• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,036
Reaction score
2,940
Points
113
பொழுது – 4 💖


ஒருவாரம் கடந்திருந்தது. நிவினுக்கு உடல்நிலை தேறியிருக்க, மருத்துவர் சில பல அறிவுரைகளைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஒன்பது நாட்கள் கழித்து தையல் பிரித்து கட்டை மாற்ற வேண்டும், மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நிவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

ஓய்வின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்த கால்கள் கடந்து சென்ற பத்து நாட்களாக அதீத ஓய்வில் இருந்தன. அவனுக்குமே அடித்துப் போட்டது போல உடல் முழுவதும் வலி பரவியது. கை முறிவைத் தவிர பெரிதாய் காயமில்லை‌. இருந்தாலும் சோர்வு அப்பியிருந்தது. பின் மண்டையிலிருந்த தையலை மருத்துவமனையிலே செவிலியர்கள் அகற்றியிருந்தனர். இப்போது அந்த இடத்தில் லேசாய் முடிகள் முளைக்கத் துவங்கியிருக்க, காயம் ஆறத் ஆரம்பித்திருந்தது.

வலித்தாலோ இல்லை மீண்டும் ரத்தம் வந்தாலோ களிம்பொன்றை பூசி விடுமாறு செவிலியர் மகேந்திராவிடம் கொடுத்திருந்தார். ஒரு கூடை நிறைய மாத்திரைகள் நிரம்பி வழிய, நிவின் அவற்றை ஆயாசமாய்ப் பார்த்தான். ஏனோ சிறு வயதிலிருந்தே அவனுக்கு மருந்து மாத்திரைகள், மருத்துவமனை என்றால் பிடித்தமின்மை தோன்றிற்று. கடைசியாய் அவனுடைய தாய்க்காக சில மாதங்கள் மருத்துவமனையில் இருந்தான். அதற்குப்பின் மூன்று வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் மருத்துவமனை வாசம்.

வாய் வார்த்தையாக உரைக்காவிடினும் அவனது பிடித்தமின்மையை தந்தையும் அறிவாரே. அதனாலே மருத்துவரிடம் பேசி இன்னும் ஒரு வாரம் தங்க வேண்டும் என்று கூறியவரின் மனதைக் கரைத்து மகனை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.

கை கால்களில் ஆங்காங்கே இருந்த சிராய்ப்புகள் இப்போது செந்தழும்புகளாய் ஆறத் துவங்கியிருந்தன. தோள்பட்டையில் புண் இன்னும் சரியாகவில்லை. கன்னத்தில் ஒரு பக்க காதோரமிருந்த சிராய்ப்பு செம்புண்ணாகியிருந்தது. இன்னும் சில வாரங்களுக்கு எங்கேயும் செல்ல கூடாது என மகேந்திரா மகனை அதட்டி உருட்டி ஓரிடத்தில் அமர வைத்துவிட்டார். அவனால் சத்தியமாய் முடியவில்லை. எப்போது வெளியே சென்று சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் என மனம் ஏங்கிற்று.

அக்ஷா தினமும் வந்து இவனைப் பார்த்துவிட்டு சென்றாள். வரும்போது எதாவது என அவனுக்காக பார்த்துப் பார்த்து சமைத்து எடுத்து வந்தாள். நிவின் இத்தனை மெனக்கெடல்கள் வேண்டாம் என அழுத்திக் கூறியும் அவள் காதில் வாங்கவில்லை. அவள் பிடியிலே நின்றாள்.

“ப்ம்ச்... நான் என்ன நீ நல்லா இருக்கப்போ எடுத்துட்டு வந்தேனா நிவின். உனக்கு ஹெல்த் இஷ்ஷூஸ். அதனாலே தான் செய்றேன். ரொம்ப பண்ணாத மேன்!” என அலட்டிக்காது பதிலளித்து அவள் நகர, இவன் பெருமூச்சை வெளிவிட்டான்.

அவள் அகன்றதும், “இந்தப் பொண்ணு ரொம்ப பார்க்க அமைதியா, அழகா இருக்கா நிவினு. உன்னை அக்கறையா பார்த்துக்கிறா. அவளுக்கு உன் மேல விருப்பம் இருக்கு போல. லாஸ்ட் டைம் நான் வந்த்தப்பவே கவனிச்சேன். நீ என்ன டா சொல்ற? உனக்கு எதுவும் எண்ணமிருக்கா?” மகேந்திரா மகனின் முகம் பார்த்தார். அவன் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை.

அவனுக்குமே அக்ஷாவின் எண்ணம் ஆரம்பத்திலே புரிந்திருந்தது. அவள் வாய் வார்த்தையாகக் கூறாவிடினும் அவளது நட்பை முடிந்தளவு முறித்துக் கொண்டான். ஒரு சில முறை மறைமுகமாகக் கூட தனது விருப்பமின்மையைத் தெரிவித்திருக்கிறான். ஆனால் இந்தப் பெண் அதையெல்லாம் தூசியாய் தூக்கியெறிந்து
விட்டாள். அதில் நிவினுக்கு ஏகக் கோபம். கடந்து சென்ற நாட்களில் அவளது அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிக்காமல் இருந்தான். அவளது வரவில் தனக்கு உவப்பில்லை என்பது போல நடந்து கொண்டான்.

அவளுக்கும் வலித்தது போல. சில மாதங்களாக பெரிதாய் அவனைத் தொந்தரவு செய்யாது இருந்தாள். அதில் நிவினுக்கு நிம்மதி நிறைந்திருந்தது. கடைசியாக பத்து நாட்கள் முன்பு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வெளியே செல்லலாம் என திட்டம் தீட்டியிருந்தனர். அதில் கலந்து கொள்ளச் செல்லும்போது தான் நிவினுக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. முறிக்கப்பட்டு விட்டது என அவன் நினைச்சு ஆசுவாசப்பட்ட நாட்களை எல்லாம் தூள் தூளாக்கிவிட்டு அக்ஷா மீண்டும் அவனது வாழ்க்கையில் நுழைத்திருந்தாள். நிவினுக்கு வேறு எப்படி அவளிடம் கடுமையாக நடந்து கொள்ள வென்று தெரியவில்லை. சில பல வருடங்களாக நட்பிலிருக்கும் பெண்ணை வார்த்தைகளால் வதைக்க அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் இந்தப் பெண் அவனது பொறுமையை வெகுவாய் சோதித்துப் பார்த்தாள்.

“டேய் நிவினு... உன்கிட்ட தான் கேட்குறேன். உனக்கு வயசு முப்பதாகிடுச்சு. கல்யாணம்னு பேச்செடுத்தா, அதை தட்டிவிட்ற‌. இந்தப் பொண்ணை மருமகளாக்கிடுறதுல எனக்கு அப்ஜெக்ஷன் இல்ல டா. நீ உன் மனசுல இருக்கதை சொல்லு!” அவர் அழுத்திக் கேட்க, இவனது தலை இடம் வலமாக அசைந்தது.

“இல்லப்பா... அக்ஷா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவ்வளோ தான். நீங்க நினைக்கிற அளவுக்கு எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல. இனிமே இந்தப் பேச்சை எடுக்காதீங்கப்பா!” இவன் உறுதியாய் உரைத்தான்.

