• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 13:

இல்லாமலே வாழ்வது

இன்பம் இருந்தும்
இல்லை என்பது
துன்பம் அஹிம்சை
முறையில் என்னை

கொள்ளாதே‌…

“சொல்லுங்கப்பா என்ன விஷயம்?” என்று சிவப்பிரகாசத்தின் முகத்தை பார்த்தபடி இருந்தாள் கனி.

பிறந்தநாள் விழா முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது.

“பாப்பா அது அப்பா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்றதும் கனியின் முகத்தில் அதிர்ச்சியின் சாயல்‌.

“அப்பா?” என்று அதிர்ந்து பார்க்க,

“கடைசி வரைக்கும் இப்படியே இருந்திட முடியாது பாப்பா. வாழ்க்கையோட கடைசி கட்டத்துல கண்டிப்பா ஒரு துணை தேவைப்படும்”

“அப்பா கல்யாணம் பண்ணாம நம்மால இருக்க முடியாதா? எத்தனையோ பேர் இப்போ கல்யாணம் பண்ணாம சந்தோஷமா இருக்காங்கப்பா”

“அதெல்லாம் தூரத்துல இருந்து பாக்க தான் நல்லா இருக்கும்.‌ கிட்ட போனா தான் அவங்க கஷ்டம் தெரியும். சாப்பிட்டியான்னு கேக்க கூட ஆள் இல்லாத தனிமை ரொம்ப கஷ்டம்”

“எதையும் கஷ்டம்னு நினைச்சா தான் கஷ்டம். என்னால சுயமா தனியா என் வாழ்க்கையை வாழ முடியும்பா. அதுவும் என்னோட ஆசை கனவு இதெல்லாம் தெரிஞ்ச நீங்களே கல்யாணம் பத்தி பேசுறீங்களே”

“கல்யாணம் பண்ணிக்கிட்டு யாரும் சாதிக்கிறது இல்லையா?”

“எல்லோருக்கும் அது மாதிரி சப்போர்ட்டிவ் லைஃப் பார்னர் அமையிறது இல்லை”

“நான் உனக்கு உன்னை புரிஞ்சு நடந்துக்குற ஒரு நல்ல பையன பாக்குறேன்”

கனியிடத்தில் பெருத்த அமைதி.

“என்னம்மா இன்னும் என்ன யோசனை. அப்பாவுக்காக ஓகே சொல்லேன்”

“இல்லை எனக்கு என்ன அவ்ளோ வயசு ஆகிடுச்சா? கொஞ்சம் நாள் போகட்டும்”

“இல்லைம்மா இந்த ராட்சஷிங்ககிட்ட உன்னைவிட்டுட்டு போக பயமா இருக்கு. அன்னைக்கு உள்ள வச்சு பூட்டுன மாதிரி வேற ஏதாவது பண்ணிட்டா நான் என்ன பண்ணுவேன். உன் மேல அப்பா எவ்ளோ பாசம் வச்சு இருக்கேன்னு தெரியும் தான?”

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பா. அதுதான் பிராப்ளம்னா நான் வேற எதாவது ஹாஸ்டல் மாதிரி பாத்து தாங்கிக்கிறேன்”

“உன் அப்பா உயிரோட இருக்கும் போது நீ ஹாஸ்டல்ல தங்குறது நான் இல்லாதததுக்கு சமம்”

“அப்பா ஏன் இப்படிலாம் பேசுறீங்க”

“நீ சொல்ற விஷயம் தான் என்னை பேச வைக்கிது பாப்பா. என்னை நம்பு நான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தர்றேன். ஏற்கனவே உன்னை என்கூட வச்சு பாக்க முடியாத கையாலாகாதவனா போய்ட்டேன்னு நான் பீல் பண்ணிட்டு இருக்கேன்”

“அப்பா அதெல்லாம் இல்லை. நீங்க எனக்கு எப்பவுமே பெஸ்ட்ட தான் கொடுத்து இருக்கிங்க. நான் மீனாட்சி பாட்டியோட ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நான் இங்க இருந்திருந்தா கூட அவ்ளோ சந்தோஷமா இருந்திருப்பேனான்றது சந்தேகம் தான்”

“நீ நான் வருத்தப்பட கூடாதுனு சொல்றேன்னு எனக்கு தெரியும். உனக்கு அம்மா அப்பா தம்பி தங்கச்சி எல்லாரோடவும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழணும்னு ஆசை இருந்ததுனு எனக்கு தெரியும்”

கனியிடத்தில் மௌனம் கோலோச்சியது.

