• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 18

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 18:

அழகான விபத்தில்

இன்று ஹையோ நான்
மாட்டி கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்

வேண்டாம் என்றேன்

ஒரு நொடி பார்த்தீயின் வார்த்தையில் மூவருக்குமே பேச்சே வரவில்லை.

வேறு ஏதோ பிரச்சனையாக இருக்க கூடும் என்று எண்ணினார்கள் இதனை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை.

எதாவது தொழில் பிரச்சனையாக இருந்தால் கணவரை வைத்து சரி செய்து பார்த்தீயை கவிழ்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தார்கள்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட கற்பகம்,

“என்ன என் மகளை கடத்தி நாசம் பண்ணுவானா? எவன் அவன்? எவனுக்கு அவ்ளோ தைரியம் இருக்கு? எந்த நாதாரி அப்படி போசுனது?” என்று எகிற,

“எந்த படுபாவி பயன் அப்படி பேசுனது? அவன் எல்லாம் நல்லா இருப்பானா? தொழில்ல போட்டி போட்டு ஜெயிக்க முடியாத கபோதி என் பேத்தியை பேசுவானா? அதுவும் எவ்ளோ பெரிய வார்த்தை. அவன் வீட்டுல பொம்பளைங்க இல்லையா? அவன் வம்சம் விளங்குமா? நாசமா தான் போவான்” என்று கோதை பொறுமினார்.

ப்ரத்யூ, “எந்த பரதேசி பேசுனது அத்தான். ஆள் யாருன்னு தெரிஞ்சதா? நம்பர் வச்சு ட்ரெஸ் பண்ணலாம்ல. எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கடத்துவேன்னு சொல்லுவான். யாருன்னு கண்டுபிடிச்சு அவனை போட்டு வெளுக்கணும்.‌ என் ப்ரெண்டோட அப்பா போலிஸா தான் இருக்காரு. அவர்கிட்ட சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லணும்” என்று தன் பங்கிற்கு கோபப்பட்டாள்.


“எங்க அவரு.‌ நேத்து கூட என்கிட்ட எதுவும் சொல்லலை.‌ பெத்த புள்ளய ஒருத்தன் இப்படி பேசி இருக்கான். அமைதியா இருக்காரே இவர்லாம் என்ன அப்பா. நானா இருந்தா இந்நேரம் அவன் சங்கை உடைச்சி இருப்பேன்” என்று கற்பகம் கணவனை திட்ட,

“மாப்ளை வரட்டும் நானே அவர்கிட்ட சத்தம் போட்றேன்” என்று கோதை மொழிய,

மூவரும் ஆவேசத்தில் இல்லாத ஒருவனை கிழித்து தொங்கவிட்டு கொண்டிருந்தனர்.

ப்ரத்யூ, “அத்தான் அந்த நம்பர் இருக்கா?” என்று வினவ,

“இல்லை நம்பர் வரலை. ப்ரைவேட் நம்பர்னு தான் வந்துச்சு” என்று பார்த்தீபன் மொழிய,

“டெக்னாலஜி எவ்ளோ முன்னேறி இருக்கு. கண்டிப்பா அவனை கண்டுபிடிச்சு செருப்பால அடிக்கிறேன்” என்று ப்ரத்யூ மொழிந்ததும்,

“ஆமா உன் வீட்டு பொம்ளைங்ககிட்ட என் வீட்டு ஆம்பளைய விட்டு இதை கேட்க விடவான்னு கிழிக்கணும்” என்று கற்பகம் கோபம் குறையாது கூற,

கோதை, “டேய் மாப்ள தான் அமைதியா இருந்தாருன்னா நீயுமா அமைதியா இருக்க? இதை கேட்டு உன் ரத்தம் கொதிக்க வேணாமா?” என்று பேரனை திட்ட,

“அமைதியா தான் இருந்தேன்” என்று அமரிக்கையான பதிலில் மூவரும் திரும்பி பார்க்க,

“நேத்து நீங்க கனியை பேசுனப்போ அமைதியா தான் இருந்தேன்” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூற,

மூவரது முகத்திலும் அதிர்ச்சி இடியாய் இறங்கியது.

