• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 10

Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
ஜென்மம் 10:

எந்தன் நெஞ்சில் நீங்காத

தென்றல் நீ தானா?

“ப்ரத்யூ இந்தா இந்த டைமண்ட் நெக்லஸ போட்டுக்கோ இது தான் இந்த ட்ரெஸ்க்கு மேட்சா இருக்கும்” என்று கோதை கூற,

“ஆமா ப்ரத்யூ அம்மா சரியாதான் சொல்றாங்க இதை போட்டுக்கோ அப்போதான் நல்லா ரிச்சா தெரியும். இன்னைக்கு வர்றவங்க கண்ணு எல்லாம் உன் மேல தான் இருக்கும்” என்று கற்பகம் மொழிய,

அங்கு மெத்தை மேல வைக்கப்பட்டிருந்த‌ பல வகையான நகைப்பெட்டியில் இருந்து வெள்ளை கற்கள் பதித்த வைர கழுத்தணியை எடுத்து அணிந்து பார்த்தாள்.

அது அவளது உடைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. கண்ணாடியில் நின்று முன்பும் பின்பும் திரும்பி அழகு பார்த்தாள்.

அவளது ஆகாய நீல நிற உடைக்கு அது வெகுவாகக் பொருந்தி இருந்தது.

அவளுக்காகவே பார்த்து பார்த்து பிரபலமான ஆடை வடிவமைப்பாளரை வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது அந்த உடை.

பார்த்தாலே தெரிந்துவிடும் கண்டிப்பாக அதன் மதிப்பு லட்சங்களில் தான் இருக்கும் என்று. அவள் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரது உடையுமே விலை உயர்ந்ததாக இருந்தது.

கோதை கூட பட்டு சேலையில் அதற்கு தோதான நகைகளுடன் தான் தயாராகி இருந்தார்.
கற்பகம் சொல்லவே வேண்டாம் தனது வெளித்தோற்றத்தில்தான் தன்னுடைய பணமதிப்பு தெரியும் என்பதால் ரூபி நகைகளை அணிந்து பிரத்யூவிற்கு போட்டியாக தயாராகி இருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகத் தயாராகிக்கொண்டு இருந்தனர்.

பிரத்யூ மற்றும் பிரவீனின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு பெரிய ஐந்த நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவப்பிரகாசம், “கற்பகம் இன்னும் எவ்ளோ நேரம்? கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமா ரெடியாகிட்டு இருக்கிங்க” என்று மொழிய,

“இதோ பிப்டீன் மினிட்ஸ் டாடி” என்று பிரத்யூ குரல் கொடுத்தாள்.

“இதோட பத்து பிப்டீன் மினிட்ஸ் சொல்லிட்டிங்க. இப்படியே போனா நைட் தான் நாம ரீச் ஆவோம்” என்று பொறுமை இழந்து கத்த,

இதற்கு மேலும் அவரது பொறுமையை சோதிக்க முடியாது என நினைத்து இறுதி கட்ட அலங்காரத்தை செய்தனர்.

இங்கு கோட் சூட்டில் அழகாக தயாராகி இருந்த பிரவீன் வாயிலில் தமக்கையின் வருகைக்காக காத்து இருந்தான்.

இன்று அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து இருந்தவளுக்கு மதிய நேரம் வேறு ஏதோ வேலை வந்துவிட மாலை சீக்கிரமாக வந்துவிடுவதாக கூறி சென்றாள்.

ஆனால் இன்னும் வந்தபாடில்லை. அழைத்து பேசியபோது வந்து கொண்டிருப்பதாக கூறினாள்.

“ப்ச் இந்த அக்கா ஏன் இப்படி பண்றாங்க. இதுக்கு தான் போகும் போதே போக வேணாம்னு சொன்னேன்” என்று தனக்கு தானே புலம்பியவன் அலைபேசியை எடுத்து கனிக்கு அழைக்க,

அதனை ஏற்றவள் பிரவீன் பேசுவதற்கு முன் முந்தி கொண்டு,

“பிரவீ நம்ம ஏரியாக்குள்ள வந்துட்டேன் டூ மினிட்ஸ் டா. பர்த்டே பாய் டென்சன் ஆகாத. நான் வேணும்னு பண்ணலை. சீக்கிரமாக கிளம்ப ட்ரை பண்ணேன் பட் லேட் ஆகிடுச்சு” என்று தன்னிலை விளக்கம் தர,

கனி இவ்வளவு தூரம் சொல்கிறாள் என்றால் முக்கியமான விடயமாக தான் இருக்கும் என்று உணர்ந்தவன்,

“சரிக்கா கொஞ்சம் சீக்கிரம்” என்று அழைப்பை துண்டித்தான்.

