- Messages
- 1,030
- Reaction score
- 2,923
- Points
- 113
அத்தியாயம் - 20
இந்துமதிக்கு எந்த வேலையும் வைக்காமல் திரிலோகேஷ், குமார் இருவருமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டனர் அவரின் உடல் நிலையை கருதி. அவர் மீனுவிற்கு தேவையான உடைகள், நகைகள், அலங்காரம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டார்.
"ப்பா...மீனுக்குட்டி ஏன் ஸ்கூல்க்கு வரலை. அடிக்கடி லீவ் போட்டுட்டே இருக்காங்களே!" என்று திருமணம் குறித்த வந்த மறுநாளே மகள் தந்தையிடம் சந்தேகத்தை வினவ இது தான் சமயம் என்று நினைத்தவன் மகளை மடியில் அமர்த்தி, "மேகாம்மா, இனிமே நீ அவங்களை மீனுக்குட்டினு கூப்பிடக் கூடாது. அம்மானு தான் கூப்பிடணும்" என்று கூற அவளோ கண்களை விரித்து வைத்து தந்தையை பார்த்தாள்.
அவளது பாவனையை கண்டவன், "என்னடா" என்று மகளின் தாடையை ஆதுரமாக பிடித்துக் கொள்ள, "என் ப்ரெண்ட்ஸ் அம்மா எல்லாம் அவங்க கூடவே இருப்பாங்க. அப்ப மீனுக்குட்டி" என்று நாக்கை கடித்தவள், "அம்மாவும் என்கூடவே இருப்பாங்களா?" என்று வினவினாள்.
"ஆமா இனிமே நம்ம வீட்டில தான் இருப்பாங்கடா" என்று கூற குழந்தை முகத்தில் அவ்வளவு உற்காசம்.
"ரியலி" என்றவள் எழுந்து அவனது முகத்தை தன் இரு கைகளாலும் பற்றிக் கொள்ள, "ம்மா..ஆமா" என தலையாட்டினான்.
"ஆனா ஏன் திடீர்னு" என்று அடுத்த அம்பை தந்தையை நோக்கி எறிய, "இனிமே அப்படி தான். இப்ப சொன்னா உனக்கு புரியாது. ஆனா கண்டிப்பா டாடி உன்க்கிட்ட சொல்லுவேன்" என்று மகளை அணைத்துக் கொள்ள, "சரி அப்ப இப்பவே என்னை மம்மிய பார்க்க அழைச்சுட்டு போங்க" என்று நின்றாள் அவள்.
"ச்சு...மேகா, நீ ஸ்கூல்க்கு போ. இன்னும் த்ரி டேஸ்ல அவங்க இங்கயே வந்திடுவாங்க" என்று கூற
"க்கும்.. முடியாது. அழைச்சுட்டு போங்க" என்று பிடிவாதமாக நின்றாள்.
வெளியே சென்ற செல்வியும் குமாரும் வந்து விட எழுந்து சென்ற திரிலோகேஷ் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
"டாடி ப்ளீஸ்" என்று மகள் இறைஞ்சுதலாக குரல் கொடுக்க, "மேகா" என்று சற்று அதட்டுலாக குரலெழுப்ப முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து கொண்டாள்.
"என்னாச்சு மாப்பிள்ளை" என்ற குமார் பேத்தியை தூக்கி மடியில் வைத்துக் கொள்ள, "இல்லை மாமா, ஸ்கூல்க்கு போகாம மீனுவை பார்க்கணும்னு சொல்றா" என்றான் தயக்கமாக.
"கல்யாணம் வரை மேகாவும் லீவ் எடுக்கட்டும் மாப்பிள்ளை. இப்ப என்ன ஆகிட போகுது. எனக்கு இந்துமதியம்மாகிட்ட கொஞ்சம் கலந்து பேச வேண்டி இருக்கு. நான் கூட்டிட்டு போறேன்" என அவளை அழைத்துக் கொண்டு செல்வியுடன் கிளம்பியும் விட்டார்.
"அம்மா" என்ற வார்த்தையை கேட்டவுடன் மேகாவிற்கு அப்படியொரு ஆனந்தம். நிறைய முறை வேண்டும் என்று ஏங்கி இருக்கிறது மனது. ஆனால் திரிலோகேஷிடம் வெளிபடுத்தியதில்லை. அவன் வேண்டாம், இல்லை, கேட்காதே என்று ஏதாவது கூறினால் அதற்கு பின் எதையும் கேட்டிடவே மாட்டாள். குழந்தை என்பதால் ஏக்கம் மனதிலே நின்று விட்டது. வயது வித்தியாசமின்றி எல்லா ஜீவன்களுக்கு அதிக படியா பிடிக்கும் வார்த்தையும் உருவமும் அம்மா என்பதையன்றி ஏதுமில்லை தான்.