“சரி அந்தப் பொண்ணு வேணாம். நான் உனக்கு பொண்ணு பார்க்குறேன். நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ டா!” மகேந்திரா குரலில் ஆற்றாமை ததும்பி வழிந்தது. தன் மனைவி இருக்கும்வரை நிவின் அவரது காலைச் சுற்றும் பூனைக் குட்டி போல அவரைத்தான் சுற்றி வருவான். படித்து முடித்ததும் வெளியூர்களிலிருந்து நிறைய நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்தும் தாயைவிட்டு எங்கும் செல்ல முடியாதென உள்ளூரிலே குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தான். தாயுடனே சுற்றுவான். அப்படியிருக்கையில்தான் நிவினின் தாய் பரணி மார்பகப்‌ புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு முற்றிய நிலையில்தான் மருத்துவர்கள் நோயைக் கண்டுபிடிக்க, அவரது உயிரைப் பிடித்து வைக்க முடியாது போனது.

இறப்பதற்கு முன்பு சில மாதங்களாக மருத்துவனையில் தான் பரணியை அனுமதிக்கப்பட்டிருந்தார். நிவின்தான் அவருடனே இருந்து பார்த்துக் கொண்டான். மூன்று மாதங்களிலே பரணி இறைவனடி சேர்ந்துவிட, இவனால் தாயின் இழப்பை அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரில்லாத வீட்டில் இருக்க முடியாது என மறுத்து மதுரையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கி குடிபுகுந்து விட்டான்.

பாலுமகேந்திரா விருதுநகர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அலுவல் நிமித்தமாக அவரால் மகனுடன் தங்க இயலவில்லை. அதுவும் மட்டுமல்லாமல் விருதுநகரில் தான் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக விடு, விவசாய நிலம் என அத்தனை சொத்துக்கள் குவிந்திருந்தன. அவற்றைப் பராமரிக்கும் பொருட்டு அவரால் இடம் மாறுதலை ஆதரிக்க முடியவில்லை. முதலில் நிவின் செல்வதில் அவருக்கு விருப்பமில்லைதான். இருந்தாலும் மகனுக்கு மனமாற்றம் வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.

வாகீஸ்வரி மதுரையில் வாசிப்பதில் அவருக்கொரு நிம்மதி உண்டு. இவர் மதுரைக்கு செல்ல ஓரிரண்டு மணி நேரங்கள் பிடிக்கும்‌. மகனுக்கு ஏதுமென்றால் அவர் பார்த்துக் கொள்வார் என மனதில் சிறு ஆசுவாசம் துளிர்க்க, நிவின் மதுரைக்கு இடம் பெயர்ந்ததும் தங்கைக்கு அழைத்துக் கூறிவிட்டார்.

வாகீஸ்வரி கணவர், பிள்ளைகள் சகிதமாக சென்று நிவினுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். சிறு வயதில் அவ்வப்போது பார்த்த நினைவு அவனுக்கு உண்டென்றாலும், எளிதில் அவனால் பெரியவர்களிடம் ஒட்ட முடியவில்லை. ஆனால், சிறியவர்கள் இருவரும் அவனிடம் நன்றாய் பேசி பழக, ஒத்த வயதுடையவர்களின் கருத்துக்கள் ஒருமித்திருந்த படியால் அவர்களுக்கு இடையே நட்பு பலப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக நிவினின் வாழ்க்கையில் அவர்கள் ஒரு அங்கமாக மாறியிருந்தனர். இடையே அக்ஷாவும் ஆரோனும் நந்தனா உபயத்தால் மூவர் ஐவராகிப் போயினர்.

மறுநாள் அக்ஷி காலையிலே வந்துவிட்டாள். “குட் மார்னிங் நிவின். இன்னைக்கு உளுந்தங்களி செஞ்சு எடுத்துட்டு வந்தேன். ரெசிப்பி யூட்யூப்லதான் பார்த்தேன். இந்த மாதிரி டைம்ல இது நல்லதாமே. அம்மாகிட்ட கேட்டேன், அவங்களும் சொன்னாங்க. அதான் ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு எடுத்துட்டு வந்தேன்!” எனப் புன்னகையுடன் பேசுபவளை மனம் நோக வைக்க விருப்பமில்லாதவன், தலையை அசைத்து வைத்தான்.

“அங்கிள் எங்க, தூங்குறாரா?” விழிகளால் வீட்டைத் தூழாவியபடி வினவினாள் இவள்.

“நோ... ஹி இஸ் பாத்திங்!” பதிலுரைத்தான் நிவின்.

“நீ க்ளீனிக் கிளம்பலையா?” அவன் நேரத்தைப் பார்க்க, “ஹம்ம்... போகணும் டா. இன்னைக்கு ஒரு க்ன்ப்ரென்ஸ் இருக்கு. அதுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. சோ, இங்க வந்துட்டேன். லேட்டா போனா போதும். யூ டோன்ட் வொர்ரீ. காஃபி குடிக்கிறீயா? நான் போட்டுத் தரவா?” என வினவியபடியே சமையலறைக்குள் சென்றாள்.

“வேணாம் அக்ஷா... நான் இப்போதான் காபி குடிச்சேன்!” அவன் குரலை உயர்த்தி அவளுக்கு கேட்குமாறு பதிலளிக்க, “பரவாயில்லை மேன்... நான் போட்ற காபியையும் குடி. ஒன்னுமில்ல!” என மூவருக்கும் குளம்பியைக் கலந்தாள். அவள் அடுக்களையில் இருந்து வெளியே வர, மகேந்திரா குளித்து முடித்து வந்தார்.

“வாம்மா...” என அவர் தலையசைக்க, “குட் மார்னிங் அங்கிள்!” எனப் பளிச்சென புன்னகைத்து அவருக்கொரு குளம்பியைக் கொடுத்தாள்.

“ஏன்மா டெய்லி நீ இங்க மெனக்கெட்டு வர்ற. வேலைக்குப் போற புள்ளை. இங்கேயும் அங்கேயும் அலையணுமா? இதுல சமைச்சு வேற எடுத்துட்டு வர்ற? உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா?” மகேந்திரா கொஞ்சம் அவளுக்காகக் கரிசனையாய் வினவினார்.

அவரைப் பார்த்து புன்னகைத்தவள், “அங்கிள், நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது. நான் இங்க வர்றது என் வீட்டுக்குத் தெரியும். அம்மா, அப்பாகிட்டே சொல்லிட்டுத்தான் வரேன். ரொம்ப கஷ்டமெல்லாம் இல்லை. க்ளினிக் போகும்போதும் அப்படியே நிவினைப் பார்த்துட்டுப் போறேன். அவ்வளோ தான்!” சின்ன தோள் குலுக்கலுடன் பேசியவளை அவர் ஆதுரமாகப் பார்த்தார். நன்றாய் படித்து முடித்து பல் மருத்துவராக வேலை செய்கிறாள் அக்ஷா. கலையான முகம், வெளிர் நிறம் என இந்தக் காலத்து நவீன் யுவதி. பார்த்ததும் கட்டியிழுக்கும் புன்னகை. யாரையும் ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத சுபாவம் என அவளுடைய குணங்கள் கூட மென்மையானவை, மேன்மையானவை. இந்தப் பெண்ணை ஏன் மகன் பிடிக்கவில்லை என்று கூறினான் என நேற்றிலிருந்தே கேள்வி தொக்கி நின்றது. சிறிது நேரத்தில் அவள் அகலவும், மகனிடமே கேட்டார் பெரியவர்.

