ஜென்மம் 16:
வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை
யாரும் என்னை
மட்டும் வாழ சொல்லாதே…
சூரியன் முழுதாய் மறைந்து இருள் சூழ்ந்திருந்த வானை வெறித்தவாறு நின்றிருந்தான்.
உடலை தழுவி சென்ற குளிர்காற்று அவனை பாதிக்கவில்லை ஏதோ சிந்தனையில் நின்றிருந்தவனது ஒரு கையில் தேநீர் கோப்பை.
முகத்தில் இருந்த புருவ சுழிப்பு அவனது தீவிர சிந்தனையை உறுதி செய்ய அருகில் மேஜையின் மேல் இருந்த அலைபேசியின் கானா இசைத்து அவனது சிந்தனையை தடை செய்தது.
எடுத்து பார்க்க சண்டைக்காரி என்ற பெயருடன் ப்ரத்யூவின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் மிளிர்ந்தது. அருகில் பார்த்தீபனும் நின்றிருந்தான்.
புகைப்படத்தை ஒரு கணம் பார்த்தவன் அழைப்பு உயிர்விடும் இறுதி நொடியில் ஏற்று காதில் பொருந்தி இருந்தான்.
கண்டிப்பாக கோபத்தில் கத்த போகிறாள் என்று எண்ணி இருந்தவன் அமைதியாக இருக்க,
அங்கே கோபமான குரல்கள் பல கேட்டது அதில் ஒன்று கூட கனியினது இல்லை.
சடுதியில் அவனது செவிகள் கூர்மையானது.
“ஏய் பிச்சைக்காரி உன்னை வீட்டுக்குள்ள சேர்த்தன்னைக்கே நான் தலை பாடா அடிச்சிக்கிட்டேன். இந்த மாதிரி நீ எதாவது பண்ணிடுவன்னு தான்”
“...”
“உன் மூஞ்சிய கண்ணாடில பாத்து இருக்கியா உவேக். ஒரு டைம் கூட பாக்க முடியாது. கருப்பா குண்டா கேவலமா இருக்க. உனக்குலாம் அந்த வேலைக்காரன் குகனே அதிகம். இதுல உனக்கு என்னோட அத்தான் கேக்குதா?”
“...”
“உனக்கு என் வீட்டுல நுழைய கூட தகுதி இல்லை. உன்னையெல்லாம் நீ வந்தன்னைக்கே தெருவுல துரத்தி விட்ருக்கணும். தப்பு பண்ணிட்டேன்” என்று ப்ரத்யூ கத்த,
“ஆமா இந்த ஆநாதை கழுதைக்கு என் பேரன் கேக்குதா? அவன் இருக்க இருப்பென்ன நீ இருக்கதென்ன. நீயெல்லாம் என் வீட்ல சமையல்காரியா வர கூட தகுதி இல்லாதவ. எல்லாம் இவ வீட்டுக்கரரை சொல்லணும். நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் அது புத்திய காட்டதா செய்யும். சை உன்னை பாக்கவே வெறுப்பா இருக்கு” என்று கோதை வெறுப்பை உமிழ,
“இந்த சனியன் என்னைக்கு என் வீட்டுக்கு வந்துச்சோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. அப்போவே சொன்னேன். ஊர் பேர் தெரியாதததுங்களை எல்லாம் தத்தெடுக்க வேணாம்னு. என்னை கட்டுன அந்த மனுஷன் கேக்கணுமே. இப்போ இது நான் பெத்த புள்ளை வாழ்க்கையை கெடுக்க பாக்குது”
“...”
“கொஞ்சமாச்சும் சோறு போட்ட வீட்டுக்கு நன்றி இருந்தா இப்படி பண்ணி இருப்பியா? நாய் கூட நன்றியோட இருக்குது. ஆனால் நீ சீ உனக்கு சோறு போட்டு வளர்த்ததுக்கு நாலு நாய்க்கு போட்டு இருக்கலாம்” என்று கற்பகம் காறி உமிழ்ந்தார்.
“நீ இப்படி தளுக்கி மினுக்கி சேலையை கட்டிக்கிட்டு திரியும் போதே தெரியும் இப்படி தான் எதையாவது பண்ணுவேன்னு. எதை காட்டி மயக்குன என் பேரனை. இதுக்கு வேற வேலை பாக்கலாம் நீ. உடம்பை வித்து பொழைக்கிறவ கூட நாணயமா இருப்பா” என்ற கோதையின் வார்த்தையை பொறுக்க மாட்டாதவள்,
“போதும் நிறுத்துங்க. இனி ஒரு வார்த்தை பேசுனிங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்று விழிகளில் கனலை கக்க,
“ஏய் நீயெல்லாம் ஒரு ஆளுன்னு என் பாட்டியை எதிர்த்து பேசுறீயா? அவங்க கேட்டதுல என்ன தப்பு இருக்கு. நீ என்னத்தை காட்டி என் அத்தானை மயக்குன. நேத்துவரைக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இருந்தவரு. இன்னைக்கு உன்னை தான் கட்டிக்குவேன்னு சொல்றாரு. அப்போ நீ எதையோ காட்டி மயக்கிட்டேன்னு தான அர்த்தம்”
“...”
“உனக்கு தேவை பணம் தான? எவ்ளோ வேணும்னு கேளு பிச்சை போட்ற மாதிரி தூக்கி போட்றேன் பொறுக்கிட்டு ஓடி போய்டு. எங்க கண்ணு முன்னாடி வராத” என்று ப்ரத்யூ அளவிற்கு மீறி பேச பேச,
கனிக்கு கோபம் உச்சிக்கு ஏறி கொண்டிருந்தது. இருந்தும் தன்னை வெகுவாக கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தாள்.