“நீ சின்ன வயசுல ஆசைப்பட்டதை என்னால கொடுக்க முடியாம போய்டுச்சு. உன்னை ஆசிரமத்துல இருந்து அழைச்சிட்டு வரும் போது உனக்கு அழகான குடும்பத்தை கொடுக்குறேன்னு வாக்கு கொடுத்தேன்.‌ என்னால அதை நிறைவேத்த முடியலை. இப்போவாது அதை நிறைவேத்துறேன்” என்றவரது குரல் கரகரக்க,

“அப்பா” என்று தானும் கலங்கியவள் அவரது கையை பிடித்து கொண்டாள்‌.

இவர்களது உரையாடலை கேட்டபடி உள்ளே வந்த பிரவீன்,

“அப்பா ஏன் இப்படி எமோஷனல் ஆகுறிங்க. கண்டிப்பா நாம அக்காக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கலாம்” என்று தானும் மற்றொரு கையை பிடித்து அமர்ந்தான்.

“உங்க ரெண்டு பேர் மாதிரியே வீட்டுல மத்தவங்களும் ஒத்துமையா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”

“அதெல்லாம் இந்த ஜென்மத்தில நடக்காது. அவங்க என்னைக்குமே அக்காவ பத்தி புரிஞ்சுக்க மாட்டாங்க”என்றவன்,

“அக்கா அப்பா இவ்ளோ தூரம் சொல்றாங்கல்ல கல்யாணத்துக்கு ஓகே சொல்லு” என்று தானும் கூற,

சில நொடிகள் மௌனத்தில் கடத்தியவள்,

“சரிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றாள்.

இதனை கேட்டதும் இருவரது முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.

“ரொம்ப சந்தோஷம் பாப்பா. நீ சம்மதம் சொல்லிட்டேல சீக்கிரமா ஒரு நல்ல பையனை தேடி பிடிச்சு உன் கண் முன்னாடி நிறுத்துறேன். நான் பாக்குற பையன கண்டிப்பா உனக்கு பிடிக்கும்” என்றதும் கனி மௌனமாய் தலையசைக்க,

பிரவீன், “அப்பா நம்ம வீட்லயே மாப்பிள்ளைய வச்சிக்கிட்டு ஏன் வெளியே தேட்றீங்க” என்க,

சிவப்பிரகாசம் புரியாது நோக்க,

“அப்பா நம்ம பார்த்தீ அத்தான் இருக்காரே.‌ எங்க தேடுனாலும் அத்தான் மாதிரி ஒருத்தரை அக்காக்கு பொறுத்தமா கண்டுபிடிக்க முடியாது” என்றிட,

சடுதியில் கனியின் முகத்தில் அதிர்ச்சி வந்து போனது.

“பிரவீன் என்ன பேசுற நீ” என்று அதட்ட,

“என்ன பேசுறேன். சரியாதான் பேசுறேன் ஏன்பா?” என்று தந்தையை காண,

ஒரு சில கணங்கள் அமைதிக்கு பிறகு,

“நீ சொல்றது சரிதான் பார்த்தீயை விட பெஸ்டா யாரையும் பாக்க முடியாது தான். ஆனால் உன் அம்மா பாட்டி ப்ரத்யூ ஏன் கிரியும் என் தங்கச்சியுமே ப்ரத்யூக்கும் பார்த்தீக்கும் தான் மேரேஜ் பண்ணனும்னு ஆசைப்பட்றாங்க” என்க,

“அவங்க ஆசைப்பட்டா போதுமா? அத்தானுக்கு விருப்பம் இருக்க வேணாமா?”

