• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 21

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 21:

நான் உனை காணும்

வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன்

தனியே தனியே…

காலை நேர காற்று இதமாய் வருடி செல்ல தன் கையில் இருந்த மகிழுந்தை இயக்கி கொண்டிருந்த பார்த்தீயின் விழிகள் அருகில் அழகாய் துயில் கொண்டிருந்த மனைவியின் மீது படிந்தது‌.

கத்தரிப்பூ நிறத்தில் கரை வைத்த சேலை அணிந்து இருந்தவள் இரண்டு கால்களையும் மேலே தூக்கி கைகளால் கட்டியபடி உறங்கி கொண்டிருந்தாள்.

சாளரம் வழியே வருடி செல்லும் தென்றல் அவளது கூந்தலை கலைத்து சென்றது‌.

அதில் சில கூந்தல் இழைகள் முகத்தில் உறவாடி கொண்டிருந்தது‌. வாகனத்தின் அசைவிற்கேற்ப காதில் இருந்த ஜிமிக்கி நடமாட அதில் பார்த்தீயின் விழிகள் பதிந்து மீண்டது.

இங்கு வந்த இத்தனை நாட்களில் திருமணத்திற்கு பிறகு இன்று தான் ஜிமிக்கி அணிகிறாள். மற்ற நாட்கள் சாதாரண கல் வைத்த சிறு தோடு தான்.

இந்த ஜிமிக்கியும் மகிழுந்தில் மனம் பரப்பும் மல்லிகையும் தனது தாயின் வேலை தான் என்று புரிந்தது.

துயில் கொள்ளும் நேரத்திலும் கருத்தை கவர்ந்தாள் மனைவி. விழிகள் அடிக்கடி ரசனையுடன் படிந்து மீண்டது.

மனது ஆயிரமாவது முறையாக கேட்டு கொண்டது இவள் மீண்டும் தன் வாழ்வில் வராது போனால் இவளை தான் உணராது போயிருந்தால் எத்தகைய சொர்க்கத்தை இழந்து இருப்போம் என்று.

ஏதோ தான் முற்பிறவியில் செய்த புண்ணியம் இல்லை என்றால் இவள் தான் வாழ்வில் மீண்டும் வந்திருக்க மாட்டாள்‌.

அதுவும் அந்த வஞ்சகர்களின் பேச்சை கேட்டு இன்னமும் முட்டாளாகி ஏமாந்து கொண்டு இருந்திருப்போம் என்று பெருமூச்சு எழுந்தது.

ஒரு கரத்தால் முகத்தில் விழுந்த கூந்தல் கற்றையை ஒதுக்கியவன் விரல்கள் மெதுவாக புருவத்தை வருடியது.

உறங்கும் போதும் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு உறங்கினாள் கனி.

இவளை மீண்டும் பழையபடி மாற்ற வேண்டும் என்று எண்ணி கொண்டான்‌.

தான் தேனிலவு என்று கூறியதும் இவளது முகத்தில் வந்து போன அதிர்வை நினைத்தவனுக்கு இப்போது புன்னகை முகிழ்ந்தது.


“நோ ப்பா. நாளைக்கு நானும் என் பொண்டாட்டியும் ஹனி மூன் போறோம். டென் டேஸ் பிஸி” என்றிட,

“என்ன?” என்று திகைத்து அதிர்ந்து பார்த்தவளுக்கு புரையேறி இருந்தது.

“பார்த்து பார்த்து” என்று அவளது தலையை தட்டி தண்ணீரை கொடுத்தவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.

தண்ணீரை அருந்திவிட்டு அவனை முறைக்க,

கிரி, “நாளைக்கேவா பார்த்தீ?” என்று வினவ,

“ஆமப்பா நாளைக்கு தான்” என்றான்.