“ஏன்டா நிவினு... இந்தப் பொண்ணை ஏன் வேணாம்னு ஒரு காரணம் சொல்லு டா. நல்லா அழகா இருக்கா. படிச்ச பொண்ணு ‌. பண்பான பொண்ணு டா!” தந்தை மீண்டும் அந்தப் பேச்சிற்கே வர, இவனுக்கு சற்றே சலிப்பாய் இருந்தது‌.

“ப்பா... அவ அழகா இருக்கா. இல்லைன்னு சொல்லலை. பட், எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“ப்ம்ச்... அப்புறம் எப்படிப்பட்ட பொண்ணு உனக்குப் பிடிக்கும் டா?” அவர் குரலை மெதுவாய் உயர்த்தினார்.

“க்வாலிபிகேஷனே கிடையாது. எனக்குப் பிடிச்சிருக்கணும்ன்றது மட்டும்தான் கண்டிஷன்!”

“டேய்... அநியாயம் பண்ணாத டா. உனக்குப் பிடிக்குற மாதிரி பொண்ணை நான் எங்கடா தேட?”

“அது உங்கப் பிரச்சனை!” அசட்டையாகக் கூறி அவன் அறைக்குள் நுழைய, இவர் அவனை முறைத்தார்.

“உனக்கு உடம்பு சரியானதும் நான் பார்க்குற பொண்ணை நீ கல்யாணம் பண்ணணும் டா. இது தான் என்னோட முடிவு!” அவர் கண்டிப்பாய்க் கூற, அறையிலிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான் நிவின்.

“அப்போ நீங்களும் கேட்டுக்கோங்க. நீங்க பார்க்குற பொண்ணை வெறும் ஐஞ்சு நிமிஷம் பார்த்துட்டு லைஃப் பாட்னரா என்னால அக்செப்ட் பண்ண முடியாது. பழகிப் பார்த்து எனக்குப் பிடிச்ச பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிப்பேன்!” என அவரது தலையில் இடியை இறக்கினான் மகன்.

“டேய்... அதுக்காக பொண்ணை உன் கூட பழக பெத்தவங்க சம்மதிப்பாங்களா டா. இதெல்லாம் அநியாயமா தெரியலை உனக்கு?” அவர் பல்லைக் கடிக்க, இவன் பெருமூச்சை விட்டுவிட்டு வெளியே வந்தான்.

“ப்பா... சில். ஏன் டென்ஷனாகுறீங்க. ஒன்னுமில்ல, எனக்கு முதல்ல ஹெல்த் சரியாகட்டும்‌. அப்புறம் பார்க்கலாம். மேரேஜ் வேணாம்னு நான் சொல்லலை. எனக்குப் பிடிச்ச பொண்ணா பண்ணிக்கிறேன்னு சொல்றேன். சோ, லீவ் திஸ் டாபிக் நவ்!” என்னவனை இவர் வேதனையாகப் பார்த்தார். முதல்முறையாக மகனின் திருமண பேச்சை துவங்கும்போது பரணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பார்த்துக் கொள்ள, அவரது இன்மையை ஏற்றுக் கொள்ள என இந்த மூன்று வருடங்கள் ஓடிவிட, அவருக்குமே இப்போதுதான் உறைத்தது. மகனுக்கு முப்பது வயதாகிவிட்டது, அவனுக்கொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனம் முழுவதும் அந்த எண்ணமே நிரம்பி வழிந்தது.
 
Administrator
Staff member
Messages
1,036
Reaction score
2,940
Points
113
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு திருமணத்தை முடிப்பது அத்தனை எளிதானக் காரியமல்ல என அவரே கண் கூடாகக் கண்டிருக்கிறார். நிவினுக்கு உடல்நிலை சரியானதும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என மனதிலே உருப்போட்டார் மனிதர். ஆனால், மகன் அந்தப் பேச்சிற்கு அத்தனை மதிப்புக் கொடுக்கவில்லை. அந்த எண்ணத்தை தற்காலிகமாக கிடப்பிலிட்டான்.