“சின்ன வயசுல உன் மேல பழி போட்டு துரத்துன அப்பவே நீ என் லைஃப்ல இருந்து ஒழிஞ்சு போய்ட்டேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். நீ காலை சுத்துன பாம்புனு திரும்பி வந்த பின்னாடி தான் புரிஞ்சது. அப்பவே வேற எதாவது பெரிய பழியை போட்டு உன்னை ஜெயில்ல தள்ளியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்”
“...”
“உனக்கு ஒரு லாஸ்ட் வார்னிங் தர்றேன். நாளைக்கு காலையில உன் மூட்டையை தூக்கிட்டு ஓடி போய்ட்ற. இல்லைன்னா காசை கொடுத்து உன்னை கொலை பண்ண ஆளை ஏற்பாடு செஞ்சிடுவேன். சும்மா கொலை பண்ண மாட்டாங்க. நாசம் பண்ணி தூக்கி போட்ருவாங்க” என்று எச்சரித்தவள்,
“வாங்க போகலாம்” என்று தாயையும் பாட்டியையும் அழைத்து சென்றாள்.
அவர்கள் பேசிய பேச்சை கேட்டு கனி தன்னை கட்டுபடுத்த போராட இங்கு பார்த்தீபனோ ஏகமாய் அதிர்ந்து நின்றிருந்தான்.
அவனால் தன் காதுகளால் கேட்ட செய்தியை துளியும் நம்ப முடியவில்லை.
வார்த்தைகளில் எவ்வளவு கோபம் வெறுப்பு குரோதம். ஏன் இப்படி.
இவள் அப்படி என்ன செய்துவிட்டாள் அவர்களை. பத்து வருடங்களுகாக இந்த ஊரிலே இவள் இல்லையே பிறகு ஏன்.
அதுவும் வயதில் பெரியவர் எதையும் சரியாக தான் செய்வார் என்று நம்பி கொண்டிருந்த தனது பாட்டி இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவாரா?
தான் முன்பு எப்படி அமைதியாக நடந்து கொள்வார். அதுவும் அவர் கூறிய வார்த்தைகளை தன்னாலே தாங்கி கொள்ள இயலவில்லையே எப்படி எப்படி தன்னவள் தாங்கி கொண்டாள்.
கோபத்தில் பார்த்தீபனுக்கு விழிகள் சிவந்தது.
அதுவும் அவர்கேட்ட ‘எதை காண்பித்து என் பேரனை மயக்கினாய்?’ என்ற வார்த்தையில் அவனது மொத்த பொறுமையும் பறந்து போய் இருந்தது.
கற்பகம் அத்தை சிறு வயதில் இருந்தே பார்த்தீ பார்த்தீ என்று அன்பை பொழிவாரே அத்தனையும் பொய்யா?
அப்படி உண்மையான அன்பாக இருந்தால் இவ்வாறு பேசி இருப்பாரா? கனியும் அவருக்கு பிள்ளை தானே? அநாதை என்று எத்தனை ஏளனமாக கூறுகிறார்.
தன் முன்னே அவர்கள் நாடகம் ஆடி உள்ளனரா?
இவை எல்லாவற்றிக்கும் மேல் ப்ரத்யூ. சிறு பெண் மாமன் மகள் என்று தான் அன்பை பொழிந்த ஒருத்தி இத்தனை குரோதத்துடன் நடப்பாளா?
‘அதுவும் ஆள் வைத்து நாசம்’ என்று எண்ணியவனுக்கு அவ்வார்த்தையே வெறியை ஏற்றியது.
ஒன்றுமறியா சிறு பெண் என்று தான் தான் அவளை மிகவும் தவறாக புரிந்துள்ளேன்.
இவள் பேசுவதை கேட்டு மற்றவர்களும் அமைதியாக உள்ளனரே.
கனி இது போல தகாத வார்த்தைகளால் ப்ரத்யூவை பேசி இருந்தால் இதே போல அமைதியாக இருந்திருப்பார்களா?
முன்பு ஏதோ அவள் சிறு வயதில் அறியாது செய்துவிட்ட தவறுக்காக பேசுகிறார்கள் என்று எண்ணி இருந்தேன்.
ஆனால் இப்போது அதுவும் அவள் செய்யவில்லை. அந்த சின்ன வயதிலேயே பொய்யாக நாடகமாடி செய்யாத தவறுக்கு ஒருத்தியை பத்து வருடங்கள் தண்டனை அனுபவிக்க வைத்திருக்கிறாள்.
ஏன் இன்றுவரை அத்தவறை அவள் தான் செய்தாள் என்று தன்னையும் நம்ப வைத்திருக்கிறாள்.
தானும் முட்டாள் தனமாக அவளது நடிப்பை நம்பி ஏமாந்து உள்ளேன். ஏன் கனியை பற்றி அறியும் முன்பு வரை தானும் அவளை தவறாக எண்ணி பேசிவிட்டேனே.
அரவணைப்பு தேடி வந்தவளை அநியாயமாய் தவிக்கவிட்டேனே என்று மிகவும் மோசமாய் தோற்றது போல வருந்தினான்.
இத்தனை நாட்களாய் அவர்கள் செய்தததற்கு எல்லாம் உண்டு இல்லை என்று ஏதாவது செய்ய வேண்டுமென கோபம் கனன்றது.