“என்ன திடீர்னு முன்னாடியே பிளான் இருக்குனு சொல்லலை?” என்று கிரி வினவ,

“திடீர் பிளான் தான் கனி தான் விருப்பப்பட்டா அதான்” என்று இழுக்க,

“நானா?” என்று மீண்டும் அதிர,

“அவ ஆசைப்பட்டு கேட்கும் போது என்னால மறுக்க முடியலை” மேலும் கூற,

இவளுக்கு தான் கோபம் பெருகியது. முகத்தில் எந்த உணர்வையும் காண்பிக்காது இருக்க சிரமப்பட்டவள் தலையை உண்ணும் சாக்கில் குனிந்து கொள்ள,

கிரி, “சரிப்பா போய்ட்டு வாங்க. எங்க போறீங்க. எத்தனை நாள் பிளான்?” என்று வினா தொடுக்க,

“அதெல்லாம் இன்னும் பிளான் பண்ணலைப்பா” என்று முடித்துவிட,

கனி உண்டுவிட்டு விட்டால் போதுமென்று அறைக்குள் சென்றுவிட்டாள்.

பார்த்தீ உண்டுவிட்டு சாவகாசமாக அறைக்குள் வர, வந்ததுமே,

“உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிங்க?” என்று பொரிய,

“உன்னைத்தான்” என்று சிரிப்புடன் கண்ணடிக்க,

“ஆவ்…” என்று பல்லை கடித்தவள்,

“இப்போ எதுக்கு கீழ நான் தான் ஹனிமூன் போக கேட்டேன்னு பொய் சொன்னிங்க?” என்று முறைக்க,

“சும்மா ஜெஸ்ட் ஃபன்னுக்கு” என்று தோளை குலுக்க,

இவளுக்கு தான் ஆத்திரமாக வந்தது.

பொறுமையை இழுத்து பிடித்து,

“இப்போ எதுக்கு இந்த ஹனிமூன்?” என்று வினவ,

“ஹனிமூன் எதுக்கு போவாங்க. எல்லாம் அதுக்கு தான்” என்று நமட்டு சிரிப்பு சிரிக்க,

“என்ன?” என்றவள் திகைத்து பார்க்க,

“நேத்து மிஸ் பண்ணதை ஹனிமூன்ல செய்யத்தான்” என்று அவளை வம்பிழுக்க,

இவளுக்கு தான் கொஞ்ச நஞ்ச பொறுமையும் பறந்து போனது.

“என்னால எங்கேயும் வர முடியாது” என்றிட,

“என்னடி மாத்தி மாத்தி பேசுற?” என்க,

“நான் என்ன மாத்தி பேசுறேன்”

“நேத்து தானே மாமாவோட விருப்பத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்ன. அப்போ அவரோட விருப்பத்துக்கு ஹனிமூன் வரணும் தான? உங்கப்பா தான் ஹனிமூன் போய்ட்டு வர சொல்லி டிக்கெட் எல்லாம் புக் பண்ணி கொடுக்குறேன்னார்” என்க,

“அப்பாவா?” என்று வினவ,

“ஆமா. ஸோ நீ வர” என்று முடித்தான்.

“நோ நான் வரலை”

“சரி உங்கப்பாக்கு கால் பண்றேன் நீயே சொல்லிடு” என்று அலைபேசியை எடுக்க,

“வேணாம்”என்று மறுத்தாள். சிவப்பிரகாசம் வருத்தப்படுவார் என்று எண்ணி.

“ சே எஸ்” என்றான்.

‘படுத்துறானே‌‌…’ என்று மனதிற்குள் புலம்பியவள்,

“சரி வந்து தொலைக்கிறேன்” என்றவள்,

“எங்க போறோம்?” என்று வினவ,

“அது சர்ப்ரைஸ்” என்று சிரித்தான்.

அதற்கு மேல் கனி எதுவும் பேசவில்லை. அதுவும் மறுநாள் காலை நான்கு மணிக்கே எழுப்பி அவளை தயாராக சொல்ல,

மனதிற்குள் கடுகடுத்து கொண்டே தான் சென்றாள்.

கனி பேருந்து அல்லது ரயிலில் செல்வோம் என்று எண்ணயிருக்க,

இவன் மகிழுந்திலே செல்கிறோம் என்றுவிட்டான்.

சரி அருகில் தான் ஏதோ இடம் என்று எண்ணியவள் ஏறியதும் உறங்கிவிட்டாள்.

இதோ அவளோடு ஒரு நெடுந்தூர பயணம் செய்ய ஆசைப்பட்டவன் அவளை ரசித்தபடி செல்கிறான்.

மகிழுந்தில் ஏறியதில் இருந்து முகம் கடுகடுவென்று தான் இருந்தது அவளுக்கு.