சடுதியில் சமாளித்து கொண்ட ப்ரத்யூ,

“என்ன? என்னத்தான் சொல்றீங்க?” என்று ஒன்றும் அறியாதவள் போல கேட்க,

“நேத்து பேசுனதை அதுக்குள்ள மறந்துட்டியா ப்ரத்யூ? உன்னை சின்ன பொண்ணு உலகம் அறியாத குழந்தைன்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் நீ பேசவே கூசுற வார்த்தையை எவ்ளோ அசால்டா சொல்ற?” என்று உறுத்து விழித்தான்.

“நா… நான் என்ன பேசுனேன் அத்தான்? நீங்க பேசுறது எதுவும் எனக்கு புரியலை?” என்று மீண்டும் அப்பாவி பாவனையை கொடுக்க,

“எனக்கு எல்லாம் தெரியும். நேத்து நீ கனியை திட்டுனது எல்லாமே…” என்க,

“என்னது நான் கனியை திட்டுனேனா?” என்று அதிர்ந்த பாவனையை கொடுக்க,

“மருமகனே அவ பொய் சொல்லி இருக்கா. ப்ரத்யூக்கு கோபம் வரும் தான் ஆனா அதுக்காக இப்படி எல்லாம் பேச மாட்டா. இதெல்லாம் எவ்ளோ பெரிய வார்த்தை” இந்த கற்பகம் வர,

“ஆமா பார்த்தீ. நீ அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுல நேத்து எங்ககிட்ட தான் வந்து வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தா” என்று கோதையும் கூறினார்.

“என்னை பார்த்தா அந்த மாதிரி பேசுற பொண்ணா தெரியுதா அத்தான் உங்களுக்கு. உங்க ப்ரத்யூ அப்படிலாம் பண்ணுவாளா? எனக்கு அவளை பிடிக்காது தான் வெறுக்குறேன் தான் ஆனால் அதுக்காக நாசம் பண்ணிடுவேன்னுலாம் பேசுவேனா? நானும் ஒரு பொண்ணு தான?” என்று கண்ணீருடன் வினவ,

“நான் கூட உனக்கு சாதாரண கோபம்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் நேத்து நீ பேசுனதை கேட்ட பின்னாடி தான் உன்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். அதுவும் சின்ன வயசுல இருந்தே உனக்கு அவ மேல வஞ்சன்ஸ் இருந்து இருக்கு. அந்த வயசுலே நீ அவ மேலை பொய்யா பழி சுமத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்பி இருக்க” என்று கோபமாக வினவ,

“இல்லை அவ சொன்னதெல்லாம் பொய். அவளுக்கு என்னையும் உங்களையும் பிரிக்கணும்னு எண்ணம். அதான் இல்லாதது பொல்லாதது எல்லாம் உங்கிட்ட சொல்லி வச்சிருக்கா”என்று அழுத்தி கூற,

“ஆமா மருமகனே அவளுக்கு பணத்தாசை அதிகம். உன்னை கல்யாணம் பண்ணா சொகுசா வாழலாம்னு எண்ணம் அதான் இப்படி பேசி குடும்பத்துல குழப்பம் உண்டு பண்ண பாக்குறா. அந்த குடும்பத்தை கெடுக்குறவ சொன்னதை நம்பாத மருமகனே” என்று கற்பகம் கூறினார்.

“என் பேத்தி மத்தவங்க நல்லா இருக்க கூடாதுனு எப்பவுமே நினைக்க மாட்டா‌. உனக்கு அவளை பத்தி தெரியாதா பார்த்தீ சின்ன வயசுல இருந்தே பார்த்திட்டு வர” என்று கோதை சொல்ல,

“சின்ன வயசுல இருந்தே இவ நடிச்சிட்டு தான் இருந்திருக்கா. நான் தான் முட்டாள் மாதிரி நம்பி கனியை தப்பா நினைச்சிட்டு இருந்திருக்கேன். தேவையில்லாம அவளை கஷ்டப்படுத்தியும் இருக்கேன்”

“அத்தான் நீங்க என்னை நம்ப மாட்டீங்களா?” என்று வினவியவள்,

“என் அத்தானே என்னை சந்தேகப்பட்ட பின்னாடி எனக்கு எதுக்கு இந்த உயிர்” என்று அங்கிருந்து நகர எத்தனிக்க,

சடுதியில் அவளது கையை பிடித்து நிறுத்தியவன் தனது அலைபேசியை எடுத்து நேத்து கனி அழைத்தபோது பதிவு செய்திருந்ததை ஒலிக்கவிட்டான்.