சரியாக ஐந்தாவது நிமிடத்தில் தனது இரு சக்கர வாகனத்தினை அவனிடத்தில் நிறுத்தியவள்,

“பார்றா என் தம்பியை ஹீரோ மாதிரி இருக்கான்” என்று சிரிப்புடன் அருகில் வர,

புன்னகையுடன், “பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்” என்று மொழிந்தான் பிரவீன்.

“டேய் இதுல பொய் சொல்றதுக்கு என்ன நீ எனக்கு எப்பவுமே ஹீரோ தான்” என்று அவனது தலையை வருட,

“நம்பிட்டேன்” என்றவன்,

“ஏன் இவ்ளோ லேட் கா” என்க,

“சாரி சாரிடா. நான் சொன்னேன்ல பிரபாகரன்னு ஒருத்தரை பாக்க போனேன்னு அவர் வர டைம் ஆகிடுச்சு. நமக்கு தான் வேலை ஆகணும்னு வெயிட் பண்ணி பாத்துட்டு வர்றேன்” என்க,

“சரிக்கா போய் சீக்கிரம் கிளம்பி வா. அங்க எல்லாரும் வர ஸ்டார்ட் பண்ணிடுவாங்க” என்க,

“இதோ போனவுடனே ரெடியாகி வர்றேன்”என்றவள் அறையை நோக்கி சென்றாள்.

வழியில் தந்தையிடமும் இரு வார்த்தை பேசி சென்றவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

இங்கு ப்ரத்யூ அவளது தாய் மற்றும் பாட்டியுடன் ஒரு வழியாக தயாராகி வந்தாள்.

தந்தையை கண்டதும், “டாடி நான் எப்படி இருக்கேன்” என்று ப்ரத்யூ வினவ,

“தேவதை மாதிரி இருக்கடா” என்றவருக்கு மகளை கண்டு மனம் நிறைந்தது.

கனி விடயத்தை தவிர மனைவி மீதும் மகள் மீதும் நிறைய பாசம் இருந்தது.

பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தான் செய்வார்.

ஏன் ப்ரத்யூவிற்குமே தந்தை என்றால் கொள்ளை பிரியம். அவரது அன்பிற்கு தான் தான் முதல் உரிமை கொண்டாட வேண்டும் என்பது தான் அவளது எண்ணம்.

மகனையும் மகளையும் கண்டவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பெருகியது. இப்போது தான் இருவரையும் கையில் வாங்கியது போல உள்ளது அதற்குள் இருபத்தி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.

“போதும் பிள்ளைங்களை ரசிச்சது டைம் ஆகிடுச்சு‌.‌வாங்க போகலாம் நாம போய் தான் எல்லாரையும் இன்வைட் பண்ணணும்” என்றார் கற்பகம்.

பிரவீன், “ம்மா அக்கா இன்னும் ரெடி ஆகலை. இப்போ தான் அவ வந்தா. அவளும் ரெடியாகட்டும் சேர்ந்து போகலாம்” என்க,

இத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி,

“சீ அவளை எல்லாம் ஒன்னா கூட்டிட்டு போறதா? அவ கூட எல்லாம் என்னால வர முடியாது” என்று முகத்தை சுளிக்க,

“ஆமா அவ ஒரு ஆளு அவளுக்கு வெயிட் பண்ண வேற செய்யணுமா? வாம்மா நம்ம போகலாம்” என்றாள் ப்ரத்யூ.

சிவப்பிரகாசம், “சரி நீங்க முன்னாடி போங்க நான் கனியை கூட்டிட்டு வர்றேன்” என்க,

“நோ நீங்களும் எங்க கூட வரணும்.‌ இல்லைனா வந்தவங்கிட்ட நீங்க உங்க மக‌ பர்த்டே பார்ட்டிக்கு வர விருப்படலைனு சொல்லிடுவேன்” என்று தீவிர குரலில் கூற,

நல்ல நாளில் அவருடன் சண்டை போட வேண்டாம் என்று தனது கோபத்தை கட்டுப்படுத்திய சிவா,

“பிரவீன் நீ இருந்து அக்காவ கூட்டிட்டு வா” என்க,

“நோ பிரவீன் என்கூட வரணும் இல்லைன்னா நான் வரவே மாட்டேன்” என்று கூறிவிட்டாள் ப்ரத்யூ.

இவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்பதை உணர்ந்த பிரவீனும் சிவப்பிரகாசமும் என்ன செய்வதென சிந்திக்க,

பிரவீன், “ப்பா நான் அக்காக்கிட்ட சொல்லிட்டு வர்றேன். அவ புரிஞ்சிப்பா” என்றவன் கனியின் அறையை நோக்கி சென்றான்.

உள்ளே நுழைய குளியலறையில் சத்தம் கேட்டது.

“அக்கா” என்று பிரவீன் குரல் கொடுக்க,

“என்ன பிரவீன்?” என்று வினவினாள்.

“அக்கா கீழே அம்மாவும் பிரத்யூவும் கிளம்பணும்னு ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்காங்க” என்று நடந்ததை கூற,

“சரிடா எந்த பிரச்சனையும் இல்லை. நான் கிளம்பி ஸ்கூட்டில வர்றேன். நீங்க முன்னாடி போங்க” என்க,

“சரிக்கா பாத்து வா‌. வழி தெரியலைன்னா எனக்கு கால் பண்ணு” என்றவன் கீழிறங்கி செல்ல,

எல்லோரும் கிளம்பினர். சரியாக மகிழுந்து வாயிலை தாண்டியதும்,

“அப்பா ஸ்டாப் பண்ணுங்க” என்று பிரத்யூ கூற,

“எதுக்கு டி” என்று கற்பகம் வினவ,

“ம்மா என் மொபைல ரூம்ல வச்சிட்டு வந்துட்டேன் போய் எடுத்திட்டு வந்திட்றேன்”என்க,

“ஏற்கனவே லேட் ஆகிடுச்சு இதெல்லாம் பாத்து எடுத்துட்டு வரமாட்டியா?” என்று கற்பகம் கடிய,

“ப்ச் ம்மா போனவுடனே வந்திட்றேன்” என்று இறங்கி வீட்டிற்குள் வந்தவள் மேஜை மேல் தான் வேண்டுமென்றே வைத்துவிட்டு சென்ற அலைபேசியை எடுத்தவள் விறுவிறுவென மேலே சென்று கனியின் அறைக்கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டாள்.

குளித்து கொண்டிருந்த கனிக்கும் இது தெரியவில்லை.

வெளியே வந்து சாவியை எடுத்து வீட்டின் கதவையும் பூட்டியவள் சாவியை அங்கேயே மறைத்து வைத்தவள் நல்ல பிள்ளை போல மகிழுந்தில் ஏறி கொண்டாள்.

உள்ளுக்குள் மகிழ்ச்சி பெருகியது. இனி அவளால் வர முடியாது இவளுக்கு என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க தகுதியே இல்லை என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஆனால் பாவம் அவள் செய்து வைத்த காரியத்தினால் நடப்பதை கண்டு அவளே நொந்து போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

இவர்கள் விடுதியை அடைந்ததும் ஒரு சிலர் வருகை தர துவங்கினார்கள்.

சிவப்பிரகாசமும் கற்பகமும் அவர்களை வரவேற்கும் பணியை செய்தனர்.

இங்கு குளித்து வந்த கனி கட்டில் மீதிருந்த பருத்தி சேலையை எடுத்து உடுத்த துவங்கினாள்.

பொதுவாக கனி சேலையை தேர்ந்தெடுப்பது இல்லை. காரணம் அவளுக்கு சேலை அவ்வளவு சௌகரியமாக இருப்பதில்லை.

எப்போதும் சுடிதார் தான். இன்று தான் வாங்கி கொடுக்கும் உடையை தான் நீ உடுத்த வேண்டும் என்று பிரவீன் அன்புக்கட்டளை இட, விலை குறைந்த பருத்தி புடவை ஒன்றை வாங்கி தர கூறியவள், அதற்கு ஏற்றவாறு ரவிக்கையும் தைத்து வைத்திருந்தாள். காதி வகையை சேர்ந்த அந்த புடவை உடலில் அழகாய் பொருந்திட கூந்தலை உலர்த்தி ஒரு கிளிப்பில் அடக்கியவள் ஒரு கையில் கைக்கடிகாரம் மறு கையில் ஒரு வளையலை போட்டு கொண்டாள்.