கூப்பிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் யாரை கூப்பிடுவது. ஷாம்லியை காட்டி கூறி இருக்கிறான் தான். ஆனால் போட்டோ முன் நின்று அழைத்திருக்கிறாள். "ம்மா...வாங்க" என்று அந்த கணங்களில் கலங்கிய கண்களோடு மகளை கைகளில் அள்ளி மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறான்.
மீனுவால் எதிலுமே லயிக்க முடியவில்லை. ஒரு பரிதவிப்பு வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி சுழல்கிறது. ஆனால் மனதோ அப்படியே மரத்து போய் வர மறுத்து மருகுகிறது. காரணம் புரியவில்லை. ஏதோ இழந்தது போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
"இந்த சேலைய பார் மீனு, அதை பார் இதை பார்" என்று இந்துமதியோ ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அவள் முன் நிற்க, "நீங்க பார்த்துக்கோங்கம்மா" என்று ஒற்றை வரியில் முடித்து விட அவரது முகமும் வாடி தான் போகிறது. அவரது சூழலை உணர முடிகிறது தான். ஆனால் தன்னை இயல்பாய் காட்டிக் கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறாள் பெண்ணவள்.
அவளது முகத்தின் இறுக்கத்தைக் கண்டு, "கல்யாணம் பிடிக்கலையா? சொல்லும்மா, ஏன் இப்படி இருக்க?" என்று பெற்றவரும் மருகி மருகி தவித்து நிற்கிறார்.
"இல்லைம்மா, எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க வொரி பண்ணாதீங்க" என்று பல்வேறு சமாதானங்களை கூறி தாயை சரி செய்வது போல் தன்னை தானே சரி செய்து கொள்ள முயல்கிறாள் பேதை.
வேண்டும் வேண்டாம் என்பதற்கிடையிலான அவளது முற்று பெறாத போராட்டம் நீண்டு கொண்டிருக்கிறது. என்று தீரும் என்றே புரியவில்லை. தீருமா தீராத என்று கூட தெரியவில்லை. மனது சீரற்று அலை பாய்ந்தது. கடந்த காலத்திற்கு செல்லாதே என்று வலுக்கட்டாயமாக பின்னோக்கி இழுத்து நிலை நிறுத்தும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்கிறது பெண்ணவளின் மனம்.
இவையெல்லாம் ஒரே ஒரு நாளிலான மனதின் போராட்டம். எப்படியோ பல வருடங்களை கடந்தவளுக்கு திருமணம் அதுவும் திரிலோகேஷூடன் என்னும் பொழுது பிரவாகமாக சுழன்று திணற செய்கிறது. மூச்சு முட்டுகிறது, தாலி கட்டுவதற்கு முன்பே இவ்வாறு அலைப்புறும் மனதை எவ்வாறு சமன் செய்திடுவேன். அவனது வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிருக்கும் நிம்மதியையும் துடைத்தெறிய போகிறேனா? என்றெல்லாம் எண்ணங்கள் சுழல்கிறது.
சில சமயம் எதுவுமே வேண்டாம் என்று சத்தமாக கத்தி அழுக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இந்துமதியின் முகத்தில் தற்போதிருக்கும் அந்த புன்னகை அவளை ஒட்டு மொத்தமாக கட்டி போட்டிருக்கிறது. அதனால் தான் ஓரமா அமர்ந்து கொண்டாள் எதிலுமே ஒன்ற இயலாது. டைனிங் டேபிளில் தலை சாய்த்தபடி சிந்தனைகளில் அமிழ்ந்திருந்தாள்.
அழைப்பு மணி ஒலிக்க இந்துமதி தான் கதவை திறந்தார். "வாங்க" என்று வரவேற்க மேகாவுடன் குமார்,செல்வியும் வந்து அமர்ந்தனர்.
மீனு கவனத்தில் எதுவுமே இல்லை. அப்படியே அமர்ந்திருக்க இந்துமதி, "மீனும்மா" என்று குரல் கொடுத்த பின்பே சுதாரித்தவள் லேசாக புன்னகைத்து, "வாங்க" என்றாள்.
