• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 9, 10

Messages
31
Reaction score
13
Points
8
அத்தியாயம் - 9

மயக்கத்தின் பிடியில் இருந்த சில்வியாவை மெல்ல கட்டிலில் தூக்கி படுக்க வைத்தான் கவின். அடுத்த அறையில் போதைப்பொருளின் உபயத்தினால் கண்விழிக்க இயலாது உடைகள் கழன்று உடலில் ஆங்காங்கு சிவந்து போய் இருந்தது. பெண்ணுறுப்பில் இருந்து வழிந்த இரத்தம் ஆடையை நனைத்திருந்தது. அவளைத் தனியே பிரித்தவன் ஒரு போர்வையால் அவளை மூடினான். தனது ஃபோனின் மூலம் ஒருவனை வரவைத்து அலங்கோலமாய்க் கிடந்த கவினயனை தூக்கி வீட்டின் மற்றொரு அறையில் படுக்க வைத்தவன் ராஜ செல்வனிடம் வந்து நின்றான்.

" உங்களுக்கு என்ன பிரச்சனை... ஒரு பொண்ணு உங்களுக்குக் குடைச்சல் கொடுத்தா உடனே அவ உடம்பை தான் டார்கெட் பண்ணுவீங்களா... உங்களுக்கும் பொண்ணுங்க இருக்குறாங்கல ... உங்க பொண்ணுக்கு இது நடந்தா விடுவீங்களா... கேவலமா இல்ல... போதா குறைக்கு அந்த தண்டம் ட்ரக்ஸ் எடுக்குறான்...

ஒரு விஷயம் தெரியுமா... நீங்க தூக்குனீங்களே அந்தப் பொண்ணு சில்வியா... அவளை போலீஸ் சர்கிள் ல அன்அஃபிஷியலா தேட ஆரம்பிச்சு இப்ப சிசிடிவி செக்கிங் தொடங்கியாச்சு... முதல் ல இவங்களைக் கிளியர் பண்ணுங்க... சில்வியாக்கு டாக்டரை வர வச்சு டிரீட்மென்ட் பண்ணுங்க... அவள நம்ம கைக்குள்ள வச்சுட்டு கூடவே வெளில சுதந்திரமா இருக்குறது போல காட்ட வழி பண்ணுங்க " என்றான் கவின்.

அவனது அலைபேசி அழைக்க, தொடுதிரையில் அஹானாவின் பிம்பம் அழகாய் வந்து சென்றது . ராஜசெல்வனின் கண்கள் அந்தத் தொடுதிரையைப் பார்த்து வைக்க, கவின் எரிச்சலானான். " யோவ் இப்ப தானே சொன்னேன். காஞ்ச மாடு புல்லு தின்ன கணக்காட்டும் இப்படி பாத்து வைக்குற... போயா " , எனக் கடுப்பில் கத்தியவன் தனியே சென்று அலைபேசியில் பேச ஆரம்பித்தான்.

அரைமணிநேரம் கழித்து கவினயன் ஓரளவு தெளிந்து எழுந்து வந்தான். ஆனாலும் நடையில் கொஞ்சம் குளறுபடி இருக்கத்தான் செய்தது. " என்ன மாமா ... ஏன் இப்படி இருக்கீங்க... " என்று வெளியே நிற்கும் கவினை எட்டிப் பார்த்தபடி மெல்லமாய்க் கேட்டான்.

" இவ நமக்கு ரொம்ப டேஞ்சர் மருமகனே... ஏற்கனவே என் அரசியல் வாழ்க்கைல உங்க மக எங்க னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க... வெளிநாட்டுல இருக்குறதா சொல்லி சமாளிச்சு வச்சுருக்கேன். இதுல இவ வேற இங்க அடிக்கடி வர்றது பிரச்சனையா இருக்கு. அந்த சித்தாராவும் சில்வியாவும் இங்க இருக்குறது பாத்து ஒரு முறை கத்திட்டான். அந்த அனா கூட கான்டேக்ட் ல இருக்கும் போது நமக்கு சேஃப் இல்ல... " என்று நடப்பவற்றை அவனுக்குத் தெரிவித்தான் ராஜசெல்வன்.