இப்போது மீனாட்சி பாட்டி நியாபகம் வந்துவிட்டது. இந்நேரம் அவர் இருந்திருந்தால் அவருடைய நகையை கண்டிப்பாக தனக்கு அணிவித்திருப்பார் என்று தோன்ற புன்னகையும் வருத்தமும் ஒருங்கே எழுந்தது.

தன் போக்கில் தயாரானாவள் நேரத்தினை பார்க்க‌ இப்போது கிளம்பினால் தான் அது சரியாக இருக்கும் என்று கூறியது.

தனது கைப்பையையும் அலைபேசியையும் எடுத்து கொண்டவள் கதவை திறக்க முயல அது பூட்டியிருந்தது.

தான் பூட்டவில்லையே என்று சிந்தித்து மீண்டும் திறக்க முயற்சிக்க அது வெளிப்புறமாக பூட்டியிருப்பது புரிந்ததும் அது யார் வேலையாக இருக்கும் என்று தெரிந்தது.

சட்டென்று இதழ்களில் ஒரு சிரிப்பு பிறந்தது. சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்துவது போல இந்த ப்ரத்யூ செய்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணி கொண்டவள் பிரவீனுக்கு அழைக்க,

“அக்கா கிளம்பிட்டியா? எங்க வந்திட்டு இருக்க?”

“இல்லை பிரவீன். என் ரூம் வெளிய லாக் ஆகி‌ இருக்கு”

“என்ன? எப்படி லாக் ஆகும். நான் வரும் போது திறந்து தானே இருந்துச்சு” என்றவனுக்கு ப்ரத்யூ இறுதியாக உள்ளே சென்று வந்தது நினைவிற்கு வர,

“ப்ரத்யூ” என்று பல்லை கடித்தான்.

“என்ன உன் தங்கச்சி இப்படி சின்ன புள்ள தனமா பண்ணிட்டு இருக்கா” என்று சிரிக்க,

“ப்ச் இவ ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்னு தெரியலை. சாரிக்கா நான் இருந்து உன்னை அழைச்சிட்டு வந்து இருக்கணும்” என்று வருந்தியவன்,

“நான் வாட்ச்மேனுக்கு கால் பண்ணி கதவை திறந்து விட சொல்றேன்” என்றவன் மறுகணமே காவலாளிக்கு அழைத்து விடயத்தை கூறினான்

அவர் வந்து பார்த்துவிட்டு, “தம்பி வெளிக்கதவும் பூட்டி இருக்கு. சாவி எங்க இருக்குன்னு தெரியலை” என்க,

பிரவீனுக்கு கோபம் கட்டுக்கடங்காது வந்தது.

தான் சென்று கேட்டால் நிச்சயமாக கூறமாட்டாள் என்று புரிந்து பல்லை மட்டும் தான் கடிக்க முடிந்தது.

சட்டென்று என்ன செய்வதென தெரியவில்லை.

கனிக்கு அழைத்தவன், “அக்கா அவ வெளி கதவையும் பூட்டி கீய எடுத்துட்டு வந்துட்டா போல கா” என்று சோர்ந்த குரலில் கூற,

“சரிதான் உன் தங்கச்சி சரியா தான் பிளான் பண்ணி இருக்கா” என்றவள்,

“சரி விடு பிரவீன் இவ்ளோ தூரம் அவ நான் வர்றதை விரும்பாதப்போ என்ன செய்ய முடியும். நீ ஸ்ட்ரெஸ் ஆகாம பார்ட்டியை செலிபிரேட் பண்ணு”என்று அழைப்பை துண்டித்துவிட,

பிரவீன் என்ன செய்தாவது தமக்கையை அழைத்து வர வேண்டும் என்று தந்தையிடம் சென்றான்.

இதனை கவனித்த மூவரும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

“என்ன பண்ணலாம் அவளை வரவைக்க முடியாதுனு அவனுக்கு தெரியலை. அவ வெளியவே வந்துட்டாலும் இங்க வர முடியாது அவ ஸ்கூட்டிய வேற பஞ்சர் பண்ணி விட்டுட்டேன்” என்று ப்ரத்யூ சிரிக்க, மற்ற இருவரும் அவளது அறிவை மெச்சி கொண்டனர்.