மேலும் இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது. மகேந்திராவிற்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் கூடிய சீக்கிரம் நடைபெற இருப்பதால், அவரால் மகனுடன் துணைக்கு இருந்து கவனிக்க முடியாத சூழ்நிலை. அதில் ஏகவருத்தம் அவருக்கு. இப்போது நிவின் நன்றாய் தேறியிருந்தான். கையை அசைக்க முடியாதது தவிர, பெரிதாய் குறையில்லை. தன்னுடைய வேலைகளைத் தானே கவனித்துக் கொண்டான். கழிவறைக்குச் செல்ல அவன் கஷ்டப்படுவதால் தந்தை உதவ வர, அவன் மறுத்துவிட்டான். தான் பார்த்துக் கொள்வதாய் கூறியவனுக்கு அந்த வயதிற்கே உரிய சங்கடம் தடுத்துவிட்டது. ஆனால் பெற்றவர்களுக்கு என்றுமே தங்களது பிள்ளைகள் குழந்தைகள்தான் என்பது அவனுக்குப் புரியவில்லை.
முதலில் மகேந்திராவே செய்வதாய் கூற, இவன் கண்டிப்பாய் மறுத்துவிட்டான். அவரும் சரியென விட்டுவிட்டார். அவரிருந்த வரை வேலையேல்லாம் பார்த்துக் கொண்டார். பெரியவர் கிளம்புவதால் வேலைக்கு ஒரு பெண்மணியை நியமித்தார்.
“நிவினு... சனி, ஞாயிறு வரேன் டா. நீ பத்திரமா இருந்துக்கோ. எதுனாலும் எனக்கு உடனே ஃபோன் பண்ணு!” என அவர் மகனைக் கவலையுடன் பார்த்துக் கொண்டே கூற, இவன் அவரை அன்பாய்ப் பார்த்தான். அவரது கவலைப் படிந்த முகத்தில் இவனுக்கும் வருத்தமே. எப்போதுமே வாகனத்தை இயக்கும் போது நிவின் கவனமாய் இருப்பான். ஆனால், அன்னைக்கு நடந்த விபத்து முற்றிலும் எதிர்பாராதது. நடந்து முடிந்ததை எண்ணி வருத்த விருப்பமில்லை அவனுக்கு.
“ப்பா... நான் பத்திரமா இருந்துக்குறேன். நீங்க ரொம்ப அலையாதீங்க. மெய்ட் இருக்காங்க இல்ல, அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க. இப்போ ஐயம் ஓகே பா. என்னால என்னைக் கேர் பண்ணிக்க முடியும். ரொம்ப வொர்ரீ பண்ணிக்காதீங்க!” ஆதுரமாய்ப் புன்னகைத்து அவரை வழியனுப்பி வைத்தான். செல்லும்போது அவரை மென்மையாய் அணைத்து விடுவித்தவன் பேருந்து நிலையம் வருகிறேன் எனக் கூறியதைக் காற்றில் கலக்க விட்டவாறு கிளம்பியிருந்தார் பெரியவர்.
அவர் சென்ற சில நிமிடங்களிலே நந்தனாவும் அக்ஷாவும் உள்ளே நுழைந்தனர். “அங்கிள் கிளம்பிட்டாரா டா?” எனக் கேட்டுக் கொண்டே நந்தனா அவனது அறைக்குள் நுழைந்தாள்.
“ஆமா நந்து... இப்போதான் டென் மினிட்ஸ் பிஃபோர் கிளம்பிப் போனாரு‌‌...” என பதிலளித்தான். அக்ஷா குளிர்சாதன பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து வாயில் சரித்து வெப்பத்தை தணித்தாள்.
“மெய்ட்க்கு சொல்லிட்டீயா நிவின்? நாளைல இருந்து வந்துடுவாங்க தானே?” நந்தனா பொத்தென இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.
“யெஸ்... நாளைக்கு வந்துடுவாங்க நந்து...” எனப் பெருமூச்சு விட்டவனுக்கு வேலைக்காரர்கள் ஒத்து வருவார்களா என பெரியதொரு சந்தேகம் தொக்கி நின்றது. அவனுக்கு அத்தனையிலும் சுத்தம் முக்கியம். எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலே வைக்க வேண்டும். எங்கும் மாற்றி வைத்துவிடக் கூடாதென்ற எண்ணம் எப்போதும் விழித்திருக்கும். அதனாலே மூன்று வருடங்களாக தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்து கொண்டான். நாளைக்கு வரும் பெண்மணி எப்படியிருப்பாரோ என எண்ணத்துடன் இருந்தவனுக்கு அப்போதுதான் தன்னைக் காப்பாற்றிய பெண்ணைப் பற்றி கேட்க வேண்டும் என நினைவு வந்தது.
“நந்து... என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது யாரு?” எனக் கேட்டான். இத்தனை விரைவாய் கேட்டு விட்டாய் என மனம் எள்ளி நகையாடியதைக் கிடப்பிலிட்டான்.
“தெரியலை நிவி. அந்தப் பொண்ணு இந்த ஏரியாவாதான் இருக்கும். மே பீ, ஐ யம் நாட் ஷ்யூர் டா. பேர் சொன்னாங்க. பட் ஞாபகம் இல்ல!” நந்தனா மூளையின் பல அடுக்களைத் தூசி தட்டிப் பார்த்தும் அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. அன்று சுதி தன் பெயரை பாலாவிடம் மட்டுமே உரைத்திருந்தாள் என்பது அவளுக்கு நினைவிலே இல்லை. அதனாலே யோசித்தாலும் மூளையின் எந்த அடுக்கிலும் நினைவில்லை.
“ஓ...” எனக் கேட்டுக் கொண்டவனுக்கு அந்தப் பெண்ணை சந்தித்து நன்றி கூற வேண்டும் என்றொரு அவா.
“நந்து... அவங்களைப் பார்த்தா எனக்கு இன்பார்ம் பண்ணு. காண்டாக்ட் நம்பர் கிடைச்சா வாங்கு. நான் தேங்க் பண்ணணும்!” என்றான்.
“சான்ஸ் ரொம்ப கம்மி டா. இந்த மதுரை சிட்டில எங்க மீட் பண்றது? நாட் பாசிபிள்!” அவள் அசட்டையாகக் கூற, இவனுக்கு சற்றே கடுப்பு.
“ப்ம்ச்... கான்டாக்ட் நம்பர் ஏன் வாங்கி வைக்கலை நீ?” அவன் அவளை முறைக்க, “டேய்... நீ அப்போ இருந்த சிட்சுவேஷன்ல அந்தப் பொண்ணு யாரு, பேரென்ன, ஊரென்னன்னு எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு இருக்க சொல்றீயா. உன்னை ஜி.ஹெச்ல இருந்து ஷிஃப்ட் பண்ணி, அங்கிளை வரச் சொல்லி, ப்ரீத்தில இருக்க டாக்டர்ட்ட கன்சல்ட் பண்ணின்னு நாங்களே அலைஞ்சுட்டு இருந்தோம் டா...” அவளுமே அவனிடம் குரலை சற்றே உயர்த்தினாள். அன்றைக்கு அவர்கள் பட்டபாட்டையும் வேதனையும் இவனென் அறியப் போகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென நம்பிக்கை இல்லாவிடினும் கடவுளிடம் அவளொரு நீண்ட பட்டியலைத் தயாரித்து வேண்டியிருந்தால், இந்தப் பையனுக்கு கோபம் வருகிறதேன அவளுமே முனைத்தாள்.
“சரி... சரி. விடு நந்து...” என அவர்களுக்கிடையே நுழைந்த அக்ஷா, “நிவின், அந்தப் பொண்ணை எனக்கு ஞாபகம் இருக்கு‌. எங்கையாவது பார்த்தா, நான் உனக்கு இன்பார்ம் பண்றேன். நந்து சொல்ற மாதிரி அன்னைக்கு உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்ற எண்ணத்துலயே எங்களுக்கு எதுவும் தோணலை டா!” என்றாள் தங்களது நிலையை விளக்கி. அவனும் சிறிய தலையசைப்புடன் மெதுவாய் தளர்ந்து கால்களை நீட்டி அமர்ந்தான்.
நேரத்தைப் பார்த்த அக்ஷா, “நிவின், உனக்கு டின்னருக்கு என்ன குக் பண்ண?” என வினவினாள்.
“இல்ல அக்ஷா... மதியம் சாப்ட்டதே ஹெவியா இருக்கு. மில்க் மட்டும் போதும். நானே பார்த்துக்கிறேன்!” என அவன் மறுதலித்ததைக் கணக்கில் கொள்ளாது அவள் எளிமையாய் சமைத்து வைத்துவிட, இருவரும் விடை பெற்றனர்.
மறுநாள் அந்தப் பெண்மணி நிவின் வீட்டில் வேலைக்கு இணைந்துவிட்டார். அந்த குடியிருப்பிலே அவர் இன்னும் இரண்டு மூன்று வீடுகளில் வேலைப் பார்ப்பதாகவும் கூற, இவன் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டான் அவ்வளவே. மற்றபடி பெரிதாய் அவரிடம் பேசவில்லை.
காலைக்கும் மதியத்திற்கும் சமைத்துக் கொடுக்க வேண்டும், வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும், பாத்திரங்களைத் துலக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை துணியை துவைக்கும் எந்திரத்தில் சலவை செய்ய வேண்டும், இரண்டு வாரத்திற்கொரு முறை வீட்டை துடைக்க வேண்டும் என அவன் வேலைகளைப் பட்டியலிட்டு முடிய, “சரிங்கத் தம்பி... வேலை கொஞ்சம் அதிகம். அதனால பத்தாயிரம் வேணும் எனக்கு. நேரம் கொஞ்ச முன்ன பின்ன இருந்தா பொறுத்துக்கோங்க. நான் ஒரு வீட்ல வேலையை முடிச்சிட்டு உங்க வீட்டுக்கு வருவேன். இங்க முடிச்சிட்டு இன்னும் ரெண்டு வீட்டுக்குப் போகணும் பா!” என அவர் கூற, இவன் சரியென்றுவிட்டான்.
அவர் என்ன சமைக்கவென கேட்டு சமையலை முடித்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு விடை பெற்றார். இவன் அவர் சென்றதும் சமையலறைக்குள் நுழைந்தான். பாத்திரங்களை துலக்கி சமையல் மேடையிலே கவிழ்த்தி இருந்தார். இவன் ஒரு கையாலே மெதுவாக அதைத் துணிக்கொண்டு துடைத்து கூடையில் அடுக்கினான். சமைக்கும் போது அங்காங்கே குழம்பையும் சோற்றையும் வாரியிறைத்திருந்தார். அதைப் பார்த்ததும் இவனுக்கு எரிச்சல். ஒற்றைக் கையாலே சுத்தம் செய்தான்.
பாத்திரம் கழுவும் மடுவில் அங்காங்கே கறை படிந்திருந்தது. ஒற்றைக் கையால் அதை சுத்தம் செய்ய முடியாது சற்றே சிரமப்பட்டான்‌. ஒரு வழியாய் அவர் இடம் மாற்றி வைத்திருந்தப் பொருட்களை அதனதன் இடத்தில் பொறுத்திவிட்டு கண்களால் துழாவினான். நிவினின் சமையலறை என அவன் மனதிற்கு திருப்தியானதும் உணவு மேஜையில் அமர்ந்து அவர் சுட்ட சப்பாத்தியையும் பன்னீர் வெண்ணெய் மசாலாவையும் உண்டான். அவருக்கு பன்னீர் செய்யத் தெரியாது ஒரு வாய் உண்டதிலே புரிந்து கொண்டவனுக்கு உணவு உவப்பாய் இல்லை. வேலையிலும் அத்தனை நேர்த்தி இல்லை. சமையலும் பரவாயில்லை என்ற கோட்டைக் கூடத் தொடவில்லை என்ற சலிப்பு ஏற்ப்பட்டது.
மகேந்திரா மகனுக்கு அழைத்துவிட்டார். புதிதாய் சேர்ந்த பெண்மணி எப்படி என அனைத்தையும் மகனிடமிருந்து பெற்றுக் கொண்டார். சிறிது நாட்களுக்குப் பொறுத்துப் போ என அவர் அறிவுறுத்த, இவனும் தலையை அசைத்து அழைப்பைத் துண்டித்தான்.
மறுநாள் காலையில் அவர் வந்ததும், “அக்கா... பாத்திரத்தை வாஷ் பண்ணி முடிச்சதும் இந்த துணியால துடைச்சு இங்க பாத்திரக் கூடையில கவுத்துங்க. எடுத்த திங்க்ஸ் எடுத்த இடத்துல வைங்க...” என தான் நேற்றைக்கு குறையாய் கருதியதை அவன் பட்டியலிட்டு முடிய, அவர் அசட்டையாக தலையை அசைத்தார். அதிலே அவர் இதெல்லாம் பின்பற்ற மாட்டார் எனப் புரிந்ததும் இவனுக்கு எரிச்சல் மண்டியது. தானே செய்து கொள்ளலாம் என்றாலும் அவனால் ஒரு கையை அசைக்க கூட முடியவில்லை. வலி உயிர் போனது‌. மற்றோரு கையால் எதையும் செய்ய முடியாது என தன்னையே நொந்து கொண்டான்.
வேறு யாராவது வேலைக்கு வருவார்களா என வாயிற் காவலாளியிடம் கேட்டு, அப்படியிருந்தால் தன்னிடம் கூறுமாறு அறிவுறுத்தி வைத்தான்‌. வீட்டில் மளிகைப் பொருட்கள் தீர்ந்து விட, அப்படியே மெதுவாய் நடந்தான். இந்தக் கையை வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தையும் ஓட்ட முடியாது. மகிழுந்தையும் இயக்க முடியாதே என எண்ணி பொறுமையாய் நடந்தான். விபத்தில் வாகனம் நிறைய அடிவாங்கியிருக்க, சென்ற வாரம்தான் பாலா அதை பழுது பார்த்து கொடுத்துவிட்டு சென்றான். பாலாவும் இவனும் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிகின்றனர். பெண்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய, ஆரோன் தனியாய் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தான். அதனாலே அவனால் இவர்களைப் போல அடிக்கடி நிவினைக் காண வர இயலவில்லை.
வெள்ளிக்கிழமை மீனாட்சி வளாகத்தில் கொஞ்சம் ஆட்கள் குறைவாய் இருந்தனர். இவன் உள்ளே நுழைந்து தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தான்.
“வீட் ப்ரெட், பன்னீர் எங்க இருக்கு?” என எத்தனை அலசியும் கண்களுக்கு அகப்படாது போன பொருட்கள் எங்கே இருக்கிறது என ஊழியரிடம் வினவினான்.
“செக்ண்ட் ப்ளோர்ல இருக்கு சார். வாங்க, நான் எடுத்துத் தரேன்!” என ஒரு வாலிபன் கூற, “நோ இட்ஸ் ஓகே... ஐ கேன் கோ தேர்!” என மறுத்துவிட்டு இரண்டாம் தளத்திற்கு சென்றான். அங்கே லேசாய் ஐனத்திரள் இருந்தது.
பன்னீரையும் கோதுமை ரொட்டியையும் எடுத்துக் கூடையிலிட்டவன் அடுத்து என்ன வாங்க வேண்டும் என யோசித்து விழிகளை சுழற்றினான்.
“சாரி சார்... நீங்க கேட்ட ப்ராண்ட் இல்ல. வேற ட்ரை பண்றீங்களா சார்?” சுதி வாடிக்கையாளரிடம் வினவ, “நோ... எப்போ ஸ்டாக் வரும். ஐ நீட் தட் ப்ராண்ட் ஒன்லி!” என அவர் கூற, “டூ டேய்ஸ்ல வந்துடும் சார்!” என இவள் பதிலளிக்க, அவர் தலையை அசைத்து வேறு பகுதிக்கு நகன்றார்.
நிவினுக்கு அந்தக் குரலில் பரிச்சயம் இருப்பதாய் ஓர் எண்ணம். கடந்த மூன்று வருடங்களாக இங்குதான் பொருட்களை வாங்குவான். ஆனால் இன்று அந்தப் பெண்ணின் குரல் செவியில் மீண்டும் மீண்டும் கேட்க, ஒரு முறை நெற்றியைத் தேய்த்தான். எங்கு கேட்டிருக்கிறோம் என ஆதி முதல் அந்தம் வரை மூளை கடைசி அடுக்கு வரை தூசி தட்டி ஆராய, சுத்தமாய் நினைவில் வருவேனா என்றது. கான்ஷியஸ் சப் கான்ஷியஸ் இரண்டுமே அன்று மந்தமாகியிருந்தன போல. பதிலே இல்லை அவற்றிடம்.