அவர்களும் லேசாக தலையசைத்தப்படி திருமணத்தை எந்த கோயிலில் வைக்கலாம் நல்ல நேரம் மற்றும் அதற்குரிய ஏற்பாட்டை குறித்து இந்துமதியிடம் கலந்துரையாடிக் கொண்டிருக்க
மேகா செல்வியிடமிருந்து எழுந்து மீனலோஷினி முன் நிற்க அவளது கன்னத்தை கிள்ளி கொஞ்சியவள் அவளையே பார்க்க, "மீனுக்குட்டி.." என்று ஆரம்பித்தவள், "இல்லை இல்லை அம்மா.." என்று தலையை ஆட்டியபடி திருத்த அவளது பாவனையில் மீனலோஷினி மனதில் ஒரு வித இதம் பரவியது.
மீனலோஷினியின் புன்னகை மேலும் விரிய, "ஆமா, டாடி. இனிமே உங்களை அப்படி தான் கூப்பிட சொல்லி இருக்காங்க. இனிமே நீங்க என்கூடவே இருப்பீங்களாமே. உண்மையாவா?" என இன்னும் நம்ப முடியாது மீண்டும் அதே கேள்வியை அவள் முன் வைக்க, "ஆமாம்" என்று புன்னகை முகமாக தலையாட்டி அவளை அள்ளி மடியில் வைத்துக் கொண்டாள்.
நிறைய நிறைய கேள்வி கேட்டு அவளை மேகா திணறடித்து சிந்தனையில் இருந்து மீட்டுக் கொண்டிருக்க செல்வியும் குமாரும் கிளம்பி விட்டனர் மேகாவை அங்கேயே விட்டு.
நான்கு நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே மீனுவிற்கு புரியவில்லை. ஏதோ மாயநதியில் நீந்திக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு. அன்று காலையில் தன் மீது உறங்கிக் கொண்டிருந்த மேகாவை கீழே படுத்து எழுந்து கொண்டாள் இந்துமதி கதவை தட்டும் சத்தத்தில். ஆம், மேகா மூன்று நாட்களாக அவளுடனே தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
கதவை திறக்க இந்துமதி ஏற்கனவே தயாரகி இருந்தார். முகத்தில் மகிழ்ச்சி பொங்கிட ஒரு பொலிவு. நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரை அவ்வாறு காண்கிறாள். கைலாஷ்நாத் மறைவிற்கு பிறகு என்றுமே அவரது முகத்தில் அதிகப்படியான புன்னகையையோ மகிழ்ச்சியையோ மீனு கண்டதில்லை.
அவருக்கும் நீண்ட நாளைய ஏக்கம் தீர்ந்து விடப் போகிறதே என்ற ஆனந்தம். மகளை திரிலோகேஷ் பார்த்துக் கொள்வான் என்று பெரிய ஆசுவாசம்.
"இப்பவே கிளம்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்மா, மாப்பிள்ளை போன் பண்ணிட்டார். அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவாங்களாம்" என்று அவளை துரிதப்படுத்தி குளியலறை அனுப்பினார்.
சிறிது நேரத்தில் குளித்து புடவை மாற்றி வந்து அமர அழகுநிலைய பெண்கள் அவளை தயார் செய்ய ஆரம்பித்தனர். எல்லாமே விரைவாக நடந்து கொண்டிருந்தது. எதுவுமே அவளது கவனத்தில் பதியவில்லை. நான்கு நாட்களாகவே அவ்வாறே இருக்கிறாள். அவ்வ பொழுது மேகா தான் அவளை தன் உலகத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறாள்.
இந்துமதி அவர்கள் கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுத்தபடி சுழன்று கொண்டிருக்க வீட்டிற்கு ஆட்கள் வந்து விட்டனர். நெருங்கிய வட்டாரத்தில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்திருந்தார். அவ்வளவு பிரமாண்டமாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பியவர்க்கு இந்த எளிமை ஆதங்கமாக தான் இருந்தது. ஆனால் திரிலோகேஷிடம் பேசி தன் விருப்பப்படி நடத்தி இருக்கலாம் தான். ஆனால் மேகா குறித்த கேள்வியோ அல்லது ஏன் இப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொடுக்கிறாய் என்ற பேச்சோ எழுந்து விடக் கூடாது. அது எல்லோருக்கும் கசப்பு தான். ஒரு விஷயம் நடந்த பின்பு மன்னிப்பு கோருவதை விட அதை நடந்து விடாமல் பாதுகாப்பதே புத்திசாலி தனம். அதையே செய்து கொண்டிருக்கிறாள் அந்த தாய். இது நல்லபடியாக நடந்து மகள் மகிழச்சியாக இருந்தால் மட்டுமே போதும் என்பதே அவரின் பிரதான எண்ணமும் மட்டுமன்றி வேண்டுதலும் கூட.
