Well-known member
- Messages
- 248
- Reaction score
- 448
- Points
- 63
மோதல் 20
கோவையின் மேல்தட்டு மக்கள் பலரும் வசிக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பி நின்ற பல வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பல நூறு ஏக்கர்களுக்கு பரந்து விரிந்து காட்சியளித்தது அந்த நீலநிற கெஸ்ட்ஹவுஸ் பங்களா.
முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் பல மாதங்களாகவே கணக்கில் அடங்காத பலவித குற்றங்கள் நடப்பதாக உளவுத்துறை மூலம் செய்தி ஒன்று வந்திருக்க, அவைகளை நன்கு கண்காணித்து உண்மை நிலவரத்தை அறியும் படி தான் மூர்த்தி மற்றும் பாலாவிற்கு கட்டளைகள் பிறப்பித்து இருந்தான் சத்யதீரன்.
அவன் பேச்சை அப்படியே ஏற்று அப்பகுதியை கண்காணிப்பதற்காக மாற்று உடையில் வந்திருந்த பாலாவும் மூர்த்தியும் ஒரு ஆட்டோவில் நின்றும் இறங்க,
அந்த காலை வேலையில் கூட ஆள்நடமாட்டம் இன்றி வெறுமையாக காட்சி அளித்தது அந்தப் பகுதி.
கூடவே அந்தப் பகுதியில் இருந்த அதிகப்படி தூய்மையும், அமானுஷ்யமான அமைதியுமே பாலாவிற்கும் மூர்த்திக்கும் உள்ளத்தில் ஒரு கலக்கத்தை உண்டு பண்ண, "என்ன மூர்த்தி சார் இந்த ஏரியால ஒரு ஈ காக்காவைக் கூட காணோம்?" என்று கேட்டுக்கொண்டே தன் கைத்துப்பாக்கியை எடுத்து முதுகின் பின்னே சொருகிக் கொண்டான் பாலா.
"ம்ம்ம்... தப்பு தண்டா பண்றதுக்கு இப்டி ஏரியாதானே செட் ஆகும் பாலா" என்று அவனுக்கு பதிலிறுத்த மூர்த்தியும், "இங்க இருக்கவங்க எல்லாமே பண முதலைங்க. ஒரு வீட்டுல என்ன நடக்குதுன்னு இன்னொரு வீட்டுக்காரன் எட்டிக் கூட பாக்க மாட்டான். அப்டியே பாத்தாலும் கண்ணு தெரியாத போலவே அவனவன் வேலையை பாக்க போயிடுவானுக." என்றவன், "இந்த கெஸ்ட்ஹவுசுக்கு ரெண்டு கேட் இருக்கு பாலா. நீ பின் கேட் பக்கம் நில்லு. நான் முன் பக்கம் போறேன். ஏதாவது வித்தியாசமா பட்டா உடனே போட்டோஸ் வீடியோஸ் எடுத்துடு. யார் கண்ணுலயும் பட்டிராத. தேவைப்பட்டா கன்னும் யூஸ் பண்ணு. சைலன்சர் பொருத்திருக்குள்ள?" என்று சீனியராய் அவனுக்கு சில அறிவுரைகளும் கூறியவன் அந்தத் தெருவின் மறுபுறம் சென்று மறைந்தான் மூர்த்தி.
மூர்த்தி கூறியது போலவே அங்கிருந்த ஒரு சந்தில் மறைந்து கொண்ட பாலா, அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்தப் பெரிய வீட்டின் முன்னால் மட்டும் சில உயர்ரக கார்கள், ஆட்டோ போன்ற வாகனங்கள் வந்து நிற்பதும், அதிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் போல தோற்றம் கொண்ட பலரும் இறங்கிச் செல்வதும், மீண்டும் வந்து கிளம்புவதுமாகவும் இருக்க, "கடவுளே இங்க என்ன நடக்குதுன்னே தெரியலயே. எல்லாரும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மாதிரில இருக்காங்க" என்று அனைத்தும் ஒன்று விடாது வீடியோவாக பதிவு செய்தவன், அந்த வாகனங்களின் எண்களையும் தன் குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டிருந்தான் பாலா.
அச்சமயம் அவனுக்கு நேர் எதிரில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றில் இருந்து இறங்கினாள் ஆர்த்தி.
ஆம் அபிதாவின் தங்கை ஆர்த்தி தான்.
சற்றே தொலைவில் இருந்ததால் சற்று கூர்ந்து நோக்கியே பெண்ணவளைக் கண்டு கொண்டவனுக்கு, "இந்த பொண்ணு எப்டி இங்க?" என்று முகத்தோடு மனமும் கலவரமாய் மாறியது.
அதில் இன்னும் அவளை கவனித்துப் பார்த்தவன் கண்காணிப்பில் இருக்கும் பொழுது எப்படி அவளிடம் சென்று பேசுவது என்ற யோசனையில் இறங்க, ஆட்டோவில் இருந்த இறங்கிய ஆர்த்தியும் சுற்றியும் முற்றியும் பார்த்து எதையோ, அல்லது யாரையோ தேடியபடி நின்றாள்.
அதைக்கண்டு மேலும் குழம்பியவனுக்கு, "இங்க வந்து என்ன தேடிட்டு இருக்கா இந்த குள்ளக்கத்திரிக்கா? இப்டி ஒரு ஏரியாவுக்கெல்லாம் வரலாமா இவ?" என்று சிறிது சினமும் துளிர்க்க, அதற்குள் ஆர்த்தியோ அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி எட்டு வைக்கவும் தொடங்கி இருந்தாள்.
அவள் சென்ற திசையைப் பார்த்தே பக்கென்று ஆனவன் அதற்குமேல் யோசியாது மின்னலென விரைந்து அவள் கரத்தைப் பற்றி இழுத்து தான் மறைந்திருந்த சந்திற்குள்ளும் நுழைந்து இருந்தான்.
திடீரென யாரோ கரத்தைப் பற்றி இழுத்ததில் அதிர்ந்து பதறியவள் கத்துவதற்காக வாயை துறக்கும் முன்னவே அங்கிருந்த சுவற்றில் அவளைச் சாற்றி கரம் கொண்டு அவள் வாயையும் அழுந்த மூடி இருந்தவன், "ஆர்த்தி பயப்படாத நான் தான் பாலா" என்று சொல்ல...
அந்தக் கூற்றில் தான் அவன் முகத்தையும் பார்த்து அது பாலா தான் என்று கண்டு கொண்டவளுக்கு, அத்துணை நேரம் இருந்த பதட்டத்தை விட அதிகமாகவே கை கால்கள் எல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியது.
அதில் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே அவளை விட்டு விலகிக் கொண்டவன், "ஆர்த்தி... நான் தான் பாலா... என்னத் தெரியுது தானே" என்று கேட்டு, "இந்த ஏரியாவுல நீ என்ன செய்ற? கொஞ்சம் முன்ன யாரையோ தேடின போல பாத்தியே. யாரது. இப்போ காலேஜ் டைம் தான. காலேஜ் போகாம இங்க ஏன் வந்த?' என்று அடுத்தடுத்த கேள்விகளையும் கேட்கத் தொடங்கி இருந்தான்.
ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் கூற முடியாது அவனை அச்சப்பார்வை பார்த்து வைத்தவள், "அது வந்து வந்து பாலா அங்கிள்" என்று திணற...