நேற்று இரவு குரலில் அவ்வளவு வன்மத்தை தேக்கி வைத்து பேசியவை ஒலிக்க,

மூவரது முகத்திலும் ஈயாடவில்லை.

முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆங்காரமாய் மூன்று குரல்கள் ஒலித்தது‌.

அவள் இவ்வாறு பதிவு செய்து இருப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

இப்போது எப்படி சமாளிப்பது என்று தான் மூவரது மனதிலும் ஓடியது.

ப்ரத்யூ, “ அத்தான் இதெல்லாம் பொய். அவ எங்க குரல்ல யாரையோ மாடிஃபை பண்ணி பேச வச்சு உங்களை ஏமாத்தி இருக்கா” என்றதும்,

“ஷட்டப் ப்ரத்யூ. இன்னும் எவ்ளோ பொய் சொல்ல போற. நீங்க நேத்து பேச ஸ்டார்ட் பண்ணதுமே அவ எனக்கு கால் பண்ணிட்டா. நான் தான் கால் ரெக்கார்ட் பண்ணேன்” என்று சீறியதும் மூவரிடத்திலும் பதில் இல்லை‌.

“பாட்டி நீங்க வயசுல பெரியவங்க. நல்லது கெட்டது தெரிஞ்சவங்கன்னு உங்க மேல எவ்ளோ மரியாதை வச்சு இருந்தேன். ஆனால் அதெல்லாம் இப்படி ஒன்னுமே இல்லைன்னு ஆக்கிட்டிங்களே” என்று வருந்தியவன் கற்பகத்திடம்,

“சின்ன வயசுல இருந்து அவ்ளோ பாசத்தை காட்டி வளர்த்திங்களே அத்தை அதெல்லாம் பொய்யா. ப்ரத்யூ மாதிரி கனியும் உங்க பொண்ணு தான. அவ மேல ஏன் உங்களுக்கு இப்படி ஒரு வன்மம்? இத்தனை நாள் உங்க கண்காணாத தூரத்துல தான இருந்தா. அப்போ கூட உங்க கோபம் குறையலயா?” என்றான்.

அவர் எந்த பதிலும் கூறவில்லை. அடுத்ததாக ப்ரத்யூவிடம் வந்தவன்,

“உங்க மூனு பேர்ல நான் அதிகமா ஏமாந்தது உன்கிட்ட தான். சின்ன வயசுல இருந்து நீ அப்பாவியா நடிக்கிறத பார்த்து நிஜமாவே நீ ஒன்னும் தெரியாத குழந்தை தான்னு நம்பிட்டு ஒவ்வொன்னையும் உனக்கு பாத்து பாத்து செஞ்சேன். ஏன் நீ கனி மேல போட்ட பழியை உண்மைன்னு நம்பி உங்க கூட சேர்ந்து கனியை திட்டி நானும் அவ இந்த வீட்டைவிட்டு போக உடந்தையா இருந்திருக்கேன்”

“...”

“அவ என்ன பெரிய கெடுதல் பண்ணிட்டா உனக்கு. தங்கச்சி தம்பின்னு உன் மேலயும் பிரவீன் மேலயும் எவ்ளோ அன்பா இருப்பா. நீ கேட்டு எதாவது அவ கொடுக்காம இருந்திருக்காளா? அவ மேல் பழி போட்டு வீட்டைவிட்டு அனுப்ப உனக்கு எப்படி மனசு வந்திச்சு. நீ இப்படி இருப்பேன்னு நான் கனவுல கூட நம்யிருக்க மாட்டேன். ஏன் கனியே வந்து நீ பேசுனதை சொல்லியிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நேத்து நீ பேசுனதை கேட்டதும் எனக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சு”

“...”