" பேசாம அந்த அனாவ போட்டுட்டா என்ன... அதுக்கப்புறம் இவனையும் அமெரிக்கா அனுப்பலாம்... உங்களுக்கு கூட முதல் குடும்பம் ஒண்ணு உண்டு இல்லையா... அவங்க கூட சேந்திடுங்க... " என்று கவினயன் ஆலோசனையை முன்வைக்க, " இல்லடா... அவ கொரோனா ல இறந்ததா நியூஸ் பாத்தேன். அவளுக்கு பிள்ளைங்க உண்டா இல்லையா எதும் தெரியல... அவளே உயிரோட இருந்தாலும் ஏத்துக்க மாட்டா... " என்றவர் , " ஆமா ஏன் அவள தேடணும்... அவ இல்லனா இன்னொருத்தி... எனக்கு இப்ப பிரச்சனை அந்த கலெக்டர் தான்... ரெட் லைட் ஏரியா முதற்கொண்டு ரெய்ட் போறாங்க... அவள தூக்கலாம் னா சமர், இப்ப ஆரியன் னு வரிசையா வர்றாங்க ... " என்று கூறிமுடித்தான். பேச்சு மேற்கொண்டு நீளும்முன் , கவின் வந்திருந்தான் . டாக்டர் வர, சில்வியாவிற்கு மருத்துவம் செய்யப்பட்டு தெளிவித்தனர். நொறுங்கி போய் இருந்தவளிடம் டாக்டரை வைத்து மேற்கொண்டு பேசினான்.

" இந்தப் பாருமா... சித்தாரா இப்ப உடம்பு கிரிட்டிக்கலா தான் இருக்கு. மாடி ல இருந்து கீழ விழுந்ததா சொல்லி ஒரு ஹாஸ்பிடல் ல சேர்த்து விடுவேன் . அங்க டிரீட்மென்ட் பாக்குறது எங்க ஆளுதான்... சோ கரெக்டா நடக்கும்... நீ அந்த வீட்டை காலி பண்ணிடு... இதுபற்றி வெளிய சொல்லணும் னு நினைத்தா , இந்த வீடியோ நெட் ல அப்லோட் பண்ணிடுவாங்க " என்ற அந்த டாக்டர் மருத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விட்டார். அடுத்து அவளிடம் யாரும் வரவில்லை . சில மணிநேரங்களில் சித்தாராவை மாடியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறி ஒரு மருத்துவமனையில் சேர்க்க, அவர்களின் ஒரு டாக்டரே மருத்துவம் செய்தார். அன்றைய தினம் அங்கேயே இருந்தவள் மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்துவிட்டு தேவையானவை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் . எப்படியாவது ஆரியன் தாங்கள் இல்லாததைக் கொண்டு தேட மாட்டாரா என்று ஒரு ஏக்கம் மனதில் இருந்தாலும் சித்தாராவைக் காப்பாற்றிடவும் உயிரின் பெரிதான மானமும் காக்க எண்ணி தொண்டை வரை வந்த வார்த்தையைக் கடினப்பட்டு புதைத்துக் கொண்டாள் .


இங்கு சமரும் ஆரியனும் முடிந்தமட்டும் தேடினர். ஒருவாக்கில் சித்தாராவும் சில்வியாவும் காணவில்லை எனில் , மற்றொருபுறம் கான்ஸ்டபிள் சொன்ன பெண்களுக்கு என்ன நிகழ்ந்தது என்று யூகிக்க இயலவில்லை. அந்தப் பெண்கள் வாய் திறக்காத பட்சத்தில் மேற்கொண்டு யோசிக்க இயலாது. இருவரும் தங்கள் வீட்டிற்கு தகவல் கூறிவிட்டு இரவு முழுவதும் ஸ்டேஷனில் இருந்தனர். கான்ஸ்டபிளுக்கு இரண்டு நாள் விடுப்பு அளித்தவர்கள் மொத்த ஃபுட்டேஜூம் பரிசோதிக்க ஆரம்பித்தனர். கூடவே அங்கிருந்த SI யிடம் ஸ்டேஷன் சிசிடிவி ஃபுட்டேஜ் பற்றி கேட்டனர்.