அவனோ, "இவ இந்த அங்கிள மட்டும் விடவே மாட்டாளா?" என்று சலிப்பாக எண்ணியவன், "எம்மா தாயே என்ன இனிமேல், பாலா இல்ல, டேய் பாலான்னு கூட கூப்பிடு. ஆனா தயவு செஞ்சு அந்த அங்கிள மட்டும் விட்டுடுமா. உன்ன விட நான் ஆறு வருஷம் தான் மூத்தவன்" என்று கை எடுத்து கும்மிட்டு விட்டு, "ம்ம்ம் சொல்லு? இங்க எதுக்கு வந்த ஆர்த்தி?" என்றான் குரலை இன்னும் கொஞ்சம் உயர்த்தி.
எப்பொழுதும் அவனது இது போன்ற பேச்சில் வேண்டும் என்றே அவனை அங்கிள் அங்கிள் என்று சொல்லிச் சீண்டுபவள் இப்பொழுதோ உடனே, "சரிங்க பாலா. இனிமேல் அங்கிள்னு சொல்ல மாட்டேன்" என்று விட்டு, "அது அது எக்ஸாம்கு நோட்ஸ் வாங்க தான் இங்க பக்கத்துல ஒரு பிரண்ட் வீட்டுக்கு வந்தேன்." என...
"இந்த ஏரியாவுல உனக்கு பிரண்டா? நம்புறபோல இல்லியே" என்று அவளை மேலிருந்து கீழ் கூர்மையாகவே பார்த்தான் பாலா.
இதுவரை அவளை சந்தித்த பொழுதுகள் எல்லாம் அவனோடு சரிக்குச் சரியாய் வாயாடிப் பழகியவளின் இன்றைய திணறலான பேச்சு அவனுக்கு மிகவும் வித்தியாசமாகவே பட்டது.
எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் பாலாவையே பார்த்து இருந்தவளுக்கும் துருவித் துருவி கேள்வி எழுப்பும் இந்த காவலன் பாலா மிகவும் புதிதாகத் தெரிய, கூடவே தான் செய்து கொண்டிருக்கும் தவறும் அவளை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்தது.
ஆதலால் அவனுக்கு பதில் ஒன்றும் உரைக்காது தலை குனிந்து நின்றவளிடம், "சரி பிரண்டோட அட்ரஸ் இருந்தா குடு ஆர்த்தி. நானே கூட்டிட்டுப் போறேன். இந்த ஏரியா கொஞ்சம் டேஞ்சரான ஏரியா. இங்க எல்லாம் தனியா வரக்கூடாது" என்றான் பாலா அவள் மேல் அக்கறை கொண்ட ஆணாக.
அதில் கையிலிருந்த அலைபேசியை இறுக்கி தன் பின்னே மறைத்தவளும், "இல்ல இல்ல நான் அட்ரஸ் மிஸ் பண்ணிட்டேங்க பாலா. நான் நான் காலேஜ்லயே போய் நோட்ஸ் வாங்கிக்கறேன்." என்று பதட்டமாக உரைத்தவள் அவ்விடத்தை விட்டும் செல்லப்போக...
பெண்ணவளின் இன்றைய வித்தியாசப் பேச்சில் 'எப்பவும் காது வரைக்கும் வாய் அடிக்கிறவ இன்னைக்கு என்ன ஒரு டைப்பா இருக்கா' என்பது போல் அவளைப் பார்த்து விட்டு, "ஆர்த்தி இரு" என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், "நீ சின்னப்பொண்ணு. இந்த ஏரியாவுல பாதை மாறி போக வாய்ப்பு இருக்கு" என்று அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஒன்றையும் நிறுத்தி தான் காவல் அதிகாரி என்றும் உரைத்து அவளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டே தன் பணிக்குத் திரும்பியவன் அவள் வாழ்க்கை என்னும் பாதையிலே வழி மாறிச் செல்லத் துவங்கி இருப்பதை இம்மியும் அறிந்திருக்கவில்லை.
அவள் ஆட்டோவில் ஏறி அமர்ந்து அந்த தெருவைக் கடந்த பொழுதிற்குள்ளாகவே ஆர்த்தியின் அலைபேசி ஏகத்துக்கும் அலறி அவளது முகநூல் தோழன் ராக்கியின் அழைப்பைக் காட்டியது.
அதில் இன்னும் பதட்டம் கூடிப் போனவளும், 'அய்யோ ராக்கி வேற போன் பண்றாரு" என்று ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு நொடி நேரப் பார்வையை செலுத்தி விட்டு அலைபேசியை உயிர்பித்து செவியில் பொருத்த...
அந்தப்புறம் அவனோ, "ஹேய் ஸ்வீட்டி எங்கடா இருக்க? நான் சொன்ன இடத்துக்கு வந்துட்டியா பேபி?" என்றவன் குரலில் அப்படி ஒரு ஆர்வமும் குழைவும், இன்னும் ஏதேதோ சொல்ல முடியாத உணர்வுகளும் கொட்டிக் கிடந்தது.
அக்குரலை கேட்ட உடனே இத்துணை நேரம் இருந்த குற்ற உணர்வுகள் எல்லாம் மறைந்து, "நோ ராக்கி" என்று சிணுங்கியவள், "நீங்க சொன்ன இடத்துக்கு தான் வந்துட்டிருந்தேன். ஆனா வழில பாலா தான் பாத்துட்டு இங்கல்லாம் வரக்கூடாதுன்னு என்ன ஆட்டோ ஏத்தி அனுப்பி வச்சுட்டாங்க. இப்போ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்" என்று அழாத குறையாக சொல்ல, அதைக் கேட்டிருந்தவனின் முகமோ ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும் ராட்சசனின் முகமாய் மாறி விட்டிருந்தது.
சில மாதங்கள் முன்னர் முகநூலில் பழகி இருந்தவனிடம் அன்று பேசுவதற்குக் கூடத் தயங்கியவளை காமம் கலந்த காதல் வசனங்கள் பேசியே இன்று அவன் சொல்லும் இடத்திற்கு தனியாக வரும் அளவிற்கு சிறியவளின் மனதில் பெரும் சஞ்சலத்தை உண்டு பண்ணியிருந்தான் அந்த ராக்கி.
இன்னும் வீடியோ காலில் கூட தன் முகத்தைக் காட்டி இராதவன், தான் அனைத்துப் பெண்களிடமும் பேசும் காதல் மொழிகளுக்கு சற்று அதிகமாகவே பேசி பெண்ணவளின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவன், கடந்த சில மாதங்களிலே உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அவள் வாயாலே சொல்லவும் வைத்திருந்தான்.
அவன் திட்டமிட்டபடியே அவளும்
சில தினங்கள் முன்னர் அவன் உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்ததை நம்பி, "ராக்கி நான் உங்களை நேரில பாத்தே ஆகணும்" என்று அடம்பிடிக்கவும் அதற்காகவே காத்து இருந்தவனும் தன்னுடைய இடத்திற்கு அவளை வரக் கூறியிருந்தான்.
அவளும் இளமையின் துடிப்பிலும், இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பியதன் விளைவிலும் அவனுக்காக ஓடோடி வந்திருக்க,
அப்படி வந்தவளைத்தான் பாலா திருப்பி அனுப்பி இருக்க, உலகம் அறியா புள்ளிமானை வேட்டை ஆடக் காத்திருந்த ஓநாய் அதோ, "ஆர்த்தி ஏன் இப்டி பண்ண?" என்று ஏகத்துக்கும் அலறி இருந்தான்.
அவனிடமிருந்து இப்படி அலறலை எதிர்பாராதவளும், "ராக்கி என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்டி கத்தறீங்க?" என்று பயந்து போய் வினவ...
