ஜென்மம் 20:
பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான்
வாடி போனேன் நீயில்லாது
கவிதையும் இசையும்
சுவையே தராது…
“சீ… உன்னை எப்படிலாம் நினைச்சு இருந்தேன். ஆனால் நீ ப்ரத்யூ குழந்தை அவ. அவளை போய் தள்ளிவிட்டு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு போய் இருக்க. அவ அப்படி என்ன பண்ணிட்டா உனக்கு. உன்னை தத்தெடுத்து இருந்தாலும் சொந்த பொண்ணு மாதிரி தான அத்தை பாத்துக்கிட்டாங்க. உன்னை பாக்கவே எனக்கு பிடிக்கலை. இன்னொரு டைம் என்னை அத்தான்னு கூப்பிட்ட. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. இனிமேல் என் முன்னாடி வந்திடாத” என்று வார்த்தைகளால் திராவகத்தை தெளித்தவன் அவளை உதறிவிட்டு உள்ளே செல்ல,
கனி தான் தலையில் இடி இறங்கியது போல நின்றுவிட்டாள்.
கையில் இருந்த காயத்தைவிட பார்த்தீபன் வார்த்தைகள் நூறு மடங்கு வலியை தந்தது.
விழிகளில் கண்ணீர் பொல பொலவென வழிந்தது.
இத்தனை நாட்களாக தனக்கு ஆசானாக நண்பனாக என யாவுமாக இருந்த ஒருவனின் கடுஞ்சொற்கள் கனியை உயிருடன் மரிக்க செய்திருந்தது.
இந்த உலகமே எதிர்த்தாலும் தன்னுடைய அத்தான் இருந்தால் தன்னால் எதையும் செய்திட முடியும் என்று எண்ணி இருந்தாள்.
ஆனால் அவை யாவும் கனியினுடைய கற்பனை மட்டுமே என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது.
அந்த கணம் உலகத்திலே தனக்கு ஒருவருமே இல்லை என்று மனது உணர்ந்தது.
அவர்கள் கூறியது உண்மை தான் போலும் தன்னை அநாதை ஆசிரமத்தில் இருந்து தான் அழைத்து வந்துள்ளனர் என்று தெள்ளத் தெளிவாக பார்த்தீயின் வார்த்தையில் இருந்து புரிந்தது.
அதெல்லாம் பொய் நீ நான் பெற்ற மகள் என்று சிவப்பிரகாசம் இத்தனை நாள் தன்னிடம் கூறியது தான் பொய்யென்று மனது உணர்ந்தது.
அச்சிறு வயதில் தாங்க கூடாத துன்பங்களை தாங்கி கொண்டவளுக்கு நிற்க இயலாது கால்கள் தடுமாறியது அருகில் இருந்த கல்லில் அமர்ந்து கொண்டாள்.
தன்னுடைய அத்தானே தன்னை நம்பவில்லை. இனி யார் தன்னை நம்புவார்கள். தனக்கென இவ்வுலகில் யாருமே இல்லை.
தான் ஒரு அநாதை என்று உணர்ந்த கணம் உள்ளுக்குள் சொல்லொண்ணா வலி ஒன்று பொங்கி எழ பெரியதாக வெளிப்பட்ட கேவலை அடக்கியள் கல்லாக சமைந்திருந்தாள்.
நேரம் கடந்தது அவளுக்கு தெரியவில்லை. பார்த்தீபன் உள்ளே சென்றதும் ப்ரத்யூ,
“அத்தான்” என்று அழுகையுடன் ஓடி சென்று அவனை அணைத்து கொண்டாள்.
அவள் உயர்த்திற்கு குனிந்தவன்,
“ப்ரத்யூ அழாத” என்று அவளது கண்ணீரை துடைக்க,
“ரொம்ப வலிக்கிதுத்தான்” என்று அழுகையுடன் கூற,
“சீக்கிரம் சரியாகிடும்” என்று மென்மையாக காயத்தை தடவினான்.
“எனக்கு பயமா இருக்குத்தான். நான் சீக்கிரம் செத்துடுவேனா?” என்று பயத்தில் விழிகளை விரிக்க,
“என்ன?” என்று அதிர்ந்தவன்,
“யாரு சொன்னது அப்படி. அதெல்லாம் இல்லை. இது சின்ன காயம் தான். ஒன் வீக்ல சரியாகிடும்” என்று கூற,
“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவள்,
“அக்கா ஏன் என்னை தள்ளிவிட்டா. அவளுக்கு நான் இங்க இருக்கது பிடிக்கலையா? அவளுக்காக என்னை ஹாஸ்டல்ல சேர்த்துடுவிங்களா?” என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க,
பார்த்தீக்கு உருகி போனது.
“அதெல்லாம் இல்லை. உன்னை ஹாஸ்டல்ல எல்லாம் சேர்க்க மாட்டோம். தப்பு பண்ணது அவ தான் அவளை தான் ஹாஸ்ட்டல்ல சேர்க்கணும்” என்று மொழிய,
“வேணாம் வேணாம் அக்கா பாவம். ஹாஸ்ட்டல் போனா கஷ்டமா இருக்கும்ல” என்று ப்ரத்யூ வருத்தப்பட,
இந்த பெண்ணை தள்ளிவிட அவளுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் பார்த்தீக்கு தோன்றியது.