இங்கு பிரவீன் தந்தையிடம் விடயத்தை கூற அருகில் இருந்த கிரிதரன்,

“பிரவீன் பேனிக் ஆகாத. பார்த்தீ இப்போதான் வீட்ல இருந்து கிளம்ப போறான். ஸ்பேர் கீ நம்ம வீட்டுல ஒன்னு இருக்குல அதை வச்சு திறந்து அவனையே கனியை அழைச்சிட்டு வர சொல்லுவோம்” என்றிட,

பிரவீனுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

“சரிங்க மாமா அத்தானுக்கு சீக்கிரமா கால் பண்ணி பேசுங்க” என்றிட,

கிரிதரன் மகனுக்கு அழைப்பு விடுத்தான்.

பார்த்தீபன் ஒரு தொழில் முறை சந்திப்புக்கு சென்றுவர தாமதமாகி இருந்ததால் அப்போது தான் வந்து குளித்து தயாராகி இருந்தான்.

தந்தை அழைத்ததும் அழைப்பை ஏற்றவன்,

“இதோ கிளம்ப போறேன் பா. பிப்டீன் மினிட்ஸ்ல வந்திடுவேன்” என்று மொழிய,

“பார்த்தீ வரும்போது கனியையும் கூட்டிட்டு வா” என்று நடந்ததை கூற,

“சரிப்பா” என்று சாவியை எடுத்து கொண்டு கிளம்பியவன் ப்ரத்யூ ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் அத்தையும் பாட்டியும் அவளை கண்டிப்பதில்லை.‌ அவள் செய்வது தவறு என்று அவளுக்கு புரிகிறதா இல்லையா?

இத்தனை நாட்கள் இவளது எண்ணத்தின் வழியே பார்த்து தான் கனியை தான் தவறாக எண்ணி உள்ளோம் என்று எண்ணினான்.

ஆனால் இவனுக்கு சிறு வயதில் நடந்த அந்த ஒரு விடயத்திற்கு தான் இன்னும் விடை கிடைக்கவில்லை.சிந்தித்தபடியே வீட்டை அடைந்தான்.

காவலாளியிடம் சாவி கொண்டு வந்து இருப்பதை கூறியவன் வீட்டை திறந்து கொண்டு சென்றான்.

அங்கே கனி கூந்தலை அள்ளி கொள்ளி கொண்டையிட்டவாறு உடையை மாற்றாலாமா? என்று எண்ணியபடி எழ, கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.

எதிரே பார்த்தீபன் நின்று இருந்தான். கனி அவனை கண்ட அதிர்ச்சியில் அப்பபடியே கொண்டையை பிடித்தபடி பார்க்க,

அவனது பார்வை பளிச்சென்று தெரிந்த அவளிடையில் பதிய,

சடுதியில் புத்தியில் உரைத்த விடயத்தால் உடல் இறுகியவள் கையை இறக்கி சேலையை சரி செய்து அவனை முறைத்தாள்.

பார்த்தீபன் எந்தவித எதிர்வினையும் காண்பிக்காமல்,

“ வா போகலாம் லேட் ஆகிடுச்சு” என்க,

இவனுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தபடி படிகளில் இறங்கியவள் தனது வெஸ்பாவை எடுக்க செல்ல,

பார்த்தீ, “ஆல்ரெடி லேட்டாகிடுச்சு. ஸ்கூட்டில போனா இன்னும் லேட் ஆகும் வா என் கார்ல போகலாம்” என்க,

அதை காதிலே வாங்காமல் தனது வாகனத்தை எடுக்க சென்றவள் சக்கரத்தில் காத்து இல்லாததை கண்டு,

“கிராதகி” என்று பல்லை கடித்தாள்.

இங்கு பார்த்தீபன் தனது மகிழுந்தில் ஏறி ஹாரனை அடிக்க,

“சை இவனிடமே உதவி வாங்கும் நிலை வருகிறதே” என்று தன்னையே நொந்தவள் வெறுப்புடன் ஏறி அமர்ந்தாள்.

மகிழுந்து மிதமான வேகத்தில் தான் சென்றது. கைகள் அதன் வேலை பார்த்தாலும் பார்த்தீபனது பார்வை அவளிடத்தில் அடிக்கடி படிந்து மீண்டது.