“என்னோட மாமா பொண்ணு நான் பாக்க வளர்ந்த பொண்ணு அத்தான் அத்தான்னு என் காலையே சுத்தி வர பொண்ணா இப்படி பேசுறா. அதுவும் அவளை பேசவிட்டு பெரியவங்க வேடிக்கை பார்த்திட்டு இருக்காங்களான்னு?”

“...”

“வார்த்தைக்கு வார்த்தை அநாதை பிச்சைக்காரி பேராசைக்காரின்னு சொல்றீங்களே அவளை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? கோடி ரூபாய கொட்டி கொடுத்தாலும் என் கனியோட மனசு வருமா உனக்கு”என்று பேசுகையிலே,

“நிறுத்து பார்த்தீ” என்று கோதை இடை நுழைந்திருந்தார்.

“அவ ஒரு ஆளுன்னு அவளை என் பேத்தியோட கம்பேர் பண்ணி பேசுவியா?”

“அவளோட கம்பேர் பண்ற அளவுக்கு உங்க பேத்தி ஒர்த் இல்லை” என்று சூடாக பதில் அளித்தான்.

“இதுக்கு தான் இதுக்கு தான் அவளை எனக்கு பிடிக்காம போச்சு. அவ அப்படி என்ன பண்ணிட்டான்னு அவளை புகழ்ந்து தள்றீங்க. இந்த வீட்டு வாரிசு நான் தான். நான் இங்க இளவரசி. அப்பா அம்மா யாருன்னே தெரியாத அவளுக்கு எதுக்கு இவ்ளோ பாசம் நல்ல பேர். உங்ககிட்ட எனக்கு தான் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. நான் மட்டும் தான் உங்க வாழ்க்கையில இருக்கணும். நான் மட்டும் தான் உங்களை அத்தான்னு கூப்பிடணும்”

“...”

“அவளுக்கு என்ன உரிமை இருக்கு‌ உங்ககிட்ட உறவாட. அவளோட நீங்க சிரிச்சு பேசுறதை பாத்தா அப்படியே பத்திக்கிட்டு வரும். என் கண்ணு முன்னாடியே உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றா அவ. அதான் அவ மேல பழி போட்டு துரத்துனேன். எங்கயுமே நான் தான் முதல்ல இருக்கணும் உங்களுக்கு” என்று ப்ரத்யூ ஆங்காரமாக கத்த,

பார்த்தீபனே சற்று அதிர்ந்து பார்த்தான்.

அத்தனைக்கும் மூல காரணமாக தான் தானா? என்று ஏகமாய் அதிர்வு தாக்கியது.

“இப்ப கூட வந்து கொஞ்ச நாள்லயே உங்களை மயக்கிட்டா. அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவ பின்னாடியே சுத்துறீங்க. இத்தனை நாளா உங்களையே நினைச்சிட்டு இருக்க நான் கண்ணுக்கு தெரியலையா? அப்படி என்னதான் அவக்கிட்ட இருக்கு? என்கிட்ட இருக்க அழகுக்கு கால் தூசிக்கு வருவாளா? இல்லை பணம் தான் இருக்கா? இன்னைக்கு துரத்திவிட்டா கூட போக போக்கிடமில்லை. அவ பின்னாடி ஏன் போறீங்க”

“...”

“எனக்கு நீங்க வேணும். நீங்க என்னை தான் கல்யாணம் பண்ணிக்கணும். அவளை மட்டும் கல்யாணம் பண்ண நினைச்சிங்க நான் அவளை சும்மா விட மாட்டேன். உங்களால அவ கூட என்னைக்குமே சந்தோஷமா” என்று பேசுகையிலே,

“ப்ரத்யூ…” என்ற கர்ஜனை குரல் அவளை தடுத்து நிறுத்தி இருந்தது.

“இன்னொரு வார்த்தை பேசுனா நான் மனுசனா இருக்க மாட்டேன். திஸ் இஸ் யுவர் லிமிட்” என்று விழிகளால் எரித்தான்.

