ஜென்மம் 1
இதுவரை யாரும்
கண்டதில்லை நான்
உணர்ந்த காதலை
உயிரே?
“கனிம்மா இன்னும் எதாவது செய்யணுமா?” என்ற கவிதாவின் குரலில் நடப்புக்கு வந்தவள்,
“போதும் கா. எனக்கு ஒத்தாசையா வந்திங்கன்னா வீட்டை கழுவிவிட்றலாம்” என்று பதில் மொழிய,
“ஹ்ம்ம் பக்கெட்டையும் மாப்பையும் எடுத்துட்டு வர்றேன் மா” என்று கவிதா நகர விழைய,
“நான் அதை எடுத்துட்டு போறேன். ரெண்டு பேரு மட்டும் கழுவினா நேரமாகிடும். நீங்க செண்பகத்தையும் அழைச்சிட்டு வாங்கக்கா” என்றாள்.
கவிதா, ‘சரியென’ நகர,
கையில் வாளியுடன் வெளியே வர அங்கே வராண்டாவில் குழுமியிருந்தது மொத்த குடும்பமும்.
இளையவர்கள் கையில் அலைபேசி இருக்க பெரியவர்கள் அமர்ந்து சிரித்து கதை பேசி கொண்டிருந்தனர்.
அதனை கண்டதும் பெருமூச்சுவிட்டவள் விழிகளை திருப்பி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை கண்டாள்.
அதில் சாந்தமான முகத்தில் சிரிப்புடன் நின்றிருந்தார் மீனாட்சி அம்மாள். அவர் அருகே அவரது கணவர்.
மீனாட்சி அம்மாளின் சாந்தமான புன்னகையிலும் ஒரு கம்பீரம் இருந்தது.
கனிக்கு எப்போதுமே அந்த கம்பீரத்தை கண்டு வியப்பு தான். தானும் அவர் போல தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிறைய முறை எண்ணி இருக்கிறாள்.
புகைப்படத்தின் மீது போடப்பட்டிருந்தத மாலை அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை உணர்த்தியது.
அதை நினைத்த கணம் இவளது விழிகள் கலங்கியது. நான்கு நாட்களுக்கு முன்பு கனியுடன் பேசி சிரித்தபடி நடமாடி கொண்டு இருந்தவர் இப்போது இவ்வுலகில் இல்லை.
தன்னை பிரிந்து அவர் சென்றுவிட்டார் என்ற நிதர்சனத்தை மூளை ஏற்று கொண்டாலும் மனம் ஏற்க மறுக்கிறது.
இத்தனை நாளும் தனக்கு யாவுமாய் இருந்தவர். அதைவிட தனக்கென இவ்வுலகில் இருந்த ஒரே ஒரு ஜீவன். தன் மீது அன்பு செலுத்தி தன்னுடைய சிறகுகளில் பாதுகாப்பாய் பார்த்து கொண்டவர் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் தன்னைவிட்டு சென்றுவிட்டார்.
இரவு உறங்க சென்றவர் காலையில் எழவில்லை. மருத்துவர் வந்தார் ஏதேதோ கூறினார். இறுதியில் உறக்கத்திலே மாரடைப்பு என்றார்.
கனிக்கு இம்மையியும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை. அப்படியே சமைந்துவிட்டிருந்தாள்.
யார் யாரோ வந்தார்கள். ஏதேதோ கூறினார்கள் எதுவுமே மூளைக்குள் செல்லவில்லை.
மீனாட்சி அம்மாளின் காலடியிலே சிலையாகி இருந்தாள். யார் என்ன உலுக்கியும் பதில் இல்லை.
இறுதியில் அவர் உடலை தூக்கி செல்ல விழையும் நேரம் அந்த வீடே அதிரும்படி கதறிய அவளது கதறல் அங்கிருந்தோரை அசைத்து தான் பார்த்துவிட்டது.
அதன் பின்னர் இரண்டு நாட்களாக சரியாக உண்ணாமல் உறங்காமல் இப்படி தான் எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாள்.
இரவு முழுவதும் அழுது சிவந்திருந்த முகத்துடன் தான் வீட்டை கழுவிவிடுவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தாள்.
அவர்கள் இருந்த வீடு அந்த காலத்தில் முற்றம் வைத்து கட்டப்பட்ட பெரிய வீடு. வீடு மற்றும் தோட்டத்தினை பராமரிக்கவே நான்கு நபர்கள் பணிக்கு இருந்தனர்.
அவள் கடந்து சென்றதை அறிந்தோ அறியாமலோ அமர்ந்திருந்த கூட்டத்தை அவளும் கவனியாதது போல படியேறி மாடிக்கு சென்று அறையை சுத்தம் செய்ய துவங்கினாள்.
செவியில், “கனிம்மா நீ எதுக்கு இதெல்லாம் பண்ற. வேற யாராவது கூப்டு பண்ண சொல்றேன். முதல் அதை கீழ வை” என்று மீனாட்சி அம்மாளின் அக்கறை கலந்த அதட்டல் செவிக்குள் மோத,
கனிக்கு விழிகள் கலங்கியது. கரங்கள் ஒரு நொடி நின்று பின் இயங்கியது.
இனி தன் மீது அன்பு செலுத்த அக்கறையாய் அதட்ட என்று இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்ற எண்ணம் தீயாய் சுட விழிகளிலிருந்து நீர் கரகரவென இறங்கியது.
கைகள் அதன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தது.
செண்பகம் “இந்தா புள்ள கனி இன்னுமா நீ அழுதிட்டு இருக்க? நான் தான் சொன்னேல மீனாட்சி அம்மா ரொம்ப குடுத்து வச்சவங்க. அவங்க பண்ண புண்ணியம் தான் அவங்களை எந்த கஷ்டமும் இல்லாம தூக்கத்துலயே கடவுள் கூப்பிட்டுக்கிட்டாரு. இந்த மாதிரி சாவுலாம் வர கொடுத்து வச்சிருக்கணும். எல்லாரும் ஒரு நாள் போய் தான் ஆகணும்” என்று ஆறுதல் கூற,
அதை செவிமடுத்தவாறே அடுத்த அறையை சுத்தம் செய்ய துவங்கினாள்.
