோபமாய்க் கேட்க, அவளிடம் பதிலில்லை.
“உன்கிட்டே தானே காயூ கேட்குறேன். பதில் சொல்லு டி. எதுக்கு நீ அழற?” என அவன் அழுத்திக் கேட்க, “நீ ஏன் என்னை பார்க்க ஹாஸ்பிடல் வரலை டா. நான் எவ்வளோ நேரம் உனக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா?” என்றாள் அழுதக் குரலில்.
“நீ ஃபோன் பண்ணதும் நான் கிளம்பலாம்னுதான் டி நினைச்சேன். பட், ஒரு ஹார்ட் அட்டாக் கேஸ். நைட் ட்யூட்டி டாக்டர் வர லேட். அதுக்காக அப்படி அந்த பேஷண்டை விட்டுட்டு வர முடியுமா? அதான் அவருக்கு ட்ரீட்மெண்ட் பார்த்து சேஃப் சோன்க்கு வந்ததும் நேரா இங்க வந்தேன்!” என்றான் விளக்கமாய்.
“பொய் சொல்லாத டா. உனக்கு என்னைப் பார்க்க புடிக்கலை. உனக்கு நான் வேணாம். அதான் எதாவது ரீசன் வச்சிருக்க. நீ என்னை வெறுத்துட்ட ராம்!” என்றவளின் பேச்சு மதுவின் பிடியிலும் தெளிவாய் இருந்தது.
“லூசு மாதிரி நீயா உளறாத காயூ!” அவன் எரிச்சலாய் பேச,
“ஆமா... நான் பேசுறது உனக்கு உளறலாதான் இருக்கும் ராம். உனக்கு பேச விருப்பம் இல்லைன்னு தெரியுது. அவ்வளோ கஷ்டப்பட்டு நீ என் கூட பேச வேணாம்!” என்றவள், “அம்மா என்னைவிட்டு போனப்போ நானும் அவங்க கூட செத்தா போய்ட்டேன். விதியேன்னு வாழ்ந்தேன் இல்ல. அதே மாதிரி நீ என்கூட இல்லைனாலும் செத்தெல்லாம் போக மாட்டேன். எனக்கான காலம் வரைக்கும் வாழ்ந்துட்டு யாருக்கும் பாரமா இல்லாம கிளம்பிடுவேன்!” என அவள் தேம்பியபடியே கூற, இவனுக்கு மனம் கனத்துப் போனது.
“காயூ ப்ளீஸ், நீ மொத கதவைத் தொற. நம்ப பேசிக்கலாம்!” என்றான் பொறுமையான குரலில்.
“பேச என்ன இருக்கு ராம். நீதானே கேட்ட, நமக்குள்ள பேச என்ன இருக்கு. நீ உன் வழியைப் பார்த்துட்டுப் போ. உன் அப்பா குடிக்காத ரொம்ப நல்ல மனுஷனா இருக்கவோரோட பொண்ணைப் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரு. பணக்கார பொண்ணா, உங்க அந்தஸ்துக்கு ஏத்த பொண்ணா பார்த்து நீ சந்தோஷமா வாழு ராம். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்!” என்றவளை என்ன செய்தால் தகுமென ரகுராமின் மூளை சூடாகிப் போயிருந்தது.
“இப்போ கதவைத் திறக்க முடியுமா? முடியாதா?” என அவன் அடிக்குரலில் கேட்க, “முடியாது ராம். நீ முதல்ல கிளம்பு. லேட் நைட் வீட்டுக்கு வராதன்னு சொல்லி இருக்கேன்ல?” என அதட்டலாய் பதில் அவளிடமிருந்து வந்தது.
“ஹம்ம்...இந்த மூஞ்சியைப் பார்க்காம, இந்த வாய்ஸைக் கேட்காம இருக்க முடியலேன்னு போன் பண்ணி யாரு கூப்ட்டது?” என அவன் குரலை உயர்த்த, “ஆமா... நான் தான் வர சொன்னேன். அதான் சொன்ன டைம்க்கு வந்து கிழிச்சிட்ட நீ. முதல்ல கிளம்பு ராம்!” என்றாள் தெளிவான குரலில். அழுகை நின்றிருந்தது. ரகுராம் வந்த போதே மனம் சற்று சமன்பட்டிருக்க, உள்ளே சென்ற மதுதான் உள்ளக் கிடங்கை மொத்தமாய் கொட்டிக் கவிழ்த்தது.