அவளது பேச்சில் தன்னை நிதானமாக்கிக் கொண்டவனும்,
"ஹேய் ஹேய் பேபி கூல் டா கூல் டா. ஃபர்ஸ்ட் டைம் உன்னை நேரில் பார்க்க போறேன்னு ரொம்ப எக்சைட்மென்ட்டா இருந்தேன்டா. அதான் நீ வரலன்னு சொல்லவும் அப்செட் ஆகிட்டேன். ரொம்பவே ஏமாந்து போயிட்டேன் பேபி" என்று வருந்தும் குரலில் கூறியவன், "நீ வந்ததும் உன்ன எங்கெல்லாம் அழைச்சிட்டு போலாம்னு இருந்தேன் தெரியுமா? உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்து, நீ ராக்கி னு சினுங்கற அழக அப்படியே பக்கத்துல இருந்து பாத்து ரசிச்சு, உன்ன ஏதேதோ செய்யணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன்" என்று மேலும் எழுத்தில் வடிக்க முடியாத கிறக்க வார்த்தைகளும் கூறி வரம்பை மீறி பேசிக் கொண்டிருக்க..
அவைகள் எல்லாம் கேட்டுக் கேட்டே அந்த கிறக்கத்திற்கு அடிமையாகி விட்டவளும், "ச்சீ நீங்க ரொம்ப மோசம் ராக்கி" என்று வெட்க குரலில் சினுங்கி, "வெரி வெரி சாரி ராக்கி... உங்களை ஏமாத்தணும்னு நான் எதுவும் பண்ணலை. பாலா தான் எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க" என்று கூறியவள்,
"இன்னொரு நாள் நாம கண்டிப்பா மீட் பண்ணலாம் ராக்கி. அன்னிக்கு உங்க பேரண்ட்ஸ் கிட்டயும் என்ன இண்டிடியூஸ் பண்ணி வைங்க. அப்றம் எங்க வீட்ல பேசிக்கலாம்" என்று அவள் பாட்டில் திட்டமும் கூறிக் கொண்டிருந்தவளிடம்,
"ம்ம்ம் ஓகே பேபி" என்று தலையை ஆட்டிக் கொண்டவன், "சரி அந்த பாலா யாரு பேபி?" என்று வினவிய நொடி, ஆர்த்தியின் அலைபேசி பாலாவின் அழைப்பைக் காட்டியது.
உடனே உடல் தூக்கிப் போட நிமிர்ந்து அமர்ந்தவள், "அய்யோ பாலா தான் லைன்ல வர்றாங்க. நான் அப்றம் பேசுறேன் ராக்கி.
ஒரு ஒன் வீக்குக்கு நீங்க என்ன கூப்பிடாதீங்க. இந்த செமஸ்டர் முடியவும் நானே உங்களுக்கு கூப்பிட்டு நெக்ஸ்ட் மீட் பத்தி பேசலாம். பை ராக்கி பை" என்று அவன் பேசுவதற்கு இடமே கொடாது அலைபேசியை அணைத்தவள் பாலாவின் அழைப்பையும் ஏற்றிருந்தாள்.
அந்தப்புறம் பாலாவும் அவள் பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறாளா எங்கு சென்று இருக்கிறாள் என்று கேட்டு வீட்டிற்குச் சென்றதும் தனக்கு அழைத்துக் கூறும் படியும் கூறி விட்டு இணைப்பைத் துண்டிக்க, நியாயமாக அவளுக்கு எரிச்சலைத் தரவேண்டிய இன்றைய பாலாவின் தலையீடு அவளுக்கு சிறுதான இதத்தைத்தான் கொடுத்தது
பெரிதான பழக்கம் இல்லாத தன்மீது அந்த ஆடவன் காட்டும் அக்கறையில் சிறு மகிழ்ச்சியும் கூட உள்ளுறப் பரவியது.
ஆனால் அவளுக்கு முற்றிலும் மாறாக அவளிடம் பேசி முடித்த ராக்கிக்கோ அவள் தன் கேள்விக்கு பதிலை கூட உரைக்காது அலைபேசியை அணைக்கவும் ஆத்திரம் மிகுந்து தன் அலைபேசியையும் அணைத்து, "டேமிட்..." என்று அங்கிருந்த சுற்றில் ஓங்கி அடித்தான் ராக்கி.
அதில் அலைபேசி சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்க, அதைப் பார்த்த படியே அவனை நெருங்கிய அவன் நண்பனோ, "என்ன மச்சி இவ்ளோ ஆத்தரம் எதுக்கு. அந்த புது பட்சி பறந்துருச்சா?" என...
அதற்கு அவனும், "அவ்ளோ சீக்கிரம் பறக்க விட்டுடுவேனா?." என்றவன்,
"ரொம்ப ப்ரஷ்டா. அதான் கொஞ்சம் அதிகமாவே ஆட்டம் காட்டுது." என்று பல்லைக் கடித்தான் ராக்கி.
அதைக்கேட்டு அவன் தோளைத் தட்டி கலகலவென்று நகைத்தவனும்,
"எப்படியும் நீ விடமாட்டான்னு தெரியுமே மச்சி" என்றவன், "அது வரும் போது வரட்டும். இப்போ வேற ரெண்டு வந்துருக்கு. அத வந்து என்னனு பாரு" என...
அவனோ, "இல்ல மச்சி. எனக்கு இப்போ மைண்டே சரி இல்ல. முடிஞ்சா நீயே மேனேஜ் பண்ணு" என்றான்.
அதில் அவனை புருவம் சுருக்கிப் பார்த்தவனும், "என்ன ராக்கி என்னிக்கும் இல்லாம இன்னிக்கு இவ்ளோ அப்செட்டா பேசுற" என்றவன், "பட்சி ரொம்ப அழகோ" என...
அதைக்கேட்டு கண்களில் காமம் மின்னச் சிரித்தவனும், "ரொம்ப ரொம்ப அழகுடா. பிரிஜ்ஜில வச்ச ஆப்பிள் போல" என்றான்.
அதில், "ம்ம்ம் அதான் இவ்ளோ பீலிங்கா?" என்று மீண்டும் அவன் தோளைத் தட்டியவன், "சரி அந்த ஆப்பிள நினைச்சுட்டே வாச்சும் இந்த மேங்கோஸ கவனிடா. டோஸ் கொடுத்தே அரை மணி நேரம் ஆகுது. நான் கையை வச்சா முழுசா முடிச்சுடுவேன்டா" என்று அவன் கையைப் பற்றி இழுக்க...
"ம்ம்ம்..." என்று தலையை ஆட்டிக் கொண்டவனும், "ரெண்டுமே ப்ரெஷ்ஷா?" என்று வினவியபடி அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்.
அதற்கு, "ஆமாடா" என்று சொல்லிக் கொண்டவனும், "நம்ம விக்கி தான் கரெக்ட் பண்ணிருக்கான். ஆல்ரெடி டோஸ்கு அடிக்ட் ஆனதுக தான். உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது" என்று சொல்லிக் கொண்டே அவனை பின்தொடர்ந்து செல்ல, அந்த அறைக்குள்ளோ பதினெட்டு வயது மதிக்கத்தக்க இரு இளம் பெண்கள் படுக்கையில் அமர வைக்கப்பட்டு இருந்தார்கள்.
அறைகுறையாய் திறந்திருந்த
அவர்கள் கண்களில் இருந்த கிறக்கமும், நிலையில்லாது சுற்றி வந்த அவர்கள் தலையின் தள்ளாட்டமுமே அவர்கள் வீரியமிக்க போதை வசஸ்துவை உட்கொண்டிருப்பதை உணர்த்த, சுய நினைவு இல்லாது ஏதேதோ உளறிக் கொண்டிருந்த அந்தப் பெண்களைப் பார்த்து, "அவ அளவுக்கு இல்லன்னாலும் பட்சிக ப்ரெஷ்ஷாதான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவர்களை நெருங்கியவன் அந்தப் பெண்களின் உடையில் கையை வைத்த நொடி அந்த அறையில் இருந்த புகைப்பட கருவியோ அங்கு நடப்பவற்றை எல்லாம் படமெடுக்கத் துவங்கியது.