“இந்நேரம் அம்மா இருந்திருந்தா உன்னை இந்த வேலை எல்லாம் செய்யவிட்ருப்பாங்களா? எல்லாருக்கும் கை நிறைய படியளக்குற மகராசி இப்படி போய் சேர்ந்திருக்க வேணாம். உன்னை கட்டிக்குடுக்குற வரையாவது இருந்திருக்கலாம்” என்று வருத்தப்பட்டபடியே கவிதாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
கனிக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது மீனாட்சி அம்மாளின் பெரிய ஆசை. ஆனால் அது நிறைவேறாமலே இறைவனிடம் சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் அந்த பெரிய வீடு முழுவதையும் சுத்தம் செய்து முடித்தனர்.
கீழே உள்ள அறையை சுத்தம் செய்யும் போதும் சரி வராண்டாவை சுத்தம் செய்யும் போதும் சரி அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒருவரும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
செண்பகம் கூட, “துக்க வீட்டுக்கு வந்த மாதிரியா இருக்குதுங்க. ஏதோ திருவிழாக்கு வந்த மாதிரிலே திரியுதுங்க. இதுக்கு வராமலே இருந்திருக்கலாம்” என்று வாய்விட்டே கூறியிருக்க,
கனி தான், “அமைதியா வேலையை பாரு செண்பகம்” என்று அதட்டிவிட்டிருந்தாள்.
“ப்ச் உன்னாலே எப்படி தான் இவ்ளோ பொறுமையா இருக்க முடியுதோ” என்று அங்கலாய்த்தபடி அகன்றாள் செண்பகம்.
அடுத்து மற்றவர்களுடன் சேர்ந்து சமையல் வேலையை துவங்கினாள். மீனாட்சி அம்மாளுக்கு பிடித்ததாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள்.
“ஏன் புள்ள பேசாம அந்த வாத்தியார் வீட்டு சம்மந்தத்து சம்மதிசிருக்கலாம். கல்யாணம் கட்டி நிம்மதியா இருந்திருப்ப. இந்த அரக்கி கூட்டத்துல மாட்டி என்ன கஷ்டப்பட போறீயோ எனக்கு பக்கு பக்குனு இருக்கு” என்று வெங்காயம் அரிந்தபடி செண்பகம் புலம்ப,
அருகே வெண்டைக்காயை வெட்டியபடி இருந்த கவிதாவும்,
“ஆமா கனி. பெரியம்மா இருந்தவரை உண்ண பாத்துக்கிட்டாங்க. இனி இவங்ககிட்ட இருந்து உன்னை யாரு காப்பாத்துறது. பேசாம அந்த வாத்தியார் வீட்டுல என் வீட்டுக்கார விட்டு பேசி பார்க்கவா?” என்று வினா தொடுக்க,
கனி பதில் மொழியும் முன் வாசலருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். சிவப்பிரகாசமும் பிரவீனும் நின்று இருந்தனர்.
இருவரும் ஒரு வெளிவேலையாக விடியற்காலையே சென்று இருந்தவர்கள் இப்போது தான் வீடு திரும்பினார்கள்.
வந்தததுமே கனியை தேடி வந்துவிட்டனர்.
முதலாளியை கண்டதும் கவிதாவும் செண்பகமும் எழுந்து நின்றனர்.
தாங்கள் பேசியதை கேட்டுவிட்டனரோ என்று சிறிது அச்சம் முகத்தில்.
சிவப்பிரகாசம், “கனிம்மா இதெல்லாம் நீ ஏன் பண்ணிட்டு இருக்க?” என்று அவளிடம் கேட்டவர் திரும்பி,
“செண்பகம் எதுக்கு பாப்பாவ வேலை வாங்கிட்டு இருக்கிங்க. நீங்களே செய்ய வேண்டியது தான? ஆள் பத்தலைன்னு என்கிட்ட சொன்னா நான் ஏற்பாடு பண்ணி தர மாட்டேனா?” என்ன வினவ,
“ஐயா நாங்க வேணாம்னு தான் சொன்னோம். இந்த புள்ள தான் கேக்காம வந்து வேலை பாத்திட்டே இருக்கு” என்று பணிவாக பதில் பொழிந்தாள் செண்பகம்.
சிவப்பிரகாசம் பதில் பேசும் முன் பிரவீன்,
“அக்கா ஏன் கா இப்படி பண்ணிட்டு இருக்க. ரெண்டு நாளா சாப்பிடாம அழுதழுது ரொம்ப டயர்டாகிட்ட. வா வந்து ரெஸ்ட் எடு” என்று கையை பிடித்து அழைக்க,
“அவ்ளோ தான் இன்னும் பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சிடும். நீங்க படையலுக்கு எல்லாம் இருக்கா எதாவது வாங்கணுமானு பாத்து சொல்லுங்க” என்று அவனிடத்தில் இருந்து கையை உருவி கொண்டாள்.
சிவப்பிரகாசம், “ஏன் பாப்பா இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற? பெரியம்மா போனதுல எனக்கு மட்டும் கவலை இல்லையா?” என வருந்தி வினவ,
அதனை உணர்ந்தவள், “ப்பா நான் நல்லாதான் இருக்கேன். நீங்க போய் ஆக வேண்டிய வேலையை பாருங்க” என்று சமாதானம் கூறியவள் சமையலை கவனிக்க துவங்கினாள்.
அவர்கள் இருவரும் இவள் சொன்னால் கேட்க மாட்டாள் என்று உணர்ந்து வெளிய சென்று மற்ற பணிகளை கவனித்தனர்.
வேலையை செய்து கொண்டிருந்தாலும் சிவப்பிரகாசத்தின் மனதில் கவிதாவும் செண்பகமும் பேசியதே மனதில் ஓடி கொண்டு இருந்தது.
புறம் பேசியது தவறென்றாலும் அவர்கள் கூறிய விடயம் நூறு சதவீதம் உண்மை தானே? இனி தன் வீட்டில் உள்ள பாவிகளிடமிருந்து கனியை எப்படி பாதுகாக்க போகிறோம் என்று உள்ளுக்குள் ஓடி கொண்டிருந்தது.
வெகுநேரம் சிந்தித்தவர் ஒரு முடிவை எடுத்தபிறகு தான் நிம்மதியானார்.
தான் முடிவால் வீட்டில் எத்தனை பெரிய பிரளயம் வெடிக்கும் என்று தெரிந்திருந்தாலும் வேறுவழியில்லை எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்.