கோதை, “ஆமா நீ இப்படியே அவளுக்கு பாவம் பாத்துட்டே இரு. அவ உன்னை மாடியில இருந்து தள்ளிவிட்டு கொல்லட்டும்” என்றதும்,
பார்த்தீபன், “பாட்டி” என்று அதட்ட,
“என்னை அவ கொன்றுவாளாத்தான். நான் செத்து போய்டுவேனா” என்று மீண்டும் அவனிடம் வினவ,
“ப்ரத்யூ பாட்டி தெரியாம பேசுறாங்க. நான் இருக்கேன்ல உன்னை யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க” என்று ஆறுதல் கூறியவன்,
“பாட்டி மாமாக்கிட்ட சொல்லி அவளை ஹாஸ்ட்டல்ல சேர்க்க சொல்லுங்க” என்க,
“ஆமா சொல்லணும். தத்தெடுத்துட்டு வந்தாலும் அவளை பெத்த பொண்ணு மாதிரி கையில வச்சு தாங்குனேனே. அதுக்கு நல்ல தண்டனை கொடுத்துட்டா. என்னைக்காவது நான் அவளை பிரிச்சு பார்த்து இருப்பேனா?” என்று கற்பகம் கண்ணீர் வடிக்க,
“அவளுக்கு சின்ன வயசுல இருந்தே ப்ரத்யூவ பிடிக்கலை. அவ மட்டுமே இருந்த வீட்டுல ப்ரத்யூ வந்ததும் அவளுக்கு பிடிக்கலை. அதான் சின்ன வயசுல இருந்தே அவளை அடிச்சு அழுக வைக்கிறது. அவளுக்கு எதாவது வாங்கி கொடுத்தா அதை கேட்டு சண்டை போட்றதுன்னு இருந்து இருக்கா. நானும் கண்டிக்க சொல்லி சொன்னேன் இவங்க தான் கேக்கலை”
“...”
“முன்னாடியே கண்டிச்சு இருந்தா இந்த நிலைமை வந்து இருக்குமா? போன வாரம் கூட ப்ரத்யூக்கு வாங்கி கொடுத்த பவுச்ச பாத்திட்டு எனக்கு வேணும்னு ஒரே அடம் அழுகை ப்ரத்யூ தான் விட்டுகொடுத்தா. இப்போன்னு இல்லை சின்ன வயசுல இருந்தே சின்னவ தான் விட்டு கொடுத்து போறா” என்று பார்த்தீபனிடத்தில் கனியின் பிம்பத்தை முழுமையாக சிதைத்தனர்.
கனியின் மீது பார்த்தீபனுக்கு வெறுப்பு உருவாக இதுவே காரணமாகி போனது.
ப்ரத்யூவை சமாதானம் செய்துவிட்டு தாயுடன் புறப்பட்டு வெளியே வர,
அழுகையுடன் அமர்ந்திருந்த கனி இருவரது பார்வையிலும் பட்டாள்.
கற்பகம், “டேய் அந்த பொண்ணு பாவம்டா” என்று அவளுக்காக இரக்கப்பட,
இவ்வளவு நேரம் ப்ரத்யூவின் பேச்சை நம்பியவன்,
“ம்மா வாங்க. இப்படியே இருந்தா தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு உரைக்கும்” என்றவன் தாயை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் கிளம்பிவிட,
அழுகையுடன் அமர்ந்திருந்தவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் விட்டு போயிருந்தது.
நேரம் சென்றதே தவிர யாரும் கனியை அழைக்கவில்லை.
சிறிது நேரத்தில் மழை சடசடவென பொழிய துவங்கியது.
கனிக்கு எதுவும் உரைக்கவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவள் மழையில் நனைந்து நடுங்கி கொண்டு இருந்த போதும் யாரும் கதவை திறக்கவில்லை.
தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்று இருந்த சிவப்பிரகாசம் விடயம் அறிந்து ஓடி வந்தவர்.
வந்தவர் கண்டது மழையில் கோழி குஞ்சை போல நடுங்கி கொண்டு இருந்த கனியை தான்.
அவளை அப்படி கண்டதும் அவரது உள்ளம் நடுங்கியது.
“கனி…” என்று ஓடி சென்று அவளை அணைத்து கொள்ள கனி மயங்கி அவர் மீதே சரிந்திருந்தாள்.
அதில் ஏகமாய் அதிர்ந்து, “பாப்பா கண்ணை திறடா” கலங்கிய குரலில் கன்னத்தை தட்ட அவளிடத்தில் எந்த எதிர்வினையும் இல்லை.
அதில் பதறி போனவர் கனியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடி இருந்தார்.