தலையைக் கூட நிமிர்த்த முடியாத போதையில் சுய நினைவுகள் இன்றிக் கிடந்தாலும் யாரோ ஒருவன் தங்கள் மீது கை வைக்கவும், "ஹேய்" என்று தட்டி விட முயன்றவர்களை, "பேபிஸ். இங்க பாருங்க இங்க பாருங்க. நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன். ஒரு டென் மினிட்ஸ் மட்டும் நான் செய்றதுக்கெல்லாம் பேசாம இருந்தீங்கன்னா இதை விட பெரிய சொர்க்கத்துக்கு உங்களை கூட்டிட்டுப் போற டோஸ போட்டு விடுவேன்" என்று அங்கிருந்த மாத்திரை அட்டைகளையும் ஊசி மருந்துகளையும் காட்ட...
அதைப் பார்த்து கோணலாகச் சிரித்துக் கொண்டவர்களும் அடுத்து
வந்த நிமிடங்களில் அவன் அவர்களின் உடைகளை களைந்து துகிலுரித்த பொழுதும், தானும் உடையில்லாது அவர்களை அணைத்து முத்தமிட்டு தனக்கு வேண்டிய அளவு புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையிலும் கூட அவனுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவே இல்லை. அப்படி தெரிவிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. உள்ளே சென்ற போதை வஸ்து அத்துணை ஆட்கொண்டிருந்தது அவர்களை.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்த பின்னரே தனக்கு வேண்டிய வேலையை முடித்துக் கொண்டு எழுந்தவன், "வீடியோஸ் எப்டி வந்திருக்கு?" என்று நண்பனிடம் கேட்டபடியே உடைகளை எடுத்து அணிந்து கொள்ள...
அத்துணை நேரமும் அங்கு நடந்தவற்றை வீடியோ எடுத்து முடித்தவனும், "செம்மையா வந்துருக்குடா. அது எப்படிடா பட்சிகளை ஒன்னும் பண்ணாமையே எல்லாம் முடிஞ்சமாறி பெர்பெக்ட்டா பண்ணிடுற. இவ்ளோ குளோசா இருந்துட்டு எப்பிடிடா உன்னால அவளுகளை விட்டு வைக்க முடியுது?" என்று அவனிடம் ஆச்சரியமாக வினவினான்.
"அது அப்டித்தான்டா பழகிடுச்சு. லட்சக்கணக்கில் பணம் வேணும்னா எல்லாத்தையும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி தான்டா ஆகணும்" என்ற ராக்கி, "ஆனா அந்த ஆர்த்தி பட்சிக்கிட்ட இவ்ளோ கண்ட்ரோலா இருக்க முடியுமான்னு தான் தெரியலடா" என்றும் சேர்த்துச் சொல்ல...
அதைக்கேட்டு, "மச்சி..." என்று அவன் கையை பற்றிக் கொண்டவனும், "அவ்ளோ புடிச்சிருந்தா பேசாம அத கல்யாணம் பண்ணிக்கோயேன். உனக்கும் வயசு ஏறிட்டே போகுதுல்ல" என்றான் நண்பன்.
அதற்கு, "போடா இவனே" என்று திட்டிக் கொண்டவனும், "அவள்ளாம் கோடி கோடியா கொட்டிக் கொடுக்கப்போற பீஸ் மச்சி" என்று வக்கிரமாக சிரித்துக் கொண்டவன், "எடுத்த வீடியோவ கம்யூட்டர்ல சேவ் பண்ணிட்டு பட்சிகளோட போட்டோஸ மட்டும் அந்த எம் எல் ஏ க்கு அனுப்பி விடு. அந்த கிழடு தான் ப்ரெஷ் பீஸ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கு. நான் குளிச்சிட்டு வந்து ரேட் பேசிக்கறேன்" என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவன் மீண்டும் ஆர்த்திக்கு அழைத்து காதல் மொழிகள் பேசிவிட்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
கோவையிலே ஒரு முக்கிய முன்னால் அமைச்சரின் அண்டர்கிரவுண்ட் கையாள் தான் ராக்கி. அமைச்சருடைய அனைத்து தில்லுமுல்லு தொழில்களுக்கும் வலது கையாய் இருப்பவன்.
அந்த அமைச்சருடைய பதவி வெறிக்காகவும், அவருடைய உறவினர் மற்றும் நண்பர்களின் தேவைக்காகவும், ஆசைக்காகவும் உலகம் அறியாத கன்னிப் பெண்களான பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் பலரை ஏமாற்றி, அவர்களை போதைக்கும் அடிமையாக்கி, உடலைத் தின்னும் பல காமக் கழுகுகளுக்கு அந்த பிஞ்சுப் பறவைகளை விருந்தாக்கிக் கொண்டிருக்கும் ராக்கியின் குழுவிற்கு முகநூல் இன்ஸ்டா போன்ற செயலிகளும், அவனது ஈனச் செயல்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
இளமையின் துடிப்பிலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் கேட்பார் பேச்சை கேட்டும் யாரென்றே தெரியாத நபர்களுடன் பேச ஆரம்பித்து, பின் புகையிலை மது போதை மருந்துகள் போன்ற பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிப்போன பல இளம் பெண்களில் பலர் காதல் என்ற பெயரிலும் அவனிடம் ஏமாந்து விடுகின்றனர்.
அவர்கள் சுய நினைவில் இல்லாத பொழுது ராக்கி எடுத்து வைத்திருக்கும் வீடியோக்களைப் பார்த்தே தாங்கள் நாசமாக்கப்பட்டு விட்டோம் என்று மருகி, நெட்டில் போட்டு விடுவேன் என்ற அவனது மிரட்டலுக்கும் பயந்து தங்கள் சம்மதத்தோடே நாசப் பாதையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையும் சிதைத்து கொள்கின்றனர் எத்துணையோ பேதைப் பெண்கள்.
அப்படி நாசமாவதை விரும்பாது, வெளியில் சொல்லவும் தைரியம் இன்றி தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டவர்களும் ஏராளம் இருக்க...
அமைச்சரின் ஆதரவின் பேரிலே அனைத்தும் நடப்பதால் இதுவரை அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் பெரிதாக காவலர்கள் பார்வைக்கும் வந்து சேரவில்லை.
ஆனால் சட்டம் ஒழுங்கைக் காக்கவென்றே பிறப்பு எடுத்திருக்கும் தீரன் அவனிற்கு எதுவும் தப்பாது இருக்க, கடந்த சில மாதங்களாகவே அவன் கவனித்து வந்த இளம் பெண்களின் தொடர் தற்கொலைகளும் சேர்ந்து அந்த கெஸ்ட்ஹவுஸ் பங்களாவின் மர்மங்களை கண்காணிக்க கட்டளைகள் விதித்திருந்தான் சத்யா.
இது எதுவுமே தெரியாத பேதை பெண்ணோ தான் எத்துணை பெரிய இக்கட்டில் மாட்டி இருக்கிறோம் என்றும் உணராது அந்த ராக்கியின் வார்த்தைகளை அசைபோட்டு கிறங்கியபடியே அந்த ராட்சச வேடனின் பொறியில் மாட்டும் பட்சியாய் மாற மற்றுமொரு சந்தர்ப்பம் தேடத் தொடங்கி இருந்தாள் ஆர்த்தி.