" மிஸ்டர்... இந்த ஸ்டேஷனோட சிசிடிவி ஃபுட்டேஜ் எடுங்க " என்று சமர் கேட்க, அந்த மனிதர் தலையை தொங்க விட்டார். " அதானே... அதுலாம் இருந்தா தான் உங்க வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சுடுமே... இப்ப இப்படி ஆரம்பிச்சுட்டுடா... இவங்க எதாவது தில்லுமுல்லு பண்ணுனா சிசிடிவி ஆஃப் பண்ணிடுவாங்க ... கேட்டா ஆன் பண்ண மறந்துட்டோம்... ஒர்க் ஆகல... உடைஞ்சுட்டு னு சப் கட்டு கட்டுவாங்க... இது ஒர்க் ஆகியிருந்தா யாரு இப்படி கம்ப்ளைன்ட் பண்ணுனவங்கள திட்டி அனுப்பியது னு வச்சு தெரிஞ்சுருக்கலாம்... அவனைத் தூக்குனா பின்னாடியே ஒவ்வொருத்தனையா தூக்கியிருக்கலாம்... நாம வேற விஷயத்தைப் பற்றி பாப்போம் " என்றிட , கடுப்போடு தலையசைத்து அடுத்து உள்ள மற்ற சிசிடிவி ஃபுட்டேஜ்களை ஆராய ஆரம்பித்தான்.

தேடலின் முடிவில் பதில் கிடைத்தது என்னவோ ஒரு பேருந்தில் ஏறிச் சென்றது மட்டுமே... எப்படிப் பார்த்தாலும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க, குழப்பத்தில் இருந்தனர். இப்படியிருக்க காலை வேளையில் அழைத்தாள் பிரதீபா. ஆரியன் பாக்கெட்டிலிருந்து ஃபோனை எடுத்து பேசினான்.

" என்ன பிரதீ " என்று சற்று சோர்வாகக் கேட்டான் ஆரியன். " என்ன ஆச்சு னு இப்படி சோர்வா பேசுறீங்க... உடம்புக்கு எதும் முடிலயா... அஸ்வின் கிட்ட சாப்பாடும் மருந்தும் கொடுத்து அனுப்பவா... " என்று பரிவாகக் கேட்டாள் பெண்ணவள். எத்தனை கோபம் விளையாட்டுத்தனம் என்று இருந்தாலும் கணவனின் தடுமாற்றம் அறியாதவளாகி விடுவாளா என்ன...


" அச்சோ உடம்புக்கு எதும் இல்லடா... தூங்கி எழுந்தா சரி ஆகிடும்... நைட் தூங்காததால கொஞ்சம் சோர்வு... மத்தபடி ஓகே தான்.. " என்றிட சற்று நிம்மதியுற்றாள். " சரி சரி... நான் கூப்டது நம்ம சித்தாரா வீடு to let னு போடு போட்டிருக்கு... திரும்ப நைட்டு வந்தா போல... வீட்டுல எல்லா பொருளும் எடுத்துருக்காங்க. காலைல சில்வியா மட்டும் வந்து வீட்ட பூட்டிட்டு போயிட்டா... பேப்பர் ல கூட விளம்பரம் வந்துருக்கு... அதான் உங்களுக்குக் கூப்டேன் . சரி நீங்க வேலைய முடிச்சுட்டு வாங்க ... நான் வைக்கிறேன் " என்றவள் ஃபோனை அணைத்தாள்.

" என்ன ஆச்சு ஆரியா... " என்று சமர் கேட்க, ஆரியனோ அன்றைய தினத்தந்தி பேப்பரை எடுத்துப் புரட்டி விளம்பரங்கள் பக்கம் தேட, சில்வியாவின் வீடு விற்பனை பற்றிய அறிவிப்பு வெளிவந்திருந்தது. அதை சமரிடம் நீட்டியவன் யோசிக்க ஆரம்பித்தான்.

" ஏன் திடீர்னு வீடு காலி பண்ணணும்... காலேஜ் ல அந்தப் பொண்ணு பத்தி கேட்டா நல்ல விதமா தான் சொல்றாங்க. ஞாயிற்று கிழமை எக்ஸாம் னு சொல்லிட்டு மொத்தம் மூன்று பேர் போயிருக்காங்க... ஆனா ஏன்?... வேலைக்குப் போறது இந்த மூன்று வீட்டில் எந்த வீட்டிலும் எதிர்க்கல... சென்னை ல இதுவரை இந்த மூன்று பேர் தான் சொல்றாங்க... இது ஃபேக் நியூஸ் னு சொல்ல முடியுமா... சில்வியா பிரச்சனை ஃபேக் னு சொன்னா கூட இந்தப் பொண்ணுங்க என்ன ஆனாங்க... " என்ற கேள்விகள் உதயமாகின.. ஆனால் பதில் இல்லை....