“நிஜமா நான் கிளம்பிடுவேன் காயூ!” அவன் மிரட்ட, “போடா... யாரு உன்னைப் பார்க்கலைன்னு அழுதா. முதல்ல இடத்தைக் காலி பண்ணு!” என்றாள் ரோஷமாய்.
“சரி நான் கிளம்புறேன்!” என்று அவன் கூறி சில பல நிமிடங்கள் கழித்து வெளியே அரவமற்றுப் போனது. மெதுவாய் எழுந்த காயத்ரி கதவைத் திறந்து வெளியே வர, சுவரில் சாய்ந்து நின்று அவளையே அழுத்தமாய்ப் பார்த்திருந்தான் ரகுராம். ஒரு நொடி அவள் முகம் அதிர்ந்து போனது.
அவன் அவளருகே வர முயல, “ராம், ஸ்டே தேர். கிட்ட வராத!” என்றவள் முகத்தை வேறுபுறம் திருப்பினாள். அவள் குடித்திருந்த மதுவைப் பற்றி அவன் அறிவதில் அவளுக்கு உடன்பாடில்லை.
மெது மெதுவாய் ஒவ்வொரு எட்டுகளாக காயத்ரி எடுத்து வைத்து நீள்விருக்கையை நோக்கி நகர, இவனது புருவங்கள் யோசனையாய் சுருங்க, “காயூ, உடம்புக்கு என்ன பண்ணுது?” என அவளது தோளை அழுத்திப் பிடிக்கவும், சிறுமூளையின் கட்டுபாட்டை இழந்த உடல் சமநிலையின்றி தடுமாறி கீழே விழச் செல்ல, நொடியில் வலக்கரம் கொண்டு அவளது இடையைப் பிடித்து தன்னோடு அணைத்திருந்தான்.
அவன் மார்பில் மோதி நின்றவள், “என்னை விடு ராம்!” என நிமிர்ந்து அவள் கோபமாய் உரைக்க, ரகுராம் அவளிடமிருந்து வந்த மதுவாடையில் அதிர்ந்து போனான்.
“காயூ, குடிச்சிருக்கீயா?” என அவன் அதிர்ச்சியாக, அவனது கையை இடையிலிருந்து எடுத்து விட்டவள் மெதுவாய் நகர்ந்து இருக்கையின் கைப்பிடியைப் பிடித்து அதில் அமர்ந்தவள், “இங்க வந்து உக்காரு டா!” என்றாள் தெளிவான குரலில். நடையில் தள்ளாட்டம் இல்லையென்றால் நிச்சயமாக அவள் குடித்திருப்பதை அறிய முடியாது. ஏனென்றால் பேச்சில் எவ்வித குழறலும் இல்லை. தெளிவாகப் பேசினாள்.
கோபமாய் அவளருகே அமர்ந்தவன், “இப்போ எதுக்கு டி குடிச்ச? அறிவில்ல உனக்கு, உங்கப்பா குடிச்சாலே உமட்டுது. எனக்குப் பிடிக்கலைன்னு புலம்புறவ எனத்துக்கு இப்போ குடிச்ச?” என அவன் சீறலாய்க் கேட்க, அதிராமல் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“வாயைத் தொறந்து சொல்லு டி. அறிவிருக்கவன் பண்ற காரியமா இது?” என அவன் கடிய,
“எங்கப்பா கிட்டே சின்ன வயசுல ஏன்பா குடிக்கிறன்னு கேட்டேன். உடம்பு வலிக்கு மாத்திரை இருக்கு. மனசு வலிக்கு இதுதான் மா மாத்திரை. அதான் குடிக்கிறேன்னு சொன்னாரு டா. எனக்கும் மனசு முழுக்க வலி. எனக்கிருக்க ஒரே ஃப்ரெண்ட் நீதான். நீயும் என்னைப் பார்க்க வரலை. அம்மாவும் இல்லாத பொண்ணு நான். யார்கிட்டே என் கஷ்டத்தை சொல்லி அழறது. தோ, வெளிய குடிச்சிட்டு படுத்துருக்க மனுஷன் கிட்டயா சொல்ல முடியும். அதான் ராம் குடிச்சேன்!” என்றவளை இவன் சலனமற்றுப் பார்த்தான்.