வெகு நேரத்திற்கு பிறகே விழித்த மேகாவிற்கு மீனுவை பார்க்க சற்று குதுகலமாக இருந்தது. "வாவ், அழகா இருக்கீங்க?" என்று ஆச்சரியத்தோடு அவளை பார்த்திருந்தாள்.
அவளுக்கும் உடை மாற்றி இந்துமதி தயார் செய்ய மீனுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மடியில் தான் அமர்ந்திருந்தாள். கீழே இறங்கவே இல்லை. வீட்டில் நிறைய தெரியாத ஆட்கள் நிரம்பி வழிய அவளையே இறுக பற்றி இருந்தது அப்பிஞ்சின் கை விரல்கள். மீனலோஷினியும் அவளை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.
"வாம்மா, கிளம்பலாம்" என்று இந்துமதி அவளை பூஜையறை அழைத்துச் சென்று கடவுளை வணங்க அவருக்கு லேசாக கண்கள் கலங்கி விட்டது.
அவர் காலில் விழுந்து வணங்கியவளை தூக்கியவர் கைகள் நடுங்கியபடி மகளை அணைத்துக் கொண்டது.
"இனி மேலாவது என் பொண்ணு சந்தோஷமா இருக்கனும்" என்று அவரின் மனது இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்க அவளின் மனதும் அதை தான் யாசித்தது தாய்க்காக.
"சரி வாங்க லேட்டாயிடுச்சு" என்று அவரின் அண்ணி அதட்டிய பின்பே சுதாரித்த இந்து, "வாம்மா" என்று மீனலோஷினியை காரில் ஏற்றினார்.
நேரம் நெருங்க நெருங்க மீனுவோ மீள முடியாத தவிப்பில் ஆழந்திருந்தாள். சில நிமிடங்களில் காரை கோயில் முன் நிறுத்திட அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்.
அதன் வாயிலில் கால் எடுத்து வைக்கும் போதே அவளது கால்கள் நடுங்கியது. முயன்று சரி செய்து உள்ளே நுழைய ஏறக்குறைய எல்லா ஏற்பாடும் முடிந்திருந்தது. அவளது விழிகளோ திரிலோகேஷை தேட அவனே அகப்படாது சுற்றிக் கொண்டிருந்தான்.
அவளருகில் வந்த செல்வி, "வாம்மா, நேரமாகிடுச்சு" என்று அவளை சன்னதிக்கு அருகில் அழைத்துச் செல்ல திரிலோகேஷ் தயாராக நின்றிருந்தான். அவனருகில் நிறுத்தி வைக்க இப்பொழுது நிமிர்ந்து பார்க்க மனதில் தைரியமற்று போனது. அவளது ஒரு கையை மேகா இறுக பற்றி இருக்க மற்றொரு கையை அவனது விரல்கள் பற்றிக் கொண்டது.
அந்த நொடி எதுவுமே புரியாது முழித்துக் கொண்டு குழந்தைதனத்தோடு வேடிக்கை பார்த்திருந்த மேகாவும் அவனும் சமமாகவே தோன்றியது அவளுக்கு. ஏதோ பெரிய பொறுப்புக்குள் நுழைவது போன்றதொரு பிரம்மை. தன்னால் சரியாக நடத்தி சென்றிட முடியுமா இவர்களது வாழ்வை என்று மிகப்பெரிய கேள்வி அவள் முன் ஆர்பரிக்க விழிகளோ எல்லாவற்றையும் நீயே பொறுப்பு என்பதாய் தன் முன் இருந்த இறைவன் மீது நிலைத்திருந்தது.
மாலை மாற்ற நொடிப்பொழுதில் இறைவன் பாதத்தில் இருந்த மாங்கல்யத்தை அவளது கழுத்தில் கட்டி விட்டான். இப்பொழுதும் அவனது விழிகளை காண மறுத்து அவளது விழிகள் மூடிக் கொள்ள அவளையும் மீறி கண்ணீர் கசிந்தது.
தலையை சுற்றி குங்குமத்தை அவளது நெற்றி வகிட்டில் வைத்த பின்பே விழிகளை திறந்து அவனை பார்த்தாள். இருவரது விழிகளும் சந்தித்துக் கொள்ள இன்றும் அவளது விழி
கள் அவனிடம், "ஏன் என்னை ஏமாற்றினாய்" என்ற கேள்வியே எழுப்பிக் கொண்டிருந்தது. அதற்காக தான் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான் பதில் கூற வழியறியாது.