" சரி மச்சான்... இப்போதைக்கு சில்வியா வீடு விக்கிறது எதுக்கு னு தெரிந்தா ஒருவேளை மற்ற விடயம் தெரியலாம் ல... ஒரு யூகம் தான்... செயல்படுத்துவோம் ... அப்ப சில்வியா வீட்டுக்கு வந்துட்டு போகும்போது உள்ள ஃபுட்டேஜ் வாங்குவோம்... அந்த ஏரியா ல கலெக்ட் பண்ணுவோம்... " என்று சமர் சொல்ல, " எனக்கும் அதுதான் சரி னு தோணுது... சரி ஏற்பாடு பண்ணுறேன் " என்றவன், அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மீண்டும் சில்வியா வீட்டிற்கு வந்து போன ஃபுட்டேஜை செக் செய்ய , ஒரு பேருந்து நிலையத்தில் நின்றாள். அருகே உள்ள காவலர் நிலையத்துக்கு அழைத்து , சில்வியாவின் புகைப்படத்தை மெயில் செய்து ஒரு காவலரை வேவு பார்க்க அனுப்பினர். அதன் பயனாக தாம்பரம் இரயில் நிலையத்தில் ஒரு இரயிலுக்காக காத்து நிற்பது தெரிய வந்தது... கூடுதல் தகவலாக இரயில் இன்னும் ஒன்றரை மணிநேரம் கழித்தே வரும் என்பதும் தெரிந்தது. நேரம் தாழ்த்த விரும்பாது இருவரும் இரயில் நிலையம் கிளம்பினர். ஒருமணிநேர பயணத்திற்குப் பின், இரயில் நிலயத்தை வந்தடைந்தனர்.

இரு கைகளிலும் பைகளோடு நின்றிருந்தாள் சில்வியா . நொடிக்கு நொடி கடிகாரத்தைப் பார்ப்பதும் இரயில் வராதா என்று பார்ப்பதுமாக நின்றிருந்தாள் . கூடவே யாரையோ திரும்பி திரும்பிப் பார்த்து ஒருவித அவஸ்தையாக நின்றிருந்தாள்.

" ஆரியா இப்ப அவ பக்கம் போக வேணாம்... அவ போற ட்ரெயின் ல நாமளும் போவோம் அப்படி என்ன நடந்துச்சு னு பாத்து ஒரு முடிவு பண்ணுவோம் " என்று சமர் தன் யோசனையை முன்வைக்க, ஆரியனும் அதனை ஏற்றுக் கொண்டான். அவர்கள் இருவருக்கும் ஆரியன் டிக்கெட் எடுத்து வர, அவளுக்கு மறைந்து நின்று கொண்டனர். ட்ரெயின் வந்ததும் அவளோடு சேர்ந்து இவர்களும் ஏறிக்கொண்டனர். அது ஒரு லோக்கல் ரயில் என்பதால் கூட்டத்தில் அவளால் இவர்கள் நிற்பதை அறிய இயலவில்லை.

சிறிது நேரத்தில் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டாள். அவள் இறங்குவது பார்த்து இருவருக்கும் குழப்பம் அதிகமானது... செங்கல்பட்டில் இறங்கியவள் அடுத்து வந்த எழும்பூர் இரயிலில் ஏற , குழப்பத்தோடு அவர்களும் ஏறி, அவளைப் பின் தொடர்ந்தனர். எழும்பூரில் இறங்கியவள் மீண்டும் தாம்பரம் இரயிலில் ஏறி தாம்பரம் வந்து அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி ஒரு பெரிய மருத்துவமனை முன்பு இறங்கினாள்.

தாம்பரத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு இடமாகச் சுற்றி, மீண்டும் தாம்பரமே வந்து நிற்க, ஆரியனுக்கும் சமருக்கும் குழப்பம் அதிகமானது. சாதாரணமாக மருத்துவமனை வருவதற்கு ஏன் இத்தனை தூரம் சுற்ற வேண்டும்... கிட்டத்தட்ட இந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணமின்றி வரும் இரயில்களில் எல்லாம் ஏறி கடைசியில் தாம்பரமே வந்து நிற்கின்றாள் .