அவனது ரௌத்திரத்தில் ப்ரத்யூவிற்கு சடுதியில் அச்சம் தோன்றியது.

இருந்தும் அதனை சமாளித்தவள்,

“நான் பேசுவேன். நீங்க அவளை கல்யாணம் பண்ண கூடாது. எனக்கு தான் நீங்க. மீறி அவளை கல்யாணம் பண்ணா நான் சொன்னதை செஞ்சிடுவேன்” என்று தானும் கத்தினாள்.

“இவ்ளோ நேரம் மாமா பொண்ணுன்னு கொஞ்சம் பாசம் மீதி இருந்துச்சு. இப்போ நீ பேசுன பேச்சுல அது காணாம போய்டுச்சு.இப்போ சொல்றேன் கேட்டுக்கோ” என்றவன் மற்றவர்களிடம் திரும்பி,

“உங்களுக்கும் தான். கனி என்னோட பொண்டாட்டி. இனிமே அவளை பேசுறது திட்டுறது. முக்கியமா மிரட்டறது இது மாதிரி எதுவும் வச்சிக்க கூடாது. மீறி எதாவது செஞ்சிங்கன்னா என்னோட இன்னொரு முகத்தை பாக்க வேண்டியது வரும்” என்று பொறுமையை இழுத்து பிடித்து அழுத்தம் திருத்தமாக மொழிந்தான்.

குரலில் இருந்த அழுத்தமே அவனது கோபத்தை பறைசாற்ற மற்றவர்களிடத்தில் பதில் இல்லை.

பார்த்தீபனை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் அவனது கோபத்தின் அளவை.

இருந்தும் ப்ரத்யூவிற்கு கோபம் குறையவில்லை.

“அவளை உங்க பொண்டாட்டின்னு சொல்லாதீங்க. கேட்கவே அசிங்கமா இருக்கு. நான் தான் உங்க பொண்டாட்டி. அதை யாராலும் மாத்த முடியாது” என்று மீண்டும் அதையே கூற,

“உங்க பொண்ணை ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட் கிட்ட அழைச்சிட்டு போங்க” என்று கற்பகத்திடம் பார்த்தீ மொழிய,

“என்ன? என் பொண்ணை பைத்தியம்னு சொல்றீயா நீ?” என்று கற்பகம் எகிறினார்.

“அழைச்சிட்டு போகலைன்னா இன்னும் கொஞ்ச நாள்ல அவ பைத்தியம் ஆகிடுவா”

“பைத்தியம் ஆனாலும் எனக்கு நீ தான் வேணும்” என்று வெறிப்பிடித்தவளை போல கத்தினாள்.

“சொன்னேன்ல பாத்தீங்களா? இப்படியே போனா கண்டிப்பா பைத்தியம் ஆகிடுவா” என்றவன்,

“இனி நீங்க மூனு பேரும் என் பொண்டாட்டி இருக்க திசை பக்கம் கூட தலை வச்சு படுக்க கூடாது. மீறினா நீங்க பேசுன ஆடியோவ கமிஷ்னரா இருக்க என் ப்ரெண்ட்கிட்ட கொடுத்து உங்களை வருஷம் புல்லா கம்பி எண்ண விட்ருவேன். ஜாக்கிரதை” என்று எச்சரித்துவிட்டு நகர,

“நான் செத்தாவது இந்த கல்யாணத்தை நிறுத்துவேன்” என்று குரல் அதிக ஆங்காரமாக ப்ரத்யூவிடமிருந்து வர,

ஒரு நிமிடம் நின்று அவளது முகம் கண்டவன்

“பெஸ்ட் ஆஃப் லக்” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறி இருந்தான்.

அதன் பிறகு பார்த்தீபன் மிகவும் கவனமாக இவர்களை பின் தொடர்ந்தான்.

திருமணத்தை நிறுத்த இவர்கள் செய்த அத்தனையும் முறியடித்து திருமணத்தை முடித்து இருந்தான்.

