Member
- Messages
- 31
- Reaction score
- 13
- Points
- 8
அத்தியாயம் - 14
அலுவலகம் விட்டு வெளியே வந்த சமரன் ஒரு கணவனாய் தனது மனையாளுக்கு தனிப்பட்ட ஈமெயிலில் அரை நாள் விடுப்பிட்டு வீட்டிற்கு வர கூறினான். சஹானாவும் பிரச்சனை ஏதென அறியாத போதும் தன்னவனின் வேண்டுகோளிற்கு இணங்க விடுப்பு கூறி வெளியே வந்தாள்.
" சனா... கொஞ்சம் நான் சொல்றதை நம்பு... அஹானா கவின் ங்குற ஒரு பையன விரும்புறா. ஆனா அவன் திருநங்கை னு ஆரியனோட தம்பி அஸ்வின் சந்தேகம் சொல்றான் . கூடவே ஆரியன் கூப்டு உன்னையும் அஹானாவையும் ஹாஸ்பிடல் வரச் சொல்றான். என்ன னு தெரியல... என்னமோ நம்மள சுற்றி மர்மமா இருக்கு... விபசார கேஸ் எடுத்ததால குடும்பத்துல பிரிவு விழ வைக்க எதாவது வேலை பாக்குறாங்களா னு தெரியல... கண்டிப்பா ஒரு வழி பாக்கலாம். தயவு செய்து நீ மட்டும் எனக்கு உதவு "
சமரன் சொல்வதை சஹானாவினால் ஏற்காமல் இருக்க இயலவில்லை. அவளுக்கும் விவாகரத்து குறித்து வந்த நோட்டிஸ் கண்டு சற்று பயம் இருந்தது. இப்பொழுது சமரன் சொல்வது இதற்காக இருக்குமோ... அஹானா தவறான வழியில் செல்கிறாளோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
" சரி நீங்க அஹானா காலேஜ்க்கு வண்டியை விடுங்க... போய் அவளைக் கூப்டு ஆரியன் அண்ணா சொன்ன ஹாஸ்பிடல் போகலாம்... "
சனாவின் வார்த்தையை ஏற்று சமரனும் கல்லூரி செல்ல, கேன்டீனில் அமர்ந்திருந்த கவினையும் (கவின்யாவையும்) அஹானாவையும் கண்டு மனம் ஒருநொடி திகைத்தாலும் அதை வெளியில் காட்டாது அவளை ஆசிரியரின் அனுமதியோடு அழைத்துச் சென்றனர்.
வரும்வழியில் அவர்களுள் அமைதியே ஆட்சி செய்ய, அஹானாவின் மனதிற்குள் கிலி பரவியிருந்தது. கவினும் அவளும் காதலிப்பது அக்காவிற்கு பிடிக்கவில்லையோ... எதாவது பிரச்சனையோ... நம்ம கண்டுபிடிச்சிட்டாங்களோ... இனி காலேஜ் அனுப்ப மாட்டாங்களோ... ஃபோன் அ பிடிங்கிடுவாங்களோ... கல்யாணம் பண்டி வைக்க போறாங்களோ... எனப் பல வித பதட்டம் மனதில் முன்பணம் தராது குடியேறியது.
அவளது மனதின் எண்ணத்தை முகம் வாடகை வாங்காது இலவசமாக படம்பிடித்துக் காட்டியது.
தவறு செய்யாத வரை எதற்கும் பதட்டமோ பயமோ வரப்போவதில்லையே... அவளது முக கலவையான உணர்வுகளைக் கண்ட சஹானா அவளிடம் குடைய ஆரம்பிக்க எண்ணினாலும், அதற்குள்ளே மருத்துவமனை வந்திட பின்னர் கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் அறியாதது பல அதிர்ச்சிகள் அவளது தலையில் இடியை இறக்குவது போல வரவிருப்பதை... அஹானாவையே இழக்கும் நேரம் வெகுதூரம் இல்லை என்று அவள் அறியவில்லை...