சில நிமிடங்களில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த கனி பார்த்தீபன் அழைப்பில் இருப்பதை கண்டுவிட்டு,
“போதுமா மிஸ்டர் பார்த்தீபன். நான் வாங்குன பேச்செல்லாம் காது குளிரை கேட்டிங்களா?” என்று கோபத்தை அடக்கிய குரலில் வினவிட,
“கனி அது நான்…” என்று வார்த்தை வராது தடுமாறினான். இவ்வளவு நாளும் தானும் அவர்களது புறத்தில் தானே இருந்தோம் என்ற எண்ணம் குத்தி கிழித்தது.
“என்ன மிஸ்டர் பார்த்தீபன் வார்த்தை வரலையா. உங்க அன்பு பாட்டி மதிப்புக்குரிய அத்தை அப்புறம் உங்க அத்தை பெத்த ரத்தினம் இவங்க எல்லாரும் பேசுனதை கேட்டிங்களா? எல்லாம் உங்களால தான் மிஸ்டர். நான் கேட்டேனா? உங்ககிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேனா?” என்று அவர்கள் மீதுள்ள கோபத்தை இவனிடம் பொரிந்து தள்ளிவிட்டாள்.
பார்த்தீபன் இதற்கு என்ன பதில் கூறுவான். எல்லாம் தன்னால் தான் என்று புரிகிறது.
“ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. நான் இப்போவே வந்து அவங்களை” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,
“ஐயா சாமி தயவு செய்து இங்க கிளம்பி வந்துடாதீங்க. ஏற்கனவே இவங்க பேசுன பேச்சை என்னால தாங்கிக்க முடியலை. நீங்க மட்டும் இந்நேரம் இங்க வந்து நின்னிங்க. உங்ககிட்ட வந்து போட்டு கொடுத்துட்டேன்னு என்னை நைட்டோட நைட்டா கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க”
“நான் இருக்கும் போது உனக்கு எதுவும்” என்றவனை மீண்டும் இடையில் நிறுத்தி,
“லுக் மிஸ்டர் பார்த்தீபன் நீங்க மூவில ஸ்டோரில வர மாஸ் ஹீரோவும் கிடையாது. நானும் அழுதிட்டு மூலையில உட்காட்ற ஹீரோயினும் கிடையாது. எனக்கு ஒரு ஆபத்துன்னதும் உடனே வந்து நீங்க காப்பாத்த. என்னை என்னால பாத்துக்க முடியும்” என்றிட,
அவனுக்கு, ‘அம்மாடியோவ்’ என்று வந்தது.
இந்த இடைப்பட்ட வருடத்தில் இவள் இவ்வளவு அறிவாக மாறிவிட்டாளா? இல்லை நான் தான் புதிதாக கவனிக்கிறேனா என்று தோன்றியது.
அவள் கூறுவதில் இருந்த உண்மையும் புரிந்தது.
இப்படி பட்டுபட்டென்று என்னை வாயடைக்க செய்கிறாளே என்று ஆயாசமாக வந்தது.
கூடவே அவள் கூறிய ஹீரோயின் ஹீரோ என்ற உவமையில் புன்னகையும் வந்தது.
தன்னுடைய மனநிலையை சடுதியில் இவள் மாற்றிவிடுகிறாளே என்று வியப்பும் வந்தது.
இங்கு பார்த்தீபன் கனியை எண்ணி வியந்து கொண்டிருக்க அவனது எண்ணத்தின் நாயகியோ,
“நான் அன்னைக்கே உங்கிட்ட என்னோட மறுப்பை சொல்லிட்டேன் தான? அப்புறம் ஏன் எல்லார் முன்னாடியும் இன்னைக்கு அப்படி பேசுனிங்க? உங்களுக்கு தான் உங்க அத்தை மக ப்ரத்யூ இருக்கால்ல. உங்க அழகுக்கு அறிவுக்கு ஸ்டேட்டஸ்க்கு எல்லாம் பொருத்தமா. அப்புறம் ஏன் என்னை தொல்லை பண்றீங்க?” என்று கோபத்தில் கூற,
“எல்லாரும் என்னோட கனி ஆக முடியாது” என்று சடுதியில் அவனிடத்தில் பதில் வந்தது.
சில நொடிகள் அவளிடத்தில் மௌனம் கோலோச்சியது.
“டோன்ட் சே லைக் திஸ். நான் உங்க கனி இல்லை. கால் மீ கன்னல்மொழி” என்று அழுத்தம் திருத்தமாக மொழிய,
“கனி…” என்றவனது குரல் அவளது உள்ளுக்குள் புகுந்து பூகம்பத்தை பாய்ச்சியது.
அதில் தன் மீதும் கோபத்தை வளர்த்தவள்,
“நான் இந்த உலகத்திலேயே உங்களை தவிர யாரை வேணா கல்யாணம் பண்ணுவேன் மிஸ்டர் பார்த்தீபன்” என்று சீற,
“நெவெர். இந்த ஜென்மத்தில என்னை தவிர நீ யாரையும் கல்யாணம் பண்ணி முடியாது மிஸ் கன்னல்மொழி”என்று அமர்த்தலாக பதில் மொழிந்தான் பார்த்தீபன்.
“அதையும் பாக்கலாம் மிஸ்டர் பார்த்தீபன்”
“பாருங்க மிஸஸ் பார்த்தீபன்” என்று அவளது கோபத்தை மேலும் வளர்த்துவிட்டான்.