நேரம் ஒன்பதை நெருங்க இவனுக்கு பசித்தது.

ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மனையாளை காண அவளோ சுகமாக உறங்கி கொண்டிருந்தாள்.

அவளை எழுப்ப சென்றவன் அவளருகே சென்று மெதுவாய்,

“கனி” என்று அழைக்க,

“ப்ச்” என்றவள் முகத்தை மறுபுறம் திருப்ப,

“ஏய் கும்பர்கணி எந்திரிடி” என்று மீண்டும் அழைக்க,

அதில் உறக்கம் கலைந்து கண்விழித்தவள் அவனை பார்த்து அதிர்ந்து பயத்தில் அலற எத்தனிக்க,

“ஷ்… நான் தான்” என்று அவளை அடக்கி இருந்தான்.

சட்டென்று அவனை தன்னிடமிருந்து தள்ளியவள்,

“எதுக்கு இவ்ளோ கிட்ட வந்தீங்க. அங்க இருந்து கூப்பிட்டா கேட்காதா?” என்று அதட்ட,

“கேட்கும் தான்‌. ஆனால் பக்கத்துல வந்தாதான் ஒரு கிஸ்ஸாவது அடிக்க முடியும்” என்று சிரிக்க,

“என்ன?” என்றவள் அதிர,

“எஸ் ஒன்லி ஒன் கிஸ். சும்மா சொல்லக்கூடாது உன் கன்னம் செம்ம சாஃப்ட்” என்று சிலாகிக்க,

சடுதியில் கன்னத்தில் கையை வைத்தவள்,

“நீங்க உங்க லிமிட்ட க்ராஸ் பண்ணி போறீங்க” என்று எச்சரிக்க,

பட்டென்று அவளது அருகில் வந்தவன்,

“உன்கிட்ட எனக்கு லிமிட் எதுவும் கிடையாது…” என்று ஆழ்ந்த குரலில் கூறிட,

சடுதியில் இவளிடம் தடுமாற்றம்.

நொடியில் அதனை மறைத்தவள் கோபத்துடன் ஏதோ கூற வர,

“சாப்பிட்டு பேசலாம் வா” என்றவன் இறங்கிவிட,

வேறுவழியின்றி அவளும் இறங்கி சென்றாள்.

அது ஒரு நடுத்தர அளவிலான உணவகம்.

இருவரும் கைகளை கழுவிவிட்டு வந்து அமர்ந்ததும் சிப்பந்தி வந்து நின்றார்.

தனக்கு சப்பாத்தி கூறியவன் அவளுக்கு மசால் தோசை கூற,

சிறு அதிர்வுடன் அவன் முகம் கண்டாள். காரணம் தனக்கு பிடித்த உணவை இவன் இன்றளவும் நினைவு வைத்துள்ளானா? என்று.

அவன் தன்புறம் திரும்புவதை உணர்ந்தவள் முகத்தை வேறு புறம் திருப்பினாள்.

சில நிமிடங்களில் உணவு வர இருவரும் அமைதியாக உண்டனர்.

பார்த்தீபன் எழுந்து கை கழுவி வந்து பணத்தை கொடுக்க செல்ல கனி கையை கழுவிவிட்டு வரும் சமயம் இரு பெண்களின் பேச்சு குரல் கேட்டது.

“ஹேய் அந்த ப்ளூ சர்ட் பாத்தியாடி‌. செம்மயா இருக்காருல. ஹீரோ மாதிரி”என்று ஒருத்தி கூற,

“ஆமாடி. பாலிவுட் ஹீரோ மாதிரி செம்ம கெத்தா தெரியிறாரு” என்று மற்றொருத்தி கூற,

சடுதியில் அவர்களை திரும்பி பார்த்தவள் பார்வை சென்ற திசையை காண அங்கு பார்த்தீபன் நின்று இருந்தான்.

அவர்கள் கூறிய நீல நிற உடையில் மிகவும் நன்றாக தான் இருந்தான்.

நேற்றிலிருந்து அவன் தன்னை படுத்தியது நினைவு வர அந்த பெண்களிடம் திரும்பியவள்,

“போய் பேச வேண்டியது தான” என்றிட,

இவளை கண்ட இருவரும்,

“நீங்க அவர்கூட வந்தவங்க தான?” என்று தயக்கத்துடன் வினா எழுப்பினர்.