நேரம் ஆக ஆக நெருங்கிய சொந்தங்கள் வர துவங்க மீனாட்சி அம்மாளின் புகைப்படத்திற்கு முன்பு அவருக்கு பிடித்த உணவுகளை படைத்தனர்.
புகைப்படத்திற்கு அருகே நின்று அவரது முகத்தையே வெறித்தபடி நின்றிருந்தாள் கனி. உள்ளத்து உணர்வுகள் எல்லாம் மொத்தமாய் வடிந்து போயிருந்தது.
இப்படி ஒரே நாளில் உலகம் தலைகீழாய் மாறிவிடும் என்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லையே?
உறங்க செல்லும் முன்பு நாளை காலை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று கூறினாரே. தானும் சம்மதம் கூறினோமே இறுதி வரை சேர்ந்து கோவிலுக்கு செல்ல இயலாது என்று தெரியாமல் போயிற்றே என்று உள்ளம் கதறியது.
எதிரில் இருப்பவர்கள் முன்பு அழக்கூட முடியாது. என்னவோ தான் நாடகம் போடுவது போல பேசி மனதை புன்படுத்துவார்கள்.
நிம்மதியாக அழக்கூட முடியாத நிலை எத்தனை கொடியது என்று மனம் அரற்றியது.
சடங்கு முடிந்ததும் அனைவருக்கும் உணவு பரிமாற துவங்கினர்.
பிரவீன் கூறியும் கேட்காமல் பரிமாறுவர்களுடன் இணைந்து தானும் பரிமாற துவங்கினாள்.
சரியாக அவள் கிரிதரனுக்கு பரிமாறுகையில்,
“என்ன கிரி மச்சான் பார்த்தி இன்னமும் வரலையா?” என்று எதிரில் இருந்தவர் வினவ,
‘பார்த்தி’ என்ற பெயரை கேட்டதும் உடல் ஒரு முறை இறுகி பின்னர் இயல்பானது.
முகத்தில் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் அடுத்த இலைக்கு மாறினாள்.
“இல்லை மச்சான். அவன் ஆஸ்திரேலியாக்கு பிஸ்னஸ் விஷயமா போய் இருக்கான். வர முடியாத சூழ்நிலை” என்று கூறியது அவளது அனுமதியின்றி செவியினுள் நுழைந்தது.
சிவப்பிரகாசம் கனியை உணவுன்ன வற்புறுத்த பசியில்லை என்று மறுத்துவிட்டிருந்தாள்.
சமையலறை சென்று அனைத்தையும் எடுத்து வைத்து ஒதுங்க வைத்து கொண்டிருந்தவளை,
“அக்கா” என்ற பிரவீன் அழைப்பு திரும்பி பார்க்க வைத்தது.
“அப்பா உன்னை கூப்பிட்டாருக்கா” பிரவீன் மொழிய,
எதற்கு என்று ஒரு நொடி யோசனை வந்தாலும் கிளம்புகிறார்கள் போல அதனான் கூறிவிட்டு செல்ல அழைக்கிறார் என்று எண்ணியவள்,
“ரெண்டு நிமிஷத்துல வர்றேன் நீ போ” என்று அனுப்பியவள் கைகளை கழுவி துடைத்தவாறே வெளியே வந்தாள்.
அங்கே எல்லோரும் செல்வதற்கு தயாராக தங்களது பெட்டியுடன் அமர்ந்திருந்தனர்.
தான் நினைத்தது சரிதான் என்று எண்ணியவள் சிவப்பிரகாசத்தின் அருகே செல்ல,
“கனி வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கைப்பிடித்து வெளியே அழைத்து சென்றார்.
கனிக்கு எதுவோ சரியாகப் படவில்லை.
“என்ன விஷயம்பா” என்று வினவ,
“பாப்பா அப்பா சொன்ன கேட்ப தான?” என்று சிவா கேட்க,
இவளுக்கு உள்ளுக்குள் அபாய மணி அடித்தது. ஏதோ விரும்பதாக ஒன்றை கேட்க போகிறார் என்று.
“என்னப்பா” என்று தயங்கி கேட்க,
“அப்பா பேச்சை நீ கேட்பன்ற நம்பிக்கையில நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன். கேட்பதான?” என்று வினவ,
“கேட்பேன்பா” என்றவளுக்கு உறுதியாய் தெரிந்து போனது. என்னவோ பெரிய விடயம் என்று.
“பாப்பா நீ என்கூட நம்ம வீட்டுக்கு வரணும்?” என்றவரது வார்த்தையில் அதிர்ச்சியை தாங்கியவள்,
“அப்பா” என்று அதனை வார்த்தையிலும் காண்பிக்க.
“உன்னை அழைச்சிட்டு போகணும்னு நான் முடிவெடுத்துட்டேன். இவ்ளோ நாள் பெரியம்மா இருந்தாங்க அவங்க உன்னை பாத்துக்கிட்டாங்க. இனி யார் இருக்கா. உன்னை தனியா விட்டுட்டு என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாதும்மா”
“அப்பா நான் சின்ன குழந்தை இல்லைப்பா. எனக்கு இருபத்தி நாலு வயசாகிடுச்சு. எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்” என்று கனி எடுத்துரைக்க,
“பிள்ளைங்க எவ்ளோ பெருசா வளர்ந்தாலும் செத்தவங்களுக்கு குழந்தைங்க தான்மா” என்றார்.
கனி பதில் பேசாது ஒரு வித தவிப்புடன் அவரை கண்டு,
“நீங்கதானப்பா இனிமேல் நீ அந்த வீட்டுக்கு வர கூடாதுனு சொல்லி இங்க கொண்டு வந்துவிட்டிங்க” என்றிட,
அவருக்கும் கனியின் மனநிலை புரிந்தது.
தூரத்தில் நின்று இவர்களது உரையாடலை கேட்டு கொண்டிருந்த ப்ரவீன் தமக்கையின் பரிதவிப்பை கண்டு அருகில் வந்து கனியின் கையை ஆதரவாக இறுக பிடித்து கொண்டான்.
“நான் தான் சொன்னேன் மா. இப்பவும் நான் தான் சொல்றேன். அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் இருக்கும்னு உனக்கு புரியாதா? அங்க உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்கிறேன் மா” என்று அவளது கையை பிடித்து மன்றாட,
இவளுக்கு விழிகள் கலங்கியது. பதில் கூற இயலவில்லை. விழிகளை இறுக மூடி திறந்து தன்னை நிலைநிறுத்த முற்ப்பட்டாள்.