பிறகு மூன்று நாட்கள் கனி மருத்துவமனை வாசம் தான். காய்ச்சலில் தன்னிலை மறந்து இருந்த போது கூட,
“நான் அவளை தள்ளிவிடலை நான் எதுவும் பண்ணலை” என்று அரற்ற,
சிவப்பிரகாசத்திற்கு பாரம் கூடி போனது.
கனியை அந்த நிலையில் கண்டுவிட்ட பிறகு இனியும் அவளை தன் வீட்டில் உள்ள கொடுமைக்காரர்களிடம் விட்டு வைக்க மனதில்லை.
தன்னுடைய சொந்தமான மீனாட்சி பெரியம்மாளிடம் விடயத்தை கூறி அங்கேயே தங்கி படிக்க ஏற்பாடு செய்து இருந்தார்.
கனியுமே அங்கு செல்ல விரும்பவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனக்குள்ளே இறுகி போனாள்.
யாருமே தன்னை நம்பாத போது தன்னை நம்பிய சிவப்பிரகாசம் மீதும் பிரவீன் மீதும் அவளுக்கு பாசம் அதிகமாக இருந்தது.
அதன் பிறகு மதுரையிலே தனது படிப்பை முடித்துவிட்டு பணியில் சேர்ந்தவள் மீண்டும் சென்னை வர நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
இருவரும் நடந்தவற்றை நினைத்தபடியே நேரம் சென்றே உறகத்தை தழுவினர்.
நேரம் சென்று உறங்கினாலும் கனி வழக்கம் போல ஐந்து மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்துவந்து தரையில் போர்வையை விரித்து தனது யோகாவை செய்ய துவங்கினாள்.
இங்கு பார்த்தீபன் கண்விழித்ததும் அவனுக்கு உடலை வளைத்து யோகா செய்து கொண்டிருந்த மனைவியின் தரிசனம் தான்.
சடுதியில் வாழ்வு வண்ணமயமானதாக தோன்ற,
“வாவ்…” என்று தன்னை மீறி கூறி இருந்தான்.
அவனது குரலில் திரும்பியவள் பார்த்தீயை முறைத்து பார்க்க,
இவனது முகத்தில் புன்னகை மின்னியது.
அதனை ஒரு கணம் வெறித்தவள் பிறகு தனது வேலையை துவங்க,
இங்கு பார்த்தீபன் நன்றாக எழுந்து அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவளை பார்த்திருந்தான்.
சில நிமிடங்களுக்கு மேல் தன் மீது பதியும் குறுகுறு பார்வையை தவிர்க்க இயலாதவள் திரும்பி,
“என்னை ஏன் இப்படி வெறிச்சு பார்த்திட்டு இருக்கிங்க?” என்று முறைப்புடன் வினவ,
“நீ யோகா செய்யிறதை பார்த்தேன். இதுக்கு முன்னாடி நான் யாரும் யோகா செஞ்சு பார்த்ததேயில்லை” என்றவனது கன்னக்கதுப்புகள் சிரிப்பில் துடித்தது.
அதில் தீயை விழிகளில் கக்கியவள் திரும்பி நின்று கைகளை மேல உயர்த்த,
அப்போது அவனது கண்ணில்பட்டது அவளது கையில் இருந்த காயம்.
சடுதியில் எழுந்து அவளது கையப்பற்றியவன் காயத்தை ஆராய,
அவனது செயலை உணர்ந்தவள்,
“ப்ச் விடுங்க” என்று கையை உதற முயற்சித்தாள்.
“ரொம்ப பெரிய காயமா இருக்கு. உனக்கு ரொம்ப வலிச்சதா?” என்று வருடியபடி கேட்க,
அதில் முகம் இறுகி போனவள்,
“நீங்க பேசுனதை விட கம்மியா தான் வலிச்சது” என்று நிர்மலான முகத்துடன் வார்த்தைகளால் அவனை தாக்க,
சட்டென்று அவனது பிடி தளர்ந்து முகம் மாறியது.
அதனை ஒரு கணம் நிச்சலமான முகத்துடன் வெறித்தவள் விறுவிறுவென இறங்கி நடைபயிற்சி செய்ய துவங்கிவிட்டாள்.
இங்கு வார்த்தைகளை வாங்கியவன் தான் இறுகி போனான்.
தான் செய்த செயல்களும் வார்த்தையும் அவளை வெகுவாக காயப்படுத்தி இருப்பதை உணர்ந்தவன் இனி அவள் சரியாகும் வரை தாங்கி கொள்ளத்தான் வேண்டும் என்று எண்ணி தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.
பிறகு காலை கடன்களை முடித்து அவனும் நடைபயிற்சி சென்று வந்தான்.
இருவரும் குளித்து முடித்து தயாராகினர்.
முதலில் குளித்து கிளம்பிய பார்த்தீபன் மனைவியை விழிகளால் ரசித்து கொண்டிருந்தான்.
பச்சை பட்டுப்புடவை அணிந்து கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தவளது கழுத்தில் அவன் அணிவித்த மாங்கல்யம் மின்னி கொண்டிருந்தது.