“நடக்காத விஷயத்துக்கு கற்பனை கோட்டையை கட்டாதீங்க மிஸ்டர்”
“இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கே எல்லாம் தெரிஞ்சிடும் மிஸஸ் பார்த்தீபன். அப்புறம் நீங்க எனக்கு பார்த்தீங்களே ஒரு பொண்ணு ஸ்வேதா ரொம்ப ஸ்வீட் தெரியுமா? ஒரு வார்த்தை தான் சொன்னேன் நானும் கன்னல்மொழியும் டென் இயர்ஸா லவ் பண்றோம்னு. சட்டுனு புரிஞ்சுக்கிட்டு கிளம்பிட்டா” என்றதும் கனியிடத்தில் பெரும் அதிர்ச்சி,
“வாட். ஆர் யூ மேட் ஏன் அவங்ககிட்ட அப்படி சொன்னிங்க”
“எஸ் ஐ ஆம் மேட் ஆன் யூ”
“ஏற்கனவே இன்றைக்கு எல்லாருக்கும் நான் தான் காட்சி பொருள். போச்சு நாளைக்கு நான் தான் ஆபிஸ்ல ஹாட் டாபிக்” என்று பதற,
“நோ வொர்ரீஸ் டியர் நானே நாளைக்கு ஒரு அபிஷியல் மீட் வச்சு நம்ம மேரேஜை பத்தி அனௌன்ஸ் பண்ணிட்றேன்” என்று அவளது ரத்த அழுத்தத்தை எகிற வைத்தான்.
“ஓ காட் ஏன் இப்படி நடந்துக்கிறிங்க” என்று கனி எகிற,
“எப்படி நடந்துக்கிறேன் மிஸஸ் பார்த்தீபன்”
“டோன்ட் கால் மீ லைக் திஸ்”
“மிஸஸ் பார்த்தீபன்” என்று கரகரத்த குரலில் அழைத்து மீண்டும் அவளை தடுமாற வைத்தான்.
இவ்விடத்தில் தான் தன்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்து தடுமாறுவது உணர்ந்தவள்,
“எனக்கு உங்கிட்ட பேசவே பிடிக்கலை. ஐ ஆம் கோயிங் டூ பிளாக் யூ” என்று பொரகந்தவள் அழைப்பை துண்டிக்க போக,
“கனி ஒன் மினிட்” என்று தடுத்தவன் நிறுத்தி,
“நான் வேணா உனக்கு ஹீரோவா இல்லாம இருக்கலாம். ஆனால் எனக்கு என்னைக்குமே நீ தான் ஹீரோயின். நான் தவறவிட்ட இந்த பத்து வருஷத்துக்கும் சேர்த்து என்கிட்ட சீக்கிரம் வந்துடுடி” என்றிட,
அந்த குரலில் அதில் இருந்த சாரம்சத்தில் இவளுக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் நழுவி காலடியில் விழுந்தது.
“நெவெர் நான் உனக்கு எப்பவும் கிடைக்க மாட்டேன்” என்று வீம்பு குரலில் கூறியவள் அழைப்பை துண்டித்து விட்டு மெத்தையில் சாய்ந்துவிட்டாள்.
விழியோரம் மெலிதாய் நீர்ப்படலம். இமை சிமிட்டி தன்னை சமன் படுத்தியவள்,
‘பீ ஸ்ட்ராங்க் கன்னல்மொழி’ என்று தனக்கு தானே கூறி எதிலிருந்தோ தப்பிப்பவள் போல போர்வையோட முகத்தை மூடி கொண்டாள்.
கடந்த கால வடுக்கள் எல்லாம் அவளை சுற்றி வளைத்து கொண்டது.
மீண்டும் மீண்டும் செவிகளுக்குள்,
‘சீ என்னை அத்தான்னு கூப்பிடாத’ என்ற பார்த்தீபனின் அருவருப்பு தாங்கிய குரல் தான் கேட்டது.
மனது மீனாட்சி அம்மாளின் அருகாமைக்கு ஏங்கியது.
இங்கு விழிகளை மூடி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்த பார்த்தீபனுக்கும் மனதிற்குள் அந்நாளின் நினைவுகள் தான்.
தவறே செய்யாத ஒருத்திக்கு பத்து வருடங்கள் தண்டனையை கொடுத்து இருக்கிறேனே.
“அத்தான் நீங்க கூட என்னை நம்பலையா?” என்று கண்ணீருடன் மன்றாடியவளது முகம் நினைவினில் நழுவி செல்ல,
உள்ளத்தினுள் பாரம் ஏறியது. ஏன் இவளை தான் முன்னமே உணராது போனேன். முன்பே அறியாது போனேன்.
இத்தனை வருடங்கள் தான் இல்லாது வாழ்வில் எவ்வளவு துன்பங்களை அடைந்தாளோ?
எல்லாம் என்னால் தான் தான் அவளை நம்பியிருக்க வேண்டும்.
அத்தான் அத்தான் என்று ஆசையும் பாசமுமாக தன்னையே சுற்றி வருபவளை காண உள்ளம் ஏங்கியது.
தான் ஏன் இத்தனை நாள் முட்டாளாய் இருந்து போனோம் என்று சுவற்றில் ஓங்கி குத்தியவனது விழிகள் சிவந்து போயிருந்தது.
அதுவும் ப்ரத்யூ கற்பகம் மற்றும் கோதை பேசிய பேச்சுக்களால் இன்னும் நா
ன்கு குத்துக்களை சுவற்றில் குத்தியவன் இதற்கு ஒரு முடிவு மறுநாளே எடுக்க வேண்டும் என்று எண்ணி கொண்டான்.
விளைவு அடுத்த பதினைந்து நாட்களில் பார்த்தீபன் கன்னல் மொழி திருமணம் கோவிலில் வெகுவிமரிசையாக நடந்தேறியிருந்தது.
வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை
யாரும் என்னை
மட்டும் வாழ சொல்லாதே…
சூரியன் முழுதாய் மறைந்து இருள் சூழ்ந்திருந்த வானை வெறித்தவாறு நின்றிருந்தான்.
உடலை தழுவி சென்ற குளிர்காற்று அவனை பாதிக்கவில்லை ஏதோ சிந்தனையில் நின்றிருந்தவனது ஒரு கையில் தேநீர் கோப்பை.
முகத்தில் இருந்த புருவ சுழிப்பு அவனது தீவிர சிந்தனையை உறுதி செய்ய அருகில் மேஜையின் மேல் இருந்த அலைபேசியின் கானா இசைத்து அவனது சிந்தனையை தடை செய்தது.
எடுத்து பார்க்க சண்டைக்காரி என்ற பெயருடன் ப்ரத்யூவின் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் மிளிர்ந்தது. அருகில் பார்த்தீபனும் நின்றிருந்தான்.
புகைப்படத்தை ஒரு கணம் பார்த்தவன் அழைப்பு உயிர்விடும் இறுதி நொடியில் ஏற்று காதில் பொருந்தி இருந்தான்.
கண்டிப்பாக கோபத்தில் கத்த போகிறாள் என்று எண்ணி இருந்தவன் அமைதியாக இருக்க,
அங்கே கோபமான குரல்கள் பல கேட்டது அதில் ஒன்று கூட கனியினது இல்லை.
சடுதியில் அவனது செவிகள் கூர்மையானது.
“ஏய் பிச்சைக்காரி உன்னை வீட்டுக்குள்ள சேர்த்தன்னைக்கே நான் தலை பாடா அடிச்சிக்கிட்டேன். இந்த மாதிரி நீ எதாவது பண்ணிடுவன்னு தான்”
“...”
“உன் மூஞ்சிய கண்ணாடில பாத்து இருக்கியா உவேக். ஒரு டைம் கூட பாக்க முடியாது. கருப்பா குண்டா கேவலமா இருக்க. உனக்குலாம் அந்த வேலைக்காரன் குகனே அதிகம். இதுல உனக்கு என்னோட அத்தான் கேக்குதா?”
“...”
“உனக்கு என் வீட்டுல நுழைய கூட தகுதி இல்லை. உன்னையெல்லாம் நீ வந்தன்னைக்கே தெருவுல துரத்தி விட்ருக்கணும். தப்பு பண்ணிட்டேன்” என்று ப்ரத்யூ கத்த,
“ஆமா இந்த ஆநாதை கழுதைக்கு என் பேரன் கேக்குதா? அவன் இருக்க இருப்பென்ன நீ இருக்கதென்ன. நீயெல்லாம் என் வீட்ல சமையல்காரியா வர கூட தகுதி இல்லாதவ. எல்லாம் இவ வீட்டுக்கரரை சொல்லணும். நாயை குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் அது புத்திய காட்டதா செய்யும். சை உன்னை பாக்கவே வெறுப்பா இருக்கு” என்று கோதை வெறுப்பை உமிழ,
“இந்த சனியன் என்னைக்கு என் வீட்டுக்கு வந்துச்சோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. அப்போவே சொன்னேன். ஊர் பேர் தெரியாதததுங்களை எல்லாம் தத்தெடுக்க வேணாம்னு. என்னை கட்டுன அந்த மனுஷன் கேக்கணுமே. இப்போ இது நான் பெத்த புள்ளை வாழ்க்கையை கெடுக்க பாக்குது”
“...”
“கொஞ்சமாச்சும் சோறு போட்ட வீட்டுக்கு நன்றி இருந்தா இப்படி பண்ணி இருப்பியா? நாய் கூட நன்றியோட இருக்குது. ஆனால் நீ சீ உனக்கு சோறு போட்டு வளர்த்ததுக்கு நாலு நாய்க்கு போட்டு இருக்கலாம்” என்று கற்பகம் காறி உமிழ்ந்தார்.
“நீ இப்படி தளுக்கி மினுக்கி சேலையை கட்டிக்கிட்டு திரியும் போதே தெரியும் இப்படி தான் எதையாவது பண்ணுவேன்னு. எதை காட்டி மயக்குன என் பேரனை. இதுக்கு வேற வேலை பாக்கலாம் நீ. உடம்பை வித்து பொழைக்கிறவ கூட நாணயமா இருப்பா” என்ற கோதையின் வார்த்தையை பொறுக்க மாட்டாதவள்,
“போதும் நிறுத்துங்க. இனி ஒரு வார்த்தை பேசுனிங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்று விழிகளில் கனலை கக்க,
“ஏய் நீயெல்லாம் ஒரு ஆளுன்னு என் பாட்டியை எதிர்த்து பேசுறீயா? அவங்க கேட்டதுல என்ன தப்பு இருக்கு. நீ என்னத்தை காட்டி என் அத்தானை மயக்குன. நேத்துவரைக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இருந்தவரு. இன்னைக்கு உன்னை தான் கட்டிக்குவேன்னு சொல்றாரு. அப்போ நீ எதையோ காட்டி மயக்கிட்டேன்னு தான அர்த்தம்”
“...”
“உனக்கு தேவை பணம் தான? எவ்ளோ வேணும்னு கேளு பிச்சை போட்ற மாதிரி தூக்கி போட்றேன் பொறுக்கிட்டு ஓடி போய்டு. எங்க கண்ணு முன்னாடி வராத” என்று ப்ரத்யூ அளவிற்கு மீறி பேச பேச,
கனிக்கு கோபம் உச்சிக்கு ஏறி கொண்டிருந்தது. இருந்தும் தன்னை வெகுவாக கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தாள்.