“ம்மா அந்த அநாதை நாய் நல்லா வாழ கூடாது மா” என்று ப்ரத்யூ வன்மத்துடன் கூற,

“ஆமா அவளை துரத்திவிட்டே ஆகணும்” என்ற கற்பகம்,

“ம்மா நாளையில இருந்து நீ அண்ணன் வீட்ல தான் இருக்க. நீ பண்ற டார்ச்சர்ல அவ யாருக்கும் தெரியாமல் ஓடி போயிடணும்” என்றார் கோதையிடம்.

“சொல்லிட்டேல்ல அந்த பிச்சைக்காரிய என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க. துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட விட்றேன்” என்று சூளுரைத்தார்.

இங்கு நிவி வேண்டா வெறுப்பாக ஆரத்தி எடுத்து முடிய பார்த்தீ மனைவியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

உள்ளே சென்று விளக்கை ஏற்றி கடவுளை வணங்கி மற்ற சடங்குகளை முடித்தனர்.

பிறகு இருவரும் ஹாலிலே அமர வைக்கப்பட்டனர்.

சொந்த பந்தங்கள் சிலர் வீடு தேடி வந்து விசாரித்துவிட்டு செல்ல கனியும் முகத்தை சற்று சிரித்தார் போல வைத்து கொண்டாள். இல்லையெனில் அதற்கொரு கேள்வி எழுமே.

நேரம் செல்ல செல்ல கனிக்கு சற்று அசதியாக இருந்தது. காலையில் விரைவாக எழுந்தது பசிக்க வேறு செய்தது‌.

யாரிடம் கேட்க முடியும் என்று அமைதியாக இருந்து கொண்டாள். அவளது முகத்தை கண்ட பார்த்தீ, “ம்மா” என்று தாயை அழைத்தான்.

“என்னப்பா” என்று கஸ்தூரி வர,

“இவளை ரூம்க்கு அழைச்சிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வைங்க” என்றான்.

அவன் கூறியவற்றை கேட்டாலும் கனி கேட்காத பாவனையில் அமர,

“ஆளுங்க வந்துட்டே இருப்பாங்கடா. பொண்ணு இல்லைன்னா எங்கன்னு கேட்பாங்க” என்று கஸ்தூரி கூற,

“யார் கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன். இவளுக்கு டையர்டா இருக்கும்மா” என்றான்.

“சரி” என்றவர்,

“வா கனி” என்று அவளது கையை பிடித்து அறைக்கு அழைத்து சென்றவர் போகும் வழியிலே பணி புரிபவரிடம் பழச்சாறு எடுத்து வர பணித்தார்.

மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றவர்,

“இந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லிருக்கேன். குடிச்சிட்டு தூங்கி எழு. சேரி கம்பர்டபுளா இல்லைன்னா மாத்திக்கோ” என்று மொழிய,

“சரிங்க” என்று தலை அசைத்தாள்.

“சரிங்க அத்தைன்னு சொல்லு. அதுக்குள்ள அத்தைய மறந்துட்டியா? அத்தை அத்தைன்னு என் சேலைய பிடிச்சே சுத்துவியே” என்று சிரிப்புடன் கேட்க,

இவளுக்கும் அந்த நாள் நினைவில் புன்னகை எழுந்தது.

“சரிங்கத்தை” என்று தலை அசைத்தாள்.

இதற்குள் பழச்சாறு வர,

“இந்தாம்மா குடி. உனக்கு சாத்துக்குடி ஜூஸ் பிடிக்கும் தான?” என்று வினவ,

இன்னும் நினைவில் வைத்திருக்கிறாரா? என்று வியந்தவள்,

‘ஆம்’ எனும் தலையை அசைத்தாள்.

அவள் குடித்து முடித்ததும் குவளையை பெற்று கொண்டு தான் அங்கிருந்து நகர்ந்தார் கஸ்தூரி.

இவரது வெள்ளை மனதை பற்றி அறிந்திருந்தவளுக்கு புன்னகை பெரிதாய் விரிந்தது.

இந்த குடும்பத்தில் இப்படியும் ஒருவரா? என்று எண்ணியவாரே உறங்கி போனாள்.

கஸ்தூரிக்கு திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லை என்றாலும் மகனுக்காக இவளை ஏற்று கொண்டார்.