“அவனுக்கு விருப்பம் இருக்க மாதிரி தான் கிரியும் சொன்னான்”

“ஓ…” என்று பிரவீன் இழுக்க,

கனியின் தேகம் சற்று இறுகியது.

“எனக்கும் இந்த ஆசை இருந்துச்சு ஆனா சம்மந்தப்பட்டவங்களுக்கு பிடிக்காம எப்படி கல்யாணம் பண்ண முடியும். பார்த்தீக்கு கனியை கல்யாணம் பண்ணி கொடுத்தா இந்த உலகத்திலே அதிகமா சந்தோஷப்பட்றது நானா தான் இருப்பேன். ரெண்டு நாள் முன்னாடி உங்கம்மா ப்ரத்யூக்கும் பார்த்தீக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமானு என்கிட்ட கேட்டா நான் தான் பெரிய பொண்ணு இருக்கும் போது சின்னவளுக்கு பண்ண முடியாதுனு சொல்லி வச்சிருக்கேன்” என்று சிவப்பிரகாசம் கூற,

“ரெண்டு பேரும் நிறுத்துங்க. ஏன் நடக்காத காரியத்தை பேசிட்டு இருக்கிங்க. அவர் சம்மதத்தை பத்தி மட்டும் பேசிட்டு இருக்கிங்க. நான் சம்மதிக்க வேணாமா? இந்த உலகத்துல அவரை தவிர யார வேணா நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்றவள்,

“அப்பா நீங்க வேற இடத்துல பாருங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அழுத்தம் திருத்தமாக கூறிட,

இருவரும் அவளது பதிலில் ஒரு கணம் திகைப்பாக பார்க்க,

அப்போது தான் தான் கொஞ்சம் குரல் உயர்த்திவிட்டதை உணர்ந்தவள்,

“ஏற்கனவே இவங்களுக்கு என்னை பிடிக்காது. இதுல இந்த விஷயம் தெரிஞ்சா ப்ரத்யூ வாழ்க்கையை நான் தட்டி பறிக்கிறேன்னு பேசுவாங்க” என்று விளக்கம் கொடுக்க,

“அதுவும் சரிதான் மா” என்று சிவப்பிரகாசம் ஒத்து கொண்டார். பிரவீன் மட்டும் எதுவும் கூறவில்லை.

சிவப்பிரகாசம், “உனக்கு மாப்பிளையை பத்தி எதுவும் ஆசை இருக்காம்மா?” என்று வினவ,

“ஆமா பா இருக்கு” என்க,

“பார்றா என் அக்காக்கு நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும் போல. சொல்லு என்னன்னு அப்படியே ஒரு ஆளை தேடி கண்டு பிடிக்கிறோம்” என்றான் பிரவீன்.

“முக்கியமான கண்டிஷன் பையன் ரிச்சா இருக்க கூடாது‌. மிடில் கிளாஸ் பேமிலியா தான் இருக்கணும்” என்றதும் அதிர்ந்து இருவரும் ஏதோ கூற வர,

“நான் சொல்லி முடிச்சிக்கிறேன்”
என்றவள்,

“நீங்க உங்க லெவெலுக்கு பாக்க கூடாது. நான் ஆசிரமத்தில வளர்ந்து படிச்சு ஜாப் போயிருந்தா எனக்கு எப்படி ஒரு லைஃப் அமைய வாய்ப்பு இருக்கோ அது மாதிரி பாக்கணும். கண்டிப்பா மிடில் கிளாஸா தான் இருக்கணும்”

“...”

“அப்புறம் அவங்ககிட்ட தெளிவா சொல்லிடுங்க. உங்க வசதிய பாத்து எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ண கூடாதுனு. பணத்தை பாக்காம குணத்துக்கு மதிப்பு கொடுக்குற ஆளா இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”

“...”