சரியென நிவின் இரண்டெட்டுகள் வைத்து நகர, “விவேகா... நீ இந்த ரேக்ல நில்லு‌ நான் போய் கிஸ்ஸிஸ் எடுத்துட்டு வரேன்!” என அவள் உரைத்ததும் அவனது கால்கள் நிற்க, நடை நிதானப்பட்டது.
அவனுக்கு விபத்து நிகழ்ந்த போது செவியில் எதிரொலித்த குரல் இது என சற்றே அவன் மூளை மந்தமாகிவிட்டாலும் எடுத்துக் கொடுக்க, அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்தான். அவள் அணிந்திருந்த சீருடையைக் கவனித்தான். சுடிதார் மேலே கோட் போல அடர் நீல வண்ண மேலுடை அணிந்திருந்தாள். அவன் கண் விழிக்கும் போது தலைக்கு மேலை இரத்தக் கறையுடன் மங்கலாய்த் இந்தத் துணியைப் பார்த்ததாய் நினைவு வந்தது. இருந்தாலும் இப்பெண்தான் என உறுதிபடுத்த மனம் உந்தியது.
யாருடைய பார்வையோ தன்னை ஊசியாய் துளைப்பதை அறிந்த சுதி மெதுவாய் விழிகளை அவனிடம் படரவிட்டாள். தன்னைத்தான் அவன் பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள், எப்போதும் முகத்தில் ஒட்ட வைத்திருக்கும் புன்னகையுடன் அவனருகே சென்றாள். “ஹாய் சார், வாட் டூ யூ வாண்ட்? என்ன தேடுறீங்க சார்?” என சிரித்த முகமாகவே கேட்டாள்.
“ஹாங்...” புறத்தூண்டல் உறைக்கப் பெற்று சிந்தைனையிலிருந்து கலைந்தவன், “நத்திங்...” என்றான்.
“ஓகே சார்... எதுவும் வேணும்னா சொல்லுங்க சார்‌. நான் எடுத்து தரேன்!” என அவள் மறுபுறம் நகர, இவனது பார்வையும் அந்தப் பெண்ணோடு பின்னே போனது.
தொடரும்...








