திருமதி பார்த்தீபனாய் அவ்வளவு அழகாக விழிகளை நிறைத்தாள் மனைவி.
அவனுக்கு இருந்த மகிழ்ச்சிக்கு விசில் அடித்து இருப்பான். ஆனால் காலையிலே அவளிடம் வாங்கி கொண்டதன் பலன் அமைதியாய் அவளை அவதானித்திருந்தான்.
அவள் தயாராகும் வரை பொறுமையாக இருந்தவன் அவளுடன் அறையை விட்டு வெளியே சென்றான்.
மகனும் மருமகளும் ஒன்றாக இறங்கி வருவதை கண்டு மகிழ்ந்தார் கஸ்தூரி.
பார்த்தீ வந்ததும், “ம்மா எனக்கு காஃபி” என்று குரல் கொடுத்துவிட்டு அமர,
சமையலறை நுழைந்த கனி,
“நான் உங்களுக்கு உதவி எதுவும் செய்யவா அத்தை?” என்று வினவ,
அதில் புன்னகைத்தவர்,
“நானே எல்லா வேலையும் முடிச்சிட்டேன்மா. நீ உன் புருஷனுக்கு காஃபி கொண்டு போய் கொடுத்துட்டு நீயும் குடி” என்க,
“சரிங்கத்தை” என்று தலையசைத்தாள்.
இருவருக்கும் காஃபியை கோப்பையில் ஊற்றியவர்,
“உனக்கு சமைக்க தெரியுமா கனி?” என்று வினவ,
“கொஞ்சம் தெரியும். உங்க அளவுக்கு இல்லை” என்று மொழிய,
“நான் சொல்லித்தர்றேன்” என்று காஃபி கோப்பைகளை நீட்ட,
அதனை எடுத்து கொண்டு சென்று பார்த்தீபனிடம் நீட்டினாள்.
செய்தி தாளில் மும்முரமாக இருந்தவன் தலையை நிமிர்த்தாது நன்றி கூறி பெற்று கொண்டான்.
கனியும் சற்று தள்ளி அமர்ந்து அதனை அருந்தினாள்.
சிறிது நேரத்தில் கிரி வெளியே வர கனி மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க,
“உட்காரும்மா எதுக்கு எழுந்துக்கிற. நானும் உனக்கு சிவா மாதிரி தான்” என்று கூறியபடி அமர,
இவளும் புன்னகையுடன் அமர்ந்தாள்.
செய்தி தாளில் இருந்து தலையை திருப்பியவன்,
“என்ன மாமனார் மாமியாரை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீயா?” என்று சிரிப்புடன் கேட்க,
“என்ன?” என்று திகைப்புடன் பார்த்தாள்.
“ஆமா கிச்சன் போய் ஹெல்ப் பண்ணவான்னு கேக்குற. அப்பா வந்ததும் எழுந்து நின்று மரியாதை கொடுக்குற” என்றவன்,
“அவங்களுக்கு வேணா இது கரெக்டா இருக்கும். நான் இதுல எல்லாம் இம்பரஸ் ஆக மாட்டேன்” என்று என்க,
“உங்களை இம்ப்ரஸ் பண்ணணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று இதழை சுழித்தாள்.
“ஆமா அவசியம் இல்லை தான்” என்று சிரிப்புடன் மொழிந்தவன்,
“நான் தான் ஆல்ரெடி டோட்டலா இம்ப்ரெஸ் ஆகிட்டேனே” என்று கண்ணை சிமிட்ட,
இவளுக்குள் சிறிதான பூகம்பம் பிறந்தது.
சடுதியில் திரும்பி கிரியை காண அவர் செய்திதாளில் மும்மரமாக இருந்தார்.
“உஃப்…” என்று நிம்மதி மூச்சை வெளியிட்டவள் அவனை முறைத்துவிட்டு மாமியார் அருகில் சென்று நின்று கொண்டாள்.
அவர் சமைத்ததை எடுத்து உணவு மேஜை மேல் வைக்க தானும் உதவினாள்.
பிறகு நிவியும் வர உணவுண்ண அமர்ந்தனர்.
கஸ்தூரி, “நீயும் உட்காரும்மா. செல்ப் சர்விங் தான்” என்றிட,
பார்த்தீபன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
கிரிதரன், “பார்த்தீ நாளைக்கு எந்த ப்ரோக்ராமும் வச்சுக்காத. தாமோதரன் உங்களை டின்னர்க்கு இன்வைட் பண்ண போறான்” என்றதும்,
“நோ
ப்பா. நாளைக்கு நானும் என் பொண்டாட்டியும் ஹனி மூன் போறோம். டென் டேஸ் பிஸி” என்றிட,
“என்ன?” என்று திகைத்து அதிர்ந்து பார்த்தவளுக்கு புரையேறி இருந்தது.