அவளுடனே கூட மருத்துவமனையில் மறைந்து மறைந்து வந்தவர்கள் கடைசியில் கண்டது என்னவோ கோமாவில் படுத்த படுக்கையாக இருக்கும் சித்தாராவைத் தான்.

தொடரும்...

அத்தியாயம் : 10

காலை வேளையில் சஹானா சமரைத் தேடி அமர, அவனைக் காணவில்லை.

' நம்ம மேல இன்னுமா கோவம் போகல… ஒருவேளை அந்த கவின் அடிச்சது மனசுல வச்சுட்டு பண்ணுறானா… நான் தான் திரும்ப அவனை அடிச்சிட்டேனே… இன்னுமா போகல…


சொல்றதுக்கில்ல… அவன் ஆம்பள … அவன் கோபமும் நியாயம் தானே… இப்படி ஆகிட்டே… இந்நேரம் சாப்பிட்டானோ என்னவோ '

இவ்வாறாக சமரின் மனது அங்கலாய்க்க ஆரம்பித்தது. இரவும் வீடு வரவில்லை ; காலையிலும் வரவில்லை… ஒரு சராசரி மனைவியாக, காதலியாக அவள் மனம் சமரின் நலனை அறிய ஏங்கியது.

இப்படியே அமர்ந்தால் மனம் சேர்ந்து விடும் என எண்ணியவள் ஹோம்தியேட்டரில் பாடலைப் போட்டு விட்டாள்.

ஒரு கணம் ஒருபோதும்
பிரியக் கூடாதே
என் உயிரே
என் உயிரே நீ
அழுக கூடாதே

நீ கண்ட கனவெதுமே
கலைய கூடாதே
நான் இருக்கும் நாள்வரைக்கும்
நீ அழுக கூடாதே

பாடலும் மெல்லிசையாய் வந்து பெண்ணவளின் மனதை வருடிச் செல்ல, புன்னகையோடு அடுத்த வேலையைப் பார்க்கலானாள் . ஆனால் கலங்கியே ஆகவேண்டுமென விதியிட்ட கணக்கினை அவளுக்குக் கூறுவது யார்…

விதியோ மாந்தரிடையே - சிறு
விளையாட்டைத் தொடங்குகையில்
விதியின் சதியை அறியாது
மனதை ரணப்படுத்திட
மனதை வருடும் மயிலிறகாய்
காலம் நின்றால் நன்றே!

*_____________________________________________*

தாம்பரத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு இடமாகச் சுற்றி, மீண்டும் தாம்பரமே வந்து நிற்க, ஆரியனுக்கும் சமருக்கும் குழப்பம் அதிகமானது. சாதாரணமாக மருத்துவமனை வருவதற்கு ஏன் இத்தனை தூரம் சுற்ற வேண்டும்... கிட்டத்தட்ட இந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணமின்றி வரும் இரயில்களில் எல்லாம் ஏறி கடைசியில் தாம்பரமே வந்து நிற்கின்றாள் .

" சமரா… இந்தப் பொண்ண வழிமறிச்சான் பேய் எதும் பிடிச்சிருக்குமோ "

" எதே… வழிமறிச்சான் பேயா … அப்டினா என்னடா ஆரி… புதுசு புதுசா சொல்லுற… "

" எனக்கும் இதுலாம் தெரியாது... பிரதீ சில நேரம் சொல்வா… "

" ஆக மொத்தத்துல நீ லூசாகி நானும் லூசாக போறேன்… சரி அத விடு… எதோ சொன்னியே 'வழிமறிச்சான் பேய்'… அப்டினா என்னடா… "

" டெஃபனைட்டா லூசாகிடுவோம்…
சரி சொல்றேன் கேளு… வழிமறிச்சான் பேய்ங்குறது நம்மள ஒரு இடத்துக்குப் போக விடாது. உதாரணத்துக்கு இதோ சில்வியாவ எடுத்துக்கோயன்… தாம்பரத்துல இருந்து பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் போக செங்கல்பட்டு போய் அங்கிருந்து எழும்பூர் போய் அடுத்து தாம்பரம் வந்து நிக்குறா… சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கு தானே வந்து நிக்கிறா… அதான். ஆனா இவ ஹாஸ்பிடல் வந்துட்டா… "

"இப்படி கூட இருக்குதா… ஆனா நல்லா இருக்குல… " என்றவன் சிரிக்க, ஆரியனும் சிரித்துக் கொண்டான். இருவரும் பேசிக்கொண்டே சில்வியா செல்லும் அறைக்குப் பின்னே நடக்க ஆரம்பித்தனர்.