 
Administrator
Staff member
Messages
1,036
Reaction score
2,940
Points
113
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு திருமணத்தை முடிப்பது அத்தனை எளிதானக் காரியமல்ல என அவரே கண் கூடாகக் கண்டிருக்கிறார். நிவினுக்கு உடல்நிலை சரியானதும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என மனதிலே உருப்போட்டார் மனிதர். ஆனால், மகன் அந்தப் பேச்சிற்கு அத்தனை மதிப்புக் கொடுக்கவில்லை. அந்த எண்ணத்தை தற்காலிகமாக கிடப்பிலிட்டான்.

மேலும் இரண்டு வாரங்கள் கழிந்திருந்தது. மகேந்திராவிற்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் கூடிய சீக்கிரம் நடைபெற இருப்பதால், அவரால் மகனுடன் துணைக்கு இருந்து கவனிக்க முடியாத சூழ்நிலை. அதில் ஏகவருத்தம் அவருக்கு. இப்போது நிவின் நன்றாய் தேறியிருந்தான். கையை அசைக்க முடியாதது தவிர, பெரிதாய் குறையில்லை. தன்னுடைய வேலைகளைத் தானே கவனித்துக் கொண்டான். கழிவறைக்குச் செல்ல அவன் கஷ்டப்படுவதால் தந்தை உதவ வர, அவன் மறுத்துவிட்டான். தான் பார்த்துக் கொள்வதாய் கூறியவனுக்கு அந்த வயதிற்கே உரிய சங்கடம் தடுத்துவிட்டது. ஆனால் பெற்றவர்களுக்கு என்றுமே தங்களது பிள்ளைகள் குழந்தைகள்தான் என்பது அவனுக்குப் புரியவில்லை.

முதலில் மகேந்திராவே செய்வதாய் கூற, இவன் கண்டிப்பாய் மறுத்துவிட்டான். அவரும் சரியென விட்டுவிட்டார். அவரிருந்த வரை வேலையேல்லாம் பார்த்துக் கொண்டார். பெரியவர் கிளம்புவதால் வேலைக்கு ஒரு பெண்மணியை நியமித்தார்.
“நிவினு... சனி, ஞாயிறு வரேன் டா. நீ பத்திரமா இருந்துக்கோ. எதுனாலும் எனக்கு உடனே ஃபோன் பண்ணு!” என அவர் மகனைக் கவலையுடன் பார்த்துக் கொண்டே கூற, இவன் அவரை அன்பாய்ப் பார்த்தான்.

அவரது கவலைப் படிந்த முகத்தில் இவனுக்கும் வருத்தமே. எப்போதுமே வாகனத்தை இயக்கும் போது நிவின் கவனமாய் இருப்பான். ஆனால், அன்னைக்கு நடந்த விபத்து முற்றிலும் எதிர்பாராதது. நடந்து முடிந்ததை எண்ணி வருத்த விருப்பமில்லை அவனுக்கு.


“ப்பா... நான் பத்திரமா இருந்துக்குறேன். நீங்க ரொம்ப அலையாதீங்க. மெய்ட் இருக்காங்க இல்ல, அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க. இப்போ ஐயம் ஓகே பா. என்னால என்னைக் கேர் பண்ணிக்க முடியும். ரொம்ப வொர்ரீ பண்ணிக்காதீங்க!” ஆதுரமாய்ப் புன்னகைத்து அவரை வழியனுப்பி வைத்தான்.

செல்லும்போது அவரை மென்மையாய் அணைத்து விடுவித்தவன் பேருந்து நிலையம் வருகிறேன் எனக் கூறியதைக் காற்றில் கலக்க விட்டவாறு கிளம்பியிருந்தார் பெரியவர்.
அவர் சென்ற சில நிமிடங்களிலே நந்தனாவும் அக்ஷாவும் உள்ளே நுழைந்தனர்.

“அங்கிள் கிளம்பிட்டாரா டா?” எனக் கேட்டுக் கொண்டே நந்தனா அவனது அறைக்குள் நுழைந்தாள்.

“ஆமா நந்து... இப்போதான் டென் மினிட்ஸ் பிஃபோர் கிளம்பிப் போனாரு‌‌...” என பதிலளித்தான். அக்ஷா குளிர்சாதன பெட்டியிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து வாயில் சரித்து வெப்பத்தை தணித்தாள்.

“மெய்ட்க்கு சொல்லிட்டீயா நிவின்? நாளைல இருந்து வந்துடுவாங்க தானே?” நந்தனா பொத்தென இருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள்.

“யெஸ்... நாளைக்கு வந்துடுவாங்க நந்து...” எனப் பெருமூச்சு விட்டவனுக்கு வேலைக்காரர்கள் ஒத்து வருவார்களா என பெரியதொரு சந்தேகம் தொக்கி நின்றது. அவனுக்கு அத்தனையிலும் சுத்தம் முக்கியம். எடுத்த பொருட்களை எடுத்த இடத்திலே வைக்க வேண்டும். எங்கும் மாற்றி வைத்துவிடக் கூடாதென்ற எண்ணம் எப்போதும் விழித்திருக்கும். அதனாலே மூன்று வருடங்களாக தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தானே செய்து கொண்டான். நாளைக்கு வரும் பெண்மணி எப்படியிருப்பாரோ என எண்ணத்துடன் இருந்தவனுக்கு அப்போதுதான் தன்னைக் காப்பாற்றிய பெண்ணைப் பற்றி கேட்க வேண்டும் என நினைவு வந்தது.

“நந்து... என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது யாரு?” எனக் கேட்டான். இத்தனை விரைவாய் கேட்டு விட்டாய் என மனம் எள்ளி நகையாடியதைக் கிடப்பிலிட்டான்.

“தெரியலை நிவி. அந்தப் பொண்ணு இந்த ஏரியாவாதான் இருக்கும். மே பீ, ஐ யம் நாட் ஷ்யூர் டா. பேர் சொன்னாங்க. பட் ஞாபகம் இல்ல!” நந்தனா மூளையின் பல அடுக்களைத் தூசி தட்டிப் பார்த்தும் அவளுக்கு நினைவுக்கு வரவில்லை. அன்று சுதி தன் பெயரை பாலாவிடம் மட்டுமே உரைத்திருந்தாள் என்பது அவளுக்கு நினைவிலே இல்லை. அதனாலே யோசித்தாலும் மூளையின் எந்த அடுக்கிலும் நினைவில்லை.

“ஓ...” எனக் கேட்டுக் கொண்டவனுக்கு அந்தப் பெண்ணை சந்தித்து நன்றி கூற வேண்டும் என்றொரு அவா.