“சின்ன வயசுல உன் மேல பழி போட்டு துரத்துன அப்பவே நீ என் லைஃப்ல இருந்து ஒழிஞ்சு போய்ட்டேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். நீ காலை சுத்துன பாம்புனு திரும்பி வந்த பின்னாடி தான் புரிஞ்சது. அப்பவே வேற எதாவது பெரிய பழியை போட்டு உன்னை ஜெயில்ல தள்ளியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்”
“...”
“உனக்கு ஒரு லாஸ்ட் வார்னிங் தர்றேன். நாளைக்கு காலையில உன் மூட்டையை தூக்கிட்டு ஓடி போய்ட்ற. இல்லைன்னா காசை கொடுத்து உன்னை கொலை பண்ண ஆளை ஏற்பாடு செஞ்சிடுவேன். சும்மா கொலை பண்ண மாட்டாங்க. நாசம் பண்ணி தூக்கி போட்ருவாங்க” என்று எச்சரித்தவள்,
“வாங்க போகலாம்” என்று தாயையும் பாட்டியையும் அழைத்து சென்றாள்.
அவர்கள் பேசிய பேச்சை கேட்டு கனி தன்னை கட்டுபடுத்த போராட இங்கு பார்த்தீபனோ ஏகமாய் அதிர்ந்து நின்றிருந்தான்.
அவனால் தன் காதுகளால் கேட்ட செய்தியை துளியும் நம்ப முடியவில்லை.
வார்த்தைகளில் எவ்வளவு கோபம் வெறுப்பு குரோதம். ஏன் இப்படி.
இவள் அப்படி என்ன செய்துவிட்டாள் அவர்களை. பத்து வருடங்களுகாக இந்த ஊரிலே இவள் இல்லையே பிறகு ஏன்.
அதுவும் வயதில் பெரியவர் எதையும் சரியாக தான் செய்வார் என்று நம்பி கொண்டிருந்த தனது பாட்டி இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவாரா?
தான் முன்பு எப்படி அமைதியாக நடந்து கொள்வார். அதுவும் அவர் கூறிய வார்த்தைகளை தன்னாலே தாங்கி கொள்ள இயலவில்லையே எப்படி எப்படி தன்னவள் தாங்கி கொண்டாள்.
கோபத்தில் பார்த்தீபனுக்கு விழிகள் சிவந்தது.
அதுவும் அவர்கேட்ட ‘எதை காண்பித்து என் பேரனை மயக்கினாய்?’ என்ற வார்த்தையில் அவனது மொத்த பொறுமையும் பறந்து போய் இருந்தது.
கற்பகம் அத்தை சிறு வயதில் இருந்தே பார்த்தீ பார்த்தீ என்று அன்பை பொழிவாரே அத்தனையும் பொய்யா?
அப்படி உண்மையான அன்பாக இருந்தால் இவ்வாறு பேசி இருப்பாரா? கனியும் அவருக்கு பிள்ளை தானே? அநாதை என்று எத்தனை ஏளனமாக கூறுகிறார்.
தன் முன்னே அவர்கள் நாடகம் ஆடி உள்ளனரா?
இவை எல்லாவற்றிக்கும் மேல் ப்ரத்யூ. சிறு பெண் மாமன் மகள் என்று தான் அன்பை பொழிந்த ஒருத்தி இத்தனை குரோதத்துடன் நடப்பாளா?
‘அதுவும் ஆள் வைத்து நாசம்’ என்று எண்ணியவனுக்கு அவ்வார்த்தையே வெறியை ஏற்றியது.
ஒன்றுமறியா சிறு பெண் என்று தான் தான் அவளை மிகவும் தவறாக புரிந்துள்ளேன்.
இவள் பேசுவதை கேட்டு மற்றவர்களும் அமைதியாக உள்ளனரே.
கனி இது போல தகாத வார்த்தைகளால் ப்ரத்யூவை பேசி இருந்தால் இதே போல அமைதியாக இருந்திருப்பார்களா?
முன்பு ஏதோ அவள் சிறு வயதில் அறியாது செய்துவிட்ட தவறுக்காக பேசுகிறார்கள் என்று எண்ணி இருந்தேன்.
ஆனால் இப்போது அதுவும் அவள் செய்யவில்லை. அந்த சின்ன வயதிலேயே பொய்யாக நாடகமாடி செய்யாத தவறுக்கு ஒருத்தியை பத்து வருடங்கள் தண்டனை அனுபவிக்க வைத்திருக்கிறாள்.
ஏன் இன்றுவரை அத்தவறை அவள் தான் செய்தாள் என்று தன்னையும் நம்ப வைத்திருக்கிறாள்.
தானும் முட்டாள் தனமாக அவளது நடிப்பை நம்பி ஏமாந்து உள்ளேன். ஏன் கனியை பற்றி அறியும் முன்பு வரை தானும் அவளை தவறாக எண்ணி பேசிவிட்டேனே.
அரவணைப்பு தேடி வந்தவளை அநியாயமாய் தவிக்கவிட்டேனே என்று மிகவும் மோசமாய் தோற்றது போல வருந்தினான்.
இத்தனை நாட்களாய் அவர்கள் செய்தததற்கு எல்லாம் உண்டு இல்லை என்று ஏதாவது செய்ய வேண்டுமென கோபம் கனன்றது.