“கல்யாண செலவு என்னோட சேவிங்க்ஸ் தான். சிம்பிளா பண்ணிக்கலாம். அப்புறம் பெருசா நான் எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணலை. இருக்க வீடு இருந்தா ஒகே. இல்லைன்னாலும் பிராப்ளம் இல்லை. நாங்க சேர்ந்து கட்டிக்கிறோம். ஓரளவு குடும்பத்தை பாத்துக்குற அளவுக்கு படிச்சு சம்பாதிச்சா போதும். மத்தபடி அப்பியரன்ஸ் வைஸா குட்டையா ஹைட்டா கருப்பா வெள்ளையா இந்த மாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லை”

“...”

“அழகு மனசுல தான் இருக்கு. அப்புறம் நான் இப்போ பண்ணிட்டு இருக்க என்னோட சாரிட்டி ஒர்க்க கன்டினியூ பண்ணுவேன். அதுக்கு எந்த தடையும் சொல்ல கூடாது” என்று முடித்துவிட்டு அவர்களை காண,

இருவரது முகத்திலும் அப்பட்டமான வருத்ததின் சாயல்.

“ஏன் பாப்பா உனக்கு இதுவரைக்கும் நடந்ததை வச்சு தான் இப்படி ஒரு கண்டிஷன் போட்டு இருக்கியா?”

“ஆமாப்பா. முக்கியமான விஷயம் என்னை தத்தெடுத்து தான் வளர்க்குறிங்கன்னு தெளிவா சொல்லிடுங்க” என்று எந்த சலனமற்று கூற,

“அக்கா” என்று அவளது கையை இறுக பற்றி கொண்டான் பிரவீன்.

சிவப்பிரகாசம், “நான் ஒரு அப்பாவா லைப்ல தோத்துட்டேன்னு தோணுது”

“இல்லைவே இல்லை. ஆசிரமத்துல ஆநாதையா வாழ்ந்த என்னை தத்தெடுத்துட்டு வந்து சாப்பாடு போட்டு படிக்க வச்சு ரொம்ப நல்ல வாழ்க்கையை கொடுத்து இருக்கிங்க.‌ அதுக்கு மேல அக்கா அக்கான்னு என்னையே சுத்தி வர ஒரு தம்பியை கொடுத்து இருக்கிங்க” என்று புன்னகையுடன் தோளோடு பிரவீனை அணைத்து கொண்டாள்.

அந்த புன்னகையின் பின்னே என்ன இருந்தது என்று இருவருக்கும் புரியவில்லை.

இருவருக்கும் சில கணங்கள் பேச்சு வரவில்லை.

“ப்பா இதுக்கு தான் நான் கல்யாணம் வேணாம்னு சொன்னேன்” என்றதும்,

“இல்லை பாப்பா நீ சொன்னதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். நீ சொல்றதும் சரிதான் உன்னை உனக்காகவே ஏத்துக்கிற‌ ஒரு பையனை சீக்கிரமா கண்டுபிடிச்சு தர்றேன்” என்று தானும் மொழிந்தார்.

பிறகு பேச்சு நீள உறங்க நேரமாவதை உணர்ந்து இருவரும் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியதும் கதவை பூட்ட கனி முயல,

“அக்கா” என்று அவள் முன் வந்து நின்றான் பிரவீன்.

“என்ன பிரவீன்”

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்?”

“சொல்லுடா என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”

“உனக்கு அத்தானை பிடிக்காதா?”

“ஏன் இந்த கேள்வி?”

“இல்லை உனக்கு அத்தானை ரொம்ப பிடிக்கும்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்” என்றதும் நொடியில் கனியிடத்தில் முக மாறுதல் வந்து போனது.

சடுதியில் வழக்கமான புன்னகையை வதனத்தில் கொண்டு வந்தவள்,

“பிடிக்கும் தான் ஆனால் கல்யாணம் பண்ற அளவுக்கு இல்லை” என்றவள்,

“டைம் ஆச்சு போய் தூங்கு” என்று அவனிடம் கூறியவள் கதவை பூட்டி அதன் மேல சாய்ந்து நின்று விழிகளை மூடி கொண்டாள்.