“பார்த்து பார்த்து” என்று அவளது தலையை தட்டி தண்ணீரை கொடுத்தவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்…
பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான்
வாடி போனேன் நீயில்லாது
கவிதையும் இசையும்
சுவையே தராது…
“சீ… உன்னை எப்படிலாம் நினைச்சு இருந்தேன். ஆனால் நீ ப்ரத்யூ குழந்தை அவ. அவளை போய் தள்ளிவிட்டு ஹாஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு போய் இருக்க. அவ அப்படி என்ன பண்ணிட்டா உனக்கு. உன்னை தத்தெடுத்து இருந்தாலும் சொந்த பொண்ணு மாதிரி தான அத்தை பாத்துக்கிட்டாங்க. உன்னை பாக்கவே எனக்கு பிடிக்கலை. இன்னொரு டைம் என்னை அத்தான்னு கூப்பிட்ட. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. இனிமேல் என் முன்னாடி வந்திடாத” என்று வார்த்தைகளால் திராவகத்தை தெளித்தவன் அவளை உதறிவிட்டு உள்ளே செல்ல,
கனி தான் தலையில் இடி இறங்கியது போல நின்றுவிட்டாள்.
கையில் இருந்த காயத்தைவிட பார்த்தீபன் வார்த்தைகள் நூறு மடங்கு வலியை தந்தது.
விழிகளில் கண்ணீர் பொல பொலவென வழிந்தது.
இத்தனை நாட்களாக தனக்கு ஆசானாக நண்பனாக என யாவுமாக இருந்த ஒருவனின் கடுஞ்சொற்கள் கனியை உயிருடன் மரிக்க செய்திருந்தது.
இந்த உலகமே எதிர்த்தாலும் தன்னுடைய அத்தான் இருந்தால் தன்னால் எதையும் செய்திட முடியும் என்று எண்ணி இருந்தாள்.
ஆனால் அவை யாவும் கனியினுடைய கற்பனை மட்டுமே என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது.
அந்த கணம் உலகத்திலே தனக்கு ஒருவருமே இல்லை என்று மனது உணர்ந்தது.
அவர்கள் கூறியது உண்மை தான் போலும் தன்னை அநாதை ஆசிரமத்தில் இருந்து தான் அழைத்து வந்துள்ளனர் என்று தெள்ளத் தெளிவாக பார்த்தீயின் வார்த்தையில் இருந்து புரிந்தது.
அதெல்லாம் பொய் நீ நான் பெற்ற மகள் என்று சிவப்பிரகாசம் இத்தனை நாள் தன்னிடம் கூறியது தான் பொய்யென்று மனது உணர்ந்தது.
அச்சிறு வயதில் தாங்க கூடாத துன்பங்களை தாங்கி கொண்டவளுக்கு நிற்க இயலாது கால்கள் தடுமாறியது அருகில் இருந்த கல்லில் அமர்ந்து கொண்டாள்.
தன்னுடைய அத்தானே தன்னை நம்பவில்லை. இனி யார் தன்னை நம்புவார்கள். தனக்கென இவ்வுலகில் யாருமே இல்லை.
தான் ஒரு அநாதை என்று உணர்ந்த கணம் உள்ளுக்குள் சொல்லொண்ணா வலி ஒன்று பொங்கி எழ பெரியதாக வெளிப்பட்ட கேவலை அடக்கியள் கல்லாக சமைந்திருந்தாள்.
நேரம் கடந்தது அவளுக்கு தெரியவில்லை. பார்த்தீபன் உள்ளே சென்றதும் ப்ரத்யூ,
“அத்தான்” என்று அழுகையுடன் ஓடி சென்று அவனை அணைத்து கொண்டாள்.
அவள் உயர்த்திற்கு குனிந்தவன்,
“ப்ரத்யூ அழாத” என்று அவளது கண்ணீரை துடைக்க,
“ரொம்ப வலிக்கிதுத்தான்” என்று அழுகையுடன் கூற,
“சீக்கிரம் சரியாகிடும்” என்று மென்மையாக காயத்தை தடவினான்.
“எனக்கு பயமா இருக்குத்தான். நான் சீக்கிரம் செத்துடுவேனா?” என்று பயத்தில் விழிகளை விரிக்க,
“என்ன?” என்று அதிர்ந்தவன்,
“யாரு சொன்னது அப்படி. அதெல்லாம் இல்லை. இது சின்ன காயம் தான். ஒன் வீக்ல சரியாகிடும்” என்று கூற,
“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவள்,
“அக்கா ஏன் என்னை தள்ளிவிட்டா. அவளுக்கு நான் இங்க இருக்கது பிடிக்கலையா? அவளுக்காக என்னை ஹாஸ்டல்ல சேர்த்துடுவிங்களா?” என்று பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்க,
பார்த்தீக்கு உருகி போனது.
“அதெல்லாம் இல்லை. உன்னை ஹாஸ்டல்ல எல்லாம் சேர்க்க மாட்டோம். தப்பு பண்ணது அவ தான் அவளை தான் ஹாஸ்ட்டல்ல சேர்க்கணும்” என்று மொழிய,
“வேணாம் வேணாம் அக்கா பாவம். ஹாஸ்ட்டல் போனா கஷ்டமா இருக்கும்ல” என்று ப்ரத்யூ வருத்தப்பட,
இந்த பெண்ணை தள்ளிவிட அவளுக்கு எப்படி மனம் வந்தது என்று தான் பார்த்தீக்கு தோன்றியது.