சில நிமிடங்களில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த கனி பார்த்தீபன் அழைப்பில் இருப்பதை கண்டுவிட்டு,
“போதுமா மிஸ்டர் பார்த்தீபன். நான் வாங்குன பேச்செல்லாம் காது குளிரை கேட்டிங்களா?” என்று கோபத்தை அடக்கிய குரலில் வினவிட,
“கனி அது நான்…” என்று வார்த்தை வராது தடுமாறினான். இவ்வளவு நாளும் தானும் அவர்களது புறத்தில் தானே இருந்தோம் என்ற எண்ணம் குத்தி கிழித்தது.
“என்ன மிஸ்டர் பார்த்தீபன் வார்த்தை வரலையா. உங்க அன்பு பாட்டி மதிப்புக்குரிய அத்தை அப்புறம் உங்க அத்தை பெத்த ரத்தினம் இவங்க எல்லாரும் பேசுனதை கேட்டிங்களா? எல்லாம் உங்களால தான் மிஸ்டர். நான் கேட்டேனா? உங்ககிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேனா?” என்று அவர்கள் மீதுள்ள கோபத்தை இவனிடம் பொரிந்து தள்ளிவிட்டாள்.
பார்த்தீபன் இதற்கு என்ன பதில் கூறுவான். எல்லாம் தன்னால் தான் என்று புரிகிறது.
“ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. நான் இப்போவே வந்து அவங்களை” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,
“ஐயா சாமி தயவு செய்து இங்க கிளம்பி வந்துடாதீங்க. ஏற்கனவே இவங்க பேசுன பேச்சை என்னால தாங்கிக்க முடியலை. நீங்க மட்டும் இந்நேரம் இங்க வந்து நின்னிங்க. உங்ககிட்ட வந்து போட்டு கொடுத்துட்டேன்னு என்னை நைட்டோட நைட்டா கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க”
“நான் இருக்கும் போது உனக்கு எதுவும்” என்றவனை மீண்டும் இடையில் நிறுத்தி,
“லுக் மிஸ்டர் பார்த்தீபன் நீங்க மூவில ஸ்டோரில வர மாஸ் ஹீரோவும் கிடையாது. நானும் அழுதிட்டு மூலையில உட்காட்ற ஹீரோயினும் கிடையாது. எனக்கு ஒரு ஆபத்துன்னதும் உடனே வந்து நீங்க காப்பாத்த. என்னை என்னால பாத்துக்க முடியும்” என்றிட,
அவனுக்கு, ‘அம்மாடியோவ்’ என்று வந்தது.
இந்த இடைப்பட்ட வருடத்தில் இவள் இவ்வளவு அறிவாக மாறிவிட்டாளா? இல்லை நான் தான் புதிதாக கவனிக்கிறேனா என்று தோன்றியது.
அவள் கூறுவதில் இருந்த உண்மையும் புரிந்தது.
இப்படி பட்டுபட்டென்று என்னை வாயடைக்க செய்கிறாளே என்று ஆயாசமாக வந்தது.
கூடவே அவள் கூறிய ஹீரோயின் ஹீரோ என்ற உவமையில் புன்னகையும் வந்தது.
தன்னுடைய மனநிலையை சடுதியில் இவள் மாற்றிவிடுகிறாளே என்று வியப்பும் வந்தது.
இங்கு பார்த்தீபன் கனியை எண்ணி வியந்து கொண்டிருக்க அவனது எண்ணத்தின் நாயகியோ,
“நான் அன்னைக்கே உங்கிட்ட என்னோட மறுப்பை சொல்லிட்டேன் தான? அப்புறம் ஏன் எல்லார் முன்னாடியும் இன்னைக்கு அப்படி பேசுனிங்க? உங்களுக்கு தான் உங்க அத்தை மக ப்ரத்யூ இருக்கால்ல. உங்க அழகுக்கு அறிவுக்கு ஸ்டேட்டஸ்க்கு எல்லாம் பொருத்தமா. அப்புறம் ஏன் என்னை தொல்லை பண்றீங்க?” என்று கோபத்தில் கூற,
“எல்லாரும் என்னோட கனி ஆக முடியாது” என்று சடுதியில் அவனிடத்தில் பதில் வந்தது.
சில நொடிகள் அவளிடத்தில் மௌனம் கோலோச்சியது.
“டோன்ட் சே லைக் திஸ். நான் உங்க கனி இல்லை. கால் மீ கன்னல்மொழி” என்று அழுத்தம் திருத்தமாக மொழிய,
“கனி…” என்றவனது குரல் அவளது உள்ளுக்குள் புகுந்து பூகம்பத்தை பாய்ச்சியது.
அதில் தன் மீதும் கோபத்தை வளர்த்தவள்,
“நான் இந்த உலகத்திலேயே உங்களை தவிர யாரை வேணா கல்யாணம் பண்ணுவேன் மிஸ்டர் பார்த்தீபன்” என்று சீற,
“நெவெர். இந்த ஜென்மத்தில என்னை தவிர நீ யாரையும் கல்யாணம் பண்ணி முடியாது மிஸ் கன்னல்மொழி”என்று அமர்த்தலாக பதில் மொழிந்தான் பார்த்தீபன்.
“அதையும் பாக்கலாம் மிஸ்டர் பார்த்தீபன்”
“பாருங்க மிஸஸ் பார்த்தீபன்” என்று அவளது கோபத்தை மேலும் வளர்த்துவிட்டான்.