“கஷ்டமா இருக்கு டா. நான் நிம்மதியா தூங்கி ரொம்ப மாசமாச்சு ராம். கண்ணை மூடுனாலே நீதான்டா வந்து நிக்கிற. நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சும் ஏன் உன்னை எனக்கு இவ்வளோ பிடிச்சதுன்னு டெய்லி அழுதுட்டே தூங்குறதால ஒழுங்காவே தூக்கம் வர மாட்டுது டா. அதான் ஒரே ஒருநாள் நிம்மதியா எதையும் நினைக்காம தூங்கலாம்னு குடிச்சேன் ராம். ஆனாலும் எல்லாமே எனக்கு நினைவுல இருக்கு டா. இன்னும் நிறையா குடிச்சா உன்னை மறப்பேனா ராம்? எதாவது மருந்து இருந்தா இன்ஜெக்ட் பண்ணு டா. உன்னை மறக்கணும் ராம் நான். ஏன்னா நான் உன் மேல ஆசைப்பட்றது பேராசையாம் டா!” என்றாள் இருக்கையில் சாய்ந்து முகத்தை அவன்புறம் திருப்பி. விழிகளில் நீர் வழிந்தது. அவளைப் பேசவிட்டு அவன் அமைதியாய் இருந்தான்.
“எங்கப்பா குடிச்சா நான் என்னடா பண்ண முடியும். நானும் அழுது பார்த்தேன். கோபப்பட்டு அவர்கிட்டே பேசாம சாப்பிடாம இருந்து கூடப் பார்த்தேன். ஆனால், அவர் என் பேச்சைக் கேட்கலைடா. அதுக்கும் மேல என்னால என்ன பண்ண முடியும். அவர் குடிகாரர் தான். அவரோட மகள் நான்தான். அதை இந்த ஜென்மத்துல என்னால மாத்த முடியாது ராம்!” என்றாள் கசந்த முறுவலுடன்.
“உங்கப்பா ரொம்ப நல்லவர் ராம். படிச்சு முடிச்சு டாக்டராகி குடும்பத்தை நல்லா பார்த்துக்கிட்டவரு. உங்கம்மாகிட்டே சிடுசிடுன்னு விழுந்தாலும் நல்லாதானே பார்த்துகிறார். உன் மேல அவருக்கு ரொம்ப பாசம் இல்ல ராம். எனக்கு அவர் மேல மரியாதை இருக்கு டா. உனக்கும் உன் அப்பான்னா ரொம்ப பிடிக்கும் இல்ல. அதான் டா நீ எனக்கு வேணாம்னு சொல்றேன். உங்கப்பா என்னை மருமகளா அக்செப்ட் பண்ணிக்க மாட்டாரு ராம். நானா இல்லை உங்கப்பாவான்ற ஒரு சிட்சுவேஷன் வந்தா நீ ரொம்ப கஷ்டப்படுவ டா. அதான் நான் உன்னை வேணாம்னு சொல்றேன் ராம்!” என்றாள் மெலிதான முறுவலுடன்.
“அப்பா என்ன சொன்னாரு காயூ?” இப்போதுதான் ராம் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.
“ஹம்ம்... உனக்கு ஞாபகம் இருக்கா ராம். சின்ன வயசுல டெய்லி உங்க வீட்டுக்கு ஈவ்னிங் நான் வருவேன். நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து ஹோம் வொர்க் பண்ணுவோம். உங்கம்மா கையால டெய்லி நைட் சாப்ட்டு தானே நான் என் வீட்டுக்குப் போவேன். அப்புறம் ஒருநாள் நான் உங்க வீட்டுக்கு வர்றதை நிறுத்திட்டேனே. உனக்கு ஏன்னு தெரியுமா ராம்?” என அவள் கேட்க, ரகுராமிற்கும் நன்றாய் அது நினைவில் இருந்தது.