முதல் முறை அவளை புடவையில் காண்கிறான். மரகத பச்சை காதி சேலை அழகாய் பொருந்தி இருந்தது.

கழுத்தில் மெல்லிய சங்கிலி காதில் சிறிய தோடு கையில் கைக்கடிகாரம் என்று எளிமையாக இருந்தாலும் கண்ணுக்கு நிறைவாக இருந்தாள்.

இத்தனை நாட்கள் இவளை கவனித்திராதவனுக்கு அவளது பண்பும் சேர்த்து பேரழகியாக காண்பித்தது.

ஏதேனும் பேசலாம் என்றால் அவளது முகம் கல் போல இறுகி இருந்தது. அதற்கும் மேல் எதாவது பேசினால் ஒரு வார்த்தையில் சாட்டையடி கொடுத்து தன்னை மௌனியாக்கிவிடுவாள். நல்ல மனநிலையை கெடுத்து கொள்ள வேண்டாம் என்று எண்ணி அமைதியாக இருந்தான்.

கால்மணி நேர பயணத்தில் அந்த விடுதியை அடைந்திருந்தான்.

இங்கு ப்ரத்யூவும் அவளது குழுவினரும் கனி வரமாட்டாள் என்று மகிழ்ச்சியாக இருந்தனர்.

கற்பகம், “பிரவீன் நேரமாச்சு வா கேக் கட் பண்ணனும்” என்று அழைக்க,

“கனி அக்கா வராம நான் கேக் கட் பண்ண மாட்டேன்” என்க,

“ப்ச் அந்த அநாதை நாய் வராது வா நீ கேக் கட் பண்ண” என்று கற்பகம் கடிய,

ப்ரத்யூ, “ம்மா இன்னும் அத்தான் வரலைமா. அவர் வந்ததும் தான் நான் கேக் கட் பண்ணுவேன்” என்றுவிட்டாள்.

பிரவீனும் அவர்களே நேரில் கண்டு மூக்குடைபடட்டும் என்று அமைதியாக இருந்தான்.

வந்தவர்கள் ஏன் இன்னும் கேக் வெட்டவில்லை என்று வினவ,

கற்பகம், “என் அண்ண மகன் பார்த்தீபன் இன்னும் வரலை. அதான் அவன் வந்ததும் ஸ்டார்ட் பண்ணலாம்” என்று கூறிட,

எல்லோரும் பார்த்தீபனது வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மகிழுந்து நின்றதும் கனி கதவை திறக்க முயற்சிக்க அது பூட்டியிருந்தது.

திரும்பி பார்த்தீபனை முறைக்க அவனோ சட்டென்று குனிந்து கனியின் காலை எடுத்து தன் கால் மீது வைத்தவன் அவளது காயத்தை விழிகளால் ஆராய,

இவளுக்குள் மெலிதாய் பூகம்பம் பிறந்தது.

“என்ன பண்றீங்க? விடுங்க” என்று கத்த,

“ஷ் அமைதியா இரு” என்றவன் அவளது காயத்தை திருப்பி பார்த்தான்.

அடிப்பட்ட அன்று பார்த்தது அதன் பிறகு இன்று தான் காண்கிறான். தான் கேட்டால் பதில் கூற மாட்டாள் என்று எண்ணியவன் தானே காயத்தை ஆராய்ந்தான்.

‘ப்ச் பொறுக்கி அப்போ இடுப்பை பார்த்தான் இப்போ காலை பிடிக்கிறான்’ என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தவள் முறைக்க,

“நல்லா ஆறிடுச்சு” என்று காலை விட்டவன் கீழிறங்க,

அவனை முறைத்துவிட்டு இறங்கி வேகமாக நடக்க பார்த்தீபனும் அவளது நடைக்கு ஈடாக நடந்தான்.