" ஆரி … இப்படியே போனா மாட்டிக்குவோம்… இரண்டு வார்டு பாய் டிரெஸ்க்கு ரெடி பண்ணு இரண்டு பேரும் போட்டுட்டு முகத்துல மாஸ்க் போட்டு மறைச்சுட்டு போனா அந்தப் பொண்ண நேரடியாவே பின்தொடரலாம்… "

" கரெக்டு தான்… ஆனா இப்ப நேரம் இல்ல… போற வழில எங்கேயாவது கிடைச்சா போடுவோம் விடு… " என்று ஆரியன் கூற, சமரும் சம்மதித்து இருவரும் நடந்தனர்.

போய்க்கொண்டே இருந்தவள் ஒருகட்டத்தில் திரும்பித் திரும்பி பார்க்க ஆரம்பித்து கடைசியில் யாரையோ கண்டு பயந்து நின்றாள் . அது கட்டாயம் சமரோ ஆரியனோ அல்ல என்பது தெளிவு. ஆனால் யார் என்று தெரியவில்லை.

நடந்து வருகையில் ஒரு பிரிவில் வலது இடது முன்பக்கம் எனப் பிரிய, சில்வியா போன திசையை அறிய இயலவில்லை. சமரும் ஆரியனும் வலது புறம் செல்ல, சில்வியாவோ லிஃப்டில் மூன்றாவது மாடி ஏறியிருந்தாள். பின் சுற்றி சுற்றி நான்காவது மாடிக்கு இருவரும் படிக்கட்டு வழியே ஏறி அங்கிருந்து கீழ் உள்ளதைப் பார்க்கையில் சில்வியா மூன்றாவது மாடியின் ஐசியூவில் நிற்பது தெரிந்தது.

இருவரும் வேகவேகமாக ஐசியூவை அடைய, அந்த நேரம் மற்ற செவிலியர்கள் வெளியில் சென்றமலயாலும் அது விசிட்டிங் நேரம் என்பதாலும் இருவருக்கும் வாகாக அமைந்தது. ஐசியூ வாசலில் நின்ற இருவரையும் கண்டு சில்வியா அதிர்ந்தாலும் இருவரும் வந்ததை நினைத்து அவள் மனம் சந்தோஷத்தில் கூத்தாடாமல் இல்லை.

சித்தாராவோ பச்சை நிற உடையணிந்து இடது கையின் மணிக்கட்டு நரம்பில் ஊசி குத்தியும் மூக்கு துவாரங்களில் பிளாஸ்டிக் வயர்கள் செருகப்பட்டு செயற்கை சுவாசத்துடன் படுத்திருந்தாள். சாதாரணமாக செயற்கை சுவாசத்துடன் தூங்குவது போன்று தான் இருந்தது. ஆனாலும் இத்தனை வயர்களுக்கு மத்தியில் ஒடுங்கி படுத்திருப்பவளைக் காண மனம் தாங்கவில்லை.

" என்ன சில்வியா இது… என்ன நடந்துச்சு… இப்படி படுத்திருக்கா… "

" என்னமா ஆச்சு… மான்குட்டி போல துள்ளிட்டு திரிஞ்ச நீ… இன்னைக்கு தாம்பரம் ல இருந்து செங்கல்பட்டு போய் அங்கிருந்து எழும்பூர் போய் அங்கிருந்து திரும்ப தாம்பரம் வந்து திரும்ப ஹாஸ்பிடல் வர்ர… யார பாத்து இப்படி பயப்படுற… வீட விக்குறதுக்கு ' To let ' போர்டு போட்டிருக்குற… "

இருவரும் கேள்வியினால் அவளைத் துளைக்க, அவளது அலைபேசிக்கு சென்ற முறை வந்தது போன்று ஒரு லிங்க் வந்தது. ஓபன் செய்து பார்க்க, இப்பொழுதே 10,000 வியூவ்களைத் தாண்டியிருந்தது.