(தொடர்ந்து கீழே படிக்க)
இந்துமதிக்கு எந்த வேலையும் வைக்காமல் திரிலோகேஷ், குமார் இருவருமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டனர் அவரின் உடல் நிலையை கருதி. அவர் மீனுவிற்கு தேவையான உடைகள், நகைகள், அலங்காரம் இதையெல்லாம் பார்த்துக் கொண்டார்.
"ப்பா...மீனுக்குட்டி ஏன் ஸ்கூல்க்கு வரலை. அடிக்கடி லீவ் போட்டுட்டே இருக்காங்களே!" என்று திருமணம் குறித்த வந்த மறுநாளே மகள் தந்தையிடம் சந்தேகத்தை வினவ இது தான் சமயம் என்று நினைத்தவன் மகளை மடியில் அமர்த்தி, "மேகாம்மா, இனிமே நீ அவங்களை மீனுக்குட்டினு கூப்பிடக் கூடாது. அம்மானு தான் கூப்பிடணும்" என்று கூற அவளோ கண்களை விரித்து வைத்து தந்தையை பார்த்தாள்.
அவளது பாவனையை கண்டவன், "என்னடா" என்று மகளின் தாடையை ஆதுரமாக பிடித்துக் கொள்ள, "என் ப்ரெண்ட்ஸ் அம்மா எல்லாம் அவங்க கூடவே இருப்பாங்க. அப்ப மீனுக்குட்டி" என்று நாக்கை கடித்தவள், "அம்மாவும் என்கூடவே இருப்பாங்களா?" என்று வினவினாள்.
"ஆமா இனிமே நம்ம வீட்டில தான் இருப்பாங்கடா" என்று கூற குழந்தை முகத்தில் அவ்வளவு உற்காசம்.
"ரியலி" என்றவள் எழுந்து அவனது முகத்தை தன் இரு கைகளாலும் பற்றிக் கொள்ள, "ம்மா..ஆமா" என தலையாட்டினான்.
"ஆனா ஏன் திடீர்னு" என்று அடுத்த அம்பை தந்தையை நோக்கி எறிய, "இனிமே அப்படி தான். இப்ப சொன்னா உனக்கு புரியாது. ஆனா கண்டிப்பா டாடி உன்க்கிட்ட சொல்லுவேன்" என்று மகளை அணைத்துக் கொள்ள, "சரி அப்ப இப்பவே என்னை மம்மிய பார்க்க அழைச்சுட்டு போங்க" என்று நின்றாள் அவள்.
"ச்சு...மேகா, நீ ஸ்கூல்க்கு போ. இன்னும் த்ரி டேஸ்ல அவங்க இங்கயே வந்திடுவாங்க" என்று கூற
"க்கும்.. முடியாது. அழைச்சுட்டு போங்க" என்று பிடிவாதமாக நின்றாள்.
வெளியே சென்ற செல்வியும் குமாரும் வந்து விட எழுந்து சென்ற திரிலோகேஷ் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.
"டாடி ப்ளீஸ்" என்று மகள் இறைஞ்சுதலாக குரல் கொடுக்க, "மேகா" என்று சற்று அதட்டுலாக குரலெழுப்ப முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து கொண்டாள்.
"என்னாச்சு மாப்பிள்ளை" என்ற குமார் பேத்தியை தூக்கி மடியில் வைத்துக் கொள்ள, "இல்லை மாமா, ஸ்கூல்க்கு போகாம மீனுவை பார்க்கணும்னு சொல்றா" என்றான் தயக்கமாக.
"கல்யாணம் வரை மேகாவும் லீவ் எடுக்கட்டும் மாப்பிள்ளை. இப்ப என்ன ஆகிட போகுது. எனக்கு இந்துமதியம்மாகிட்ட கொஞ்சம் கலந்து பேச வேண்டி இருக்கு. நான் கூட்டிட்டு போறேன்" என அவளை அழைத்துக் கொண்டு செல்வியுடன் கிளம்பியும் விட்டார்.
"அம்மா" என்ற வார்த்தையை கேட்டவுடன் மேகாவிற்கு அப்படியொரு ஆனந்தம். நிறைய முறை வேண்டும் என்று ஏங்கி இருக்கிறது மனது. ஆனால் திரிலோகேஷிடம் வெளிபடுத்தியதில்லை. அவன் வேண்டாம், இல்லை, கேட்காதே என்று ஏதாவது கூறினால் அதற்கு பின் எதையும் கேட்டிடவே மாட்டாள். குழந்தை என்பதால் ஏக்கம் மனதிலே நின்று விட்டது. வயது வித்தியாசமின்றி எல்லா ஜீவன்களுக்கு அதிக படியா பிடிக்கும் வார்த்தையும் உருவமும் அம்மா என்பதையன்றி ஏதுமில்லை தான்.