" இரண்டு பேரும் உள்ள போங்க... சஹானா அவளைப் பாத்துக்க... போலீஸ் புரொட்டெக்ஷன் போட்டிருப்பாங்க... படுக்கையில இருக்குற பொண்ணுக்கு வேண்டப்பட்டவங்க னு சொல்லி உள்ள போ... கலெக்டர் னு சொன்னா பின்னாடி நியூஸ் ல புதுசு புதுசா கனெக்ட் பண்ணுவாங்க... " என்றவன் காவலுக்கு நின்றோரிடம் விபரம் அறிய சென்றான்.
இங்கு சில்வியா துப்பாக்கி சண்டையில் சற்று விழித்திருந்தாலும் இரத்த அழுத்தத்தின் தாக்கம், மன அழுத்தம் மற்றும் அவளுக்கு தூங்குவதற்காகச் செலுத்தப்பட்ட மருந்தானது அவளை சற்று சோர்வடைய செய்திருக்க, அஸ்வினின் பரிந்துரையின் பெயரில் அவளைப் படுக்க வைத்திருந்தனர்.
மருத்துவமனையைக் கண்ட அஹானாவிற்கு எதுவும் புலப்படவில்லை. என்ன நிகழ்கிறது என்று அறியாது விழித்தபடியே சஹானாவோடே வந்திருந்தாள். ஆனாலும் குற்றம் செய்த மனது குறுகுறுக்க, எங்கே தமது தவற்றிற்கு தான் அழைத்துச் செல்கின்றனரோ என்ற எண்ணத்தில் இருந்தவள் வாய் திறந்து எவற்றையும் கேட்டுக் கொள்ளவில்லை.
சஹானாவிற்குமே எதற்காக அஹானாவை அழைத்துச் செல்கிறோம் என்று தெரியாது. அவளைப் பொறுத்தவரையில் ஆரியன் அஹானைவை அழைத்து வரச் சொன்னான் . ஆகையால் அவளும் தன் தங்கையை அழைத்துச் செல்கிறாள். இருவரும் இருவேறு மனநிலையோடே சிகிட்சை நடைபெறும் வார்டிற்கு வந்தனர்.
" என்ன ஆச்சு எதுக்காக கூப்டீங்க... " என்று சஹானாவே பேச்சைத் துவங்கி வைத்தாள்.
" அந்த சில்வியா பொண்ண ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணினோம். அந்த டைம்ல நடந்த கன் ஷூட் ல பிரதீபாவுக்கு கைல தோட்டா போயிட்டு... இப்ப இந்த அறைல இருக்குறா... " என்ற ஆரியன், பிரதீபா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.
இந்த நிலையில் சற்று தெளிந்து விழித்துக் கொண்ட சில்வியா அஹானா வந்திருப்பதை பேச்சு வாக்கில் உணர்ந்தகொண்டாள். அவளது அறையில் இருந்த செவிலியரிடம்,
" நர்ஸ்.. வெளில டாக்டர் அஸ்வின் கிட்ட எனக்கு பிளீட் ஆகுது னு சொல்லி அவங்களை வர வையுங்களேன் " என்று பொய்கூற கேட்க , " ஆனா உங்களுக்கு இரத்தம் வரலையே " என்றார்.
" வரல ... ஆனா அவரை வர வைக்க வேற வழி இல்ல... ஒரு இக்கட்டுல தான் இருக்கோம். தயவுசெய்து வர வைங்க... " என்று தன்னால் இயன்றமட்டும் பெண்ணவள் வேண்டிக்கொள்ள, மனதிரங்கியவர் வெளியே வந்து அதே பொய்யைக் கூறினார்.
" டாக்டர் பேஷன்ட்க்கு பிளீட் ஆகுது.... "
என்று உண்மையில் நிகழ்ந்தது போல பதட்டத்துடன் வந்து அந்த செவிலியர் சொல்ல, தோட்டா எதும் அவளையும் துளைத்ததோ என்ற பயத்துடன் அஸ்வின் உள்ளே நுழைந்தான்.