கோதை, “ஆமா நீ இப்படியே அவளுக்கு பாவம் பாத்துட்டே இரு. அவ உன்னை மாடியில இருந்து தள்ளிவிட்டு கொல்லட்டும்” என்றதும்,
பார்த்தீபன், “பாட்டி” என்று அதட்ட,
“என்னை அவ கொன்றுவாளாத்தான். நான் செத்து போய்டுவேனா” என்று மீண்டும் அவனிடம் வினவ,
“ப்ரத்யூ பாட்டி தெரியாம பேசுறாங்க. நான் இருக்கேன்ல உன்னை யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க” என்று ஆறுதல் கூறியவன்,
“பாட்டி மாமாக்கிட்ட சொல்லி அவளை ஹாஸ்ட்டல்ல சேர்க்க சொல்லுங்க” என்க,
“ஆமா சொல்லணும். தத்தெடுத்துட்டு வந்தாலும் அவளை பெத்த பொண்ணு மாதிரி கையில வச்சு தாங்குனேனே. அதுக்கு நல்ல தண்டனை கொடுத்துட்டா. என்னைக்காவது நான் அவளை பிரிச்சு பார்த்து இருப்பேனா?” என்று கற்பகம் கண்ணீர் வடிக்க,
“அவளுக்கு சின்ன வயசுல இருந்தே ப்ரத்யூவ பிடிக்கலை. அவ மட்டுமே இருந்த வீட்டுல ப்ரத்யூ வந்ததும் அவளுக்கு பிடிக்கலை. அதான் சின்ன வயசுல இருந்தே அவளை அடிச்சு அழுக வைக்கிறது. அவளுக்கு எதாவது வாங்கி கொடுத்தா அதை கேட்டு சண்டை போட்றதுன்னு இருந்து இருக்கா. நானும் கண்டிக்க சொல்லி சொன்னேன் இவங்க தான் கேக்கலை”
“...”
“முன்னாடியே கண்டிச்சு இருந்தா இந்த நிலைமை வந்து இருக்குமா? போன வாரம் கூட ப்ரத்யூக்கு வாங்கி கொடுத்த பவுச்ச பாத்திட்டு எனக்கு வேணும்னு ஒரே அடம் அழுகை ப்ரத்யூ தான் விட்டுகொடுத்தா. இப்போன்னு இல்லை சின்ன வயசுல இருந்தே சின்னவ தான் விட்டு கொடுத்து போறா” என்று பார்த்தீபனிடத்தில் கனியின் பிம்பத்தை முழுமையாக சிதைத்தனர்.
கனியின் மீது பார்த்தீபனுக்கு வெறுப்பு உருவாக இதுவே காரணமாகி போனது.
ப்ரத்யூவை சமாதானம் செய்துவிட்டு தாயுடன் புறப்பட்டு வெளியே வர,
அழுகையுடன் அமர்ந்திருந்த கனி இருவரது பார்வையிலும் பட்டாள்.
கற்பகம், “டேய் அந்த பொண்ணு பாவம்டா” என்று அவளுக்காக இரக்கப்பட,
இவ்வளவு நேரம் ப்ரத்யூவின் பேச்சை நம்பியவன்,
“ம்மா வாங்க. இப்படியே இருந்தா தான் செஞ்சது தப்புன்னு அவளுக்கு உரைக்கும்” என்றவன் தாயை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் கிளம்பிவிட,
அழுகையுடன் அமர்ந்திருந்தவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பாசமும் விட்டு போயிருந்தது.
நேரம் சென்றதே தவிர யாரும் கனியை அழைக்கவில்லை.
சிறிது நேரத்தில் மழை சடசடவென பொழிய துவங்கியது.
கனிக்கு எதுவும் உரைக்கவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவள் மழையில் நனைந்து நடுங்கி கொண்டு இருந்த போதும் யாரும் கதவை திறக்கவில்லை.
தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்று இருந்த சிவப்பிரகாசம் விடயம் அறிந்து ஓடி வந்தவர்.
வந்தவர் கண்டது மழையில் கோழி குஞ்சை போல நடுங்கி கொண்டு இருந்த கனியை தான்.
அவளை அப்படி கண்டதும் அவரது உள்ளம் நடுங்கியது.
“கனி…” என்று ஓடி சென்று அவளை அணைத்து கொள்ள கனி மயங்கி அவர் மீதே சரிந்திருந்தாள்.
அதில் ஏகமாய் அதிர்ந்து, “பாப்பா கண்ணை திறடா” கலங்கிய குரலில் கன்னத்தை தட்ட அவளிடத்தில் எந்த எதிர்வினையும் இல்லை.
அதில் பதறி போனவர் கனியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடி இருந்தார்.