விழிமூடினால் ஆநாதரவாய் கொட்டும் மழையில் தான் அழுது கொண்டிருந்தது நினைவிற்கு வர உள்ளே ஒன்று இறுகியது.
அவளது மனப்போராட்டத்தை உணர்ந்த பிரவீன், “அக்கா நானும் அப்பாவும் உன்னை நல்லா பாத்துப்போம்கா. ப்ளீஸ் கா எங்களோடவே வந்திடு கா” என்று கெஞ்ச,
அதற்கு மேலும் மறுக்க இயலாதவள் தன்னை நிதானித்து,
“சரி வர்றேன்பா” என்று ஒத்து கொண்டாள்.
அவளது வார்த்தையை கேட்டதும் தான் அருகே இருந்தவர்களுக்கு எவ்வளவு ஆனந்தம்.
சிவப்பிரகாசம் உணர்ச்சி மிகுதியில் அவளது கரத்தை பிடித்து கொள்ள,
“இப்போ தான் சந்தோஷமா இருக்கு கா. சரி வா போய் உன் திங்க்ஸ பேக் பண்ணுவோம்” என்று பிரவீன் மொழிய,
“இப்போவே வா?” என்று அதிர்ந்து விழித்தாள்.
“ஆமா இப்போதான் எங்ககூட வர்ற”
“அதுக்குள்ள நான் எப்படி கிளம்ப முடியும். வீட்ல வேலை இருக்கு” என்று இழுக்க,
“அதெல்லாம் நான் சுப்பையாக்கிட்ட சொல்லிட்டேன். எல்லாத்தையும் அவரே கவனிச்சுக்கிறேன்னு சொல்லிட்டாரு” என்று சிவப்பிரகாசம் முடித்தார்.
“நா… நான் ஜாப் பாக்குற ஆபிஸ் அங்க ரிலிவ் ஆகணும். அதுக்கு டைம் ஆகும்” என்று காரணத்தை தேடி பிடித்து கூற,
“நான் உங்க கம்பெனில பேசிக்கிறேன். உங்க எம்.டி என்னோட ப்ரெண்ட் தான்” என்று அதற்கும் சிவப்பிரகாசம் பதில் வைத்திருக்க,
கனியால் அதற்கு மேல் காரணத்தை அடுக்க இயலாதாபடியால்,
“ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு வர்றேனா பா” என்று கேட்டிட,
“இவ்ளோ நாள் இங்க தான இருந்த. இனி எங்க கூட இரு. வா திங்க்ஸ் பேக் பண்ணுவோம்” என்று இழுத்து கொண்டு அவளறைக்கு சென்றான்.
கிரிதரன், “கிளம்புவோமா சிவா” என்று வினவ,
“ஹ்ம்ம் கிளம்பலாம். நீங்க முன்னாடி போங்க. சுப்பையாவ வர சொல்லி இருக்கேன் கணக்குவழக்கு கொஞ்சம் பாக்கி இருக்கு முடிச்சிட்டு நானும் பிரவீனும் பின்னாடி வர்றோம்” என்று குடும்ப உறுப்பினர்களை முன்னே அனுப்பி வைத்தார்.
கனியை உடன் அழைத்து வருவது தெரிந்தால் நிச்சயமாக இங்கேயே மனைவியும் மாமியாரும் பெரிய பிரச்சனையை உண்டு செய்துவிடுவார்கள் என்று கணித்தே அவர்களை முன்பே அனுப்பி வைத்தார்.
அவர்கள் கிளம்பியதும் சுப்பையா வர உடன் அவரது மகன் மகேஷும் வந்தான்.
சுப்பையா அவர்களிடம் பணிபுரியும் கணக்கு பிள்ளை.
“வாங்க சுப்பையா உட்காருங்க” என்று என்று இருவரையும் உபசரித்தவர் பார்க்க வேண்டிய மீத கணக்கு வழக்குகளை பார்த்தனர்.
கனி தனக்கு அத்யாவசிய தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு பிரவீனுடன் இறங்கி வந்தாள்.
அமர்ந்திருந்த மகேஷ் கனியை கண்டதும்,
“கனி சென்னைக்கு போறீயா?” என்று எழுந்து அவளருகே சென்றான்.
“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளுக்கு அங்கிருந்து கிளம்ப துளியும் மனமில்லை.
மகேஷ் கனியுடன் கல்லூரியில் ஒன்றாக பயின்று இப்போது வேலை செய்த இடம் வரை அவளுடன் இருந்த உற்ற தோழன்.
“ஏன் திடீர்னு இந்த முடிவு நாங்க எல்லாரும் இருக்கோமே. உன்னை பாத்துக்க மாட்டோமா?” என்று அவளது கரத்தை பிடிக்க,
“எனக்கு வேற வழி தெரியலை மகி” என்று அவனது கரத்தை தானும் இறுக பற்றி கொண்டாள்.
கிட்டத்தட்ட எட்டு வருட நட்பு. தன்னுடைய பின்னணி என எதையும் கருத்திற் கொள்ளாது தனது பண்பை மட்டும் கண்டு நட்பாக்கி கொண்டவன். மிகவும் நல்லவன். இந்நாள் வரை தனக்கு உறுதுணையாக இருந்தவன்.
இவர்களது உரையாடலை கண்ட சிவப்பிரகாசம், “சென்னை என்ன அவ்ளோ தூரமா மகேஷ். மார்னிங் ட்ரெயின் ஏறுனா ஈவ்னிங் ரீச்
ஆகிடலாம். அவளை தனியா விட்டுட்டு போக எனக்கு மனசில்லை” என்று கூற,
“ஹ்ம்ம்” என்று மௌனமாய் தலையசைத்து கேட்டு கொண்டவனுக்கு அவளை பிரிய மனதே இல்லை.
ஒருவழியாக எல்லோரிடமும் விடைபெற்று இத்தனை நாள் தன்னை பாதுகாத்த மண்ணை விட்டு சென்னையை நோக்கி பயணமானாள் கனி.
இதுவரை யாரும்
கண்டதில்லை நான்
உணர்ந்த காதலை
உயிரே?