“நந்து... அவங்களைப் பார்த்தா எனக்கு இன்பார்ம் பண்ணு. காண்டாக்ட் நம்பர் கிடைச்சா வாங்கு. நான் தேங்க் பண்ணணும்!” என்றான்.

“சான்ஸ் ரொம்ப கம்மி டா. இந்த மதுரை சிட்டில எங்க மீட் பண்றது? நாட் பாசிபிள்!” அவள் அசட்டையாகக் கூற, இவனுக்கு சற்றே கடுப்பு.

“ப்ம்ச்... கான்டாக்ட் நம்பர் ஏன் வாங்கி வைக்கலை நீ?” அவன் அவளை முறைக்க, “டேய்... நீ அப்போ இருந்த சிட்சுவேஷன்ல அந்தப் பொண்ணு யாரு, பேரென்ன, ஊரென்னன்னு எல்லாத்தையும் வாங்கி வச்சிட்டு இருக்க சொல்றீயா. உன்னை ஜி.ஹெச்ல இருந்து ஷிஃப்ட் பண்ணி, அங்கிளை வரச் சொல்லி, ப்ரீத்தில இருக்க டாக்டர்ட்ட கன்சல்ட் பண்ணின்னு நாங்களே அலைஞ்சுட்டு இருந்தோம் டா...” அவளுமே அவனிடம் குரலை சற்றே உயர்த்தினாள்.

அன்றைக்கு அவர்கள் பட்டபாட்டையும் வேதனையும் இவனென் அறியப் போகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென நம்பிக்கை இல்லாவிடினும் கடவுளிடம் அவளொரு நீண்ட பட்டியலைத் தயாரித்து வேண்டியிருந்தால், இந்தப் பையனுக்கு கோபம் வருகிறதேன அவளுமே முனைத்தாள்.

“சரி... சரி. விடு நந்து...” என அவர்களுக்கிடையே நுழைந்த அக்ஷா, “நிவின், அந்தப் பொண்ணை எனக்கு ஞாபகம் இருக்கு‌. எங்கையாவது பார்த்தா, நான் உனக்கு இன்பார்ம் பண்றேன். நந்து சொல்ற மாதிரி அன்னைக்கு உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்ற எண்ணத்துலயே எங்களுக்கு எதுவும் தோணலை டா!” என்றாள் தங்களது நிலையை விளக்கி. அவனும் சிறிய தலையசைப்புடன் மெதுவாய் தளர்ந்து கால்களை நீட்டி அமர்ந்தான்.

நேரத்தைப் பார்த்த அக்ஷா, “நிவின், உனக்கு டின்னருக்கு என்ன குக் பண்ண?” என வினவினாள்.

“இல்ல அக்ஷா... மதியம் சாப்ட்டதே ஹெவியா இருக்கு. மில்க் மட்டும் போதும். நானே பார்த்துக்கிறேன்!” என அவன் மறுதலித்ததைக் கணக்கில் கொள்ளாது அவள் எளிமையாய் சமைத்து வைத்துவிட, இருவரும் விடை பெற்றனர்.

மறுநாள் அந்தப் பெண்மணி நிவின் வீட்டில் வேலைக்கு இணைந்துவிட்டார். அந்த குடியிருப்பிலே அவர் இன்னும் இரண்டு மூன்று வீடுகளில் வேலைப் பார்ப்பதாகவும் கூற, இவன் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டான் அவ்வளவே. மற்றபடி பெரிதாய் அவரிடம் பேசவில்லை.

காலைக்கும் மதியத்திற்கும் சமைத்துக் கொடுக்க வேண்டும், வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும், பாத்திரங்களைத் துலக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை துணியை துவைக்கும் எந்திரத்தில் சலவை செய்ய வேண்டும், இரண்டு வாரத்திற்கொரு முறை வீட்டை துடைக்க வேண்டும் என அவன் வேலைகளைப் பட்டியலிட்டு முடிய, “சரிங்கத் தம்பி... வேலை கொஞ்சம் அதிகம். அதனால பத்தாயிரம் வேணும் எனக்கு. நேரம் கொஞ்ச முன்ன பின்ன இருந்தா பொறுத்துக்கோங்க. நான் ஒரு வீட்ல வேலையை முடிச்சிட்டு உங்க வீட்டுக்கு வருவேன். இங்க முடிச்சிட்டு இன்னும் ரெண்டு வீட்டுக்குப் போகணும் பா!” என அவர் கூற, இவன் சரியென்றுவிட்டான்.
அவர் என்ன சமைக்கவென கேட்டு சமையலை முடித்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு விடை பெற்றார்.

இவன் அவர் சென்றதும் சமையலறைக்குள் நுழைந்தான். பாத்திரங்களை துலக்கி சமையல் மேடையிலே கவிழ்த்தி இருந்தார். இவன் ஒரு கையாலே மெதுவாக அதைத் துணிக்கொண்டு துடைத்து கூடையில் அடுக்கினான். சமைக்கும் போது அங்காங்கே குழம்பையும் சோற்றையும் வாரியிறைத்திருந்தார். அதைப் பார்த்ததும் இவனுக்கு எரிச்சல். ஒற்றைக் கையாலே சுத்தம் செய்தான்.
பாத்திரம் கழுவும் மடுவில் அங்காங்கே கறை படிந்திருந்தது.

ஒற்றைக் கையால் அதை சுத்தம் செய்ய முடியாது சற்றே சிரமப்பட்டான்‌. ஒரு வழியாய் அவர் இடம் மாற்றி வைத்திருந்தப் பொருட்களை அதனதன் இடத்தில் பொறுத்திவிட்டு கண்களால் துழாவினான். நிவினின் சமையலறை என அவன் மனதிற்கு திருப்தியானதும் உணவு மேஜையில் அமர்ந்து அவர் சுட்ட சப்பாத்தியையும் பன்னீர் வெண்ணெய் மசாலாவையும் உண்டான்.

அவருக்கு பன்னீர் செய்யத் தெரியாது ஒரு வாய் உண்டதிலே புரிந்து கொண்டவனுக்கு உணவு உவப்பாய் இல்லை. வேலையிலும் அத்தனை நேர்த்தி இல்லை. சமையலும் பரவாயில்லை என்ற கோட்டைக் கூடத் தொடவில்லை என்ற சலிப்பு ஏற்ப்பட்டது.

மகேந்திரா மகனுக்கு அழைத்துவிட்டார். புதிதாய் சேர்ந்த பெண்மணி எப்படி என அனைத்தையும் மகனிடமிருந்து பெற்றுக் கொண்டார். சிறிது நாட்களுக்குப் பொறுத்துப் போ என அவர் அறிவுறுத்த, இவனும் தலையை அசைத்து அழைப்பைத் துண்டித்தான்.

மறுநாள் காலையில் அவர் வந்ததும், “அக்கா... பாத்திரத்தை வாஷ் பண்ணி முடிச்சதும் இந்த துணியால துடைச்சு இங்க பாத்திரக் கூடையில கவுத்துங்க. எடுத்த திங்க்ஸ் எடுத்த இடத்துல வைங்க...” என தான் நேற்றைக்கு குறையாய் கருதியதை அவன் பட்டியலிட்டு முடிய, அவர் அசட்டையாக தலையை அசைத்தார். அதிலே அவர் இதெல்லாம் பின்பற்ற மாட்டார் எனப் புரிந்ததும் இவனுக்கு எரிச்சல் மண்டியது.