கூப்பிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் யாரை கூப்பிடுவது. ஷாம்லியை காட்டி கூறி இருக்கிறான் தான். ஆனால் போட்டோ முன் நின்று அழைத்திருக்கிறாள். "ம்மா...வாங்க" என்று அந்த கணங்களில் கலங்கிய கண்களோடு மகளை கைகளில் அள்ளி மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறான்.
மீனுவால் எதிலுமே லயிக்க முடியவில்லை. ஒரு பரிதவிப்பு வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி சுழல்கிறது. ஆனால் மனதோ அப்படியே மரத்து போய் வர மறுத்து மருகுகிறது. காரணம் புரியவில்லை. ஏதோ இழந்தது போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
"இந்த சேலைய பார் மீனு, அதை பார் இதை பார்" என்று இந்துமதியோ ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் அவள் முன் நிற்க, "நீங்க பார்த்துக்கோங்கம்மா" என்று ஒற்றை வரியில் முடித்து விட அவரது முகமும் வாடி தான் போகிறது. அவரது சூழலை உணர முடிகிறது தான். ஆனால் தன்னை இயல்பாய் காட்டிக் கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறாள் பெண்ணவள்.
அவளது முகத்தின் இறுக்கத்தைக் கண்டு, "கல்யாணம் பிடிக்கலையா? சொல்லும்மா, ஏன் இப்படி இருக்க?" என்று பெற்றவரும் மருகி மருகி தவித்து நிற்கிறார்.
"இல்லைம்மா, எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க வொரி பண்ணாதீங்க" என்று பல்வேறு சமாதானங்களை கூறி தாயை சரி செய்வது போல் தன்னை தானே சரி செய்து கொள்ள முயல்கிறாள் பேதை.
வேண்டும் வேண்டாம் என்பதற்கிடையிலான அவளது முற்று பெறாத போராட்டம் நீண்டு கொண்டிருக்கிறது. என்று தீரும் என்றே புரியவில்லை. தீருமா தீராத என்று கூட தெரியவில்லை. மனது சீரற்று அலை பாய்ந்தது. கடந்த காலத்திற்கு செல்லாதே என்று வலுக்கட்டாயமாக பின்னோக்கி இழுத்து நிலை நிறுத்தும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்கிறது பெண்ணவளின் மனம்.
இவையெல்லாம் ஒரே ஒரு நாளிலான மனதின் போராட்டம். எப்படியோ பல வருடங்களை கடந்தவளுக்கு திருமணம் அதுவும் திரிலோகேஷூடன் என்னும் பொழுது பிரவாகமாக சுழன்று திணற செய்கிறது. மூச்சு முட்டுகிறது, தாலி கட்டுவதற்கு முன்பே இவ்வாறு அலைப்புறும் மனதை எவ்வாறு சமன் செய்திடுவேன். அவனது வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிருக்கும் நிம்மதியையும் துடைத்தெறிய போகிறேனா? என்றெல்லாம் எண்ணங்கள் சுழல்கிறது.
சில சமயம் எதுவுமே வேண்டாம் என்று சத்தமாக கத்தி அழுக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இந்துமதியின் முகத்தில் தற்போதிருக்கும் அந்த புன்னகை அவளை ஒட்டு மொத்தமாக கட்டி போட்டிருக்கிறது. அதனால் தான் ஓரமா அமர்ந்து கொண்டாள் எதிலுமே ஒன்ற இயலாது. டைனிங் டேபிளில் தலை சாய்த்தபடி சிந்தனைகளில் அமிழ்ந்திருந்தாள்.
அழைப்பு மணி ஒலிக்க இந்துமதி தான் கதவை திறந்தார். "வாங்க" என்று வரவேற்க மேகாவுடன் குமார்,செல்வியும் வந்து அமர்ந்தனர்.
மீனு கவனத்தில் எதுவுமே இல்லை. அப்படியே அமர்ந்திருக்க இந்துமதி, "மீனும்மா" என்று குரல் கொடுத்த பின்பே சுதாரித்தவள் லேசாக புன்னகைத்து, "வாங்க" என்றாள்.