“கனிம்மா இன்னும் எதாவது செய்யணுமா?” என்ற கவிதாவின் குரலில் நடப்புக்கு வந்தவள்,
“போதும் கா. எனக்கு ஒத்தாசையா வந்திங்கன்னா வீட்டை கழுவிவிட்றலாம்” என்று பதில் மொழிய,
“ஹ்ம்ம் பக்கெட்டையும் மாப்பையும் எடுத்துட்டு வர்றேன் மா” என்று கவிதா நகர விழைய,
“நான் அதை எடுத்துட்டு போறேன். ரெண்டு பேரு மட்டும் கழுவினா நேரமாகிடும். நீங்க செண்பகத்தையும் அழைச்சிட்டு வாங்கக்கா” என்றாள்.
கவிதா, ‘சரியென’ நகர,
கையில் வாளியுடன் வெளியே வர அங்கே வராண்டாவில் குழுமியிருந்தது மொத்த குடும்பமும்.
இளையவர்கள் கையில் அலைபேசி இருக்க பெரியவர்கள் அமர்ந்து சிரித்து கதை பேசி கொண்டிருந்தனர்.
அதனை கண்டதும் பெருமூச்சுவிட்டவள் விழிகளை திருப்பி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை கண்டாள்.
அதில் சாந்தமான முகத்தில் சிரிப்புடன் நின்றிருந்தார் மீனாட்சி அம்மாள். அவர் அருகே அவரது கணவர்.
மீனாட்சி அம்மாளின் சாந்தமான புன்னகையிலும் ஒரு கம்பீரம் இருந்தது.
கனிக்கு எப்போதுமே அந்த கம்பீரத்தை கண்டு வியப்பு தான். தானும் அவர் போல தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிறைய முறை எண்ணி இருக்கிறாள்.
புகைப்படத்தின் மீது போடப்பட்டிருந்தத மாலை அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை உணர்த்தியது.
அதை நினைத்த கணம் இவளது விழிகள் கலங்கியது. நான்கு நாட்களுக்கு முன்பு கனியுடன் பேசி சிரித்தபடி நடமாடி கொண்டு இருந்தவர் இப்போது இவ்வுலகில் இல்லை.
தன்னை பிரிந்து அவர் சென்றுவிட்டார் என்ற நிதர்சனத்தை மூளை ஏற்று கொண்டாலும் மனம் ஏற்க மறுக்கிறது.
இத்தனை நாளும் தனக்கு யாவுமாய் இருந்தவர். அதைவிட தனக்கென இவ்வுலகில் இருந்த ஒரே ஒரு ஜீவன். தன் மீது அன்பு செலுத்தி தன்னுடைய சிறகுகளில் பாதுகாப்பாய் பார்த்து கொண்டவர் இப்போது சொல்லாமல் கொள்ளாமல் தன்னைவிட்டு சென்றுவிட்டார்.
இரவு உறங்க சென்றவர் காலையில் எழவில்லை. மருத்துவர் வந்தார் ஏதேதோ கூறினார். இறுதியில் உறக்கத்திலே மாரடைப்பு என்றார்.
கனிக்கு இம்மையியும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை. அப்படியே சமைந்துவிட்டிருந்தாள்.
யார் யாரோ வந்தார்கள். ஏதேதோ கூறினார்கள் எதுவுமே மூளைக்குள் செல்லவில்லை.
மீனாட்சி அம்மாளின் காலடியிலே சிலையாகி இருந்தாள். யார் என்ன உலுக்கியும் பதில் இல்லை.
இறுதியில் அவர் உடலை தூக்கி செல்ல விழையும் நேரம் அந்த வீடே அதிரும்படி கதறிய அவளது கதறல் அங்கிருந்தோரை அசைத்து தான் பார்த்துவிட்டது.
அதன் பின்னர் இரண்டு நாட்களாக சரியாக உண்ணாமல் உறங்காமல் இப்படி தான் எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்கிறாள்.
இரவு முழுவதும் அழுது சிவந்திருந்த முகத்துடன் தான் வீட்டை கழுவிவிடுவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தாள்.
அவர்கள் இருந்த வீடு அந்த காலத்தில் முற்றம் வைத்து கட்டப்பட்ட பெரிய வீடு. வீடு மற்றும் தோட்டத்தினை பராமரிக்கவே நான்கு நபர்கள் பணிக்கு இருந்தனர்.
அவள் கடந்து சென்றதை அறிந்தோ அறியாமலோ அமர்ந்திருந்த கூட்டத்தை அவளும் கவனியாதது போல படியேறி மாடிக்கு சென்று அறையை சுத்தம் செய்ய துவங்கினாள்.
செவியில், “கனிம்மா நீ எதுக்கு இதெல்லாம் பண்ற. வேற யாராவது கூப்டு பண்ண சொல்றேன். முதல் அதை கீழ வை” என்று மீனாட்சி அம்மாளின் அக்கறை கலந்த அதட்டல் செவிக்குள் மோத,
கனிக்கு விழிகள் கலங்கியது. கரங்கள் ஒரு நொடி நின்று பின் இயங்கியது.
இனி தன் மீது அன்பு செலுத்த அக்கறையாய் அதட்ட என்று இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்ற எண்ணம் தீயாய் சுட விழிகளிலிருந்து நீர் கரகரவென இறங்கியது.
கைகள் அதன் போக்கில் வேலை செய்து கொண்டிருந்தது.
செண்பகம் “இந்தா புள்ள கனி இன்னுமா நீ அழுதிட்டு இருக்க? நான் தான் சொன்னேல மீனாட்சி அம்மா ரொம்ப குடுத்து வச்சவங்க. அவங்க பண்ண புண்ணியம் தான் அவங்களை எந்த கஷ்டமும் இல்லாம தூக்கத்துலயே கடவுள் கூப்பிட்டுக்கிட்டாரு. இந்த மாதிரி சாவுலாம் வர கொடுத்து வச்சிருக்கணும். எல்லாரும் ஒரு நாள் போய் தான் ஆகணும்” என்று ஆறுதல் கூற,
அதை செவிமடுத்தவாறே அடுத்த அறையை சுத்தம் செய்ய துவங்கினாள்.