விழிகளுக்குள் வந்து நின்றான் பார்த்தீபன் கல்லூரி காலத்தில் சற்று ஒல்லியான தேகத்துடன் சிரிப்பு மின்னும் விழிகளுடனும்.

சடுதியில், “சீ என்னை அத்தான்னு கூப்பிடாத” என்று அருவருப்பு தாங்கிய அதே முகமும் குரலும்.

பட்டென்று தலையை உலுக்கியவள் சென்று படுக்கையில் விழுந்து போர்வையை முகத்தோடு சேர்த்து போர்த்தி விழிகளை மூடி உறங்க முயற்சித்தாள்.

அதன் பிறகு நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.

ப்ரத்யூ மற்றும் பிரவீன் இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டிருந்தனர்.

ப்ரவீன் தந்தையோட அலுவலகத்திற்கு சென்று வர ப்ரத்யூ தோழிகளுடன் ஊர் சுற்றி கொண்டிருந்தாள்.

கனிக்கு வாழ்க்கை அதன் போக்கில் நன்றாக சென்றது. இன்று அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்திருந்தாள்.

காரணம் அவளை காண மகேஷ் ஊரிலிருந்து வருகிறேன்.

அவள் சென்னை வந்ததில் இருந்து இப்போது தான் முதல் முறை பார்க்க வருகிறான்.

அந்த மகிழ்ச்சி கனியின் முகத்தில் அழகாய் பூத்திருந்தது.

மதியமே விடுப்பு எடுத்திருந்தவள் அவனை காண ரயில்வே நிலையம் நோக்கி சென்றாள்.

இதுவரை இவ்வளவு நாட்கள் அவனை பிரிந்து இருந்ததில்லை.

முதல் முறை பிரிவின் பின்னர் அவனை சந்திக்க போவதால் ஏனென்றே தெரியாத ஒருவித மகிழ்ச்சி.

தனக்கென யாருமே இல்லை என்று வருந்தி மறுகிய போது தோழனாக தோள் கொடுத்தவன்.

எந்த சூழ்நிலையிலும் உனது பக்கம் தான் நிற்பேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறியவன்.

தனது வாழ்க்கையில் அவனது பங்கு இன்றியமையாதது என்று அடிக்கடி நினைத்து கொள்வாள்.

ரயில் வந்து நிற்க ஒவ்வொருவராக இறங்கி வர துவங்கினர்.

இவள் மகேஷை தேடியபடி விழிகளை சுழலவிட இரு கரம். அவளது விழிகளை மூடியது.

அதில் இவளது புன்னகை இமை நீள,

“மகேஷ்” என்று சிரிப்புடன் திரும்பி அவனது தோளை அணைத்து கொண்டாள்.

“என்ன கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்க?” என்றிட,

“சரிதான் அதை நான் கேக்கணும்? ஏன் இப்படி வெயிட் லாஸ் பண்ணிட்ட? என்ன இப்படி இருந்ததாதான் மினி பிடிக்கும்னு சொல்லிட்டாளா?” என்று சிரிக்க,

“அதெல்லாம் இல்லை. நான் தான் உன்னை பாக்காத ஏக்கத்துல வெயிட் லாஸ் பண்ணிட்டேன்” என்று பதிலுக்கு சிரித்தான்.

“நல்லா உருட்றடா. அப்புறம் ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? மினி வீட்ல என்ன சொல்றாங்க?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க” என்றவன்,

“என்ன சொல்லுவாங்க வேற கேஸ்ட்டுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க” என்று சற்று சலிப்புடன் கூற,

“சீக்கிரம் சரியாகிடும். உன்னை பத்தி புரிஞ்சுக்கிட்டு அவங்களே கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க” என்று நண்பனுக்கு ஆறுதல் கூறினாள்.