“ஆமா. அவர்கூட தான் வந்து இருக்கேன். விருப்பம் இருந்தா போய் பேசுங்க. அவர் சிங்கில் தான் மேரேஜ்க்கு பாத்திட்டு இருக்காங்க” என்று கூற,

“அப்பிடியா?” என்று ஒருத்தி ஆர்வமாக வினவினாள்.

“ஆமா. அவருக்கு உங்களை பிடிக்க சேன்ஸ் இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க” என்று ஊக்கம் கொடுக்க,

அவர்களும் பார்த்தீபனை நோக்கி சென்றனர்.

கனியின் முகத்தில் நமட்டு சிரிப்பு வந்து போனது.

இரு பெண்களும் அவனருகே சென்றனர்.

“ஹாய் சார்” என்று ஒருத்தி துவங்க,

“ஹாய்” என்றவன் இவர்கள் தனக்கு தெரிந்தவர்களா? என்று சிந்தித்தான்‌.

“நான் மேக்னா. இவ கமலி” என்று அறிமுகம் செய்து கொள்ள,

“சொல்லுங்க” என்று பார்த்தீபன் கூற,

“உங்க நேம் சார்” என்று வினா எழுந்தது.

“பார்த்தீபன்” என்க,

“அது இவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்காம்” என்று தயங்கி கூற,

இத்தனை நேரம் சிந்தித்தவனுககு திகைப்பு தோன்றி புன்னகை முகிழ்ந்தது.

“ஓ‌…” என்க,

“அதான் பேச வந்தோம்” என்றுவிட்டு அதற்கு மேல் எதுவும் கூறாது ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

“யூ ஆர் டூ லேட் கமலி” என்றான் பார்த்தீபன்.

இருவரும் புரியாது நோக்க,

“எனக்கு த்ரீ டேஸ் முன்ன தான் மேரேஜ் ஆச்சு” என்றதும்,

“வாட்” என்று அதிர்ந்தவள்,

“நீங்க சிங்கில் உங்களுக்கு அலையன்ஸ் பாக்குறதா சொன்னாங்களே” என்க,

“யார் சொன்னது?” என்று புருவம் இடுங்கினான் பார்த்தீபன்.

“அதோ அவங்க தான்” என்று கனியை காண்பிக்க,

அவள் சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு நடந்து வந்தாள்.

“அவங்க தான் போய் பேசுங்கன்னு எங்களுக்கு ஐடியா கொடுத்தாங்க” என்றதும்,

“கிராதகி” என்று பல்லை கடித்தவனுக்கு புரிந்து போனது நேற்றிலிருந்து தான் பேசியதற்கு தான் இப்படி பழிவாங்குகிறாள் என்று.

சிரிப்புடன் அருகே வந்தவளது கையை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து நிற்க வைத்தவன்,

“மீட் மை வொஃய்ப் மிஸஸ் கன்னல்மொழி பார்த்தீபன்” என்றதும் எதிரில் இருந்த இருவரும் அதிர்ந்து போக,

கனி இவனது செயலை எதிர்ப்பார்க்காது திகைத்து தான் போனாள்.

இருவரும் கனியையே காண,

‘மாட்டிவிட்டுட்டான்’ என்று மனதிற்குள் அர்ச்சித்தவள்,

“ஜெஸ்ட் கிட்டிங்” என்று சமாளித்தாள்.

கமலியின் முகத்தில் ஏமாற்றம் படிந்து மீண்டது.

அதனை உணர்ந்து அவளது கையை பிடித்தவள்,

“சாரி ஜெஸ்ட் ஃபன்கு தான் பண்ணேன்” என்க,

அருகில் இருந்தவள்,

“நீங்க எதுக்கு சாரி கேக்குறிங்க‌. நாங்க எல்லாம் சுரேஷ் இல்லைனா ரமேஷ் கேட்டகிரி” என்று சிரிப்புடன் மொழிந்தவள்,

“உங்க இடத்துல வேற யாராவது இருந்தா ஹஸ்பண்ட பாத்ததுக்கு திட்டிட்டு போய் இருப்பாங்க. நீங்க ரொம்ப ஸ்போர்டீவ்” என்று சிரிக்க,

“ஆமா ரொம்ப ஸ்போர்டீவ்” என்று பார்த்தீபன் அவர்களை அறியாது பல்லை கடித்தான்.