கோவையின் மேல்தட்டு மக்கள் பலரும் வசிக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பி நின்ற பல வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பல நூறு ஏக்கர்களுக்கு பரந்து விரிந்து காட்சியளித்தது அந்த நீலநிற கெஸ்ட்ஹவுஸ் பங்களா.
முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் பல மாதங்களாகவே கணக்கில் அடங்காத பலவித குற்றங்கள் நடப்பதாக உளவுத்துறை மூலம் செய்தி ஒன்று வந்திருக்க, அவைகளை நன்கு கண்காணித்து உண்மை நிலவரத்தை அறியும் படி தான் மூர்த்தி மற்றும் பாலாவிற்கு கட்டளைகள் பிறப்பித்து இருந்தான் சத்யதீரன்.
அவன் பேச்சை அப்படியே ஏற்று அப்பகுதியை கண்காணிப்பதற்காக மாற்று உடையில் வந்திருந்த பாலாவும் மூர்த்தியும் ஒரு ஆட்டோவில் நின்றும் இறங்க,
அந்த காலை வேலையில் கூட ஆள்நடமாட்டம் இன்றி வெறுமையாக காட்சி அளித்தது அந்தப் பகுதி.
கூடவே அந்தப் பகுதியில் இருந்த அதிகப்படி தூய்மையும், அமானுஷ்யமான அமைதியுமே பாலாவிற்கும் மூர்த்திக்கும் உள்ளத்தில் ஒரு கலக்கத்தை உண்டு பண்ண, "என்ன மூர்த்தி சார் இந்த ஏரியால ஒரு ஈ காக்காவைக் கூட காணோம்?" என்று கேட்டுக்கொண்டே தன் கைத்துப்பாக்கியை எடுத்து முதுகின் பின்னே சொருகிக் கொண்டான் பாலா.
"ம்ம்ம்... தப்பு தண்டா பண்றதுக்கு இப்டி ஏரியாதானே செட் ஆகும் பாலா" என்று அவனுக்கு பதிலிறுத்த மூர்த்தியும், "இங்க இருக்கவங்க எல்லாமே பண முதலைங்க. ஒரு வீட்டுல என்ன நடக்குதுன்னு இன்னொரு வீட்டுக்காரன் எட்டிக் கூட பாக்க மாட்டான். அப்டியே பாத்தாலும் கண்ணு தெரியாத போலவே அவனவன் வேலையை பாக்க போயிடுவானுக." என்றவன், "இந்த கெஸ்ட்ஹவுசுக்கு ரெண்டு கேட் இருக்கு பாலா. நீ பின் கேட் பக்கம் நில்லு. நான் முன் பக்கம் போறேன். ஏதாவது வித்தியாசமா பட்டா உடனே போட்டோஸ் வீடியோஸ் எடுத்துடு. யார் கண்ணுலயும் பட்டிராத. தேவைப்பட்டா கன்னும் யூஸ் பண்ணு. சைலன்சர் பொருத்திருக்குள்ள?" என்று சீனியராய் அவனுக்கு சில அறிவுரைகளும் கூறியவன் அந்தத் தெருவின் மறுபுறம் சென்று மறைந்தான் மூர்த்தி.
மூர்த்தி கூறியது போலவே அங்கிருந்த ஒரு சந்தில் மறைந்து கொண்ட பாலா, அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்தப் பெரிய வீட்டின் முன்னால் மட்டும் சில உயர்ரக கார்கள், ஆட்டோ போன்ற வாகனங்கள் வந்து நிற்பதும், அதிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் போல தோற்றம் கொண்ட பலரும் இறங்கிச் செல்வதும், மீண்டும் வந்து கிளம்புவதுமாகவும் இருக்க, "கடவுளே இங்க என்ன நடக்குதுன்னே தெரியலயே. எல்லாரும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மாதிரில இருக்காங்க" என்று அனைத்தும் ஒன்று விடாது வீடியோவாக பதிவு செய்தவன், அந்த வாகனங்களின் எண்களையும் தன் குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டிருந்தான் பாலா.
அச்சமயம் அவனுக்கு நேர் எதிரில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றில் இருந்து இறங்கினாள் ஆர்த்தி.
ஆம் அபிதாவின் தங்கை ஆர்த்தி தான்.
சற்றே தொலைவில் இருந்ததால் சற்று கூர்ந்து நோக்கியே பெண்ணவளைக் கண்டு கொண்டவனுக்கு, "இந்த பொண்ணு எப்டி இங்க?" என்று முகத்தோடு மனமும் கலவரமாய் மாறியது.
அதில் இன்னும் அவளை கவனித்துப் பார்த்தவன் கண்காணிப்பில் இருக்கும் பொழுது எப்படி அவளிடம் சென்று பேசுவது என்ற யோசனையில் இறங்க, ஆட்டோவில் இருந்த இறங்கிய ஆர்த்தியும் சுற்றியும் முற்றியும் பார்த்து எதையோ, அல்லது யாரையோ தேடியபடி நின்றாள்.
அதைக்கண்டு மேலும் குழம்பியவனுக்கு, "இங்க வந்து என்ன தேடிட்டு இருக்கா இந்த குள்ளக்கத்திரிக்கா? இப்டி ஒரு ஏரியாவுக்கெல்லாம் வரலாமா இவ?" என்று சிறிது சினமும் துளிர்க்க, அதற்குள் ஆர்த்தியோ அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி எட்டு வைக்கவும் தொடங்கி இருந்தாள்.
அவள் சென்ற திசையைப் பார்த்தே பக்கென்று ஆனவன் அதற்குமேல் யோசியாது மின்னலென விரைந்து அவள் கரத்தைப் பற்றி இழுத்து தான் மறைந்திருந்த சந்திற்குள்ளும் நுழைந்து இருந்தான்.
திடீரென யாரோ கரத்தைப் பற்றி இழுத்ததில் அதிர்ந்து பதறியவள் கத்துவதற்காக வாயை துறக்கும் முன்னவே அங்கிருந்த சுவற்றில் அவளைச் சாற்றி கரம் கொண்டு அவள் வாயையும் அழுந்த மூடி இருந்தவன், "ஆர்த்தி பயப்படாத நான் தான் பாலா" என்று சொல்ல...
அந்தக் கூற்றில் தான் அவன் முகத்தையும் பார்த்து அது பாலா தான் என்று கண்டு கொண்டவளுக்கு, அத்துணை நேரம் இருந்த பதட்டத்தை விட அதிகமாகவே கை கால்கள் எல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியது.
அதில் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே அவளை விட்டு விலகிக் கொண்டவன், "ஆர்த்தி... நான் தான் பாலா... என்னத் தெரியுது தானே" என்று கேட்டு, "இந்த ஏரியாவுல நீ என்ன செய்ற? கொஞ்சம் முன்ன யாரையோ தேடின போல பாத்தியே. யாரது. இப்போ காலேஜ் டைம் தான. காலேஜ் போகாம இங்க ஏன் வந்த?' என்று அடுத்தடுத்த கேள்விகளையும் கேட்கத் தொடங்கி இருந்தான்.
ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் கூற முடியாது அவனை அச்சப்பார்வை பார்த்து வைத்தவள், "அது வந்து வந்து பாலா அங்கிள்" என்று திணற...