“நடக்காத விஷயத்துக்கு கற்பனை கோட்டையை கட்டாதீங்க மிஸ்டர்”
“இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கே எல்லாம் தெரிஞ்சிடும் மிஸஸ் பார்த்தீபன். அப்புறம் நீங்க எனக்கு பார்த்தீங்களே ஒரு பொண்ணு ஸ்வேதா ரொம்ப ஸ்வீட் தெரியுமா? ஒரு வார்த்தை தான் சொன்னேன் நானும் கன்னல்மொழியும் டென் இயர்ஸா லவ் பண்றோம்னு. சட்டுனு புரிஞ்சுக்கிட்டு கிளம்பிட்டா” என்றதும் கனியிடத்தில் பெரும் அதிர்ச்சி,
“வாட். ஆர் யூ மேட் ஏன் அவங்ககிட்ட அப்படி சொன்னிங்க”
“எஸ் ஐ ஆம் மேட் ஆன் யூ”
“ஏற்கனவே இன்றைக்கு எல்லாருக்கும் நான் தான் காட்சி பொருள். போச்சு நாளைக்கு நான் தான் ஆபிஸ்ல ஹாட் டாபிக்” என்று பதற,
“நோ வொர்ரீஸ் டியர் நானே நாளைக்கு ஒரு அபிஷியல் மீட் வச்சு நம்ம மேரேஜை பத்தி அனௌன்ஸ் பண்ணிட்றேன்” என்று அவளது ரத்த அழுத்தத்தை எகிற வைத்தான்.
“ஓ காட் ஏன் இப்படி நடந்துக்கிறிங்க” என்று கனி எகிற,
“எப்படி நடந்துக்கிறேன் மிஸஸ் பார்த்தீபன்”
“டோன்ட் கால் மீ லைக் திஸ்”
“மிஸஸ் பார்த்தீபன்” என்று கரகரத்த குரலில் அழைத்து மீண்டும் அவளை தடுமாற வைத்தான்.
இவ்விடத்தில் தான் தன்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்து தடுமாறுவது உணர்ந்தவள்,
“எனக்கு உங்கிட்ட பேசவே பிடிக்கலை. ஐ ஆம் கோயிங் டூ பிளாக் யூ” என்று பொரகந்தவள் அழைப்பை துண்டிக்க போக,
“கனி ஒன் மினிட்” என்று தடுத்தவன் நிறுத்தி,
“நான் வேணா உனக்கு ஹீரோவா இல்லாம இருக்கலாம். ஆனால் எனக்கு என்னைக்குமே நீ தான் ஹீரோயின். நான் தவறவிட்ட இந்த பத்து வருஷத்துக்கும் சேர்த்து என்கிட்ட சீக்கிரம் வந்துடுடி” என்றிட,
அந்த குரலில் அதில் இருந்த சாரம்சத்தில் இவளுக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் நழுவி காலடியில் விழுந்தது.
“நெவெர் நான் உனக்கு எப்பவும் கிடைக்க மாட்டேன்” என்று வீம்பு குரலில் கூறியவள் அழைப்பை துண்டித்து விட்டு மெத்தையில் சாய்ந்துவிட்டாள்.
விழியோரம் மெலிதாய் நீர்ப்படலம். இமை சிமிட்டி தன்னை சமன் படுத்தியவள்,
‘பீ ஸ்ட்ராங்க் கன்னல்மொழி’ என்று தனக்கு தானே கூறி எதிலிருந்தோ தப்பிப்பவள் போல போர்வையோட முகத்தை மூடி கொண்டாள்.
கடந்த கால வடுக்கள் எல்லாம் அவளை சுற்றி வளைத்து கொண்டது.
மீண்டும் மீண்டும் செவிகளுக்குள்,
‘சீ என்னை அத்தான்னு கூப்பிடாத’ என்ற பார்த்தீபனின் அருவருப்பு தாங்கிய குரல் தான் கேட்டது.
மனது மீனாட்சி அம்மாளின் அருகாமைக்கு ஏங்கியது.
இங்கு விழிகளை மூடி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்த பார்த்தீபனுக்கும் மனதிற்குள் அந்நாளின் நினைவுகள் தான்.
தவறே செய்யாத ஒருத்திக்கு பத்து வருடங்கள் தண்டனையை கொடுத்து இருக்கிறேனே.
“அத்தான் நீங்க கூட என்னை நம்பலையா?” என்று கண்ணீருடன் மன்றாடியவளது முகம் நினைவினில் நழுவி செல்ல,
உள்ளத்தினுள் பாரம் ஏறியது. ஏன் இவளை தான் முன்னமே உணராது போனேன். முன்பே அறியாது போனேன்.
இத்தனை வருடங்கள் தான் இல்லாது வாழ்வில் எவ்வளவு துன்பங்களை அடைந்தாளோ?
எல்லாம் என்னால் தான் தான் அவளை நம்பியிருக்க வேண்டும்.
அத்தான் அத்தான் என்று ஆசையும் பாசமுமாக தன்னையே சுற்றி வருபவளை காண உள்ளம் ஏங்கியது.
தான் ஏன் இத்தனை நாள் முட்டாளாய் இருந்து போனோம் என்று சுவற்றில் ஓங்கி குத்தியவனது விழிகள் சிவந்து போயிருந்தது.
அதுவும் ப்ரத்யூ கற்பகம் மற்றும் கோதை பேசிய பேச்சுக்களால் இன்னும் நா
ன்கு குத்துக்களை சுவற்றில் குத்தியவன் இதற்கு ஒரு முடிவு மறுநாளே எடுக்க வேண்டும் என்று எண்ணி கொண்டான்.
விளைவு அடுத்த பதினைந்து நாட்களில் பார்த்தீபன் கன்னல் மொழி திருமணம் கோவிலில் வெகுவிமரிசையாக நடந்தேறியிருந்தது.