கனியும் வேறுவழியின்றி சிரித்து வைத்தாள்.

“எங்க பேர் எப்படி இருக்கு” என்று பார்த்தீபன் நெருங்கி நிற்க,

“ஹ்ம்ம் ரொம்ப நல்லாயிருக்கு” என்று இருவரும் கூறினர்.

“ஒரு பிக் எடுத்து தர்றீங்களா?” என்று பார்த்தீ அலை பேசியை கொடுத்தவன் மனையாளது தோளில் கையை போட்டு கொண்டான்.

கனியும் முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்து கொண்டாள்.

பிறகு அவர்களிடம் பேசிவிட்டு இருவரும் வாகனத்தை நோக்கி செல்ல,

கனி, “நான் ட்ரைவ் பண்ணட்டுமா?” என்று கேட்டாள்‌.

“உனக்கு கார் ட்யைவிங் தெரியுமா?” என்று வியப்புடன் பார்த்தீ வினவ,

“ஹ்ம்ம் தெரியும்” என்று சாவியை வாங்கி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவள்,

“நீங்க கொஞச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்க,

“உனக்கு நல்லா ட்ரைவ் பண்ண தெரியும் தான?” என்று மீண்டும் கேட்க, கனி முறைத்தாள்.

“நாலு நாள் முன்னாடி தான் கல்யாணம் ஆகி இருக்கு. இன்னும் பர்ஸ்ட் நைட் கூட நடக்கலை” என்றிட,

கனிக்கு கோபம் பெருகியது.

“போதும் ரூட்ட மட்டும் சொல்லுங்க” என்க,

ஒரு மணி நேரத்திற்கு செல்ல வேண்டிய வழியை வைத்து கொடுக்க,

“நாம எங்க போறோம்?” என்று கனி வினவினாள்.

“போன பின்னாடி உனக்கே தெரியும்” என்க,

அவனை முறைத்தவள் வாகனத்தை எடுத்தாள்.

அந்த பிரதான சாலை என்பதால் காலை நேரம் நிறைய வாகனங்கள் வந்து கொண்டிருந்தது.

அதிலும் லாவகமாக வாகனத்தை செலுத்தினாள் கனி.

இதனை கண்டு வியந்தவன்,

“ஹ்ம்ம் பரவாயில்லை நல்லா தான் ட்ரைவ் பண்ற” என்க,

அவனை திரும்பி பார்த்தவள் ஏதும் கூறாது திரும்பி கொள்ள,

அப்போதுதான் திட்ட நினைத்தது நினைவில் வர,

“எதுக்குடி அந்த பொண்ணுங்ககிட்ட அப்படி பேசுன?” என்று கேட்க,

“ஜெஸ்ட் கிட்டிங்” என்று நேற்று அவன் கூறியது போலவே சொல்லி தோளை குலுக்க,
இவனுக்கு கடுப்பு எகிறியது.

“விளையாட்டுக்குனாலும் யாராவது என்னை புடிச்சிருக்குன்னு சொன்னா விட்டுடுவியா
டி” என்று எகிற,

“எஸ் அஃப்கோர்ஸ். ஒரு மசால் தோசை வாங்கி கொடுத்தா விட்ருவேன்”

“உனக்கு என்மேல எந்த பீலிங்க்ஸ்ம் இல்லையா?”

“ஆமா” என்றவள் அழுத்தமாக கூற,

“அப்புறம் ஏன் டென்த் ஸ்டான்ட்ர் படிக்கும் போது நான் பார்த்தீ அத்தானை தான் கட்டிப்பேன்னு சொன்ன?” என்று வினவ,

“வாட்‌…” என்றவள் அதிர்ச்சியில் மகிழுந்தை நிறுத்தியிருந்தாள்…












 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Kani mattikita ne ippo enna solluva . aanalum parthi unna indha alavuku damage panni iruku ah venam hero nu konjam kooda mariyadhai yae illa unnoda value oru masal dosa than ah so sad
 
Top