" எங்கமா பிளீட் ஆகுது "
" எனக்கு பிளீட் ஆகல... ஆனா எனக்கு ஒரு விஷயம் தெரியணும்... அஹானா வந்தாளா... "
" இந்த நிலை ல உனக்கு இதா தெரியணும்... பிளீட் ஆகுது னு பதட்டமாக்குற... "
" எனக்கு ஆசை இல்ல... இந்த சிட்டுவேஷன் ல வேற எப்படி வர வைக்குறது... அஹானாவ வச்சுட்டு மொத்தமா என்னால பேச முடியாது... ஏன் நீங்களே சொல்லுங்க... உங்களைப் பொறுத்தவரை அவன் ஒரு திருநங்கை... அதை நீங்க அவகிட்ட சொன்ன உடனே ' அப்படியா சரிங்கய்யா. காதலும் வேணாம் ஒண்ணும் வேணாம் னு போயிடுவாளா... ' .
அதனால தான் சொல்றேன். அஹானாவுக்கு என்னைய தெரியும்... தெரிஞ்சவங்க என்ற முறையில் பார்க்க வந்ததா இருக்கட்டும். மற்றதை பிறகு பார்த்துக்கலாம். இப்போதைக்கு அவ முன்னால எதையும் பேச வேணாம்... அவளுக்கு உண்மையை நானே விளக்குறேன்... என்னைய நம்புங்க... " என்றவள் மேலும் வேண்டிக் கொள்ள, அவனும் ஒப்புக் கொண்டான்.
வெளியே வந்தவன், " கொஞ்சம் நேரம் பொறுங்க... நர்ஸ் பல்ஸ் செக் பண்றாங்க... அப்புறமா உள்ள போகலாம் " என்றவன் ஆரியனுக்குக் கண் காட்ட, தனியே வந்தான்.
" எதுக்குடா தனியா கூப்ட... "
" அந்தப் பொண்ணு அஹானா கிட்ட எதையும் சொல்ல வேணாம்னு சொல்றா... அஹானாவ ரொம்ப உரிமையா பேசுறா... என்ன னு சரியா சொல்ல தெரியல " என்றவன், சில்வியா கூறியவற்றைச் சொல்ல, ஆரியனும் " ஓகே... என்ன நடக்குதுனு பாக்கலாம்... இப்போதைக்கு சில்வியா சொன்னது போலவே பண்ணலாம் " என்றவன், சமரனிடமும் சஹானாவிடமும் கூற , அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட , அதற்கு ஒப்புக்கொண்டனர். மேலும் சஹானாவிற்கு சில்வியா காணாமல் போனதோ, சித்தாராவிற்கு நிகழ்ந்தவையோ தெரியாததால் அவளிடம் ஏதும் சொல்லவில்லை.
அஹானாவும் சஹானாவும் வந்ததும் அனைவரும் சில்வியாவின் அறைக்கு முதலில் செல்ல , கையில் டிரிப்ஸூடன் இருந்தவளைக் கண்ட அஹானா , " அக்கா " என்று ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ள, பார்த்துக் கொண்டிருந்தோர் அதிசயமாகக் கண்டனர்.
" வா அனாக்குட்டி... வா வா.. இப்ப தான் இந்த அக்காவ பாக்க தோணிச்சா " என்ற சில்வியாவின் குரலில் சிறு பிசிறும் இல்லை... தன் வீட்டுக் குழந்தையை உரிமையாகக் கண்டித்துக் கேட்கும் அன்புத்தமக்கையின் பாசம் நிறைந்திருந்தது.