அவர்களும் லேசாக தலையசைத்தப்படி திருமணத்தை எந்த கோயிலில் வைக்கலாம் நல்ல நேரம் மற்றும் அதற்குரிய ஏற்பாட்டை குறித்து இந்துமதியிடம் கலந்துரையாடிக் கொண்டிருக்க
மேகா செல்வியிடமிருந்து எழுந்து மீனலோஷினி முன் நிற்க அவளது கன்னத்தை கிள்ளி கொஞ்சியவள் அவளையே பார்க்க, "மீனுக்குட்டி.." என்று ஆரம்பித்தவள், "இல்லை இல்லை அம்மா.." என்று தலையை ஆட்டியபடி திருத்த அவளது பாவனையில் மீனலோஷினி மனதில் ஒரு வித இதம் பரவியது.
மீனலோஷினியின் புன்னகை மேலும் விரிய, "ஆமா, டாடி. இனிமே உங்களை அப்படி தான் கூப்பிட சொல்லி இருக்காங்க. இனிமே நீங்க என்கூடவே இருப்பீங்களாமே. உண்மையாவா?" என இன்னும் நம்ப முடியாது மீண்டும் அதே கேள்வியை அவள் முன் வைக்க, "ஆமாம்" என்று புன்னகை முகமாக தலையாட்டி அவளை அள்ளி மடியில் வைத்துக் கொண்டாள்.
நிறைய நிறைய கேள்வி கேட்டு அவளை மேகா திணறடித்து சிந்தனையில் இருந்து மீட்டுக் கொண்டிருக்க செல்வியும் குமாரும் கிளம்பி விட்டனர் மேகாவை அங்கேயே விட்டு.
நான்கு நாட்கள் எப்படி நகர்ந்தது என்றே மீனுவிற்கு புரியவில்லை. ஏதோ மாயநதியில் நீந்திக் கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு. அன்று காலையில் தன் மீது உறங்கிக் கொண்டிருந்த மேகாவை கீழே படுத்து எழுந்து கொண்டாள் இந்துமதி கதவை தட்டும் சத்தத்தில். ஆம், மேகா மூன்று நாட்களாக அவளுடனே தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.
கதவை திறக்க இந்துமதி ஏற்கனவே தயாரகி இருந்தார். முகத்தில் மகிழ்ச்சி பொங்கிட ஒரு பொலிவு. நீண்ட வருடங்களுக்கு பிறகு அவரை அவ்வாறு காண்கிறாள். கைலாஷ்நாத் மறைவிற்கு பிறகு என்றுமே அவரது முகத்தில் அதிகப்படியான புன்னகையையோ மகிழ்ச்சியையோ மீனு கண்டதில்லை.
அவருக்கும் நீண்ட நாளைய ஏக்கம் தீர்ந்து விடப் போகிறதே என்ற ஆனந்தம். மகளை திரிலோகேஷ் பார்த்துக் கொள்வான் என்று பெரிய ஆசுவாசம்.
"இப்பவே கிளம்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்மா, மாப்பிள்ளை போன் பண்ணிட்டார். அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவாங்களாம்" என்று அவளை துரிதப்படுத்தி குளியலறை அனுப்பினார்.
சிறிது நேரத்தில் குளித்து புடவை மாற்றி வந்து அமர அழகுநிலைய பெண்கள் அவளை தயார் செய்ய ஆரம்பித்தனர். எல்லாமே விரைவாக நடந்து கொண்டிருந்தது. எதுவுமே அவளது கவனத்தில் பதியவில்லை. நான்கு நாட்களாகவே அவ்வாறே இருக்கிறாள். அவ்வ பொழுது மேகா தான் அவளை தன் உலகத்தில் இழுத்துக் கொண்டிருக்கிறாள்.
இந்துமதி அவர்கள் கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுத்தபடி சுழன்று கொண்டிருக்க வீட்டிற்கு ஆட்கள் வந்து விட்டனர். நெருங்கிய வட்டாரத்தில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்திருந்தார். அவ்வளவு பிரமாண்டமாக மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பியவர்க்கு இந்த எளிமை ஆதங்கமாக தான் இருந்தது. ஆனால் திரிலோகேஷிடம் பேசி தன் விருப்பப்படி நடத்தி இருக்கலாம் தான். ஆனால் மேகா குறித்த கேள்வியோ அல்லது ஏன் இப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொடுக்கிறாய் என்ற பேச்சோ எழுந்து விடக் கூடாது. அது எல்லோருக்கும் கசப்பு தான். ஒரு விஷயம் நடந்த பின்பு மன்னிப்பு கோருவதை விட அதை நடந்து விடாமல் பாதுகாப்பதே புத்திசாலி தனம். அதையே செய்து கொண்டிருக்கிறாள் அந்த தாய். இது நல்லபடியாக நடந்து மகள் மகிழச்சியாக இருந்தால் மட்டுமே போதும் என்பதே அவரின் பிரதான எண்ணமும் மட்டுமன்றி வேண்டுதலும் கூட.