“சரி பாப்போம்” என்றவன்,

“பசிக்கிது வா எங்கயாவது போய் சாப்பிடுவோம்” என்க,

“நானே என் கையால உனக்கு சமைச்சு கொண்டு வந்திருக்கேன்” என்றாள் கனி.

“ரியல்லி” என்று மகிழ்ந்தவன்,

“நானே கேக்கணும்னு நினைச்சேன். ஆனால் எதுக்கு உனக்கு சிரமம்னு தான் கேக்கலை” என்க,

“உனக்கு சமைக்கிறதுல என்ன எனக்கு சிரமம் வந்திட போகுது” என்று நண்பனை கடிந்தவள்,

“வா பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க போய் சாப்பிடுவோம்” என்க,

இருவரும் மகிழ்வுடன் பேசியபடி பூங்காவை அடைந்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர்.

கனி உணவை எடுத்து கொடுக்க மகேஷ் தான் உண்டபடி அவளுக்கும் ஊட்டி கொண்டிருந்தான்.

இந்த பழக்கம் இவர்களது பள்ளி பருவத்தில் இருந்தே தொடர்கிறது.

“போதும் டா நான் சாப்டேன். நீ சாப்பிடு” என்று கனி மறுக்க,

“அது நீயா சாப்பிட்ருப்ப. இது நான் ஊட்டிவிட்றது” என்றபடி ஊட்டி விட்டான்.

இருவரும் வாயிலுக்கு நேராக அமர்ந்து இருந்ததால் அந்த வழியாக போய் கொண்டு இருந்த பார்த்தீபனது விழியில் இக்காட்சி பட்டது.

புருவத்தை சுருக்கி இருவரையும் கண்டவன் கனியின் முகத்தில் இருந்த புன்னகையையும் ஒரு நொடி கண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

ஏழு மணி வரை அவனுடன் சுற்றி பார்த்து இரவுணவை முடித்து ரயிலில் ஏற்றிவிட்டு தான் வீட்டிற்கு வந்தாள்.

அவள் நுழைந்ததுமே சிவா, “பாப்பா போய் ப்ரெஷ்ஷப் ஆகிட்டு அப்பாக்கு கால் பண்ணு உன்கிட்ட பேசணும்” என்க,

“சரிப்பா” என்று யோசனையுடன் தலை அசைத்தவள் குளித்து உடை மாற்றி தேநீரை அடுப்பில் வைத்துவிட்டு தந்தைக்கு அழைத்தாள்.

உடன் பிரவீனும் வர இருவருக்கும் தேநீரை ஊற்றி கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்து கொண்டு எதிரில் அமர்ந்தவள்,

“சொல்லுங்கப்பா” என்று கேட்க,

“என்னக்கா பேஸ் பிரைட்டா இருக்கு” என்று வினா தொடுக்க,

“மகேஷ் வந்திருந்தான் அவனை பாத்திட்டு வந்தேன்” என்று புன்னகைத்தாள்.

“ஓ மகேஷ் அண்ணா தான் இந்த பிரைட்னெஸ்க்கு காரணமா” என்றவன்,

“அப்பா சொல்றதுள்ள இன்னும் பிரைட் ஆக போற” என்று சிரிக்க,

இவள் தந்தையை புரியாது நோக்க,

“பைனல்லி நாங்க உனக்கான லைஃப் பார்டனரை கண்டுபிடிச்சிட்டோம்” என்க,

இவளது இதயத்தில் திடீரென ஒரு நடுக்கம். அதிர்ச்சியை முகத்தில் அப்பட்டமாய் காண்பித்தவள்,

“என்ன?” என்க,

“ஆமா பாப்பா. நாங்க உன் கண்டிஷன்க்கு ஏத்த மாதிரி ஒரு பையனை தேடி கண்டு பிடிச்சுட்டோம். ரொம்ப நல்ல பையன். நம்ம கிரி இருக்கான்ல அவன் கம்பெனில தான் ஒர்க் பண்றான். நாலு வருஷமா வேலை பாக்குறான்‌. கிரிதான் அந்த பையனை கைக்காட்டுனான்”

“...”