" அச்சோ அப்படியெல்லாம் இல்ல க்கா... காலேஜ் போறேன் இல்லையா... "
" அப்படியா... அப்ப இது என்ன " என்றவள் தனது கைப்பேசியில் இருந்து கவினும் அஹானாவும் சேர்ந்து பைக்கில் செல்லும் புகைப்படத்தினை ரகசியமாகக் காட்ட, பெரிய ஆப்பிள் பழம் போல கண்களை விரிக்க , நக்கலாகச் சிரித்து வைத்தாள் சில்வியா... சில்வியாவின் கையிலிருந்த அலைபேசியைப் பிடுங்கியவள் அந்தப் புகைப்படத்தை அழித்துவிட்டு காதில் ரகசியமாக, " இத சித்தாரா அக்கா கிட்ட சொல்லாதீங்க என் செல்லம்ல... நானே எப்படி சொல்ல னு முழிச்சுட்டு இருக்கேன் " என்று சற்றே " என்று சற்றே வருத்தமாகக் கூறினாள்.
அதுவரை ரகசியம் காத்தவள், " அப்ப இந்த சஹானா அக்கா தேவையில்லையாடா... " என்று சத்தமாகக் கேட்டு வைக்க, சஹானா அஹானாவைக் கூர்மையாகப் பார்த்து வைத்தாள்.
" அ... அ.. அப்படி இல்ல... " என்ற அஹானா அதிகமாய்த் திணறினாள்.
" அப்ப சித்தாரா கிட்ட சொல்ல முழிக்குற.. சனா அக்கா கிட்ட சொல்லிட்டியா என்ன... " சில்வியா
" என்ன என்கிட்ட சொல்லணும்... என் அனா எல்லாம் சொல்வாளே " என்று அஹானாவிற்காகப் பரிந்துபேச , அஹானாவிற்கோ சற்று தலைக்குனிவாக இருந்தது. தனக்காக குடும்ப வாழ்க்கையை ஏற்க தயங்கியவள் மற்றும் மறுத்தவளும்கூட சஹானா. ஆனால் தற்பொழுது தான் அதை மறைத்து விட்டோமே என்று தோன்றியது.
அஹானா தயங்கி நிற்பதைக் கண்டவள், " குட்டிமா நீ இப்ப சொல்ல வேணாம்... பிறகு நீயா வந்து என்ன சொல்லணுமோ சொல்லு " என்றிட, அஹானா தலைகுனிந்து நின்று கொண்டாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன் சமரனிடம் அவர்கள் இல்லாதபோது நடந்த காரியங்களைக் கூறியதோடு, சமரன் சொல்ல தயங்கியவற்றை அஹானாவின் வாயாலே சொல்ல வைத்ததையும் குறித்துக் காட்டினான்.
சில நிமிடங்கள் அடுத்து மௌனமாகக் கழிய, " சரி குட்டிமா ... உன்ன பாக்கணும்னு தோணிச்சு. அதான் ஆரியன் அண்ணா கிட்ட கேட்டேன். நீ காலேஜ் கிளம்பு. நல்லா படி. சனா அக்கா , பிரதீபா அக்கா போல சொந்த கால் ல நிக்கணும்... நம்ம படிப்பு நம்ம நிலையை உயர்த்தணும். அடுத்தவங்களைச் சாராம வாழ வழி வைக்கணும். புரியும் னு நம்புறேன் " என்று கூறி வழியனுப்ப எத்தனிக்க, " நான் போறது இருக்கட்டும். சித்தாரா அக்கா எங்க... கொஞ்ச நாள் முன்ன ஒரு ஹோம் ல பாத்தேன். அப்புறம் ஒரு மெசுஜ் கூட இல்ல " என்று குற்றம் சாட்ட , " அவ ஒரு வீட்டில் வேலைக்கு போறாடா... நீ கிளம்பு "
என்று லாவகமாக அனுப்பி வைத்தாள். அவளது பேச்சுக்கு மறுபேச்சு பேசாது கிளம்பிய அஹானாவைக் கண்டு மற்றோர் அதிர்ந்து பார்க்க, சில்வியாவோ உதட்டில் மாறாத புன்னகையோடு பார்த்திருந்தாள்.
தொடரும்...
*_____________________________________________*
கதையைப் பற்றிய நிறை குறைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன் மக்களே.
- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன்
அலுவலகம் விட்டு வெளியே வந்த சமரன் ஒரு கணவனாய் தனது மனையாளுக்கு தனிப்பட்ட ஈமெயிலில் அரை நாள் விடுப்பிட்டு வீட்டிற்கு வர கூறினான். சஹானாவும் பிரச்சனை ஏதென அறியாத போதும் தன்னவனின் வேண்டுகோளிற்கு இணங்க விடுப்பு கூறி வெளியே வந்தாள்.
" சனா... கொஞ்சம் நான் சொல்றதை நம்பு... அஹானா கவின் ங்குற ஒரு பையன விரும்புறா. ஆனா அவன் திருநங்கை னு ஆரியனோட தம்பி அஸ்வின் சந்தேகம் சொல்றான் . கூடவே ஆரியன் கூப்டு உன்னையும் அஹானாவையும் ஹாஸ்பிடல் வரச் சொல்றான். என்ன னு தெரியல... என்னமோ நம்மள சுற்றி மர்மமா இருக்கு... விபசார கேஸ் எடுத்ததால குடும்பத்துல பிரிவு விழ வைக்க எதாவது வேலை பாக்குறாங்களா னு தெரியல... கண்டிப்பா ஒரு வழி பாக்கலாம். தயவு செய்து நீ மட்டும் எனக்கு உதவு "
சமரன் சொல்வதை சஹானாவினால் ஏற்காமல் இருக்க இயலவில்லை. அவளுக்கும் விவாகரத்து குறித்து வந்த நோட்டிஸ் கண்டு சற்று பயம் இருந்தது. இப்பொழுது சமரன் சொல்வது இதற்காக இருக்குமோ... அஹானா தவறான வழியில் செல்கிறாளோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
" சரி நீங்க அஹானா காலேஜ்க்கு வண்டியை விடுங்க... போய் அவளைக் கூப்டு ஆரியன் அண்ணா சொன்ன ஹாஸ்பிடல் போகலாம்... "
சனாவின் வார்த்தையை ஏற்று சமரனும் கல்லூரி செல்ல, கேன்டீனில் அமர்ந்திருந்த கவினையும் (கவின்யாவையும்) அஹானாவையும் கண்டு மனம் ஒருநொடி திகைத்தாலும் அதை வெளியில் காட்டாது அவளை ஆசிரியரின் அனுமதியோடு அழைத்துச் சென்றனர்.
வரும்வழியில் அவர்களுள் அமைதியே ஆட்சி செய்ய, அஹானாவின் மனதிற்குள் கிலி பரவியிருந்தது. கவினும் அவளும் காதலிப்பது அக்காவிற்கு பிடிக்கவில்லையோ... எதாவது பிரச்சனையோ... நம்ம கண்டுபிடிச்சிட்டாங்களோ... இனி காலேஜ் அனுப்ப மாட்டாங்களோ... ஃபோன் அ பிடிங்கிடுவாங்களோ... கல்யாணம் பண்டி வைக்க போறாங்களோ... எனப் பல வித பதட்டம் மனதில் முன்பணம் தராது குடியேறியது.
அவளது மனதின் எண்ணத்தை முகம் வாடகை வாங்காது இலவசமாக படம்பிடித்துக் காட்டியது.
தவறு செய்யாத வரை எதற்கும் பதட்டமோ பயமோ வரப்போவதில்லையே... அவளது முக கலவையான உணர்வுகளைக் கண்ட சஹானா அவளிடம் குடைய ஆரம்பிக்க எண்ணினாலும், அதற்குள்ளே மருத்துவமனை வந்திட பின்னர் கேட்டுக்கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் அறியாதது பல அதிர்ச்சிகள் அவளது தலையில் இடியை இறக்குவது போல வரவிருப்பதை... அஹானாவையே இழக்கும் நேரம் வெகுதூரம் இல்லை என்று அவள் அறியவில்லை...