' ஆ…' வென அலற, அந்த அலறல் ஐசியூவில் இருந்த அத்தனை பேரையும் உலுக்கியது. அனலிட்ட புழுவாய்த் துடித்த மனதைக் கட்டுப்படுத்த வழியின்றி அழுது கரைந்தாள். அங்கிருந்த இருவருக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை.

" சில்வியா… வியா மா… அழுகைய நிறுத்து … இப்ப எதுக்கு அழுகுற… " என்று அவளிடம் கேட்க, பதில் வராது தொடர்ந்து அழுகையே வந்தது. சித்தாராவைப் பார்த்து பார்த்து நெஞ்சலடித்து அழுது கொண்டாள்.

அவளது கையிலிருந்த அலைபேசியை எடுத்து இருவரும் பார்க்க, அதிலிருந்த சித்தாராவின் உடையற்ற உடலின் காணொளியில் திடுக்கிட, அதிர்வில் கையில் இருந்த அலைபேசியியும் கீழே விழுந்து நொறுங்கியது. சில நொடிகளில் அவளிடம் இருந்த மற்றொரு அலைபேசியில் அழைப்பினை ஏற்றாள்.

" ஏண்டி… நான் தான் சொன்னேன் ல… போலீஸ்காரன கூட்டு சேக்குறியா… இதுக்கு தண்டனையா இது யூடியூப் ல போட்டுட்டேன்… அழுறியா… அழு இன்னமும் அழு… இன்னமும் அவனுங்க அங்க நின்னால் சித்தாராவுக்கு ஆக்ஸிஜன் பதில் CO2 சுவாசத்துக்கு ஏற்றிடுவேன். ஜாக்கிரதை " . பேசி முடிந்ததும் அலைபேசியில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. கேட்டுக் கொண்டிருந்த சமருக்கு இந்தக் குரல் நன்கு பரிச்சயமானது போன்றே இருந்தது.

" ஆரி... இந்த குரல் நல்லா பரிச்சயமானது போல இல்லையா... "

" ஏன் இருக்காதூ... இது சார் அனிருத் குரல்... சவுண்ட் மிக்ஸ் பண்ணி பேசி குழப்புறாங்கடா ... "

இருவரும் மாற்றி மாற்றி சில விடயங்களை விவாதிக்க, சமரின் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பார்க்க திரையில் அஹானா என்று எழுதப்பட்டு அவளுடைய புகைப்படம் மிளிர, சில்வியா அதைப் பிடுங்கி லவுட் ஸ்பிக்கரில் போட்டாள்.

" ஹலோ மாம்ஸ்... நான் அஹானா பேசுறேன். என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது. எனக்கு இன்னமும் 5 நாள் ல 21 வயது ஆகிடும். நானும் கவினும் மேரியேஜ் பண்ணலாம்னு இருக்குறோம்... இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டேன். இத்தனை நாள் என்னைய வளர்த்த கடனுக்கு உங்க கிட்ட சொல்லிட்டேன். அக்காவ பாத்துக்கோங்க... பை "

அதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது. மேற்கொண்டு என்ன செய்ய என்று தெரியவில்லை. ஒருபுறம் அஹானாவைத் தடுக்க வேண்டும் ; அதே சமயம் மற்றொருபுறம் சித்தாரா மற்றும் சில்வியாவின் சூழ்நிலையை சரிசெய்ய வேண்டும். சமருக்கு கண்ணுக்குத் தெரியாத மற்றொரு பிரச்சனையும் காத்துக் கொண்டு இருக்கிறது .

அதுவரை அழுது கொண்டிருந்த சில்வியா அலைபேசியை பிடுங்கியது என்னவோ எதாவது மிரட்டலா என்ற பயத்தில் தான்... ஆனால் இது சற்று புதிதாய்த் தோன்றியது. புருவம் சுருக்கி யோசனையாய் அவர்களைப் பார்க்க, " இது வேற மா... சஹானாவோட தங்கச்சி அஹானாவோட காதல் பிரச்சனை... இன்னமும் வீட்டுக்குத் தெரியாது " என்று ஆரியன் கூறி முடித்தான்.