தானே செய்து கொள்ளலாம் என்றாலும் அவனால் ஒரு கையை அசைக்க கூட முடியவில்லை. வலி உயிர் போனது‌. மற்றோரு கையால் எதையும் செய்ய முடியாது என தன்னையே நொந்து கொண்டான்.

வேறு யாராவது வேலைக்கு வருவார்களா என வாயிற் காவலாளியிடம் கேட்டு, அப்படியிருந்தால் தன்னிடம் கூறுமாறு அறிவுறுத்தி வைத்தான்‌. வீட்டில் மளிகைப் பொருட்கள் தீர்ந்து விட, அப்படியே மெதுவாய் நடந்தான். இந்தக் கையை வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தையும் ஓட்ட முடியாது. மகிழுந்தையும் இயக்க முடியாதே என எண்ணி பொறுமையாய் நடந்தான்.

விபத்தில் வாகனம் நிறைய அடிவாங்கியிருக்க, சென்ற வாரம்தான் பாலா அதை பழுது பார்த்து கொடுத்துவிட்டு சென்றான். பாலாவும் இவனும் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிகின்றனர். பெண்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய, ஆரோன் தனியாய் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தான். அதனாலே அவனால் இவர்களைப் போல அடிக்கடி நிவினைக் காண வர இயலவில்லை.

வெள்ளிக்கிழமை மீனாட்சி வளாகத்தில் கொஞ்சம் ஆட்கள் குறைவாய் இருந்தனர். இவன் உள்ளே நுழைந்து தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தான்.

“வீட் ப்ரெட், பன்னீர் எங்க இருக்கு?” என எத்தனை அலசியும் கண்களுக்கு அகப்படாது போன பொருட்கள் எங்கே இருக்கிறது என ஊழியரிடம் வினவினான்.

“செக்ண்ட் ப்ளோர்ல இருக்கு சார். வாங்க, நான் எடுத்துத் தரேன்!” என ஒரு வாலிபன் கூற, “நோ இட்ஸ் ஓகே... ஐ கேன் கோ தேர்!” என மறுத்துவிட்டு இரண்டாம் தளத்திற்கு சென்றான். அங்கே லேசாய் ஐனத்திரள் இருந்தது.
பன்னீரையும் கோதுமை ரொட்டியையும் எடுத்துக் கூடையிலிட்டவன் அடுத்து என்ன வாங்க வேண்டும் என யோசித்து விழிகளை சுழற்றினான்.

“சாரி சார்... நீங்க கேட்ட ப்ராண்ட் இல்ல. வேற ட்ரை பண்றீங்களா சார்?” சுதி வாடிக்கையாளரிடம் வினவ, “நோ... எப்போ ஸ்டாக் வரும். ஐ நீட் தட் ப்ராண்ட் ஒன்லி!” என அவர் கூற, “டூ டேய்ஸ்ல வந்துடும் சார்!” என இவள் பதிலளிக்க, அவர் தலையை அசைத்து வேறு பகுதிக்கு நகன்றார்.

நிவினுக்கு அந்தக் குரலில் பரிச்சயம் இருப்பதாய் ஓர் எண்ணம். கடந்த மூன்று வருடங்களாக இங்குதான் பொருட்களை வாங்குவான். ஆனால் இன்று அந்தப் பெண்ணின் குரல் செவியில் மீண்டும் மீண்டும் கேட்க, ஒரு முறை நெற்றியைத் தேய்த்தான். எங்கு கேட்டிருக்கிறோம் என ஆதி முதல் அந்தம் வரை மூளை கடைசி அடுக்கு வரை தூசி தட்டி ஆராய, சுத்தமாய் நினைவில் வருவேனா என்றது. கான்ஷியஸ் சப் கான்ஷியஸ் இரண்டுமே அன்று மந்தமாகியிருந்தன போல. பதிலே இல்லை அவற்றிடம்.

சரியென நிவின் இரண்டெட்டுகள் வைத்து நகர, “விவேகா... நீ இந்த ரேக்ல நில்லு‌ நான் போய் கிஸ்ஸிஸ் எடுத்துட்டு வரேன்!” என அவள் உரைத்ததும் அவனது கால்கள் நிற்க, நடை நிதானப்பட்டது.

அவனுக்கு விபத்து நிகழ்ந்த போது செவியில் எதிரொலித்த குரல் இது என சற்றே அவன் மூளை மந்தமாகிவிட்டாலும் எடுத்துக் கொடுக்க, அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்தான். அவள் அணிந்திருந்த சீருடையைக் கவனித்தான். சுடிதார் மேலே கோட் போல அடர் நீல வண்ண மேலுடை அணிந்திருந்தாள். அவன் கண் விழிக்கும் போது தலைக்கு மேலை இரத்தக் கறையுடன் மங்கலாய்த் இந்தத் துணியைப் பார்த்ததாய் நினைவு வந்தது. இருந்தாலும் இப்பெண்தான் என உறுதிபடுத்த மனம் உந்தியது.
யாருடைய பார்வையோ தன்னை ஊசியாய் துளைப்பதை அறிந்த சுதி மெதுவாய் விழிகளை அவனிடம் படரவிட்டாள். தன்னைத்தான் அவன் பார்க்கிறான் என்பதை உணர்ந்தவள், எப்போதும் முகத்தில் ஒட்ட வைத்திருக்கும் புன்னகையுடன் அவனருகே சென்றாள்.

“ஹாய் சார், வாட் டூ யூ வாண்ட்? என்ன தேடுறீங்க சார்?” என சிரித்த முகமாகவே கேட்டாள்.

“ஹாங்...” புறத்தூண்டல் உறைக்கப் பெற்று சிந்தைனையிலிருந்து கலைந்தவன், “நத்திங்...” என்றான்.

“ஓகே சார்... எதுவும் வேணும்னா சொல்லுங்க சார்‌. நான் எடுத்து தரேன்!” என அவள் மறுபுறம் நகர, இவனது பார்வையும் அந்தப் பெண்ணோடு பின்னே போனது.

தொடரும்...
 
Active member
Messages
183
Reaction score
124
Points
43
Super baby
Ivlo seekram trinjiduchi
Hero ku
Ashu purijiko ma unnodathu one side
 
Well-known member
Messages
886
Reaction score
657
Points
93
Wowwwwwwww, hero sir ku ivlo seekkirama theriya poguthaa, superrrrrrrrr superrrrrrrrr

Waiting for next ud maa
 
Well-known member
Messages
433
Reaction score
321
Points
63
அவளுக்கு அவனை அடையாளம் தெரியலையா?
 
Messages
57
Reaction score
37
Points
18
விபத்தில் இருந்து மீண்டு
வீடு வந்த பிறகு தான்
வலி இருந்தாலும்
விலகியது மருத்துவ
வாடை....

வாழ்க்கையில் அடுத்து
வாழ்க்கைத்துணை என
விவாதம் அப்பாவுடன்...

மனதிற்கு பிடித்த வளை
மணமுடிக்க எண்ண
மங்கை ஒருத்தி வலிய
மருகி நிற்க....

கடவுள் போல வந்த
காப்பாற்றிய உத்தமிக்கு
கண்குளிர நன்றி உரைக்க
காளை காத்து நிற்க
கடந்து செல்கிறாள்
காப்பாற்
றியதை மறந்து...




 
Top