வெகு நேரத்திற்கு பிறகே விழித்த மேகாவிற்கு மீனுவை பார்க்க சற்று குதுகலமாக இருந்தது. "வாவ், அழகா இருக்கீங்க?" என்று ஆச்சரியத்தோடு அவளை பார்த்திருந்தாள்.
அவளுக்கும் உடை மாற்றி இந்துமதி தயார் செய்ய மீனுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு மடியில் தான் அமர்ந்திருந்தாள். கீழே இறங்கவே இல்லை. வீட்டில் நிறைய தெரியாத ஆட்கள் நிரம்பி வழிய அவளையே இறுக பற்றி இருந்தது அப்பிஞ்சின் கை விரல்கள். மீனலோஷினியும் அவளை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.
"வாம்மா, கிளம்பலாம்" என்று இந்துமதி அவளை பூஜையறை அழைத்துச் சென்று கடவுளை வணங்க அவருக்கு லேசாக கண்கள் கலங்கி விட்டது.
அவர் காலில் விழுந்து வணங்கியவளை தூக்கியவர் கைகள் நடுங்கியபடி மகளை அணைத்துக் கொண்டது.
"இனி மேலாவது என் பொண்ணு சந்தோஷமா இருக்கனும்" என்று அவரின் மனது இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருக்க அவளின் மனதும் அதை தான் யாசித்தது தாய்க்காக.
"சரி வாங்க லேட்டாயிடுச்சு" என்று அவரின் அண்ணி அதட்டிய பின்பே சுதாரித்த இந்து, "வாம்மா" என்று மீனலோஷினியை காரில் ஏற்றினார்.
நேரம் நெருங்க நெருங்க மீனுவோ மீள முடியாத தவிப்பில் ஆழந்திருந்தாள். சில நிமிடங்களில் காரை கோயில் முன் நிறுத்திட அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர்.
அதன் வாயிலில் கால் எடுத்து வைக்கும் போதே அவளது கால்கள் நடுங்கியது. முயன்று சரி செய்து உள்ளே நுழைய ஏறக்குறைய எல்லா ஏற்பாடும் முடிந்திருந்தது. அவளது விழிகளோ திரிலோகேஷை தேட அவனே அகப்படாது சுற்றிக் கொண்டிருந்தான்.
அவளருகில் வந்த செல்வி, "வாம்மா, நேரமாகிடுச்சு" என்று அவளை சன்னதிக்கு அருகில் அழைத்துச் செல்ல திரிலோகேஷ் தயாராக நின்றிருந்தான். அவனருகில் நிறுத்தி வைக்க இப்பொழுது நிமிர்ந்து பார்க்க மனதில் தைரியமற்று போனது. அவளது ஒரு கையை மேகா இறுக பற்றி இருக்க மற்றொரு கையை அவனது விரல்கள் பற்றிக் கொண்டது.
அந்த நொடி எதுவுமே புரியாது முழித்துக் கொண்டு குழந்தைதனத்தோடு வேடிக்கை பார்த்திருந்த மேகாவும் அவனும் சமமாகவே தோன்றியது அவளுக்கு. ஏதோ பெரிய பொறுப்புக்குள் நுழைவது போன்றதொரு பிரம்மை. தன்னால் சரியாக நடத்தி சென்றிட முடியுமா இவர்களது வாழ்வை என்று மிகப்பெரிய கேள்வி அவள் முன் ஆர்பரிக்க விழிகளோ எல்லாவற்றையும் நீயே பொறுப்பு என்பதாய் தன் முன் இருந்த இறைவன் மீது நிலைத்திருந்தது.
மாலை மாற்ற நொடிப்பொழுதில் இறைவன் பாதத்தில் இருந்த மாங்கல்யத்தை அவளது கழுத்தில் கட்டி விட்டான். இப்பொழுதும் அவனது விழிகளை காண மறுத்து அவளது விழிகள் மூடிக் கொள்ள அவளையும் மீறி கண்ணீர் கசிந்தது.
தலையை சுற்றி குங்குமத்தை அவளது நெற்றி வகிட்டில் வைத்த பின்பே விழிகளை திறந்து அவனை பார்த்தாள். இருவரது விழிகளும் சந்தித்துக் கொள்ள இன்றும் அவளது விழி
கள் அவனிடம், "ஏன் என்னை ஏமாற்றினாய்" என்ற கேள்வியே எழுப்பிக் கொண்டிருந்தது. அதற்காக தான் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தான் பதில் கூற வழியறியாது.
(தொடர்ந்து கீழே படிக்க)