பிறகு மூன்று நாட்கள் கனி மருத்துவமனை வாசம் தான். காய்ச்சலில் தன்னிலை மறந்து இருந்த போது கூட,
“நான் அவளை தள்ளிவிடலை நான் எதுவும் பண்ணலை” என்று அரற்ற,
சிவப்பிரகாசத்திற்கு பாரம் கூடி போனது.
கனியை அந்த நிலையில் கண்டுவிட்ட பிறகு இனியும் அவளை தன் வீட்டில் உள்ள கொடுமைக்காரர்களிடம் விட்டு வைக்க மனதில்லை.
தன்னுடைய சொந்தமான மீனாட்சி பெரியம்மாளிடம் விடயத்தை கூறி அங்கேயே தங்கி படிக்க ஏற்பாடு செய்து இருந்தார்.
கனியுமே அங்கு செல்ல விரும்பவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தனக்குள்ளே இறுகி போனாள்.
யாருமே தன்னை நம்பாத போது தன்னை நம்பிய சிவப்பிரகாசம் மீதும் பிரவீன் மீதும் அவளுக்கு பாசம் அதிகமாக இருந்தது.
அதன் பிறகு மதுரையிலே தனது படிப்பை முடித்துவிட்டு பணியில் சேர்ந்தவள் மீண்டும் சென்னை வர நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை.
இருவரும் நடந்தவற்றை நினைத்தபடியே நேரம் சென்றே உறகத்தை தழுவினர்.
நேரம் சென்று உறங்கினாலும் கனி வழக்கம் போல ஐந்து மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்துவந்து தரையில் போர்வையை விரித்து தனது யோகாவை செய்ய துவங்கினாள்.
இங்கு பார்த்தீபன் கண்விழித்ததும் அவனுக்கு உடலை வளைத்து யோகா செய்து கொண்டிருந்த மனைவியின் தரிசனம் தான்.
சடுதியில் வாழ்வு வண்ணமயமானதாக தோன்ற,
“வாவ்…” என்று தன்னை மீறி கூறி இருந்தான்.
அவனது குரலில் திரும்பியவள் பார்த்தீயை முறைத்து பார்க்க,
இவனது முகத்தில் புன்னகை மின்னியது.
அதனை ஒரு கணம் வெறித்தவள் பிறகு தனது வேலையை துவங்க,
இங்கு பார்த்தீபன் நன்றாக எழுந்து அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவளை பார்த்திருந்தான்.
சில நிமிடங்களுக்கு மேல் தன் மீது பதியும் குறுகுறு பார்வையை தவிர்க்க இயலாதவள் திரும்பி,
“என்னை ஏன் இப்படி வெறிச்சு பார்த்திட்டு இருக்கிங்க?” என்று முறைப்புடன் வினவ,
“நீ யோகா செய்யிறதை பார்த்தேன். இதுக்கு முன்னாடி நான் யாரும் யோகா செஞ்சு பார்த்ததேயில்லை” என்றவனது கன்னக்கதுப்புகள் சிரிப்பில் துடித்தது.
அதில் தீயை விழிகளில் கக்கியவள் திரும்பி நின்று கைகளை மேல உயர்த்த,
அப்போது அவனது கண்ணில்பட்டது அவளது கையில் இருந்த காயம்.
சடுதியில் எழுந்து அவளது கையப்பற்றியவன் காயத்தை ஆராய,
அவனது செயலை உணர்ந்தவள்,
“ப்ச் விடுங்க” என்று கையை உதற முயற்சித்தாள்.
“ரொம்ப பெரிய காயமா இருக்கு. உனக்கு ரொம்ப வலிச்சதா?” என்று வருடியபடி கேட்க,
அதில் முகம் இறுகி போனவள்,
“நீங்க பேசுனதை விட கம்மியா தான் வலிச்சது” என்று நிர்மலான முகத்துடன் வார்த்தைகளால் அவனை தாக்க,
சட்டென்று அவனது பிடி தளர்ந்து முகம் மாறியது.
அதனை ஒரு கணம் நிச்சலமான முகத்துடன் வெறித்தவள் விறுவிறுவென இறங்கி நடைபயிற்சி செய்ய துவங்கிவிட்டாள்.
இங்கு வார்த்தைகளை வாங்கியவன் தான் இறுகி போனான்.
தான் செய்த செயல்களும் வார்த்தையும் அவளை வெகுவாக காயப்படுத்தி இருப்பதை உணர்ந்தவன் இனி அவள் சரியாகும் வரை தாங்கி கொள்ளத்தான் வேண்டும் என்று எண்ணி தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.
பிறகு காலை கடன்களை முடித்து அவனும் நடைபயிற்சி சென்று வந்தான்.
இருவரும் குளித்து முடித்து தயாராகினர்.
முதலில் குளித்து கிளம்பிய பார்த்தீபன் மனைவியை விழிகளால் ரசித்து கொண்டிருந்தான்.
பச்சை பட்டுப்புடவை அணிந்து கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தவளது கழுத்தில் அவன் அணிவித்த மாங்கல்யம் மின்னி கொண்டிருந்தது.