“இந்நேரம் அம்மா இருந்திருந்தா உன்னை இந்த வேலை எல்லாம் செய்யவிட்ருப்பாங்களா? எல்லாருக்கும் கை நிறைய படியளக்குற மகராசி இப்படி போய் சேர்ந்திருக்க வேணாம். உன்னை கட்டிக்குடுக்குற வரையாவது இருந்திருக்கலாம்” என்று வருத்தப்பட்டபடியே கவிதாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
கனிக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது மீனாட்சி அம்மாளின் பெரிய ஆசை. ஆனால் அது நிறைவேறாமலே இறைவனிடம் சென்றுவிட்டார்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் அந்த பெரிய வீடு முழுவதையும் சுத்தம் செய்து முடித்தனர்.
கீழே உள்ள அறையை சுத்தம் செய்யும் போதும் சரி வராண்டாவை சுத்தம் செய்யும் போதும் சரி அமர்ந்திருந்த கூட்டத்தில் ஒருவரும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
செண்பகம் கூட, “துக்க வீட்டுக்கு வந்த மாதிரியா இருக்குதுங்க. ஏதோ திருவிழாக்கு வந்த மாதிரிலே திரியுதுங்க. இதுக்கு வராமலே இருந்திருக்கலாம்” என்று வாய்விட்டே கூறியிருக்க,
கனி தான், “அமைதியா வேலையை பாரு செண்பகம்” என்று அதட்டிவிட்டிருந்தாள்.
“ப்ச் உன்னாலே எப்படி தான் இவ்ளோ பொறுமையா இருக்க முடியுதோ” என்று அங்கலாய்த்தபடி அகன்றாள் செண்பகம்.
அடுத்து மற்றவர்களுடன் சேர்ந்து சமையல் வேலையை துவங்கினாள். மீனாட்சி அம்மாளுக்கு பிடித்ததாக பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தாள்.
“ஏன் புள்ள பேசாம அந்த வாத்தியார் வீட்டு சம்மந்தத்து சம்மதிசிருக்கலாம். கல்யாணம் கட்டி நிம்மதியா இருந்திருப்ப. இந்த அரக்கி கூட்டத்துல மாட்டி என்ன கஷ்டப்பட போறீயோ எனக்கு பக்கு பக்குனு இருக்கு” என்று வெங்காயம் அரிந்தபடி செண்பகம் புலம்ப,
அருகே வெண்டைக்காயை வெட்டியபடி இருந்த கவிதாவும்,
“ஆமா கனி. பெரியம்மா இருந்தவரை உண்ண பாத்துக்கிட்டாங்க. இனி இவங்ககிட்ட இருந்து உன்னை யாரு காப்பாத்துறது. பேசாம அந்த வாத்தியார் வீட்டுல என் வீட்டுக்கார விட்டு பேசி பார்க்கவா?” என்று வினா தொடுக்க,
கனி பதில் மொழியும் முன் வாசலருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். சிவப்பிரகாசமும் பிரவீனும் நின்று இருந்தனர்.
இருவரும் ஒரு வெளிவேலையாக விடியற்காலையே சென்று இருந்தவர்கள் இப்போது தான் வீடு திரும்பினார்கள்.
வந்தததுமே கனியை தேடி வந்துவிட்டனர்.
முதலாளியை கண்டதும் கவிதாவும் செண்பகமும் எழுந்து நின்றனர்.
தாங்கள் பேசியதை கேட்டுவிட்டனரோ என்று சிறிது அச்சம் முகத்தில்.
சிவப்பிரகாசம், “கனிம்மா இதெல்லாம் நீ ஏன் பண்ணிட்டு இருக்க?” என்று அவளிடம் கேட்டவர் திரும்பி,
“செண்பகம் எதுக்கு பாப்பாவ வேலை வாங்கிட்டு இருக்கிங்க. நீங்களே செய்ய வேண்டியது தான? ஆள் பத்தலைன்னு என்கிட்ட சொன்னா நான் ஏற்பாடு பண்ணி தர மாட்டேனா?” என்ன வினவ,
“ஐயா நாங்க வேணாம்னு தான் சொன்னோம். இந்த புள்ள தான் கேக்காம வந்து வேலை பாத்திட்டே இருக்கு” என்று பணிவாக பதில் பொழிந்தாள் செண்பகம்.
சிவப்பிரகாசம் பதில் பேசும் முன் பிரவீன்,
“அக்கா ஏன் கா இப்படி பண்ணிட்டு இருக்க. ரெண்டு நாளா சாப்பிடாம அழுதழுது ரொம்ப டயர்டாகிட்ட. வா வந்து ரெஸ்ட் எடு” என்று கையை பிடித்து அழைக்க,
“அவ்ளோ தான் இன்னும் பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சிடும். நீங்க படையலுக்கு எல்லாம் இருக்கா எதாவது வாங்கணுமானு பாத்து சொல்லுங்க” என்று அவனிடத்தில் இருந்து கையை உருவி கொண்டாள்.
சிவப்பிரகாசம், “ஏன் பாப்பா இப்படி உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற? பெரியம்மா போனதுல எனக்கு மட்டும் கவலை இல்லையா?” என வருந்தி வினவ,
அதனை உணர்ந்தவள், “ப்பா நான் நல்லாதான் இருக்கேன். நீங்க போய் ஆக வேண்டிய வேலையை பாருங்க” என்று சமாதானம் கூறியவள் சமையலை கவனிக்க துவங்கினாள்.
அவர்கள் இருவரும் இவள் சொன்னால் கேட்க மாட்டாள் என்று உணர்ந்து வெளிய சென்று மற்ற பணிகளை கவனித்தனர்.
வேலையை செய்து கொண்டிருந்தாலும் சிவப்பிரகாசத்தின் மனதில் கவிதாவும் செண்பகமும் பேசியதே மனதில் ஓடி கொண்டு இருந்தது.
புறம் பேசியது தவறென்றாலும் அவர்கள் கூறிய விடயம் நூறு சதவீதம் உண்மை தானே? இனி தன் வீட்டில் உள்ள பாவிகளிடமிருந்து கனியை எப்படி பாதுகாக்க போகிறோம் என்று உள்ளுக்குள் ஓடி கொண்டிருந்தது.
வெகுநேரம் சிந்தித்தவர் ஒரு முடிவை எடுத்தபிறகு தான் நிம்மதியானார்.
தான் முடிவால் வீட்டில் எத்தனை பெரிய பிரளயம் வெடிக்கும் என்று தெரிந்திருந்தாலும் வேறுவழியில்லை எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்.