" அது இருக்கட்டும்... அஹானா நீங்க சொல்ற ஆள் யாரு... கவினயனா... அல்லது கவின்யாவா ... "

" கவினயனா... அது யாருமா... நாங்க சொல்றது கவின்... அவன் ஒரு திருநம்பி... உனக்கு அஹானாவையே தெரியாதே... புதுசா என்ன சொல்ற... " என்று குழப்பம் முற்றிட கேட்டான் சமர்.

" சமரா நீ முதல் ல சஹானா கிட்ட போ... அஹானாவ டீம் ல ஒரு லீடரை வைத்து தூக்குறேன். அஹானா கூட தானே கவினும் இருப்பான்... பாத்துக்கலாம்... சஹானாக்கு விஷயம் தெரியும் போது இடிஞ்சு போயிடுவா... அப்ப நீ அங்க இருக்குறது தான் நல்லது... " என்று கூறி சமரை அனுப்பி வைத்தான் ஆரியன்.

" அண்ணா... எனக்கு ஒரு உதவி கிடைக்குமா... உங்க கிட்ட அஹானா லவ் பண்ணுற பையன் ஃபோட்டோ தாங்களேன்... " என்று சில்வியா பிடிவாதமாய் கேட்டபடியே தனது அலைபேசியில் எதையோ தேடினாள்.

எதாவது ஒரு தடயம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் அவனும் புகைப்படத்தை எடுத்துக் காட்டினான். போலீஸ் கஸ்டடியில் கவினின் பைக்கை எடுக்க வேண்டி ஆரியனுக்கு சமரன் அனுப்பிய புகைப்படம் அது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவளுக்குத் தலை சுற்றாத குறை தான்.

அவளது கண்களில் அதிர்ச்சியும் பதற்றமும் தெரிய , " என்ன ஆச்சுமா... இவன் தான் கவின்... இவனா உங்கள கடத்தியது... " என்று ஆரியன் கேட்க, " இவன் கவின் இல்ல... கவின்யா ... திருநம்பி இல்ல... பெண் ... "

" ப்ச் ... என்னமா உளருற... அவன் ஒரு திருநம்பி... உலக பார்வைக்கு ஆண்... குழப்பாதடா... "

" அத தான் அண்ணா சொல்றேன்... நீங்க அத ஏத்துக்க மறுக்குறீங்க.... அவன் திருநம்பி இல்ல.. 'அவன்' இல்ல... 'அவள்' ... கவின் இல்ல... கவின்யா... "

" சரி கவின்யா னு சொல்றியே... அந்தப் பையன்... சரி சரி... அந்தப் பொண்ணு எப்படி இப்ப ஆணா வெளிப்படுறான் வியா மா... "

" SEX ASSIGNMENT SURGERY "

கண்கள் கோபத்தில் சிவக்க , அதீத கோபத்தில் கத்தியவள், இரத்த அழுத்தம் குறைந்து மயங்கி சரிந்தாள்.

*_____________________________________________*

தனது அலுவலகத்தில் சில கோப்புகளைச் சரிபார்த்தும் கையெழுத்திட்டுக் கொண்டும் இருந்தாள் சஹானா. அந்தச் சமயம் அவளுக்கென ஒரு போஸ்ட் வந்தது.

" மே ஐ கம் இன் மேம் "
" கம் இன்... எதுக்காக வந்தீங்க மிஸ். அரசி... "
" மேம் உங்களுக்கு பெர்சனலா ஒரு போஸ்ட் வந்திருக்கு மேம் "

" பெர்சனலாவா... பெர்சனல் எல்லாமே என் வீட்டுக்குத் தானே வரும் " என்றவள் புருவ முடிச்சு விழ, குழப்பத்துடன் பிரித்துப் பார்த்தாள்.

அந்தக் கடித்தத்தில் " Divorce " என்று பெரிய கருப்பு நிற எழுத்துக்களில் இருக்க அதிர்ந்தவள் கீழே பார்கக, சமரின் கையொப்பத்துடன் இருந்தது. சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்தாள் சஹானா...

*_____________________________________________*


தொடரும் ...

கதையைப் பற்றிய நிறை குறைகளை தெரிவியுங்கள் மக்களே... தொடர்ந்து இனிமேல் தினமும் கதை வந்துவிடும்... தாமதத்திற்கு மன்னிக்கவும் 🙇‍♀ .

- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿
 
Top