திருமதி பார்த்தீபனாய் அவ்வளவு அழகாக விழிகளை நிறைத்தாள் மனைவி.
அவனுக்கு இருந்த மகிழ்ச்சிக்கு விசில் அடித்து இருப்பான். ஆனால் காலையிலே அவளிடம் வாங்கி கொண்டதன் பலன் அமைதியாய் அவளை அவதானித்திருந்தான்.
அவள் தயாராகும் வரை பொறுமையாக இருந்தவன் அவளுடன் அறையை விட்டு வெளியே சென்றான்.
மகனும் மருமகளும் ஒன்றாக இறங்கி வருவதை கண்டு மகிழ்ந்தார் கஸ்தூரி.
பார்த்தீ வந்ததும், “ம்மா எனக்கு காஃபி” என்று குரல் கொடுத்துவிட்டு அமர,
சமையலறை நுழைந்த கனி,
“நான் உங்களுக்கு உதவி எதுவும் செய்யவா அத்தை?” என்று வினவ,
அதில் புன்னகைத்தவர்,
“நானே எல்லா வேலையும் முடிச்சிட்டேன்மா. நீ உன் புருஷனுக்கு காஃபி கொண்டு போய் கொடுத்துட்டு நீயும் குடி” என்க,
“சரிங்கத்தை” என்று தலையசைத்தாள்.
இருவருக்கும் காஃபியை கோப்பையில் ஊற்றியவர்,
“உனக்கு சமைக்க தெரியுமா கனி?” என்று வினவ,
“கொஞ்சம் தெரியும். உங்க அளவுக்கு இல்லை” என்று மொழிய,
“நான் சொல்லித்தர்றேன்” என்று காஃபி கோப்பைகளை நீட்ட,
அதனை எடுத்து கொண்டு சென்று பார்த்தீபனிடம் நீட்டினாள்.
செய்தி தாளில் மும்முரமாக இருந்தவன் தலையை நிமிர்த்தாது நன்றி கூறி பெற்று கொண்டான்.
கனியும் சற்று தள்ளி அமர்ந்து அதனை அருந்தினாள்.
சிறிது நேரத்தில் கிரி வெளியே வர கனி மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க,
“உட்காரும்மா எதுக்கு எழுந்துக்கிற. நானும் உனக்கு சிவா மாதிரி தான்” என்று கூறியபடி அமர,
இவளும் புன்னகையுடன் அமர்ந்தாள்.
செய்தி தாளில் இருந்து தலையை திருப்பியவன்,
“என்ன மாமனார் மாமியாரை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீயா?” என்று சிரிப்புடன் கேட்க,
“என்ன?” என்று திகைப்புடன் பார்த்தாள்.
“ஆமா கிச்சன் போய் ஹெல்ப் பண்ணவான்னு கேக்குற. அப்பா வந்ததும் எழுந்து நின்று மரியாதை கொடுக்குற” என்றவன்,
“அவங்களுக்கு வேணா இது கரெக்டா இருக்கும். நான் இதுல எல்லாம் இம்பரஸ் ஆக மாட்டேன்” என்று என்க,
“உங்களை இம்ப்ரஸ் பண்ணணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று இதழை சுழித்தாள்.
“ஆமா அவசியம் இல்லை தான்” என்று சிரிப்புடன் மொழிந்தவன்,
“நான் தான் ஆல்ரெடி டோட்டலா இம்ப்ரெஸ் ஆகிட்டேனே” என்று கண்ணை சிமிட்ட,
இவளுக்குள் சிறிதான பூகம்பம் பிறந்தது.
சடுதியில் திரும்பி கிரியை காண அவர் செய்திதாளில் மும்மரமாக இருந்தார்.
“உஃப்…” என்று நிம்மதி மூச்சை வெளியிட்டவள் அவனை முறைத்துவிட்டு மாமியார் அருகில் சென்று நின்று கொண்டாள்.
அவர் சமைத்ததை எடுத்து உணவு மேஜை மேல் வைக்க தானும் உதவினாள்.
பிறகு நிவியும் வர உணவுண்ண அமர்ந்தனர்.
கஸ்தூரி, “நீயும் உட்காரும்மா. செல்ப் சர்விங் தான்” என்றிட,
பார்த்தீபன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
கிரிதரன், “பார்த்தீ நாளைக்கு எந்த ப்ரோக்ராமும் வச்சுக்காத. தாமோதரன் உங்களை டின்னர்க்கு இன்வைட் பண்ண போறான்” என்றதும்,
“நோ
ப்பா. நாளைக்கு நானும் என் பொண்டாட்டியும் ஹனி மூன் போறோம். டென் டேஸ் பிஸி” என்றிட,
“என்ன?” என்று திகைத்து அதிர்ந்து பார்த்தவளுக்கு புரையேறி இருந்தது.
“பார்த்து பார்த்து” என்று அவளது தலையை தட்டி தண்ணீரை கொடுத்தவன் அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்…