பிறகு அதோ இதோவென மாலை நேரமும் வந்துவிட கஸ்தூரியே உறவு பெண்களுடன் சேர்ந்து கனியை அலங்கரித்தார்.

பெரியவர்கள் வழக்கம் போல அறிவுரைகளை கூறி பார்த்தீபனது அறை வாயிலில் விட்டு சென்றனர்.

கனியின் மனது முகமும் நிர்மலாக இருந்தது.

அறைக்குள் நுழைந்து கதவை சாற்ற பால்கனியில் இருந்து வந்த பார்த்தீபன்,

“வெல்கம் டூ அவர் ரூம் கனி” என்று புன்னகையுடன் வரவேற்க,

அவளிடத்தில் பெரியதான மௌனம்.

அவளது மனநிலையை உணர்ந்தவன்,

“கனி” என்று துவங்குகையிலே,

“ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று அவன் முகம் கண்டாள் கனி.

“என்ன?” என்று பார்த்தீ திகைக்க,

“ஸ்டார்ட் பண்ணலாமான்னு கேட்டேன்” என்று மீண்டும் அழுத்தி கூறினாள்.

“என்ன ஸ்டார்ட் பண்ணனும்?” என்று உண்மையில் புரியாதவனாக கேட்க,

“இங்க அலங்காரம் எல்லாம் எதுக்கு அதுக்கு தான? அதான் ஸ்டார்ட் பண்ணலாமான்னு கேட்டேன்.‌ என்னை இத்தனை நாள் வளர்த்து பாசமா பாத்துக்கிட்ட நன்றி கடனுக்காக அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு உங்களை கல்யாணம் பண்ணி இருக்கேன். எப்படியும் நான் சந்தோஷமா இருக்கேனான்னு கேள்வி வரும். குழந்தை வந்தால்தான் நம்புவாங்க. அதான் ஸ்டார்ட் பண்ணலாமான்னு கேட்டேன். எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ப்ராசசஸ் தான நீங்களும் அந்த மைன்ட்செட்ல தான இருப்பீங்க. என்னோட கடமையை நான் கரெக்டா செய்றேன் வாங்க” என்று புடவையில் கையை வைக்க போக,

சடுதியில், “கனி” என்று ஏக குரலில் அதட்டியவன் அவளை இறுக அணைத்து கொண்டான்.

அவனது அணைப்பில் அவளது உடல் ஒரு கணம் இறுகி பின் தளர்ந்தது.

அவளது குரலில் இருந்த வேதனையை உணர்ந்தவன்,

“சாரி டி” என்று வார்த்தையை உதிக்க,

சட்டென்று அவளது உடல் விறைத்தது.

அதில் தானாக விலகி அவள் முகம் காண,

“நீங்க என்ன தப்பு பண்ணீங்க சாரி கேட்க?” என்று புரியாதவளாக வினவிட,

இவ்விடத்தில் நிச்சயமாக பதில் இல்லை. வார்த்தையாளே தன்னை தூரமாக்கிவிட்டாள் என்று புரிந்தது. ஒரு சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது‌

மேலும் பேசி இந்த நாளை மோசமாக்க விரும்பாதவன்,

“போய் படு. எனக்கு தூக்கம் வருது” என்று தானும் படுக்க செல்ல,

“நிஜமா வேண்டாமா?” என்று எதுவுமே இல்லாத பாவனையில் கேட்க, இவனு
க்கு தன் மீதே கோபம் பெருகியது.

“ப்ச் போய் படுடி” என்றவன் விளக்கணைத்து படுத்துவிட கனியும் அமைதியாக அந்த பெரிய மெத்தையில் படுத்து கொண்டாள். இருவரது நினைவுகளும் பின்னோக்கி சென்றது.

பார்த்தீக்கு தன்னுடைய ஐந்து வயதில் கொழு கொழு பொம்மையாக தன் முன் வந்து நின்ற கனியின் முகம் நிழலாடியது…




 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Mozhi oda kobam kuraiyira varaikkum aval oda love ah ava express panna mata pola parpom parthi epudi aval ah avan oda love ah la ava kobatha koraikiran nu
 
Top