நேரம் ஆக ஆக நெருங்கிய சொந்தங்கள் வர துவங்க மீனாட்சி அம்மாளின் புகைப்படத்திற்கு முன்பு அவருக்கு பிடித்த உணவுகளை படைத்தனர்.
புகைப்படத்திற்கு அருகே நின்று அவரது முகத்தையே வெறித்தபடி நின்றிருந்தாள் கனி. உள்ளத்து உணர்வுகள் எல்லாம் மொத்தமாய் வடிந்து போயிருந்தது.
இப்படி ஒரே நாளில் உலகம் தலைகீழாய் மாறிவிடும் என்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லையே?
உறங்க செல்லும் முன்பு நாளை காலை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று கூறினாரே. தானும் சம்மதம் கூறினோமே இறுதி வரை சேர்ந்து கோவிலுக்கு செல்ல இயலாது என்று தெரியாமல் போயிற்றே என்று உள்ளம் கதறியது.
எதிரில் இருப்பவர்கள் முன்பு அழக்கூட முடியாது. என்னவோ தான் நாடகம் போடுவது போல பேசி மனதை புன்படுத்துவார்கள்.
நிம்மதியாக அழக்கூட முடியாத நிலை எத்தனை கொடியது என்று மனம் அரற்றியது.
சடங்கு முடிந்ததும் அனைவருக்கும் உணவு பரிமாற துவங்கினர்.
பிரவீன் கூறியும் கேட்காமல் பரிமாறுவர்களுடன் இணைந்து தானும் பரிமாற துவங்கினாள்.
சரியாக அவள் கிரிதரனுக்கு பரிமாறுகையில்,
“என்ன கிரி மச்சான் பார்த்தி இன்னமும் வரலையா?” என்று எதிரில் இருந்தவர் வினவ,
‘பார்த்தி’ என்ற பெயரை கேட்டதும் உடல் ஒரு முறை இறுகி பின்னர் இயல்பானது.
முகத்தில் எந்த ஒரு மாறுதலும் இல்லாமல் அடுத்த இலைக்கு மாறினாள்.
“இல்லை மச்சான். அவன் ஆஸ்திரேலியாக்கு பிஸ்னஸ் விஷயமா போய் இருக்கான். வர முடியாத சூழ்நிலை” என்று கூறியது அவளது அனுமதியின்றி செவியினுள் நுழைந்தது.
சிவப்பிரகாசம் கனியை உணவுன்ன வற்புறுத்த பசியில்லை என்று மறுத்துவிட்டிருந்தாள்.
சமையலறை சென்று அனைத்தையும் எடுத்து வைத்து ஒதுங்க வைத்து கொண்டிருந்தவளை,
“அக்கா” என்ற பிரவீன் அழைப்பு திரும்பி பார்க்க வைத்தது.
“அப்பா உன்னை கூப்பிட்டாருக்கா” பிரவீன் மொழிய,
எதற்கு என்று ஒரு நொடி யோசனை வந்தாலும் கிளம்புகிறார்கள் போல அதனான் கூறிவிட்டு செல்ல அழைக்கிறார் என்று எண்ணியவள்,
“ரெண்டு நிமிஷத்துல வர்றேன் நீ போ” என்று அனுப்பியவள் கைகளை கழுவி துடைத்தவாறே வெளியே வந்தாள்.
அங்கே எல்லோரும் செல்வதற்கு தயாராக தங்களது பெட்டியுடன் அமர்ந்திருந்தனர்.
தான் நினைத்தது சரிதான் என்று எண்ணியவள் சிவப்பிரகாசத்தின் அருகே செல்ல,
“கனி வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கைப்பிடித்து வெளியே அழைத்து சென்றார்.
கனிக்கு எதுவோ சரியாகப் படவில்லை.
“என்ன விஷயம்பா” என்று வினவ,
“பாப்பா அப்பா சொன்ன கேட்ப தான?” என்று சிவா கேட்க,
இவளுக்கு உள்ளுக்குள் அபாய மணி அடித்தது. ஏதோ விரும்பதாக ஒன்றை கேட்க போகிறார் என்று.
“என்னப்பா” என்று தயங்கி கேட்க,
“அப்பா பேச்சை நீ கேட்பன்ற நம்பிக்கையில நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன். கேட்பதான?” என்று வினவ,
“கேட்பேன்பா” என்றவளுக்கு உறுதியாய் தெரிந்து போனது. என்னவோ பெரிய விடயம் என்று.
“பாப்பா நீ என்கூட நம்ம வீட்டுக்கு வரணும்?” என்றவரது வார்த்தையில் அதிர்ச்சியை தாங்கியவள்,
“அப்பா” என்று அதனை வார்த்தையிலும் காண்பிக்க.
“உன்னை அழைச்சிட்டு போகணும்னு நான் முடிவெடுத்துட்டேன். இவ்ளோ நாள் பெரியம்மா இருந்தாங்க அவங்க உன்னை பாத்துக்கிட்டாங்க. இனி யார் இருக்கா. உன்னை தனியா விட்டுட்டு என்னால அங்க நிம்மதியா இருக்க முடியாதும்மா”
“அப்பா நான் சின்ன குழந்தை இல்லைப்பா. எனக்கு இருபத்தி நாலு வயசாகிடுச்சு. எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்” என்று கனி எடுத்துரைக்க,
“பிள்ளைங்க எவ்ளோ பெருசா வளர்ந்தாலும் செத்தவங்களுக்கு குழந்தைங்க தான்மா” என்றார்.
கனி பதில் பேசாது ஒரு வித தவிப்புடன் அவரை கண்டு,
“நீங்கதானப்பா இனிமேல் நீ அந்த வீட்டுக்கு வர கூடாதுனு சொல்லி இங்க கொண்டு வந்துவிட்டிங்க” என்றிட,
அவருக்கும் கனியின் மனநிலை புரிந்தது.
தூரத்தில் நின்று இவர்களது உரையாடலை கேட்டு கொண்டிருந்த ப்ரவீன் தமக்கையின் பரிதவிப்பை கண்டு அருகில் வந்து கனியின் கையை ஆதரவாக இறுக பிடித்து கொண்டான்.