" இரண்டு பேரும் உள்ள போங்க... சஹானா அவளைப் பாத்துக்க... போலீஸ் புரொட்டெக்ஷன் போட்டிருப்பாங்க... படுக்கையில இருக்குற பொண்ணுக்கு வேண்டப்பட்டவங்க னு சொல்லி உள்ள போ... கலெக்டர் னு சொன்னா பின்னாடி நியூஸ் ல புதுசு புதுசா கனெக்ட் பண்ணுவாங்க... " என்றவன் காவலுக்கு நின்றோரிடம் விபரம் அறிய சென்றான்.
இங்கு சில்வியா துப்பாக்கி சண்டையில் சற்று விழித்திருந்தாலும் இரத்த அழுத்தத்தின் தாக்கம், மன அழுத்தம் மற்றும் அவளுக்கு தூங்குவதற்காகச் செலுத்தப்பட்ட மருந்தானது அவளை சற்று சோர்வடைய செய்திருக்க, அஸ்வினின் பரிந்துரையின் பெயரில் அவளைப் படுக்க வைத்திருந்தனர்.
மருத்துவமனையைக் கண்ட அஹானாவிற்கு எதுவும் புலப்படவில்லை. என்ன நிகழ்கிறது என்று அறியாது விழித்தபடியே சஹானாவோடே வந்திருந்தாள். ஆனாலும் குற்றம் செய்த மனது குறுகுறுக்க, எங்கே தமது தவற்றிற்கு தான் அழைத்துச் செல்கின்றனரோ என்ற எண்ணத்தில் இருந்தவள் வாய் திறந்து எவற்றையும் கேட்டுக் கொள்ளவில்லை.
சஹானாவிற்குமே எதற்காக அஹானாவை அழைத்துச் செல்கிறோம் என்று தெரியாது. அவளைப் பொறுத்தவரையில் ஆரியன் அஹானைவை அழைத்து வரச் சொன்னான் . ஆகையால் அவளும் தன் தங்கையை அழைத்துச் செல்கிறாள். இருவரும் இருவேறு மனநிலையோடே சிகிட்சை நடைபெறும் வார்டிற்கு வந்தனர்.
" என்ன ஆச்சு எதுக்காக கூப்டீங்க... " என்று சஹானாவே பேச்சைத் துவங்கி வைத்தாள்.
" அந்த சில்வியா பொண்ண ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணினோம். அந்த டைம்ல நடந்த கன் ஷூட் ல பிரதீபாவுக்கு கைல தோட்டா போயிட்டு... இப்ப இந்த அறைல இருக்குறா... " என்ற ஆரியன், பிரதீபா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான்.
இந்த நிலையில் சற்று தெளிந்து விழித்துக் கொண்ட சில்வியா அஹானா வந்திருப்பதை பேச்சு வாக்கில் உணர்ந்தகொண்டாள். அவளது அறையில் இருந்த செவிலியரிடம்,
" நர்ஸ்.. வெளில டாக்டர் அஸ்வின் கிட்ட எனக்கு பிளீட் ஆகுது னு சொல்லி அவங்களை வர வையுங்களேன் " என்று பொய்கூற கேட்க , " ஆனா உங்களுக்கு இரத்தம் வரலையே " என்றார்.
" வரல ... ஆனா அவரை வர வைக்க வேற வழி இல்ல... ஒரு இக்கட்டுல தான் இருக்கோம். தயவுசெய்து வர வைங்க... " என்று தன்னால் இயன்றமட்டும் பெண்ணவள் வேண்டிக்கொள்ள, மனதிரங்கியவர் வெளியே வந்து அதே பொய்யைக் கூறினார்.
" டாக்டர் பேஷன்ட்க்கு பிளீட் ஆகுது.... "
என்று உண்மையில் நிகழ்ந்தது போல பதட்டத்துடன் வந்து அந்த செவிலியர் சொல்ல, தோட்டா எதும் அவளையும் துளைத்ததோ என்ற பயத்துடன் அஸ்வின் உள்ளே நுழைந்தான்.