அவனோ, "இவ இந்த அங்கிள மட்டும் விடவே மாட்டாளா?" என்று சலிப்பாக எண்ணியவன், "எம்மா தாயே என்ன இனிமேல், பாலா இல்ல, டேய் பாலான்னு கூட கூப்பிடு. ஆனா தயவு செஞ்சு அந்த அங்கிள மட்டும் விட்டுடுமா. உன்ன விட நான் ஆறு வருஷம் தான் மூத்தவன்" என்று கை எடுத்து கும்மிட்டு விட்டு, "ம்ம்ம் சொல்லு? இங்க எதுக்கு வந்த ஆர்த்தி?" என்றான் குரலை இன்னும் கொஞ்சம் உயர்த்தி.
எப்பொழுதும் அவனது இது போன்ற பேச்சில் வேண்டும் என்றே அவனை அங்கிள் அங்கிள் என்று சொல்லிச் சீண்டுபவள் இப்பொழுதோ உடனே, "சரிங்க பாலா. இனிமேல் அங்கிள்னு சொல்ல மாட்டேன்" என்று விட்டு, "அது அது எக்ஸாம்கு நோட்ஸ் வாங்க தான் இங்க பக்கத்துல ஒரு பிரண்ட் வீட்டுக்கு வந்தேன்." என...
"இந்த ஏரியாவுல உனக்கு பிரண்டா? நம்புறபோல இல்லியே" என்று அவளை மேலிருந்து கீழ் கூர்மையாகவே பார்த்தான் பாலா.
இதுவரை அவளை சந்தித்த பொழுதுகள் எல்லாம் அவனோடு சரிக்குச் சரியாய் வாயாடிப் பழகியவளின் இன்றைய திணறலான பேச்சு அவனுக்கு மிகவும் வித்தியாசமாகவே பட்டது.
எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் பாலாவையே பார்த்து இருந்தவளுக்கும் துருவித் துருவி கேள்வி எழுப்பும் இந்த காவலன் பாலா மிகவும் புதிதாகத் தெரிய, கூடவே தான் செய்து கொண்டிருக்கும் தவறும் அவளை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்தது.
ஆதலால் அவனுக்கு பதில் ஒன்றும் உரைக்காது தலை குனிந்து நின்றவளிடம், "சரி பிரண்டோட அட்ரஸ் இருந்தா குடு ஆர்த்தி. நானே கூட்டிட்டுப் போறேன். இந்த ஏரியா கொஞ்சம் டேஞ்சரான ஏரியா. இங்க எல்லாம் தனியா வரக்கூடாது" என்றான் பாலா அவள் மேல் அக்கறை கொண்ட ஆணாக.
அதில் கையிலிருந்த அலைபேசியை இறுக்கி தன் பின்னே மறைத்தவளும், "இல்ல இல்ல நான் அட்ரஸ் மிஸ் பண்ணிட்டேங்க பாலா. நான் நான் காலேஜ்லயே போய் நோட்ஸ் வாங்கிக்கறேன்." என்று பதட்டமாக உரைத்தவள் அவ்விடத்தை விட்டும் செல்லப்போக...
பெண்ணவளின் இன்றைய வித்தியாசப் பேச்சில் 'எப்பவும் காது வரைக்கும் வாய் அடிக்கிறவ இன்னைக்கு என்ன ஒரு டைப்பா இருக்கா' என்பது போல் அவளைப் பார்த்து விட்டு, "ஆர்த்தி இரு" என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், "நீ சின்னப்பொண்ணு. இந்த ஏரியாவுல பாதை மாறி போக வாய்ப்பு இருக்கு" என்று அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஒன்றையும் நிறுத்தி தான் காவல் அதிகாரி என்றும் உரைத்து அவளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டே தன் பணிக்குத் திரும்பியவன் அவள் வாழ்க்கை என்னும் பாதையிலே வழி மாறிச் செல்லத் துவங்கி இருப்பதை இம்மியும் அறிந்திருக்கவில்லை.
அவள் ஆட்டோவில் ஏறி அமர்ந்து அந்த தெருவைக் கடந்த பொழுதிற்குள்ளாகவே ஆர்த்தியின் அலைபேசி ஏகத்துக்கும் அலறி அவளது முகநூல் தோழன் ராக்கியின் அழைப்பைக் காட்டியது.
அதில் இன்னும் பதட்டம் கூடிப் போனவளும், 'அய்யோ ராக்கி வேற போன் பண்றாரு" என்று ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு நொடி நேரப் பார்வையை செலுத்தி விட்டு அலைபேசியை உயிர்பித்து செவியில் பொருத்த...
அந்தப்புறம் அவனோ, "ஹேய் ஸ்வீட்டி எங்கடா இருக்க? நான் சொன்ன இடத்துக்கு வந்துட்டியா பேபி?" என்றவன் குரலில் அப்படி ஒரு ஆர்வமும் குழைவும், இன்னும் ஏதேதோ சொல்ல முடியாத உணர்வுகளும் கொட்டிக் கிடந்தது.
அக்குரலை கேட்ட உடனே இத்துணை நேரம் இருந்த குற்ற உணர்வுகள் எல்லாம் மறைந்து, "நோ ராக்கி" என்று சிணுங்கியவள், "நீங்க சொன்ன இடத்துக்கு தான் வந்துட்டிருந்தேன். ஆனா வழில பாலா தான் பாத்துட்டு இங்கல்லாம் வரக்கூடாதுன்னு என்ன ஆட்டோ ஏத்தி அனுப்பி வச்சுட்டாங்க. இப்போ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்" என்று அழாத குறையாக சொல்ல, அதைக் கேட்டிருந்தவனின் முகமோ ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும் ராட்சசனின் முகமாய் மாறி விட்டிருந்தது.
சில மாதங்கள் முன்னர் முகநூலில் பழகி இருந்தவனிடம் அன்று பேசுவதற்குக் கூடத் தயங்கியவளை காமம் கலந்த காதல் வசனங்கள் பேசியே இன்று அவன் சொல்லும் இடத்திற்கு தனியாக வரும் அளவிற்கு சிறியவளின் மனதில் பெரும் சஞ்சலத்தை உண்டு பண்ணியிருந்தான் அந்த ராக்கி.
இன்னும் வீடியோ காலில் கூட தன் முகத்தைக் காட்டி இராதவன், தான் அனைத்துப் பெண்களிடமும் பேசும் காதல் மொழிகளுக்கு சற்று அதிகமாகவே பேசி பெண்ணவளின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவன், கடந்த சில மாதங்களிலே உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அவள் வாயாலே சொல்லவும் வைத்திருந்தான்.
அவன் திட்டமிட்டபடியே அவளும்
சில தினங்கள் முன்னர் அவன் உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்ததை நம்பி, "ராக்கி நான் உங்களை நேரில பாத்தே ஆகணும்" என்று அடம்பிடிக்கவும் அதற்காகவே காத்து இருந்தவனும் தன்னுடைய இடத்திற்கு அவளை வரக் கூறியிருந்தான்.
அவளும் இளமையின் துடிப்பிலும், இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பியதன் விளைவிலும் அவனுக்காக ஓடோடி வந்திருக்க,
அப்படி வந்தவளைத்தான் பாலா திருப்பி அனுப்பி இருக்க, உலகம் அறியா புள்ளிமானை வேட்டை ஆடக் காத்திருந்த ஓநாய் அதோ, "ஆர்த்தி ஏன் இப்டி பண்ண?" என்று ஏகத்துக்கும் அலறி இருந்தான்.
அவனிடமிருந்து இப்படி அலறலை எதிர்பாராதவளும், "ராக்கி என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்டி கத்தறீங்க?" என்று பயந்து போய் வினவ...