“நான் தான் சொன்னேன் மா. இப்பவும் நான் தான் சொல்றேன். அப்பா எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் இருக்கும்னு உனக்கு புரியாதா? அங்க உனக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்கிறேன் மா” என்று அவளது கையை பிடித்து மன்றாட,
இவளுக்கு விழிகள் கலங்கியது. பதில் கூற இயலவில்லை. விழிகளை இறுக மூடி திறந்து தன்னை நிலைநிறுத்த முற்ப்பட்டாள்.
விழிமூடினால் ஆநாதரவாய் கொட்டும் மழையில் தான் அழுது கொண்டிருந்தது நினைவிற்கு வர உள்ளே ஒன்று இறுகியது.
அவளது மனப்போராட்டத்தை உணர்ந்த பிரவீன், “அக்கா நானும் அப்பாவும் உன்னை நல்லா பாத்துப்போம்கா. ப்ளீஸ் கா எங்களோடவே வந்திடு கா” என்று கெஞ்ச,
அதற்கு மேலும் மறுக்க இயலாதவள் தன்னை நிதானித்து,
“சரி வர்றேன்பா” என்று ஒத்து கொண்டாள்.
அவளது வார்த்தையை கேட்டதும் தான் அருகே இருந்தவர்களுக்கு எவ்வளவு ஆனந்தம்.
சிவப்பிரகாசம் உணர்ச்சி மிகுதியில் அவளது கரத்தை பிடித்து கொள்ள,
“இப்போ தான் சந்தோஷமா இருக்கு கா. சரி வா போய் உன் திங்க்ஸ பேக் பண்ணுவோம்” என்று பிரவீன் மொழிய,
“இப்போவே வா?” என்று அதிர்ந்து விழித்தாள்.
“ஆமா இப்போதான் எங்ககூட வர்ற”
“அதுக்குள்ள நான் எப்படி கிளம்ப முடியும். வீட்ல வேலை இருக்கு” என்று இழுக்க,
“அதெல்லாம் நான் சுப்பையாக்கிட்ட சொல்லிட்டேன். எல்லாத்தையும் அவரே கவனிச்சுக்கிறேன்னு சொல்லிட்டாரு” என்று சிவப்பிரகாசம் முடித்தார்.
“நா… நான் ஜாப் பாக்குற ஆபிஸ் அங்க ரிலிவ் ஆகணும். அதுக்கு டைம் ஆகும்” என்று காரணத்தை தேடி பிடித்து கூற,
“நான் உங்க கம்பெனில பேசிக்கிறேன். உங்க எம்.டி என்னோட ப்ரெண்ட் தான்” என்று அதற்கும் சிவப்பிரகாசம் பதில் வைத்திருக்க,
கனியால் அதற்கு மேல் காரணத்தை அடுக்க இயலாதாபடியால்,
“ஒரு ரெண்டு நாள் இங்க இருந்துட்டு வர்றேனா பா” என்று கேட்டிட,
“இவ்ளோ நாள் இங்க தான இருந்த. இனி எங்க கூட இரு. வா திங்க்ஸ் பேக் பண்ணுவோம்” என்று இழுத்து கொண்டு அவளறைக்கு சென்றான்.
கிரிதரன், “கிளம்புவோமா சிவா” என்று வினவ,
“ஹ்ம்ம் கிளம்பலாம். நீங்க முன்னாடி போங்க. சுப்பையாவ வர சொல்லி இருக்கேன் கணக்குவழக்கு கொஞ்சம் பாக்கி இருக்கு முடிச்சிட்டு நானும் பிரவீனும் பின்னாடி வர்றோம்” என்று குடும்ப உறுப்பினர்களை முன்னே அனுப்பி வைத்தார்.
கனியை உடன் அழைத்து வருவது தெரிந்தால் நிச்சயமாக இங்கேயே மனைவியும் மாமியாரும் பெரிய பிரச்சனையை உண்டு செய்துவிடுவார்கள் என்று கணித்தே அவர்களை முன்பே அனுப்பி வைத்தார்.
அவர்கள் கிளம்பியதும் சுப்பையா வர உடன் அவரது மகன் மகேஷும் வந்தான்.
சுப்பையா அவர்களிடம் பணிபுரியும் கணக்கு பிள்ளை.
“வாங்க சுப்பையா உட்காருங்க” என்று என்று இருவரையும் உபசரித்தவர் பார்க்க வேண்டிய மீத கணக்கு வழக்குகளை பார்த்தனர்.
கனி தனக்கு அத்யாவசிய தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு பிரவீனுடன் இறங்கி வந்தாள்.
அமர்ந்திருந்த மகேஷ் கனியை கண்டதும்,
“கனி சென்னைக்கு போறீயா?” என்று எழுந்து அவளருகே சென்றான்.
“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளுக்கு அங்கிருந்து கிளம்ப துளியும் மனமில்லை.
மகேஷ் கனியுடன் கல்லூரியில் ஒன்றாக பயின்று இப்போது வேலை செய்த இடம் வரை அவளுடன் இருந்த உற்ற தோழன்.
“ஏன் திடீர்னு இந்த முடிவு நாங்க எல்லாரும் இருக்கோமே. உன்னை பாத்துக்க மாட்டோமா?” என்று அவளது கரத்தை பிடிக்க,
“எனக்கு வேற வழி தெரியலை மகி” என்று அவனது கரத்தை தானும் இறுக பற்றி கொண்டாள்.
கிட்டத்தட்ட எட்டு வருட நட்பு. தன்னுடைய பின்னணி என எதையும் கருத்திற் கொள்ளாது தனது பண்பை மட்டும் கண்டு நட்பாக்கி கொண்டவன். மிகவும் நல்லவன். இந்நாள் வரை தனக்கு உறுதுணையாக இருந்தவன்.
இவர்களது உரையாடலை கண்ட சிவப்பிரகாசம், “சென்னை என்ன அவ்ளோ தூரமா மகேஷ். மார்னிங் ட்ரெயின் ஏறுனா ஈவ்னிங் ரீச்
ஆகிடலாம். அவளை தனியா விட்டுட்டு போக எனக்கு மனசில்லை” என்று கூற,
“ஹ்ம்ம்” என்று மௌனமாய் தலையசைத்து கேட்டு கொண்டவனுக்கு அவளை பிரிய மனதே இல்லை.
ஒருவழியாக எல்லோரிடமும் விடைபெற்று இத்தனை நாள் தன்னை பாதுகாத்த மண்ணை விட்டு சென்னையை நோக்கி பயணமானாள் கனி.