“நானும் விசாரிச்சேன். அதுவுமில்லாம டிடெக்டிவ் மூலமா மூனு மந்த் கம்ப்ளீட்டா வாட்ச் பண்ணி ரிப்போர்ட் வாங்குனேன். ஹீ இஸ் கம்ப்ளீட்லி குட் பர்ஸன். இதுல அந்த பையன் போட்டோ டீடெயில்ஸ் இருக்கு. எடுத்து பாரு” என்று நீட்ட,

கரங்களில் லேசான நடுக்கம் பரவுவதை உணர்ந்தவள் மனதை ஒரு நிலைப்படுத்தி சலனமற்ற முகத்துடன் அதனை பெற்று கொண்டாள்.

“அக்கா எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு. நாங்க நேர்ல பாத்து பேசுனோம். ரொம்ப ஜென்யூன் கா. உனக்கு நல்ல மேட்சா இருப்பாருன்னு தோணுது. உனக்கு ஓகேன்னா இவரையே அத்தான்னா பிக்ஸ் பண்ணிக்கிறேன்” என்று சிரித்தான்.

தானும் மையமாக புன்னகைத்து வைத்தாள் கனி.

“நாளைக்கு ஈவ்னிங் உன் கம்பெனி பக்கத்துல இருக்க காஃபி ஷாப்க்கு வர சொல்லி இருக்கேன். ரெண்டு பேரும் பேசி பார்த்து ஒரு நல்ல முடிவு சொல்லுங்க” என்று கூற,

எல்லாம் வேக வேகமாக தன் கை மீறி செல்வதை உணர்ந்தவள் அமைதியாக தலையசைத்தாள்.

பிரவீன், “அக்கா உனக்கு இவரை கண்டிப்பா பிடிக்கும் நாளைக்கு நீ ஓகே தான் சொல்லுவ” என்று சிரிக்க,

இவளுக்கு செயற்கையாக கூட சிரிப்பு வரவில்லை.

“நாளைக்கு பேசிட்டு சொல்றேன்” என்று முடித்துவிட,

அடுத்து அவர்கள் பேசிய எதுவும் கவனத்தில் பதியவில்லை.

அவர்கள் இருவரும் கிளம்பியதும் அந்த உரையை எடுத்தவளுக்கு விரல்களில் லேசான நடுக்கம் பரவியது.

அச்சத்தில் தொண்டை குழி ஏறி இறங்கியது. விழி மூடி தன்னை சமநிலை படுத்தியவள் அதனை அப்படியே மேசை மேல் வைத்துவிட்டு எழுந்து சென்று பால்கனி கம்பியை பிடித்தவாறு இருளை வெறித்தாள்.

அவர்களது வற்புறுத்தலால் சம்மதம் சொன்னவளு
க்கு இத்தனை விரைவில் ஒருவனை கண்டறிந்து நிறுத்துவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சடுதியில் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

“நான் பெரிய பொண்ணு ஆனதும் என் பார்த்தீ அத்தானை தான் மேரேஜ் பண்ணிப்பேன்” என்று பத்தாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பு தோழி ரோஸியிடம் கூறியது செவியில் வந்து மோத விழிகளை இறுக மூடி கொண்டாள்…



 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Mozhi parthi kita ipadi harsh ah paesurathu ku karanam onnu avan ah ava kita irundhu vilaki vaika num na ra ennam .
Innonu mozhi indha veetu ah vittu pogum pothu nadantha sambhavam um parthi aval ah enna aathan nu sollatha nu kobam sonna varthai yum than nallavae theriyuthu.

Mozhi avan ninaivu oda vae ava life ah vazhunthu da lam nenachikitu irundha aana ava appa ivolo sikiram mapillai ah kondu varuvaaru nu nenaikala ah parpom enna aaguthu nu
 
Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
Aduthu enna kalyanam than 😍😂
 
Top