அவளது பேச்சில் தன்னை நிதானமாக்கிக் கொண்டவனும்,
"ஹேய் ஹேய் பேபி கூல் டா கூல் டா. ஃபர்ஸ்ட் டைம் உன்னை நேரில் பார்க்க போறேன்னு ரொம்ப எக்சைட்மென்ட்டா இருந்தேன்டா. அதான் நீ வரலன்னு சொல்லவும் அப்செட் ஆகிட்டேன். ரொம்பவே ஏமாந்து போயிட்டேன் பேபி" என்று வருந்தும் குரலில் கூறியவன், "நீ வந்ததும் உன்ன எங்கெல்லாம் அழைச்சிட்டு போலாம்னு இருந்தேன் தெரியுமா? உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்து, நீ ராக்கி னு சினுங்கற அழக அப்படியே பக்கத்துல இருந்து பாத்து ரசிச்சு, உன்ன ஏதேதோ செய்யணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன்" என்று மேலும் எழுத்தில் வடிக்க முடியாத கிறக்க வார்த்தைகளும் கூறி வரம்பை மீறி பேசிக் கொண்டிருக்க..
அவைகள் எல்லாம் கேட்டுக் கேட்டே அந்த கிறக்கத்திற்கு அடிமையாகி விட்டவளும், "ச்சீ நீங்க ரொம்ப மோசம் ராக்கி" என்று வெட்க குரலில் சினுங்கி, "வெரி வெரி சாரி ராக்கி... உங்களை ஏமாத்தணும்னு நான் எதுவும் பண்ணலை. பாலா தான் எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க" என்று கூறியவள்,
"இன்னொரு நாள் நாம கண்டிப்பா மீட் பண்ணலாம் ராக்கி. அன்னிக்கு உங்க பேரண்ட்ஸ் கிட்டயும் என்ன இண்டிடியூஸ் பண்ணி வைங்க. அப்றம் எங்க வீட்ல பேசிக்கலாம்" என்று அவள் பாட்டில் திட்டமும் கூறிக் கொண்டிருந்தவளிடம்,
"ம்ம்ம் ஓகே பேபி" என்று தலையை ஆட்டிக் கொண்டவன், "சரி அந்த பாலா யாரு பேபி?" என்று வினவிய நொடி, ஆர்த்தியின் அலைபேசி பாலாவின் அழைப்பைக் காட்டியது.
உடனே உடல் தூக்கிப் போட நிமிர்ந்து அமர்ந்தவள், "அய்யோ பாலா தான் லைன்ல வர்றாங்க. நான் அப்றம் பேசுறேன் ராக்கி.
ஒரு ஒன் வீக்குக்கு நீங்க என்ன கூப்பிடாதீங்க. இந்த செமஸ்டர் முடியவும் நானே உங்களுக்கு கூப்பிட்டு நெக்ஸ்ட் மீட் பத்தி பேசலாம். பை ராக்கி பை" என்று அவன் பேசுவதற்கு இடமே கொடாது அலைபேசியை அணைத்தவள் பாலாவின் அழைப்பையும் ஏற்றிருந்தாள்.
அந்தப்புறம் பாலாவும் அவள் பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறாளா எங்கு சென்று இருக்கிறாள் என்று கேட்டு வீட்டிற்குச் சென்றதும் தனக்கு அழைத்துக் கூறும் படியும் கூறி விட்டு இணைப்பைத் துண்டிக்க, நியாயமாக அவளுக்கு எரிச்சலைத் தரவேண்டிய இன்றைய பாலாவின் தலையீடு அவளுக்கு சிறுதான இதத்தைத்தான் கொடுத்தது
பெரிதான பழக்கம் இல்லாத தன்மீது அந்த ஆடவன் காட்டும் அக்கறையில் சிறு மகிழ்ச்சியும் கூட உள்ளுறப் பரவியது.
ஆனால் அவளுக்கு முற்றிலும் மாறாக அவளிடம் பேசி முடித்த ராக்கிக்கோ அவள் தன் கேள்விக்கு பதிலை கூட உரைக்காது அலைபேசியை அணைக்கவும் ஆத்திரம் மிகுந்து தன் அலைபேசியையும் அணைத்து, "டேமிட்..." என்று அங்கிருந்த சுற்றில் ஓங்கி அடித்தான் ராக்கி.
அதில் அலைபேசி சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்க, அதைப் பார்த்த படியே அவனை நெருங்கிய அவன் நண்பனோ, "என்ன மச்சி இவ்ளோ ஆத்தரம் எதுக்கு. அந்த புது பட்சி பறந்துருச்சா?" என...
அதற்கு அவனும், "அவ்ளோ சீக்கிரம் பறக்க விட்டுடுவேனா?." என்றவன்,
"ரொம்ப ப்ரஷ்டா. அதான் கொஞ்சம் அதிகமாவே ஆட்டம் காட்டுது." என்று பல்லைக் கடித்தான் ராக்கி.
அதைக்கேட்டு அவன் தோளைத் தட்டி கலகலவென்று நகைத்தவனும்,
"எப்படியும் நீ விடமாட்டான்னு தெரியுமே மச்சி" என்றவன், "அது வரும் போது வரட்டும். இப்போ வேற ரெண்டு வந்துருக்கு. அத வந்து என்னனு பாரு" என...
அவனோ, "இல்ல மச்சி. எனக்கு இப்போ மைண்டே சரி இல்ல. முடிஞ்சா நீயே மேனேஜ் பண்ணு" என்றான்.
அதில் அவனை புருவம் சுருக்கிப் பார்த்தவனும், "என்ன ராக்கி என்னிக்கும் இல்லாம இன்னிக்கு இவ்ளோ அப்செட்டா பேசுற" என்றவன், "பட்சி ரொம்ப அழகோ" என...
அதைக்கேட்டு கண்களில் காமம் மின்னச் சிரித்தவனும், "ரொம்ப ரொம்ப அழகுடா. பிரிஜ்ஜில வச்ச ஆப்பிள் போல" என்றான்.
அதில், "ம்ம்ம் அதான் இவ்ளோ பீலிங்கா?" என்று மீண்டும் அவன் தோளைத் தட்டியவன், "சரி அந்த ஆப்பிள நினைச்சுட்டே வாச்சும் இந்த மேங்கோஸ கவனிடா. டோஸ் கொடுத்தே அரை மணி நேரம் ஆகுது. நான் கையை வச்சா முழுசா முடிச்சுடுவேன்டா" என்று அவன் கையைப் பற்றி இழுக்க...
"ம்ம்ம்..." என்று தலையை ஆட்டிக் கொண்டவனும், "ரெண்டுமே ப்ரெஷ்ஷா?" என்று வினவியபடி அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்.
அதற்கு, "ஆமாடா" என்று சொல்லிக் கொண்டவனும், "நம்ம விக்கி தான் கரெக்ட் பண்ணிருக்கான். ஆல்ரெடி டோஸ்கு அடிக்ட் ஆனதுக தான். உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது" என்று சொல்லிக் கொண்டே அவனை பின்தொடர்ந்து செல்ல, அந்த அறைக்குள்ளோ பதினெட்டு வயது மதிக்கத்தக்க இரு இளம் பெண்கள் படுக்கையில் அமர வைக்கப்பட்டு இருந்தார்கள்.
அறைகுறையாய் திறந்திருந்த
அவர்கள் கண்களில் இருந்த கிறக்கமும், நிலையில்லாது சுற்றி வந்த அவர்கள் தலையின் தள்ளாட்டமுமே அவர்கள் வீரியமிக்க போதை வசஸ்துவை உட்கொண்டிருப்பதை உணர்த்த, சுய நினைவு இல்லாது ஏதேதோ உளறிக் கொண்டிருந்த அந்தப் பெண்களைப் பார்த்து, "அவ அளவுக்கு இல்லன்னாலும் பட்சிக ப்ரெஷ்ஷாதான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவர்களை நெருங்கியவன் அந்தப் பெண்களின் உடையில் கையை வைத்த நொடி அந்த அறையில் இருந்த புகைப்பட கருவியோ அங்கு நடப்பவற்றை எல்லாம் படமெடுக்கத் துவங்கியது.