" எங்கமா பிளீட் ஆகுது "
" எனக்கு பிளீட் ஆகல... ஆனா எனக்கு ஒரு விஷயம் தெரியணும்... அஹானா வந்தாளா... "
" இந்த நிலை ல உனக்கு இதா தெரியணும்... பிளீட் ஆகுது னு பதட்டமாக்குற... "
" எனக்கு ஆசை இல்ல... இந்த சிட்டுவேஷன் ல வேற எப்படி வர வைக்குறது... அஹானாவ வச்சுட்டு மொத்தமா என்னால பேச முடியாது... ஏன் நீங்களே சொல்லுங்க... உங்களைப் பொறுத்தவரை அவன் ஒரு திருநங்கை... அதை நீங்க அவகிட்ட சொன்ன உடனே ' அப்படியா சரிங்கய்யா. காதலும் வேணாம் ஒண்ணும் வேணாம் னு போயிடுவாளா... ' .
அதனால தான் சொல்றேன். அஹானாவுக்கு என்னைய தெரியும்... தெரிஞ்சவங்க என்ற முறையில் பார்க்க வந்ததா இருக்கட்டும். மற்றதை பிறகு பார்த்துக்கலாம். இப்போதைக்கு அவ முன்னால எதையும் பேச வேணாம்... அவளுக்கு உண்மையை நானே விளக்குறேன்... என்னைய நம்புங்க... " என்றவள் மேலும் வேண்டிக் கொள்ள, அவனும் ஒப்புக் கொண்டான்.
வெளியே வந்தவன், " கொஞ்சம் நேரம் பொறுங்க... நர்ஸ் பல்ஸ் செக் பண்றாங்க... அப்புறமா உள்ள போகலாம் " என்றவன் ஆரியனுக்குக் கண் காட்ட, தனியே வந்தான்.
" எதுக்குடா தனியா கூப்ட... "
" அந்தப் பொண்ணு அஹானா கிட்ட எதையும் சொல்ல வேணாம்னு சொல்றா... அஹானாவ ரொம்ப உரிமையா பேசுறா... என்ன னு சரியா சொல்ல தெரியல " என்றவன், சில்வியா கூறியவற்றைச் சொல்ல, ஆரியனும் " ஓகே... என்ன நடக்குதுனு பாக்கலாம்... இப்போதைக்கு சில்வியா சொன்னது போலவே பண்ணலாம் " என்றவன், சமரனிடமும் சஹானாவிடமும் கூற , அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட , அதற்கு ஒப்புக்கொண்டனர். மேலும் சஹானாவிற்கு சில்வியா காணாமல் போனதோ, சித்தாராவிற்கு நிகழ்ந்தவையோ தெரியாததால் அவளிடம் ஏதும் சொல்லவில்லை.
அஹானாவும் சஹானாவும் வந்ததும் அனைவரும் சில்வியாவின் அறைக்கு முதலில் செல்ல , கையில் டிரிப்ஸூடன் இருந்தவளைக் கண்ட அஹானா , " அக்கா " என்று ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொள்ள, பார்த்துக் கொண்டிருந்தோர் அதிசயமாகக் கண்டனர்.
" வா அனாக்குட்டி... வா வா.. இப்ப தான் இந்த அக்காவ பாக்க தோணிச்சா " என்ற சில்வியாவின் குரலில் சிறு பிசிறும் இல்லை... தன் வீட்டுக் குழந்தையை உரிமையாகக் கண்டித்துக் கேட்கும் அன்புத்தமக்கையின் பாசம் நிறைந்திருந்தது.