ப்ரத்யூ தாமதமாக வந்த தனது தோழியை கண்டவள்,

“என்னடி ஏன் இவ்ளோ லேட்?” என்று முறைக்க,

“கோவப்படாத பர்த்டே பேபி. அப்போவே வந்துட்டேன். வெளியே ஒரு பேர் பாத்தேன் காருக்குள்ள ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தாங்களா அதை வேடிக்கை பார்த்தேனா அதான் டைம் ஆகிடுச்சு” என்று சிரிக்க,

“அடுத்தவங்க ரொமான்ஸ் பண்றதை எட்டி பாத்திட்டு வந்து என்கிட்ட வேற சொல்ற” என்று முறைக்க,

“ஹேய் செம பேர் டி. அந்த பொண்ணு முறைக்கிறதும் அந்த ஹாண்ட்ஸம் அவ பின்னாடி வர்றதும் நீ தான் மிஸ் பண்ணிட்ட” என்று சிரிக்க,

“பார்த்தீ வந்துட்டான்” என்று கிரி கூற,

“அத்தான்” என்றபடி வந்தவள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து நின்றுவிட்டாள்.

பார்த்தீபனும் கனியும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். புகைப்பட கலைஞர் வேறு அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து தள்ளினர்.

பார்த்தீபனை மட்டும் எதிர்பார்த்து இருந்தவர்கள் அருகில் வந்தவளை கண்டு வந்தவர்கள் முணுமுணுக்க,

கிரிதரன் அருகில் இருந்த ஒருவர்,

“என்ன கிரி உங்க புள்ள கல்யாணத்து ரெடியாகிட்டார் போல” என்று சிரிக்க,

ப்ரத்யூவின் காதில் ஈயத்தை காட்சி ஊற்றியது போல இருந்தது.

இவள் எப்படி வந்தாள் என்று அதிர்ந்து பார்க்க,

அருகில் இருந்த தோழி, “ஹேய் ப்ரத்யூ இவங்க தான் நான் சொன்ன கப்புள்” என்க,

ஏகமாய் அதிர்ந்தவள்,

“ஷட்டப் நீத்து” என்று சீறினாள்.

இதற்குள் வந்த இருவரையும் பற்றி ஆளாளுக்கு பேச துவங்கினர்.

ப்ரத்யூவின் முகத்தை கண்ட கனிக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக மெதுவாக நடந்து வந்து,

“ஹாப்பி பர்த்டே பிரவீன்” என்று தம்பியை அணைத்து விடுவித்தவள்,

ப்ரத்யூவின் அருகில் சென்று, “ஹாப்பி பர்த்டே ப்ரத்யூஷா” என்று அணைத்தவள்,

“அப்புறம் பர்த்டே பேபி எப்படி நம்ம சர்ப்ரைஸ் கிஃப்ட். அப்படியே ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சா. நான் எதுவும் பண்ணலைப்பா எல்லாம் உன் அத்தான் செஞ்ச வேலை தான். நான் வந்தா தான் பங்கஷ்னுக்கு வருவேன்னு அடம்பிடிச்சு இழுத்துட்டு வந்திட்டாரு”

“...”

“உன் அத்தானுக்கு வேற வேலையே இல்லையா? என் பின்னாடியே சுத்
திட்டு இருக்காரு. போற போக்க பாத்தா கூடிய சீக்கிரமே உன் அத்தான் என் அத்தான் ஆகிடுவாரு போல. எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு?கன்னல் மொழி டூ பாயிண்ட் ஓ வெர்ஷன் எப்படி?” என்று அவளது காதிற்குள் முணுமுணுத்து அவளது ரத்த அழுத்தத்தை எகிற செய்தவள் அமைதியாக நம்பியின் அருகே நின்று கொள்ள,

இங்கு ப்ரத்யூ தான் சிலையாக சமைத்து நின்றுவிட்டாள்…

 
Well-known member
Messages
924
Reaction score
677
Points
93
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
368
Reaction score
255
Points
63
Mozhi ne parthiban ah enna sattunu ipadi poruki nu sollita ah annaiku unna thappu ah pesunan nu ne kobapatta la ippo ne yum athu than ah panra ah and andha kosu prathuyu ah tease panna ne parthi ah use panra la aaga motham unga rendu perukum naduvula avan ah nalla football mathiri vilayuduriga
 
Administrator
Staff member
Messages
516
Reaction score
796
Points
93
Mozhi ne parthiban ah enna sattunu ipadi poruki nu sollita ah annaiku unna thappu ah pesunan nu ne kobapatta la ippo ne yum athu than ah panra ah and andha kosu prathuyu ah tease panna ne parthi ah use panra la aaga motham unga rendu perukum naduvula avan ah nalla football mathiri vilayuduriga
Avan ethuku idupa pathan athan thittuna athuvum manasukulla thana 😂
 
Top