தலையைக் கூட நிமிர்த்த முடியாத போதையில் சுய நினைவுகள் இன்றிக் கிடந்தாலும் யாரோ ஒருவன் தங்கள் மீது கை வைக்கவும், "ஹேய்" என்று தட்டி விட முயன்றவர்களை, "பேபிஸ். இங்க பாருங்க இங்க பாருங்க. நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன். ஒரு டென் மினிட்ஸ் மட்டும் நான் செய்றதுக்கெல்லாம் பேசாம இருந்தீங்கன்னா இதை விட பெரிய சொர்க்கத்துக்கு உங்களை கூட்டிட்டுப் போற டோஸ போட்டு விடுவேன்" என்று அங்கிருந்த மாத்திரை அட்டைகளையும் ஊசி மருந்துகளையும் காட்ட...
அதைப் பார்த்து கோணலாகச் சிரித்துக் கொண்டவர்களும் அடுத்து
வந்த நிமிடங்களில் அவன் அவர்களின் உடைகளை களைந்து துகிலுரித்த பொழுதும், தானும் உடையில்லாது அவர்களை அணைத்து முத்தமிட்டு தனக்கு வேண்டிய அளவு புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையிலும் கூட அவனுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவே இல்லை. அப்படி தெரிவிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. உள்ளே சென்ற போதை வஸ்து அத்துணை ஆட்கொண்டிருந்தது அவர்களை.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்த பின்னரே தனக்கு வேண்டிய வேலையை முடித்துக் கொண்டு எழுந்தவன், "வீடியோஸ் எப்டி வந்திருக்கு?" என்று நண்பனிடம் கேட்டபடியே உடைகளை எடுத்து அணிந்து கொள்ள...
அத்துணை நேரமும் அங்கு நடந்தவற்றை வீடியோ எடுத்து முடித்தவனும், "செம்மையா வந்துருக்குடா. அது எப்படிடா பட்சிகளை ஒன்னும் பண்ணாமையே எல்லாம் முடிஞ்சமாறி பெர்பெக்ட்டா பண்ணிடுற. இவ்ளோ குளோசா இருந்துட்டு எப்பிடிடா உன்னால அவளுகளை விட்டு வைக்க முடியுது?" என்று அவனிடம் ஆச்சரியமாக வினவினான்.
"அது அப்டித்தான்டா பழகிடுச்சு. லட்சக்கணக்கில் பணம் வேணும்னா எல்லாத்தையும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி தான்டா ஆகணும்" என்ற ராக்கி, "ஆனா அந்த ஆர்த்தி பட்சிக்கிட்ட இவ்ளோ கண்ட்ரோலா இருக்க முடியுமான்னு தான் தெரியலடா" என்றும் சேர்த்துச் சொல்ல...
அதைக்கேட்டு, "மச்சி..." என்று அவன் கையை பற்றிக் கொண்டவனும், "அவ்ளோ புடிச்சிருந்தா பேசாம அத கல்யாணம் பண்ணிக்கோயேன். உனக்கும் வயசு ஏறிட்டே போகுதுல்ல" என்றான் நண்பன்.
அதற்கு, "போடா இவனே" என்று திட்டிக் கொண்டவனும், "அவள்ளாம் கோடி கோடியா கொட்டிக் கொடுக்கப்போற பீஸ் மச்சி" என்று வக்கிரமாக சிரித்துக் கொண்டவன், "எடுத்த வீடியோவ கம்யூட்டர்ல சேவ் பண்ணிட்டு பட்சிகளோட போட்டோஸ மட்டும் அந்த எம் எல் ஏ க்கு அனுப்பி விடு. அந்த கிழடு தான் ப்ரெஷ் பீஸ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கு. நான் குளிச்சிட்டு வந்து ரேட் பேசிக்கறேன்" என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவன் மீண்டும் ஆர்த்திக்கு அழைத்து காதல் மொழிகள் பேசிவிட்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
கோவையிலே ஒரு முக்கிய முன்னால் அமைச்சரின் அண்டர்கிரவுண்ட் கையாள் தான் ராக்கி. அமைச்சருடைய அனைத்து தில்லுமுல்லு தொழில்களுக்கும் வலது கையாய் இருப்பவன்.
அந்த அமைச்சருடைய பதவி வெறிக்காகவும், அவருடைய உறவினர் மற்றும் நண்பர்களின் தேவைக்காகவும், ஆசைக்காகவும் உலகம் அறியாத கன்னிப் பெண்களான பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் பலரை ஏமாற்றி, அவர்களை போதைக்கும் அடிமையாக்கி, உடலைத் தின்னும் பல காமக் கழுகுகளுக்கு அந்த பிஞ்சுப் பறவைகளை விருந்தாக்கிக் கொண்டிருக்கும் ராக்கியின் குழுவிற்கு முகநூல் இன்ஸ்டா போன்ற செயலிகளும், அவனது ஈனச் செயல்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
இளமையின் துடிப்பிலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் கேட்பார் பேச்சை கேட்டும் யாரென்றே தெரியாத நபர்களுடன் பேச ஆரம்பித்து, பின் புகையிலை மது போதை மருந்துகள் போன்ற பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிப்போன பல இளம் பெண்களில் பலர் காதல் என்ற பெயரிலும் அவனிடம் ஏமாந்து விடுகின்றனர்.
அவர்கள் சுய நினைவில் இல்லாத பொழுது ராக்கி எடுத்து வைத்திருக்கும் வீடியோக்களைப் பார்த்தே தாங்கள் நாசமாக்கப்பட்டு விட்டோம் என்று மருகி, நெட்டில் போட்டு விடுவேன் என்ற அவனது மிரட்டலுக்கும் பயந்து தங்கள் சம்மதத்தோடே நாசப் பாதையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையும் சிதைத்து கொள்கின்றனர் எத்துணையோ பேதைப் பெண்கள்.
அப்படி நாசமாவதை விரும்பாது, வெளியில் சொல்லவும் தைரியம் இன்றி தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டவர்களும் ஏராளம் இருக்க...
அமைச்சரின் ஆதரவின் பேரிலே அனைத்தும் நடப்பதால் இதுவரை அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் பெரிதாக காவலர்கள் பார்வைக்கும் வந்து சேரவில்லை.
ஆனால் சட்டம் ஒழுங்கைக் காக்கவென்றே பிறப்பு எடுத்திருக்கும் தீரன் அவனிற்கு எதுவும் தப்பாது இருக்க, கடந்த சில மாதங்களாகவே அவன் கவனித்து வந்த இளம் பெண்களின் தொடர் தற்கொலைகளும் சேர்ந்து அந்த கெஸ்ட்ஹவுஸ் பங்களாவின் மர்மங்களை கண்காணிக்க கட்டளைகள் விதித்திருந்தான் சத்யா.
இது எதுவுமே தெரியாத பேதை பெண்ணோ தான் எத்துணை பெரிய இக்கட்டில் மாட்டி இருக்கிறோம் என்றும் உணராது அந்த ராக்கியின் வார்த்தைகளை அசைபோட்டு கிறங்கியபடியே அந்த ராட்சச வேடனின் பொறியில் மாட்டும் பட்சியாய் மாற மற்றுமொரு சந்தர்ப்பம் தேடத் தொடங்கி இருந்தாள் ஆர்த்தி.