" அச்சோ அப்படியெல்லாம் இல்ல க்கா... காலேஜ் போறேன் இல்லையா... "
" அப்படியா... அப்ப இது என்ன " என்றவள் தனது கைப்பேசியில் இருந்து கவினும் அஹானாவும் சேர்ந்து பைக்கில் செல்லும் புகைப்படத்தினை ரகசியமாகக் காட்ட, பெரிய ஆப்பிள் பழம் போல கண்களை விரிக்க , நக்கலாகச் சிரித்து வைத்தாள் சில்வியா... சில்வியாவின் கையிலிருந்த அலைபேசியைப் பிடுங்கியவள் அந்தப் புகைப்படத்தை அழித்துவிட்டு காதில் ரகசியமாக, " இத சித்தாரா அக்கா கிட்ட சொல்லாதீங்க என் செல்லம்ல... நானே எப்படி சொல்ல னு முழிச்சுட்டு இருக்கேன் " என்று சற்றே " என்று சற்றே வருத்தமாகக் கூறினாள்.
அதுவரை ரகசியம் காத்தவள், " அப்ப இந்த சஹானா அக்கா தேவையில்லையாடா... " என்று சத்தமாகக் கேட்டு வைக்க, சஹானா அஹானாவைக் கூர்மையாகப் பார்த்து வைத்தாள்.
" அ... அ.. அப்படி இல்ல... " என்ற அஹானா அதிகமாய்த் திணறினாள்.
" அப்ப சித்தாரா கிட்ட சொல்ல முழிக்குற.. சனா அக்கா கிட்ட சொல்லிட்டியா என்ன... " சில்வியா
" என்ன என்கிட்ட சொல்லணும்... என் அனா எல்லாம் சொல்வாளே " என்று அஹானாவிற்காகப் பரிந்துபேச , அஹானாவிற்கோ சற்று தலைக்குனிவாக இருந்தது. தனக்காக குடும்ப வாழ்க்கையை ஏற்க தயங்கியவள் மற்றும் மறுத்தவளும்கூட சஹானா. ஆனால் தற்பொழுது தான் அதை மறைத்து விட்டோமே என்று தோன்றியது.
அஹானா தயங்கி நிற்பதைக் கண்டவள், " குட்டிமா நீ இப்ப சொல்ல வேணாம்... பிறகு நீயா வந்து என்ன சொல்லணுமோ சொல்லு " என்றிட, அஹானா தலைகுனிந்து நின்று கொண்டாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரியன் சமரனிடம் அவர்கள் இல்லாதபோது நடந்த காரியங்களைக் கூறியதோடு, சமரன் சொல்ல தயங்கியவற்றை அஹானாவின் வாயாலே சொல்ல வைத்ததையும் குறித்துக் காட்டினான்.
சில நிமிடங்கள் அடுத்து மௌனமாகக் கழிய, " சரி குட்டிமா ... உன்ன பாக்கணும்னு தோணிச்சு. அதான் ஆரியன் அண்ணா கிட்ட கேட்டேன். நீ காலேஜ் கிளம்பு. நல்லா படி. சனா அக்கா , பிரதீபா அக்கா போல சொந்த கால் ல நிக்கணும்... நம்ம படிப்பு நம்ம நிலையை உயர்த்தணும். அடுத்தவங்களைச் சாராம வாழ வழி வைக்கணும். புரியும் னு நம்புறேன் " என்று கூறி வழியனுப்ப எத்தனிக்க, " நான் போறது இருக்கட்டும். சித்தாரா அக்கா எங்க... கொஞ்ச நாள் முன்ன ஒரு ஹோம் ல பாத்தேன். அப்புறம் ஒரு மெசுஜ் கூட இல்ல " என்று குற்றம் சாட்ட , " அவ ஒரு வீட்டில் வேலைக்கு போறாடா... நீ கிளம்பு "
என்று லாவகமாக அனுப்பி வைத்தாள். அவளது பேச்சுக்கு மறுபேச்சு பேசாது கிளம்பிய அஹானாவைக் கண்டு மற்றோர் அதிர்ந்து பார்க்க, சில்வியாவோ உதட்டில் மாறாத புன்னகையோடு பார்த்திருந்தாள்.
தொடரும்...
*_____________________________________________*
கதையைப் பற்றிய நிறை குறைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன் மக்களே.
- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன்