தாயை இழந்து தந்தையோடு இந்த ஊருக்கு காயத்ரி வந்ததும் இவன் படிக்கும் பள்ளியில்தான் ஆறாம் வகுப்பு சேர்ந்திருந்தாள். யாரிடனும் சேராது தனித்து அமர்ந்த தாயை நினைத்து அழுது கொண்டே இருப்பாள் காயத்ரி.
“ஏய் பொண்ணே, எதுக்கு அழுதுட்ட இருக்க நீ?” என இவன் அவளிடம் அதட்ட, “என் அம்மா செத்துப் போய்ட்டாங்க. சாமிகிட்டே போய்ட்டாங்க. அதான் அழுறேன். உனக்கு அம்மா இருக்காங்க இல்ல. அதான் நீ சிரிச்சிட்டே இருக்க!” என அவள் தேம்பியது இன்றுமே அவனுக்கு ஞாபகம் இருந்தது. இவன்தானே அவளைத் தேற்றி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று கௌதமி உனக்கும் அம்மாதான் என சமாதானம் செய்து தாயை அவளோடு பங்கிட்டு காயத்ரியின் நட்பை பெற்றிருந்தான். அதற்குப் பின்னர் தினமும் அவள் இவர்கள் வீட்டிற்கு தவறாது வந்துவிடுவாள். ஆனால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது திடீரென ஒருநாள் அவளின் வருகை நின்று போனது. ஏனென்று இவன் அழுத்திக் கேட்டும் காயத்ரி வாயைத் திறக்கவில்லை. இவனும் சரியென அவளிடம் கூறிவிட்டு தினமும் இவனே காயத்ரியின் வீட்டிற்கு தினமும் வந்து சென்றான்.
ரகுராம் சில நொடிகள் அதை யோசித்துவிட்டு அவளைப் பார்த்து தலையை அசைக்க, “ஏன் அப்புறம் உங்க வீட்டுக்கு நான் வரலைன்னு தெரியுமா ராம். என் அப்பா ஒருநாள் குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடந்ததை உங்கப்பா பார்த்ததுட்டார் போல. அப்புறம் நான் இருக்கும்போதே கோபமா உன் அம்மாகிட்டே ‘குடிகாரன் பொண்ணெல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள சேர்க்குற கௌதமி. இந்தப் புள்ளையோட அப்பனைப் பார்த்து நாளைக்கு நம்ப புள்ளையும் குடிக்க ஆரம்பிச்சுட்டா என்ன பண்றது? நம்பளோட குணம் நம்ப கூட பழகுறவங்களை வச்சுத்தான் இருக்கும்னு சொல்லுவாங்க. தகுதி தராதாரம் இல்லாம உன் மகன் பழகுவானா?’ ன்னு கேட்டுட்டார்டா. செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு ராம். உங்கம்மாவை உங்கப்பா கோபமா பேசி பார்த்திருக்கேன். ஆனால், என் முன்னாடியே என்னை வச்சிட்டே அவர் பேசுனதும் என்னமோ என்னையே அவர் கை நீட்டி அடிச்சது போல மனசு வலிச்சது டா. அப்போ எனக்கு பதிமூனு வயசு தானே இருக்கும் ராம். அன்னைக்கு வீட்டுக்கு வந்து அழுதேன் டா. அப்புறம் உங்க வீட்டுக்கே வரக் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன். ஆனாலும் நடந்ததை உன்கிட்ட சொல்லி பிரச்சனையாக்க விரும்பலை டா. உன்னைப் பொறுத்தவரை உங்கப்பா உனக்கு ஹீரோ ராம். எனக்காக உங்களுக்கு இடையில பிரச்சனை வரக் கூடாதுன்னு நான் உன்கூட ஃப்ரெண்ட் ஷிப்பை கட் பண்ணலாம்னு நினைச்சேன். பட் நீ என்னை விடலை ராம். நீயா வருவ, அன்பா பார்த்துப்ப. எதுனாலும் அக்கறையா செய்வ. நான் சாப்ட்டேனான்னு என் வயிறு வாட விடாம பார்த்துப்பல்ல ராம். அதன் உன் மேல எனக்கு இவ்வளோ காதல் போல?” என சின்ன சிரிப்புடன் கேட்டவளை இவன் வேதனை மிகப் பார்த்தான்.